Saturday, June 25, 2011

ஹிஜ்ரி 1342, ரஜப் 28ல் என்ன நடந்தது-?

முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) -ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்கவேண்டும் என்ற இழிநிலை உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாசானில் நடைபெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.



 "முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும்.கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம்" 



கிலாஃபத்தை முழுமையாக அழிப்பதற்கு பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்று உலகமே அறிந்திருந்தது.கிலாபஃத்தை அழித்ததோடு மேற்குலக ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர். ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள். முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும், சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.




 நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறுவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. உண்மையில் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாத்தின் எதிரிகளும் தோன்றிவிட்டார்கள். முஸ்லிம்களுடன் நீண்ட காலம் போராடி தோல்வி கண்ட காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே அவர்கள் சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்களை வீழ்த்த முடியும் என்பதாக உணர்ந்தார்கள்.



முஸ்லிம்களின் சிந்தனையை பலவீனப்படுத்த,கிலாஃபத்தின் இறுதி காலகட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தை தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.இதனை அடைவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளை கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றி பெறமுடியும் என்பதால் , குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும் ,துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.



இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் அழிவும் நடந்தேறியது. முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற இங்கிலாந்தின் அடிவருடி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட உடனேயே முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாத்தின் பூமி பல தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர்.மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர் . அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கினர். 




மேற்குலகின் ஏஜண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் பங்கம் ஏற்ப்பட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , பலஸ்தீன், காஷ்மீர் ,செச்சன்யா,கிழக்கு துர்கிஸ்தான் என்று உல்கின் பலபாகங்களிலும் உள்ள முஸ்லீம்கள் வேட்டையாடப்படுகிண்றனர் . முஸ்லிம் உலகு எல்லா நிலைகளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது.முஸ்லிம் உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.முஸ்லிம் நாடுகளில் இன்று நடைபெற்று வரும் எழிச்சிமிகு போராட்டங்கள் கிலாஃபத்திற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது. 



முஸ்லிம்களே! 

உலக அரங்கில்ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்கவேண்டாமா? இந்த ஆட்சி முறைக்கு கீழ் தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சி முறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமுல்படுத்தப்படுவதன் மூலமாகவே , முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும். முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:



"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141) 


"விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்." (ஆல இம்ரான் :28) 



முஸ்லிம்களே! 


இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது. கிலாஃபத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும்.கிலாஃபத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சனையாக இருப்பதோடு கட்டாயக்கடமையாகவும் இருக்கின்றது. 



 “நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), இப்னு மாஜா) 



முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில், சர்வசாதாரணமாக இன்று முஸ்லிம்களின் கண்ணியமும் பாழ்படுத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். குர்ஆனை எரிக்கும் போராட்டத்தை அமெரிக்காவில் கயவன் ஒருவன் நடத்தியிருக்கிறான். முஸ்லிம் உம்மத்தை கேடயமாக நின்று பாதுகாக்ககூடிய பொறுப்பு மிக்க இமாம்(கலீஃபா) இல்லாததே முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும். நபி(ஸல்) கூறினார்கள்


 "இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள்". (அபூஹ§ரைரா (ரலி), முஸ்லிம்) 


 நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின்னர் இந்த உம்மத்தை யார் வழி நடத்தவேண்டும் என்பதை தெளிவாகவே அறிவித்து சென்றுள்ளார்கள். 


“நான் அபூ ஹ§ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய நபி (ஸல்) அவர்களின் கூற்று: பனிஇஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். அதிக எண்ணிக்கையில் கலீஃபாக்கள் தோன்றுவார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என வினவினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: முதலாமவருக்கு பைஆ செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பைஆ செய்யுங்கள். அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து விசாரணை செய்வான்” என்றார்கள். (அபுஹாசிம் (ரலி), முஸ்லிம்) 



முஸ்லிம்களே! 


நம் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் பொறுப்பை நிறைவேற்ற வீறு கொண்டு எழ வேண்டாமா? நாம் உறுதிப்பிரமாணம் கொண்டு ஏற்று வாங்கிய மாபெரும் அமானிதத்தை நாம் மட்டும் சுமந்து கொண்டிருந்தால் போதுமா? அதன் பிரகாசத்தை அழைப்புப்பணி மூலம் உலகம் முழுதுவதும் பரப்ப இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபா அவசியமல்லவா?முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரங்களிருந்து பிரிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டாமா? முஸ்லிம்கள் மாத்திரமன்றி முழு மனித சமுதாயமும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நிம்மதியாக வாழ நாம் வழி ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டாமா? கடந்த நூற்றாண்டிலும் தற்போதும் மனித சமுதாயம் சந்தித்துள்ள மாபெரும் அழிவுகளுக்கு காரணமான மனித அறிவிலிருந்து தோன்றிய முதலாளித்துவம் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை அடியோடு அகற்றி மீண்டும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டாமா? 



முஸ்லிம்களே! 


நம் பாதை சுவனத்தின் பாதையாகும்.அதன் பாதை இன்னைல்கள் நிறைந்தது. அதை அடைந்து கொள்வதற்கு மாபெரும் தியாகங்கள் செய்வது அவசியமாகும். சஹாபாக்கள் மற்றும் நம் முன்னோர்களின் தியாக உணர்வு நமக்கும் வர வேண்டாமா?அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய சட்டங்கள் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்பட, இந்த அழைப்பு பணியில் ஈடுபடுவோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வோமா?


 "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்." (அல் அன்ஃபால்: 24) 


Wednesday, June 8, 2011

பிரித்தானிய விழுமியங்களை ஏற்றுக்கொள்! இல்லாவிட்டால்...

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 04

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்! 



தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய அரசுகள் தூண்டுதல்



ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவைகள் கிலாஃபா அரசை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. எனினும் இந்த முயற்சியில் திட்டமிட்ட யுத்தங்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் தொடர்ச்சியான போர்கள் ஆகியவற்றின் மூலம் கிலாஃபா அரசின் முதுகில் குத்தும் முயற்சியை அவைகள் மேற்கொண்டபோதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு கிலாஃபா அரசின் தற்காப்பு போர்த்திறன் காரணமாக இருக்கவில்லை. மாறாக சர்வதேச அரசியல் சூழலே பிரதான காμணமாக இருந்தது. மேலும் கிலாஃபா அரசை வீழ்த்துவதன் மூலம் கிடைக்கும் கொள்ளைப் பொருளை தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்வதில் மேற்கத்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருந்தது. செர்பியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் பிரிவினையை தூண்டுவதில் ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றன. ஏனெனில் "சுதந்திரம்' மற்றும் "விடுதலை' போன்ற கோஷங்களில் அவைகள் பிரிவினைகளையும் "தேசியவாதம்' என்ற பெயரில் இனவாதத்தையும் தூண்டிவிட்டன.



இவ்வாறாகவே இஸ்லாத்தின் நிழலில் முஸ்லிம்களை ஆட்சி செய்து வந்த கலீஃபாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிலப்பரப்புகளிலும், இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய நாடுகள் விதைத்து வந்தன. குறிப்பாக அரபு மக்கள் மத்தியிலும் துருக்கி மக்கள் மத்தியிலும் அவைகள் தங்கள் வஞ்சக திட்டங்ளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தின. இஸ்தான்பூல் நகரத்திலும் இஸ்லாமிய பிரதேசத்தின் இதர பகுதிகளிலும் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் தூதரகங்கள் இந்த தூண்டுதல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. பாக்தாத், டமாஸ்கஸ்,பெய்ரூட், கெய்ரோ  மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில் மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட இந்த சதித்திட்டங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த பணியை நிறைவேற்றுவதற்கு இரண்டு பிரதான மையங்கள் நிறுவப்பட்டன. கிலாஃபா பிரதேசத்தின் பிரதான பகுதியில் பணியாற்றிட இஸ்தான்பூல் மையமும், மாகாணங்களில் பணியாற்றிட குறிப்பாக அரபு மொழிபேசும் முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களில் பணியாற்றிட பெய்ரூட் மையமும் நிறுவப்பட்டன.



கிலாஃபா அரசுக்கு எதிராக பணியாற்றுவதில் பெய்ரூட் மையத்தின் பங்களிப்பு



இஸ்லாத்தையும் இஸ்லாமிய அரசையும் வீழ்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட குஃப்ர் அமைப்புதான் பெய்ரூட் மையமாகும். இஸ்லாமிய பிரதேசத்தில் ஆழமான விளைவுகளையும் தீர்க்கமான முடிவுகளையும் ஏற்படுத்துவதற்காக நீண்டகால திட்டத்துடன் இந்த மையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதே வேளையில் துரிதமான விளைவுகளையும் அழுத்தமான முடிவுகளையும் ஏற்படுத்துவதற்காக குறுகிய கால திட்டத்துடன் இஸ்தான்பூல் மையம்
உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் குஃப்ர் சிந்தனைகளை விதைக்கும் கொடிய நஞ்சாகவும், இஸ்லாமிய உறவுகளின் அடிப்படையில்
வாழ்ந்துவந்த அந்த மக்களிடத்தில் குஃபர் சட்டங்களில் அடிப்படையில் ஏற்படும் வழிகேடான உறவுகளை ஏற்படுத்தும் குஃப்ரின் அமைப்பாகவும் பெய்ரூட் மையம் செயல்பட்டது. உண்மையில் இந்த மையம் மேற்கொண்ட பணியின் விளைவாக முதல் உலகப்போரில் காஃபிர்களோடு நடந்த யுத்தங்களில் இஸ்லாமிய அரசுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
எகிப்து ஆளுநர் முஹம்மது அலியின் மகன் இப்ராஹிம் பாஷா ஷாம் பகுதியிலிருந்து வெளியேறிய உடனேயே மேற்கத்திய காஃபிர்கள் பெய்ரூட் மையத்தில் தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதி செயல்களை துவக்கிவிட்டன. அமெரிக்கன் மிஷன் (American Vision)                                                                                                                                                                                என்ற பெயரில் அறிவியல் மன்றம் (Scientific Association) ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு கி.பி. 1842ல் மேற்கத்தியர்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இந்த கூட்டமைப்பு அதன் திட்டத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. கி.பி. 1847ல் "கலை மற்றும் அறிவியல் மன்றம்' (Art and science association) என்ற பெயரில் மற்றொரு கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் கைக்கூலி என்று பெயர்பெற்ற இரண்டு கிறிஸ்தவர்கள் அந்த இரண்டு மன்றங்களையும் ஒன்றிணைந்து நடத்திச் சென்றார்கள். அவர்களின் பெயர் புட்ரோஸ் அல் புஸ்த்தானி மற்றும் நஸீஃப் அல் யாஜிஸி என்பதாகும். பிரிட்டனை சார்ந்த கலோனல் சர்ச்சில் எலிஸ்மித் மற்றும் கானிலோஸ் வான்டிக் ஆகியோர் இதன் பின்னணியிலிருந்து செயல்பட்டார்கள். திட்டவட்டமான நோக்கங்கள் எதுவுமின்றி இந்த மன்றங்கள் துவக்கப்பட்டன என்றபோதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு அறிவியல் விஷயங்களை போதிப்பதற்காகவே இந்த மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அவை செயல்பட்டு வந்தன. பள்ளிகளில் குழந்தைகளிடம் உந்துதல் ஏற்படுத்துவது போன்றே பெரியவர்களிடம் இந்த மன்றங்கள் ஒருவகையான மேற்கத்திய கலாச்சார உந்துதலை ஏற்படுத்தின. மேற்கத்திய கலச்சாரம் மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் ஆகியவற்றை மக்களிடம் உருவாக்கினார்கள். இந்த மன்றங்களில் பணியாளர்கள் தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்ட போதும் கணிசமான முயற்சிகளையும் உழைப்பையும் செலவழித்தபோதும் இரண்டு வருட காலத்தில் ஷாம் பகுதியில் தீவிரமாக செயல்படும் ஐம்பது உறுப்பினர்களை மட்டுமே உருவாக்க முடிந்தது. அவர்கள் அனைவரும் பெய்ரூட்டை சார்ந்த
கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஆனால் இந்த மன்றங்களில் முஸ்லிம்கள் எவரும் இணைந்து பணியாற்ற முன்வரவில்லை!



ஆகவே கி.பி. 1850ல் கீழ்த்திசை மன்றம் (Eastern Association) என்ற பெயரில் மற்றொரு மன்றத்தை உருவாக்கினார்கள். பிராஞ்சு இயேசு சபை (French Jesuit) என்ற கிருஸ்தவ அமைப்பின் பங்குத் தந்தையான ஹென்றி டெப்ரினீர் இந்த மன்றத்தை நிறுவியிருந்தார். இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். கி.பி. 1857ல் மற்றொரு மன்றம் உருவாக்கப்பட்டது. இது ஒரு புதிய பாணியை பின்பற்றி செயலாற்றியது. இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக அரபு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்! அரபு அல்லாதவர்கள் எவரும் இதில் அனுமதிக்கப்படவில்லை! மேலும் இதன் நிறுவனர்கள் அனைவரும் அரபு கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். பின்னர் சில அரபு முஸ்லிம்களையும், துருஸ் (Druze) மதத்தைப் பின்பற்றுபவர்களில் சிலரையும் இந்த மன்றத்தில் இணைவதற்கு ஒப்புகொள்ள வைத்தார்கள். ஏறத்தாழ 150 நபர்கள் இதில் இணைந்து செயல்பட முன் வந்தார்கள். துருஸ் மதத்திலிருந்து முஹம்மது அர்ஸலான் என்பவரும் இதர முஸ்லிம்களிலிருந்து ஹூஸைன் பைஹம் என்பவரும் கிறிஸ்தவர்களிலிருந்து இப்ராஹிம் அல் யாஸிஜி, புட்ரோஸ் அல் புஸ்த்தானி மற்றும் அவரது மகள் ஆகியோர் நிர்வாக சபையின் பிரதானபொறுப்புகளை வகித்து வந்தார்கள். இப்ராஹிம் அல் யாஸிஜியும் புட்ரோஸ் அல்புஸ்தானியின் மகனும் மேற்கத்திய கலாச்சாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கும் திட்டத்துடன் செயல்பட்டார்கள். இந்த மன்றம் அடைந்த வெற்றியின் காரணமாக ஊக்கம் பெற்ற காஃபிர்கள் தேசியவாதம் என்ற பெயரில் இனவெறியையும், விடுதலை, சுதந்திரம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தையும் முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கி நேரடி செயல்பாட்டு திட்டங்களை வகுத்தார்கள். அறிவியல் விஷயங்களை போதனை செய்யும் சாக்கில் தந்திரமாக குஃப்ரை பிரச்சாரம் செய்வதைவிட நேரடியாகவும் வெளிப்படையாகவும் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது சிறந்தது என்று காஃபிர்கள் கருதினார்கள். கி.பி. 1875ல் பெய்ரூட் பிரோட்டஸ்டன் கல்லூரியின் மாணவர்கள் ஐவர் இணைந்து இரகசிய மன்றம் (Secret Association) ஒன்றை நிறுவினார்கள். கிறிஸ்தவர்களாக இருந்த இவர்கள் சிறு எண்ணிக்கையில் மக்களை ஒன்று திரட்டினார்கள். அரசியல் சிந்தனையின் அடிப்படையில் இயங்குவதற்காக இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. ஓர் அரசியல் இயக்கமாக அது உருவாக்கப்பட்டது என்றபோதும் அரபு தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையில் இயங்கியது. அரபு தேசியவாதத்தின் அடிப்படையில் இஸ்லாமிய பூமியில் நிறுவப்பட்ட முதல் அரசியல் இயக்கமாக இது கருதப்பட்டது. அரபு மக்களின் நலன்களை பேணுதல், அரபு மக்களின் பெருமை மற்றும் அரபு தேசியவாதம் ஆகிய கோஷங்களை இந்த மன்றம் முன்வைத்தது. உஸ்மானிய கிலாஃபா அரசுக்கு எதிராக மக்களிடம் வெறுப்பை தூண்டிவிட்டதோடு அதை துருக்கியர்களின் அரசு என்றும் இந்த மன்றம் பிரச்சாராம் செய்துவந்தது.



மார்க்கத்திலிருந்து அரசியலை பிரித்து வைக்கும் மதச்சார்பின்மை கொள்கையை நிலை நாட்டிடவும் அரபு மக்களின் ஒற்றுமை என்ற பெயரில் முஸ்லிம்களிடம் இனவாதத்தை தூண்டிவிடவும் இஸ்லாமிய அகீதாவின் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை அரபு தேசியவாதத்தின் மீது முழுமையாக திருப்பி விடுவதற்காகவும் இந்த இயக்கம் செயலாற்றியது. இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், இரகசியமான முறையில் மக்களிடம் பிரசுரங்களை விநியோகித்து வந்தார்கள். உஸ்மானிய கிலாஃபா அரசை துருக்கியர்களின் அரசு என்றும், அரபு மக்களிடமிருந்து துருக்கியர்கள் கிலாஃபத்தை பலவந்தமாக எடுத்துக்கொண்டார்கள் என்றும், ஷரியாவின் புனிதமான சட்டங்களின் வரம்புமீறியதன் மூலம் தீனை தவறாக பிரயோகித்தார்கள் என்றும் அந்த பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை கூறியவர்களும் இந்த இயக்கத்தை வழிநடத்தியவர்களும் தங்கள் உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய வெறுப்பை சுமந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மன்றங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாமிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் தேசியவாத சிந்தனை பரவத்தொடங்கியது. மேலும் தேசியவாதம் என்ற போர்வையில் இனவெறி தூண்டுதல்களும் பிரிவினைவாத பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் விவகாரங்களை கண்டறிவதற்காக உளவாளிகள் பலரை மேற்கத்திய அரசுகள் தேர்வு செய்து களமிறக்கியிருந்தன. மேலும் முஸ்லிம்களின் சிந்தனைகளை சேதப்படுத்துவதற்காகவும், அவர்களின் இஸ்லாமிய உணர்வுகளை அழிப்பதற்காகவும்தான் பெய்ரூட் மையம் உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இந்த இரகசிய இயக்கம் அறிவுரீதியான நாசத்தை முஸ்லிம்களிடம் உருவாக்குதலில் கணிசமான வெற்றி அடைந்திருந்தபோதிலும் அரசியல்
விளைவுகளை ஏற்படுத்துவதில் வெற்றிபெறவில்லை.

தொடரும்...