Thursday, December 25, 2008

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் - இறுதிப்பகுதி

4. குடியுரிமை பற்றிய கருத்தியலும், தேசியத்தைச் சார்ந்த நிறுவனங்களில் இணைவதும்.

இந்த முறைமைக்காக வாதாடுபவர்கள், குடியுரிமை பற்றிய கொள்கையும், ஒரு பிரஜையின் கடமையும், சர்வதேச சட்டமும், இராஜதந்திர உறவுகளும் இன்று காணப்படுபவை போன்று இதற்கு முன்னர் வடிவம் பெற்றிருக்கவில்லை எனக் கோருகின்றனர். முன்னைய காலங்களில், இராணுவச் சக்தியின் மொழிதான் மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இராணுவம் மேலும் முன்னேறிச் செல்வது கடினம் எனக் கண்டால்தான், ஒரு நாட்டின் எல்லைகள் நிறுவப்பட்டன. பூகோளமயமாதல் காணப்பட வில்லை. முந்தைய கால மக்கள், தீவுகள் கொண்ட ஒரு கோளத்தில் வாழ்ந்தனர்.

எனவே நாம் முன்னைய காலங்களின் நேர்பொருளிலான சட்டத்தீர்ப்புக்கள் குறித்து ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் சரியாகப் பார்த்தால், நாம் நவீன உலகத்திற்கு அவற்றை எவ்வாறு அமுல் செய்வது என்பதைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்கு, முந்தைய சட்டத்தீர்ப்புக்களின் முறைமையையும், விவேகத்தையும் ஆராய வேண்டும்.

மேலும் அவர்கள் கூறுகின்றனர்: “இன்று நாம் புரிந்து கொள்கின்ற விதத்தில், குடியுரிமை பற்றிய கருத்தியல், நமது பண்டைய கால சட்டநிபுணர்(ஃபுகஹா)க்கள் வாழ்ந்த உலகில் நிலை பெற்றிருக்கவில்லை. சரியாகச் சொல்லப் போனால், எது நிலை பெற்றிருந்ததென்றால், ஒரு மார்க்கக் கோட்பாட்டின் அளவுகோலின் மீது சார்ந்திருந்த, ஒரு குறிப்பிட்ட நாகரீகத்துக்குரிய கலாசார இணைப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட சாம்ராஜ்ஜியத்திற்குரிய அரசியல் இணைப்பு என்ற வகையான ஒன்றுதான். இத்தகைய இணைப்பு வகையானது, வேறுபட்ட நம்பிக்கை கொண்டவர்களுடன் மிக எச்சரிக்கையுடனும், சகிப்புத்தன்மை பற்றிய தராதரங்களில் மாறுபட்டும் நடந்து கொள்ளச் செய்தது. இதனை, ஸ்பானியர்களின் அடாவடித்தனமான தண்டனைக்கான (கடவுள் விரோதக் குற்றச்சாட்டு) விசாரணை தொடக்கம் திம்மிகளின் இஸ்லாமிய ஆட்சிவரை நாம் கண்டு கொள்ளலாம்.”

“குடிபுகுந்த இன்னொரு நாட்டில் அவன் பிறந்திருப்பது, நீண்ட நாள் தங்கியிருப்பது அல்லது திருமணம் செய்திருப்பது போன்ற உறுதியான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு, தனது பூர்வீக நாட்டுக்கு வெளியே வசிக்கும் ஒருவனுக்கு முன்னைய காலங்களில் அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், அந்நாட்டில் தங்கியிருப்பதற்காக வந்த ஒருவன், அந்நாட்டு மக்களின் நம்பிக்கை, கலாசாரம் என்பனவற்றில் முழுமையாக ஈடுபாடு கொண்ட போது, தன்னிச்சையாகவே ஒரு குடிமகனாக மாறிவிடக்கூடியதாயிருந்தது. இல்லாதபட்சத்தில், அவன் அந்த நாட்டில் எத்துணை நீண்ட காலம் வசித்தாலும் சரிதான், அவன் அந்த நாட்டு மக்களின் நம்பிக்கைகள், கலாசாரத்திலிருந்து வேறுபட்டிருப்பானாகில் ஓர் அந்நியனாகவே கருதப்படுவான்.

“சர்வதேச சட்டம் அல்லது இராஜதந்திர உறவுகள் என இன்று அழைக்கப்படுபவைப் பற்றி பழைய உலகம் அறிந்திருக்கவில்லை. இந்தச் சர்வதேச சட்டங்களும், இராஜதந்திர உறவுகளும் அதன் பூமியில் வசிக்கக்கூடிய பிற நாடுகளின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், தங்கள் நாட்டு குடிமக்களைப் போன்றே (தன் சொந்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்படக்கூடிய சிற்சில உரிமைகளைத் தவிர) அவர்களையும் சமமாக நடத்துவதற்கும் ஒவ்வொரு நாட்டையும் கடமைப்படுத்துகின்றன. (கலாநிதி தாஹா ஜாபிர் அல் அல்வானி- முகத்திமா ஃபீ ஃபிக்ஹ் அல் அகல்லியாத்)

எனவே, ஒரு குடிமகனாக இருக்கும் போர்வையின் கீழ், சில தனிப்பட்ட மனிதர்கள் தாம் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரஜைகள் என்றும், பிரிட்டிஷ் ராணி சகல அதிகாரம் உள்ள தமது ஆட்சித்தலைவர் என்றும், தங்கள் தலைவர் டொனி பிளேயர் என்றும், பிரிட்டிஷ் துருப்புகள் ‘தங்கள் பையன்கள்’ என்றும் உரிமை பாராட்டுவதை நாம் கேட்கக்கூடியதாய் இருக்கின்றது. பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம்கள் போரிட முடியும் என்பன போன்ற கூற்றுக்களையும் நாம் செவிமடுக்கின்றோம். இதற்கு உதாரணமாக குறிப்பிடுவதென்றால், அமெரிக்க ஆயுதப்படைகளின் ஒரு சிரேஷ்ட முஸ்லிம் மதகுருவாக இருக்கும் முஹம்மத் அப்துல் ரஷீத், இந்த குறிப்பிட்ட முறைமையைப் பின்பற்றக்கூடிய சில அறிஞர்களிடம், அமெரிக்க இராணுவத்துக்குள்ளிலிருந்து ஆப்கானிஸ்தானில் எதிர்த்து போரிடக்கூடிய முஸ்லிம்களின் பிரச்சினையைப் பற்றி கேட்ட போது, அவருக்கு கீழ்க்கண்ட பதில் தரப்பட்டது: “ஆக மொத்தத்தில், முஸ்லிம் அமெரிக்க இராணுவ வீரர்கள், தங்களுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்;த்து விடப்பட்டிருக்கிறது எனத் தங்கள் நாடு தீர்மானிக்கிறவர்களுக்கு எதிராக, வரப்போகும் யுத்தங்களில் ஈடுபடுவது (அல்லாஹ் நாடினால்) ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும். முன்னர் விளக்கப்பட்டது போல், பொருத்தமான எண்ணத்தைக் கொண்டிருப்பதை இங்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, தங்கள் நாட்டின் மீதான அவர்களின் விசுவாசத்தைப் பற்றி எந்தவொரு சந்தேகமும் சுமத்தப்பட மாட்டாது அல்லது எதிர்பார்க்கக் கூடிய விதத்தில் தீங்கெதுவும் இழைக்கப்படுவதை விட்டும் அவர்கள் தவிர்க்கப்படுவர்.”

{மாபெரும் இஸ்லாமிய அறிஞரும் கதர்; நாட்டு சுன்னா மற்றும் சீரா கவுன்சிலின் தலைவருமான ஷேய்க் யூசுஃப் அல் கர்ளாவி;, எகிப்து அரச கவுன்சில் முதன்மை பதில் தலைவரான நீதிபதி தாரிக் அல் பிஸ்ரி, எகிப்தின் ஒப்பீட்டு சட்டம், ஷரீஆத் துறை விரிவுரையாளரான கலாநிதி முஹம்மத் எஸ். அல் அவா, சிரியா நாட்டு இஸ்லாமிய அறிஞரான கலாநிதி ஹைத்தம் அல் கையாத், எகிப்தைச் சார்ந்த இஸ்லாமிய நு}லாசிரியரும் பத்திரிகையாளருமான ஃபஹ்மி ஹ{வைதி, வட அமெரிக்க ஃபிக்ஹ் கவுன்சில் தலைவரான ஷேய்க் தாஹா ஜாபிர் அல் அல்வானி ஆகியோர் கையொப்பமிட்ட ஃபத்வா-- வெளியிடப்பட்ட திகதி: ரஜப் 10, 1422 ஃ செப்டம்பர் 27, 2001}

பின்னர், தெய்வீக மூலத்துடன் காணப்பட்ட முற்று முழுதான முரண்பாட்டைக் கண்ணுற்று, இந்த பத்வாவை வழங்கியவர்களில் சிலர் அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டனர். இந்த முறைமையினால் பயன்படுத்தப்படுகின்ற சீர்கெட்ட சிந்தனைப் படித்தரத்தை இங்கு நாம் அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது, பல்வேறு அறிவுக் கண்ணோட்டங்களிலிருந்து நோக்கப்படும் போது தவறானதாகவே காணப்படுகிறது:

குடியுரிமை என்பது, நாம் ‘தாபிஇய்யா’ என அழைக்கும் ஒன்றின் கருத்துக்கு இணக்கமான ஒரு சொற்றொடராகும். இஸ்லாமிய நாட்டின் தாபிஇய்யாவைச் சுமக்கின்ற ஒருவர், தாருல் இஸ்லாத்தில் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கின்ற போது, அவர்களின் விவகாரங்கள் பால், நிறம், மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் பேணப்படுவதற்கான உரிமையை கொண்டிருப்பார். இஸ்லாம், முஸ்லிம்களையும் முஸ்லிமல்லாதவர்களையும் பொறுத்தவரையில், அவர்களின் விவகாரங்களைக் கவனிப்பது, சட்டங்களை அமுல்படுத்துவது, உரிமைகளையும் கடமைகளையும் பேணுவது போன்ற வி;ஷயங் களில், சட்ட அமைப்பின் பார்வையில் சமமானவர்களாக வைத்திருக்கிறது. எந்த விஷயங்களில் மார்க்கம் குறிப்பிட்டுச் சொல்கிறதோ, அவற்றில் மட்டுமே ஒரு வேறுபாடு காணப்படுகிறது. மதீனா சட்டசாசனத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:“மேலும் நம்பிக்கையாளர்கள் போரிடுகின்ற காலத்தில், யூதர்கள் நம்பிக்கையாளர் களுடன் இருக்க வேண்டும். மேலும் யூதர்களில் யார் எம்மைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் உதவியையும் (அவர்களுடன் நடந்து கொள்ளும் விதத்தில்) நல்லுதாரணத்தையும் பெறும் உரிமை கொண்டவர்களாவர். மேலும், பனு அவ்ஃபைச் சேர்ந்த யூதர்கள், நம்பிக்கையாளர்களைச் சார்ந்த ஒரு சமூகமாகும். யூதர்கள் அவர்களுடைய சொந்த தீனும், முஸ்லிம்கள் அவர்களுடைய சொந்த தீனும் உடையவர்கள். (இப்னு ஹிஷாம்)

எனவே குடியுரிமை பற்றிய கருத்தியலானது, இப்போது இருக்கக் கூடிய விதத்தில் முன்னர் நிலைபெற்று இருக்காத ஒரு புதிய கொள்கை என யாராலும் சொல்ல முடியாது.

உண்மையில், பிறப்பு, திருமணம் என்பனவற்றை குடியுரிமை வழங்குவதற்கான நெறிமுறையாக மேற்கு கருதுவது, குடியுரிமையின் உண்மை நிலையை எந்த வகையிலும் மாற்றி விட முடியாது. ஏனெனில் ஒரு நாட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட (தார்) பூமியில் வசிப்பதன் விளைவாகவே இந்த குடியுரிமை ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்ட வழிகளிலும், வேறு வழிகளிலும் அந்தக் குடியுரிமை அடைந்து கொள்ளப்படுகிறது. ஆயினும், வசித்தல் குடியுரிமையின் அடிப்படை அம்சமாகும். எனவேதான், இத்தகைய ஓர் அளவுகோலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை@ அல்லது குடியுரிமை எனும் உண்மை நிலையின் மீது இஃது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவுமில்லை. அது மட்டுமல்லாமல், குடியுரிமையின் பலனாய் அமைகின்ற அஹ்காம்(சட்டங்)களிலும் இந்த நெறிமுறைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவுமில்லை.

“சர்வதேசச் சட்டம் அல்லது இராஜதந்திர உறவுகள் என இன்று அழைக்கப்படுபவைப் பற்றி பழைய உலகம் அறிந்திருக்கவில்லை. இந்த சர்வதேசச் சட்டங்களும், இராஜ தந்திர உறவுகளும், அதன் பூமிகளில் வசிக்கக் கூடிய பிற நாடுகளின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், தங்கள் நாட்டு குடிமக்கள் போன்றே அவர்களையும் நடத்துவதற்கும் ஒவ்வொரு நாட்டையும் கடமைப்படுத்துகின்றன என அவர்கள் கூறுவது உண்மை நிலைகளுக்கும், இஸ்லாமிய வரலாற்றுக்கும் முரண்பட்ட ஒரு கூற்றாகும்.

இஃது ஏனெனில், “உடன்படிக்கையை ஏற்று நடப்பதுடன், (நல்ல) சுற்றுபுறத்தை முறைப்படி கடைப்பிடிப்பது (கலாநிதி தாஹா ஜாபிர் அல் அல்வானி) என்ற விதிமுறை அவர்கள் குறிப்பிடுகின்ற ‘பழைய உலகில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த விதிமுறை ஜாஹிலியாக் கால அரேபியர்களுக்கும், அபிஸீனியர்கள் போன்ற மற்றவர்களுக்கும் தெரிந்திருந்ததோடு மட்டுமில்லாமல், அவர்களினால் உபயோகப்படுத்தவும் பட்டது. இதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, அபிஸீனிய மன்னர் நஜ்ஜாஸி, முஹாஜிரீன் முஸ்லிம்களுடன் நடந்து கொண்ட நடைமுறை உதாரணமாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், அஃது ‘அல் அஹத் வல் ஜிவார்’ பற்றிய விதிமுறையைச் சட்டமாகத் தந்திருக்கிறது. அஃது இந்த விதிமுறையை அதனது தன்மைக்கு உகந்த விதத்தில் விளக்கியிருப்பதுடன், குடியுரிமை, தாபிஇய்யா ஆகியவற்றுக்கான சட்டங்களையும் வகுத்துத் தந்திருக்கின்றது@ அதன் விபரங்களையும், விதி;களையும் அமைத்துத் தந்திருக்கின்றது. இதற்கான ஆதாரம், குர்ஆனிலும், சுன்னாஹ் மூலங்களின் பல இடங்களிலும் காணப்படுகின்ற கூற்றுகளும், வரலாறு நெடுகிலும் இஸ்லாமியச் சமூகம் அதனை நடைமுறைப்படுத்தியதால் விளைந்த செயல்முறை உதாரணங்களுமாகும்.

அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூதிலும், அல் பைஹக்கியிலும் அறிவிக்கப்படுகிறது: “எவனொருவன் (நமது) உடன்படிக்கையின் கீழ் இருக்கும் ஒரு மனிதனைக் கொடுமைப்படுத்துகிறானோ அல்லது அவனைச் சிறுமைப்படுத்துகின்றானோ, அவனது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வேலைகளை அவன் மீது சுமத்துகிறானோ அல்லது எத்தகைய உரிமையுமில்லாமல் அவனிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்து கொள்கின்றானோ, அத்தகையவனுக்கு எதிராக நியாயத் தீர்ப்பு நாளில் முறைப்பாடு செய்பவனாக நான் இருப்பேன்.

மேலும், மதீனாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:“..மேலும், முஸ்லிம்கள் போரிடுகின்ற காலங்களில், யூதர்கள் நம்பிக்கையாளர்களுடன் இருக்க வேண்டும். மேலும் பனு} அவ்ஃப்பைச் சேர்ந்த யூதர்கள் நம்பிக்கை யாளர்களைச் சேர்ந்த ஒரு சமூகமாகும்.(இப்னு ஹிஷாம்)

இப்னு ஜன்ஜாவைஹ், கிதாப் அல் அம்வாலில் அறிவிக்கின்றார்: “ஒரு முதியவர் திம்மி மக்களிடம் யாசிப்பதை உமர் (ரழி); கண்டார்கள்;. எனவே, ‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார்கள்;. அந்த மனிதர் சொன்னார்: ‘என்னிடம் பணம் இல்லை. ஜிஸ்யா என்னிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.’ உமர் (ரழி) சொன்னார்கள்: ‘நாங்கள் உம்மை நியாயமாக நடத்தவில்லை. உம்முடைய முதிய (ஷைபா) வயதை நாங்கள் தின்று விட்டோம். அதற்கு பின்னர் உம்மிடமிருந்து ஜிஸ்யாவும் எடுக்கிறோம்.’ அதன்பின், உமர் (ரழி) தமது ஆளுநர்களுக்கு, ‘முதியவர்களிடமிருந்து ஜிஸ்யா பெற வேண்டாம்’ எனக் கடிதம் எழுதினார்கள்;.

குடியுரிமை பற்றிய கண்ணோட்டம், அரசியல் வாழ்விலோ அல்லது வேறெதற்காகவோ பங்கு கொள்வதை நியாயப்படுத்துவதாக அமையாது. இஃது ஏனெனில், உண்மை நிலையில் குடியுரிமை என்பது, ஒருவர் மற்றவருடன் வசிக்கும் ஓர் இடத்தை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படும் ஒரு தன்மை ஆகும். இயல்பாகவே, முஸ்லிம் அந்த இடத்தின் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்படிய வேண்டும் என்ற ஒரு தேவை இருந்த போதும், அது ஷரீஆ மீது தீர்ப்பு வழங்குவதற்கோ அல்லது அதன் முழுமை வடிவிலான (முத்தலக்) மூலத்தைக் கட்டுப்படுத்துவதற்கோ, அதன் பொதுவான(ஆம்) மூலத்தை வரையறுத்துக் குறிப்பிடுவதற்கோ அல்லது அதன் தெளிவாகக் குறிப்பிடப் படாத (முஜ்மல்) மூலத்தைத் தெளிவாக்குவதற்கோ முடியாது. குடியுரிமையின் காரணமாக உதாரணத்திற்கு குஃப்ரில் பங்கு கொள்வது அனுமதிக்கப்பட்டால், அதே உரிமையின் அடிப்படையில் முஸ்லிமுடன் போராடுவதும் அனுமதிக்கப்பட வேண்டும். இது மிகப் பிழையானதாகும்.

குடியுரிமையை ஒரு நியாயப்பாடாக எடுத்துக் கொள்வது என்பது, குடியுரிமையை ஒரு சட்டவாக்க மூலக்காரணமாக எடுத்துக் கொள்வதாய் அமையும். இது ஹராமை அனுமதிப்பதற்கும், ஹலாலைத் தடுப்பதற்கும் வழி செய்யும். இஃது இஸ்லாத்துடன் முற்றிலும் முரண்பட்ட ஒன்றாகும்.



முடிவுரை

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் பற்றிய இந்தச் சுருக்கமான எழுத்தாடலிருந்து தெளிவாக ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. அஃது என்னவென்றால், சீர்கெட்ட சிந்தனைப் படிமுறையின் ஓர் அறிகுறிதான், அதன் தீர்வுக்காக வல்லாதிக்கம் செலுத்தும் மேற்கை நோக்கித் திரும்புவதாகும். இந்தச் சிந்தனைப் படிமுறையானது, முதலாளித்துவத்தின் மோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, அந்தத் தரக் குறைவான--அழிந்து போகக் கூடிய கொள்கைவாதம் அமைத்துத் தந்திருக்கின்ற எல்லைகளுக்கு அப்பால் சென்று சிந்திக்கவே முடியாது.

இதற்காக வாதாடுபவர்களைப் பொறுத்தவரையில், மேற்கின் அரசியல் வாழ்வில் பங்கு கொள்வதன் நோக்கம் என்னவெனில், முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய பிரச்சினை களுக்கும் ஆதரவளிப்பது@ இஸ்லாமிய தஃவாவுக்கான சிறந்த சந்தர்ப்பத்தினை வழங்குவது@ எத்தகைய கஷ்டம் அல்லது இடையூறு இன்றி திருமணம், ஹலால் உணவு, பெண்களுக்கான உடையொழுங்கு, இன்னபிற போன்ற ஷரிஆச் சட்டங்களைப் பின்பற்றி ஒழுகுவதற்கு முஸ்லிம்களை இயலுமாக்குவது --போன்ற சில நன்மைகளை அடைந்து கொள்வதாகும்.

எவ்வாறு இருந்த போதிலும், அவர்கள் குறிப்பிடுவதற்கு மாற்றமாக, இஸ்லாம் அனுமதித்திருக்கும் ஷரீஆவின் பாதையைப் பின்பற்றிச் செல்வதன் மூலம், ஹராமை செய்வதற்கான தேவை ஏற்படாத விதத்திலும்; அல்லது அந்த ஹராத்தைச் சட்டப் பூர்வமாக அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்வதற்காக, ழரூராத்--அவசியத்தின் நிமித்தமான சட்டங்கள், மஸாலிஹ்--நன்மைக்கான சட்டங்கள், மஃபாஸித்--தீமையை எதிர்க்கின்ற சட்டங்கள் என்ற பிசகிய வழியை உபயோகிக்காமலும், இந்த நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் தனது முஹர்ரமாத்--தடுக்கப்பட்ட வரம்புகளுக்குள் வீழ்ந்து விடாமல் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்கு எவை போதுமானவையோ, அவற்றை நமக்கு வழங்கி இருக்கின்றான். மேலும் அவன் நமது கோரிக்கைகளை அடைந்து கொள்ள எவை போதுமானவையோ, அத்தகைய மாற்று வழிகளையும், நடைமுறைப் பாங்குகளையும் அனுமதித்திருக்கிறான்.



No comments:

Post a Comment