Tuesday, July 29, 2008

கிலாபா ஒரே தீர்வு!

இஸ்லாமிய அரசான கிலாஃபாவானது, முஸ்தஃபா கமாலின் சீரிய முயற்சியின் மூலம்வீழ்த்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு,
இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகினை ஆட்டிப்படைத்த துருக்கி இப்பொழுது ஒரு சாதாரண பால்கன்நாடாக வீழ்ந்து விட்டது.
என "தி டைம்ஸ்" நாளிதழ், மார்ச் 1924ல் குறிப்பிட்டது. அந்த வீழ்ச்சியின் பின்பு வேறுஎந்த முயற்சியும் செய்யாமல் காத்திருந்த முஸ்லிம் உம்மா, இன்று அதன் விளைவுகளைசந்தித்து வருகிறது.
பால்கன் (Balcan)நாடுகளான போஸ்னியா, கொஸோவோ ஆகிய நாடுகளில் முஸ்லிம்பெண்கள் கொடுமைக்காளாக்கப்பட்டு இழிவுபடுத்தப்படுவதை பொறுக்க முடியாமல் மரங்களில்து}க்கில் தொங்கிய காட்சியை என்னவென்பது. விளை நிலங்களில் விதைகட்குப்பதிலாகமுஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்ட ஸெரிபரேனியாவை மறந்துவிடமுடியுமா? இவைஅனைத்தும், முஸ்லிம்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட ஐ.நா. படைகளின் நயவஞ்சகவார்த்தையில் ஏமாந்த முஸ்லிம்கட்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகும்.
பால்கன் தேசத்தை இஸ்லாமிய தேசமாக்கிய சுல்தான் முராத் அவர்களின் வழி வந்தோர்மிக அருகிலுள்ள வளைகுடாப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுதும் அவர்கள்பாராமுகமாக இருப்பது, சுல்தான் முராத் அவர்களை மட்டுமன்றி, இஸ்லாத்தையேஇழிவுபடுத்துவாகவே உள்ளது. போர்வைகளையும், உணவுப் பொட்டலங்களையும், குர்ஆனையும்அனுப்புவோர், எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களின் உயிர்களை காக்கின்ற போர்ப்படையினைகட்டிவைத்துவிட்டது ஏனோ?
பொருளாதாரத் தடையின் மூலம் ஈராக் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள்இறந்தபோதும் இவ்வுலகம் பாராமுகமாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றபோர்வையில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம்கள் கொன்றுகுவிக்கப்படும் போதும் எவரும் கேட்பாரில்லை.
இந்நிலையில், உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவருமே பாதுகாப்பற்ற ஒரு நிலையிலேயேஉள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகட்கு அவர்கள் வெகு எளிதாக இரையாவதை உணரமுடிகிறது.பாலஸ்தீன், ஈராக், போஸ்னியா, ஆப்கானிஸ்தான், செசன்யா, கொசோவோ, காஷ்மீர்,சோமாலியா, குஜராத் என உதாரணங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.முஸ்லிம்களையும் அவர்களது நம்பிக்கையான இஸ்லாமையும் கேலிக்கும் கொடுமைக்கும்ஆளாக்குகின்றனர்.
சமீபத்தில் நபிகளாரைப் பற்றிய கேலிச்சித்திரத்தை ஐரோப்பாவின்நாளிதழ்கள் வெளியிட்டது, அமெரிக்க ராணுவம் குர்ஆனை இழிவுபடுத்தியது, இதைப்போன்ற பலநிகழ்ச்சிகள். அபு க்ராயிப் சிறையில் முஸ்லிம்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற கொடுமைகள்,பிரான்சு தேசம் எடுக்கின்ற ஹிஜாப் அணிதலுக்கு எதிரான நடவடிக்கை என நாளுக்கு நாள்,இஸ்லாத்திற்கும், முஸ்லிம்கட்கும் எதிரான காழ்ப்புணர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்த நிலையிலும், இஸ்லாமிய நிலங்களை ஆட்சிசெய்கின்றோர் எவ்வித நடவடிக்கையும்எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு நாளடைவில் முஸ்லிம்களின் மனதில் ஒருவித விரக்திதோன்றியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையும் சிறிது சிறிதாக வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.இன்றைய இஸ்லாமிய உலகானது, ஒற்றுமையின்மை, பாதுகாப்பின்மை, வீழ்ச்சி போன்றவற்றில்சிக்கி, ஒரு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. உலக அரங்கில் இந்த நாடுகள் ஒருபொருட்டாக மதிக்கப்படவில்லை. எதிரிகளின் ஆதிக்கத்தில் கீழடங்கி இரண்டாம்நிலைநாடுகளாக வீழ்ந்தே கிடக்கின்றன. அதற்கும் ஒருபடி மேலாக அங்கு ஆட்சிப்பொறுப்பில்இருப்பவர்களும் எதிரிகட்கு கீழ்ப்படிந்து, இஸ்லாத்தை ஒதுக்கிவைத்து, அதனை எதிர்த்துப்போராடும் முஸ்லிம்களை கொடுமைக்குள்ளாக்குகின்றனர்.இந்தப் பரிதாப நிலையில் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் சில முக்கிய கேள்விகள்எழுவது இயற்கையே.
ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?
இஸ்லாமிய நிலங்களை ஆள்வோர் கொடுமைக்காரர்களாக இருக்கின்றனர். எந்தவிதவிசாரணையுமின்றி ஆயிரமாயிரம் முஸ்லிம்களை சிறைப்பிடிக்கக் காரணம் என்ன?இத்தகைய ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலும் முஸ்லிம் உம்மாவிடையே ஒற்றுமையை காணஇயலவில்லை. முஸ்லிம் சமுதாயமானது ஒருவித குழப்ப நிலையிலும், வலுவிழந்தும்காணப்படுகிறது. உதாரணமாக, தமது எண்ணை வளம் மூலம் எரிசக்தியையும், அதன்விளைவான பொருளாதார சக்தியையும் உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திற்கும் வழங்குகின்றவளைகுடா நாடுகள், உலக அரங்கில் இரண்டாம்பட்ச நாடுகளாகவே கருதப்படுகின்றன.கோடிக்கோடியாக வருமானம் வருகின்ற பொழுதும், சிங்கப்பூர், கொரியா போலதொழிற்மயமாக்கப்பட்ட நாடாக ஆகாதது எதனால்? இத்தனை பணமும் எங்கே செல்கிறது?பூமியிலிருந்து கிடைக்கும் வளங்கள் முஸ்லிம் உம்மாவிற்கே சொந்தம் என நபிகளார்குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம் உம்மாவின் நன்மைக்காகவே அவை செலவிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? ஏழை மக்களின் பசியைப் போக்கவோ, நாட்டைதொழிற்மயமாக்கவோ, ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கவோ, இராணுவ பலத்தை பெருக்கவோஇந்த செல்வம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்திற்கும் வளைகுடா நாடுகள் மேற்குலகிடமேகையேந்துகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முஸ்லிம் மக்கள் மீதுகுண்டுமழை பொழிந்த போதிலும் அந்த நாடுகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, ஒன்றும்செய்ய இயலாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றது. முஸ்லிம் நாடுகள் இப்படிஒற்றுமையின்றி பின்தங்கியிருப்பது எதனால்?
சூடான் நாட்டின் மக்கள் வளமும், விவசாய சக்தியும், சவூதி அரேபியாவின் பண பலமும்இணைந்து முஸ்லிம் உம்மாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு சிறந்தவிவசாயத்துறையை உருவாக்கியிருக்கவேண்டும். எகிப்திய தொழிற்துறை அறிவு நேர்த்தியும்,வளைகுடா நாடுகளின் செல்வமும் இணைந்து தொழிற்துறையில் மேற்குலகைமிஞ்சியிருக்கவேண்டும். அங்குள்ள மக்கள் வளத்தால் ஒரு சிறந்த படை உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதுபோல எத்தனையோ. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. மார்க்கம், பண்டையவரலாறு, மொழி, சிந்தனை என எல்லாவற்றிலும் ஒற்றுமை இருந்தும், இந்த முஸ்லிம் உம்மாபிளவுபட்டுநிற்பதேன். எல்லாவற்றையும் சுருக்கி ஒரே வரியில் கூறுவதென்றால்,நபிகளார் மூலம் வழிகாட்டப்பட்ட இந்த இஸ்லாமிய சமுதாயம் இன்று மிகவும் பலவீனமாக இருப்பதேன்?
முஸ்லிம்களின் பலவீனமான நிலை இயல்பானது அன்று. மேலும் நிச்சயமாக நமதுநிலைக்கு இஸ்லாம் காரணமன்று. மாறாக முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணம், நாம்இஸ்லாத்தை பின்பற்றத் தவறியதேயாகும். நாம் ஒவ்வொருவரும் தனிநபராக முஸ்லிமாகஇருந்தபோதும், மொத்தத்தில் நமது சமுதாயத்தில் இஸ்லாம் இல்லை.இன்றைய முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை. வாழ்வின்கொள்கைகள், சட்டதிட்டங்கள், சிந்தனைகள், அனைத்திலும் இஸ்லாம் அல்லாத ஒருகண்ணோட்டமே நிறைந்துள்ளது. இஸ்லாத்திற்கு விசுவாசமன்றி ஜஹிலியாவை(அறியாமை)விசுவாசிக்கிறோம். முதலாளித்துவம், மக்களாட்சி, தேசியவாதம், சுயலாபம் போன்றவைமுஸ்லிம்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. அவை முஸ்லிம்களின் மனதிலிருந்து இஸ்லாத்தைதுரத்திவிட்டன. முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் சிந்திப்பதை விட்டும் விலகிமேற்குலகின் கொள்கைகளின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
1924ல் கிலாஃபாஅரசு வீழ்ந்த பிறகு இஸ்லாமிய சட்டங்களும் இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்டன. இறைவன்கட்டளையிட்டுள்ள ஷாPஆ, வாழ்வை விட்டும் மறைந்துவிட்டது. இதுவே நமது பலவீனத்திற்கும்,பின்தங்கிய நிலைக்கும் காரணமாயிற்று.கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இஸ்லாமிய நிலங்கள், இங்கிலாந்து, பிரான்சு போன்றநாடுகளின் காலனி ஆதிக்கத்திற்குள்ளாயின. அதன் மூலம் அந்த ஐரோப்பிய நாடுகள் தங்களின்முதலாளித்துவக் கொள்கையை மெதுமெதுவாக அனைத்துத் துறைகளிலும் புகுத்தின. முடிவில்இஸ்லாமிய நிலங்கள் அனைத்தும் மேற்கத்திய முதலாளித்துவக் கொள்கையின்அடிப்படையிலேயே ஆட்சிசெய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் நாட்டின் மிக முக்கியபொறுப்புகளை வகித்த மேற்கத்தியப் பிரதிநிதிகள், நாகரிகமயமாக்கல் என்ற போர்வையில், (மீடியா) வாயிலாக, முஸ்லிம் சமுதாயத்தில், மேற்கத்திய கொள்கைகளைதிணித்தனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் காலனி ஆதிக்க நாடுகட்கு பின்னடைவுஏற்பட்டது. போருக்கான பெரும் பொருட் செலவை சமாளிக்க வேண்டி வந்தது, மேலும்,சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகள் காலனி ஏகாதிபத்யத்திற்கு கடும் எதிர்ப்புத்தெரிவிக்கலாயின. அதனால் ஆதிக்க நாடுகள் தமது காலனி நாடுகட்கு விடுதலை அளித்துஅவற்றை விட்டும் வெளியேறின.
இவ்வாறாக சுதந்திரம் பெற்ற நாடுகள் புதிய தலைமுறைஆட்சியாளர்களின் கீழ் வந்தன. அவர்கள் முந்தைய காலனி ஆதிக்க நாடுகளின்பிரதிநிதிகளாகவே செயல்பட்டனர். அதன் மூலம் காலனி ஆதிக்க நாடுகளால் தமது மறைமுகஆட்சியை தொடரமுடிந்தது.தமது நாட்டை சீர்திருத்துவதாகவும், முன்னேற்றப்பாதையில் செலுத்துவதாகவும் கூறி,இந்த ஆட்சியாளர்கள், இஸ்லாத்தை விலக்கி மற்ற அனைத்துக் கோட்பாடுகளையும்அரவணைத்துச் சென்றனர். ஆனால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது.
அதாவதுஊழலும், அடக்குமுறையும் வியாபித்தன. அந்நாடுகள் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதில்மட்டுமே வெற்றி கண்டன. அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், மேலும் மேலும்,இஸ்லாத்தின் எதிரிகளை சார்ந்திருக்கும்படியே அமைந்தன.மொத்தத்தில், அத்தகைய இஸ்லாம் அல்லாத மதச்சார்பற்ற கொள்கைகள் முஸ்லிம்களைமேற்கத்திய மற்றும் கம்யூனிஸ்ட் நாடுகளின் அடிமைகளாகவே மாற்றின.
ஆதிக்க நாடுகட்குஎதிரான சுதந்திரப் போராட்டத்தில், மக்களை ஒன்று சேர்த்து இயக்கிய ஒரு சக்திஇஸ்லாமேயாகும். இருந்தபோதிலும் சுதந்திரம் அடைந்த பின்பு, அதற்காகப் பாடுபட்டமுஸ்லிம்கள் நிராகரிக்கப்பட்டு, மதச்சார்பற்ற, காலனி ஆதிக்க நாடுகளின் கைப்பாவைகள்ஆட்சியில் அமர்ந்தனர். பாகிஸ்தான், துனிசியா, அல்ஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்தநிலையைக் காணலாம். ஆனாலும் முஸ்லிம்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.முன்னேற்றப்பாதையில் செலுத்துவதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள் தங்கள் முயற்சியில்தோல்வியுற்றதை இந்த முஸ்லிம்கள் மக்களிடைய எடுத்துரைத்தவண்ணம் உள்ளனர். இந்தமுஸ்லிம்கள் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகளை எதிர்த்துப் போராடி,முஸ்லிம் உம்மாவிற்கெதிரான சூழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையேஏற்படுத்தியவண்ணம் உள்ளனர்.
இஸ்லாம் அல்லாத பிற கொள்கைகளின் தோல்வியைக் கண்ணாரக் காண்கின்றமுஸ்லிம்கள், தமது பின்னடைவிற்கு ஒரே நிவாரணியாக இஸ்லாம் மட்டுமே இருக்கமுடியும் எனஉணரலாயினர். அதனால் கடந்த இருபதாண்டுகளில், உலகிலுள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின்பக்கம் திரும்பலாயினர். அரேபியர்கள், துருக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்பிரிக்கர்கள் எனபல்வேறு பிரிவுகளாக பிளவுண்டுகிடந்தோர், முஸ்லிம்கள் என உணர்ந்து, இஸ்லாத்தின்சட்டதிட்டங்களை கற்றறிய ஆரம்பித்தனர். அதன் விளைவாக சமூகம், நாடு மற்றும் தனிமனிதஒழுக்க நெறிகளை முறைப்படுத்த, இஸ்லாமிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒருபோராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராளிகளின் மன உறுதியும், அவர்கள் எடுத்துறைக்கும்கொள்கைகளும், அரியணைகளையே ஆட்டம்காணச் செய்தன.
அச்செய்தியானது இஸ்லாமியநிலங்களை ஆள்வோரிடையே மட்டுமன்றி, மேற்குலக அரசுகளின் மத்தியிலும் ஒரு அச்சத்தைஉண்டுபண்ணியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாத்தை மீண்டும் மலரச் செய்ய முடியும்என்ற புதிய செய்தியை, நம்பிக்கையை, அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் ஏற்படுத்தியது. நமதுபிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில்புரிந்துகொண்டு, அந்தத் தீர்வை நபிகளாரின் பாதையில் சரியானபடி செயல்படுத்த நாமும் ஒருமுக்கியப்பங்காற்ற வேண்டும் என்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.

அமானாஹ் - அமானிதம்


இது ஒரு இஸ்லாமிய அழைப்பாளன் ஆற்றிய உரையின் பிரதியாக்கம்.

“விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில நீங்கள் தீர்வு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.” ( சூரத்துல் நிஸா: 58)

அன்பான சகோதர்களே!

அமானிதம் என்பதும், அதனுடன் இணையாக வருகின்ற விடயங்களும் ஒரு முஸ்லிமை பொருத்தவரையில் இலகுவாக அல்லது கவனயீனமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு விடயமல்ல. அமானிதத்தின் எதிர்பொருள் மோசடியாகும். அல்லாஹ் இறைமறையில் அமானிதம் குறித்தும், அதற்கு செய்யப்படுகின்ற அநியாயம் குறித்தும் தெளிவுபடுத்தும்போது அமானிதத்தின் மீதான அத்துமீறல் மோசடி என தெரிவிக்கின்றான்.

“மேலும், ஏதாவது ஒரு கூட்டத்தாரிடமிருந்து துரோகத்தை நீர் பயந்தால் அதற்கு சமமாவே அவ்வுடன்படிக்கையை அவர்கள் பால் எறிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் துரோகம் செய்வோரை நேசிக்க மாட்டான். ” ( சூரத்துல் அன்பால்: 58 )

முஹம்மத் (ஸல்) அவர்கள் அமானிதம் குறித்த விடயத்தின் பாரது}ரத்தை, அதன் மீதுள்ள பொறுப்பினையும், அமானிதத்தை அலட்சியம் செய்வது நயவஞ்சகத்தனம் என விளக்குவதன் ஊடாக தெளிவுபடுத்துகிறார்கள்.
ரஸ}ல் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபு ஹ{ரைரா (றழி) அறிவிக்கும் ஹதீஸ் இமாம் புஹாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) போன்றோர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று அவன் பேசினால் பொய்யே பேசுவான். அவன் வாக்களித்தால் அதனை மீறி விடுவான். அவனிடம் அமானிதங்கள் வழங்கப்பட்டால் அதனை நிறைவேற்ற மாட்டான். அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று அழைத்துக்கொண்டாலும் சரியே.”

புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்...ரஸ}ல் (ஸல்) சொன்னார்கள்.
“எவரிடமாவது பின்வரும் நான்கு பண்புகள் காணப்படுமாயின் அவாக்ள நயவஞ்சகர்களாவார்கள். மேலும் எவரிடமாவது இந்த நான்கு பண்புகளில் ஒன்றேனும் காணப்பட்டால் அதனை அவன் கைவிடும் வரை அவனிடம் நவவஞ்சகரின் ஒரு பண்பு உள்ளது.

அவையாவன, அவன் கதைத்தால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் மீறி விடுவான், உடன்படிக்கை செய்தால் மோசடி செய்வான், தர்க்கிக்க நேரிட்டால் பிறரை அசிங்கப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வான்.”

என் அருமை சகோதர்களே!

அமானிதம் குறித்த எண்ணக்கரு அல்லாஹ் மனிதனை படைத்த காலத்திலேயே எம்மிடம் வழங்கப்பட்டுவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அல்லா ஹ்வின் அமானிதத்தை ஏற்கும்படி அல்லாஹ் வானங்களிடம் கேட்டான். அவை மறுத்து விட்டன. அல்லாஹ் பூமியிடம் கேட்டான். அதுவும் மறுத்து விட்டது. மலைகளிடம் கேட்டபோதும் அவையும் மறுத்து விட்டன. பின்னர் மனிதனிடம் அல்லாஹ் கேட்டான். அப்போது அறிவீனனான மனிதன் அல்லாஹ்வின் அமானிதத்தை ஏற்றுக்கொண்டான்.

அல்லாஹ் சூரா அஹ்ஸாப்பில் கூறுகிறான்.

“நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக ( அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.”( சூரத்துல் அஹ்ஷாப்: 72)

இந்த குர்ஆன் அத்தியாயம் எம்மீது அல்லாஹ்வின் அமானிதம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மனிதனோ விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. எனவே அல்லாஹ்விடமிருந்து நாம் பொறுப்பேற்றுள்ள இந்த அமானிதம் என்றால் என்ற? அதனை நாம் எவ்வாறு சுமக்க வேண்டும்? என்பதை தெளிவாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அல்;லாஹ் எம் மீது சுமத்திலுள்ள இந்த பாரிய அமானிதத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்னர் அமானிதங்கள் என நாம் அன்றாட வாழ்வில் கருதும் சில விடயங்களை விளங்கிக்கொள்வது முக்கியமாகும்.

இத்தகைய அமானிதங்களில் ஒரு வகைதான் ஒருவர் இரகசியமாக வைத்திருக்க விரும்புகின்ற விடயத்தை பிறருடன் கலந்துரையாடாது பாதுகாப்பதாகும்.

ரஸ}ல் (ஸல்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் அஹ்மத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

“தன்னுடைய பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒருவரது கலந்துரையாடலை எவரேனும் செவியுற நேரிட்டால், அந்த கலந்துரையாடல் இரகசியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அது ஒரு அமானிதமாகும். அந்த நபர் அதனை இரகசியமாக வைத்துக்கொள்ளும்படி வினவாவிட்டாலும் கூட.”

ஒரு முஸ்லிம் தமது கலந்துரையாடல்களை இரகசியமாக வைத்துக்கொள்ளலாம். அதனை இரகசியமாக பாதுகாக்கும்படி வேண்டலாம். அதிலுள்ள முக்கிய விடயங்களை வெளியிட வேண்டாம் என கோரலாம். அவ்வாறு செய்யப்பட்டால் அது அமானிதமாகும். அதனை மீறுவது துரோகமாகும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் தெரிவிக்கிறான்.

“இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர்.”
“அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.”

“இன்னும் அவர்கள், தங்கள் தொழுகையின் மீது பேணுதலுடையவர்கள்.”
“மேற்கூறப்பட்ட தகுதியுடைய அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்.”(சூரத்துல் மஆரிஜ்: 32-35)

அன்பான சகோதரர்களே!

இஸ்லாத்தின் ஒளியில் இந்த உலகம் வழிநடாத்தப்படாத துரதிஸ்டமான ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம். இறைவனுக்கு அஞ்சாத, அவன் எம்மீது சுமத்தியிருக்கும் பொறுப்புக்களை துதறித்தள்ளிவிட்டு செயற்படும் ஒரு சடவாத உலகில் நாம் வாழ்கிறோம். இஸ்லாத்தில் பாரது}ரமான விடயங்களாக சொல்லப்பட்டுள்ள விடயங்களை மிக இலகுவான விடயங்களாக எடுத்துக்கொண்டு மேற்குலகி;ன் கேவலாமான அளவுகோள்களை எமது அடிப்படைகளாக கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே இத்தகையதொரு உலகில் அமானிதமும், நம்பிக்கையும், சத்தியமும் செல்லாக்காசுகளாக கருதப்படுகின்றன. ஆகவே அது பற்றி அதிக அக்கறை காட்டுவது வடிகட்டபட்ட முட்டாள்தனமாக இன்றைய உலகில் கருதப்படுவது எமக்கு ஆச்சரியமளிக்கத் தேவையில்லை. இஸ்லாத்தை கொண்டு அல்லாஹ் எந்த முஸ்லிம்களை கண்ணியப்படுத்தினானோ, அந்த முஸ்லிம்களே இஸ்லாத்தை சடத்துவக் கண்ணோட்டத்துடனும், இலாபநோக்கை அடிப்படையாகக் கொண்டும் நோக்குவதும் முஸ்லிம்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள அமானிதங்களுக்கு மோசடி செய்வதற்கு காரணமாக அமைந்து விடுவது எமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

எனவே இத்தகைய கொடிய சூழலிலிருந்து அல்லாஹ்வின் அடியார்களையும், முஸ்லிம் உலகயையும் மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை நாம் மேற்கொள்வதற்கு மீண்டும் உலகில் பூரணமாக இஸ்லாத்தையும், அதனது அளவுகோள்களையும் நிலைநாட்டுவதற்காக அல்லாஹ் எம்மீது சுமத்தியுள்ள ‘இஸ்லாத்தை நிலைநாட்டுதல்’ என்ற அந்த அடிப்படை அமானிதத்தை நாம் நிறைவேற்ற விரைய வேண்டுமல்லாவா?

உங்களில் எவரிடம் இந்த உம்மத்தினை பாதுகாக்கும், அல்லது இந்த உலகில் மீண்டும் இஸ்லாத்தை நிலைநாட்டும் தைரியம் இருக்கின்றதோ, அவர்களிடம் நான் கேட்கிறேன்...

நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் வாக்குறுதியளித்துவிட்டு அதனை மீறுவது முறையாகுமா? ஓரு சகோதரரிடம் நான் உங்களை சந்திக்கிறேன் எனக்கூறிவிட்டு, அல்லது இஸ்லாமிய இயக்கம் உங்களிடம் ஒப்படைத்த பணிகளை செய்கிறேன் என வாக்குறுதியளித்துவிட்டு அதனை மீறுவது உங்களுக்கு தகுந்த காரியமா? அல்லது ஒருவரை சந்திப்பதற்காக ஒரு குறித்த நேரத்தை வாக்குறுதியளித்துவிட்டு அதற்கு மாறு செய்வது ஒரு சிறந்த தாயியின் பண்பாக அமைய முடியுமா? இவையெல்லாம் அமானிதங்கள் இல்லையா? இவை இஸ்லாத்தின் பகுதிகளில்லையா?

நாங்கள் எமது வைத்தியரிடம் நேரம் குறித்துவிட்டு, அல்லது பாPட்சைக்கு நேரம் தெரிந்த பின்பு, அல்லது ஒரு நேர்முகத்தேர்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்ட பின்பு நாம் அவற்றில் அசட்டை செய்கிறோமா? அத்தகைய நேரங்களில் தாமதிக்கிறோமா? இத்தகைய உலகாயத தேவைகள் எமக்கு எவ்வாறு பெரிய விடயங்களாக மாறிவிடுகின்றன? உலகாயத அடைவுகளிலும், எமது விருப்பத்திற்குரியகளுக்கு உதவுவதில், அவர்களை பாதுகாப்பதில் எமக்கிருக்கின்ற அக்கறை அல்லாஹ}ம், ரஸ}லும் எம்மீது சுமத்திய அமானிதங்களை, வேண்டுகோள்களை செய்வதில் ஏன் எமக்கு ஏற்படுவதில்லை?

ரஸ}ல் (ஸல்) கூறுகிறார்கள்...

“எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை.” (அஹ்மத்)
மேலும் அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி) அறிவிக்கிறார்கள்.

“உங்களிடம் நான்கு தகுதிகள் காணப்பட்டால் நீங்கள் உங்கள் வாழ்வில் எதனையும் தவறவிட்டுவிட்டேனே என கவலைப்படத்தேவையில்லை. அத்தகுதிகளாவன: அமானிதத்தை பாதுகாத்தல், உண்மையை பாதுகாத்தல், நற்பண்புகளை பேணல், நேர்மையான, து}ய்மையான உணவை உட்கொள்ளல்.” (அஹ்மத்)

சகோதரர்களே!

நாம் வாக்குறுதியளித்தால் அதனை மிகவும் கவனமாக நிறைவேற்ற வேண்டும். ஏதேனும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் அல்லது ஏதேனும் ஒரு பணி எம்மீது பொறுப்புச்சாட்டப்பட்டால் அதனை கட்டாயமாக செய்ய வேண்டும்.

ரஸ}ல் (ஸல்) அறிவிக்கிறார்கள்.

“எவரொருவரிடத்தில் உங்களுக்கு பொறுப்புக்கள் இருக்கிறதோ, அவற்றை நீங்கள் நிறைவேற்றி விடுங்கள். அந்த நபர் தனது சத்தியங்களை முறிப்பவராக இருந்தபோதிலும்.”(அஹ்மத், அபு தாவூத்)

சகோதரர்களே! எமக்குத்தெரியும்... மனிதகுலத்தின் முன்மாதிரியான எங்கள் தலைவர் ரஸ}ல் (ஸல்) அவர்கள் தான் அளித்த எந்தவொரு வாக்குறுதிகளுக்கும் துரோகமிழைத்ததில்லை.

ஹிஜ்ரத்தின் இறுதிக்கட்டத்தில் குறைஷிகளால் கொலை அச்சுறுத்தலை சந்திக்க நேரிட்ட பொழுதிலும்கூட, அலி (றழி) அவர்களிடம் தன்னை நம்பி குறைஷிகள் ஒப்படைத்திருந்த பொருட்களை மக்காவில் தங்கியிருந்து ஒப்படைத்து விடுமாறு பொறுப்புச்சாட்டி சென்றதை நாம் காண்கிறோம். தனது எதிரிகள் தன்னை கொலை செய்ய தேடிக்கொண்டிருந்த நிலையிலும் எதிரிகளிடம் தான் பெற்ற அமானிதங்களை நிறைவேற்ற துடித்த ரஸ}ல் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் மீது ஒப்படைத்த “தீனை நிலைநாட்டுதல்” என்ற விடயத்தில் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அதேபோல நபித்தோழர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை எவ்வாறு கவனமாக நிறைவேற்றினார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்...

ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள் கைபரைச்சேர்ந்த யூதர்களிடமிருந்து அவர்களது பயிர்களுக்காகவும், பழங்களுக்காகவும் வரியை பெற்று வருமாறு அப்துல்லாஹ் இப்னு ருவாஹா (றழி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது யூதர்களோ அந்த நபித்தோழரிடம் சில பரிசுப்பொருட்களை லஞ்சமாக கொடுத்து பலனடைய நினைத்தனர். அந்த லஞ்சத்தினை பெற்று வரியில் மாறுதல் செய்யுமாறு கோரினார்கள். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ருவாஹா (றழி) அதனை மறுத்து விட்டு கூறினார்கள்:“யூதர்களே! நீங்கள் தான் அல்லாஹ்வின் இடத்தில் மிகக்கேவலமான படைப்புக்கள். இருந்தாலும் உங்களின் இந்த நிலை என்னை உங்களிடம் அநீதியாக செயற்பட து}ண்டாது என்றார்கள். நீங்கள் என்னிடம் தர முயன்றதோ லஞ்சமாகும். அது தடை செய்யப்பட்டதாகும். நாங்கள் அதனை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்கள்.”இந்த சம்பவம் அப்துல்லாஹ் இப்னு ருவாஹா (றழி) அவர்கள் அமானிதத்தின் பாரது}ரத்தையும், ஒரு அரசின் பிரதிநிதி என்ற தனது பொறுப்பையும் எவ்வாறு விளங்கி வைத்திருந்தார்கள் என்பதை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

எனினும் எமது வாழ்வை எடுத்துப்பாருங்கள். எமது வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் ஏதேனும் ஒரு விடயத்திற்கு ‘ஆம்’ எனக்கூறி பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கிறோம். அந்த பொறுப்புக்கள் சாதாரணமான ஒன்றாகவோ, அல்லது பாரது}ரமானதொன்றாகவோ இருக்கலாம். உதாரணமாக நாம் ஒரு மனிதனுக்கு அல்லது அவரது கோரிக்கைக்கு உடன்பட்டுவிட்டு பின்னர் அந்த அமானிதத்தை அலட்சியம் செய்து விடுகிறோம், அல்லது அமானிதமாக ஏற்றுக்கொண்ட விடயங்களை ஒரு புறம் வைத்துவிட்டு எமது தனிப்பட்;ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அமானிதங்களை மறந்து விடுகிறோம்.

நாம் மனிதர்களிடம் ஒரு பணிக்காக நேரம் குறித்துவிட்டு பின் அந்த நேரத்தில் அதனைச்செய்யாது விடுவதன் ஊடாக அந்த அமானிதத்திற்கு மிக இலகுவாக மாறு செய்து விடுகிறோம். சில பொழுதுகளில் நாம் நேரம் தவறிவிடுவதை அந்த குறித்த நபருக்கு அறிவித்துவிடுவதைக்கூட செய்யாது விட்டுவிடுகிறோம். இத்தகைய நிலையைதான் எம்மிடம் ஒப்படைக்கப்படும் அமானிதங்கள் சந்திக்கின்றன.

அமானிதங்களை ஏற்றல்

அமானிதம் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும், அதற்கு செய்யப்படும் துரோகம் முனாபிக் தனத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையையும் ஒரு முஸ்லிம் தெளிவாக புரிந்து கொள்வானாகில், அவன் அமானிதங்களை ஏற்றுக்கொள்வதை மிகவுமே பயப்படுவான். மேலும் அதனை ஏற்றுக்கொண்டு, பின் அதனை மீறுவதால் ஏற்படும் கெடுதலுக்கும் மிகவும் அஞ்சுவான். எனினும் இதனு}டாக அமானிதம் எதனையும் ஏற்றுக்கொளக்கூடாது என சிந்திப்பது தவறாகும். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அதிகமான பொறுப்புகள் காணப்படுகின்றன. இஸ்லாமிய அகீதாவும், அல்லாஹ்வின் ஷரிஆ சட்டங்களும் அவன் மீது பல அமானிதங்களை ஒப்படைத்துள்ளன.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“நீங்கள் எல்லோரும் பொறுப்பாளர்கள். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். இமாம் ஒரு பொறுப்பாளர். அவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர். ஆவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவனின் வீடு (குடும்பம்) திற்கு பொறுப்பாளர். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தனது எஜமானனின் பொருட்கள் குறித்த பொறுப்பாளி. அது குறித்து அவன் விசாரிக்கப்படுவான். தொடர்ந்து அந்த ஸஹாபி நான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறும் சொன்னார்கள் என நினைக்கிறேன் எனக்கூறிவிட்டு சொன்னார்கள்... தகப்பனின் பணத்தின் மீது பொறுப்பாளியான ஒரு மனிதன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நீங்கள் எல்லோரும் பொறுப்பாளிகளே. உங்களுடைய பொறுப்புக்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.” (புஹாரி)
எனவே அமானிதங்கள், பொறுப்புகளை விலகிச்செல்வதிலிருந்து தவிர்ந்து அதனை எம்மால் முடிந்தவரை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும்.

தீன் ஒரு அமானிதமாகும்

அல்லாஹ்வின் து}தர்கள் மிகப்பெரிய அமானிதத்துடன் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இந்த மனிகுலத்திறகு அவர்களது இறைவன் மக்களிடமிருந்து எதனை எதிர்பார்க்கிறானோ, அதனை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டார்கள்.
இத்தகைய முக்கியமானதொரு அமானிதத்தை நிறைவேற்றுவதில் இந்த நபிமார்களே உலகில் உருவான உருவாக இருக்கின்ற அனைவரையும் விட மேலானவர்கள்.

இறுதியாக இந்த அமானிதத்தை சுமந்து வந்த ரஸ}ல் (ஸல்) அவர்கள் எம்மை விட்டு பிரிந்த பின்னர் அவர் இந்த மிகப்பெரிய அமானிதத்தை எம்மீது விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். மனிதர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய அனைத்து அமானிதங்களையும்விட இந்த அமானிதம்தான் மிகவும் பெரியது. இந்த அமானிதம் ஒரு விலை மதிக்க முடியாத அலங்காரமாகும். இது இல்லாத நிலையில், மனிதகுலம் மிருகங்களைவிட கேவலமான நிலைக்கு சென்று விடுகின்றது.

ஸ}ரா அஹ்ராவ் இன் 172ம் வசனம் கூறுகிறது...

“நபியே! உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தங்களுக்கே சாட்சியாட்சி, (அவர்களிடம்) நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று(கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் ஆம் ( நீதான் இரட்சகன், அதன்மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம், என்று அவர்கள் கூறியதை ( நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! இது ஏனென்றால், இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால்) நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்து விட்டோம் என்றும் மறுமை நாளில் நீங்கள் சொல்லாது இருப்பதற்காக.”

ஆகவே அல்லாஹ்விடத்தில் பாரிய தண்டனை பெற்றுத்தரும் இந்த அமானிதம் என்பது என்ன?

நிச்சயமாக அது சத்தியத்தை( இஸ்லாத்தை) உரைப்பதை, அல்லது எத்திவைப்பதைத்தவிர வேறோன்று இல்லை. குறிப்பாக அதனை யார் ஏற்றுக்கொண்டார்களோ, அதனை நம்பிக்கை கொண்டார்களோ, அவர்களுக்கு அதுவே அமானிதமாகும்.

அல்லாஹ் அல் மாயிதாவின் முதலாம் வசனத்தில் கூறுகிறான்.

“விசுவாசிகளே! நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை(ப் பூரணமாக) நிறைவேற்றுங்கள், (அன்றி) உங்களுக்கு, (இனி) ஒதிக்காட்டப்படுபவற்றைத்தவிர, (மற்ற ஆடு, மாடு, ஓட்டகை முதலிய) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம், வேட்டையாடலாம். எனினும் உம்ரா, ஹஜ் யாத்திரை நிமித்தம்) நீங்கள் இஹ்ராமுடைய நிலையிலிருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவதை உங்களுக்கு ஆகுமாக்கிக்கொள்ளாதவர்களாக (இருப்பது கடமையாகும்) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை (உங்களுக்கு)க் கட்டளையிடுகிறான்.” ( அல் மாயிதா: 1)

அறிஞர்கள் இந்த ஆயத் குறித்து தெரிவி;க்கின்றபோது...

அல்லாஹ் இந்த ஸ{ராவினை ஆரம்பிக்கும்போதே, விசுவாசிகளே! நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள் என ஆரம்பித்துவிட்டு உணவு குறித்;த தனது கட்டளைகளை கீழே தொடர்ந்து விபரிக்கிறான்.
அதாவது உங்களுக்கு இனி ஓதிக்காட்டப்படுபவற்றைத்தவிர, ஏனைய (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய ) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன, எனக்குறிப்பிடுகிறான்.

இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் உரைத்திருக்கும் ஷஹாதாவை அல்லாஹ் ஞாபகப்படுத்தி நாம் அவனுக்கு முழுமையாக கட்டுப்படுதல் வேண்டும் என்ற எமது அமானிதத்தை அல்லாஹ் கூறிவிட்டு தனது கட்டளைகளை விபரித்திருத்து அதற்கு கட்டுப்படும் படி விபரிக்கிறான் என்கிறார்கள்.

இந்த அமானிதத்தின் முக்கிய ஒரு பகுதிதான் இஸ்லாமிய அழைப்பு பணியும், மீண்டும் இஸ்லாத்தை இந்த மண்ணில் நிலைநாட்டுவதுமாகும்.
இந்த அமானிதம்தான் உஸ்பகிஸ்தான் சிறைச்சாலைகளிலே ஆண்களும், பெண்களுமாக நிறைந்திருக்கும், அந்த மனிதர்கள் அமானிதமாக ஏற்றது.

இந்த அமானிதம் தான் கிலாபத்தை இந்த மண்ணிலே மீண்டும் நிறுவுவதற்காக பாடுபட்டு கொடுங்கோல் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட அழைப்பாளர்கள் ஏற்றது,
இந்த அமானிதத்திற்குதான் மிக வேகமான அவதானமும், அவசரமும் தேவைப்படுகிறது.

இந்த அமானிதத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் நாம் ஒரு வைராக்கியமான முடிவுடன் ஓய்வில்லாமல் இயங்க வேண்டி இருக்கிறது.
எனினும் இந்த அமானிதம்; இன்றைய உலகில் எம்மை ஆபத்தின்பாலும் கஷ்டத்தின்பாலும் கொண்டு செல்லக்கூடியது. இருந்தாலும் நாம் முழு மனதுடன் அவற்றை ஏற்று நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

அல்லாஹ் அல் மஆரிஜ் என்ற அத்தியாயத்தில் கூறுகிறான்.

“இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும்(தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர். இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள். இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையின் மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குறிய முறைகளை பேணி) பாதுகாத்து கொள்வார்கள். அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்” ( அல் மஆரிஜ்: 32-35)

நாம் எல்லோரும் கவனமாக சிந்திக்க வேண்டிய சிலதை வினவிக்கொண்டு இந்த உரையை முடித்துக்கொள்ள நினைக்கிறேன்.
நாம் இஸ்லாத்திற்காக ஒவ்வொரு ஸஹாபிகளும், பாரிய தியாகங்களை புரிந்தார்கள் என்பதை வரலாற்றிலே படிக்கிறோம். அவர்கள் முழுமையாக நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தார்;கள். இஸ்லாத்திற்காக மிக அதிகமாக செலவளித்தார்கள்.

இவற்றையெல்லாம் நாம் வாசிக்கின்றபோது, கேற்கின்றபோது அவர்களுடைய பண்புகளில் ஒரு சிலவேணும் எம்மிடம் இருக்கிறதா என கேட்டுப்பாருங்கள்.
அவர்களிடம் இந்த தீனை நிலைநாட்டுகின்ற அமானிதத்தின் மீது இருந்த தீவிரத்தை பார்க்கும்போது எம்மிடமும் அது போன்ற தீவிரத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்க தோன்றுகிறதல்லவா?

மேலும் இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ள எமது தலைமுறையினரில் சிலரின் வரலாற்றைப்பார்க்;கும்போதும் இந்நிலை எமக்கு ஏற்படுகிறதல்லவா?

உஸ்பஹிஸ்தான் சிறைக்காவலர்கள் எமது சகோதரர் பர்ஹத் உஸ்மானோவிடம் உன்னுடைய சிறுநீரகத்தை தாக்குவோம் என பயமுறுத்தியபோது “என்னிடம் ஆயிரம் சிறுநீரகங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் நான் எனது தீனுக்காக கொடுக்க தயாராக இருக்கும் நிலையில் நீங்கள் எனது ஒரு சிறுநீரகத்தைப்பற்றிப் பேசுகிறீர்கள்” என கூறியதை கேள்விப்படும்போது, எமது தியாகங்களின் எடை என்ன என்ற வினா எம்முன் எழுகிறதல்லவா?

இப்போது வேறொரு கோணத்தில் சிந்தித்து பாருங்கள்...

எத்தகைய தியாகங்கiயும் இந்த தீனுக்காக செய்யாமலும் தீனுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கும் மக்களை பற்றி நாம் கேள்விப்படும்போது எமக்கு எத்தகைய விசனம் ஏற்படுகிறது. அவர்களில் ஒருவராக நாம் எம்மை கண்டால் எவ்வாறிருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

எனது அன்பான சகோதரர்களே!

இவ்வாறு நான் முன்னுரைத்த எதிரும், புதிருமான இரு தரப்பினரும் அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கே உரிய பிரச்சினைகளுடனும், அவர்களுக்கே வழிமுறைகளுடனும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
இதேபோல நாமும் ஒரு நாள் இந்த வரலாற்றில் ஒரு அங்கமாக மாறப்போகிறோம் என்பது பற்றி சிந்தித்து பாருங்கள்.

எமது வாழ்வும், சாதனையும், தியாகமும், பலகீனங்களும் நாளைய சமூகத்தின் படிப்பினைகளாக மாறப்போகின்றன. இன்ஷா அல்லாஹ்.

அதன்போது அந்த புதிய தலைமுறை எம்மைப்பார்த்து தாமும் எவ்வாறு இருக்க வேண்டும, அல்லது தாமும் இவர்களைப்போல் துரோகிகளாக இருந்துவிடக்கூடாது என படிப்பினை பெறுவதற்கு நாம் காரணமாக அமையப்போகிறோம். இன்ஷா அல்லாஹ்.

எமது முன்னோர்களை நாம் பார்த்து அல்லது எமது உம்மத்தில் தோன்றிய மிகச்சிறந்த மனிதர்களை பார்த்து அல்லது எமக்கு அண்மையில் ஒரு நு}ற்றாண்டுக்கு முன் தோன்றிய தியாகிகளின் தியாகளில் நாம் எந்தளவிற்கு செய்திருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்த்து எம்மை எடை போட வேண்டியிருக்கிறது.

எமது மரணத்தின் பின்பு...

அந்த மனிதர் நம்பிக்கைக்குரியவர், அவர் வீரமிக்கவர், அடிபணிவதில் முன்மாதிரியானவர், அவரது வணக்கங்களை நேர்த்தியாக நிறைவேற்றுவார், அவர் ஒரு மிகச்சிறந்த அழைப்பாளர், அவர் முழுமையானதொரு தியாகி, து}ய்மையான எண்ணத்துடன் செயற்பட்டவர், சிறந்த அஹ்லாக்குடையவர், அவரை சூழ இருந்தவர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி, அவர் சத்தியங்களை நிறைவேற்றுபவர், அவர் மீது சுமத்தப்பட்ட அமானிதங்களுக்கு மோசடி செய்யாதவர், அவர் இந்த உலகில் அல்லாஹ்வின் அமானிதமான கிலாபா ராஸிதாவை நிறுவுவதற்கு பாடுபட்டவர்...

என எதிர்கால சந்ததியினரால் அழைக்கப்பட்டால் அத்தகைய மனிதனை சார்ந்து இருப்பதை நான் ஆசைப்படுகிறேன் அவ்வாறு நான் செய்வதன் ஊடாக நான் பாதுகாப்பு பெற்று விட்டேன். எனது தாய் கௌரவம் பெற்று விட்டார், எனது சகோதரர்கள் அச்சமற்றவர்களானார்கள். அல்லாஹ்வின் தீன் இந்த உலகில் மேலோங்கும்.

யா அல்லாஹ்!

இத்தகைய மனிதனுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை அருளுவாயாக! அவனுடன் சார்ந்திருந்த எனக்கும் ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவாயாக!




Friday, July 11, 2008

கிலாஃபா எனும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவது தலையாய கடமை!

இஸ்லாமிய கிலஃபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும். அதனை நிலைநாட்டுவது கடமையாகும். இக்கடமையை நிலைநாட்டாது முடங்கிக்கிடப்பது ஹராமாகும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான ஆட்சி ஒழுங்குதான் கிலாஃபா ஆகும்;. இதன் மூலம் இஸ்லாமிய ஷாPஆ சட்டங்கள் அமுல் செய்யப்படும். இஸ்லாமிய தஆவா முழு உலகுக்கும் சுமந்து செல்லப்படும். இது முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய, இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் ஒழுங்காகும். இஸ்லாமிய ஷாPஆவைக் கொண்டு ஆளுகின்ற கலீஃபா ஒருவர் இருப்பது அவசியம் என நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

"...அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?" என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள் 'முதலாமவருக்கு உங்கள் பைஅத்(சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்' மேலும் கூறினார்கள் 'இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்'.

கிலாஃபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீண்டும் வரும் என்று செய்தி கூறிச்சென்ற ஆட்சிமுறையாகும். நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்
'பிறகு ஒரு கிலாஃபா நபியின் வழிமுறையில் தோன்றும்'.

இஸ்லாமிய கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய நீதி நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவை தொடர்பான சகல இஸ்லாமிய ஷாPஆ சட்டங்களும் நடைமுறைபடுத்தப்படும். கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஜிஹாத் போராட்டம் நடைமுறைபடுத்தப்படும். இந்த ஜிஹாத் இஸ்லாத்தை முழு உலகுக்கும் சுமந்து செல்வதற்காகவும், முஸ்லிம் நிலங்;களையும், உயிர், மானம், செல்வம் ஆகியவற்றையும் பாதுகாப்பதற்காகவும், மேலும் தமது ஆட்சியை ஏற்றுக்கொண்ட திம்மீக்களையும் (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள்) பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.

இஸ்லாமிய கிலாஃபா என்பது அல்லாஹ்(சுபு) எந்தத் தீமைகளைவிட்டும் தவிர்த்து விலகிக்கொள்ளுமாறு முஸ்லீம்களுக்கு ஏவினானோ அவற்றை தடுக்கின்ற ஆட்சியாகும். இது சமூகத்தில் காணப்படுகின்ற தீமையின் அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும். இஸ்லாமிய நன்மையை பாதுகாக்கும். சகலவிதமான வழிகேடுகள் உட்செருகல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் தடுக்கும். கிலாஃபா, சமூகத்தின் நாலா பக்கங்களிலும் ஈமானிய பண்பாடுகளையும் போற்றத்தக்க சுத்தத்தையும், ஒளியையும், தொலைத்தொடர்பு மூலமாகவும் கல்லு}ரிகள், நிறுவனங்கள் மூலமாகவும் பரப்பிவிடும். இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள்.

கிலாஃபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும். தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் து}ரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது பிரஜைகள் அனைவரும் ஒன்றே என்பதாகவே இருக்கும். குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படுகின்ற பலமான ஆதாரத்திற்கு ஏற்பவே இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படும். இது இனத்தையும் நிறத்தையும் பார்க்கின்ற ஆட்சியாக இருக்காது. அஜமியைவிட அரபிக்கு எந்த சிறப்பும் இருக்காது. கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமிருக்காது. தக்வாவைக்கொண்டே சிறப்பு கணிக்கப்படும்.

ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்;லாமிய சட்டங்கள் சகலத்தையும் நிறைவேற்றும்படியே ஏவப்பட்டுள்ளனர். இதன் கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்பதே. எனவே அவர்கள் அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
'நிச்சயமாக விசுவாசிகள் சகோதரர்களே'

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்

விசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருப்பதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஓர் உறுப்பிற்கு நோய் ஏற்பட்டாலும் ஏனைய உறுப்புகளும் உறக்கமின்மையாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்படும்.
இஸ்லாமிய கிலாஃபா என்பது சகல முஸ்லிம்களுக்குமான ஆட்சியும் தேவையுமாகும். மேலும் அவர்கள் மீது கடமையுமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பின் வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற முஸ்லிமாக இருக்கட்டும், சீனாவிலும் இந்தோனேசியாவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், லெபனானிலும் மொரோக்கோவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும் அனைவருமே இஸ்லாமிய சட்டங்கள் முழுவதையும் பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளனர். எனவே இ;ஸ்லாமிய கிலாஃபாவை நிலைநாட்டுவதும் அவர்கள் மீது கடமையாகும்.

நாம் அனைவரும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியவாதிகளால் நம்மீது திணிக்கப்பட்ட நிலையில் உருவான பல நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். எனவே மிக பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் பலமான இருப்பை ஏற்;படுத்திக்கொள்ள நாம் ஆர்வத்தோடும் முழு முயற்சியோடும் செயற்படுவது அவசியமாகும். எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக எகிப்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய கிலாஃபா நோக்கி அழைக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும். அவ்வாறே குவைத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் குவைத் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பாடுபடவேண்டும். இதைப்போன்றே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருக்கின்ற முஸ்லிம்களும் இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி அழைக்கவேண்டும், பாடுபடவேண்டும்.

இஸ்லாமிய கிலாஃபா முஸ்லிம்களை மட்டும் கவனிக்கின்ற ஓர் ஆட்சியாக இருக்காது, மாறாக முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, இ;ஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலரையும் கவனிக்கிற ஆட்சியாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலருக்கும் பரிபூரண குடியுரிமை இருக்கும். ஷாPஆ எதிர்பார்க்கின்ற கடமைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பார்கள். நீதி, சமூக விவகாரங்கள் எதிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. முஸ்லிம்களைப்போன்றே முஸ்லிம் அல்லாதோரின் உடல், மானம், உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும்.

சத்தியமும் அச்சமும் ஒன்று சேரமுடியாது என ஒரு முஸ்லிமிற்கு நன்றாகத்தெரியும். அதைப்போலவே இறைவிசுவாசமும், இறைமறுப்பும் ஒன்றுசேரமுடியாது. இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி போராடுகையில், இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கவேண்டிவரும் என்பதை முஸ்லிம் நன்கு அறிவான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களுடைய விசுவாசிகளும் அங்கீகாரத்தையோ வரவேற்பையோ முதலில் பெறவில்லை. மாறாக உருவப்பட்ட வாள்களையும் கடும் கோபப்பட்ட உள்ளங்களையுமே சந்தித்தனர். மிகப்பெரிய இஸ்லாமியப் போராட்டங்களே நிகழ்ந்தன. ஆனால் அவற்றில் இஸ்லாத்திற்கே வெற்றி கிட்டின. இதுவே நம்மை நோக்கி அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்ற சத்தியமாக இருக்கிறது.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வருவாய்

1. அன்ஃபால் மற்றும் கனாயிம்:


இவை இஸ்லாமிய அரசு போரின் மூலம் இறைநம்பிக்கையற்றோரிடமிருந்து கைப்பற்றியவையாகும். இவை பணமாகவோ ஆயுதங்களாகவோ அல்லது மற்ற பொருட்களாகவோ இருக்கலாம். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,

“(நபியே!) அன்ஃபால்(போர் முனையில் கிடைத்த வெற்றிப்பொருட்கள்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்விற்கும் அவனது து}தருக்கும் உரியதாகும். (குர்ஆன் 8:1)

அல்லாஹ் மேலும் கூறுகிறான்,


“நிச்சயமாக நீங்கள்(போர் செய்து) வெற்றிப்பொருளாக அடைந்ததெதுவாயினும் நிச்சயமாக அதில் ஐந்திலொரு பங்கு அல்லாஹ்விற்கும்,(அவனுடைய) து}தருக்கும், அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும்” (குர்ஆன் 8:41)


முந்தைய காலங்களில் போரில்கைப்பற்றியவை தடுக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் அவற்றை அல்லாஹ்(சுபு) தனது து}தர்(ஸல்) அவர்களுக்கு ஆகுமானதாக்கியிருக்கிறான். அபுஹ_ரைரா (ரழி), நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.


"உங்களுக்கு முந்தைய சமுதாயங்களுக்கு போரில் கைப்பற்றியவை தடுக்கப்பட்டதாக இருந்தன. வானத்தினின்றும் நெருப்பு வந்து அவர்களை விழுங்கிவிடும்." மேலும் அவர்கள் கூறினார்கள் “முந்தைய நபிமார்கள் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து (பொருட்கள்) எனக்கு அருளப்பட்டுள்ளன... மற்றும் போரில் கைப்பற்றியவை எனக்கு ஆகுமானதாகும்."


2. ஃபயீ(போரில் மிஞ்சியவை) :


போரோ, படையெடுப்போ எதுவுமின்றி இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றியவையாகும். (உதாரணம்: பானு நாதிரிலிருந்த யூதர்கள்). முஸ்லிம்களின் வருகையால் பயந்து பின்வாங்கியோர் விட்டுச்சென்ற சொத்துக்களும் முஸ்லிம்களின் வருகை கண்டு அஞ்சி தானே முன்வந்து கொடுத்த சொத்துக்களும் இதில் அடங்கும்.
(உதாரணம்: பதாக்கிலிருந்த யூதர்கள்).


“அவர்களிடமிருந்து அல்லாஹ் தன்னுடைய து}தருக்கு எதை மீட்டுக்கொடுத்தானோ அ(தைப் பெறுவத)ற்காக (விசுவாசிகளே!) நீங்கள் குதிரையையோ ஒட்டகத்தையோ ஓட்டவில்லை”(குர்ஆன் 59:6)


படைபலம் மூலமோ அமைதியான வழியிலோ கைப்பற்றப்பட்ட நிலங்களும், அதைத்தொடர்ந்த ஹரஜ், ஜிஸ்யா மற்றும் உசுர் ஆகியவையும் இப்பிரிவில் அடங்கும். இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

“(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன்து}தருக்காக அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை,(அவற்றில்) அல்லாஹ்விற்கும் (அவனுடைய) து}தருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்)” (குர்ஆன் 59:7)

உமர் இப்ன்-அல்-கத்தாப் மேற்கண்ட குர்ஆன் ஆயத்தைப் பின்பற்றி இராக், அஷ்-ஷாம் மற்றும் எகிப்தில் கைப்பற்றிய நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஹரஜ் விதித்தார். மேலும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் இதில் பங்கு உண்டு எனக் கூறினார்.


3. குமூஸ் :


இது போரில் கைப்பற்றியவற்றில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். அல்லாஹ் கூறுகிறான்.


“நிச்சயமாக நீங்கள்(போர் செய்து) வெற்றிப்பொருளாக அடைந்ததெதுவாயினும் நிச்சயமாக அதில் ஐந்திலொரு பங்கு அல்லாஹ்விற்கும்,(அவனுடைய) து}தருக்கும்,அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (குர்ஆன் 8:41)


ரசூலுல்லாஹ் ‘ஹ_ன்யான் யிலிருந்து திரும்பும்போது, ஒரு ஒட்டக முடியை எடுத்து கூறினார்கள்.


“போரில் மிஞ்சியவற்றில் ஐந்தில் ஒருபங்கு தவிர இந்த முடியளவுகூட எனக்கு உரியதல்ல. மேலும் அந்த ஒரு பங்கும் உங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.”


ரஸ}லுல்லாஹ்வின் காலத்தில், அந்த ஒரு பங்கு மேலும் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒரு பங்கு, அல்லாஹ் மற்றும் அவனது து}தருக்காகவும், ஒரு பங்கு இறைத்து}தரின் குடும்பத்திற்காகவும், ஒரு பங்கு ஆதரவற்றோருக்காகவும், ஒரு பங்கு ஏழைகளுக்காகவும், ஒரு பங்கு பயணிகளுக்காகவும் செலவு செய்யப்பட்டது.


4. ஹரஜ் :


இது நில வரியாகும். படைபலம் மூலமோ, அமைதியான வழியிலோ, இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.


ஹரஜ்-அல்-உன்வாஹ்: இது படைபலத்தால் இறை மறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றிய நிலத்தின் மீது விதிக்கப்படும் ஹரஜ்.(ஈராக், அல்-சாம், எகிப்து போன்ற பகுதிகளில் விதிக்கப்பட்டது ) இது குறித்து அல் குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.


“(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன்து}தருக்காக அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை,(அவற்றில்) அல்லாஹ்விற்கும் (அவனுடைய) து}தருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்) (குர்ஆன் 59:7)


உமர்-இப்ன்-அல்-கத்தாப், அவரது கால கட்டத்தில் நிலங்களை அளந்து மதிப்பீடு செய்யும் பொறுப்பை உத்மான்-இப்ன்-ஹனீஃப் வசம் ஒப்படைத்தார். அவ்வாறே செய்த உத்மான்-இப்ன்-ஹனீஃப், அந்நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஹரஜ் இனை விதித்தார். உமரும் அதை அங்கீகரித்தார். உமரின் மறைவிற்குமுன் அல்-குஃபாவின் மீது விதித்த ஹரஜ் மட்டும் 100மில்லியன்(10 கோடி) சேர்ந்ததாக குறிப்பு காணப்படுகிறது. ஒரு திர்ஹமின் மதிப்பு அக்காலத்தில் ஒரு மிஸ்கால்(4.68) தங்கத்திற்கு சமமாகும்.


ஹரஜ்-அல்-சுல்ஹ்: அமைதியான வழிகளில், பரஸ்பர ஒப்பந்தத்தின்மூலம் கையகப்படுத்திய நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.


5. ஜிஸ்யா:


முஸ்லிம் அல்லாதோரின் பாதுகாப்பிற்காக, அவர்களின் மீது அல்லாஹ்(சுபு) விதிக்கின்ற வரியாகும்.


6. பொது உடமைகள்:


இவை முன்பு குறிப்பிட்ட மூன்று வகையான பொதுச்சொத்துக்களாகும்.


7. அரசு உடமைகள்:


நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் வரியாகும்.


8. உசுர்(வழிபாட்டுத்தளங்கள் வரி) வழிபாட்டுதளங்கள் அமைந்துள்ள் நிலங்கள் மீது விதிக்கப்படும் வரியாகும்.


9. குலுல் வருவாய் :


அரசு அதிகாரிகள் பொது நல ஊழியர்கள் போன்றோரிடமிருந்து பெறப்படும் வருவாய். மேலும் சட்டத்திற்கு புரம்பான வழியில் சம்பாதித்தவற்றில் கைப்பற்றியவை, அபராதத்தொகை போன்றவையும் இப்பிரிவில் அடங்கும்.


10. பூமியிலிருந்து கிடைக்கும் தாதுக்கள், கனிமங்கள் போன்றவற்றில் ஐந்தில் ஒரு பங்கு.


11. யாருக்கும் சொந்தமல்லாத சொத்துகள்.


12. ஏமாற்றுப்பேர்வழிகள், சட்டத்திற்கு பயந்து மறைந்திருப்போரின் சொத்துக்கள்.


13. மற்றைய வரிகள்.


14. சதக்காஹ் மற்றும் ஸக்காத் வருவாய்கள்.

சமரசம் (வஸ்திய்யாஹ்) - Compromise

நவீன காலம் வரை இந்த பதப்பிரயோகம் முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருக்கவில்லை. மாறாக மேற்குலகிலிருந்தும் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும் உருவாகி வந்ததே “சமரசம்” என்ற இந்த சிந்தனை. முதலாளித்துவம் என்ற மேற்குலகின் அடிப்படைக்கொள்கை கூட சமரசத்தீர்வினு}டாக உருவானதால் அதனது சகல மட்டங்களிலும் இது பிரதிபலிக்கின்றது.

“கிறிஸ்தவ தேவாலயமும், அதனைச் சாரந்திருந்த அரசர்களும்” என்ற ஒரு தரப்பினருக்கும், மேற்கிலே அக்காலத்தில் உருவாகியிருந்த “சிந்தனையாளர்களும், தத்துவஞானிகளும்” என்ற ஒரு தரப்பினருக்குமிடையே இடம்பெற்ற போராட்டங்களை தீர்க்கவென தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்வே இந்த ‘சமரசம்’ என்ற எண்ணக்கருவாகும்.

முதற்தரப்பானது கிறிஸ்தவம் வாழ்வின் எல்லா சிக்கல்களையும் தீர்க்கக்கூடிய ஆளுமையுடன் காணப்படுகின்றது என வாதிட்டனர். அதே நேரம் மற்றைய தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளாததோடு, எல்லாவகையான பிற்போக்கு வாதங்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் கிறிஸ்தவமே காரணமாகும் என உறுதியாக கூறி வந்தது. மனிதனுடைய அறிவுத்திறன் மாத்திரமே மனிதகுலத்தை சிறந்த முறைமைக்குள் ஒழுங்குபடுத்துவதற்கும், அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்கவும் சக்திமிக்கது என்;ற புதிய கருத்தை அவர்கள் கூறலானார்கள்.

நீண்டதோர் மோதலுக்குப் பின்னர், மேற்கண்ட இரு சாராரும் தமது சிந்தனைகளை விட்டுக்கொடுக்க முன்வந்து சமரசக்கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்தனர். இந்த சமரச முயற்சியின்போது மதமானது மனிதனுக்கும் அவனது கடவுளுக்கும் இடையில் காணப்படுகின்ற ஓர் தொடர்பாக மட்டும் வரையறை செய்யப்பட்டது. அதாவது அந்த மதத்திற்கு அல்லது அதனது சட்டங்களுக்கு இந்த உலக வாழ்வின் விவகாரங்களில்; எந்த விதமான ஆதிக்கமும் இனிமேல் இருக்கலாகாது என்பதே இங்கு முக்கிய நிபந்தனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இந்த சமரசத்தின் பின்னால் மனிதன் தனது சுய அறிவினால் ஒழுங்கு படுத்தும் முறைமைகளிலேயே மக்கள் வாழவேண்டும் என்ற அடிப்படை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனு}டாக வாழ்வின் அனைத்து விவகாரங்களிலிருந்தும் மதத்தினை வேறாக்குவதற்கு அவர்கள் முடிவெடுத்தனர்.

இதுவே இன்றுவரை முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படை கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் அதனை மேற்குலகும் தனது கொள்கையாக ஏற்றுக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் ஏனைய நாடுகளை காலனித்துவம் செய்வதன் ஊடாக முதலாளித்துவக்கொள்கையை உலகில் வளர்ப்பதற்கு மேற்குலகு தயாரானது.

எனவே யாரெல்லாம் மேற்குலகின் முதலாளித்துவக்கொள்கையை ஏற்றுக்கொண்டார்களோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்டார்களோ அவர்களிடம் அனைத்து மட்டங்களிலும் ‘சமரசம்’ எண்ணக்கருவின் தாக்கம் காணப்படுகின்றது. அது அரசியல், சட்டம், சமூகவியல் என அனைத்து மட்டத்திலும் ஊடுவியுள்ளது.

பலஸ்தீன விவகாரம் இதற்கோர் நல்ல உதாரணமாகும். முஸ்லிம்கள் பலஸ்தீனை தமது பூமியாக கருதுகிறார்கள். மாறாக யூதர்களோ தமக்கு கடவுள் வாக்குறுதியளித்த புனித பூமியாக அதனை நோக்குகின்றனர். அதனு}டாக அந்த நிலமும் அதிலுள்ள அனைத்தும் தம்முடையது என அவர்கள் வாதாடுகிறார்கள்.

இந்த இரண்டு கருத்துக்களுக்கும் இடையே 1947ம் ஆண்டில் மேற்குலக முதலாளித்துவ நாடுகள், முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையே பலஸ்தீனை பிரித்து வழங்குதல் என்ற தீர்வை முன்வைத்தனர். இது இரு நாடுகளை பலஸ்தீனத்தில் உருவாக்கும் ஒரு சமரசத் தீர்வாகும். அதாவது முஸ்லிம்களுக்கு ஒரு நாடு. யூதர்களுக்கு இன்னுமொரு நாடு. இதே போன்ற தீர்வுத்திட்டங்களை காஸ்மீர், பொஸ்னியா, சைப்ரஸ் போன்ற பிராந்திரங்களுக்கான தீர்வாகவும் அநேகமான முதலாளித்துவ நாடுகள் முன்வைத்தன.

இவ்வாறாக முதலாளித்துவ நாடுகளின் அரசியலானது மோசடிகளையும், வஞ்சகத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. அவர்கள் சத்தியத்தை முழுமையாக அடைவதை இலக்காக கொள்வதில்லை. மாறாக அவர்கள் தமக்கு எது சாத்தியமானது எனக்கருதுகிறார்களோ அதனை அடைவதையே நோக்காக கொண்டுள்ளனர். எனவே அனைத்து கட்சிகளும், பிரிவினர்களும் தமது முழுமையான நோக்கத்தை, இலட்சியத்தை முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அடைய முடிவதில்லை. மாறாக இத்தரப்புகள் சமரசத்தீர்வினு}டாக உருவாகுகின்ற ஒரு தீர்வினையே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே எந்தக்கோரிக்கை நியாயமானதோ அல்லது எந்த தீர்வு சரியானதோ அவ்வாறான தீர்வு பெறப்படுவதற்கு மாறாக அந்த தீர்வு பெறப்படும்போதுள்ள சூழ்நிலைகள், தீர்வில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரிடையே யார் பலமானவர் என்ற காரணிகள் போன்றன கருத்திற்கொள்ளப்பட்டே தீர்வுகள் எட்டப்படுகின்றன. பொதுவாக பலவான், தான் விரும்பியதை அடைவதும், பலவீனன் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் உருவாவதும் இறுதியில் ஏற்படுகிறது.

இங்கு எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம்களில் சிலர் ‘சமரசம்’ என்ற இத்தகைய ஆபத்தான கொள்கையையும், அதனது தவறுகளையும், பிழையான போக்கையும் சுட்டிக்காட்டி கண்டிக்க மறுப்பதோடு, இவற்றை இஸ்லாத்தின் ஒரு பகுதியாக பார்க்க தலைப்பட்டுள்ளனர். அவர்கள் இஸ்லாமும் இத்தகைய இயல்புகளின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அளவிற்கு சென்று விடுகின்றனர்.
இஸ்லாம் ஆன்மீகத்துக்கும், சடவாதத்திற்கும் இடையிலும்;, தனிப்பட்ட வாழ்வுக்கும், கூட்டுவாழ்வுக்கும் இடையிலும், யதார்த்தவாதத்;திற்கும், இலட்சியவாதத்திற்கும் இடையிலும், படிப்படியான மாற்றத்திற்கும், சடுதியான மாற்றத்திற்கும் இடையிலும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கின்றனர். இஸ்லாத்தில் மேலதிகமான ஒன்றோ அல்லது குறைபாடோ காணப்படுவதில்லை. அதேபோல மிகைப்படுத்தலோ அல்லது புறக்கணித்தலோ காணப்படுவதும் இல்லை என இவர்கள் கூறுகிறார்கள். மேற்படி அடிப்படையை நிறுவுவதற்கு இந்த முஸ்லிம்கள் அவர்களின் மிக முக்கிய வாதமொன்றை முன்வைக்கின்றனர். அதாவது எல்லாவற்றுக்கும் இரு தீவிர நிலைகளும், ஒரு மத்திம நிலையும் காணப்படுகிறது, மத்திம நிலை எப்போதும் பாதுகாப்பான பாதை எனவும் அந்த மத்திம நிலைக்கு இரு மருங்கிலும் காணப்படும் இரு தீவிர நிலைகளும் பாதுகாப்பற்ற, பொருத்தமற்ற பாதை எனவும் முடிவுக்கு இவர்கள் வருகின்றனர். அந்த மத்திம நிலையே சக்தியின் மையமாகவும், இரு தீவிரங்களுக்குமிடையிலான சமநிலையாகவும் இவர்கள் கூறுகின்றனர். எனவே இஸ்லாத்தில் காணப்படுகின்ற இந்த மத்திம பாதையும், ‘சமரசம்’ என்ற அணுகுமுறையும் ஒத்த இயல்பைக்கொண்டுள்ளதால், இஸ்லாமும் சமரசமும் ஒன்றோடொன்று முரண்பட்டதொன்றல்ல என இவர்கள் விளக்கமளிக்கிறார்கள். எனவே இஸ்லாம், நம்பிக்கைக்கும், வணக்க வழிபாடுகளுக்கும், சட்டவாக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் மத்தியில் நடுநிலையான பாதையை வகுத்துத்தந்துள்ளது என இவர்கள் அதிகம் அதிகம் எழுதுகிறார்கள். உரையாற்றுகிறார்கள்.

எனவே இவர்கள் தமது சொந்த அறிவைக்கொண்டு அல்லது தாம் யதார்த்தம் என கருதுவதைக்கொண்டு இஸ்லாத்தின் சட்டங்களை விளங்கிக்கொண்ட பின்புதான் ஷரீஅத் ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் என்ன சொல்கிறது எனப்பார்க்கத் தலைப்படுகின்றனர். தாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு பொருத்தமாக ஏதேனும் மார்க்கச்சட்டங்கள் இருக்கின்றனவா அல்லது அந்த சட்டங்களை தமது கருத்துக்கேற்ப விளக்கமளிக்க முடியுமா என இவர்கள் ஆராய்கின்றனர். இதன் விளைவாக

“மேலும் (விசுவாசிகளே!) அவ்வாறே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், (நம் து}தர்) ரஸ}ல் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.” என்ற ஸ}ரத்துல் பகறாவினுடைய 143ம் இறை வசனத்திற்கு கீழ்கண்டவாறு விளக்கமளிக்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தினுடைய அல்லது முஸ்லிம் உம்மத்தினுடைய நடுநிலை எவ்வாறானதெனில், அங்கே மிதமானபோக்கு அதன் வழிமுறைகளிலும் (மன்ஹஜ்) முறைமைகளிலும் (Systems) பேணப்படுவதாகும். இது கிறிஸ்த்தவர்கள் மார்க்கத்தில் காட்டிய பொடுபோக்குத் தன்மைக்கும், யூதர்கள் மார்க்கத்தில் காட்டிய தீவிரத்தன்மைக்கும் இடையில் ஒரு கோட்டை வரைவதற்கு ஒத்ததாகும் என இவர்கள் நடுநிலையான சமூகம் என்பதற்கு விளக்கமளிக்கின்றனர். மேற்படி திருமறை வசனத்தில் வருகின்ற ‘வசத்’ பதத்திற்கு ‘நீதி’ விளக்கமளித்தாலும் கூட நீதி என்பதற்கு இரு முரண்பட்ட எல்லைகளுக்கு இடையில் காணப்படும் நடுநிலைமையே நீதியாகும் என தவறான அல்லது பொருத்தமல்லாத ஒரு விளக்கத்தினை அளிக்கின்றனர். இதன்மூலம் நீதி என்பது அல்லது நடுநிலைமை என்பது முரண்பாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற சமரசக்கோட்பாட்டின் விளக்கத்தை தமது விளக்கமாக முன்வைக்கின்றனர்.

எனினும் இந்த திருமறை வசனத்தை இஸ்லாதின் து}ய வடிவில் நாம் விளங்குவோமானால் அது இதற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தையே தெளிவுபடுத்துகிறது. அதாவது இஸ்லாமிய சமுதாயமானது நீதி செலுத்துகின்ற ஓர் சமுதாயமாகும். இஸ்லாத்தின் பார்வையில் நீதி செலுத்துவது என்பது சத்தியத்தை அல்லது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதாகும். இந்த இஸ்லாமிய உம்மாவானது இஸ்லாத்தை அல்லது சத்தியத்தை மற்றைய சமுதாயங்களுக்கு காவிச்செல்வதன் ஊடாக அவர்களுக்கிடையில் சத்தியத்திற்கு சான்று பகரும். இந்த ஆயத்தானது ஓர் முஸ்லிம் உம்மத்திற்கான கட்டாயம் காண்ப்பட வேண்டிய ஒரு பண்பை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருந்தாலும்கூட முஸ்லிம் உம்மத் அதனது து}தினை மற்றைய சமுதாயங்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கட்டளையாகவும் இது அமைகின்றது. இஸ்லாமிய சமுதாயமானது இதனை செய்யாதுவிட்டால்(இஸ்லாத்தை எத்திவைத்தலை) அது பெரும் பாவமான விடயமாக மாறிவிடுகின்றது. “அல்லாஹ்வின் து}தர் உங்கள் மீது சாட்சியாக இருக்கட்டும்” என திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து எப்படி ரஸ{ல்(ஸல்)அவர்கள் இஸ்லாமிய உம்மத்திற்கு சத்தியத்தில் சான்று பகர்பவராக அமைந்தார்களோ, அதேபோன்று இஸ்லாமிய உம்மாவானது மற்றைய சமுதாயங்களுக்கு சான்றுபகர்கின்ற உம்மத்தாக விளங்கவேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ரஸ}ல்(ஸல்) அவர்கள் தனது இறுதிப்பேருரையில் “இங்கு வந்திருப்போர், வராதவர்களுக்கு எத்திவைப்பீர்களாக” என்ற வேண்டுகோளினு}டாக வலியுறுத்தினார்கள்.

இத்தகைய முஸ்லிம்கள் திருக்குர்ஆனின் இன்னுமொரு வசனத்தையும் தமக்கு ஆதாரமாக கொள்வது வழக்கம்.

“இன்னும் அவர்கள் எத்தகையோர் என்றால்,செலவு செய்தால் வீண்விரயம் செய்ய மாட்டார்கள் (முற்றுமுழுதாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள்;. அவ்வாறு செலவு செய்வதானது அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்.” (அல் புர்கான: 67)

எனவே செலவு செய்வதை எடுத்துக்கொண்டால் அதற்கு இரு தீவிர தன்மைகள் உள்ளன. அவை வீண்விரயமும் கஞ்சத்தனமுமாகும் என இவர்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே இதுதான் மத்திம நிலை அல்லது நடுநிலை என இவர்கள் விளக்கமளிக்கின்றனர். எனவே செலவழிக்கும் போது ஒரு பருமட்டாக செலவழிக்க வேண்டும் என்பதாக இவர்கள் கருதுகின்றனர்.
அவர்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களில் மூன்று வகையான செலவு செய்தலை அல்லாஹ் குறிப்பிடுவதை தெளிவாக புரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர். அதாவது வீண்விரயம், கஞ்சத்தனம், மத்திமமான நிலை என்பவையே அந்த மூன்று வகைகளாகும். இஸ்லாத்தில் வீண்விரயம் என்பது குறைந்தளவிலோ அல்லது கூடிய அளவிலோ ஹராமான வழியில் செலவு செய்தலாகும். ஒரு மனிதன் ஒரு ரூபாயை செலவழித்து மது,சூது,ஊழல் போன்ற செயல்களில் ஈடுபட்டாலும்கூட அது வீண்விரயமாகவே கருதப்படும். அவ்வாறு செய்தல் ஹராமாகும். அதேபோன்று ஓரு ரூபாய் எனிலும் ஸக்காத் கொடுக்க வேண்டிய பொருளுக்கு ஸக்காத் கொடுக்காது விட்டால் அது கஞ்சத்தனமாகவே கருதப்படும். அவ்வாறு செய்வதும் இஸ்லாத்தில் ஹராமாகும்.


அதேபோன்று ஒருவரின் பொறுப்பிலுள்ளவர்களுக்கு செலவளிக்காவிட்டால் அதுவும் கஞ்சத்தனமாகும். அதுவும் ஹராமானதாகும்;. இங்கு மத்திமம் அல்லாஹ் குறிப்பிடும் நிலை என்னவெனில் ஷரிஅத்தின் அடிப்படையில் சிறியளவிலோ அல்லது பெரியளவிலோ ஹராம், ஹலாலைப் பேணி செலவு செய்தலாகும். ஆகவே ஓரு தனிப்பட்ட விருந்தினருக்காக ஓரு முழு ஓட்டகத்தினை, ஆட்டை அல்லது கோழியை அறுத்து விருந்தளிப்பது கூட நடுநிலையான செலவைத்தான் குறிக்கிறது. அவ்வாறு செய்தல் ஹாலாலாகும். ஏனெனில் அல்லாஹ்...அதற்கிடையில் (அல் புர்கான்-67) என்ற பதத்தினு}டாக வீண்விரயம், கஞ்சத்தனம், நடுநிலையாக செலவுசெய்தல் என்ற மூன்று நிலையையும் வௌ;வேறாக இங்கு குறிப்பிடுகிறான். இந்த மூன்று நிலைகளிலும் ஒன்று ஷாPஆவினால் அங்கீகரிக்கப்படுகிறது. அதுதான் நடுநிலையாக செலவு செய்தலாகும். ஏனெனில் இந்த திருமறை வசனத்தில் அல்லாஹ் “அதற்கிடையில்” எனக்குறிப்பிடுவதற்கு பதிலாக “இவை இரண்டுக்குமிடையில்” எனக்கூறிப்பிட்டு வீண்விரயம், கஞ்சத்தனம் என்ற இரண்டு எல்லைகளுக்கும் இடையில் நடுநிலையைப்பேணி செலவழிக்கும்படி அல்லாஹ் கட்டளையிடவில்லை என்பதை அவதானமாக புரிந்து கொள்ள வேண்டும்.


இஸ்லாத்தை பொருத்தவரை அங்கே மத்திம பாதை என்றோ சமரச தீர்வு என்றோ ஒன்றில்லை. மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனைப் பற்றி தீர்க்கமாக அறிந்தவன். அவன் மட்டுமே மனித வாழ்வின் விவகாரங்களை சரியாக வரையறை செய்யக்கூடியவன். இவ்விடயத்தினை வேறுயாரும் செய்ய முடியாது. மனிதகுலம் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் மத்திம பாதை, அல்லது சமரச தீர்வு என்று ஒன்றில்லை. மாறாக இஸ்லாத்தில் அல்லாஹ்

‘ஹ_தாத்’ (வரையரைகள்) என வரையறுக்கின்ற தீர்கமான தீர்வும், சரியான விளக்கமும் தெளிவும் மட்டுமே காணப்படுகின்றது. இவ்வரையறைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது


“இவை அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்கு இவற்றை அவன் தெளிவு செய்கிறான்.(அல் பகராஹ்: 230)

எனக் குறிப்பிடுகிறான்.மேலும் அல்லாஹ் சூரா அல் நிஸாவின் 14ம் வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்

“இன்னும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய து}தருக்கும் மாறு செய்து (அல்லாஹ்வின்) அவன் (ஏற்படுத்திய) வரம்புகளை மீறிவிடுகிறாரோ அவரை அவன் நரகத்தில் புகுத்தி விடுவான். அதில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.”


அல்லாஹ்வின் து}தர் முஹம்மத் (ஸல்) அவர்களை அவரது சிறிய தந்தையின் ஊடாக குறைஷித்தலைவர்கள் இஸ்லாத்திற்கு பகரமாக பணத்தையும், பதவியையும், அதிகாரத்தையும் காட்டி சமரசம் செய்யும்படி கோரியபோது இந்த மத்திமப் பாதை, சமரசத்தீர்வு என்பன து}தரின் ஆளுமையான வார்த்தைகளில் எவ்வாறு அடிபட்டு போனது என்பதை சிந்தித்து பாருங்கள்.


முஹம்மத் (ஸல்) அவர்கள் அபுதாலிப்பின் வேண்டுகோளுக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்ள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சிறிய தந்தையே... என் வலது கைகயில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் அவர்கள் கொண்டு வந்து தந்தபோதிலும், இந்த தீனை(மார்க்கத்தை) அல்லாஹ் மேலோங்கச் செய்யும் வரையில் அல்லது நான் மரணிக்கும் வரையில் கைவிடமாட்டேன்.


ரஸ_ல் (ஸல்) அவர்களிடம் பனீ ஆமீர் பின் ஸஸாஸாஹ் கோத்திரத்தார், தமது உதவியை (நுஸ்ரா) உங்களுக்கு வழங்குகிறோம்; ஆனால் அல்லாஹ்வின் து}தருக்குப் பின் எங்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும் என வினவிய அல்லாஹ்வின் து}தர் “அதிகாரம் அல்லாஹ்வுக்குரியது; அவன் எவருக்கு நாடுகின்றானோ அவருக்கு அதையளிப்பான்” கூறி அவர்களின் உதவியைப்பெற மறுத்த விடயத்தில் சமரசத்தின் ஒரு பகுதியேனும் பொதிந்துள்ளது என எவராலும் கூறமுடியுமா?
ஆகவே மத்திமபாதை, சமரசத்தீர்வு என்பன இஸ்லாத்திற்கு வெகுது}ரமான ஓரு கோட்பாடாகும். மாறாக மேற்கத்pய நாடுகளும் அவர்களிடம் மண்டியிட்டு வாழும் முஸ்லிம்களில் சிலரும் நவீனத்துவம், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை என்ற பெயரில் இஸ்லாத்தின் எல்லைக்குள் இந்த குப்ர் சிந்தனையை கொண்டு வர எத்தனிக்கின்றனர். இதனு}டாக நேர்மையான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் தெளிவான வரையறைகளை பேணி வாழ்வதிலிருந்து வழிபிறழ்ந்து செல்வதற்கு இவர்கள் எத்தனிக்கின்றனர் என்பதனை முஸ்லிம் உம்மத் அவதானத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.