Sunday, January 31, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 04 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

சுருக்கமாக விளக்கும் பட்சத்தில் உலகில் மூன்று சித்தாந்தங்கள் நிலைபெற்றிருக்கின்றன. அவையாவன: முதலாளித்துவம் (capitalismj) கம்யூனிஸம் (communism) மற்றும் இஸ்லாம் (Islam) ஆகியவைகளாகும். இந்த ஒவ்வொரு சித்தாந்தமும் அதற்குரிய அடிப்படை கோட்பாட்டை (Aqeedah - Doctrine) கொண்டதாக இருக்கின்றன. அதிலிருந்து அதன் வழிமுறைகள் (முறைமைகள்) (System) பிறக்கின்றன. அதில் மனிதர்களின் செயல்பாட்டிற்குரிய அளவுகோல்களும், சமூகத்தைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டமும், அதன் (ஆட்சிமுறை) வழிமுறையை நடைமுயைப்படுத்தும் வழிமுறைகளும் (Method) அடங்கியிருக்கின்றன.

அகீதாவை பொருத்தவரை கம்யூனிஸ சித்தாந்தத்தின் கருத்து யாதெனில், அனைத்து பொருட்களுக்கும் உயிரினங்களுக்கும் மூலம் இயற்பொருள்தான் (Matter), இயற்பொருளின் பரிணாம வளர்ச்சி மூலமாக அனைத்துப் பொருட்களும், உயிரினங்களும் தோன்றி இருக்கின்றன என்பதாகும். முதலாளித்துவ சித்தாந்தத்தின் கருத்து யாதெனில்: மனிதர்களின் உலகியல் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பதாகும். இதன் விளைவாக அரசுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆகவே, முதலாளித்துவாதிகள், படைப்பாளன் பற்றிய கருத்தை விவாதிக்க முன்வருவதில்லை. மேலும் அவர்களின் விவாதம் என்னவென்றால், படைப்பாளனுக்கு மனிதர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை, அவனுடைய உள்ளமையை (Existence) ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே என்பதுதான். முடிவாக, படைப்பாளனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டவர்களும் அதை மறுப்பவர்களும் முதலாளித்துவ சித்தாந்தத்தில் சமமானவர்களே. அதுதான் மதசார்பின்மை (Secularism) என்ற வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்பதாகும்.

இஸ்லாம், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையையும், அவன்தான் படைப்பாளன் என்பதையும் நம்புகிறது. மனித இனத்தின்பால் அவனுடைய தூதர்களையும் தீர்க்கத்தரிசிகளையும் அவனுடைய தீனுடன் அவன்(சுபு) அனுப்புகிறான். மேலும், மனிதர்கள் தங்கள் செயல்களுக்காக நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி கணக்கிற்கு உட்படுவார்கள். ஆகவே இஸ்லாத்தின் அகீதா என்பது அல்லாஹ்(சுபு)மீதும், வானவர்கள் மீதும், அவனது வேதங்கள் மீதும், அவனுடைய து}தர்கள் மீதும், இறுதிநாளின் மீதும், களாகத்ர் மீதும், நன்மைதீமை இவை இரண்டும் அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வருகிறது என்பதன் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்.

எனினும், அகீதாவிலிருந்து (அடிப்படைக்கொள்கை) வழிமுறை (முறைமை) பிறக்கும் முறையைப் பொருத்தவரை கம்யூனிஸமானது, உற்பத்திக்குரிய கருவிகளிலிருந்து வழிமுறை உருவாகிறது என்கிறது. எனவே, பிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற உற்பத்தி முறையினால் (கோடாரி) (Axe) விளைந்த பலன்தான் (Product) பிரபுத்துவ முறைமையாகும். சமூகம் முதலாளித்துவ சமூகமாக பரிணாம வளர்ச்சி அடையும்போது இயந்திரங்களை உற்பத்திக் கருவியாக அது மாற்றியது. எனவே, இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சி (Meterialistic Evolution) யின் மூலம் மேற்கண்ட உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ வழிமுறை (முறைமை) உருவாகியது. வாழ்வியலிலிருந்து மதத்தை பிரித்ததன் காரணமாக வாழ்க்கை வழிமுறைகளை மனிதனே உருவாக்கிக் கொள்ள வேண்டும என முதலாளித்துவம் கோருகிறது. எனவே, மனிதன் அவனது எதார்த்த நிலையிலிருந்து அவனது வழிமுறையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து அதை அவனே விதிமுறை செய்து கொண்டான். எனினும் வாழ்க்கையின் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு ஒரு வழிமுறையை நிர்ணயித்து இருக்கிறான் என்று இஸ்லாம் கருதுகிறது. அவன்(சுபு) இந்த வழிமுறையுடன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பியிருக்கிறான். மனிதர்கள் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்லாஹ்(சுபு) தனது அருள் வெளிப்பாடு (Revealation) மூலம் அவருக்கு(ஸல்) அதை அருளியிருக்கிறான். ஆகவே, ஒரு முஸ்லிம் தனது பிரச்சினையை ஆய்வு செய்து அதற்குரிய தீர்வை குர்ஆனிலிருந்து சுன்னாவிலிருந்தும் முடிவு செய்து கொள்கிறான்.

எமது செயல்பாட்டின் அளவுகோளாக இயற்பொருள் வாதத்தை (Meterialism), அதாவது இயற்பொருள்வாத வழிமுறைகளை இந்த உலக வாழ்வியலின் அளவுகோளாக கம்யூனிஸம் கருதுகிறது. ஆகவே, இயற்பொருள் பரிணமிப்பது போல அளவுகோளும் பரிணமிக்கும் என அது குறிப்பிடுகிறது. அதேபோல முதலாளித்துவம் செயல்களுக்கான அளவுகோளாக உலகப் பயன்களை கருதுகிறது. இதனடிப்படையில், செயல்பாடுகளின் மதிப்பீடுகள் வரையப்பட்டு செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாமோ, செயல்பாடுகளின் அளவுகோளாக ஹராம், ஹலாலை கருதுகிறது. அதாவது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் பற்றிய கட்டளைகளை செயல்பாட்டின் அளவுகோளாக இஸ்லாம் கருதுகிறது. இதனடிப்படையில் ஹலாலான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹராமான செயல்கள் விலக்கப்படுகின்றன. இஸ்லாத்தில் அளவுகோள் பரிணமிப்பதுமில்லை, மாற்றமடைவதுமில்லை, உலக பயன்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதுமில்லை. மாறாக, ஷரிஆவே அவற்றை தீர்மானிக்கின்றது.

சமூகம் தொடர்பான கண்ணோட்டத்தைப் பொருத்தவரை இயற்பொருளாக கருதப்படும் உற்பத்தி முறை, இயற்கை, மனிதன் ஆகியவை அடங்கிய பொதுவான ஒரு தொகுப்பே சமூகம் என்று கம்யூனிஸம் கருதுகிறது. இயற்கையும் அதில் அடங்கியிருப்பவைகளும் பரிணமிக்கும் போது மனிதனும் அதனோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு முழு சமூகமும் பரிணமிக்கின்றது என்கிறது. இறுதியாக சமூகம் இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சியை (Meterialistic Evolution) பின்பற்றுகிறது. ஆகவே பரிணாம வளர்ச்சியின் செயற்பாங்கை (Process) ஊக்குவிப்பதற்கு முரண்பாடுகளை உருவாக்க வேண்டும். சமூகம் பரிணமிக்கும் போது தனிமனிதனும் அதோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு மனிதன் ஒரு சக்கரத்தில் அதன் ஆரம் சுழல்வதைப் போல சமூகத்தோடு சேர்ந்து சுழன்ற வண்ணம் இருக்கின்றான் என்கிறது.

முதலாளித்துவம், தனிமனிதர்களின் தொகுப்புதான் சமூகம் என்று கருதுகிறது. ஆகவே, தனிமனிதர்களின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டு விட்டால், சமூகத்தின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டுவிடும் என்று அது கருதுகிறது. ஆகவே, முதலாளித்துவ சமூகத்தில் தனிமனிதன் மீது மட்டும்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அரசு தனிமனித நலனுக்காக மட்டுமே செயலாற்றுகிறது. இதன் முடிவாக, இந்த சித்தாந்தம் சுயநல போக்கு கொண்டதாக திகழ்கிறது.

இஸ்லாத்தைப்பொருத்தவரை சமூகத்தின் அடித்தளமாக அகீதா இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள் (Mashaair) மற்றும் அதிலிருந்து பிறக்கும் சமுதாய வழிமுறைகள் (முறைமைகள்) (System of life) ஆகியவைகள் அடங்கும். ஆகவே இஸ்லாமிய சிந்தனைகளும் இஸ்லாமிய உணர்ச்சிகளும் மிகைக்கும் போதும் அதன் மீது இஸ்லாமிய ஆட்சிமுறை செயல்படுத்தப்படும்போதும் இஸ்லாமிய சமூகம் உருவாகின்றது. ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் சமூக வழிமுறைகள் (முறைமைகள்) ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபருடன் இணைந்து செயல்படும்போது ஒரு குழுவாக மாத்திரமே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே விதமாக சிந்தனை மேற்கொள்ளாதவரை, ஒரே விதமான உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளாதவரை, ஒரே விதமான ஆட்சி அமைப்புக்கு கீழ் வராதவரை ஒரு சமூகமாக அவர்கள் ஆக மாட்டார்கள். இது ஏனெனில், தத்தமது நலனே (Maslaha) இரு மனிதர்களுக்கிடையில் உறவை ஏற்படுத்தும் காரணியாக இருக்கின்றது. எனவே, தமது நலன்கள் குறித்த அவர்களின் சிந்தனைகளும், அதனுடன் கூடிய உணர்ச்சியும் ஒத்த அடிப்படையில் இருக்கும்போதே அவர்களுக்கு மத்தியில் உறவு நிலைக்கின்றது. இதன்விளைவாக அவர்களின் ஏற்பும் (Acceptance - Ridah மறுப்பும் (Rejection - Ghadah) ஒரே விதமாகவும், அவர்களின் வாழ்வியல் விவகாரங்களை தீர்க்கும் வழிமுறையும் ஒரே விதமாகவும் இருக்கும். தமது நலன் தொடர்பான சிந்தனைகளும் உணர்ச்சிகளும் மாறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஏற்பும் மறுப்பும் ஒன்றுபடாது. அல்லது அவர்களின் சமூக வழிமுறைகள் வேறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் உறவு என்பது இல்லாது போய்விடும். பிறகு சமூகம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் வழிமுறைகள் (System) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏனெனில் இந்த விஷயங்கள்தான் மக்களிடையே உறவை ஏற்படுத்துவதற்கும். அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த சமூகமாக விளங்குவதற்கும் காரணமாக இருப்பவைகள்.

இவ்வாறாக ஒரு சமூகத்தின்; அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனைகள் ஜனநாயகமாகவும், முதலாளித்துவமாகவும் இருந்து, அவர்களுடைய உணர்ச்சிகள் புரோகித தன்மையுடன் கூடிய ஆன்மீகமாகவும் அல்லது தேசப்பற்றாகவும் அல்லது தேசிய வாதமாகவும் இருந்து அவர்கள் மீது அமைந்துள்ள ஆட்சிமுறை முதலாளித்துவ ஜனநாயகமாகவும் இருக்கும்பட்சத்தில் அந்த சமூகத்திலுள்ள மக்கள் அனைவரும் முஸ்லிமாக இருந்தபோதிலும் அல்லது அவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிமாக இருந்த போதிலும் அந்த சமூகம் இஸ்லாமிய சமூகமாக கருதப்படமாட்டாது.

ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கம்ய10னிஸம் கருதுவது என்னவென்றால், கடுமையான சட்டங்கள் மூலமாகவும், காவல்துறையின் ஆற்றல் மூலமாகவும் அரசு மட்டுமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதன் அரசானது, ஆட்சி அமைப்பை உருவாக்கி சமூகத்தின் சார்பாகவும், தனிமனிதன் சார்பாகவும் அவற்றை செயல்படுத்தும். முதலாளித்துவத்திலோ அரசானது சுதந்திர உரிமைகளை (விடுதலையை) பாதுகாக்கும். ஒரு மனிதனின் சுதந்திரத்தின் மீது மற்றொரு மனிதன் வரம்பு மீறினால் அரசு அதில் தலையிட்டு அதை தடுத்துவிடும். எனினும், ஒரு நபர், மற்றொரு நபரின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவரை சுயநலத்திற்காக பயன்படுத்தினாலும், அவரது சம்மதத்தோடு அவரது உரிமையை எடுத்துக் கொண்டாலும் அரசு அதில் தலையீடு செய்யாது. ஏனெனில் அவரது சுதந்திரத்தில் வரம்பு மீறியதாக அச்செயல் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் இங்கு சுதந்திர உரிமைகளை பாதுகாப்பதற்குத்தான் அரசு செயல்படுகிறது.

தனிமனிதனின் இறையச்ச உணர்வின் அடிப்படையில் (முறைமைகள்) ஆட்சிமுறை நடைமுறைப்படுத்துவதாக இஸ்லாம் கருதுகிறது. மேலும் நீதி நிர்வாகம் குறித்த சமூகத்தின் உணர்வின் அடிப்படையிலும், ஆட்சியாளரோடு இஸ்லாமிய உம்மா வழங்கும் ஒத்துழைப்போடும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் மூலமும், அரசினாலும் அரசு அதிகாரத்தின் மூலமாகவும் ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன்படி சமூகத்தின் விவகாரங்களை அரசு கவனித்துக் கொள்ளும் அதேசமயம் தனிமனிதர் தன்னுடைய விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஆற்றல் பெறாதவரை அரசு அந்த விவகாரங்களில் கவனம் செலுத்தாது. இங்கு ஆட்சி அமைப்பு ஒருபோதும் பரிணமிப்புக்கு உட்படாது. எனினும் ஒரு விவகாரத்தில் இஜ்திஹாத் மூலம் பல அபிப்ராயங்கள் இருக்கும்பட்சத்தில், எதை சட்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானிப்பதில் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமை மனிதனின் இயல்போடு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஆழமான சிந்தனைகளைக் கொண்டதாக அது இருந்த போதிலும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒருவருடைய அறிவும் உள்ளமும் அதற்காக துரிதமாக திறந்து விடுகிறது. ஆவலோடு அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. மேலும் அதன் விளக்கமான கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து பாராட்டுகிறது. இது ஏனெனில் மனிதனிடம் இயல்பாகவே சன்மார்க்க உள் உணர்வு (Religious Instinct) அமைந்திருப்பதுதான். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பினால் ஒரு மதவாதியாகவே இருக்கின்றான். ஏனெனில் அவனிடம் மத உணர்வு ஆழமாக இடம்பெற்றிருக்கின்றது. எந்த சக்தியாலும் இந்த இயற்கை தன்மையிலிருந்து அவனை பிரிக்க முடியாது. தன்னுடைய இயல்பான இயற்கை தன்மையின் காரணமாக மனிதன் தான் முழுமையற்றவன் என்பதையும் வணங்கி வழிபட வேண்டிய மகத்தான ஆற்றலுடைய ஒன்று இருக்கிறது என்பதையும் மனிதன் உண்மையாக உணர்கின்றான். மனிதனின் சன்மார்க்க உள்உணர்வு என்பது, அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் ஒரு படைப்பாளன் அவனுக்கு தேவைப்படுவதை உணர்த்தக் கூடியதாகவே இருக்கிறது. மேலும் மனிதனின் இயல்பான பலவீனத்திலிருந்து தோன்றும் இந்த சன்மார்க்க உள்உணர்வு மனிதனிடம் நிலையாக இடம் பெற்றிருக்கக் கூடியது. அது மனிதனிடம் குறிப்பிட்ட சில வழிகளில் வெளிப்படுகிறது. அதுதான் மனிதனின் வணங்கி வழிபடும் தன்மையாகும் (ஸஜ்தா செய்யும் தன்மை taqdees). முடிவாக, மனித இனம் மதவாத தன்மையுடன் வரலாற்றின் நெடிய பாதை முழுவதிலும் ஏதாவது ஒன்றை வணங்கி வழிபட்டே வந்திருக்கிறது. மனித சமூகம், விண்கோள், கற்கள், விலங்குகள், நெருப்பு ஆகியவற்றையும் இன்னும் பலவற்றையும் வணங்கி வழிபட்டுக்கொண்டே வந்திருக்கிறது. எனினும், இஸ்லாம் தனது உன்னத கோட்பாட்டின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மனிதனை படைக்கப்பட்ட பொருட்களை வணங்கும் இழிநிலையிலிருந்து மீட்டு அனைத்தையும் படைத்த அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு வழிகாட்டுகிறது. அல்லாஹ்(சுபு)வையும் அவனுடன்(சுபு) நமக்குள்ள உறவையும் மறுத்தலிக்கும் இயற்பொருள்வாத சித்தாந்தம் (Meterialistic Ideology) தோன்றிய பிறகும் மனிதனின் இந்த உள்ளார்ந்த மதவாத தன்மையினை மாற்றியமைக்க இயலவில்லை. மாறாக அதிகாரம் தொடர்பான மனிதனின் எண்ணக்கருவை இது மாற்றியமைத்து மனிதன் தன்னை விட தனது ஆற்றலை பெரிதாகக்கருதும் அளவுக்கும் அதனை வணங்கி வழிபடும் அளவுக்கும் இந்த சிpத்தாந்தம் வழிவகுத்துவிட்டது. மேலும் அது இந்த ஆற்றலை மனிதனுக்குள் உருவாக்குவதிலும், அதற்கு மட்டுமே அவன் வழிபடச் செய்வதிலும் அனைத்தையும் மாற்றியமைத்தது. பின்நோக்கி செல்வது போல் ஒரு நிலை ஏற்பட்டு மனிதர்கள் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு பதிலாக அவனது(சுபு) அடியார்களை (மனிதர்களை) வணங்கினார்கள். அவனது(சுபு) வசனங்களை கனம் செய்வதற்கு பதிலாக படைப்பினங்களின் வார்த்தைகளை கனம் செய்தார்கள். இந்த வகையில் இது ஒரு பிற்போக்கேயாகும். இந்த நிராகரிப்பு கொள்கையினால் மனிதனின் சன்மார்க்க உள்உணர்வை அவனிடமிருந்து நீக்க முடியவில்லை. மாறாக, ஏமாற்றும் விதத்தில் அவனை பின்நோக்கி செல்லும்படி ஆக்கிவிட்டது. ஆகவே, இயற்பொருள்வாத சித்தாந்தத்தின் (கம்யூனிஸம்) அறிவார்ந்த தலைமை எதிர்மறையானதாகும் (Negative). மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்பட்டதாகும் (Controdictive). எனவே இந்த கண்ணோட்டத்தில் இது ஒரு தோல்வியே ஆகும். மனிதர்களை தங்களின் இறைப்பை தேவையை நிறைவு செய்யும் காரியத்தின் பக்கம் மட்டும் சிறப்பாக கவனம் செலுத்தும்படி அது அவர்களுக்கு வழிகாட்டியது. ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும், வாழ்வில் தோல்வியடைந்தவர்களையும் அது சிறப்பாக கவர்ந்தது. சிந்தனைத்தரம் குறைந்தவர்களும், வாழ்க்கையை கோட்டை விட்டவர்களும், வாழ்க்கையை வெறுத்தவர்களும், இயல்பான மனநிலையிலிருந்து மாறி தம்மை ஞானிகள்; என்று அழைக்கப்படுவதை விரும்பியவர்களும் இதை பின்பற்றினார்கள். அவர்கள் இந்த இயற்பொருள்வாத தத்துவத்தை பிரசங்கிக்கும் போதே அதன் தவறான அடிப்படையும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் சேதமும், உண்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுகிறது. மனிதர்களை இந்த சித்தாந்த்திற்கு அடிமைப்படுத்தவும், கட்டாயப்படுத்தவும் அது முயற்சிக்கிறது. ஆகவே, அடக்குமுறை, அநீதி, வன்முறை, குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை அதன் முக்கிய சாதனங்களாக இருக்கின்றன.

முதலாளித்துவ அறிவார்ந்த தலைமையும் மனிதனின் இயற்கை தன்மைக்கு அதாவது சன்மார்க்க உள்உணர்வுக்கு முரண்பாடாகவே இருக்கிறது. இது ஏனெனில் சன்மார்க்க உள்உணர்வு மனிதனின் வணங்கி வழிபடும் உணர்விலும், வாழ்க்கை விவகாரங்களை மேலாண்மை செய்வதிலும் வெளிப்படுகிறது. இந்த மேலாண்மையை மனிதன் கையில் எடுக்கும் நிலையானது இந்த சித்தாந்த வழிமுறையின் பொருந்தாத தன்மையும் அதன் வழிமுறையின் ஆற்றல் இன்மைக்கு சாட்சியளிக்கின்றன. முடிவாக, மதம் என்பது மனிதர்களின் வாழ்வியல் விவகாரங்களை சரியான முறையில் மேலாண்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஆகவே, மனித வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்பது மனிதர்களின் இயற்கை தன்மைக்கு முரண்பாடாக இருக்கிறது. மனித வாழ்க்கையில் மதம் இடம் பெற்றிருப்பது என்பதன் பொருள். வாழ்க்கையின் செயல்பாடுகள் வெறும் மத சடங்குகளாக இருப்பது என்பதல்ல. மாறாக, மதம் இடம் பெற்றிருப்பதன் பொருள் அல்லாஹ்(சுபு) விதித்த விதிமுறைகளைக் கொண்டு மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள் தீர்க்கப்படுவதுதான். மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்திப் போகின்ற அகீதாவிலிருந்து இந்த வழிமுறை பிறக்கின்றது. இந்த வழிமுறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு (கோட்பாட்டிலிருந்து) அகீதாவிலிருந்து பிறந்த வழிமுறையைக் கொண்டு வந்தால் அது மனித இயல்புக்கு பொருந்திப் போவதாக இருக்காது. ஆகவே, முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமை மனித உள் உணர்வு அடிப்படையில் தோல்வியுற்ற ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், அது எதிர்மறையானதாக இருக்கிறது. மனித வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை அது பிரிக்கிறது. மனித வாழ்வில் இயல்பாக உள்ள மத உணர்வினை போக்கி விடுகிறது. மேலும் அதை தனிமனித விவகாரம் என்று கூறுவதோடு, அல்லாஹ்(சுபு) மனித வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வாக விதித்துள்ள வழிமுறையை போக்கிவிடுகிறது.

இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை உடன்பாடானது. ஏனெனில், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கைக்கு அறிவை அது அடிப்படையாக அமைத்திருக்கிறது. மனிதனின் கவனத்தை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் என்பவற்றின் மீது திருப்பி படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையை உறுதியாகவும், தீர்மானமாகவும் நிலைநிறுத்துகிறது. மனிதன் உச்சமான நிறைவை (Utmost Perfection) தனக்குள்ளே தேடுகின்றான். ஆனால் அது அவனிடத்திலோ அல்லது அவனுடைய வாழ்விலோ அல்லது பிரபஞ்சத்திலோ காணப்படாத நிலையில், இஸ்லாம் அதைப்பற்றி அவனுக்கு விளக்கக் கூறுகிறது. அந்த உச்சமான நிறைவை பெற்றுள்ள ஆற்றலை (அல்லாஹ்(சுபு)வை) அவன் அறிவு ரீதியாக உணர்ந்து கொள்வதற்கும, அதன் (அல்லாஹ்(சுபு)வை) உள்ளமை மீதும், அதன் (அல்லாஹ்(சுபு)வை) மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.

கம்ய10னிஸத்தின் அறிவார்ந்த தலைமை இயற்பொருள்வாத கோட்பாட்டின்மீது நிறுவப்பட்டிருக்கிறதே ஒழிய, அறிவார்ந்த அடிப்படையில் மனித அறிவின் தீர்மானத்தின் மீது நிறுவப்படவில்லை. அது சிந்தனைக்கு (Thought) முன்பாகவே இயற்பொருள் இருந்து வருவதாக கருதுகிறது. மேலும் அனைத்திற்கும் மூலமாக இயற்பொருள் இருக்கிறது என்று கருதுவதனால் இயற்பொருள்வாத (Meterialistic) அடிப்படையில் அது இருக்கிறது. இவ்வாறிருக்க, பல நு}ற்றாண்டுகளாக அறிஞர்களுக்கும், கிருஸ்தவ மத குருமார்களுக்கும் மத்தியில் நடந்து வந்த ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் கொண்டு வரப்பட்ட சமரச பேரத்தின் அடிப்படையில் முதலாளித்துவ அறிவார்ந்த தலைமை அமைக்கப்பட்டது. இந்த சமரசத் தீர்வுதான் மனித வாழ்வியல் நடைமுறை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் சிந்தனையாகும்.

ஆகவே, கம்ய10னிஸம், முதலாளித்துவம் ஆகிய இரண்டின் அறிவார்ந்த தலைமையும் தோற்றுப்போய் விட்டன. ஏனெனில் அவை மனிதனின் இயல்புக்கு முரண்பட்டதாக இருப்பதோடு அவை மனித அறிவின் மீது நிறுவப்பட்டவைகள் அல்ல.

முடிவாக, இந்த மூன்று அறிவார்ந்த தலைமைகளில் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டும்தான் சரியானது. ஏனெனில் இது மனித அறிவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் இயற்கை தன்மையோடு ஒத்துப் போவதாக இருக்கிறது. அதனால் அதற்கு உடன்பாடான முறையில் பதிலளிப்பவனாக மனிதன் இருக்கின்றான். அதே வேளையில் மற்ற அறிவார்ந்த தலைமை தவறானதாக இருக்கின்றன. ஏனெனில் அவைகள் மனித அறிவின் மீது கட்டமைக்கப்படவுமில்லை. அவை மனித இயல்புக்கு பொருந்துவதும் இல்லை.
தொடரும்...

Wednesday, January 13, 2010

இஸ்லாமிய பூமி (தாருள் இஸ்லாம்), நிராகரிப்பின் பூமி (தாருள் குப்ர்) என்பவற்றிற்கிடையிலான வேறுபாடு:


முன்னைய காலத்தில் மிகத்தெளிவாக முஸ்லிம்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஒழுகப்பட்ட இஸ்லாத்தினுடைய மிக முக்கிய எண்ணக்கருக்கள், சிந்தனைகள், விளக்கங்கள் எல்லாம் இன்றைய சூழலில் மிக மேலோட்டமான புரிதல்களுடன், அல்லது குறைபாடுடைய விளக்கத்துடன் அல்லது முற்றாகவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது வேதனையளிக்கிறது. இவற்றுள் ஒன்றுதான் இஸ்லாமிய பூமி (தாருள் இஸ்லாம்), நிராகரிப்பின் பூமி (தாருள் குப்ர்) என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டை வரையறை செய்து விளங்கிக் கொள்ளுதலாகும்.
இன்று முஸ்லிம் உலகில் காணப்படும் நாடுகளின் நிலை குறித்து புரிந்து கொள்வதற்கு தாருள் குப்ர், தாருள் இஸ்லாம் என்பவை குறித்த தெளிவு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்நாடுகள் குறித்த நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவதுண்டு. மாறாக இந்நாடுகளின் உண்மை நிலை என்ன என்பது குறித்து ஷரிஆவின் நிழலில் நோட்டமிடுவதை இவர்கள் மேற்கொள்வதில்லை. எனவேதான் சூடான் இன்றுவரையும் “தேசிய அரசு – Nation state” ஆக காணப்படும் நிலையில் கூட ஹஸன் அல் துராபி சூடானின் ஆட்சியில் அமர்ந்தபோது அதனை இஸ்லாமிய அரசு என பலர் அழைத்தனர். அதேபோன்றுதான் ஆயத்துல்லாஹ் கொமெய்னி ஈரானியப்புரட்சியின் மூலம் தாருள் குப்ரை தாருள் இஸ்லாமாக மாற்றிவிட்டார் என முந்தியடித்துக்கொண்டு பலர் வாதிட்டனர். ஆனால் உண்மையில் ஈரானிய அரசியலமைப்புக்கூட முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

முஸ்லிம் உலகில் புகழ்பெற்ற நபர்கள் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் கூட தாருள் குப்ர், தாருள் இஸ்லாம் என்பவற்றை வரையறை செய்வதில் மிக மேலோட்டமான பாங்கை கையாள்வதை நாம் காண்கிறோம். இந்நிலை சிந்தனை ரீதியான பாதிப்பிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாஹ்வும் தப்பிவிடவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. நாமும் கிலாபத்திற்காகத்தான் முயற்சிக்கிறோம், நாமும் இஸ்லாமிய அரசைத்தான் ஏற்படுத்தப்பாடுபடுகிறோம் எனக்கூறுபவர்கள் கூட உண்மையில் இவை குறித்த தௌ;ளத்தெளிவான விளக்கத்தையோ, அல்லது வரையறையையோ புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். சிலர் கிலாபத்தை உருவாக்குவோம் என்பதை ஒரு சுலோகமாகப் பாவிக்கிறார்களேயொழிய அதனை நடைமுறையில் அடைந்து கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கிடைப்பதில்லை. கிலாபத் என்றால் என்ன தாருள் இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து புரிந்து கொள்ளாது அதனை ஏற்படுத்த முனைகின்றோம் எனக்கூறுவது தொழுகையின் து}ண்கள் (அர்கான்) என்ன அதற்கான நிபந்தனைகள் (சுரூத்) என்ன என்பவை குறித்து அறியாமல் நாங்கள் தொழுகையை நிலைநாட்டப்போகிறோம் எனக்கூறுவதற்கு ஒப்பானதாகும்.

மோசடிமிக்க இன்றைய முஸ்லிம் நாடுகளை தாருள் குப்ர் என அழைப்பதற்கே சிலர் வெட்கப்படும் நிலையைப்பார்க்கிறோம். வேடிக்கை என்வென்றால் குப்பார்கள், குப்ரைக் கொண்டு ஆட்சி நடாத்தும் இந்தியா போன்ற நாடுகளைகூட தாருள் குப்ர் என்று அழைப்பதற்கு சிலர் தயங்குவதுதான்.

எனவேதான் தாருள் இஸ்லாம் மற்றும் தாருள் குப்ர் என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டையும், அதன் வரைவிலக்கணத்தையும், அது தொடர்பான ஷாரீஆ ஆதாரங்களையும் விளக்குவது இன்றைய காலப்பரிவில் மிகவும் முக்கியமானது எனக் கருதுகின்றோம்.

வரைவிலக்கணம்

‘தார்’ (பன்மை: தியார்) என்பதற்கு அரபு அகராதியில் தங்குமிடம்(மஹல்லு), வீடு, வதிவிடம், நிலம்(பலத்) என்பவை போன்ற பல அர்த்தங்கள் உண்டு. இஸ்லாமிய ஷாரீஆவின் பரிபாஷையில் தாருள் இஸ்லாம் என்பதற்கு “ முற்றுமுழுதாக இஸ்லாமிய சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்பட்டுவருகின்ற, அதன் பாதுகாப்பு (அமன்) இஸ்லாத்தின் பாதுகாப்பினால் (அதாவது: நாட்டிற்குள்ளும், வெளியிலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு இஸ்லாமிய அதிகாரபீடத்தினாலும் வழங்கப்பட்டுவரும்) மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலமாகும். அது பெரும்பான்மையாக முஸ்லிம் அல்லாதவர்களை கொண்ட நாடாக இருந்தாலும்கூட” எனப்பொருளாகும்.

தாருள் குப்ர் என்பது “ குப்ர் சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்படுகின்ற, அதன் பாதுகாப்பு இஸ்லாத்தின் பாதுகாப்பினால் வழங்கப்படாத நிலமாகும். இந்நிலம் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட நிலமாக இருந்தாலும்கூட. ”

ஆகவே தாருள் குப்ர் என்பதும், தாருள் இஸ்லாம் என்பதும் நிலத்தை அடிப்படையாக்கொண்டோ, அல்லது அதன் குடிமக்களை அடிப்படையாகக்கொண்டோ வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக அந்த நிலத்தின் சட்டங்களையும், அதன் பாதுகாப்பையும் அடிப்படையாகக்கொண்டே அவை வரையறை செய்யப்படுகின்றன. ஆகவே எங்கே ஆட்சியும், பாதுகாப்பும் இஸ்லாத்தைக்கொண்டு முழுமையாக இருக்கின்றதோ அது தாருள் இஸ்லாம். எங்கே ஆட்சியும், பாதுகாப்பும் நிராகரிப்பைக்கொண்டிருக்கிறதோ அது தாருள் குப்ர். இங்கே இன்னுமொரு கேள்வியும் எழலாம். அது தாருள் ஹர்ப் (யுத்திற்கான நிலம்) குறித்தது. தாருள் ஹர்ப் என்பதும் தாருள் குப்ர் என்பதும் அதன் பாவணையைப்பொறுத்து வேறுபடுகிறதேயோழிய அவை ஒன்றையே குறிப்பிடுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய ஆட்சி முழு உலகிலும் பரப்பப்பட்டு நிலைநாட்டப்படும் வரை அதற்கான போராட்டம் தொடரும் என்பதால் இஸ்லாம் ஆட்சி செலுத்தாத பூமிகளை தாருள் குப்ர் என்று அழைப்பதைப்போலவே தாருள் ஹர்ப் என்றும் அழைப்பதுண்டு. எனினும் இஸ்லாமிய பூமியை நேரடியாக ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கும், ஆக்கிரமிப்பில் ஈடுபடாத நாடுகளுக்குமிடையே அந்நிலங்களை வரையறை செய்வதிலே வேறுபாடு காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் போன்ற நாடுகளை தாருள் ஹர்ப் பிஃலன் (நிதர்சன யுத்த பூமி) என்றும், முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிக்காத அல்லது முஸ்லிம் நிலங்களுடன் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாத ஏனைய குப்ர் நாடுகளை தாருள் ஹர்ப் ஹீக்மன் ( சட்ட ரீதியான யுத்த பூமி) என்றும் வகைப்படுத்தப்படும். மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்கள் இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டவையும், இஸ்லாமிய வரலாற்றில் அறிஞர்களால் கலந்துரையாடப்பட்டவைகளுமாகும்.

ஆதாரங்கள்

‘தார்’ என்ற பதம் ரஸ}ல்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும், அவர்களின் தோழர்களின் பாவணையிலும் ஒரு பிரதேசத்தை குறிப்பதற்கு அல்லது முஸ்லிம்களுடன் தொடர்புபட்டுவரும்போது இஸ்லாமிய அரசைக்குறிப்பதற்கு, நிராகரிப்பாளர்களுடன் தொடர்புபட்டுவரும்போது அவர்களின் ஆதிக்க நிலப்பரப்பைக் குறிப்பதற்கு பயன்பட்டு வந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடியும்.
சுலைமான் இப்ன் புரைதா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"...இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைப்பீராக. அவர்கள் உமக்கு பதிலளித்தால் அதை ஏற்றுக்கொள்வீராக. பிறகு அவர்களிடமிருந்து (போர் புரிவதிலிருந்து) விலகிக்கொள்வீராக, பின்னர் அவர்களின் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து முஹாஜிர்கள் வாழும் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் இவ்வாறு செய்தால் பிறகு முஹாஜிர்களுக்கு உரியதைப் போன்ற சாதகங்களும் பாதகங்களும் (உரிமைகளும் கடமைகளும்) அவர்களுக்கும் உண்டு (என்று கூறுவீராக) ..."(ஸஹீஹ் முஸ்லிம் 4294)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் விஷயம் என்னவென்றால். அவர்கள் வாழும் நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முஹாஜிர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்கள்) வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்யாவிட்டால் முஹாஜிர்கள் பெற்றுள்ள உரிமைகளை பெறமுடியாது. அதாவது இஸ்லாத்தின் நிலப்பரப்பில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உரிமைகளை பெறமுடியாது, ஆகவே இந்த ஹதீஸ் முஹாஜிர்கள் வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்பவர்களுக்கும் ஹிஜ்ரத் செய்யாதவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குகிறது, தாருல் முஹாஜிரீன் என்பது அல்லஹ்வின்தூதர்(ஸல்) காலத்தில் இஸ்லாத்தின் நிலப்பகுதியாக இருந்தது. அதாவது தாருல் இஸ்லாமாக இருந்தது. இதற்கு அப்பால் இருந்த அனைத்து நிலப்பகுதிகளும் தாருல்குப்ர் என்று கருதப்பட்டது.

இந்த ஹதீஸின் அர்த்தத்திலிருந்துதான் தாருல்இஸ்லாம் மற்றும் தாருல்குப்ர் ஆகிய சொற்களின் அர்த்தங்கள் பெறப்பட்டுள்ளன, ஆகவே ஒரு நிலப்பரப்பை இஸ்லாத்துடனோ அல்லது குப்ருடனோ அல்லது போருடனோ இணைத்துக் கூறும்போது அதில் இடம்பெற்றுள்ள அரசைப் பொறுத்தும் அதன் அதிகாரத்தைப் (sultan - authority) பொறுத்துமே இணைத்துக்கூறப்படுகிறது.

ஆகவே ஒரு நிலப்பரப்பின் (dar - land) அடையாளத்தை அதில் இடம்பெற்றுள்ள அதிகாரஅமைப்பின் (sultan - authority) அடிப்படையில் நிர்ணயிக்கமுடியும் என்பது தெளிவாக விளங்குகிறது, இரண்டு அம்சங்களின் அடிப்படையில் இந்த அதிகாரஅமைப்பின் அடையாளத்தை அறிந்துகொள்ளமுடியும்.

முதலாவதாக : மக்களின் நலனை பேணுவதற்கு அதில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள்

இரண்டாவதாக : குடிமக்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கிடையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய அதிகாரம்

ஆகவே மேற்கூறப்பட்ட இரண்டு நிபந்தனைகளின் அடிப்டையில்தான் இதை அறிந்து கொள்ளமுடியும்.

மேலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக உள்ள ஷரியாவின் ஆதாரமாவது :

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
இன்னும் எவர் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிபுரியவிûல்லையோ அவர்கள்தான் காபிர்கள் ஆவார்கள். ( அல்மாயிதா 5: 44)

மேலும் அவ்ப் இப்ன் மாலிக்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தீய இமாம்கள் பற்றி கூறப்பட்டுள்ளதாவது.

"... அல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களுக்கு எதிராக நாங்கள் போர் செய்யவேண்டாமா? என்று வினவப் பட்டது. "இல்லை உங்களுக்கு மத்தியில் அவர் ஸலாத்தை நிலைநிறுத்தும்வரை (அவ்வாறு செய்யவேண்டாம்)... என்று கூறினார்கள்(ஸல்)..."


பைஅத் தொடர்பாக உபாதா இப்ன் அஸ்ஸாமித் (ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"... அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குப்ரை கண்டால் ஒழிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நீங்கள் சர்ச்சை செய்யவேண்டாம்..."

தப்ராணியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"...வெளிப்படையான குப்ரை அவர்களிடமிருந்து நீங்கள் கண்டால் ஒழிய..."

ஆகவே அல்லாஹ்(சுபு) அருளிய சட்டங்களுக்கு அந்நியமான சட்டங்களைக் கொண்டு ஆட்சிபுரியும் நிலைதான் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஜிஹாது செய்வதை நிர்ணயிக்கும் விஷயம் என்பதை மேற்கண்ட ஷரியா உரைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் தாருல்இஸ்லாமாக இருக்கும் நிலப்பரப்பில் இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கட்டாய நிபந்தனை என்பதையும் அவ்வாறு நடைமுறைப் படுத்தவில்லை என்றால் அந்த ஆட்சியாளருடன் போர் செய்யவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டும் ஆதாரங்களாக இவை இருக்கின்றன.

பாதுகாப்பு - security – amaan :

தாருல்இஸ்லாமாக இருக்கும் ஒரு நிலப்பகுதியில் அதன் குடிமக்களின் பாதுகாப்பு அதிகாரம் இஸ்லாத்தின் பொறுப்பில் இருக்கவேண்டும் அதாவது முஸ்லிம்களின் கைகளில் இருக்கவேண்டும், கீழ்கண்ட அல்லாஹ்(சுபு) வின் வசனத்திலிருந்து இந்த ஆதாரம் பெறப்பட்டுள்ளது.

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا
மூமின்கள் மீது (ஆதிக்கம் செலுத்துவதற்கு) காபிர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக எந்த வழியையும் ஆக்கமாட்டான். ( அந்நிஸா 4: 141)

அதாவது மூஃமின்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு காபிர்களுக்கு அனுமதியில்லை ஏனெனில் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது முஸ்லிம்களின் பாதுகாப்பு குப்ரின் கையில் இருப்பதாகுமே ஒழிய இஸ்லாத்தின் கையில் இருப்பதாகாது.

மேலும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களின் அதிகாரத்திற்கு கட்டுப்படாத ஒவ்வொரு நிலப்பகுதிகள் மீதும் போர் தொடுப்பதற்கு கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள் என்பதோடு அந்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் அவர்களுடன் போர் செய்வதில் அவர்கள்(ஸல்) ஈடுபட்டார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"ஒரு கூட்டத்தினர் மீது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) தாக்குதல் நடத்தும்போது அதிகாலை நேரத்தில் மட்டுமே தாக்குதல் நடத்துவார்கள், அதான்(தொழுகைக்கான அழைப்பு) கூறும் சப்தம் கேட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர்த்துக் கொள்வார்கள் அதான் கூறும் சப்தத்தை கேட்கவில்லை என்றால் அதிகாலை நேரத்திற்குப் பின்னர் தாக்குதல் நடத்துவார்கள் "

எஸ்ஸாம் அல்முன்ஸி(ரலி) அறிவித்திருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) போர்ப்படைகளை அனுப்பும்போது பின்வருமாறு கூறுவார்கள். "நீங்கள் மஸ்ஜிதுகளை கண்டாலோ அல்லது (தொழுகையின்) அழைப்பொலியை கேட்டாலோ பிறகு ஒருவரையும் கொல்லவேண்டாம்"


மஸ்ஜித் மற்றும் அதான் ஆகியவை இஸ்லாத்தின் அடையாளங்களாக இருக்கின்றன என்பதால் அது அங்கு முஸ்லிம்கள் வசிப்பதை சுட்டிக்காட்டும் விஷயமாக இருக்கிறது, எனினும் இது போர் செய்வதை தடுக்கக்கூடிய விஷயமாக இல்லை மாறாக அங்கு வாழும் முஸ்லிம்கள் எவரையும் கொல்லக்கூடாது என்பதுதான் கட்டளையாக இருந்தது. அந்தப்பகுதி தாருல்ஹர்பாக (போர் பிரகடணம் செய்யப்பட்ட பகுதி) இருந்ததுதான் இதற்கு காரணமாகும் ஏனெனில் இஸ்லாத்தின் அடையாளங்கள் அல்லது இஸ்லாமிய சடங்குகள் அந்த பகுதியில் இடம்பெற்றிருந்த போதிலும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பு பெற்ற பகுதியாக அது இல்லை. அதாவது இஸ்லாத்தின் அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் உட்படாத பகுதியாக அது இருந்தது, ஆகவே தாருல்ஹர்பாக கருதப்பட்ட மற்ற பகுதிகளைப் போலவே முஸ்லிம்கள் வாழும் அந்த பகுதியும் தாருல் ஹர்பாகவே கருதப்பட்டது.

இந்த அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் இன்றுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளும் இஸ்லாத்தின் சட்டங்கள் விதித்துள்ள நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, அவைகளின் பலபகுதிகளின் பாதுகாப்பு அதிகாரம் (அமான்) முஸ்லிம்களின் கைகளில் இருந்தபோதும். அவை முஸ்லிம்களின் பூமியாக இருந்தபோதும். அவற்றில் வாழ்கின்ற மக்கள் முஸ்லிம்களாக இருந்தபோதும் துர்பாக்கியவசமாக அவைகள் தாருல்இஸ்லாமாக கருதப்படமாட்டாது, ஏனெனில் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்து இவ்விஷயம் நிர்ணயிக்கப்படுகிறதே ஒழிய நிலப்பரப்பையும் அதில் வாழ்கின்ற மக்களையும் பொறுத்தல்ல.







ஸஹீஹ் அல் புஹாரியில் அரேபிய தீபகற்பத்திலுள்ள கைபர் என்ற நகர் தொடர்பாக இடம்பெற்றுள்ள அறிவிப்பு இதற்கு மேலும் சான்று பகர்கிறது. மதீனாவில் இஸ்லாமிய அரசு காணப்பட்ட சூழலில் கைபர் என்ற நகரத்தின் முழுமையான சனத்தொகையினரும் யூதர்களாக இருந்த போதிலும்கூட அது தாருள் இஸ்லாமாவே கருதப்பட்டது. ஏனெனில் அதனது அதிகாரம் இஸ்லாமிய அரசின் கைகளில் இருந்தது. ஹிஜ்ரி 7இல் கைபரை கைப்பற்றிய முஹம்மத்(ஸல்) அவர்கள் முழுமையாக யூதப்பகுதியாக விளங்கிய அந்நகரில் யூதர்கள் தமது நிலங்களில் விளைச்சலில் ஈடுபடும்படி கூறியதுடன் அவர்கள் கூறினார்கள். “ நான் அறுவடை செய்வதற்கே (நற்கூலியைப்பெறுவதற்கு)அனுப்பப்பட்டுள்ளேனே ஒழிய விளைச்சலில் ஈடுபடுவதற்கு அல்ல. என்று கூறினார்கள். மேலும் அங்கே அன்ஸார்களில் தலைவர்களை நியமித்ததுடன் அவர்கள் யூதர்களுக்கு மத்தியிலும் வாழ்ந்தார்கள்.






இப்னு உமர்(ரழி) அறிவித்ததாக புஹாரியில் பதிவாகியுள்ளது.






“ உமர்(ரழி) ஹிஜாஸிலிருந்து(அரேபிய தீபகற்பம் முழுதும்) முழுமையாக யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் வெளியேற்றினார்கள். முஹம்மத்(ஸல்) கைபரை கைப்பற்றிய போது யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். ஏனேனில் அந்நிலம் அல்லாஹ்(சுபு)வினதும், அவனதும் தூதர்(ஸல்) அவர்களினதும், முஸ்லிம்களினதும் நிலமாகும். அவர்கள்(ஸல்) யூதர்களை வெளியேற்ற விரும்பிய போதும் யூதர்கள் தாம் அங்கே இருக்க விரும்புவதாகவும், தமது உழைப்பில் பாதியை இஸ்லாமிய அரசுக்கு செலுத்திவிட்டு பாதியை தாம் எடுத்துக்கொள்வதாகவும் விண்ணப்பித்தார்கள். இந்த நிபந்தனையின் அடிப்படையில் முஹம்மத்(ஸல்) அவர்கள் யூதர்களை அங்கே தாம் விரும்பும் காலக்கேடு வரை விட்டுவைப்பதாக தெரிவித்தார். பின்னர் உமர் (ரழி) யூதர்களை ‘தைமா’ மற்றும் ‘ஆரிஹா’வை நோக்கிச் வெறியேற வைக்கும் வரை யூதர்களும் அங்கே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். (ஸஹீஹ் புஹாரி 2213)






மேலும் அபுஹீரைரா(ரழி) மற்றும் சைத் அல் குத்ரி (ரழி) அறிவிக்கின்ற ஹதீஸில். “ … முஹம்மத்(ஸல்) அன்ஸார்களான பனு அதிய் இன் சகோதரரை கைபருக்கு ஆட்சியாளராக்கினார்கள். (ஸஹீஹ் புஹாரி 4001)






தாருள் குப்ர் மற்றும் தாருள் இஸ்லாம் தொடர்பாக ஸஹாபாக்கள் கொண்டிருந்த கருத்துக்கள்






இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பதாக புஹாரியில் பதிவாகியுள்ளது.






ஒருமுறை உமர் (ரழி) (இதன்போது உமர்(ரழி) கலீபாவாக இருந்தார்கள்) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரழி), உரையாடிக்கொண்டிருந்தாகள். அவர்கள் கூறினார்கள். “ அவர்கள் மதீனா எனும் தாருள் ஹிஜ்ரா (ஹிஜ்ராவின் பூமி), தாருள் ஸ}ன்னா (நபிவழியின் பூமி), தார் அல் ஸலாமா (அமைதியின் பூமி) விற்கு இடம்பெயரும் வரை அவர்களுடன் கடுமையான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.( சில ஹிஜ்ஜாஜ்கள் தொடர்பாக கூறினார்கள்). ( புஹாரி 3713)

இப்னு அப்பாஹ்(ரழி) அறிவித்ததாக ஜாபிர் பின் ஸியாத் (ரழி) அறிவித்தார்கள்.
“ தூதர்(ஸல்), அபு பக்ர்(ரழி), உமர்(ரழி) போன்றோர்கள் முஹாஜிர்களாவார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களிடமிருந்து ஹிஜ்ரத் செய்தார்கள். அன்ஸார்களிலும் சிலர் ஹிஜ்ரத் செய்தார்கள். ஏனெனில் மதீனா தாருள் சிர்க்காக இருந்தபோது அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி பையத்துல் அகபாவினுடைய இரவில் வந்தார்கள். (அந் நஸயீ)

அபு உபைத் (ரஹ்) அவர்களின் கிதாபுல் அம்வாலிலும், அபு யூசுப்(ரஹ்) அவர்களின் கிலாபுல் ஹரஜ்ஜிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...
காலித் பின் வலீத் (ரழி) ஹிரா (பஹ்ரைனுக்கு அருகிலுள்ள ஒரு பகுதி) என்ற பகுதிவாழ் மக்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்கள். அதிலே அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள். “ உங்களில் யாரேனும் முதியவர்களாகவோ, வசதியற்றவர்களாகவோ, நோயாளிகளாகவோ அல்லது பிறருடைய தயவில் வாழ்பவராகவோ மாறினால் அவ்வாறானவர்களிடமிருந்து நான் ஜிஸ்யா அறவிடமாட்டேன். மாறாக அவர்கள் பைத்துல் மாலிலிருந்து (திறைசேரி) நிதியையும் பெற்றுக்கொள்வார். அவரும் அவரது பிள்ளைகளும் இதற்கு உரிமையுடையவர்களாவார்கள். எதுவரையெனில் அவர்கள் தாருள் ஹிஜ்ராவில் அல்லது தாருள் இஸ்லாத்தில் வாழும் வரை. அவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டால் முஸ்லிம்கள் அவர்களுக்கு மேற்குறிப்பிட்டதை செய்வதற்கு கடமைப்படமாட்டார்கள். (அபு உபைத் - கிலாபல் அம்வால் பக்கம் 98, அபு யுசுப் - கிதாபல் ஹரஜ் பக்கம் 155 – 156)

தாருள் குப்ர் மற்றும் தாருள் இஸ்லாம் தொடர்பாக அறிஞர்களில் (உலமாக்கள்) கருத்துக்கள்.

இமாம் அல் கஸானி கூறினார்கள் (ஹி 587 இல் இறந்தார்கள்):
“ ஒரு நிலத்தில் இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கும்போது தாருள் குபர் தாருள் இஸ்லாமாக மாறும் என்பதில் அஹ்னாப்களுக்கு (ஹனபி மத்ஹபின் அறிஞர்கள்) மத்தியில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனினும் எமது சகோதரர்கள் தாருள் இஸ்லாம் எவ்வாறு தாருள் குப்ராக மாறும் என்பதில்தான் சிறிது கருத்து வேறுபட்டிருந்தனர். எங்களது இமார் அபு ஹனீபா(ரஹ்) கூறினார்கள். “ தாருள் இஸ்லாம் தாருள் குப்ராக மூன்று சந்தர்ப்பங்களிலேயே மாற்றமடையும். அதாவது, 1. சட்டமும், ஒழுங்கும் குப்ராக (இறை நிராகரிப்பாக) மாறும்போதும், 2. இஸ்லாமிய அரசு, குபர் அரசொன்றுடன் எல்லையைக்கொண்டிருந்தும் அது அவ்வரசுடன் எத்தகைய உடன்படிக்கையையும் கொண்டிராதபோதும், அல்லது 3. அந்த அரசில் முஸ்லிம்களுக்கோ, திம்மிகளுக்கோ( இஸ்லாமிய அரசில் வாழ்ந்துவரும் மாற்று மதத்தினர்) எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலையிலும் ஆகும். ( பதா அஸஸனாய் - பாகம் 7, பக்கம் 131)

இமாம் அர்ஷர்கஸி ( ஹி 483 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ தார் (நிலம்) தாருள் முஸ்லிமீனாக எப்போது மாறும் எனில் அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலாதிக்கம் செலுத்தும்போது ( அல்லது வெளிரங்கமாக இருக்கும்போது). (ஷர்கஸி - ஸரஹ் சீறா அல் கபீர் - பாகம் 5, பக்கம் 2197)

காதி அபு யஃலா (ஹி 458 இல் இறந்தார்கள்) சொல்கிறார்கள்.
“ எந்த நாட்டிலாவது இஸ்லாமிய சட்டமல்லாத குப்ர் சட்டமே காணப்படுமானால் அது தாருள் குப்ராகும். ( அல் முஃதமத் அல் உசூலுத்தீன் பக்கம் 276)

இப்னு கையூம் (ஹி 751 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ பெரும்பான்மையான உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் - முஸ்லிம்கள் சென்று குடியேறி அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கியிருக்கும்போது அந்நிலம் தாருள் இஸ்லாம் என்று. அந்நிலம் இஸ்லாமிய நிலத்திற்கு (அரசுக்கு ) மிகவும் அருமையில் அமைந்திருந்தாலும்கூட அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கியிருக்கவில்லை என்றால் அது தாருள் இஸ்லாம் ஆகாது. தாயிப் மக்காவுக்கு(மக்கா தாருள் இஸ்லாமாக மாறிய பின்னர்) பக்கத்தில் இருந்தாலும் கூட அது வெற்றிகொள்ளப்படும்வரை அது தாருள் இஸ்லாமாகக் கருதப்படவில்லை. (இப்னு கையூம் - கிதாப் அஹ்காம் அஹ்லல் திம்மாஹ் - பாகம் 01 , பக்கம் 366)

இப்னு முப்லிஹ் (ஹி 884 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ இரண்டே இரண்டுதான் உள்ளன. தாருள் இஸ்லாம் அல்லது தாருள் குப்ர். இந்த நிலத்திலாவது இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கியிருந்தால் அது தாருள் இஸ்லாம். இந்த நிலத்திலாவது குபர்(இஸ்லாம் அல்லாத) சட்டங்கள் மேலோங்கியிருந்தால் அது தாருள் குபர். இவ்வாறு இரண்டே இரண்டு அணிகள்தான் உள்ளன. ( அல் அதாப் அல் ஷாPஆ – பாகம் 01, பக்கம் 190)

இமாம் மவர்தி ( ஹி 885 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ தாருள் ஹர்ப் என்பது தாருள் குப்ராகும். அங்கே குப்ர் சட்டங்களே மேலோங்கியிருக்கும். (அல் இன்ஸாப் - பாகம் 04, பக்கம் 122)

முஹம்மத் பின் அலி அஸ் ஸவ்கானி (ஹி 1255 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ நாங்கள் நிலம் பற்றி குறிப்பிடும்போது அது யாருடைய வார்த்தை மேலாதிக்கபெற்றிருக்கிறது என்பதைப்பொருத்ததே. ஏவல்களும் விலக்கல்களும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கின்ற நிலையிலும், இஸ்லாம் அவருக்கு வழங்கியதைத்தவிர எந்த ஒரு குப்பாரும் தனது குப்ரைக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தமுடியாததுமான நிலமே தாருள் இஸ்லாமாகும்.” (அல் சைல் ஜரார் - பாகம் 01, பக்கம் 576)

அஷ்ஷஹீத் சையித் குத்ப்(கி.பி 1966 இல் தூக்கிலிடப்பட்டார்):
தனது பி லிலாலில் குர்ஆன் – ‘குர்ஆனின் நிழலில்’ என்ற தப்ஸீரில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ இஸ்லாத்தின் பார்வையில் முழு உலகும் தாருள் இஸ்லாம், தாருள் ஹர்ப்(யுத்த பூமி) என்ற இரண்டு பிரிவுகளாகவே நோக்கப்படுகின்றது. தாருள் இஸ்லாம் என்பது ஷாPயத் மட்டுமே முழுமையாக அமுல்படுத்தப்படும் நிலமாகும். அந்நிலத்தின் குடிமக்கள் முழுவதும் முஸ்லிமாகவோ, அல்லது முஸ்லிம்களும், திம்மிகளும் கொண்ட கலவையாகவோ, அல்லது ஒரு சில முஸ்லிம்கள் மாத்திரமே அதிகாரத்தில் இருக்கும் நிலையில் ஏனைய அனைவரும் திம்மிகளா இருந்தாலும் சரியே. தாருள் ஹர்ப் என்பது குப்ர் சட்டங்கள் மேலாதிக்கம் செலுத்தும் நிலமாகும். அங்கே முழுக்குடிமக்களும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரியே. ( சையித் குத்ப் - பி லிழாலில் குர்ஆன் - பாகம் 02, பக்கம் 874)

முடிவு

மேற்கூறிய ஆதாரங்களின் பிரகாசத்தில் நோக்கும்பொழுது இன்றைய உலகில் ஒரு சாண் நிலமேலும் தாருள் இஸ்லாம் என நாம் கருத முடியாது. ஐம்பதிற்கும் மேற்பட்ட அனைத்து முஸ்லிம் நாடுகள் உட்பட ஏனைய அனைத்து நாடுகளும் தாருள் குப்ராகவே கருதப்படும். அல்லாஹ்(சுபு) வார்த்தைகள் புரக்கணிக்கப்பட்டு, இறைத்து}தரின் வழிகாட்டல்கள் உதாசீனம் செய்யப்பட்டு, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் து}க்கியெறியப்பட்டு குப்ர் மட்டும் ஆட்சி செலுத்தும் பிராந்தியங்களாகவே எமது முஸ்லிம் நிலங்கள் உருமாறிப்போயிருக்கின்றன. இதையே தீர்க்க தரிசனமாக இமாம் அஹ்மத் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
“ மக்களின் (முஸ்லிம்களின் ) விவகாரத்தை வழிநடாத்துவதற்கு ஒரு இமாம்(கலீபா) இல்லாது போகும்போது பித்னா உருவெடுக்கும்.”

இன்று எம்மை அல்குர்ஆனைக்கொண்டும், நபிவழியைக்கொண்டும் ஆட்சி செலுத்துவற்கும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பலஸ்தீன், ஈராக், காஸ்மீர் போன்ற எமது நிலங்களில் இடம்பெறும் அநியாயங்களையும் கொடுமைகளையும் கேடயமாக நின்று பாதுகாப்பதற்கும் ஒரு இஸ்லாமிய அரசோ, ஒரு இஸ்லாமியத்தலைமையோ(கலீபா) இல்லாத நிலை தொடர்கிறது.

எனவே முஹம்மத்(ஸல்) பின்பற்றிய வழிமுறையை மிக ஆழமாக விளங்கி அதன் வழித்தடத்தில் தாருள் குப்ராக விளங்கும் இப்பூமிகளை தாருள் இஸ்லாமாக மாற்றும் பாரிய அதே சமயத்தில் தவிர்க்முடியாத பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இப்பயணத்திற்காக விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் எக்கணத்திலும் மறந்து விடக்கூடாது.

முஹம்மத்(ஸல்) அறிவித்ததாக முஆத் இப்னு ஜபல் (ரழி) அறிவிக்கிறார்கள்.
"இஸ்லாத்தின் சில்லுகள் எந்நேரத்திலும் சுற்றிக்கொண்டேயிருக்கும், எனவே நீங்களும் குர்ஆனைச்சுமந்தமடி அதனுடன் சுற்றிக்கொண்டிருங்கள். நிச்சயமாக குர்ஆனும், (இஸ்லாத்தின்) அதிகாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படும். இந்நிலையில் நீங்கள் குர்ஆனை விட்டும் பிரிந்து விடாதீர்கள். உங்கள் மீது ஆட்சியாளர்கள் வருவார்கள், அவர்கள் தமக்கு அனுமதிப்பவற்றை உங்களுக்கு தடைசெய்வார்கள். அவர்களுக்கு மாறு செய்தால் அவர்கள் உங்களை கொன்று விடுவார்கள். அவர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டால் அவர்கள் உங்களை வழிதவறச்செய்வார்கள். எனவே இத்தகைய சூழலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு தூதர்(ஸல்) சொன்னார்கள். “ ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்களை பின்தொடர்தோர்கள் செய்ததைப்போன்று நீங்களும் செய்யுங்கள். அவர்கள் வால்களால் வெட்டப்பட்டார்கள், கழுமரங்களில் ஏற்றப்பட்டார்கள். அல்லாஹ்(சுபு) கட்டுப்பட்டு மரணிப்பது, அவனுக்கு மாறு செய்து வாழ்வதை விட சிறந்ததாகும். (அத்தபரானி, முஃஜம் அல் கபீர்)








Monday, January 11, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 03 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

சோஸலிசமும் அதன் விளைவான கம்யூனிஸமும், மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றி கொண்டிருக்கும் சிந்தனை என்னவெனில், இவைகள் அனைத்தும் இயற்பொருளாகும் (Matter). எனவே அனைத்துப் பொருட்களுக்கும் இயற்பொருள்தான் பிறப்பு மூலமாக இருக்கின்றது என்பதுதான். பரிணாம வளர்ச்சியின் மூலமாக இந்த இயற்பொருட்கள் பல்வேறு பொருட்களாகவும், பல்வேறு உயிரினமாகவும் பரிணமித்து இருக்கின்றன. எனவே, இந்த இயற்பொருளுக்கு (Matter). அப்பாற்பட்டதாக எதுவுமே இல்லை. ஆகையால் இந்த இயற்பொருள் அழிவில்லாதது (Eternal). அது பிரிதொன்றாலும் படைக்கப்படாமல் ஆதியிலிருந்தே இருந்து வருகின்றது. அதாவது அது தவிர்க்க இயலாதது. (Indispensible - Waajab ul Wajoodஎன்றென்றும் சுயமாகவே இருப்பது. இவ்வாறு கூறுவதன் மூலம், கம்ய10னிஸ்டுகள், இயற்பொருள் ஒரு படைப்பாளனால் படைக்கப்படவில்லை என்று மறுக்கிறார்கள். பொருட்களின் ஆன்மீக அம்சத்தை மறுப்பதோடு, ஆன்மீக விஷயங்களை அங்கீகரிப்பது மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். இதன் முடிவாக, மதம் என்பது அறிவை மயக்கும் அபின் (Opium) என்றும், மனிதர்களின் செயல் வேகத்தை பங்கப்படுத்தும் காரணி என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். புலன் அறிவின் மூலம் அறிந்து கொள்ளும் இயற்பொருளைத் தவிர வேறு ஒன்றையும் இவர்ககள் நம்புவதில்லை. மேலும் சிந்தனையை மூளையில் ஏற்படும் பொருட்களின் பிரதிபலிப்பு (Reflection) என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே, அவர்களைப் பொருத்தவரை இயற்பொருள்தான் சிந்தனைக்கும் மற்ற அனைத்துப் பொருட்களுக்கும் (மனிதன், வாழ்வு, பிரபஞ்சம்) மூலம் என்றும், இயற்பொருளின் பரிணாம வளர்ச்சியின் மூலமாகத்தான் அனைத்துப்பொருட்களும் உயிரினங்களும் தோன்றியிருக்கின்றன என்றும் எண்ணுகிறார்கள். இதனடிப்படையில் அனைத்திற்கும் ஒரு படைப்பாளன் இருப்பதை அவர்கள் மறுக்கிறார்கள். மேலும், இயற்பொருளை அழிவற்றது என்றும் கருதுகிறார்கள். இவ்வாறாக, உலக வாழ்க்கைக்கு முன்பு உள்ளதையும் அதற்கு பின்பு வரப்போவதையும் அவர்கள் மறுக்கிறார்கள். ஆகவே இந்த உலக வாழ்க்கையைத்தவிர வேறெதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய கண்ணோட்டத்தில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் (முதலாளித்துவம், கம்யூனிஸம்) மாறுபட்ட போதிலும், மனிதனின் இறுதி லட்சியத்தை அடைவதற்கு உரிய உயர்ந்த மாண்புகளை மனிதனே வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் உடன்பாடாகவே இருக்கின்றன. ஆகவே, மகிழ்ச்சி என்பது அதிகபட்சம் உடல் இன்பத்தை நுகர்வதுதான் என்பதும், மகிழ்ச்சியை அடைவதற்கு தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான் என்பதும் அவர்களுடைய கண்ணோட்டமாக இருக்கிறது. இந்த இரண்டு சித்தாந்தங்களும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் கருத்தொற்றுமை கொண்டுள்ளன. ஆகவே, மனிதன் ஒரு செயலில் மகிழ்ச்சியைக் காணும்வரை அவன் விரும்பியவாறும் அவன் எண்ணியவாறும் செயல்பட்டுக் கொள்ளலாம். ஆகவே தனிமனித நடத்தைகள் அல்லது தனிமனித சுதந்திரம் என்பது இந்த இரண்டு சித்தாந்தங்களும் புனிதப்படும் விஷயத்தின் அங்கமாகவே இருக்கிறது.
சமூகம் மற்றும் தனிமனிதன் குறித்த கண்ணோட்டத்தை பொருத்தவரை இந்த இரண்டு சித்தாந்தங்களும் வேறுபடுகின்றன. முதலாளித்துவம் என்பது சுயநலபோக்கு கொண்ட தனிமனிதனை சிலாகிக்கும் ஒரு சித்தாந்தமாகும். சமூகத்தை தனி மனிதர்களின் தொகுப்பு என்று அது கருதுகிறது. சமூகத்திற்கு அது இரண்டாம் தர முக்கியத்துவமே கொடுக்கிறது. அதே வேளையில் அதன் கவனத்தை தனிமனிதனுடைய நலனின் பக்கம் தீவிரமாக செலுத்துகிறது. ஆகவே, தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பது மிக அவசியம் என்று அது கருதுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆகவே, நம்பிக்கை சுதந்திரம் (Freedom of Belief) என்பது இந்த சித்தாந்தம் புனிதப்படுத்தும் ஒரு விஷயமாகும். சொத்துரிமை சுதந்திரமும் புனிதமாக கருதப்படுகிறது. தத்துவக் கொள்கைகள் அதனைக் கட்டுப்படுத்தாமல் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அதன் உரிமைகளுக்கு உத்திரவாதம் கொடுக்க அரசே தலையீடு செய்கிறது. இந்த கட்டுப்பாடுகளை காவல்துறை மூலமும், சட்ட அமூலாக்கங்களின் மூலமும் அரசே நடைமுறைப்படுத்துகிறது. எனினும், அரசு என்பது ஒரு சாதனமாக செயல்படுமே ஒழிய இறுதி புகழிடமாக விளங்காது. ஆகவே, அரசாட்சி அதிகாரம் இறுதியில் தனிமனிதர்களுக்கு உரியதாக இருக்குமே ஒழிய அரசுக்கு உரியதாக இருக்காது. இதனடிப்படையில் வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற அறிவார்ந்த வழிகாட்டும் சிந்தனையை முதலாளித்துவ சித்தாந்தம் ஏற்றுக் கொண்டு அதன் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆட்சிமுறை போன்ற அதன் அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துகிறது. அவற்றை பிரச்சாரம் செய்வதற்கும், உலகெங்கிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
பொது உடமை கோட்பாட்டின் அடிப்படையிலுள்ள கம்ய10னிஸமும் ஒரு சித்தாந்தம் என்ற அடிப்படையில், சமூகத்தைப் பற்றிய அதன் கண்ணோட்டம் என்னவென்றால், பல மனிதர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தில் இயற்கையோடு அவர்களுக்குள்ள தொடர்புதான் சமூகம் என்பதாகும். ஆகவே, இயல்பாகவும் தவிர்க்க இயலாமலும் மக்கள் இந்த தொடர்புக்கு பணிந்தாக வேண்டும். பல மனிதர்களைக் கொண்ட இந்த கூட்டம் மொத்தமாக முழுமையான ஒரே அமைப்பாக இருக்கும். அதாவது, மனிதன் இயற்கை மற்றும் இவை இரண்டிற்குமுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் ஒரே அமைப்பாக இருக்குமே ஒழிய ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து இருக்காது. இயற்கை என்பது மனிதனின் தனித்துவ தன்மையின் ஒரு பகுதியாகும் (Part of Man's Personality) அவன் அதை தன்னுடன் பெற்றுக் கொண்டவனாக இருக்கிறான். இயற்கை என்ற அவனது தனித்துவ தன்மையோடு அவன் இணைக்கப்படாமல் அவனால் பரிணாம வளர்ச்சி அடைய முடியாது. ஏனெனில் மனிதனுக்கு இயற்கையோடு உள்ள தொடர்பு என்பது, ஒரு பொருளுக்கும் அதன் சாரத்திற்கும் (Essence) உள்ள தொடர்பைப் போன்றது. இதனடிப்படையில், சமூகம் என்பது முழுமையான ஒரே அமைப்பாகும் (unit) . அதன் மூன்று தனிமங்களான தனி மனிதன், சமூகம், அரசு ஆகியவை மொத்தமாகவே பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும், ஆகவே மனிதன் ஒரு சக்கரத்தின் ஆரத்தைப் போல (Spokes of a wheel) இந்த சமூக கூட்டத்தின் சுழற்சியில் சுழன்றே ஆக வேண்டும். எனவே, கம்யூனிஸ்டுகள் தனி மனிதனுக்கு நம்பிக்கை சுதந்திரமோ அல்லது சொத்துரிமை சுதந்திரமோ அளிப்பதில்லை. நம்பிக்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு விஷயங்களும் அரசின் விருப்பத்தைச் சார்ந்தது. இதன் முடிவாக இந்த சித்தாந்தம் புனிதப்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக அரசு (State) திகழ்கிறது. இந்த இயற்பொருள்வாத தத்துவத்திலிருந்து(Meterialistic Philosophy) வாழ்க்கைக்குரிய வழிமுறைகள் (System) பிறக்கின்றன. மேலும், பொருளாதார வழிமுறைகள் (Economic System) இதன்; அடித்தளமாகவும் இந்த சமூகத்தின் பிரதான அம்சமாகவும் விளங்குகின்றன. இவ்வாறாக, பொது உடமை தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிஸம் ஒரு அறிவார்ந்த வழிகாட்டும் சிந்தனையை கொண்டதாக இருக்கிறது. அதுதான் இயற்பொருள்வாதம் (Meterialism) மற்றும் இயற்பொருள் பரிணாம வளர்ச்சி (Meterialistic Evolution) ஆகும். இதனடிப்படையில் அதன் ஆட்சிமுறையும் சட்டவிதிமுறைகளும் அமைக்கப்படுகின்றன. உலகெங்கிலுமுள்ள நாடுகளில் பிரச்சாரம் செய்யப்படுவதற்கும், இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.
இஸ்லாத்தை பொருத்தவரை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகிய இவற்றிற்கு அப்பால் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்றும், அவன்தான் இவைகள் அனைத்தையும் படைத்துள்ளான் என்றும் கருதுகிறது. ஆகவே இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence) மீதுள்ள நம்பிக்கையாகும். அனைத்துப் பொருட்களின் ஆன்மீக அம்சங்களையும் இந்த அகீதா நிர்ணயித்து இருக்கிறது. அதாவது மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகிய யாவும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டுள்ளன. ஆகவே, படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுடன் படைக்கப்பட்ட மனிதனுக்கு உள்ள உறவுதான் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் ஆன்மீக அம்சங்களாக இருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வதுதான் ஆன்மா (Ruh) எனப்படுகிறது.
அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கை என்பது முஹம்மது(ஸல்) அவர்களுடைய து}துவத்தோடும், அவர்கள் கொண்டு வந்த செய்தியோடும், அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையான குர்ஆனோடும் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறாக அவர்(ஸல்) கொண்டு வந்த அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை கொள்வது கடமையாகும். இதனடிப்படையில் இந்த உலக வாழ்க்கைக்கு முந்தியவனாக அல்லாஹ்(சுபு) இருக்கிறான் என்பதையயும், இந்த உலக வாழ்க்கைக்கு பிந்தியதாக உயிர்த்தெழும் நாள் இருக்கிறது என்பததையும், மனிதன் இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கிறான் என்பதையும், இந்த ஏவல் விலக்கல் கட்டளைகள்தான் உலக வாழ்க்கைக்கு முன்பு உள்ளதுடனுள்ள உறவைக் குறிக்கிறது என்பதையும் நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாமிய அகீதா கட்டாயப்படுத்துகிறது. மேலும் இதை கடைபிடிப்பது பற்றியும், கடைபிடிக்காமல் புறக்கணித்து விடுவது பற்றியும், மனிதன் கேள்வி கணக்கிற்கு உட்பட்டாக வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டிற்கும் மனிதன் உட்பட்டவனாக இருக்கிறான். கேள்வி கணக்கிற்கு உட்படும் நிலை வாழ்க்கைக்கு பின்பு இருப்பதோடு உள்ள உறவை குறிப்பதாக இருக்கிறது. ஆகவே, தவிர்க்க இயலாதவாறு, ஒரு முஸ்லிம், செயலை மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் தனக்குள்ள உறவை உணர்ந்தவனாக இருக்க வேண்டும். எவ்வாறெனில் அவன் தனது அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக மேற்கொள்ள வேண்டும். இதுதான் இயற்பொருளோடு ஆன்மாவை ஒன்று கலப்பது (Mixing Matter With Spirit) என்பதன் அர்த்தமாகும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவது ஒன்றுதான், அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்களை மேற்கொள்வதன் இறுதி இலட்சியமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்களை மேற்கொள்வதன் உடனடி நோக்கம் செயல்கள் மூலம் விளையும் உலக பயன்களாக இருக்கிறது.ஆகவே, சமூகத்தைப் பாதுகாக்கும் மிகச்சரியான நோக்கங்களை மனிதர்கள் தாங்களாகவே அமைத்துக் கொள்வதற்கு இயலாது. மாறாக அவற்றை, என்றும் மாறாமல் நிலையாக இருப்பதும், உருவாக்கங்களுக்கு உட்படாததுமான அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள்தான் ஏற்படுத்த முடியும். ஆகவே, மனித வாழ்வு, சிந்தனை, மனித கௌரவம், தனியுடமைகள், மதம், பாதுகாப்பு மற்றும் அரசு ஆகியவற்றை பாதுகாப்பதன் மூலமாக சமூகத்தை பாதுகாப்பது என்பது என்றும் மாறாததும் அபிவிருத்தியடையானதுமான மாறிலிகளாகும். இந்த நிலையான இலக்குகளை பாதுகாப்பதற்காக இஸ்லாம் கடுமையான அளவுகோள்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இலக்குகளைப் பாதுகாப்பது கடமையாகும். ஏனெனில் அவை அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் என்பதற்காகவே தவிர உலக பயன்களை கொடுக்கிறது என்பதற்காக அல்ல. இதனடிப்படையில் முஸ்லிம்களும், இஸ்லாமிய அரசும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர். ஏனெனில், அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் மனிதர்களின் அனைத்து விவகாரங்களையும் ஒழுங்குபடுத்துகின்றன. அதற்கு தக்கவாறு செயல்பாடுகளை மேற்கொள்வது ஒன்றுதான் முஸ்லிம்கள் மன அமைதி பெறுவதற்குரிய ஒரே வழியாகும். இவ்வாறாக, மகிழ்ச்சி என்பது புலன் இன்பங்களை நிறைவு செய்து கொள்வது என்பதல்ல, மாறாக, அது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதேயாகும்.
மனிதன் தனது உடல்சார்ந்த (சேதனத்)தேவைகளையும் (Organic Needs) உள்ளார்ந்த உணர்வுகளையும் (Instincts) திருப்த்திப்படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை ஒழுங்குபடுத்தியிருக்கிறது. அதாவது பசி, இனபெருக்கம், போன்ற அனைத்து தேவைகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறது. எனினும், அவற்றில் ஏதாவது ஒன்றைப் புறக்கணித்துவிட்டு மற்றொன்றை நிறைவு செய்து கொள்ளும் விதத்திலோ அல்லது ஏதாவது ஒன்றை தீவிரமாக தடுப்பதின் மூலம் மற்றொன்றை கட்டுப்படுத்தாமல் விட்டுவிடும் விதத்திலோ அல்லது அனைத்தையும் கட்டுப்பாடற்ற முறையில் விட்டுவிடும் விதத்திலோ இந்த ஒழுங்குமுறை நிறைவேற்றப்பட மாட்டாது. இதற்கு மாற்றமாக, மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதத்திலும், இதமான முறையிலும், மிகத் துல்லியமான வழிமுறையின் மூலம் அவற்றை நிறைவு செய்யும்படியும், உள்ளார்ந்த உணர்வுகளின் கட்டுப்பாடற்ற தன்மையின் காரணமாக மனிதன் மிருக நிலைக்கு தாழ்ந்து விடாமல் தடுக்கும் விதத்திலும், அவை அனைத்தையும் இஸ்லாம் ஒருங்கிணைக்கின்றது.
உடல்சார்ந்த தேவை மற்றும் உள்ளார்ந்த உணர்வுகள் ஆகியவற்றை நிறைவு செய்து கொள்ளும் வழிமுறைகளை நிலைநிறுத்துவதற்கு ஏதுவாக சமூகத்தை ஒரு பகுக்க முடியாத முழு அமைப்பாகவும், ஒவ்வொரு தனிமனிதனையும் பிரிக்க முடியாத சமூகத்தின் அங்கமாகவும் இஸ்லாம் கருதுகிறது. எனினும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் சமூகம் என்ற சக்கரத்தின் ஆரமாக தனிமனிதர் கருதப்பட மாட்டார். மாறாக, உடலில் கைகள் ஒரு பகுதியாக இருப்பதைப் போல முழுமையான அமைப்பின் ஒரு பகுதியாகவே அவர் கருதப்படுவார். ஆகவே, சமூகத்தின் ஒரு பகுதியான நபரின் மீது இஸ்லாம் அக்கறை எடுத்துக் கொள்கிறது. சமூகத்தை விட்டு அவரை பிரிந்து பார்க்காது, அவரை அக்கரையோடு கவனித்துக் கொள்வதால் சமூகம் பாதுகாப்பாக இருக்கும். அதே வேளையில் இஸ்லாம் சமூகத்தின் நலனையும் பேணிப் பாதுகாக்கிறது. அதன் பகுதிகளை புறக்கணித்துவிட்டு மேலோட்டமான விதத்தில் சமூகத்தை அது கையாள்வதில்லை. மாறாக, தனிமனிதன் என்னும் பகுதிகளால் ஒன்றுபட்ட முழுமையான அமைப்பாக அதை இஸ்லாம் கையாள்கிறது. எவ்வாறெனில், சமூகத்தை பேணி பாதுகாப்பதன் விளைவாக, தனிமனிதர்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் சமூகத்தின் அங்கங்களாக இருக்கின்றனர். முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்(சுபு)வின் வரம்புகளை பேணி பாதுகாத்துக் கொள்ளும் சமூகத்தினருக்கும் அவற்றை மீறிக் கொண்டிருக்கும் சமூகத்தினருக்கும் உதாரணம் ஒரு கப்பலில் பயணம் மேற்கொள்ளும் மனிதர்களுக்கு சமமாக இருக்கிறது. சிலர் கப்பலின் மேல் தட்டிலும், சிலர் கீழ் தட்டிலும் இருக்கிறார்கள். கீழ்தட்டில் இருப்பவர்கள் தங்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு மேல் தட்டுக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் கீழ் தட்டில் இருப்பவர்கள் மேல் தட்டிற்கு செல்லும் சிரமத்தை தவிர்ப்பதற்காக, கப்பலில் துளையிட்டு நீரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இப்போது மேல் தட்டில் இருப்பவர்கள் கீழ் தட்டில் இருப்பவர்கள் செய்ய விரும்பும் காரியத்தை நிறைவேற்றுவதற்கு விட்டுவிட்டால் கப்பலிலுள்ள அனைவரும் நீரில் மூழ்கி இறக்க வேண்டியதுதான். எனினும் அவர்கள் அதை தடுத்து விட்டாலோ அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.இத்தகைய சமூகத்தைப் பற்றியதும், தனி மனிதரைப் பற்றியதுமான கண்ணோட்டம், சமூகத்தைப் பற்றி ஒரு தனித்துவமான கருத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்தின் அங்கங்களான தனி மனிதர்கள் வாழ்க்கையிலும் எண்ணத்திலும் ஒருங்கிணைக்கும் சிந்தனைகளை தங்களுக்கிடையே கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரே விதமான உணர்வுகளையே (Mashaa’ir) பகிர்ந்து கொள்பவர்களாக இருப்பார்கள். இந்த உணர்வுகள் அவர்களை ஆதிக்கம் செலுத்துவதால் அதன் வழியில் அவர்கள் செயல்படுகிறார்கள். இதற்கு மேலாக அவர்கள் அனைவரின் வாழ்க்கை விவகாரங்களையும் அறிந்து கொண்டு அதற்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரு ஒழுங்குபடுத்தும் அமைப்பும் (Life System)அவர்களிடம் இருக்க வேண்டும். ஆகவே, சமூகம் என்பது தனிமனிதர், சிந்தனை, உணர்ச்சிகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு (முறைமைகள்) ஆகியவற்றின் மொத்த தொகுப்பு ஆகும். மனிதன் தனது வாழ்க்கையில் இத்தகைய சிந்தனைகளாலும் உணர்ச்சிகளாலும் ஒழுங்குபடுத்தும் அமைப்பாலும் பிணைக்கப்பட்டவனாகவே இருக்கிறான். இவ்வாறாக, வாழ்வியலில் சிந்தனை, உணர்ச்சி, ஒழுங்குபடுத்தும் வழிமுறை (முறைமைகள்) ஆகியவற்றால் மனிதன் கட்டுப்படுத்தப்படுகிறான். ஆகவே, ஒரு முஸ்லிம் இந்த உலக வாழ்க்கையில் இஸ்லாத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு சுதந்திரம் என்பது அறவே இல்லை. ஆகவே முஸ்லிம்களை பொருத்தவரை அகீதா என்பது இஸ்லாத்தின் வரம்புகளால் கட்டுப்பட்டதாக இருக்கிறதே தவிர கட்டுப்படுத்தப்படாமல் விட்டுவிடப்படவில்லை. இதனாலேயே எவர் ஒருவர் இஸ்லாத்தை துறந்து விடுகிறாரோ அவர் பெரும் குற்றம் புரிந்தவராக கருதப்படுவார். அவர் பாவ மன்னிப்பு கோராத பட்சத்தில், பெரும் தண்டனைக்கு ஆளாக வேண்டும். இது போலவே தனிமனித விவகாரங்கள் இஸ்லாமிய ஆட்சிமுறை மூலமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. விபச்சாரம் என்பது பெரிய குற்றமாகும். எனவே அதன் பொருட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டவர் பகிரங்கமாக முறையில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்.
அல்லாஹ்(சுபு) சுறுகின்றான்:
அவர்களுக்கு நிறைவேற்றப்படும் தண்டனையை விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் பார்க்கட்டும். (அந் நூர் :2)
மதுபானம் அருந்துவது குற்றமாகையால் அதுவும் தண்டனைக்கு உரியது. அதுபோலவே மற்றவர்களுக்கு எதிராக (வரம்பு மீறி) அநீதம் புரிவது, விபச்சாரம் பற்றி அவது}று கூறுவது, கொலை செய்வது முதலிய குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கப்படும். பொருளாதார விவகாரங்களும் ஷரிஆவினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனிதர்கள் சொத்துரிமை மூலமாக சொத்துக்களை அடைந்து கொள்வதற்கு ஷரிஆ அனுமதிக்கிறது. மேலும், இந்த தனியார் சொத்துக்களின் தன்மைகள் அதை உபயோகிக்க ஷரிஆ கொடுக்கும் அனுமதியை தீர்மானிக்கும்;. முடிவாக, இந்த கட்டுப்பாடுகளை மீறுவது குற்றமாக கருதப்பட்டு வரம்பு மீறும் தன்மைகளுக்கு ஏற்றபடி குற்றத்தின் வகைகள் ஆய்வு செய்யப்படும். உதாரணமாக, திருட்டு, கொள்ளையிடுதல் ஆகியவைகளை குறிப்பிடலாம். ஆகவே, தனிமனிதனையும், சமூகத்தையும் பாதுகாக்க அரசு அவசியமான ஒன்றாகும். மேலும், சமூகத்தின் மீது ஒழுங்குபடுத்தும் வழிமுறையை பிரயோகப்படுத்துவதற்கும் அரசு தேவைப்படுகிறது. இன்னும், ஒரு சித்தாந்தத்தை, அதை பின்பற்றுகிறவர்களிடம் ஆதிக்கம் செலுத்தச்செய்வதற்கு அரசு அவசியமாக இருக்கிறது. இதனால் அதன் பாதுகாப்பு என்பது மக்களிடமிருந்தே இயல்பாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில், முழு சமூகத்தையும் கட்டுப்படுத்தவும், பாதுகாக்கவும் திறனுள்ள சித்தாந்தமாக இஸ்லாம் இருக்கிறது. அதே நேரத்தில் சட்ட விதிமுறைகளை நிறைவேற்றக் கூடியதாக அரசு திகழ்கிறது. ஆகவே, அதிகாரம் (Sultan) உம்மாவுக்குரியதாக (முஸ்லிம் சமூகம்) இருந்த போதிலும், அரசாட்சி உரிமை (இறைமை) (Sovereignty) ஷரிஆவிற்கு உரியதே தவிர அரசுக்கோ அல்லது உம்மாவிற்கோ உரியதல்ல. ஆனால் அரசாட்சி உரிமை அரசு மூலமாகவே வெளிப்படும். ஆகவே, இஸ்லாமிய சட்டங்களை தனிமனிதர்கள் பின்பற்றுவது இறையச்சத்தைச் சார்ந்திருந்தாலும் ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் வழிமுறையாக அரசு திகழ்கின்றது. எனவே, சட்ட விதிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்துவதும், இறையச்சத்தால் உந்துதல் பெற்ற விசுவாசிக்கு இஸ்லாத்துடன் இணக்கமாக இருப்பதற்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது. எனவே, இஸ்லாம் என்பது அகீதா மற்றும் அதன் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இஸ்லாமிய சித்தாந்தம் என்பது சிந்தனை (Fikrah) மற்றும் அதன் செயல்முறை(Tareeqah) ஆகியவற்றைக் கொண்டது. செயல்முறை என்பது சிந்தனையின் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் அதேசமயம் அதன் வழிமுறை (System) அதன் அகீதாவிலிருந்து பிறக்கும். அதன் கலாச்சாரம் (Hadarah) தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையாகும். இஸ்லாமிய அரசினால் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவதும், அதன் அறிவார்ந்த தலைமையை அழைப்பு பணி மூலம் உலகிற்கு எடுத்துச் செல்வதும்தான் இஸ்லாமிய அழைப்புப் பணியின் (Daw'ah) வழிமுறையாக இருக்கிறது. இதுதான் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளவும் கடைபிடிக்கவும் உள்ள அடிப்படையாகும். இஸ்லாமிய ஆட்சிமுறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சமுதாயத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இஸ்லாமிய அழைப்புப் பணியை எடுத்துச் செல்லும் வழிமுறை என்று கருதப்படுகிறது. ஏனெனில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இஸ்லாத்தை பிரயோகிப்பதுதான் அழைப்புப் பணி மேற்கொள்வதற்குரிய நடைமுறை வழியாக கருதப்படுகிறது. இந்த நடைமுறைபடுத்தும் செயல்தான் விரிந்து பரந்த இஸ்லாமிய உலகத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருந்து வந்திருக்கிறது.
தொடரும்...

Wednesday, January 6, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 02 (The Intellectual Leadership of Islam - Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

சித்தாந்தம் என்பது அல்லாஹ்(சுபு)வின் அருள்வெளிப்பாடு (Revelation) மூலம் மனிதர்களுக்கு எத்தி வைக்கும் விதத்தில் ஒரு மனித அறிவின் வாயிலாக (Human Mind) தோன்ற வேண்டும். அல்லது மதிநுட்பம் வாய்ந்த ஒரு மனித அறிவின் மூலம் வெளிப்பட வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் அருள்வெளிப்பாடு மூலமாக ஒரு மனிதரின் அறிவின் வாயிலாக வெளிப்படும் சித்தாந்தம் சரியானதாக இருக்கும். ஏனெனில் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் படைத்த படைப்பாளனான அல்லாஹ்(சுபு)விடமிருந்து அது வந்திருக்கிறது. ஆகவே, நிச்சயமாக அது மிகச்சரியான சித்தாந்தமாகவே இருக்கும். ஆனால், மனித அறிவின் மூலம் தோன்றும் சித்தாந்தம் தவறானதாகவே இருக்கும். ஏனெனில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்காததும், வரையறைக்கு (Limitation) உட்பட்டதுமான மனித அறிவிலிருந்து அது தோன்றியிருக்கிறது. மேலும் மனிதர்களின் ஒழுங்குப்படுத்தும் திறனில் பாகுபாடும் வேற்றுமைகளும், முரண்பாடுகளும், வாழ்கின்ற சூழலின் ஆதிக்கமும் நிறைந்திருக்கும். இதன் விளைவாக மனித சிந்தனையிலிருந்து பிறக்கும் சித்தாந்தத்தில் முரண்பாடுகள் நிறைந்த வழிமுறைகள் தோன்றி மனிதனின் பெரும் துன்பத்திற்கு காரணமாகிவிடும். ஆகவே, மனித அறிவில் தோன்றிய சித்தாந்தம் அடிப்படை சிந்தனையான அகீதாவிலும், அதிலிருந்து பிறக்கும் வழிமுறையிலும் அடிப்படையிலேயே தவறு உடையதாக இருக்கும்.இதன் முடிவாக, சித்தாந்தத்தின் அடித்தளம், மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனையாக (Comprehensive Idea - Al Fikrah Kulliyyah) இருக்க வேண்டும். அதனை நடைமுறை வாழ்வில் கொண்டு வரும் வழிமுறை (System) மனித வாழ்வியலின் அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் அந்த சித்தாந்தம் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்யும் விஷயமாகும். முழுமையான சிந்தனைதான் சித்தாந்த்தின் அடித்தளமாகும். ஏனெனில் அதுதான் அகீதா என்ற வழிநடத்தும் அறிவார்ந்த தலைமை சிந்தனை (Intellectual Leadership Concept) முழுமையான இந்த சிந்தனையின் அடிப்படையில் வாழ்க்கையைப் பற்றிய மனிதனின் கண்ணோட்டமும் அறிவார்ந்த வழிகாட்டுதலும் விளக்கப்படும். மேலும் எல்லாவித சிந்தனைகளும் இதன் மீது கட்டமைக்கப்டும். மனித வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குரிய அனைத்து தீர்வுகளும் இதிலிருந்தே பிறக்கும். வழிமுறை (Tareeqah - System) மிக அவசியம் என்ற உண்மை எவ்வாறு விளங்கிக் கொள்ளப்பட வேண்டுமெனில், அகீதாவிலிருந்து பிறக்கும் வழிமுறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலும், அகீதாவை பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதலும் அதை தஃவா (Daw'ah) மூலம் மனிதர்களுக்கு எத்தி வைப்பதற்குரிய வழிகாட்டுதலும் கொண்டதாக ஒரு சிந்தனை இல்லாவிடில், பின்பு அந்த சிந்தனை கற்பனையும் வெற்று அலங்காரமும் கொண்ட வறட்டு தத்துவமாகவும், எதார்த்த வாழ்க்கையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்துவதற்கு ஆற்றல் இல்லாத ஏட்டுக் கதையாகவும் ஆகிவிடும். ஆகவே அகீதா (அடிப்படை கோட்பாடு), வாழ்வியல் விவகாரங்களுக்குரிய தீர்வுகள் (Solution for life Affairs) மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் (Systems - Tareeqah) ஆகிய அனைத்தும் ஒரு சித்தாந்தம் நிலைத்து நிற்பதற்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.
எனினும், வெறும் சிந்தனையும் அதன் வழிமுறையையும் மட்டும் பெற்றிருந்தால் மட்டும் அது சரியான சித்தாந்தம் என்று ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒரு சித்தாந்தத்தின் உண்மையான மதிப்பை (Valitity) நிரூபிக்கும் விஷயம் அதனுடைய அகீதாவாகும். ஏனெனில் அகீதாதான் அறிவார்ந்த அடிப்படை சிந்தனை, அதன் மீதுதான் அனைத்து சிந்தனைகளும் கட்டமைக்கப்படுகின்றன. அதன் கண்ணோட்டங்கள் விளக்கப்படுகின்றன. அதிலிருந்துதான் அனைத்து தீர்வுகளும் அதன் வழிமுறைகளும் பிறக்கின்றன. ஆகவே, அறிவார்ந்த அடிப்படை சிந்தனை சரியானதாக இருக்கும் பட்சத்தில் சித்தாந்தமும் சரியானதாகவே இருக்கும், அதற்கு சரியான அடிப்படை இல்லாவிடில் அது தவறான சித்தாந்தமாகவே இருக்கும்.ஒரு முழுமையான சிந்தனை மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்தக்கூடியதாகவும், பகுத்தறிவின் மீது கட்டமைக்கப்பட்டதாகவும் இருந்தால், அது சரியானதாக இருக்கும். அதே வேளையில் அது மனித இயல்புக்கு முரண்பட்டதாகவும், பகுத்தறிவின் மீது கட்டமைக்கப்படாததாகவும் இருந்தால், அது தவறானதாக இருக்கும். மனிதனின் இயற்கை தன்மைக்கு பொருந்தக் கூடியதாக இருப்பது என்பதன் பொருள் என்னவெனில் அந்த அகீதா மனிதனின் இயற்கை பலவீனத்தை அறிந்து கொண்டதாகவும், அனைத்தையும் நிர்வகிக்கக்கூடிய படைப்பாளன் ஒருவனின் தேவை அவனுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது, மனிதனது சன்மார்க்க உள்உணர்வோடு (Religious Instinct) ஒத்துப் போகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அறிவின் மீது கட்டமைக்கப்படுவது என்பதன் பொருள் என்னவெனில், அந்த அகீதா இயற்பொருட்கள் - சடப்பொருட்கள் (Matter) மீதோ அல்லது சமரச பேரத்தின் வாயிலாக கிடைத்த தீர்வின் மீதோ கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடாது.
உலகில் நிலைபெற்றிருக்கும் சித்தாந்தங்களை நாம் ஆய்வு செய்தோமானால், அவை மூன்றே மூன்றுதான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அவையாவன: முதலாளித்துவம் (Capitalism) கம்யூனிஸம் (Communism) மற்றும் இஸ்லாம் (Islam) ஆகியவைகளாகும். முதல் இரண்டு சித்தாந்தங்களும் இன்று அரசுகளினால் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் இன்று எந்த அரசாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அது பல்வேறு நாடுகளில் தனி மனிதர்களால் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்த போதிலும் உலகம் முழுவதிலும் சர்வதேச அளவில் அது நிலைபெற்றிருக்கிறது.
மனித வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தின் தலையீட்டை நீக்கிவிடுவது (Secularism) என்ற அடிப்படையை முதலாளித்துவம் கொண்டிருக்கிறது. இந்த சிந்தனைதான் அதன் அடிப்படை கோட்பாடான அகீதாவாகவும் (Doctrine), அதன் வழிநடத்தும் அறிவார்ந்த தலைமை சிந்தனையாகவும் இருக்கின்றன. (Leadership Concept - Qiyaadah Fikriyyah) இந்த அறிவார்ந்த அடிப்படையின்படி வாழ்வியல் முறைமைகளை (Systems of life) மனிதன் உருவாக்குகின்றான். ஆகவே, அது கீழ்காணும் விதமான சுதந்திரங்களை மனிதனுக்கு பாதுகாத்து வழங்குவது அவசியமாகிறது. அவையாவன, நம்பிக்கை சுதந்திரம் (Freedom of belief - Hurriyat ul Aqeedah) பேச்சு சுதந்திரம் (Freedom of Expression - Hurriyat ur Ra’i) சொத்து சுதந்திரம் (Freedom of ownership - Hurriyat ul Milkiyah) மற்றும் தனிமனித சுதந்திரம் (Personal Freedom - Hurriyatush Shakhsiyyah) ஆகியவைகளாகும். சொத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த சித்தாந்தத்தின் தனித்துவ அம்சமாக முதலாளித்துவம் விளங்குகிறது. மேலும் இந்த கோட்பாட்டிலிருந்து பிறந்த தனித்தன்மையான விஷயமாகவும் இருக்கிறது. ஆகவே, இந்த சித்தாந்தத்தின் தனித்தன்மையான அம்சமான முதலாளித்துவத்தின் அடிப்படையில் அதற்கு முதலாளித்துவ சித்தாந்தம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஜனநாயக ஆட்சிமுறையைப் பொருத்தவரை அது இந்த சித்தாந்தத்துடன் இணைத்து பேசப்படுகிறது. இதனடிப்படையில், மனிதர்கள் தங்கள் வாழ்வியல் வழிமுறைகளை தாங்களே வகுத்துக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அதிகாரத்தின் பிறப்பிடமாக விளங்குகின்றார்கள். அவர்கள்தான் வாழ்வியல் வழிமுறைகளை வகுத்துக் கொடுக்கிறார்கள். தங்களை ஆட்சி செய்வதற்காக நாட்டின் ஆட்சியாளர்களை பணியில் அமர்த்துகிறார்கள். தேவைப்படும்போது ஆட்சியாளர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுகிறார்கள். விரும்பும் ஆட்சி அமைப்புகளை உருவாக்கி நிலைபடுத்துகிறார்கள். ஏனெனில், ஆட்சி செய்வது என்பது மக்கள் விரும்பும் ஆட்சி அமைப்பின்படி அவர்களை ஆட்சி செய்வதற்காக மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கம் இடையில் ஏற்படுத்தப்படும் ஒரு பணி ஒப்பந்தம்தான்.முதலாளித்துவத்தின் ஒரு அங்கமாக ஜனநாயக ஆட்சிமுறை இருந்தபோதும், அதன் பொருளாதார அமைப்புடன் ஒப்பிடும்போது அதற்கு குறைந்த அளவு முக்கியத்துவம்தான் வழங்கப்படுகிறது. இது ஏனெனில், மேற்கத்திய சமுதாயத்தில் முதலாளித்துவ பொருளாதார அமைப்புகள், அரசுகளின் மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இது எந்த அளவுக்கெனில், முதலாளித்து சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் தொழில் அதிபர்களே உண்மையான ஆட்சியாளர்களாக திறம்பட விளங்கி வருகிறார்கள். மேலும் ஜனநாயக ஆட்சிமுறை என்பது இந்த சித்தாந்தத்திற்கு மட்டும் உரியதல்ல. கம்யூனிஸ்டுகளும் அதற்கு உரிமை கொண்டாடி வருகிறார்கள். மேலும் அவர்கள் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள். ஆகவே, முதலாளித்துவ சித்தாந்தம் என்று இதனை அழைப்பது மிகவும் பொருத்தமானதுதான்.
ஐரோப்பாவிலும் ரஷியாவிலும் அரசாட்சி செய்து கொண்டிருந்த மன்னர்களும் பேரரசர்களும் வரம்பு மீறி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் தங்களின் அடாத செயல்களுக்கு கருவியாக மதத்தை பிரயோகித்த காலகட்டத்தில்தான் முதலாளித்துவ சித்தாந்தம் உண்மையில் தோன்றியது. கிருஸ்தவ மத குருமார்களை இதற்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் விளைவாக ரத்தம் சிந்தும் கடுமையான போராட்டம் உருவாகி சில தத்துவ அறிஞர்களும் சிந்தனையாளர்களும் முற்றாக மதத்தை நிராகரித்து விட்டார்கள்;. வேறு சிலர்கள் மதத்தை ஏற்றுக் கொண்டாலும், மக்களின் வாழ்வியல் விவகாரங்களில் மதம் தலையிடக்கூடாது என்று கோரினார்கள். முடிவாக, பெரும்பான்மையான அறிஞர்களும் சிந்தனையாளர்களும் குறிப்பிட்ட ஒரு சிந்தனையின் அடிப்படையில் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த சிந்தனைதான் மனிதர்களின் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரித்து வைப்பது (Secularism) என்பதாகும். இயல்பாகவே அரசாங்கத்திலிருந்து மதம் பிரிக்கப்படுவதில் இது முடிவடைந்தது. இவ்வாறாக, மதத்தை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளும் ஒரு அபிப்ராயத்தின்பால் ஒரு சமாதானம் எட்டப்பட்டது. மேலும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து மதத்தை பிரித்து வைக்கும் சிந்தனைக்குள் மட்டும் விவாதம் சுருட்டப்பட்டது. மதத்தின் பெயரால் அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கைகளில் வைத்துக் கொள்ள விரும்பிய கிருஸ்தவ குருமார்களுக்கும், மதத்தையும், மதகுருமார்களின் அதிகாரத்தையும் முற்றாக நிராகரிக்கும் தத்துவஞானிகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சமரச தீர்வாக இந்த (Compromise Solution) சிந்தனை கருதப்பட்டது.
ஆகவே, இந்த சிந்தனை மதத்தை நிராகரிக்கவும் செய்யாது, நேரடியாக அங்கீகரிக்கவும் செய்யாது, அதாவது மனிதர்களின் வாழ்வியலில் மதம் தலையிடுவதை அனுமதிக்காது, மாறாக மதத்தை வாழ்வியல் விவகாரங்களிலிருந்து பிரித்து வைக்கும். இவ்வாறு, மேற்கத்திய நாட்டவர்கள் தழுவியுள்ள அடிப்படை கோட்பாடான அகீதா என்னவென்றால், மனித வாழ்க்கையின் அடிப்படை விவகாரங்கள் அனைத்திலிருந்தும் மதத்தை பிரித்து வைப்பது என்பதுதான். இந்த அகீதாதான் மேற்கத்தியர்களின் அறிவார்ந்த அடிப்படையாக விளங்குகிறது. இதன் மீதுதான் அனைத்து சிந்தனைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் அறிவார்ந்த வழிகாட்டுதலும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் தீர்மானிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் வாழ்வியல் விவகாரங்கள் அனைத்திற்கும் தீர்வுகள் எட்டப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேற்கத்திய மக்கள் அழைப்பு விடுக்கின்ற சித்தாந்தத்தின் வழிகாட்டும் தலைமை சிந்தனையும் இதுதான்.வாழ்வியலிருந்து மதத்தை பிரித்து விடுவது என்ற சிந்தனை மறைமுகமாக மதத்தை அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதையும், உயிர்தெழும் நாளையும் (Day of Ressurrection) அது அங்கீகரிக்கிறது. ஏனெனில் இவைதான் மதம் என்ற அடிப்படையில் அதன் அடித்தளமாக இருக்கின்றன. இதை ஒப்புக்கொள்வதன் மூலம் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றியும் இவைகளுக்கு முன்பு என்ன இருந்தது, இவைகளுக்கு பிறகு என்ன இருக்கப்போகிறது ஆகியவைப்பற்றியும், இவைகளுக்கு மத்தியில் இருக்கும் தொடர்பு பற்றியும் உள்ள ஒரு சிந்தனையை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் மதம் என்ற ஒன்று இருப்பதை அது நிராகரிக்கவில்லை. மாறாக, வாழ்வியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கோரும்போது, மதம் இருப்பதை மறைமுகமாக அது உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற சிந்தனை, இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு முன்னுள்ளதற்கும், இதற்கு பின்பு வரப்போவதற்கும் மத்தியில் எந்தவித தொடர்பும் இல்லை என்ற கருத்தையும், தனிமனிதனுக்கும் படைப்பாளனுக்கும் இடையிலுள்ள ஒரு தொடர்பு மாத்திரம்தான் மதம் என்ற கருத்தையும் ஏற்படுத்துகிறது. இதனடிப்படையில் இந்த அகீதாவும் (வாழ்வியலிலிருந்து மதத்தைப் பிரித்து வைப்பது), அதன் அனைத்து எண்ணக்கருக்களும், மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழுமையான சிந்தனையை (Comprehensive Thought) உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த விளக்கங்களின் வெளிச்சத்தில் மற்ற சிந்தனைகளைப் போலவே முதலாளித்துவமும் ஒரு சித்தாந்தமாகும் எனலாம்.
தொடரும்...