Friday, November 28, 2008

கொந்தளிக்கும் பங்குச்சந்தைகள் – Turbulence of stock Markets ( காரணங்களும் ஷரியா விதிமுறைகளும்)பகுதி 2

பொதுத்துறை நிறுவன அமைப்பு - Public limited company system :

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை பெரும்பணம் வைத்திருக்கும் மேற்கத்திய முதலாளிகளுக்கு சாதகமான முறையில் அவற்றின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, பொதுத்துறை நிறுவனங்களில் வர்த்தகத்திற்கு வேண்டிய அளவு பணத்தையும் அதற்கு மேலாக மிகப்பெரும் தொகையையும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும், அதேவேளையில் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில் அதில் அவர்களுக்கு எந்த விதமான பொறுப்புகளும் கிடையாது, அவர்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் கடன் கொடுத்தவர்கள் அதில் எந்தவகையான ஈட்டுத் தொகையையும் பெறமுடியாது, இவ்வாறு பெரும் முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் விதத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, நிறுவனத்தின் பங்குகளை வாங்குகின்ற சாதாரண மக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்களின் முதலீடுகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத வகையிலும் பொதுத்துறை நிறுவனங்ககளின் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன, பொதுத்துறை நிறுவன அமைப்பின் தனித்துவ அம்சம் என்னவென்றால் நிறுவனத்திற்கு உண்மையான முதலாளிகளாக இருக்கும் நபர் வரையறுக்கப்பட்ட பொறுப்பு (limited liablities) உடையவராக மடடுமே இருப்பார், ஆகவே நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது என்றால் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களும் பங்குகளை வைத்திருப்பவர்களும் நிறுவன முதலாளியின் சொத்துக்களிலிருந்து எதையும் நஷ்டஈடாக கோரமுடியாது நிறுவனத்தில் எஞ்சியிருக்கும் சொத்துக்களிலிருந்துதான் நஷ்டஈடு கோரமுடியும்.

பொதுத்துறை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் அதனை பொதுமக்களிடம் அறிவிப்பு செய்வதிலும் அரசுதான் முழுப் பங்களிப்பை மேற்கொள்கிறது, ஒரு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக ஆக்கப்பட்ட அறிவிப்பை அரசுதான் மக்களிடம் அறிவிப்பு செய்கிறது, மேற்குநாடுகளைப் பொறுத்தவரை இது உறுதியான முறையில் ஏற்படுத்தப்பட்ட மரபாக இருந்து வருகிறது, பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பும் அதனுடைய வர்த்தகம் பற்றிய அறிவிப்பும் அதன் பங்குகளின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பும் அரசின் சார்பில் வெளியிடப்படுகின்றன, மேலும் அந்த நிறுவனம் தொடர்பான கூட்டமைப்பு அறிக்கை (memorandum of Association) மற்றும் கூட்டமைப்பின் பிரதான விமுறைகள் ஆகியவற்றையும் அரசே வெளியிடுகிறது, பொதுத்துறை நிறுவன அமைப்பு கூட்டமைப்பு தன்மை (corporeal personality) கொண்டதாக இருப்பதால் அதன் முதலீட்டாளர்களிடமிருந்து சுதந்திரமாக செயல்படக் கூடியதாக இருக்கிறது, நிறுவனத்தில் சட்டரீதியாக உரிமை பெற்றவர்கள் மட்டுமே நிறுவன நடவடிக்கைகளில் அதிகாரம் செலுத்தமுடியும் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தில் எந்தவிதமான உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது, ஆனால் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனத்தில் எஞ்சியுள்ள சொத்துக்களில் மட்டும்தான் பங்கு வைத்திருப்பவர்களுக்கு உரிமை இருக்கிறது நிறுவன தலைவராக செயல்பட்ட முதலாளியின் சொத்துக்களில் எந்தவிதமான உரிமையும் கிடையாது.

பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் கூட்டமைப்பு (Association) பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடும்போது அதன் நிறுவனர்களில் (founders) அதாவது அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் சிலரை தற்காலிக இயக்குநர்கள் குழுவாக (interim board of directors) அரசு நியமிக்கிறது, இதன் பின்னர் இயக்குநர்கள் குழு நிறுவனத் தலைவரை (chairperson)நியமனம் செய்கிறது, பின்னர் இயக்குநர் குழு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யத் துவங்கி விடுகிறது, இந்தப் பங்குகளை வாங்குகிறவர்கள் வரையறைக்கு உட்பட்ட சில உரிமைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.
நிறுவனத்தின் லாபத்தில் வருடாந்திர பங்குத்தொகையாக (dividends) நிறுவனம் முடிவு செய்யும் தொகையைப் பெற்றுக் கொள்ளும் உரிமை. வர்த்தகத்தை நிறுவனம் மூடும் பட்சத்தில் நிறுவன சொத்திலிருந்து வரும் முதலீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் உரிமை ஆகியவை இதில் அடங்கும், மேலும் ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தின் இயக்குநர் குழுவை தேர்வு செய்யும்போது அதில் ஓட்டளிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு, எனினும் இவையெல்லாம் அவர்கள் கையில் வைத்துள்ள பங்குகளினால் கிடைக்கும் உரிமையே தவிர மற்றபடி நிறுவனத்திற்கும் பங்கு வைத்திருப்பவர்களுக்கும் இடையில் எந்தவிதமான உறவோ அல்லது உரிமையோ இருக்காது, உதாரணமாக; இயக்குநர்கள் குழுவை தேர்வு செய்வதற்கு ஓட்டளிக்கும்போது ஒரு நபரிடம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஓட்டுகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப் படுகிறதே தவிர நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல, இதனடிப்படையில் ஒரு நபர் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 51%த்தை பெற்றிருக்கும் நிலையில் மற்ற பங்குகளை பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தாலும் பெரும்பான்மை பங்குகளை(51%) வைத்திருக்கும் நபர்தான் இயக்குநர்கள் குழுவை தேர்ந்தெடுக்கும் ஓட்டுகளை பெற்றவராக இருப்பார். அந்நிலையில் மற்றவர்கள் வைத்திருக்கும் ஓட்டுகளுக்கு எந்த விதமான மதிப்பும் கிடையாது.

நிறுவனத்தின் அதிகாரத்தை அடைந்து கொள்வதற்கு ஒருவர் பெரும்பான்மை பங்குகளை தமது கையில் வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை சில தருணங்களில் 5% பங்குகளையோ அல்லது 10% பங்குகளையோ வைத்திருப்பவர்கள் கூட மற்றவர்களின் ஆதரவோடு அதிகாரத்தை அடைந்து கொள்ளமுடியும், ஏனெனில் சிறிய அளவில் பங்கு வைத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாது சிதறிக் கிடப்பார்கள் அல்லது பிரதானமான பங்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவார்கள் அந்நிலையில் அவர்கள் இயக்குநர்கள் குழு தேர்தலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்வார்கள், இவ்வாறாக பங்குகளை வாங்கியவர்களிடமிருந்து பெற்றுள்ள முதலீட்டுத் தொகைகளை கையாள்வதற்கும் நிறுவன நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடுகிறது, இதுதான் பொதுத்துறை நிறுவனங்கள் என்று கூறப்படும் டகஇ கம்பெனிகள் விஷயத்தில் மக்கள் தங்கள் கண்களால் காணுகின்ற உண்மை நிலையாகும், இந்த உண்மை நிலையின் அடிப்படையில் பங்குச்சந்தைகளில் பங்குகளை வர்த்தகம் செய்யும் உரிமையைத் தவிர்த்து பங்கு வைத்திருப்பவர்களுக்கு வேறெந்த உரிமையும் கிடையாது, அவர்கள் வைத்துள்ள பங்குகளை வினியோகம் செய்த நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கோ அல்லது தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தைக் குறித்து விசாரனை மேற்கொள்வதற்கோ அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, பங்குகளை வைத்திருப்பவர்கள் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதில்லை, மாறாக பங்குச்சந்தைகளில் ஈடுபட்டு தாங்கள் வைத்திருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்வதற்கும் பங்குகளின் விலையில் ஏற்றம் காணும்போது நிறுவனத்தின் அனுமதியைப் பெறாமலேயே தங்கள் விருப்பப்படி பங்குகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.

எவர்களிடமிருந்தும் அனுமதி பெறாமலும் எவர்களுக்கும் தகவல் தெரிவிக்காமலும் பங்குச்சந்தைகளில் தாங்கள் எண்ணியபடி பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பங்கு வைத்திருப்பவர்களுக்கு அதிகாரம் உண்டு, எனவே தங்களிடமுள்ள பங்குகளை விற்றுவிடுவதின் மூலம் நிறுவனத்தின் அதிகார பொறுப்பில் இருக்கும் ஒருவர் உள்ளபடியே தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம், மேலும் அதே நிறுவனத்திலிருந்தோ அல்லது வேறொரு நிறுவனத்திலிருந்தோ அதிகமாக பங்குகளை வாங்கவேண்டும் என்று ஒருவர் விரும்பும்போது அந்த நிறுவனத்தின் அதிகாரத்தில் இருப்பவரின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ பெறவேண்டும் என்று அவசியம் இல்லை, துரிதமாக லாபம் அடையவேண்டும் என்ற பேராசையின் காரணமாகத்தான் ஒருவர் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுகிறாரே ஒழிய அதற்கு வேறெந்த காரணமும் இல்லை, இவ்வாறாக ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலையில் இறக்கம் ஏற்படும்போது அவற்றை வாங்குவதிலும் அவற்றின் விலையில் ஏற்றம் ஏற்படும்போது விற்பதிலும் ஒருவர் ஈடுபடுகிறார், ஆகவே நிறுவனங்களிடமோ அல்லது அந்த நிறுவனங்களின் அதிகாரத்தில் இருப்பவர்களிடமோ அவர்களுக்கு எந்தவகையான விஸ்வாசமும் இல்லை, அதேபோல அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திலோ அல்லது அந்த நிறுவனத்தில் பணியாற்றுகறவர்களிடமோ அவர்களுக்கு எந்தவிதமான உறவோ அல்லது தொடர்போ கிடையாது, எனினும் சில பங்குச்சந்தைகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளின் விலையில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சில பணக்கார முதலாளிகள் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவோடு தொடர்பு வைத்துக் கொண்டு நிறுவன நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உண்மையான பொருளாதாரத்திற்கும் பங்குச்சந்தைகள் என்று அழைக்கப்படும் நிதிச்சந்தைகளுக்கும் மத்தியில் உள்ள அகன்ற இடைவெளியைக் காட்டுகின்றன, பங்குச்சந்தைகளில் ஒரு குறிபிட்ட நிறுவனத்தின் பங்குகளின் விகிதாச்சாரத்தில் (ratio) ஏற்படும் ஏற்றஇறக்கத்தை கண்காணிப்பதற்கு வர்த்தகர்கள் கணக்கிடும் விகிதாச்சார முறை இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது, ஒவ்வொரு பங்குகளுக்கும் வழங்கப்படும் வருடாந்திர லாபத்தின் (dividends) அடிப்படையில் பங்குகளின் நடப்புவிலை நிர்ணயிக்கப் படுகிறது, உதாரணமாக ஒரு பங்கின் வருடாந்திர லாபம் 2 டாலராகவும் பங்கின் விலை 40 டாலராகவும் இருந்தால் அந்த பங்கின் விகிதாச்சாரம் 20 டாலராகும் (பங்கு விகிதாச்சாரம் = பங்குவிலை/லாபம்) அதாவது ஒவ்வொரு பங்குகளுக்கும் லாபம் பங்குவிலையில் 5% ஆக இருக்கிறது, பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் விகிதாச்சார மதிப்புகள் ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் வெளியிடப் படுகின்றன, இந்த விகிதாச்சாரங்களை ஆய்வு செய்து பார்ப்போமானால் அவற்றில் பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம், சில நேரங்களில் சில நிறுவனங்களின் பங்குகள் 100% விலை உயர்வையும் சில நிறுவனங்களின் பங்குகள் 95% விலை சரிவையும் அடைகின்றன என்பதை நாம் காணலாம், பங்குச்சந்தைகள் அனைத்திலும் யூகவணிகமே ஆதிக்கம் பெற்றிருக்கிறது மேலும் தொடர்ச்சியாக ஏற்படும் விலைகளின் ஏற்றஇறக்கம் பங்குச்சந்தைகளின் தனித்துவ அம்சமாக இருக்கிறது, உண்மையான பொருளாதாரத்திற்கும் நிதிச்சந்தைகளுக்கும் மத்தியில் இருக்கும் பிளவை இது சுட்டிக் காட்டுவதோடு பங்குச்சந்தையில் இடம் பெற்றிருக்கும் நிறுவனங்களின் உண்மை நிலைகளையும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது, மேலும் பங்குச்சந்தைகள் ஒரு சூதாட்ட விடுதியாகவே செயல்படுகிறது என்பதையும் சூதாட்டத்தில் கைதேர்ந்த மேற்கத்திய பணமுதலைகள் வளரும் நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்துச் செல்கின்றன என்பதையும் சந்தேகமில்லாத வகையில் விளக்கிக் காட்டுகிறது, இதுதான் பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்த உண்மைநிலையாகும்.

வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு - The usurious banking system :
வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளைப் பொறுத்தவரை அவை முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் பிரதான துயரமாக இருந்து வருகின்றன, எவ்வாறெனில்; இந்த வங்கிகள் வைப்புநிதி (deposit) என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்து அவற்றை தங்கள் சொந்த பணம்போல் கருதிக்கொண்டு வினியோகம் செய்கின்றன, வங்கிகளில் பணத்தை வைப்புநிதியாக சேமித்து வைப்பவர்களிடமிருந்து பெறும் பணத்தை வர்த்தகர்களுக்கும் பங்குச்சந்தை வியாபாரிகளுக்கும் கடன் அளிப்பதை இந்த வங்கிகள் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றன, சில நேரங்களில் வைப்புநிதி வைத்திருப்பவர்களுக்கு பணத்தேவை ஏற்படும்போது அவர்களுக்கு கடன் அளித்து அதற்கு வட்டியை வசூலித்துக் கொள்கின்றன.

வங்கிகளின் நடவடிக்கைகளில் சிலவகை மட்டும்தான் சட்டரீதியான செயல்களாக இருக்கின்றன. வங்கிகளின் முதலாளிகளில் பெரும்பான்மையானவர்கள் முதலாளித்துவ செல்வந்தர்களாக இருப்பதால் அவர்களுக்கும் அவர்கள் நடத்திவரும் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்கு முன்னுரிமை வாழங்கப் படுகிறது.
இத்தகைய கடன்களில் மிகக்குறைந்த இழப்பு(risk) மட்டுமே இருக்கிறது என்ற சாக்கில் மற்றவர்களுக்கு இரண்டாம்தர முன்னுரிமையே வழங்கப்படுகிறது, இந்த பாரபட்சம் கடனுக்கு விதிக்கப்படும் வட்டிவீதத்திலும் வெளிப்படையாக தெரிகிறது, உதாரணமாக; அமெரிக்காவில் பெரிய செல்வந்த முதலாளிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் 5 , 8 % வட்டிவீதத்தில் கடன் வழங்கப்படுகிறது, அதேவேளையில் நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நான்குசக்கர வாகன கடனுக்கு 20 % வட்டி வசூலிக்கப்படுகிறது, இதுபோன்ற காரணங்களால் மக்களின் பணம் ஒருசிலரிடம் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உண்மையான பொருளாதார நடவடிக்கைகளில் வங்கிகள் செலுத்தும் பங்களிப்பை விட மிக அதிகமான இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பங்களிப்புகளை நிதிச்சந்தைகளில் செலுத்துகின்றன, ஏனெனில் பங்கு வர்த்தகம் செய்பவர்கள் அவர்களிடமுள்ள பணத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான மதிப்புடைய பங்குகளை வாங்கி வர்த்தகத்தில் ஈடுபடமுடியும் , உதாரணமாக; பங்குச்சந்தையில் 100 டாலராக இருக்கும் ஒருபங்கை ஒருவர் 5 டாலர் தன்னுடைய சொந்த பணத்தையும் 95 டாலர் வங்கியிடமிருந்து பெற்ற கடன் தொகையிலிருந்தும் விலைக்கு வாங்குகிறார். சில நேரங்களில் இந்த கடன் தொகையை தரகு நிறுவனங்கள் மூலமாக பெற்றுக்கொள்வார்; இந்த தரகு நிறுவனங்கள் வங்கியிடமிருந்து கடன்பெற்று அவர்களுக்கு கடன் அளிக்கின்றன, எனவே பங்குவர்த்தகர் ஒருவர் தன்னிடமுள்ள பணத்தைப்போல 20 மடங்கு விலை அதிகமாக உள்ள பங்குகளை விலை கொடுத்து வாங்கமுடியும், எனினும் இந்த வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு மட்டும்தான் பங்குவர்த்தக கடன்களை அளிக்கின்றன, அதாவது பொதுமக்கள். வியாபாரிகள். வைப்புநிதி வைத்துள்ள நடுத்தர வகுப்பினர் ஆகியவர்களின் உழைப்பால் உருவான பணத்தை வங்கிகளிலிருந்து பெற்று அதை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து தங்கள் கொள்முதல் திறனையும் பெருக்கிக்கொண்டு தங்கள் ஆதிக்கத்தையும் சொத்துக்களையும் பலமடங்கு உயர்த்திக் கொள்ளும் முதலாளித்துவ செல்வந்தர்களுக்கு மட்டும்தான் இந்த வங்கிகள் கடன் வழங்குகின்றன.

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று பங்குகளை வாங்கி அவற்றின் விலை ஏற்றம் அடையும்போது விற்பனை செய்கிறார்கள் என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு வங்கிகளில் கடன் பெற்று பங்குகளை வாங்கிய பின்னர் சில நேரங்களில் பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்படுகிறது இத்தகைய சந்தர்ப்பங்களில் பங்குகளின் உண்மையான மதிப்பைவிட வங்கிக்கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும், உதாரணமாக ஒரு வர்த்தகர் பங்குகளை வாங்கும்போது அவருக்கு 90 % கடனை வங்கி வழங்குகிறது, அவர் 1.000.000 டாலருக்கு பங்குகள் வாங்கினால் அவருக்கு வங்கி 9.00.000 டாலர் கடன்தொகை வழங்கும், இந்நிலையில் பங்குகளின் விலையில் 20 % விலைச்சரிவு ஏற்படும் பட்சத்தில் அவரிடமுள்ள பங்குகளின் மதிப்பு 8.00.000 டாலராக ஆகிவிடும், இப்போது அவரிடமுள்ள பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் வங்கியின் சட்டரீதியான கடன்தொகை 7.20.000 டாலராக குறைந்துவிடும் ஆகவே அவர் உடனடியாக வங்கிக்கு 1.80.000 டாலர் பணத்தை திருப்பிச் செலுத்தவேண்டும், ஏனெனில் அவர் சட்டரீதியாக 90 % கடன்தொகைதான் வங்கியிலிருந்து பெறமுடியும், இந்நிலையில் அவரிடம் பணம் இருக்கும் பட்சத்தில் இந்தத்தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்தி விடுவார், அவரிடம் பணம் இல்லாத பட்சத்தில் தன்னிடமுள்ள பங்குகளை விற்றுதான் பணத்தை வங்கிக்கு செலுத்தவேண்டும், இதுபோன்ற நிர்பந்தமான நிலை பல வர்த்தகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவர்கள் அனைவரும் தங்களிடமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் விற்றே ஆகவேண்டும், பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை நிலவரம் எவ்வாறு இருக்கும் என்றால் பங்குகள் அதிகமாக கொள்முதல் செய்யப்படும்போது அவற்றின் விலை ஏற்றத்தை அடையும் அதேவேளையில் பங்குகள் அதிகமாக விற்பனை செய்யப்படும்போது அவற்றின் விலை வீழ்ச்சி அடையும், ஆகவே பல வர்த்தகர்கள் பங்குகளை விற்க முடிவு செய்யும்போது அவற்றின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும், இந்தவீழ்ச்சி உச்சத்தை அடையும்போது வர்த்தகர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது இதனால் பங்குகள் வைத்திருக்கும் அனைவரும் வேகமாக தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்துவிடவேண்டும் என்று எண்ணி விற்பனையில் துரிதமாக ஈடுபடும்போது பங்குச்சந்தைகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது, இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து நிதிநெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் இயல்பாக தோன்றுகின்றன.

ஆகவே முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளின் பங்களிப்பு என்னவென்றால் அவைகள் வர்த்தகத்திலும் விலைவாசிகளிலும் முறையற்ற ஏற்றஇறக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன, எவ்வாறெனில் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலையில் ஏற்றம் ஏற்படும்போது அவற்றில் வர்த்தகம் செய்யும் செல்வந்த முதலாளிகளுக்கு இந்த வங்கிகள் பெரும் தொகையை கடனாக கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பெரும் வட்டித்தொகையில் தங்கள் நிதி இருப்புகளை அதிகரித்துக் கொள்கின்றன, இத்தகைய வர்த்தகர்கள் ஒரு குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரும்போது அவற்றை அவசரஅவசரமாக வாங்குகிறார்கள், இதனால் பங்குச்சந்தை சூடுபிடித்து விலைகள் தொடர்ந்து ஏற்றத்தை அடைகின்றன, அதுபோன்றே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டம் தோல்வி அடையும்போதோ அல்லது அதுபோன்ற வதந்திகள் ஏதேனும் பரவும்போதோ அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைகின்றன, அவ்வாறு விலை வீழ்ச்சி அடையும்போது பங்குகளின் மதிப்பு குறைவதால் வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் வங்கிகளுக்கு பணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது ஏனெனில் வங்கிகளின் சட்டப்படி விலை வீழ்ச்சியின் காரணமாக பங்குளின் மதிப்பில் ஏற்பட்ட குறைவுத்தொகை எவ்வளவோ அவ்வளவு தொகையை அவர்கள் உடனே செலுத்தவேண்டும், இந்நிலையில் வர்த்தகர்கள் தங்கள் கைவசம் இருக்கும் பங்குகளை விற்று வங்கிகளுக்கு பணம் செலுத்த எண்ணியவர்களாக பங்குச்சந்தைகளில் பங்குகளை விற்பதற்கு முடிவுசெய்யும்போது பங்குச்சந்தைகளில் ஒருவிதமான தேக்கநிலை ஏற்பட்டு விலைகள் சரிவை அடைகின்றன, இவ்வாறு விலைகள் தொடர்ந்து சரிவை அடையும் அதேவேளையில் வங்கிகளும் தொடர்ந்து தங்கள் கடன் தொகையை குறைத்துக் கொண்டே செல்கின்றன, இதனால் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகுந்த பணநெருக்கடி ஏற்பட்டு அதன் எதிரொலியாக நிதிச்சந்தையில் நெருக்கடிகளும் அதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார தேக்க நிலைகளும் நாணயத்தின் மதிப்பில் வீழ்சியும் ஏற்படுகின்றன.

வங்கிகள் இவ்வாறு பெரும் தொகையை கடனாக அளிப்பதற்கு அவைகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைப்புநிதிகளாக சேமித்து வைத்திருக்கும் பணத்தைத்தான் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு வங்கிகள் கடனாக வழங்குகின்றன, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் சேமிப்பு நிதியையே நம்பியிருக்கின்றன மேலும் ஒரு கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம் மற்றொரு கணக்கில் கொண்டு வரப் படுவதால் மக்களின் பணம் பெரும்பாலும் வங்கிகளுக்கு மத்தியில்தான் சுழன்று கொண்டிருக்கின்றன, பணத்தை வங்கிகளில் வைப்புநிதியில் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு பணம் தேவைப்படும்போது அவர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்கிறார்கள், இவ்வாறு வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது வங்கிகளின் கணக்கு பதிவேட்டில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றப்படுகிறதே ஒழிய வங்கிகளின் உண்மையான பணஇருப்பில் மாறுதல் ஏற்படுவதில்லை, இவ்வாறு ஒரு வாடிக்ககையாளருக்கு இரண்டு கணக்குகள் வஙகிகளில் பராமரிக்கப் படுகின்றன, சேமிப்புக் கணக்கில் வரவுகள் பதிய வைக்கப்படுகின்றன கடன் கணக்கில் கடன்தொகைள் பதிவுசெய்யப் படுகின்றன, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் வைப்புநிதியை ஒரே நேரத்தில் வங்கியிலிருந்து திருப்பி எடுக்க முடிவு செய்வார்களேயானால் வங்கிகள் ஒருபோதும் அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது, ஏனெனில் வைப்புநிதியில் போடப்பட்ட பணத்தின் பெரும்பகுதி வங்கியிலிருந்து கடன் என்ற பெயரில் வெளியேறிவிட்டதுõ தங்கள் வைப்புநிதிகளை வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பப்பெறுவதற்கு முடிவுசெய்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் வங்கிகள் மூடப்படும் நிலைமை ஏற்படுகிறது, இவ்வாறு நடைபெறும்போது வங்கிகளில் எஞ்சியுள்ள ரொக்கம் மற்றும் வங்கியின் சொத்துக்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தொகை வாடிக்கயாளர்கள் மத்தியில் பங்கீடு செய்யப்படுகின்றன.

வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் தங்கள் பணம் சேமிப்புக்கணக்கில் வங்கிகளின் இருப்பு பெட்டகங்களில்(bank lockers) பத்திரமாக இருக்கிறது என்ற எண்ணத்திலும் தேவைப்படும்போது தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலும் வைப்புநிதியில் பணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள், இந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வட்டி அடிப்படையில் இயங்கிவரும் வங்கிகள் இருந்து கொண்டிருக்கின்றன, எனினும் இந்த நம்பிக்கை எதார்த்தத்தில் பெரும் மோசடியாக இருப்பதை வங்கிகளின் உண்மைநிலைகள் எடுத்துக் காட்டுகின்றன, வங்கிகள் திவாலை அறிவித்து மூடப்பட்டுவிட்ட நிலையில் வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்தவர்கள் தங்கள் முழுப் பணத்தையோ அல்லது அதில் பெரும் பகுதியையோ இழந்து விட்ட சம்பவங்கள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கின்றன, மேற்கு நாடுகளிலும் மற்ற உலக நாடுகளிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது, இத்தகைய தருணங்களில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு காகித நாணயங்களை (inconvertible paper money) அச்சடித்துக் கொள்ளும் முறையை மேற்கத்தியர்கள் கண்டுபிடித்துள்ளார்கள், இந்த காகித நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு ஏதும் இல்லை ஏனெனில் அவைகளுக்கு பின்னனியாக தங்கத்தை இருப்பில் எந்த அரசுகளும் வைத்துக் கொள்வதில்லை, ஆகவே அவைகளை ஒருபோதும் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியாது, நெருக்கடி ஏற்படும்போது அவ்வப்போது காகித நாணயத்தை அச்சடிக்கும் பணியை அரசு சார்பாக மத்தியவங்கி (இங்ய்ற்ழ்ஹப் ஆஹய்ந்) மேற்கொள்கிறது, இந்தியாவில் இது மத்திய ரிஸர்வ்வங்கி (Reserve Bank) என்று அழைக்கப்படுகிறது, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளின் குளறுபடிகளை சமாளிப்பதற்காகவும் வங்கிகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பெரும் மோசடி செய்யப்படுகிறது என்பது வெட்டவெளிச்சம் ஆகாமல் மறைப்பதற்காகவும் வங்கிகளை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் முதலாளித்துவக் கொள்கையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசுகள் மேற்கொள்கின்றன.

மாற்றமுடியாத காகித நாணய முறை - inconvertible paper money :

உண்மையான மதிப்பு எதையும் பெற்றிராத மாற்றமுடியாத காகித நாணயங்களை (inconvertible paper money) அச்சடித்து நாடு முழுவதும் புழக்கத்தில் விடுவதற்கு மத்தியவங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது, நாட்டிலுள்ள மக்கள் தங்கள் நிதியியல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இந்த காகித நாணயங்களை ஏற்றுக் கொள்வதற்கு அவர்களை அரசு சட்டத்தின் மூலம் நிர்பந்தம் செய்கிறது, குடிமக்களில் எவரேனும் தங்கள் பொருட்களுக்கோ அல்லது சேவைகளுக்கோ பட்டுவாடாவாக இந்த காகித நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில் சட்டமும் நீதித்துறையும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவரை கட்டாயப்படுத்தும் இல்லையெனில் அவர் தனக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளும் உரிமையை இழக்கநேரிடும்.

அரசின் கொள்கையை நிறைவேற்றுவதற்கு அவசியமான நாணயத்தை அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கிக்கு உரிமை இருக்கிறது என்று இதற்கு அர்த்தமாகும், உதாரணமாக வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலமாக அரசு வசூலித்த பணம் முழுவதும் செலவளிக்கப் பட்டுவிடும்போது அரசுகருவூலகத்தில் (govt. treasury) பணம் இருப்பு இல்லாமல் ஆகிவிடும் அது போன்ற நேரங்களில் மாற்று வழி இல்லாத காரணத்தால் மத்திய வங்கியிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொள்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும், இதனடிப்படையில் மத்தியவங்கியின் கருவூலக கணக்கில் ஒரு தொகை கடனாக பதிவு செய்யப்பட்டு அதன் பெயரில் வைப்புநிதியாக வைக்கப்படும், தனது செலவினங்களுக்கு பணம் தேவைப்படும்போது கருவூலகம் இந்தத் தொகையிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும், இந்தப் பணம் நாட்டின் புழக்கத்தில் வந்துள்ள புதிய பணமாக கருதப்படுகிறது, மக்களுக்கு கடன் வழங்குவதற்கு பணம் தேவை என்று மத்தியவங்கி கருதும்போது கருவூலக இருப்பில் பணம் இல்லை என்றால் நிதிப்பத்திரங்களையோ(exchequer bills) அல்லது நிறுவனங்களின் உறுதிப் பத்திரங்களையோ companies securities) பொதுமக்களிடமிருந்து மத்தியவங்கி கொள்முதல் செய்துகொள்ளும், இந்தப் பத்திரங்களை வினியோகம் செய்யும் நபர்கள் பெயரில் அதற்குரிய தொகை மத்தியவங்கியின் கணக்கிலோ அல்லது மற்ற வங்கிகளின் கணக்கிலோ பதிவு செய்யப்படும். இதுவும் நாட்டின் புழக்கத்தில் வந்துள்ள புதிய பணமாகவே கருதப்படுகிறது, 1987 ல் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இதற்குப் பொருத்தமான உதாரணமாக இருக்கிறது, நியூயார்க் பங்குச்சந்தைகளில் ஒரே நாளில் பங்குகளின் விலையில் 22 % சரிவு ஏற்பட்டது, உடனே அமெரிக்காவின் மத்திய வங்கி கணிசமான பெரும் தொகையை வங்கிகளுக்கு அளித்ததின் மூலம் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டது, கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள நிறுவனங்களின் உறுதிப்பத்திரங்களை (companies securities) மத்தியவங்கி கொள்முதல் செய்து அதிலிருந்து பெற்ற பணத்தை வங்கிகளுக்கும் பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கும் கடனாக கொடுத்து பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வை ஏற்படுத்தியது, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பால் ஏற்படும் பொருளாதார சீரழிவுகளை சீர்படுத்துவதற்கு முதலாளித்துவ அரசான அமெரிக்கஅரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நியூயார்க்கின் முன்னனி வங்கியான சிட்டிபாங்க் (City Bank) மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது என்று பரவிய வதந்தியை அதனால் தடுக்க முடியவில்லை.

நாட்டிற்குத் தேவைப்படும் பணத்திற்காகவும் குடிமக்களின் சேவைகளுக்கு (services) கொடுக்க வேண்டிய பணத்திற்காகவும் முறையற்ற விதத்தில் காகித நாணயங்களை அச்சடித்துக் கொள்வது தவறான கொள்கையாகும் ஏனெனில் இதன் சுமைகள் அனைத்தும் சாமான்யர்களான பொதுமக்களின் தலையில்தான் சுமத்தப்படுகின்றன, இருந்தபோதிலும் பலசமயங்களில் இதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை, நாட்டில் பணப் புழக்கம் அதிகமாகும்போது நாணயத்தின் செலாவணி மதிப்பில் சரிவு ஏற்படுகிறது இதனால் பொருட்களின் விலைவாசிகளும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சேவையின் (services) ஊதிய அளவுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றன, இந்நிலையை பணவீக்கம் (inflation) என்று கூறுகின்றனர், மக்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பில் சரிவு ஏற்படுவதால் அவர்கள் பெறும் ஊதியத்தின் மதிப்பில் குறைவு ஏற்படுகிறது, இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக கீழ்நிலைக்குச் சென்றுவிடுகிறது வறுமையும் பசியும் அவர்களை வாட்டி வதைக்கிறது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பிற்போக்குத்தனத்தின் காரணமாகவும் முதலாளித்துவ வாதிகளின் சுரண்டல் கொள்கையின் காரணமாகவும் உலக மக்கள் சமுதாயம் பெரும் சீரழிவுகளையும் கடுந்துயரங்களையும் அனுபவித்து வருகிறது, தந்திரமாக உருவாக்கப்பட்ட மோசடியான நம்பிக்கையை ஆதாரமாக வைத்து முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை இயங்கிக் கொண்டிருக்கிறது, காகித நாணயத்திற்கு உண்மையான மதிப்பு இல்லை என்றபோதும் அதற்கு மதிப்பு இருப்பதாக மக்களை ஏமாற்றும் விதத்தில் நம்பிக்கை ஏற்படுத்தப்படுகின்றது, இந்த நம்பிக்கையை முதலாளித்துவ அரசுகள் மக்கள்மீது நிர்பந்தமாக சுமத்தி இருப்பதோடு நீதியின் பார்வையில் இந்த நிர்பந்தத்தை சட்டரீதியாகவும் ஆக்கியிருக்கின்றன, ஒர் ஏழை நாட்டில் வருவாய் ஆதாரங்கள் வீழ்ச்சி அடையும் போது அதன் அரசியல் சூழல் பலவீனப்பட்டுவிடுகிறது என்பதை நாம் காண்கிறோம், அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பில் சரிவு ஏற்படும்போது மற்ற நாணயங்களின் செலாவணி மதிப்பை ஒப்புநோக்கி உள்ளூர் நாணயத்தின் மதிப்பை ஆட்சியாளர்கள் குறைப்பதையும் நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் பல்வேறு தந்திரங்களை கையாண்டு காகித நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு இருப்பதுபோல் காட்டி மோசடி செய்வதையும் நாம் காண்கிறோம்,
மேற்கத்திய பொருளாதாரக் கொள்கையின் அடிப்பûயில் இயங்கும் பங்குச்சந்தைகளின் உண்மைநிலை இவ்வாறு இருக்கிறது, தவறான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கொள்கையை உலக நாடுகள் அனைத்தும் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றன, மக்களுக்குத் தேவையான எந்த பொருட்களையும் உற்பத்தி செய்யாத பணமுதலைகளின் ஆடம்பர வாழ்க்ûக்ககு வளம் அளிக்கும் ஆதாரங்களாக பங்குச்சந்தைகள் விளங்குகின்றன, இத்தகைய நிதிச்சந்தைகளில் வர்த்தகம் செய்வதின்மூலம் மிக எளிதாகக் கிடைக்கும் பெரும் லாபத்தை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள், பங்குச்சந்தைகள் அனைத்தும் சூதாட்டவிடுதிகள்தானே தவிர வேறொன்றும் இல்லை மேலும் அவைகள் எளிதாக அறுபடக்கூடிய சிலந்திவலை போன்றவை, உலக லாபத்தையும் உடல் இன்பத்தையும் லட்சியமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவவாதிகளின் பேராசையின் சின்னமாக பங்குச்சந்தைகள் விளங்குகின்றன, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இடம் பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங்கள். வட்டியில் இயங்கும் வங்கிகள் மற்றும் உண்மையான மதிப்பு இல்லாத காகித நாணயங்கள் ஆகியவை இல்லாமல் இருக்குமானால் ஒட்டுண்ணிசந்தைகளான (parasite markets) இந்த பங்குச்சநிதைகள் தோன்றுவதற்கும் அவைகள் நிலைத்து நிற்பதற்கும் வாய்ப்போ வழியோ அறவே இருக்க முடியாது, மேற்குலகத்தால் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ள பங்குச்சந்தை (ள்ற்ர்ஸ்ரீந் ம்ஹழ்ந்ங்ற்ள் ர்ழ் ச்ண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ம்ஹழ்ந்ங்ற்ள்) குறித்த எதார்த்தமான உண்மைகள் இதுதான்,

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் பகுதி 2

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹைப் பற்றிய பரிசீலனை

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் து}ண்கள்


சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் பற்றிய தத்துவத்தை முன்மொழிபவர்களினால் பல வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு கையாளப்படும் கருக்கோள்களுள் பின்வருபவை அடங்கும்:


1. புதிய பிரச்சினைகளைப் பற்றி ஷாPஆ மௌனம் சாதிக்கிறது. மேலும் வழக்கிலுள்ள இஸ்லாமிய முறைமை, இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு போதியளவு ஆற்றல் அற்று இருக்கின்றது.

2. காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்த விதத்தில் ஷாPஆ விதிமுறைகள் மாற்றமடைகின்றன. மேலும் இதற்கு ஆதாரமாக இமாம் ஷாஃபியின் ஃபிக்ஹை எடுத்துக் காட்டலாம்.

3. ஷாPஆ விதிமுறைகளைப் பற்றி நாம் கேட்கும் கேள்விகள் மாற்றமடைய வேண்டும்.


அரசியல் ஈடுபாடு குறித்தும், முஸ்லிம்களை இரண்டறக் கலந்துவிடச் செய்வதற்குமான தங்கள் வாதங்களுக்கு வலுச் சேர்ப்பதற்காக பல நியாயங்களை முன் வைக்கப்படுகின்றன. இவ்வாதங்களில் சில ஷாPஆ மூலங்களைத் தவறான வடிவத்தில் எடுத்து வைக்கின்றன. அதேவேளை, இவ்வாதங்களி;ல் பல பகுத்தறிவு hPதியான நியாயங்களாகும். அவர்கள் குறிப்பிடக்கூடிய கருக்கோள்களில் சில பின்வருமாறு:


1. யூசுப் (அலை) அவர்களின் வரலாறும், அவர்கள் எகிப்;து நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியில் பங்குபற்றினார்கள் என்ற வாதமும்.

2. முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் (அரசியல் ஈடுபாடுகளினால்) நன்மை (மஸ்லஹா) உண்டு.

3. அல்குர்ஆனின் புவியியற் கொள்கையைப் பின்பற்றுதல்.4. குடியுரிமை பற்றிய கருத்தியல்.


சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் அவசியத்தை மறுதலிப்பது


1. புதிய பிரச்சினைகளில் ஷாPஆ மௌனம் சாதிக்கிறது என்ற வாதம்.


சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹை ஆதரிப்பவர்கள்; ஷாPஆ புதிய பிரச்சினைகளில் மௌனம் சாதிப்பதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தற்போதைய இஸ்லாமிய முறைமையினால் இயலவில்லை என்றும் வாதிடுகின்றனர். இந்தக் கருத்தோட்டத்தை முன்வைக்கும் இவர்கள், ஒரு பெறுமதி வாய்ந்த ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்: ஜர்தும் பின் நாஸிர் உடைய ஆதாரத்தோடு கூடிய இந்த ஹதீதில் அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வல்லமை பொருந்திய அல்லாஹ், மார்க்கக் கடமைகளை விதிக்கின்றான். எனவே அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அவன் வரம்புகளை அமைத்திருக்கின்றான். எனவே அவற்றைத் தாண்டிச் செல்லாதீர்கள். அவன் சிலவற்றை தடை செய்திருக்கின்றான். எனவே அவற்றை மீறாதீர்கள். அவன் உங்கள் மீதுள்ள கருணையினால் (மறந்ததினால் அல்ல) சிலவற்றைப்பற்றி மௌனம் சாதிக்கிறான். எனவே அவற்றைத் தேடிச் செல்லாதீர்கள்” (தாரகுத்னி, திர்மிதி, இப்னு மாஜா, ஹாக்கிம்)


மேற்கில் வாழும் முஸ்லிம்களுக்காக ஒரு முறைமையை வகுத்து கொடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கும் தாரிக் ரமழான் என்பவர், தனது “ஓர் ஐரோப்பிய முஸ்லிமாக இருப்பதற்கு” என்ற நு}லில், இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் மௌனத்தைப் பற்றி, ‘இது அனுமதிக்கப்படுவதற்கான ஓர் அடிப்படை விதிமுறையைச் சுட்டிக் காட்டுவதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர், ‘இந்த மௌனமானது, அதற்குப் பிறகு சமூக விவகாரங்களுக்குள் (முஆமலாத்); ஃபிக்ஹ் (சட்டவியல்) நீடித்து வளர்ச்சியடைவதற்கும், பரிணாமமடைவதற்கும், தோற்றம் பெறுவதற்கும் அனுமதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது’ என எழுதுகின்றார்.


“தெளிவான, வெளிப்படையான மூலம் ஒன்று இல்லாதவிடத்தில், அனுமதிப்பதற்கான கருத்தோட்டம் (இபாஹா) காணப்படுவதாக இப்புரிதல் மூலம் விளங்கிக் கொள்ளப்படுகிறது. முஸ்லிம்களின் நலன் கருதி அறிஞர்கள் மிக ஆழமாகப் படித்தறிந்து அபிப்பிராயங்களை உருவாக்குவதற்கான பகுதி இதுதான்” என இவர்கள் கருதுகின்றனர். பல்வேறு காரணங்களினால் இந்த அபிப்பிராயம் மிக பலவீனமானது ஆகும். அல்குர்ஆனினால் அல்லது ஸ_ன்னாஹ்வினால் தீர்ப்பு வழங்கப்படாத எந்தவொரு அம்சத்தையும் ஷாPஆ விட்டு வைக்கவில்லை. இஸ்லாமிய ஷாPஆவானது, முழுமையாகவும், பரந்த அளவிலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் சூழ்ந்து நிற்கின்றது. அல்லாஹ் பின்வரும் இறை வசனத்தில் மிகத் திட்டவட்டமான ஒரு கருத்தை முன்வைக்கிறான்:

“மேலும் உமக்கு இவ்வேதத்தை (அல்குர்ஆனை) இறக்கி அருளியுள்ளோம். அது யாவற்றையும் மிகத் தெளிவாக விபரிக்கக்கூடியதாய் இருக்கின்றது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு அது நேர்வழி காட்டக் கூடியதாகவும், அருளாகவும் ஒரு நற்செய்தியாகவும் இருக்கின்றது.” (16:89)


எனவே, ஒரு ஷாPஆ சட்டம் காணப்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன என்றும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தை கவனத்திற் கொள்ளாது அதனை ஷாPஆ முழுமையாக அலட்சியப்படுத்தி விட்டது என்றும் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்கான ஆதாரங்களை நிறுவித் தரவில்லை என்றும் வாதாடுவதற்கு எந்தவொரு முஸ்லிமுக்கும் உரிமை கிடையாது.
இத்தகையக் கண்ணோட்டத்தை கொண்டிருப்பதானது, அல்குர்ஆன் அல்லது ஸ}ன்னாஹ்விலிருந்து எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், அல்லது அல்குர்ஆனும் ஹதீஸ_ம் ஒரு சட்டபூர்வமான ‘இல்லாஹ்’ எனப்படும் ஷாPஆ காரணியின் மூலமாக ஒரு குறியீட்டைத் தரவில்லை என்றும் கொள்வதாகும். இல்லாஹ் எனப்படும் ஷாPஆ காரணி என்பது வெளிப்படையாகவோ அல்லது குறியீடுகள் மூலமாகவோ மூலத்தில் குறிப்பிடப்படுகின்றன அல்லது அனுமானத்தின் மூலமாகவோ ஒப்புமை மூலமாகவோ பெறப்படுகின்றன. இஃது அந்த விதிமுறை, வாஜிப் (கட்டாயமானது), மன்து}ப் (பரிந்துரைக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது), மக்ரூஹ் (குற்றமானது), முபாஹ் (அனுமதிக்கப்பட்டது) என்பனவற்றுள் ஒன்றை விவரிப்பதற்கு உரியதாகும். எந்தவொரு முஸ்லிமும், இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கக்கூடாது. ஏனென்றால் ஷாPஆ முழுமை வாய்ந்ததன்று என வாதிடுவதன் மூலம், அவன் ஷாPஆ மீது அவது}று கற்பிக்கிறான். மேலும், அவன் ஷாPஆ அல்லாத தீர்ப்புகளைத் தேடிப் பெறுவதைச் சட்டபூர்வமானதாக எடுத்துக் கொள்கிறான். இதன்மூலம் அல்லாஹ்வின் கூற்றுக்கு மாறு செய்தவனாக ஆகி விடுகின்றான்:

“இல்லை! (முஹம்மதே) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்;டு, பின்னர் நீர்; அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆக மாட்டார்கள்.” (4:65)


ஷாPஆ ஒரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை எனக் கூறி, ஷாPஆ கொண்டு வராத ஒரு சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்றினால், அவன் ஷாPஆ அல்லாத ஒன்றின் தீர்ப்பை எடுத்துச் செல்பவனாகின்றான். இது நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். ஏனென்றால், அவன் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான சட்டங்களை ஷாPஆ கொண்டு வரவில்லை என வாதிடக் கூடியவனாக இருக்கின்றான். எனவே, ஒரு குறிப்பிட்டச் சட்டத்தை ஷாPஆ கொண்டு வரவில்லை எனக் காரணம் காட்டி, இஸ்லாம் அல்லாத ஒன்றிலிருந்து எடுத்தாள்வதற்கு அனுமதி உண்டு என வாதிடுவது, மிகத் தவறானதும் பிழையானதுமான ஒரு வாதமாகும்.
ஆகவே, ஷாPஆ மௌனமாய் இருக்கின்ற ஒவ்வொன்றும் முபாஹ் (அனுமதிக்கப்பட்டது) எனக் கூறுவது, நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத ஒன்றாகும். ஏனென்றால், ஷாPஆ சில சட்டங்கள் மீது மௌனம் சாதிக்கின்றது என்றும், அச்சட்டங்களை நிறுவித் தரவில்லை என்றும் வாதிடுவது ஷாPஆவிற்கு எதிராக அவது}று கற்பிக்கும் ஒரு செயலாகும். மேலும், இது உண்மை நிலைக்கும் மாறானதாகும். ஏனென்றால் ஷாPஆ எதைப் பற்றியும் குறிப்பிடாமல் மௌனம் சாதிக்கவில்லை.


அல்லாஹ்வின் து}தர் (ஸல்) கூறினார்கள்: “ நிச்சயமாக அல்லாஹ் சில கடமைகளை விதித்திருக்கிறான்;. எனவே அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்...” இது மூலங்களில் ஷாPஆவினால் குறிப்பிடப்படாதவைப் பற்றி கேட்பதன் மீது தடை விதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகின்றது.


இதைப் போன்று இன்னோர் ஹதீஸ_ம் காணப்படுகின்றது: “ முஸ்லிம்களுக்கு மத்தியில் படுமோசமான பாவிகள் யாரென்றால், தங்களுக்கு தடுக்கப்பட்டதைப் பற்றி கேள்வி கேட்பவர்களாவர். அவர்கள் அது பற்றி கேட்டதன் காரணமாக, பின்னர் அது அவர்களுக்கு தடை செய்யப்பட்டது.”
இதே கருத்தில் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அல்லாஹ்வின் து}தர் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது: “ நான் உங்களுக்கு கூறாதவற்றைப் பற்றி என்னை நீங்கள் விட்டுவிடுங்கள். ஏனென்றால் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அதைப் பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததன் காரணமாகவும், தங்கள் இறை து}தர்களிடம் விவாதித்து கொண்டதன் காரணமாகவும் அழிந்து போனார்கள். எனவே நான் உங்களைத் தடுத்ததை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நான் உங்களுக்கு கட்டளை இட்டதைக் கொண்டும் உங்களால் முடிந்தளவுக்கு எடுத்து நடவுங்கள்.”
ஹதீஸ் நு}ல்களில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது: அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் ஒருமுறை “மேலும் அல்லாஹ் ஹஜ்ஜு செய்யுமாறு மக்களுக்கு கட்டளையிடுகிறான்…” என்ற வேத வசனத்தை ஓதினார்கள். இதன்போது ஒரு மனிதர் கேட்டார். “அல்லாஹ்வின் து}தரே! இது ஒவ்வொரு வருடமுமா?” அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, அந்த மனிதர் திரும்பவும் கேட்டார். “அல்லாஹ்வின் து}தரே! இது ஒவ்வொரு வருடமுமா?” மீண்டும் அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, அந்த மனிதர் மூன்றாவது முறையாகவும் கேட்டார். “அல்லாஹ்வின் து}தரே இது ஒவ்வொரு வருடமுமா?” இதன் பிறகு அல்லாஹ்வின் து}தர் இவ்வாறு பதிலளித்தார்கள்: “எனது ஆன்மா எவனுடைய கைவசத்தில் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக! நான் இதற்கு பதிலளித்தால் அது கடமையாகிவிடும். மேலும் அது கடமையாகி விட்டால் உம்மால் அதை நிறைவேற்ற முடியாது. மேலும் உம்மால் அதனை நிறைவேற்ற முடியாவிட்டால் நீர் பாவம் செய்தவராகி விடுவீர். எனவே நான் உமக்கு கட்டளையிடாதவை பற்றி (கேட்காதீர்) என்னை விட்டுவிடுங்கள்.“


எனவே, “உம்மத்தின் தவறையும், மறதியையும் அவர்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்“ என்றும், “...மேலும் அவன் சிலவற்றைப் பற்றி மௌனம் சாதிக்கிறான். இது மறதியினாலன்று. இது உங்கள் நாயனிடத்திலிருந்து தரப்பட்ட அருளாகும். எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்...“ என்றும் அல்லாஹ்வின் து}தர் கூறியிருப்பதன் கருத்தாவது, அல்லாஹ் உங்கள் மீதான கடமைகளை மென்மையாக்கியிருக்கிறான்- எனவே நீங்கள் உங்களை மேலதிகச் சுமையைத் தாங்குபவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டிவரும் என்பதனால் அதனைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்பதாகும்.


உதாரணமாக, ஹஜ்ஜுக் கடமையைப்பற்றி பொதுவான வார்த்தைகளில் கட்டளையிடப்படுகின்றது. யாரோ ஒருவர் அது ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட வேண்டுமா எனக் கேட்கின்றார். அல்லாஹ் மக்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக, உங்கள் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, இந்த கடமையை வாழ்நாளில் ஒருமுறை செய்ய வேண்டும் எனக் குறைத்திருக்கிறான். எனவேதான் அல்லாஹ்வின் து}தர்(ஸல்) அவர்கள், இந்தக் கேள்வியை கேட்டும் கேளாமல் இருந்து, இந்தக் கடமையை ஒவ்வொரு ஆண்டும் செய்யும் விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்கள். இவ்வாறாக இவ்விஷயங்களில் துருவிப் பார்க்கக் கூடாது என்றும் அவற்றைப் பற்றி கேட்கக் கூடாது என்றும் தெளிவாகிறது. இதுதான் அதற்கான கருத்து என்பதற்கான ஆதாரம், அல்லாஹ்வின் து}தர்(ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். “அவன் சிலவற்றை மன்னித்து விட்டான்” எனக் கூறியதன் பின்பு முஹம்மத் (ஸல்) அவர்கள் “எனவே அதைத் துருவிப் பார்க்காதீர்கள்” என மொழிந்ததாகும்.


எனவே, எவற்றின் தடை பற்றி வேத வசனங்கள் இறக்கி அருளப்படவில்லையோ, அவற்றைப் பற்றி கேள்வி கேட்பதினின்றும் முஸ்லிம்களைத் தடுப்பதே இப்போதைய பிரச்சினையாகும். இப்போதைய பிரச்சினை, அல்லாஹ் சில ஷாPஆச் சட்டங்களைக் கூறவில்லை என்பதன்று. ஏனென்றால் ஹதீஸின் வசனங்கள் அல்லாஹ்வின் கருணையைப் பற்றியும், சில விஷயங்களில் அவனது மன்னிப்பைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. வேறொரு அறிவிப்பில், “...மேலும் அவன் எவற்றைப் பற்றி மௌனம் சாதிக்கிறானோ, அவை உங்களுக்கொரு மன்னிப்பாகும்...” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ{ம் கூட பிரச்சினையானது, அல்லாஹ் உங்களுக்கு மென்மையாக்கி, மேலும் உங்களுக்கு தடுக்காததைப் பற்றி துருவிப் பார்ப்பதும் கேள்வி கேட்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதோடு தொடர்புடையதுதான் என்பதை உணர்த்துகின்றது.


எனவே ஏதாவது ஒன்று தடை செய்யப்படவில்லை என்றால், அஃது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த ஒரு மன்னிப்பாகும். அதாவது, அதன் தடைபற்றி அல்லாஹ் மௌனம் சாதிப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த மன்னிப்பைச் சுட்டிக் காட்டுகிறது. ஆதலினால் அதைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள். இதனை அல்லாஹ்வின் திருவசனம் ஒன்று இவ்வாறு பிரதிபலிக்கின்றது: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விசயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால், அவை உங்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கி அருளப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால், அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாக கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான்.“ (5:101)


இந்த வகையான அபிப்பிராயத்தின் விளைவாகவும், அல்லாஹ் வழங்கும் தீர்வுகளை கண்டறிவதற்கு மூலங்களைத் தேடிப் பார்ப்பதற்கு முன்வராத சோம்பேறித்தனமான மனப்பான்மையின் காரணமாகவும், சில முஸ்லிம்களை “விசேஷமான” ஒரு ஃபிக்ஹைப் பின்பற்றுவதற்கு அழைப்பு விடுக்க வைத்திருக்கிறது. அதனைத்தான் அவர்கள் “சிறுபான்மையினருக்கான சட்டவியல்” (பிக்ஹ_ல் அகல்லியாத்) எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.


2. காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் இஸ்லாம் மாற்றமடைகின்றது என்ற வாதம்


“காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் இஸ்லாம் மாற்றமடைகின்றது” (கலாநிதி தாஹிர் ஜாபிர் அல் அல்வானி – ‘முகத்திமா ஃபி ஃபிக்ஹ் அல் அகல்லியாத்’ சிறுபான்மையினருக்கான பிக்ஹ் பற்றிய முன்னுரை) எனக்கூறி அப்படிப்பட்ட ஒரு விதிமுறை இருப்பதாக சிலர் வாதிடுகின்றனர். இந்த சிந்தனையை ஆதரிப்பவர்கள், இன்று நாம் நவீன யுகத்தில் மேற்குலகில் வாழ்ந்து வருவதன் காரணமாக, அஹ்காம் (சட்டங்)களைக் கொண்டு வருவதற்கு ஒரு புதிய முறைமை வகுக்கப்படவேண்டும் எனக் கூறுகின்றனர். முந்தைய உலமாக்கள் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றினார்கள்தாம். விஷேசமாக ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்களினால் இது பின்பற்றப்பட்டது. ஆனால் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு பின்னால் இருந்த கருத்தோட்டத்தை ஒருவர் புரிந்து கொள்வதற்கான அவசியம் இருக்கின்றது. புதிய முறைமையை கண்டு பிடிப்பதற்கு குரல் கொடுப்பவர்களின் அபிப்பிராயங்களுக்கு எந்த வகையிலும் அது ஒத்ததொன்றன்று. ஹனஃபி சட்டவியலாளர் இப்னு ஆபிதீனின் கருத்தின்படி, “மாற்றமடையும் சட்டங்கள்” என்பதன் அர்த்தமாவது, ‘காலத்திற்கும், நேரத்திற்கும் இணங்க மாற்றமடைவது ஷாPஆவின் சட்டங்களல்ல. மாறாக சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் (உர்ஃப்) என்பவற்றை அடிப்படையாகக்கொண்ட சட்டங்கள் அல்லது நடைமுறையிலிருக்கும் சம்பிரதாயங்களின் ஒளியில் பெரும்பாலும் வகுக்கப்பட்ட சட்டத்துறை அபிப்பிராயங்களை அடிப்படையாகக்கொண்ட ஃபிக்ஹ் சட்டங்கள்தாம் மாற்றமடைகின்றன. காலப்போக்கில் அவை எந்தச் சம்பிரதாயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளனவோ அந்தச் சம்பிரதாயங்கள் மாற்றமடைகின்ற போது, இந்த சட்டங்களை விட்டு விலகிச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் அல்குர்ஆன், ஹதீஸினுடைய மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் சட்டங்கள் ஒருபொழுதும் மாற்றமடைவதில்லை. உசூலுல் ஃபிக்ஹ் துறையைச் சேர்ந்த அறிஞர்கள், அல்குர்ஆன், ஸ{ன்னாஹ்வினுடைய மூலத்திற்கு முரணான ஒரு நடைமுறையோ அல்லது சம்பிரதாயமோ ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு சம்பிரதாயமாக கருதப்படும் (உர்ஃப் அல் ஃபாஸித்) என நிபந்தனை விதிக்கின்றனர்.’ (முஹம்மத் அமீன் இப்னு ஆபிதீன் - ‘நஸ்ர் அல் உர்ஃப் பைன பஹ்தல் அஹ்காம் அலா அல் உர்ஃப்’)

Monday, November 24, 2008

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் பகுதி 1

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் அறிமுகம் -உள்வாங்கி ஜீரணிக்கப்படுவதற்கான ஒரு சட்டவியல்

இன்று இஸ்லாமிய உம்மத்தின் வாழ்க்கை மிகக் கடினமானதாகவும், மிகச் சிக்கல் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. அவர்கள் எங்கு வாழ்கின்றார்கள் என்பது பிரச்சினையே அல்ல. இஸ்லாமிய உலகம் இன்று பொருளாதார, அரசியல், பாதுகாப்புப் பிரச்சினைகளால் பிய்த்தெடுக்கப்பட்டு கிடக்கிறது. 20 ஆம் நு}ற்றாண்டில் முஸ்லிம் உலகத்தை மூழ்கடித்த பொருளாதார, அரசியல் குழப்பங்கள் எத்தகையது என்றால், அது மூத்த தலைமுறையைச் சேர்ந்த பலரை மேற்கிற்கு சென்று நல்லதொரு வாழ்க்கையைத் தேடிக் கொள்ளத் து}ண்டியது. இவர்கள் மேற்கை வந்தடைந்த போது, பல நன்மைகளைக் கண்டு கொண்டனர்;. ஆயினும், இவர்கள் மேலும் புதிய பிரச்சினைகளைச் சந்திப்பதற்கும் அவற்றோடு அனுசரித்து போவதற்கும் ஆளாக்கப் பட்டனர்.

மேற்கில் முஸ்லிம்களை எதிர்நோக்கும் சவால்களில் முன்னணியில் நிற்பவை - மேற்கத்தியச் சமூகத்தில் முழுமையாக இரண்டறக் கலந்து விடுவதற்கும், இஸ்லாமிய தனித்துவ அடையாளம், குணாம்சங்கள் என்பவற்றின் வெளிப்படையான தோற்றங்களை உதறித் தள்ளுவதற்கும் தொடராக விடுக்கப்படும் அழைப்புகள்தாம். அரசாங்கங்களிலும், ஊடகங்களிலும் முஸ்லிம்களை எவ்வாறு இரண்டறக் கலந்து விடச் செய்வது என்பது பற்றி அடிக்கடி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இது மேற்கில் தற்போது நிகழும் சூழ்நிலையை நன்கு உணர்த்துவதாகும். ஸல்மான் ருஷ்தியின் ‘சாத்தானிய வசனங்கள்’ வெளியீடு, ஈராக்கில் நடத்தப்பட்டு வரும் யுத்தம், சமூகத்தில் முஸ்லிம்களுக்கு காட்டப்படும் பாரபட்சம் போன்ற பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் கொண்ட நிகழ்வுகளுக்கான முஸ்லிம்களின் எதிர் விளைவுகள் கூட மென்மேலும் இந்த ‘ஒருமைப்பாட்டை’ நியாயப்படுத்துவதற்கான காரணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

மேற்குலகில் உண்மையில் முஸ்லிம்களுக்காகத் தீர்க்கப்பட வேண்டிய பெரும் பிரச்சினைகள் நிறையவே காணப்படுகின்றன. இவற்றுள் பல, அவர்களுக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் அல்ல. மாறாக, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கான பிரச்சினைகளாகவும் அவை திகழ்கின்றன. இருந்தபோதிலும், மேற்கில் வாழும் முஸ்லிம்களின் சூழ்நிலையைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகள், எல்லா வகைகளிலும் எல்லா நேரங்களிலும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேற்கத்திய அரசுகளாலேயே முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கின்றன.

பிரச்சினை எவ்வாறு இருந்தபோதிலும், இவ்வரசுகளின் நிகழ்ச்சி நிரல் ஒருமைப்பாடு அல்லது இரண்டறக் கலந்துவிடல் என்பனவற்றையே சுற்றிச் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு புதிய பிரச்சினை தோன்றும் போதும், அது முஸ்லிம்களை உலையில் இட்டு உருக்கி மற்றெல்லோருடனும் இரண்டறக் கலந்து விடுவற்காகவும், முஸ்லிம்கள் தமது அகீதாவை கைவிட்டு மற்றவர்களுடன் சமரசம் செய்து கொள்வதற்காகவும், முதலாளித்துவக் கொள்கையை முற்றாகப் பின்பற்றச் செய்வதற்காகவும் உரிய ஒரு சந்தர்ப்பமாக இவ்வரசுகளினால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

மேற்கத்தையச் சமூகத்தில் வாழும் முஸ்லிம்களை இரண்டறக் கலந்து விடச் செய்யும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, பல முஸ்லிம் குழுக்களும், பிரமுகர்களும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இத்தகையப் பணிகளை ஆதரிக்க அவர்கள் மறுக்கின்ற போது அவர்களுக்கு பதிலாக மற்றவர்களை இந்த அரசாங்கங்கள் தேடிக் கண்டு பிடிக்கின்றன. இதன் விளைவாக, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் அமைப்புகளும் தனிநபர்களும், அரசாங்கத்தின் கால் தடத்தைத் பின்தொடரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது எந்தளவுக்கென்றால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தின் போது நாம் கண்ணுற்றதைப் போன்று, உலகின் பல்வேறு பாகங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும் ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்னும் சில முஸ்லிம்கள் இருக்கின்றனர். இவர்கள் மேற்குலக முஸ்லிம்களின் பிரச்சினைகளை உண்மையாகவே தீர்க்க நாடுகின்ற போது, உண்மை நிலைக்கும் இஸ்லாத்தின் இயற்கை தன்மைக்கும் முன் நின்று தாக்குப்பிடிக்க முடியாத வெறும் அனுமானங்களின் மீது அமைந்த, தங்களின் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தங்களின் அணுகுமுறைகளில் இவர்கள் சாதிக்கும் எதிர்பார்ப்புடன், மேற்கில் வாழ்பவர்களுக்காக ஒரு புதிய ஷரிஆவைக் கண்டுபிடிப்பதற்கு முனைகின்றனர்.

மறு கண்டுபிடிப்புப் போக்கு

முஸ்லிம்கள் 19ம் நு}ற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவம் மேலாதிக்கம் செலுத்துவதைக் கண்டனர். அதனிடம், தொழில் நுட்ப முன்னேற்றமும், முழுமையானதொரு செயல்பாட்டு அமைப்பும் இருந்தன. அதேவேளையில், முஸ்லிம்களிடமோ சரிந்து விழுந்து கொண்டிருந்த உதுமானிய கிலாஃபத்தை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அடிப்படையில் முஸ்லிம்கள், இஸ்லாமிய சிந்தனை, அதன் நிறைவேற்று முறைமை, எவ்வாறு சிந்தனையும் அதன் முறைமையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை விடுவிக்க முடியாதளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பன பற்றிய புரிதலை இழந்து காணப்பட்டனர்.

சிலர் மேற்கிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மேற்கினால் பலமாக ஆட்கொள்ளப் பட்டனர். எகிப்;தைச் சார்ந்த ரிஃபா ராஃபி அல் தஹ்தாவி (1801-1873), பாரிஸிலிருந்து தான் திரும்பிய பிறகு, ‘தக்லிஸ் அல் இப்ரிஸ் இலா தல்கிஸ் பாரிஸ்’; (தங்கத்தை அடைந்து கொள்ளல் அல்லது பாரிஸ் பற்றிய மேலோட்டமான பார்வை, 1834) என அழைக்கப்பட்ட ஒரு வரலாற்று நு}லை எழுதினார். இதில் இவர், பாரிஸ் நகர மக்களின் சுத்தம், உழைப்புக்கான ஆர்வம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஒழுக்கப் பண்பு என்பனவற்றைப் புகழ்ந்து எழுதினார். நாம், பாரிஸில் செய்யப்படுவதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் செய்ய வேண்டும் எனப் பிரகடனம் செய்தார். பெண்களை முற்போக்குடையவர்களாக்குவது, தீர்ப்பு முறைகளை மாற்றுவது போன்றவற்றில் இஸ்லாமியச் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தனது வாதங்களை முன்வைத்தார். இந்தச் சிந்தனைகளும், இது போன்ற ஏனையவையும் இஸ்லாத்தில் மறு கண்டுபிடிப்புப் போக்கை ஆரம்பித்து வைத்தன. இந்தப் போக்கு நவீன காலங்கள் வரை தொடர்ந்து வருகின்றது. இத்தகைய சிந்தனைகளின் அசல் ஆதரவாளர்களும் வாதிகளும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் ஷெய்குல் அஸ்ஹர் (அல் அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தர்) ஆக நியமிக்கப்பட்ட முஹம்மத் அப்துஹ_வைப் போன்றவர்களாவர்;. இருந்தபோதிலும் நாம் முதன்மையாக அக்கறை கொள்ள வேண்டியது, இந்த சிந்தனை, வழிமுறைகளால் உருவாக்கப்பட்ட உற்பத்திகளைப் பற்றியே அல்லாமல் அதன் தோற்றத்தைப் பற்றியன்று.

சிறுபான்மையினர்களின் குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, அவர்களுக்காக இஸ்லாத்தை (புதிதாக) மறு கண்டுபிடிப்பு செய்யும் முயற்சிகளின் மீது நமது பார்வையைச் செலுத்துவோம். இது ‘சிறுபான்மையினர்களுக்கான சட்டவியல்’ (ஃபிக்ஹ_ல் அகல்லியாத்) என அழைக்கப்படுகின்றது. இந்தச் சிந்தனையின் அடிப்படைகள், இதன் பிரயோகத்திலிருந்து மேலெழும்பும் சில முக்கிய முடிவுகள் என்பவற்றை நாம் சுட்டிக்காட்டி, இத்தகையதொரு சட்டவியல் நிலைத்திருப்பதற்கான ஒரு தேவை காணப்படுகின்றதா என்பதை இங்கு ஆராய்வோம்.

சிறுபான்மைக்கான பிக்ஹ் என்றால் என்ன?

இந்த புதுமையான முறைமையை மும்முரமாக முன்வைத்து வாதம் செய்பவர்களுள் முன்னணியில் நிற்கும் ஒருவரான கலாநிதி தாஹா ஜாபிர் அல் அல்வானி, ஃபிக்ஹ_ல் அகல்லியாத் அல்லது சிறுபான்மையினருக்கான சட்டவியல் என்னவென்று இவ்வாறு விளக்குகின்றார்: “…இதன் கருக்கோள் என்னவென்றால், முஸ்லிம் சட்ட நிபுணர், பொதுவான இஸ்லாமிய சட்டவியலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குறிப்பிட்ட சூழ்நிலையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழ்வதால், இவர்களுக்கு பொருத்தமாகக் காணப்படுபவை மற்றவர்களுக்கு பொருத்தமில்லாதவையாக அமையும்.”

மேலும், இவர் தொடர்கிறார்: “...சட்ட நிபுணர் இஸ்லாமிய அறிவுத்துறைகளில் வலுவான ஒரு பின்னணியைக் கொண்டவராக மட்டும் இருக்கக்கூடாது. அந்தச் சமூகத்துடன் சம்பந்தப்பட்ட சமூவியல், பொருளாதார, அரசியல், சர்வதேசத் தொடர்புகள் ஆகியவற்றிலும்கூட புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.”

“ஃபிக்ஹ_ல் அகல்லியாத்தின் நோக்கம்” பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ”இஸ்லாத்தை மீண்டும் (புதிதாக) உருவாக்குவதன்று@ மார்க்கத்தின் நெகிழ்வுத் தன்மைக்குள்ளே நின்று, குறிப்பிட்டச் சூழ்நிலையில் ஒரு சட்ட நிபுணர் எவ்வாறு பணியாற்றுவார் என்பதைத் தீர்மானிக்கும் வழிமுறைமைகளின் தொகுதியொன்றை உருவாக்குவதுதான்” என இவர் கோருகிறார்.

இந்தத் தத்துவத்தையும் அதன் நியாயங்களையும் கூர்ந்து பரிசீலித்தால், இந்த அணுகுமுறையானது, எதிர்கொள்ளப்படும் குறிப்பிட்ட சூழ்நிலையை அல்லது பொதுவில்; சுற்றாடலை, சட்டமியற்றுவதற்கான மூலமாகக் கொள்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். இது முற்றிலும் எப்படியேனும் சாதிக்கும் எதிர்பார்ப்புடன் கூடியதோர் அணுகுமுறையாகும். இதன் பின்விளைவாக, அல்குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றிலிருந்து நிச்சயத்தன்மையுடன் நிறுவப்பட்டவற்றுக்கு முரணாக, சிற்சில ஷாPஆச் சட்டங்களைப் புறக்கணிக்கும் நிலைக்கு இஃது இட்டு சென்றுள்ளது.

கொந்தளிக்கும் பங்குச்சந்தைகள் ( காரணங்களும், ஷரியா விதிமுறைகளும்) The Turbulence of the Stock Markets என்ற புத்தகத்திலிருந்து, பகுதி 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
உலக பொருளாதாரமும் பங்குச்சந்தைகளும் :

கடந்த சில நூற்றாண்டுகளாக உலக நாடுகளில் ஆதிக்கம் பெற்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை உலக பொருளாதாரத்தில் பல தீய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, இத்தீய விளைவுகள் ஏற்படுத்தியிருக்கும் துயரங்கள் அவற்றின் சீற்றத்தை வெளிப்படுத்தத் துவங்கிவிட்டன, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது 1929ல் அமெரிக்காவில் ஏற்பட்ட ‘மாபெரும் வீழ்ச்சி’ (the great depression) என்ற பொருளாதார சரிவைத் தொடர்ந்து 1987 லும் அதுபோன்ற பொருளாதார சிரிவு அமெரிக்காவில் ஏற்பட்டது, இதன் பின்னர் 1997ல் உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் நிதிநிலை நெருக்கடிகளும் ஏற்பட்டன, அதுபோலவே இப்போது அமெரிக்காவின் முன்னணி வங்கிகளும் நிதிநிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்களும் (insurance companies) நிதி நெருக்கடியில் சிக்கி நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கின்றன, AIG எனப்படும் அமெரிக்காவின் காப்பீட்டு நிறுவனம் (Lehman Brothers) லேமென் பிரதர்ஸ் (Freddie Mac) *பிரட்டீ மாக் பென்னிமே (Fenni Mae) ஆகிய நிதிநிறுவனங்கள் தங்கள் திவாலை அறிவித்து விட்டன மேலும் பல முன்னனி வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, இதுபோன்ற வீழ்ச்சிகளும் நிதி நெருக்கடிகளும் முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும், ஏனெனில் தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டுள்ள எந்த பொருளாதாரமும் இத்தகைய அழிவுகளை சந்திப்பது இயல்பான விஷயமாகும், இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உலக நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டி தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியை மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் மேற்கொள்கின்றன, 1929 ல் ஏற்பட்ட ‘பெரும் வீழ்ச்சி’ யை இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டு ஆயுத விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டியதின் மூலம் அமெரிக்கா தன்னைக் காப்பாற்றிக் கொண்டது,
பங்குச்சந்தைகளிலும் உலக பொருளாதாரத்திலும் இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை ஆய்வு செய்ய வேண்டுமானால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இத்தகைய வீழ்ச்சிகளை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் உலக பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டதின் காரணமாக நிதிச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன, இந்த சரிவு முதன்முதலில் ஹாங்காங்கில் உருவாகி பின்னர் ஜப்பானுக்கு பரவியது, அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ஆக்கிரமித்தது, ஒவ்வொரு நாள் தொடங்கிய போதும் இந்த வீழ்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது, 1987ல் நியூயார்க் நகரின் டோஜோன்ஸ்(Dow-Jones) பங்குச் சந்தையின் குறியீடு 22% சரிவடைந்தது, அதற்கு முன்பாக 1929ல் அமெரிக்காவில் பங்குகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் பெரும் சரிவை சந்தித்தன வரலாற்று ஆய்வாளர்கள் அதை ‘மாபெரும் வீழ்ச்சி’ (the great depression) என்று அழைக்கிறார்கள், கடந்த காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் மேற்கத்தியர்கள் எதிர்கொண்ட பெரும் நெருக்கடியை இன்றும் எதிர்கொள்ள நேரிட்டுவிடுமோ என்ற அச்சம் ஆழமாக எழும்பி முதலாளித்துவவாதிகளை நடுங்க வைத்திருக்கிறது, ஏனெனில் இப்பெரும் வீழ்ச்சி உருவாக்கிய தீய விளைவுகளால் பத்து வருடங்களுக்கு மேலாக பரவலான வறுமையும் பட்டினியும் பெரும் துயரங்களும் அமெரிக்காவில் தலைவிரித்தாடின, அன்றைய அமெரிக்க அதிபர் *ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட்(Franklin Roosevelt) இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு கொண்டு பெருமளவில் ஆயுத விற்பனை மேற்கொண்டு அமெரிக்க பொருளாதாரத்தை மறுநிர்மாணம் செய்த பின்னர்தான் நிலைமை சீரடைந்தது,
1998 ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட நிதிநெருக்கடிக்கு முன்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் கோடைக் காலத்தின் துவக்கத்தில் நாணயங்களின் செலாவணி மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டதோடு அவற்றின் பங்குச் சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது, இதன் காரணமாக பல வங்கிகளும் நிதிநிறுவனங்களும் நொறுங்கிப் போயின, இந்த வீழ்ச்சி முதலில் தாய்லாந்தில் துவங்கி பின்னர் *பிலிப்பைன்ஸ். மலேசியா. இந்தோனீசியா என்று பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது, பிறகு அது தொற்றுநோய் போல பரவி தென்கொரியா. தைவான் போன்ற பல வடஆசிய நாடுகளுக்கும் பரவியது, அதுமட்டுமல்ல இந்த வீழ்ச்சி மேற்கு ஆசியாவின் மிகப்பெரும் நிதிச்சந்தையான ஹாங்காங்கையும் உலுக்கியது, இந்த வீழ்ச்சியின் அதிர்வை மேற்குலகம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே அதன் தாக்கம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவிவிட்டது,
1987ல் அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கும் 1997ல் உலக நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் தவறான அடிப்படைதான் காரணம் என்றபோதும் அவை இரண்டின் தாக்கங்களும் தன்மைகளும் வெவ்வேறானவை என்பதை நாம் கவனிக்க வேண்டும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் பலவீனமான சிறிய சந்தைகளாகும் இவற்றில் வர்த்தகம் செய்து வந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவும் அனுபவமற்ற வர்த்தகர்களாகவும் இருந்தார்கள், தாய்லாந்திலும் இந்தோனீசியாவிலும் நிகழ்ந்ததைப் போல இந்த நாடுகளிலுள்ள பங்குச்சந்தைகள் மூலம் லாபம் அடைந்தவர்கள் உண்மையாக அந்த நாடுகளிலுள்ள ஊழல் பேர்வழிகளான ஆட்சியாளர்கள்தான், இந்த நாடுகளிலுள்ள பங்குச்சந்தைகளின் சூத்திரதாரிகளாக விளங்கிய அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்திய பணமுதலைகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பங்குச்சந்தைகளில் அவர்கள் ஈடுபட்டு தந்திரமான முறையில் பெரும் லாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டிக்கொள்ள அனுமதித்தார்கள், இந்த பங்குச்சந்தைகளில் மேற்கத்திய முதலாளிகள் ஈடுபட்டு பெரும் பணத்தை லாபமாக அள்ளிக் கொண்டு செல்லும் வண்ணம் அந்நாடுகளில் மேற்கத்திய பங்குச்சந்தை முறைகளை அமெரிக்கா வடிவமைத்து இருந்தது, உலகில் புதிய பொருளாதார அமைப்பை (New World Economy) உருவாக்குவதற்கு மிக அவசியமானது என்று மேற்கத்தியர்கள் கூறிவரும் ‘அந்நிய முதலீடு’ என்ற போர்வையில் இத்தகைய பொருளாதார சுரண்டல்களை அமெரிக்காவும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளும் அரங்கேற்றி வருகின்றன. இந்த சுரண்டலுக்கு பின்னணியில் அந்தந்த நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களுக்கு உதவியாக செயல்படுகிறார்கள்,
இந்த முதலீடுகள் மறைமுக முதலீடுகள் (indirect investment) என்று அழைக்கப்பட்டாலும் அவை அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் போடப்படும் உண்மையான முதலீடுகளாக இருப்பதில்லை ஏனெனில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ள கனரக தொழிற் சாலைகளையும் (heavy industries) வர்த்தக நிறுவனங்களையும் (trading companies) அமெரிக்கா விலைக்கு வாங்கி அவற்றை தங்கள் தாய் நிறுவனங்களுடன் இணைத்து அவற்றில் முதலீடு செய்தது, இத்தகைய முதலீடுகளை உண்மையான முதலீடு என்று கூறலாம் ஆனால் குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டும் நோக்கத்தோடு வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் மேற்கத்திய முதலாளிகள் போடும் பணம் உண்மையான முதலீடு அல்ல, ஒரு நாட்டின் அரசோ அல்லது மற்றவர்களோ பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வது மறைமுக முதலீடு என்று கூறப்படுகிறது, இந்த பங்குகளை ஒரு முதலீட்டாளர் வாங்கும்போது அந்த நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது அதை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது அதன் லாபத்தில் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமோ அவருக்கு இருப்பதில்லை, மாறாக அவர் வாங்குகின்ற பங்குகளின் விலையில் உயர்வு ஏற்படும்போது அவற்றை விற்பனை செய்து துரிதமான பெரும் லாபத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் அவற்றை வாங்குகிறார்,
மேற்கத்திய முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதகமான சந்தையாக வளரும் நாடுகளின் நிதிச்சந்தைகள் விளங்குகின்றன ஏனெனில் பெரும் பணத்தை முதலீடு செய்பவர்களால் பங்குகளின் விலையேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன, இந்த நாடுகளின் நிதிச்சந்தைகள் சிறிய அளவில் இருப்பதால் மேற்கத்திய முதலீட்டாளர்களால் விலையேற்றங்களை செயற்கையாக உருவாக்க முடிகிறது, மேலும் மேற்கத்திய முதலீட்டாளர்களிடம் காணப்படும் முதலீடுவலிமை. சந்தையின் நுட்பங்கள் பற்றிய அறிவு. துணிச்சல் ஆகிய திறன்கள் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் காணப்படுவதில்லை,
யூகவணிகத்தில் நிபுணர்களாக விளங்கும் மேற்கத்திய முதலாளிகள் ஒரு நாட்டில் நுழையும்போது பலநூறு மில்லியன் டாலர்களை அந்நிய முதலீடாக நாட்டிற்குள் கொண்டு வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள், இவ்வாறு கொண்டுவரும் பணம் ஒன்று மேற்கத்திய நாடுகளிலுள்ள பெரும் செல்வந்தர்களின் பணமாக இருக்கும் அல்லது வங்கிகளில் கடன் பெற்று வந்த பணமாக இருக்கும், இந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் வளரும் நாடுகளிலுள்ள உள்ளூர் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலைக்கு வாங்குகிறார்கள், தாங்கள் விலைக்கு வாங்கிய பங்குகளின் விலைகள் உயரும்வரை அவர்கள் காத்திருப்பதில்லை மாறாக அவர்கள் கையில் வைத்திருக்கும் குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்றத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு யுக்திகளையும் தந்திரங்களையும் கையாண்டு விலையேற்றத்தை உண்டாக்குவார்கள், உதாரணமாக; குறிப்பிட்ட பங்குகளில் மிக்பெரும் தொகையை அவர்கள் முதலீடு செய்துள்ளதாக வதந்தியை கிளப்பி விடுவார்கள் அல்லது அவர்கள் பங்கு வாங்கியுள்ள நிறுவனம் பெரும் லாபத்தை ஈட்டப்போகிறது என்ற வதந்தியை கிளப்பி விடுவார்கள், இதனால் உள்ளூர் பங்கு வர்த்தகர்கள் பங்குகளை வாங்குவதற்கு குவிந்து விடுவார்கள் பின்னர் அந்த குறிப்பிட்ட பங்குகளின் விலை உயர்வு அடைந்து கொண்டே செல்லும் விலையேற்றம் உச்சத்தை அடைந்திருக்கும் தருணத்தில் தங்களிடமுள்ள அனைத்து பங்குகளையும் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் துரிதமாக விற்று பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டு வேறொரு நிறுவனத்தை நோக்கியோ அல்லது வேறொரு நாட்டை நோக்கியோ சென்று விடுவார்கள், இவ்வாறுதான் மலேசியர்களும் தாய்லாந்து நாட்டினரும் இந்தோனீசியர்களும் தங்கள் நாட்டில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட மேற்கத்தியர்களின் தந்திரத்தை அறிந்து கொள்ள தவறிவிட்டதால் தங்கள் நாட்டின் பெரும் செல்வத்தை அவர்கள் சுரண்டிக் கொண்டு செல்லும்படி விட்டுவிட்டார்கள், மேற்கத்திய வர்த்தகர்களின் தந்திரங்களால் தாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை உள்ளூர் முதலீட்டாளர்கள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்து முடிந்து விடுகின்றன, சில நேரங்களில் மேற்கத்திய நாடுகளிலுள்ள பல்வேறு முதலீட்டாளர்கள் இணைந்து ஒன்றாக இத்தகைய பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் ஏனெனில் அவர்கள் அனைவரின் நோக்கமும் வளரும் நாடுகளிலுள்ள அப்பாவி முதலீட்டாளர்களின் பணத்தை வர்த்தகம் என்ற பெயரில் சுரண்டிக் கொண்டு செல்வதுதான்õ இவ்வாறாக இந்த அந்நிய முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள குறிப்பிட்ட பங்குகள் அனைத்தையும் விற்றுவிடும்போது உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால் பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்படுகிறது, பங்குச் சந்தையின் சரிவைத் தொடர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்நாட்டு நாணயத்தின் செலாவணி மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுகிறது மேலும் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள் கடன்தொகை வசூலாகாத காரணத்தால் பல நேரங்களில் திவாலாகி விடுகின்றன,
சோவியத் ரஷ்யா வீழ்ந்த பின்னர் சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரே ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உருவான காலம் முதற்கொண்டு அது ஆதரித்து வருவதும் அந்நிய நாடுகளின் மீது திணித்து வருவதுமான ‘மறைமுக முதலீடு’ (indirect investment) என்ற கோஷத்தின் உண்மைநிலை இதுதான், இதன் மூலமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது மேலும் இத்தகைய மறைமுக முதலீடு என்பது நேரடி முதலீடு ஏற்படுத்தும் ஆபத்துக்களை விட பலமடங்கு ஆபத்துக்களை உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடியது, இதன்மூலமாக வளரும் நாடுகளின் வளங்களும் பொருளாதாரமும் தவறான முறையில் விரயத்திற்கு உள்ளாவதோடு அந்நாடுகள் அடைந்து வரும் பொரளாதார நெருக்கடிகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் இதுவே பிரதான காரணமாக இருக்கிறது, மேலும் இதன் காரணமாக அந்நாட்டு குடிமக்கள் பல இழிவான துயரங்களையும் வறுமையின் கொடுமைகளையும் அனுபவித்து வருகிறார்கள், மெக்ஸிகோ. பிரேஸில். அர்ஜென்டினா போன்ற லத்தீன்அமெரிக்க நாடுகளும் துருக்கி. எகிப்து. ஜோர்டன் போன்ற மத்தியகிழக்கு ஆசிய நாடுகளும் இதுபோன்ற துயரமான பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டுள்ளன, மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா. இந்தோனீசியா போன்ற நாடுகளில் கடந்த காலங்களில் பங்குச்சந்தை மூலமாக நிகழ்ந்த பொருளாதார சீரழிவுகளுக்கும் தற்காலத்தில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் இதுவே நேரடி காரணமாகவும் இருக்கிறது,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் நிதிச்சந்தைகளைப் பொறுத்தவரை அவற்றின் நிலை வளரும் நாடுகளின் நிதிச்சந்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, மேற்கு நாடுகளின் பங்குச் சந்தைகள் உறுதியான முறையில் நிர்மாணிக்கப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன, இந்த பங்குச்சந்தைகளில் பங்கு வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் இருப்பதால் இவை மிப்பெரும் நிதிச்சந்தைகளாக இருந்து வருகின்றன, லண்டன் மற்றும் நியூயார்க் ஆகியவற்றின் பங்குச்சந்தைகளில் மில்லியன் கணக்கான வர்த்தகர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள், இந்த சந்தைகளில் மிக்பெரும் தொகைகள் பங்குகள் (Shares) பங்குப்பத்திரங்கள் (Bonds) ஆகியவற்றின் வர்த்தகத்தில் கொட்டப்படுகின்றன, இந்த சந்தைகளில் கொட்டப்படும் பணத்தின் மதிப்பு அந்த நாடுகளின் ரியல் எஸ்டேட். கனரக ஆலைகள். வர்த்தகப் பொருட்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட பலமடங்கு அதிகமானதுõ மேலும் பங்குகள் மற்றும் பங்குப்பத்திரங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பு உண்மைப் பொருட்களில் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பைவிட பலமடங்கு அதிகமானது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இந்த நிதிச்சந்தைகளில் அதிகமான வர்த்தகர்களும் வேண்டுமளவு பண முதலீடுகளும் இருக்கிறது என்பதையும் வர்த்தகர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது, வர்த்தகர்களிடையே நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக எந்தவொரு தனிப்பட்ட வர்த்தகரும் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியாது ஆகவே மேற்கத்திய பணக்கார முதலைகள் இந்தப்போட்டியை பயன்படுத்தி தந்திரமான முறையில் துரிதமான பெரும் லாபத்தை ஈட்டிவருகிறார்கள்,
இவ்வாறு இருந்தபோதிலும் பல சாதாரண வர்த்தகர்கள் இந்த சந்தைகளில் தங்கள் முழுநேர கவனத்தை செலுத்தி பெரும் தொகைகளை லாபமாக ஈட்டி அதிகமான சொத்துக்களை பெற்றிருக்கிறார்கள், அவர்கள் பல்வேறு தந்திர முறைகளை உருவாக்கி செயல் படுத்துகிறார்கள் மேலும் பல்வேறு திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் உருவாக்கி பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரங்கள் மற்றும் பங்குகளின் விலைகள் ஆகியவற்றில் தாங்கள் விரும்பியபடி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள், பங்குச்சந்தைகளில் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய செயல்பாடுகளுக்கும் அந்த பங்குகளை வினயோகம் செய்த நிறுவனங்களின் செயல்பாடுகள். அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் லாபநஷ்டங்கள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகியவற்றிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, பங்குச்சந்தைகளில் பிரயோகிக்கப்படும் வர்த்தக யுக்திகள். வர்த்தக ஒப்பந்தங்கள். விலையேற்றங்களில் ஆதிக்கம் செலுத்தும் முறைகள் போன்ற பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பல பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கல்வி போதிக்கப்படுகிறது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை (PLC Shares) விற்பனை செய்யும் நிதிச்சந்தையாக இருந்தாலும் அல்லது கருவூலக நிதிப்பத்திரங்களை (Exchequer Bill) விற்பனை செய்யும் நிதிச்சந்தையாக இருந்தாலும் அல்லது நிறுவனங்களின் ஒப்பந்தப் பத்திரங்களை (companies bonds) விற்பனை செய்யும் நிதிச்சந்தையாக இருந்தாலும் அவை அனைத்தும் சிலந்திவலை போன்ற பலவீனமான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டவையாகும் ஏனெனில் தங்கள் கையிலுள்ள காகித பத்திரத்தின் மதிப்பில் உயர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் பெரும் பணத்தை எளிதான முறையில் லாபமாக ஈட்டிவிடலாம் என்ற மனிதர்களின் பேராசையும் இவற்றின் கவர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, காலையில் சூரியன் உதயமானவுடன் எழுந்து நிதிச்சந்தையின் வர்த்தக அரங்குகளில் நடைபெறும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசை கொண்ட மேற்கத்தியர்களின் சூதாட்ட மோகத்தை அடித்தளமாகக் கொண்டதுதான் இந்த நிதிச்சந்தைகள், அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக் கடன் திட்டத்தில் முதலீடு செய்திருந்த வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிதிச்சந்தைகளில் இத்தகை நிலைதான் காணப்பட்டது, இந்த சந்தைகளில் ஈடுபட்டிருக்கும் இடைத்தரகர்கள் (brokers) பொதுமக்களின் சார்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பெரும் தொகையை தரகுப் பணமாக பெற்றுக் கொள்கிறார்கள்,
இயல்பான காரணத்தினாலோ அல்லது எதிர்பாராத காரணத்தினாலோ நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கையில் சந்தேகம் ஏற்படும்போது பங்குச்சந்தைகளில் குளறுபடிகள் ஏற்படத் துவங்கி விடுகின்றன, இத்தகைய தருணங்களில் பங்குகளை வைத்திருப்பவர்கள் அதுவரை ஈட்டிய லாபம் தங்கள் கையை விட்டுச் சென்று விடக் கூடாது என்பதற்காக தங்களிடம் உள்ள பங்குகளை விரைவாக விற்பனை செய்து விடுவதற்கு முற்படுகிறார்கள், பங்குகளை கையில் வைத்திருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பங்குகளை விற்பதற்கு முற்படும்போது பங்குகளை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்து விடுகிறது, இதன் விளைவாக பங்குகளின் விலையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்படுகின்றன, இதுபோன்ற சூழல் ஏற்படும்போது 1929ல் ஏற்பட்டது போன்றோ அல்லது 1987ல் ஏற்பட்டது போன்றோ அல்லது 1997ல் ஏற்பட்டது போன்றோ பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் அச்சம் கொள்கிறார்கள், இதன் காரணமாக துரிதமாக பங்குகளை விற்று நஷ்டத்திலிருந்து தங்களை பாதகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களிடமுள்ள பங்குகள் அனைத்தையும் விற்பதற்கு முனையும் போது பங்குகளின் விலை உச்சகட்டமான வீழ்ச்சியை சந்திக்கிறது, இதன் முடிவாக குறிபிட்ட பங்குகளை வாங்கியவர்களும் அந்த பங்குகளை வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் பெரும் நஷ்டத்தை அடைகின்றன, இதன் விளைவாக உள்ளூர் நாணயங்களின் செலாவணி மதிப்பில் (exchange rate of local currency) வீழ்ச்சி ஏற்பட்டு பொருளாதார பின்னடைவும் நிதி நெருக்கடிகளும் தவிர்க்க இயலாத முறையில் ஏற்பட்டு விடுகின்றன,
முதலாளித்துவக் கொள்கையும் மேற்கத்திய சமுதாயமும் இன்று எதிர் கொண்டுள்ள பொருளாதார அதிர்வுகளை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வு கொண்ட முஸ்லிம்கள் எவரும் அதுபற்றி வருத்தம் அடைய மாட்டார்கள், ஏனெனில் தவறான அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் ஒருநாள் இடிந்து விழ்ந்துவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள், ஆனால் மலேசியா. இந்தோனீசியா மற்றும் இதர நாடுகளிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து வருத்தம் கொள்ளாமல் இருக்க முடியாது, இந்த முஸ்லிம்கள் மேற்கத்திய முதலாளித்துவக் கொள்கை மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் மோகம் கொண்டவர்களாக அதை பின்பற்றி செயல் படுவதோடு முழுமையான பொருளாதார முன்னேற்றம் என்ற போர்வையில் அது எழுப்பிக் கொண்டிருக்கும் தாராள வர்த்தக கொள்கை என்ற கோஷத்தின் மீதும் அது வாக்குறுதி அளிக்கும் பொரளாதார முன்னேற்றத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள், இதனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவிற்கும் பெருந்துயரத்திற்கும் உள்ளாக்கி இருக்கும் மேற்கத்தியர்களின் கைகளில் தங்கள் முதலீடுகள் சென்றடைகின்றன என்பதையும் அதன் மூலமாக இந்த முஸ்லிம்ள் அவர்களின் பொருளாதாரக் கொள்கையிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கிறார்கள் என்பதையும் இதனால் மேற்கத்தியர்களின் கனரக ஆலைகள் முஸ்லிம் உலகத்தில் நிர்மாணிக்கப் படுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது என்பதையும் அங்கு மலிவான ஊதியம் கொடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் மேற்கத்தியர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குரிய பொருட்களும் அத்யாவசிய தேவைக்குரிய பொருட்களும் தயாரிக்கப் படுகின்றன என்பதையும் இந்த முஸ்லிம்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை, பங்குச்சந்தைகள் போன்ற முதலாளித்துவ பொருளாதார சிந்தனைகளை தழுவி இருக்கும் முஸ்லிம்களைக் குறித்து விழிப்புணர்வு கொண்ட முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளனர், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் செய்தி ஊடகங்களின் துணையுடன் திட்டமிட்ட திடமான பிரச்சாரங்களை மேற்கொண்டு முதலாளித்துவ சிந்தனைக்கு மாற்றாக இன்றைய உலகில் எந்த சிந்தனையும் இல்லை என்று கூறுவதின் மூலமும் இன்றைய காலகட்டம் முதலாளித்துவத்தின் பொற்காலம் (ஞ்ர்ப்க்ங்ய் ங்ழ்ஹ) என்று கோஷமிடுவதின் மூலமும் அமெரிக்கா உலக மக்களை ஏமாற்றி வருகிறது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்,
மேற்குலகின் பிரதான பங்குச்சந்தைகளில் திரும்பத்திரும்ப ஏற்பட்டு வரும் அதிர்வுகள் அவர்களின் பொருளாதாரக் கொள்கை பலவீனமான சிலந்திவலை போன்றது என்பதையும். அதன் தவறான அடித்தளத்தை இன்றைய சூழல் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது என்பதையும். அது ஒளிர்கிறது என்பது அப்பட்டமான பொய் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன, முதலாளித்துவ பொருளாதார சிந்தனை என்பது குறுகிய சுயநல நோக்கம் கொண்டதாகும், அது மனிதனை படுபாதாளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் ஏனெனில் அது மனிதனின் கீழ்த்தரமான நோக்கங்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது, இந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்படும் சமுதாயத்தின் உண்மைநிலை எவ்வாறு இருக்கும் என்றால் உலக லாபத்தையும் உடல் இன்பத்தையும் பிரதான இலட்சியமாகக் கொண்டு வாழ்க்கை வசதிகளை அடைந்து கொள்வதற்காக மூச்சுத்திணறும் கடும் போட்டியை மேற்கொண்டு உற்பத்தியையும் அதை நுகர்வதையும் தவிர வேறெந்த சமூக மாண்புகளுக்கும் இடமில்லாத மிருகநிலையில சுற்றித்திரியும் மானிட கூட்டமாக அந்த சமுதாயம் மாறிவிடும், இத்தகை சமுதாயத்தில் வாழம் மக்களில் ஒருசிலர் மட்டும் பெரும் செல்வத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் எஞ்சியுள்ள பெரும்பான்மை மக்கள் கஷ்டமான உழைப்பிலும் வறுமையான வாழ்க்கையிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி துயரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால் ஓயாத மனப்போராட்டத்திற்கு ஆளாகியிருப்பார்கள், முதலாளித்துவக் கொள்கையால் மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும் அது உண்மையில் பலவீனமான சிலந்திவலை போன்றது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் போதுமான ஆதாரங்கள் வெளிப்பட்டு விட்டன, இதை உணர்ந்து கொள்வதற்கு மேற்கத்திய பொருளாதாரக் கொள்கையிலிருந்து உருவான பங்குச்சந்தையின் மூலமாக மாபெரும் பொருளாதார சீரழிவு ஏற்படும்வரை காத்திருக்க வேண்டும் என்று எண்ணினால் அது தவறானதாகும், மேற்கத்தியர்களின் சிந்தனைகளையும் அவர்களின் செயல்பாடுகளில் பலவற்றையும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதும் அவர்களின் ஊழலை வெட்டவெளிச்சம் ஆக்குவதற்காக அவர்களின் சிந்தனையை விரிவான முறையில் ஆய்வு செய்வதும் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய பணியாகும்,
முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கீழ்கண்ட மூன்று அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டுதான் மேற்கு நாடுகளின் பங்குச்சந்தைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, இந்த மூன்று அமைப்புகள் இல்லையெனும் பட்சத்தில் அவைகள் இருக்கவே முடியாது. அவையாவன:
1) பொதுத்துறை நிறுவன அமைப்பு (Public limited company system - PLC)
2) வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகள் அமைப்பு (Usurious banking system) 3)மாற்றிக் கொள்ள முடியாத காகித நாணயமுறை (inconvertible paper money standard)

இந்த மூன்று அமைப்புகள் இயங்கிக் கொண்டிருப்பதால் முதலாளித்துவ பொருளாதாரத்தில் இரண்டுவகை பொருளாதாரங்கள் அல்லது இரண்டுவகை சந்தைகள் இருந்து வருகின்றன, முதல்வகை பொருளாதாரம் உண்மையான பொருளாதாரமாக (real economy) இருக்கிறது அதில் உண்மையான பொருட்களை உற்பத்தி செய்தல் அவற்றில் உண்மையான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல் உண்மையான பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்பாடுகள் நடந்து வருகின்றன, இரண்டாவதுவகை பொருளாதாரம் நிதிச்சந்தை பொருôதாரம் (financial economy or financial markets) இதை ஒட்டுண்ணி பொருளாதாரம் (parasite economy) என்றும் அழைக்கிறார்கள், இதில் நிதியியல் சார்ந்த ஆவணப்பத்திரங்களின் (financial documents) வர்த்தகம் நடைபெறுகின்றன, இந்த சந்தைகளில் மாற்றக்கூடிய பிணை ஒப்பந்தங்கள் (transferable binding certificates) காசோலைகள் (cheques) நிதிப்பத்திரங்கள் securities) ரொக்கப்பத்திரங்கள் (cash certificates) பங்குகள் (shares) பங்குப்பத்திரங்கள் (bonds) ஆகியவற்றை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள், ஒவ்வொரு நாளும் நிலவும் விலையேற்றத்தின் அடிப்படையில் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு இவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள், உண்மையான பொருட்களில் மேற்கொள்ளப்படும் வர்த்தகங்களின் மதிப்பை விட பன்மடங்கு மதிப்புள்ள வர்த்தகம் இந்த நிதிச்சந்தைகளில் மேற்கொள்ளப்படுவதாக கணக்கிடப் பட்டுள்ளது,

Monday, November 17, 2008

முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடி



அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَஅல்லாஹ் அல்லாதவர்களை (தங்களுக்கு) பாதுகவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும், அது (தனக்காக) வீடு ஒன்றைக் கட்டடிக்கொண்டது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும் இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே. ( 29 : 41 )
அல்லாஹ்(சுபு) இந்த வசனத்தில் சிலந்திப்பூச்சியின் வீட்டைப்பற்றிக் கூறும்போது அது வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமான வீடு என்று கூறுகிறான், அதுபோலவே வெளித்தோற்றத்தில் முதாலாளித்துவக்கொள்கை (capitalistic system) மிகவும் வளர்ச்சியடைந்த நவீனமான கொள்கை போன்று தோன்றினாலும் அல்லாஹ்(சுபு) கூறிக்காட்டுவதுபோல அது கொள்கைகளிலெல்லாம் மிகவும் பலவீனமான பிற்போக்குத்தனமான கொள்கையாகும்,
கடந்தசில நாட்களாக மேற்கத்திய நாடுகளிலுள்ள பழம்பெரும் வங்கிகளில் முன்னோடியான வங்கிகள் பலவும் நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கின்றன, முதன்முதலில் அமெரிக்காவின் AIG வங்கியின் திவால் (bankrupt) செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டது, அதன்பின்னர் அமெரிக்க அரசு அந்த வங்கியை விலைகொடுத்து வாங்கியது, பின்னர் லெஹ்மேன் பிரதர்ஸ் (Lehman Brothers) என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியும் அதன்பின்னர் மெரில் லைன்ச் (Meryl Lynch) என்ற வங்கியும் *பென்னீமி (Fenni Mae) மற்றும் *பிரடீமாக் (Freddie Mac) ஆகிய நிதிநிறுவனங்களும் தங்களது திவாலை (bankrupt) அறிவித்தன, இந்த வங்கிகளை விலைகொடுத்து வாங்குவதற்கோ அல்லது அவற்றில் முதலீடு செய்வதற்கோ எவரும் முன்வராத காரணத்தால் அவை நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இதன்விளைவாக உலகபொருளாதாரத்தில் ஒருவிதமான தேக்கநிலை ஏற்பட்டு விலைவாசிகள் உயர்ந்து உச்சத்தை அடைந்ததோடு பலர் தங்களது வேலையையும் இழந்துவிட்டனர்,
மேற்கத்திய நாடுகளிலிருந்து சிலஆயிரம் மைல் தூரத்திற்கு அப்பாலுள்ள இந்தியாவில் நாம் வசித்து வந்தபோதிலும் உலகளாவிய இந்த நிகழ்வின் தீயவிளைவிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக நாம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும், நடப்பு செய்தித்தாள்களில் மும்பை பங்குச்சந்தையும் தேசிய பங்குச்சந்தையும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியை நாம் காண்கிறோம், கடந்த ஒரு வாரகாலத்தில் மும்பை பங்குச்சந்தை (BSE- Bombay stock exchange) 16% வீழ்ச்சியடைந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பின்னடைவை சந்தித்துள்ளது, முன்பு ஒருபோதும் காணாத வகையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது ( ரூ 49,50), அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கின்ற வங்கிகளின் வீழ்ச்சியும் நிதிநிறுவனங்களின் (financial institutions) திவாலாவும் உலகமுழுவதிலும் கணிசமான அளவுக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது, இதன் விளைவுகள் சமீபத்தில் மும்பை பங்குச்சந்தையிலும் தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது,
இந்தோனீஸியாவின் பங்குச்சந்தை கடந்த சிலநாட்களாக திறக்கப்படவில்லை, சென்ற வாரத்தில் அது 20% விழ்ச்சியையும் கடந்த ஒருவருடத்தில் அது மொத்தமாக 47% வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது, வளைகுடா நாடான சவுதிஅரபியாவின் பங்குச்சந்தை 43% வீழ்ச்சியை சந்தித்துள்ளது,
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது õ இந்த வீழ்ச்சிக்கு பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்ன? இந்த விவகாரத்தை முறையாக ஆய்வுசெய்தால் கிரடிட் கிரன்ச் credit crunch) என்று கூறப்படும் ஒரேயொரு விஷயம்தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், இந்த விவகாரத்தைப் பற்றி நாம் விளக்கமாக அறிந்துகொள்ள வேண்டும் ஏனெனில் உலக பொருளாதாரம் தேக்கநிலைக்குச் சென்றிருப்பதற்கும் நிதிச்சந்தையில்(financial market) நெருக்கடிநிலை ஏற்பட்டிருப்பதற்கும் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட உலகின் முன்னேற்றம் இப்போது சருக்குதலை அடைந்திருப்பதற்கும் பலநபர்கள் வேலையிழப்பை சந்தித்ததற்கும் மேற்குலகின் பொருளாதாரச் செழிப்பு வரண்டுபோய் உலக பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பணம் தொலைந்து போனதற்கும் கிரடிட் கிரன்ச்(credit crunch) என்று சொல்லப்படும் இந்த விவகாரம்தான் பின்னனி காரணமாக இருந்திருக்கிறது,
கிரடிட் கிரன்ச் (credit crunch) என்றால் என்ன? அதனால் ஏற்பட்ட விளைவகள் என்ன?
இந்த விவகாரம் எளிதாக புரிந்துகொள்ளக் கூடியதுதான், இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று எண்ணும்போது தங்கள் கையில் அதற்குரிய பணம் இல்லாதநிலையில் கடனுக்கு பணம் பெற்று வீடு வாங்,குகிறார்க்ள், அவ்வாறு கடன் வாங்கும்போது ஒரு வங்கியோ அல்லது ஒரு நிதிநிறுவனமோ வட்டி அடிப்படையில் அதற்கு நிநியுதவி செய்கிறது, கடனைப்பெற்றவர் அசல்தொகையையும் வட்டித்தொகையையும் பின்னர் அவர் பல தவணைகளில் திருப்பிச் செலுத்தியாகவேண்டும், இதுதான் நிதியுதவி அளிக்கும் வங்கிகளின் நிபந்தனையாகும், தங்களது கையில் பணமில்லாத நிலையில் வீடு வாங்குபவர்களுக்கு இது எளிமையான வழியாகத் தோன்றுகிறது அதேவேளையில் நிதியுதவி செய்வதன் மூலம் வட்டித்தொகை கிடைப்பதால் வங்கிகள் இதை லாபம் ஈட்டும் நடவடிக்கையாக கருதுகின்றன, இந்த முறையில் வீடு வாங்குவதற்கு அடமானமுறை (mortgaging) என்று கூறப்படுகிறது,
அடமானமுறையில் வீடு வாங்குகிறவர்கள் நிதியுதவி அளித்த வங்கிகளுக்கு அசல் மற்றும் வட்டித்தொகையை திருப்பிச் செலுத்திய பின்புதான் அதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளமுடியும், அவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாதவிட்டால் வீடு பறிமுதல் செய்யப்பட்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்படும்,
1940 ஆம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்க மக்களில் 40 சதவீதத்தினர் சொந்தமாக வீடு வைத்திருந்தார்கள், 1960 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 60 வதவீதத்தினர் சொந்தமாக வீடு வைத்திருந்தார்கள், தற்போதை நிலவரப்படி கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் தங்களுக்கு சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்ளகள், வங்கியில் கடன்பெற்று வீடு வாங்கிய பின்பு அந்தக்கடனை அடைக்காத நிலையில் குடியிருப்பவர்களும் இதில் அடங்குவார்கள், அதாவது இன்றையநிலையில் வாடகை செலுத்தாமல் குடியிருப்பவர்கள் 70 சதவீதத்தினர் ஆவார்கள்,
தங்கள் கையில் பணமில்லாத காரணத்தாலும் வங்கியில் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தவதற்கு போதிய வருமானம் இல்லை என்பதாலும் சுமார் 25 சதவீதத்திலிருந்து 30 சதவீத மக்கள் வீடு இல்லாதநிலையில் அமெரிக்காவில் இருந்துவருகிறார்கள், வீடு வாங்குவதற்கு வழங்கப்படும் நிதியுதவி (housing loan) தொடர்பான சட்டங்களிலுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கும் கொள்கையை 1980 ஆம் ஆண்டு அமெரிக்கஅரசு கொண்டுவந்தது, இதன்காரணமாக அடமானமுறையில் கடனுக்கு வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது, அடமானமுறையில் நிதியுதவி வழங்கும் நிதிநிறுவனங்களின் நடவடிக்கைகள் அதிகரித்து உச்சகட்டமான லாபத்தை அவைகள் தங்கள் கணக்கு பதிவேடுகளில் பதியவைத்துக் கொண்டன,
இந்தவகை அடமானத்திற்கு சப்பிரைம் மார்ட்கேஜ் (subprime mortgage) என்று கூறுகிறார்கள், சாதாரணமான சூழலில் கடன் பெறமுடியாதவர்கள் கூட இந்தமுறையில் கடன் பெற்றுவிடலாம், அதேவேளையில் இந்தமுறையில் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வட்டித்தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது,
அமெரிக்காவில் வீடு இல்லாமல் இருக்கும் 25 சதவீத மக்களுக்காக அடமானமுறையில் வீடு வாங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது, 2007 ஆம் ஆண்டு துவக்கத்தில் அடமானமுறை கடன் திட்டத்தில் வங்கிகள் முதலீடு செய்த மொத்த தொகை சுமார் 1,3 டிரில்லியன் டாலராகும் அதாவது ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி அமெரிக்க டாலர் பணத்தை இந்த திட்டத்தில் நிதிநிறுவனங்களும் வங்கிகளும் வட்டி ஈட்டும் நோக்கத்தோடு முதலீடு செய்தன,
அமெரிக்க மக்கள் சொந்தமாக வீடு வாங்கும் ஆசையில் கண்மூடித்தனமாக செயல்பட்டதால் சொந்தமாக வீடு வாங்குகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது, கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியதால் சமாளிக்கமுடியாத அளவுக்கு நிதிநெருக்கடியை சந்தித்த அமெரிக்காவின் மிகப்பெரிய நிதிநிறுவனமான நியூசெஞ்சுரி இன்க்(New Century Inc) 2007 ஆம் ஆண்டு தனது திவாலாவை அறிவித்தது, இதுதான் அமெரிக்காவில் முதன்முதலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் அறிகுறியாகும்,
தங்கள் பொருளாதாரக் கொள்கையின் மீது வைத்த அதீதமான நம்பிக்கையின் காரணமாக கடன் பெற்றவாகளில் பெரும்பான்மையானவர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லையென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டார்கள், அதிகமாக பணம் ஈட்டவேண்டும் என்ற பேராசையில் அவர்கள் தங்களைத் தாங்களே அழிவுக்கு இட்டுச்சென்றதோடு உலக பொருளாதாரத்தையும் அழிவுக்கு இட்டுச்சென்று விட்டார்கள் õ
இத்தகையை மனிதர்களைப்பற்றி அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகின்றான்.
أَلْهَاكُمُ التَّكَاثُرُஒருவரைவிட ஒருவர் அதிகமாக பொருளைப் பெருக்கவேண்டும் என்ற பேராசை உங்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டது,,,,,,,,, (102 : 1 )
அமெரிக்கா நிதிச்சந்தையின் மாபெரும் ஜாம்பவான்களான *பிரடீமேக் (Freddie Mac) மற்றும் *பென்னிமி (Fenni Mae) ஆகிய நிதிநிறுவனங்கள் தாங்கள் திவாலான செய்தியை அறிவித்து விட்டன மேலும் தங்கள் நிதிநிறுவன நடவடிக்கைகளை அனைத்தையும் மூடிவிட்டன, பின்னர் அவைகள் கையில் அகப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பொருளாதாரநிலை பற்றியோ அல்லது கடனை திருப்பிச்செலுத்தும் திறன் மற்றும் நாணயம் ஆகியவை பற்றியோ ஆய்வுசெய்யாமல் தங்களிடமுள்ள வீடுகளை கடனுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன, ஆரம்பத்தில் 7% விலையை உயர்த்தி விற்பனை செய்தவர்கள் பிறகு 9,5% விலையை உயர்த்தி விற்பனை செய்தார்கள், வீட்டை வாங்களிவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய மாதத்தவணை இரட்டிப்பாக ஆனதால் அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை, முதலாளித்துவ ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி சொத்தை அடமானத்தில் வாங்கியவர் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்தாதவரை சொத்தை விற்கமுடியாது, இந்நிலையில் அவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து விட்டன, இந்த சட்டத்தின் அடிப்படையில் கடன்பெற்றவர்கள் தங்களிடம் மொத்தபணம் இருந்தாலும் ஒரேதவணையில் திருப்பிச் செலுத்த முடியாது, கடன் பெற்றபோது ஏற்றுக்கொண்ட தவணைக் காலத்திற்குரிய வட்டி முழுவதையும் திருப்பிக் கொடுக்காமல் கடனை அடைக்கமுடியாது அதாவது கடன் பெற்ற தொகையைப்போல இருமடங்கு தொகையை அவர் செலுத்தவேண்டும் , உதாரணமாக பத்துவருட தவணைக்கு கடன் வாங்கியவர் ஒரேமாதத்தில் மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்த தயாராக இருந்தாலும் பத்துவருட காலத்திற்குரிய வட்டியை அவர் செலுத்தியே ஆகவேண்டும், இவ்வாறாக ஒவ்வொரு ஆயிரம் டாலர் கடனுக்கும் வட்டித்தொகை நீங்கலாக அவர் 350 டாலர் அதிகமாக செலுத்தவேண்டும், எனவே கடன் பெற்றவர்களால் கடன்தொகையை திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனடிப்படையில் பல்லாயிரக் கணக்கானவர்கள் தவணை தவறிய கடன்காரர்களாக ஆகிவிட்டார்கள், ஒரு புள்ளிவிபரத்தின்படி இத்தகையவர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சமாகும்,
தவணை தவறிய கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த உதவிபுரியும் நோக்கத்தோடு புஷ் நிர்வாகம் ஐந்துவருட வட்டித்தொகை வசூலிப்பதை நிறுத்திவைத்தது, இந்நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மறுவிற்பனைக்கு தயாராக இருந்த வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டே சென்றது ஆனால் வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை, காலதாமதம் ஏற்பட்டதால் வீடுகளின் விலைமதிப்பு உயர்ந்துகொண்டே சென்றது இருந்தபோதிலும் அவற்றை வாங்குவதற்கு எவரும் தயாராக இல்லை, மேற்கூறிய அமெரிக்காவின் இரண்டு நிதிநிறுவனமும் இத்தகைய நெருக்கடியை சந்தித்தது, சமீபத்தில் அமெரிக்காவின் மற்றொரு மிகப்பெரிய வங்கியான லெஹ்மேன் பிரதர்ஸ் (Lehman Brothers) என்ற நிறுவனமும் இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன,
நிதிநிறுவனங்கள் கண்மூடித்தனமாக கடன்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன்?
கடன்வாங்கியவர்கள் ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் என்ன விளைவு ஏற்படும் என்று ஏன் அவர்கள் அஞ்சவில்லை? முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையில் அவர்கள் வைத்திருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை மற்றும் மேற்கத்திய முதலாளித்துவவாதிகளின் இயல்பான அலுச்சாட்டியம் ஆகியவை உண்மையை உணர்வதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டன, அத்துடன் அதிகமாக பணம் ஈட்டவேண்டும் என்ற பேராசையும் இதற்கு முக்கிய காரணமாகும், முறையான அடித்தளத்தை அமைக்காமல் கட்டிடம் கட்டுவதைப்போல ஒன்றின் மீது ஒன்றாக செங்கற்களை அடுக்கிக்கொண்டே போனார்கள் இறுதியில் அந்த கட்டிடம் நிலைகுலைந்து அவர்கள் மீதே சரிந்து வீழ்ந்துவிட்டது õ அல்லாஹ்(சுபு) இத்தகைய பேராசை பிடித்த மனிதர்களைப்பற்றி பின்வருமாறு கூறுகிறான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّவட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் எழுவதைப் போல் (மறுமையில்) எழுவார்கள், (2 : 275 )
ஷைத்தான் தீண்டியதின் காரணத்தால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் வட்டியை உண்பவர்கள் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்(சுபு) கூறுகிறான், இதுபோன்ற நிலையில்தான் மேற்கத்திய முதலாளித்துவ வாதிகள் இருக்கிறார்கள். தாங்கள் செய்வது இன்னவென்று அறியாத பைத்தியக்காரர்களைப்போல் அவர்கள் செயல்படுகிறார்கள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு தீர்வு ஒன்றை அவர்கள் தேடிக் கொண்டிருந்தாலும் மென்மேலும் சங்கடத்தில் சிக்கிக்கொண்ட வண்ணம் விழிபிதுங்கி நிற்கிறார்கள்,
பெரும்நெருப்பு ஒன்று கொழுந்துவிட்டு எரியும்போது அதற்கு காரணமாக இருக்கும் எரிவாயுவை மூடுவதற்கு முயற்சிக்காமல் தண்ணீரை அள்ளித்தெளித்துக் கொண்டிருப்பவர்களைப் போல் மேற்குலகினர் செயல் படுகிறார்கள், அமெரிக்க மக்களில் சுமார் 20 சதவீதத்தினர் தங்கள் சொத்துக்களின் மதிப்பைவிட அதிகமான கடனைப் பெற்றவர்களாக இருந்துவருகிறார்கள், அமெரிக்க குடிமக்கள் மீது 6 டிரில்லியன் டாலர் கடன்சுமை இருந்து கொண்டிருக்கிறது ஆனால் 1,3 டிரில்லியன் டாலர் மட்டுமே அமெரிக்க பொருளாதாரத்தின் சுழற்சியில் இருக்கிறது,
ஒருநிறுவனம் நிதிச்சந்தையில் பங்குகொள்ளும்போது அதாவது ஒருநிறுவனம் பொதுத்துறை நிறுவனம் (PLC- public limited company) என்று அழைக்கப்படும்போது அது பங்குப்பத்திரங்களை விற்பனை செய்வதில் ஈடுபடுகிறது, மிகப்பெரிய அளவில் தங்கள் வருமானத்தையும் சொத்துக்களையும் பெருக்கிக் கொள்வதற்குத்தான் பங்குப்பத்திரங்களை அந்த நிறுவனம் வினியோகம் செய்கிறது, உதாரணமாக ஒருநிறுவனம் 10 மில்லியன் டாலர் சொத்துக்களை மட்டும் கொண்டதாக இருக்கும் நிலையில் பங்குச்சந்தையில் ஈடுபட்டு பங்குகளை விற்பனை செய்தால் ஓரிரவுக்குள் அதன் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலராக ஆகிவிடுகிறது ஆனால் அந்த நிறுவனத்தின் உட்கட்டமைப்பின் எதார்த்தநிலையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடுவதில்லை,
பங்குச்சந்தைகளில் ஏற்றஇறக்கம் காணப்படுவதால் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு மக்கள் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுகிறார்கள், ஆகவே பங்குவிலையில் ஏற்றம் வரும் என்று எண்ணும்போது பங்குகளை வாங்குவதிலும் பங்குவிலையில் இறக்கம் வரும் என்று எண்ணும்போது பங்குகளை விற்பதிலும் முனைப்பு காட்டுகிறார்கள், தங்களிடம் இயல்பாக உள்ள பேராசையின் காரணமாகவும் நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் இத்தகைய நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுகிறார்கள், ஆகவே கேளிக்கை அரங்குகளில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர்களின் செயல்களுக்கு ஒப்பாக இது இருக்கிறது, பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விலைச்சரிவை சந்தித்தபோது அந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை காணாமல் போய்விட்டது எனவே அதன் பங்குகளை விற்பனை செய்துவிடுவதற்கு மக்கள் அலைமோதினார்கள், எவ்வளவுக்கு பங்குகளை விற்பனை செய்வதில் துரிதம் காட்டினார்களோ அவ்வளவுக்கு பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. இறுதியில் மிப்பெரிய நிறுவனங்கள் என்று கருதப்பட்ட அந்த வங்கிகள் நிலமணிநேரத்தில் வீழ்ந்து நொருங்கிப் போய்விட்டன, சிலநிறுவனங்களின் பங்குகள் 92% விலை வீழ்ச்சியை சந்தித்தன அதாவது 100 டாலருக்கு வாங்கிய பங்குகளை மக்கள் 8 டாலருக்குத்தான் விற்றார்கள் õ
இதற்கு முன்பு முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை ஆய்வுசெய்வதன் மூலம் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று மேற்கத்திய முதலாளித்துவவதிகள் கருதுகிறார்கள், முதலாளித்துவக்கொள்கை பிற்போக்கானது என்பதையும் தவறானது என்பதையும் ஒவ்வொரு முறையும் காலம் நிரூபித்துக் காட்டிவிட்டது, கம்யூனிஸம் அழிவை சந்தித்த அதேவிதத்தில் முதலாளித்துவமும் அழிவை சந்திக்க இருக்கிறது என்பதை மேற்கத்தியர்கள் அறிந்தும் தங்கள் அலுச்சாட்டியத்தில் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறார்கள், தாங்கள்தான் மிக்கபலம் கொண்டமக்கள் என்று ஆது சமுதாயத்தவர்கள் அலுசாட்டியத்திலும் அகம்பாவத்திலும் இருந்தது போல இவர்களும் தாங்கள்தான் பலமான மக்கள் என்று இறுமாப்பில் இருக்கிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்.
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآَيَاتِنَا يَجْحَدُونَமேலும் ஆது கூட்டத்தார் பூமியில் ஞாயமின்றி பெருமையடித்துக்கொண்டு எங்களைவிட வலிமையில் மிகுந்தவர்கள் யார்? என்று கூறினார்கள், அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டிருக்க வேண்டாமா? மேலும் நமது அத்தாட்சிகளை மறுத்தவர்களாகவே அவர்கள் இருந்தார்கள், (41 : 15 )
தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் முதலாளித்துவவாதிகள் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனினும் அவர்கள் தங்கள் கொள்கையில் இன்னும் பிடிவாதமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதை பலமானது என்று கருதுவதோடு அதை புனிதப்படுத்தவும் செய்கிறார்கள் மேலும் அதை உலகமுழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறார்கள், அமெரிக்க பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக கணிசமான தொகையை அமெரிக்க காங்கிரஸ் அனுமதித்துள்ளது, இந்த விவகாரத்திற்காக 700 பில்லியன் டாலரை அமெரிக்க அரசு ஒதுக்கியிருக்கிறது, சிலதுளி நீரைத் தெளிப்பதின் மூலம் பெரும்தீயை அனைத்துவிடலாம் என்று முதாளித்துவவாதிகள் எண்ணுகிறார்கள், முதலாளித்துவ பொருளாதாரம் உலகெங்கிலும் ஏற்படுத்தியிருக்கும் இழப்பை ஒப்பிடும்போது 700 பில்லியன் டாலர் என்பது ஒன்றுமே கிடையாது,
பங்குச்சந்தை விவகாரத்தோடு விஷயம் முடிந்துவிடவில்லை
உங்கள் கைவசம் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பு என்னவென்று எப்போதேனும் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? அதன் மதிப்பு காகிதமாகவும் அதில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கிறதேயன்றி வேறில்லை, அதன் உண்மையான மதிப்பு உங்கள் பொருளாதாரத்தில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு சமமான உத்திரவாதம் கொடுப்பதற்கு அரசிடம் தங்கம் கையிருப்பில் இல்லை, 1970 ஆம் ஆண்டோடு அனைத்து நாடுகளும் தங்கத்தை இருப்பில் வைத்துக்கொண்டு நாணயம் அச்சிடும் வழக்கத்தை கைவிட்டுவிட்டன,
ஆகவே இப்போதுள்ள அரசுகள் தங்கள் கடன்களுக்காக காகிதநாணயத்தை அச்சிட்டு வெளியிடுகின்றன ஆனால் அதற்கு ஈடான தங்கத்தை கையிருப்பில் வைத்துக்கொள்வதில்லை, இதே முறையைத்தான் அமெரிக்காவும் மற்றுமுள்ள இதர உலகநாடுகளும் கடைபிடிக்கின்றன, இன்றைக்குள்ள பொருளாதார சூழலில் காகிதநாணயத்தின் புழக்கம் அதிகமாக இருப்பதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன அதேவேளையில் நாணயத்தின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கின்றன,
இதை நாணயத்தின் கொள்முதல் திறனில் ஏற்படும் சரிவு என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள், எவ்வாறு இருப்பினும் மக்களின் கைவசத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டேயிருக்கிறது, தங்களின் வங்கி சேமிப்பில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்கிறது என்று மக்கள் திருப்தி அடைந்து கொள்கிறார்கள், ஆகவே உங்களிடமுள்ள 100 ரூபாயின் மதிப்பு அடுத்தவருடம் 88 ரூபாயாக குறைந்துவிடும் ஆனால் வட்டியாக வங்கிகள் கொடுக்கும் 14 ரூபாயை சேர்த்து உங்களிடம் 114 ரூபாய் இருப்பதாக நம்பிக்கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்,
இதைத்தான் பணவீக்கம் என்று கூறுகிறோம், அரசு உத்திரவாதம் அளித்துள்ள மதிப்பிலிருந்து நாணயத்தின் உணமையான மதிப்பு வீழ்ச்சியடையும் போது பணவீக்கம் ஏற்படுகிறது, ஆனால் பணவீக்கத்தை ஈடுசெய்ய சேமிப்புகளுக்கு வங்கிகள் வட்டி கொடுக்கின்றன, பணவீக்கம் ஏற்படும்போது உண்மையான முறையில் பணம் ஈட்டும் ஏழைமக்கள் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது, இதனால் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகும்நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது,
பணம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப்போட்டிப் பந்தயத்தில் முதலாளித்துவவாதிகள் எந்தவிதமான ஒழுக்கமுறைகளையும் பின்பற்றாத காரணத்தால் பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர், உள்ளபடியே முதலாளித்துவவாதிகள் ஷைத்தான்களின் தோழர்களாக ஆகிவிட்டார்கள் மேலும் அவர்கள் ஷைத்தானின் கூட்டத்தில் உள்ளவர்காகவும் இருக்கிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்.
اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنْسَاهُمْ ذِكْرَ اللَّهِ أُولَئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَஷைத்தான் அவர்களை மிகைத்து அல்லாஹவை நினைவுகூர்வதை விட்டும் தடுத்துவிட்டான் அவர்கள்தான் ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்துகொள்ளுங்கள்õ நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர்தான் நஷ்டவாளிகள், (58 : 19 )
ஆனால் ஆது சமுதாயத்தவர்கள் வரம்புமீறி இறுமாப்பிலும் பெருமையிலும் நிலைத்திருந்ததால் அழிவை சந்தித்ததுபோல் தாங்களும் ஒருநாள் அழிவை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை மறந்தவர்களாக முதலாளித்துவவாதிகள் அச்சமற்று இருக்கிறார்கள், ஆது சமுதாயத்தவர்கள் போலவும் ஸமூது சமுதாயத்தவர்கள் போலவும் பெருமிதத்தில் இருக்கிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்.
وَتِلْكَ عَادٌ جَحَدُوا بِآَيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍதங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை நிராகரித்து அவனுடைய தூதருக்கு மாறுசெய்த ஆது கூட்டத்தினர் இவர்கள்தான் õ வரம்புமீறிய வம்புக்காரர்கள் ஒவ்வொருவரின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றினார்கள், (11 : 59 )
முதலாளித்துவவாதிகளைப் போலவே ஆது கூட்டத்தினர் அலுச்சாட்டியம் செய்தார்கள் மேலும் அவர்கள் தாங்கள்தான் பூமியில் பலமான மக்கள் என்று எண்ணிக்கொண்டு கர்வம் கொண்டவர்களாக அச்சமற்று இருந்தார்கள்,
இன்றைக்கு மேற்கத்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு யூகத்தின் அடித்தளத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கும் அவர்களின் பொருளாதாரமே பிரதான காரணமாக இருக்கிறது, தங்களுடைய அறிவையும் திறமையையும் பயன்படுத்தி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள், பாளைவனத்தில் தோன்றும் கானல்நீரைப் போன்றது அவர்களின் இந்த நம்பிக்கை, தொலை தூரத்திலிருந்து பார்க்கும்போது அது தண்ணீரைப் போன்று காட்சியளிக்கும் ஆனால் அருகில் சென்று பார்க்,கும்போது வெறுமையைத் தவிர வேறொன்றையும் காணமுடியாது, முதலாளித்துவவாதிகளின் நிலை இதற்கு ஒப்பாகவே இருக்கிறது, இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்த பின்னரும் அவர்களின் கொள்கை குறையுள்ளது என்பதையோ அது பிற்போக்கானது என்பதையோ அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை, இத்தகைய கூட்டத்தினரைப்பற்றி அல்லாஹ்(சுபு) பின் வருமாறு கூறுகிறான்.
وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآَنُ مَاءً حَتَّى إِذَا جَاءَهُ لَمْ يَجِدْهُ شَيْئًا وَوَجَدَ اللَّهَ عِنْدَهُ فَوَفَّاهُ حِسَابَهُ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِமேலும் எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடைய செயல்கள் பாளைவனத்தின் கானல் நீரைப்போன்றதாகும், தாகித்தவன் அதை தண்ணீர் என்று எண்ணுகிறான் அதனிடம் அவன் வரும்போது ஒன்றையும் அவன் காணமாட்டான், ஆனால் அல்லாஹ் (விதித்த முடி) வை அங்கு அவன் காணுகின்றான், அவன் கணக்கை அவன் அங்கு முடித்துவைக்கிறான், கணக்குத் தீர்ப்பதில் அல்லாஹ் துரிதமானவன், ( 24 : 39 )

உலகின் பொருளாதார நெருக்கடியும் இஸ்லாமிய பொருளாதாரமும் - இறுதிப்பகுதி

இஸ்லாமிய பொருளாதாரம்தான் உண்மையானது இப்போது உலகில் காணப்படும் நிதிச்சந்தைகள் அனைத்தும் தவறானவை :
இஸ்லாமிய பொருளாதாரம் வளங்களைப் பெறுக்குவதை அடிப்படையாகக் கொண்டது, அதில் முதலீடு செய்வதிலும் நிர்வாகம்செய்வதிலும் வியாபாரகூட்டு(Partnership) வைத்துக்கொள்ள அனுமதியுண்டு, மேலும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் உண்மையான பொருளாதாரமே தவிர வட்டியை அடிப்படையாக கொண்டதல்ல, முதலீட்டாளர்களின் நிதியை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படும் இரட்டைபொருளாதாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை, வேலைவாய்ப்பு. லாபம். மேலாண்மை. வளங்களைப் பயன்படுத்துதல். உற்பத்தி. சொத்துக்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் ஒருசிலர் மடடும் ஈடுபட்டிருந்தாலும் பொருளாதார நடவடிக்கைகளில் பங்குகொள்ளும் அனைவரையும் அவர் முதலீடுசெய்பவராக இருந்தாலும் அல்லது நிர்வாகம்செய்பவராக இருந்தாலும் அவர்கள் அனைவர்மீதும் இஸ்லாம் கவனம்செலுத்துகிறது, இன்றைய முதலாளித்தவ பொருளாதாரத்தில் உருவாக்கப்படும் பெரும்சொத்துக்கள் அனைத்தும் ஒருகுறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் குவிந்துகிடக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் உண்மையான பொருளாதாரத்தில் அதில் பங்குகொண்டிருக்கும் அனைத்து பிரிவினரிடமும் சொத்துக்கள் சுற்றிவந்துகொண்டிருக்கும்,
இன்றைக்கு பொருளாதாரத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிதிச்சந்தையின் அனைத்து அமைப்புகளையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை, இத்தகைய அமைப்புகளில் உள்ள நிறுவனங்களின் பங்குப்பத்திரங்களை வைத்திருப்பவர் நிறுவனநடவடிக்கையில் பங்குகொள்ளாமல் அதில் நடக்கும் விவகாரங்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல் தாங்கள் முதலீடுசெய்துள்ள பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளாமல் பங்குகளை வாங்குவதிலும் அவற்றை மாற்றிக்கொள்வதிலும் ஈடுபடுகிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் முதலீடுசெய்பவரின் உரிமை என்பது நிறுவனநடவடிக்கையில் பங்குகொண்டாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு லாபநஷ்டத்தில் பங்கு இருக்கிறது, முதலீடுசெய்பவர் விரும்பினால் நிறுவனநடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொள்ளலாம். ஆனால் முதலாளித்துவ நிறுவனங்களில் பங்குப்பத்திரம் மூலம் முதலீடுசெய்பவர்கள் நிறுவன நடவடிக்கைகளில் எந்தவிதமான தலையீடும் செய்யமுடியாது, நிறுவனநடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொள்ளாத நிலையினால் பெரும்பாலும் யூகவணிகமே (Speculation) நடைபெறுகின்றன, பொருட்களை நேரடியாக வாங்கி நேரடியாக விற்கும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து இன்றைய நிதிச்சந்தை முற்றிலும் மாறுபட்டது, முதலாளித்தவ பொருளாதாரக்கொள்கையின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் உலக நிதிச்சந்தையின் மொத்தமதிப்பு 51 டிரில்லியன் டாலராகும், ஆனால் டிரைவேட்டிவ் சந்தையின்(Derivative markets) மொத்தமதிப்பு 480 டிரில்லியன் டாலராகும், இந்ததொகை அமெரிக்காவின் பொருளாதாரத்தைவிட முப்பதுமடங்கு அதிகமாகும். உலகபொருளாதாரத்தைவிட பன்னிரண்டுமடங்கு அதிகமாகும்!
PLC எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் (public limited companies) பங்குச்சந்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஹராம் என்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன, அவற்றில் பிரதான காரணம் முதலீடுசெய்பவர்கள் நிறுவனநடவடிக்கைகளிலும் லாபநஷ்டத்திலும் எந்தவித பொறுப்பும் ஏற்காதது. அதாவது ஒருவேளை நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது என்றால் பங்குப்பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்துள்ளவர்களிடமிருந்து எந்தவிதமான நஷ்டயீடோ அல்லது ஈட்டுத்தொகையோ கோரமுடியாது, அந்தமுதலீட்டாளர் எவ்வளவு சொத்துக்களைப் பெற்றவராக இருந்தாலும் சரியே! இது ஒவ்வொரு அம்சத்திலும் ஷரியாவிற்கு முரண்பாடானதாகும், ஆனால் கடன் கொடுத்தவரைப் பொறுத்தவரை அவருக்கு முழுத்தொகையையும் பட்டுவாடா செய்யவேண்டும் என்பதையும் அதில் எந்தவிதமான தள்ளுபடியும் செய்யமுடியாது என்பதையும் ஷரியா கட்டாயம் ஆக்கியிருக்கிறது,
அபூஹ{ரைரா(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.
மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்தொகையை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குகிறவர்களுடைய கடனை அல்லாஹ்வே திருப்பிக்கொடுப்பான், ஆனால் மற்றவர்களிடமிருந்து கடன் பெறும்போது விரயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களை அல்லாஹ் விரயம்செய்வான்,
அபூஹ{ரைரா(ரளி) அறிவித்ததாக அஹமதில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.
உரிமை பெற்றுள்ளவர்களின் உரிமைகளை நீங்கள் மறுமைநாளில் திருப்பித்தந்துவிடுவீர்கள், கொம்பு இல்லாத பெண்ஆடு கொம்புள்ள பெண்ஆட்டை முட்டித்தள்ளிவிடும்,
ஆகவே வாழ்வியல் விவகாரங்களில் ஒருவருக்குரிய உரிமைகளை முழுமையாக கொடுக்கவேண்டியது கட்டாயக்கடமை என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) உறுதியாக கூறியுள்ளார்கள், மேலும் அவ்வாறு செய்யாதவர் அதை மறுமையில் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள், மக்களுக்கு உரிமையானவற்றை எடுத்துஉண்ணும் மனிதர்களுக்கு இது மிகப்பெரிய எச்சரிக்கையாகும்,
இஸ்லாத்தைப் பொறுத்தவரை தனித்தன்மை உடைய நிறுவனசட்ட விதிமுறைகளை கொண்டிருக்கிறது, அவற்றில் நிறுவனத்திற்கும் அதன் முதலீட்டாளர்களுக்கும் இடையிலுள்ள உண்மையான வியாபாரக்கூட்டில் (partnership) ஐந்துவகையான அமைப்புகள் இருக்கின்றன, அவையாவன. 1,அல்இனான்(Al Inaan) 2,அல்அப்தான்(Al abdan) 3, அல்முதாரபா(al mudharabah) 4,அல்உஜஜ__(al wujooh) 5,அல்மு*பவாதா(al mufawadha) ஆகியவையாகும்,
1) அல்இனான்(al inan) என்ற நிறுவனஅமைப்பில் (al inan) இருநபர்கள் ஒன்றுசேர்ந்து முதலீடுசெய்து நிர்வாகம் செய்வார்கள் இருவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,
2) அல்அப்தான்(al abdan) என்ற நிறுவனஅமைப்பில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் முதலீடுசெய்யாமல் உடல்ரீதியாகவோ அல்லது அறிவுரீதியாகவோ உழைப்புசெய்வதன் மூலம் வியாபாரகூட்டில் பங்குகொள்வார்கள், அதேபோல லாபநஷ்டத்திலும் பங்குகொள்வார்கள்,
3) அல்முதாரபா(al mudharabah) என்ற நிறுவனஅமைப்பில் ஒருநபர் முதலீடுசெய்வார் மற்றொருநபர் உழைப்புசெய்வார். முதலீடுசெய்பவர் எந்தவித உழைப்பும் செய்யமாட்டார். இருவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,
4) அல்உஜஜ(al wujooh) என்ற நிறுவனஅமைப்பில் ஒருவர் முதலீடுசெய்வார் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களோ உழைப்புசெய்வார்கள், அனைவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,
5) அல்மு*பவாதா(al mufawadha) என்ற நிறுவனஅமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் பலநபர்கள் முதலீடுசெய்யாமல் வியாபாரகூட்டில் பங்குகொள்வார்கள், அவர்கள் தொழில்நுட்ப அறிவுவுடையவர்களாகவோ அல்லது தொழில்த்திறன் கொண்டவர்களாகவோ இருப்பார்கள், அனைவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,
அபூஹ{ரைரா(ரளி) அறிவித்ததாக அத்தரகந்தி பதிவுசெய்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.
எல்லாம்வல்ல அல்லாஹ் கூறுகிறான் . தனது கூட்டாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதவரை இருகூட்டாளிகளுக்கு மத்தியில் மூன்றாவதாக நான் இருக்கிறேன், அவர்களில் ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தால் நான் அவர்களைவிட்டு விலகிவிடுவேன்,
ஏகபோகவர்த்தக உரிமையை இஸ்லாம் எதிர்க்கிறது வியாபாரத்தில் போட்டி இருப்பதை வரவேற்கிறது :
PLC பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு இன்று பெரியஅளவில் சொத்துக்கள் குவிந்துகிடக்கின்றன. அவற்றில் சிலநிறுவனங்கள் வைத்திருக்கும் சொத்து சிலநாடுகளின் மொத்த சொத்துக்களைவிட பெரியது, இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் இவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பொதுமக்களிடம் பங்குப்பத்திரங்களை(share certificates) விற்பதின்மூலமாக கணிசமான சொத்துக்களை குவிக்கும் PLC நிறுவனங்கள் இருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது, மைக்ரோஸô*ப்ட் (microsoft) கோகோகோலா (coca cola) பெப்ஸி (pepsi) போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஏகபோக வர்த்தகஉரிமை (monopolies) பெற்ற நிறுவனங்களாகவும். இருபோக வர்த்தகஉரிமை (duopolies) பெற்ற நிறுவனங்களாகவும். பெரும்போக வர்த்தகஉரிமை (oligopolies)பெற்ற நிறுவனங்களாகவும் இருந்து கொண்டு உலகசந்தையில் (world markets) ஆதிக்கம் செலுத்திவருகின்றன, இத்தகைய பொருளாதார ஆதிக்கங்கள் அனுமதிக்கப்படாவிட்டால் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படும், ஏகபோக வர்த்தகஉரிமை என்பது எதிர்மறையான விளைவுகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடியது என்று முதலாளித்துவவாதிகளே ஒப்புக்கொள்கிறார்கள், தாராளவர்த்தக கொள்கையின் தீய விளைவின் காரணமாக முதலாளித்துவ கோட்பாட்டை உருவாக்கிய ஆதம்ஸ்மித்(Adamsmith) கண்ட கனவான முழுமையான போட்டி நிறைந்த உலகசந்தையை முதலாளித்துவவதிகளால் உருவாக்கவே இயலவில்லை, எனினும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான விளைவை உருவாக்கமுடியும், ஒவ்வொரு சந்தைகளிலும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடுமையான போட்டி இடம்பெறுவதால் வர்த்தகசந்தையில் ஆரோக்கியமான சூழல் உருவாகும். ஏனெனில் கடுமையான போட்டியினால் விலைவாசிகள் குறைவதோடு பொருட்களின் தரமும் அதிகரிக்கும்,
உதாரணமாக. இன்று குளிர்பானங்கள் தயாரிப்பில் உலகசந்தையில் மூன்றேமூன்று நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன, உலகசந்தையில் இவை முழுமையான ஆதிக்கத்தைப் பெற்றிருப்பதால் அவைகளுடன் போட்டியிட வாய்ப்புள்ள எந்த நிறுவனங்களையும் விலைக்குவாங்கும் அளவு அவற்றிடம் சொத்துக்கள் இருக்கின்றன, இந்திய நிறுவனமான தம்ஸ்அப்(Thumbs Up) நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனமான கோக்(Coke) விலைக்கு வாங்கிவிட்டது அனைவரும் அறிந்ததே, சந்தையில் போட்டியில்லாத காரணத்தால் ஏகபோகவர்த்தக நிறுவனங்களால் தரம்குறைந்த பொருட்களைக்கூட எளிதாக விற்பனை செய்யமுடிகிறது, குளிர்பானங்களில் பூச்சிக்கொள்ளி மருந்துகளும் மற்ற விஷத்தன்மையுள்ள வேதியல் பொருட்களும் கலக்கப்பட்டிருப்பது ஆய்வறிக்ககை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அது விவாதிக்கப்பட்டும் மக்கள் உடல்நலத்தோடு தொடர்புடைய இந்தவிஷயம் அப்படியே அமுக்கப்பட்டு மறைக்கப்பட்ட செய்தியை நாம்அனைவரும் அறிவோம்,
இருப்பில் இல்லாத பொருட்களை விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது:
இன்றுள்ள வியாபார நடவடிக்கைகளில் தங்களிடம் இருப்பிலில்லாத பொருட்களை forward selling அல்லது short selling என்றமுறையில் விற்பனைசெய்வதை காண்கிறோம், வியாபாரம் செய்வதற்கு பொருட்கள். நாணயங்கள். வியாபாரத் தளவாடங்கள் ஆகியவை இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது,
ஹக்கீம் இப்னு ஹாஸம் (ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதரே(ஸல்) என்னிடம் இல்லாத பொருட்களை விற்பனைசெய்யுமாறு ஒருமனிதர் என்னிடம் கூறுகிறார் என்று நான் கூறினேன். உம்மிடம் இல்லாதபொருட்களை நீர் விற்பனைசெய்வது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள், (நூல்: அஹமது)
தாராளவர்த்தக சந்தை மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஆகியவற்றை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை :
இஸ்லாமிய பொருளாதாரம் என்பது உலகவர்த்தக சந்தையில் அழிவை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரமும் அல்ல. அனைத்து வர்த்தக அமைப்புகளையும் அரசுடமையாக்கி அரசின் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கம்யூனிஸ பொருளாதாரமும் அல்ல, அரசுசொத்து. பொதுசொத்து. தனியார்சொத்து ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றிற்குரிய தனித்தன்மையான விதிமுறைகளை இஸ்லாம் வரைந்திருக்கிறது, எண்ணெய்வளங்கள். கனிமவளங்கள். நிலவாயு போன்ற பெரும் இயற்கைவளங்களை மேற்கத்திய முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன, இயற்கைவளங்கள் என்பது பொதுமக்களின் சொத்தாகும் அவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏகபோகமாக உரிமையாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, இன்று முஸ்லிம் உலகத்திலுள்ள இயற்கைவளங்களை கொள்ளையிடுவதற்காக மேற்கத்தியநாடுகள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன,
அபூதாவூதில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பசுமைவளங்கள்(காடுகள்) நீர்வளங்கள்(கடல்.ஆறு போன்றவை) நெருப்பு(எரிவாயு போன்ற ஆற்றல்வளங்கள்) ஆகியமூன்றின் பலன்களை மக்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள்,
இப்னுஅப்பாஸி(ரளி)யிடமிருந்து அனஸ்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பசுமைவளங்கள். நீர்வளங்கள். ஆற்றல்வளங்கள் ஆகியமூன்றையும் மக்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது,
மேலும் உப்பளங்கள் போன்ற இயற்கைவளங்கள் நிறைந்த நிலங்களை அளவுக்கு அதிகமாக வைத்திருந்தவர்களிடமிருந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நிலங்களை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்,
இன்று வளைகுடா நாடுகளில் ஆட்சியாளர்களாக இருக்கும் மனிதர்கள் எண்ணெய்வளம் எரிவாயுவளம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பெரும்பணத்தை தங்கள் சொந்தநலன்களுக்கு வரம்புமீறி பயன்படுத்துவதோடு கோடிக்கணக்கான பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டுவைத்திருக்கிறார்கள், ஆனால் இஸ்லாமியஅரசு இருக்கும்பட்சத்தில் இயற்கைவளங்களிலிருந்து கிடைக்கும் அபரிதமான வருமானத்தை பொதுமக்களின் நலப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும். ஏனெனில் இஸ்லாத்தின் விதிமுறைகள் அவ்வாறுதான் கூறுகின்றன,
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
இமாம்(இஸ்லாமியஅரசின் கலீ*பா) மேய்ப்பர் ஆவார் அவரே உங்களுக்குப் பொறுப்பு ஆவார், (நூல்: புஹாரி. அஹமது. பைஹாகி)
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை நாணயத்திற்கு ஏற்புநிறை (standard) யாக கொள்ளுதல்:

இன்றைய அரசுகளால் வெளியிடப்படும் நாணயங்கள் அரசின் ஆணைகளை அடிப்படையாகக் கொண்டு அச்சடிக்கப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கு உத்திரவாதம் கொடுப்பதற்குரிய சொத்துக்கள் அரசிடம் கிடையாது, அரசின்மீதுள்ள நம்பிக்கையைத் தவிர தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு அடிப்படையில் நாணயம் அச்சடிக்கப்படுவதில்லை, ஒருஅரசு நேர்மையானஅரசாக இருக்கும் பட்சத்தில் தன்னிடமுள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு எவ்வளவோ அந்த மதிப்புக்கு ஏற்பத்தான் நாணயத்தை அச்சடிக்கும், பணவீக்கம் உலகில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் மேற்கூறிய விதிமுறையை எந்தஅரசுகளும் கடைபிடிப்பதில்லை, நாணயம் அச்சிடும்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கையிருப்பு அளவை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும் தேவைப்படும்போது மக்கள் நாணயத்தை அரசுகருவூலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றோடு செலாவணி(ங்ஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங்) செய்துகொள்ள அனுமதியுண்டு என்றும் வலியுறுத்தும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படத்துவதன் மூலம் இன்றைக்கு விலைவாசிகள் கட்டுப்பாடற்று உயர்ந்து கொண்டிருப்பதற்கு காரணமான பணவீக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்திவிடலாம்,
உண்மையான மதிப்பை பெற்றுள்ள திர்ஹம் மற்றும் தினார் ஆகியவற்றை இஸ்லாமியஅரசின் நாணயத்திற்கு அடிப்படையாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) ஆக்கினார்கள், அவைகளுக்கு நிலையான மதிப்பு இருந்துவந்தது, ஸகாத் கொடுப்பதற்குரிய அளவை (nisab of zakat) நிர்ணயித்திருப்பது போல குர்ஆன் சுன்னா ஆகியவற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை ஏற்புநிறையாக (standard) இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது,
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு அடிப்படையில் காகிதநாணயம் அச்சடிப்பதற்கு அனுமதியுண்டு, ஆகவே இஸ்லாமியஅரசு இருக்கும்பட்சத்தில் ஒருவர் காகிதநாணயத்தை அரசு கருவூலகத்தில் தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ எளிதாக மாற்றிக்கொள்ளலாம், ஆகவே தங்கம் மற்றும் வெள்ளிஆகியவற்றின் மதிப்பு நிலையாக இருப்பதால் பணவீக்கம் அறவே நீக்கப்பட்டுவிடுகிறது, இன்றைய அரசுகள் செய்வதைப்போல கட்டுப்பாடு இல்லாமல் காகிதநாணயங்களை அச்சடிப்பதும் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் கையிருப்பை நாணயஅச்சடிபுக்கு அளவுகோலாக ஆக்கிக்கொள்ளாததும் இஸ்லாமியஅரசின் ஆட்சியில் ஒருபோதும் நடைபெறாது, பணவீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நிதிநெருக்கடி. விலைவாசிஏற்றம் ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டிருப்பதால் தங்கள் முதலீட்டை பொருட்களில் முதலீடுசெய்வதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடுசெய்கிறார்கள் ஏனெனில் அதற்கு நிலையான மதிப்புஇருக்கிறது,
முடிவுரை:
இப்போதுள்ள இஸ்லாமிய வங்கியமைப்பு இஸ்லாமிய நிதியியல் ஆகியவற்றிற்கு மேலாக இஸ்லாமிய பொருளாதாரம் என்பது முழுமையான இஸ்லாமிய செயலாக்கஅமைப்பாகும் (Islamic system) அவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறோம். மேலும் பொருளாதாரம் தொடர்பான முக்கியமான விஷயங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறோம், இஸ்லாமிய பொருளாதாரஅமைப்பை (Islamic economic system)முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஷரியாசட்டங்களின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமியஅரசு இருக்கவேண்டும், ஆனால் இன்று முஸ்லிம் உலகத்திலள்ள அரசுகள் மேற்குலகின் கைப்பாவை அரசுகளாக தன்னிச்சையாக இயங்குகின்றன, நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவும் பிரிட்டனும் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிகோடியாக வாரியிறைக்க தணிந்துவிட்டன, அவர்கள் எவ்வளவு டாலர்களை கொட்டிஅணை போட்டாலும் இந்தநெருகடியிலிருந்து மீளவேமுடியாது. ஏனெனில் முறையற்ற அடித்தளத்தில் அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள், இந்தநேரத்தில் இஸ்லாம் மட்டுமே உண்மையான நடைமுறைக்கு ஏற்றதான ஒரு மாற்றுவழியாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு உணர்த்தவேண்டும், பொருளாதாரஅமைப்பை மட்டுமல்லாமல் இஸ்லாத்தை முழுமையான அமைப்பில் அதன் ஆட்சிமுறை அதன் குற்றவியல்சட்டம் போன்ற அனைத்து செயலாக்கஅமைப்புகளையும் அதன் சரியான சட்டவிதிமுறைகளையும் (system of Islam) மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்,
அறிவியல். தொழில்நுட்பம் மற்றுமுள்ள அனைத்துதுறைகளிலும் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் உண்மையான முன்னேற்றத்தை இந்தஉலகம் கண்டது என்பதை முஸ்லிமல்லாத சிந்தனையாளர்கள் கூட உணர்ந்திருக்கிறார்கள், short history of Arabs என்றநூலில் பிலிப்ஹிட்டி என்பவர் கூறியிருப்பதாவது:
வரலாற்றின் மத்தியகாலகட்டத்தின் முதல்பாகத்தில் மனிதசமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரபுமக்கள் பங்களிப்பு செய்ததைப்போல வேறொருவரும் செய்யவில்லை, அரபியதீபகற்பத்தில் வாழும் மக்களைமட்டுமல்லாமல் அரபுமொழியை தாய்மொழியாகக் கொண்ட அனைத்துமக்களையும் இதில் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும், தூரகிழக்கு (far east) நாடுகளைத்தவிர்த்து மற்ற அனைத்து நாகரீகஉலகத்திலும் பலநூற்றாண்டுகளுக்கு கல்வி. கலாச்சாரம். மற்றும் அறிவுரீயான முன்னேற்றம் ஆகியவற்றில் அரபுமொழியே அடித்தளமாக விளங்கியிருக்கிறது, ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை மற்றறெந்த மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களைவிட அதிகமான நூல்கள் தத்துவம். மருத்துவம். வரலாறு. மதம். வானவியல். புவியியல். அரசியல் ஆகியதுறைகளில் எழுதப்பட்டிருக்கின்றன,
இஸ்லாமிய செயலாக்கஅமைப்பு(system of Islam) முழுமனித சமுதாயத்திற்கும் உரியதாக அருளப்பட்டிருக்கிறது, அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
(முஹம்மதே!) நாம் உம்மை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக அனுப்பியிருக்கிறோம், (21:107)
இந்த செயலாக்கஅமைப்பு(system of Islam) மனிதஅறிவிலிருந்து தோன்றியதில்லை மாறாக மனித இனத்தைப் படைத்த அல்லாஹ்(சுபு) விடமிருந்து வந்திருக்கிறது, அதுமனிதசமுதாயத்திற்கு முழுமையாக பொருந்தக்கூடிய சத்தியமார்க்கமாக இருக்கிறது, நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு மறுபடியும் இந்தஅமைப்பைக் கொண்டுவரவேண்டும்,
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக ஹஸன் அல்பஸரி(ரஹ்) அறிவித்திருப்பதாவது.
இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைப்பதற்கு உதவும் என்று எண்ணி ஒரு இல்மைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியின்போது எவருக்கு மரணம் ஏற்படுகிறதோ அவர் சுவனத்தில் இறைத்தூதர்களின் அந்தஸ்த்தில் இருப்பார், (நூல்: திர்மிதி)
முற்றும்.