Saturday, December 20, 2008

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் பகுதி 5

2.1 ஷரீஆவின் மகாஸித் (நோக்கங்கள்) பற்றிய ஒரு விளக்கம்.

ஷரீஆ, மக்களுக்கு நன்மை பயப்பதற்குரிய சட்டக் காரணி (இல்லாஹ்) உடன் தரப்பட்டு இருக்கிறது எனச் சிலர்; வாதிடுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, ஷரீஆ நாடுகின்ற நோக்கங்(மகாஸித்)களிலிருந்து ஐந்து நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன என அறிந்து கொள்ளலாம். அவையாவன: தீன் (வாழ்க்கை நெறி), உடல், உள்ளம், பரம்பரை, சொத்து ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும். இந்தக் கண்ணோட்டத்தின்படி, இந்த நோக்கங்களே அஹ்காம்(சட்டங்கள்) அனைத்துக்குமான இல்லாஹ் (காரணி) ஆக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
ஷரீஆ முழுமையாக இந்த நோக்கங்களையே நாடுகிறதென்றால், இதன் விளைவாக அந்த நோக்கங்களே சட்டங்கள் முழுமைக்கும் இல்லாஹ்(காரணி) ஆகத் திகழ்கின்றன என்றால், தனிப்பட்டச் சட்டங்களின்; நோக்கங்களாகவும், அவற்றுக்கான இல்லாஹ் வாகவும் கூட அவை இருக்க வேண்டும் என இதிலிருந்து நாம் முடிவு செய்யலாம். சட்டங்களையே இஸ்திக்ரா எனும் நுண்ணாய்வுப் பரிசீலனை செய்து பார்க்கும் போது, அவை இந்த நோக்கங்களைத்தாம் கொண்டிருக்கின்றன எனக் காட்டுவதனால், இக்கருத்து இன்னும் பலமாக நிறுவப்படுகிறது. எனவே, மூலத்தைத் கூர்ந்து ஆய்வு செய்ததன் பின்னர், மூலத்தில் அடங்கியிருக்கின்ற தெய்வீக ஞானத்திலிருந்தும், இல்லாஹ்(காரணி)களில் இருந்தும், மேலும் அந்தச் சட்டங்களின் விளைவுகளிலிருந்தும் இந்த நோக்கங்கள்தான் நாடப்படுகின்றன என்பதைக் கண்டுகொள்ளலாம். இதிலிருந்து, ஷரீஆவினால் நாடப்படுகின்ற நோக்கங்களோ அல்லது நன்மைகளோ தாம், அஹ்காமின்(சட்டங்களின்) இல்லாஹ்(காரணிகள்) ஆக விளங்குகின்றன என்ற முடிவுக்கு வரலாம்.

சட்டங்களுக்கான ஒரு காரணியை (இல்லாஹ்வை)ச், சுட்டிக் காட்டுவதற்கான ஒரு வழியாக இந்த முறையைப் பின்பற்றுபவர்கள், இந்தப் படிமுறைக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்கள் அஹ்காமுக்கு ஏன் ஓர் இல்லாஹ்வைக்; கொடுக்கின்றனர் என்றால், மகாஸிதுக்கு முரண்;பாடற்ற விதத்தில் ஒரு நன்மையை அல்லது இலாபத்தை அவை கொண்டிருக்கின்றன என்பதாற் தான். மேலும் அவர்கள், ஷரீஆ இந்த மஸ்லஹாவை அங்கீகரிப்பதோடு, அவற்றை வெளிப்படையாக ரத்துச் செய்யக்கூடிய ஒரு மூலம் இருக்கக் கூடாது அல்லது அதன் நன்மைகளை கருத்திற் கொள்வதற்கு நம்மைத் தடைசெய்வதாக அஃது இருக்கக்கூடாது என்கின்றனர்.
எனவே, அவர்கள் (மஸாலிஹ்) நன்மைகளை மூன்று வகைகளாகப் பிரித்தனர்:1. மஸ்லஹா முள்கா (ரத்துச் செய்யப்பட்ட நன்மை)2. மஸ்லஹா முஃதபரா (அங்கீகரிக்கப்பட்ட நன்மை)3. மஸ்லஹா முர்ஸலா (அறியப்படாத நன்மை)மஸ்லஹா முள்காவிலே, (மஸ்லஹாவை) நன்மையை மூலமே ரத்து செய்து விடுகின்றது. இதற்கான உதாரணம், மூலம் ஜிஹாத் செய்ய கட்டளையிட்ட போது, இஃது இயல்பாகவே மனித உயிர்களின் இழப்பைக் கொண்டதாகும். இது, உயிரைத் தீங்கு விளையாதபடி பாதுகாக்கும் நோக்கத்திற்கு அல்லது மஸ்லஹா என்ற நன்மைக்கு முரண்பாடானதாகும். ஆனால், இந்த நன்மை ரத்து செய்யப்படுகிறது@ ஏனென்றால், இங்கு மூலமே அதனை அறிவிக்கின்றது.

மஸ்லஹாவை-நன்மைகளை வெளிப்படையாக ரத்து செய்யாத அஹ்காமில்-சட்டங்களில் இருந்து உருவாகின்ற செயல்கள், மஸ்லஹா முஃதபரா என்ற இரண்டாவது வகையைச் சாரும். இதில், அவற்றின் நன்மைகள் ஷரீஆவினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறன என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக, மதுசாரம் அருந்துவதைத் தடை செய்வதற்கான நோக்கம் (அல்லது மஸ்லஹா) மூலத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது (முஃதபர்)@ ஏனென்றால் அது தடை செய்யப்பட்டிருப்பதற்கான தலீல் (ஆதாரம்) மூலத்தில் காணப்படுகிறது. ஷரீஆவின் நோக்கங்களில் ஒன்று, உள்ளத்தைப் பாதுகாப்பதாகும். எனவே அது, மதுசாரத்தைத் தடைசெய்வதற்கான நோக்கமாக (அல்லது மஸ்லஹாவாக) கொள்ளப்படுகிறது@ மதுசாரத்தைச் தடைசெய்வதற்கான இல்லாஹ்வாக (காரணியாக) குடிபோதை அமைகின்றது. ஏனெனில் அஃது உள்ளத்தைப் பாதுகாக்கின்ற நோக்கத்தை நிறைவு செய்கின்றது. இயல்பாகவே உள்ளத்தைப் போதையில் ஆழ்த்தக் கூடிய மதுசாரம் அல்லாத பொருட்களைத் தடை செய்வதற்கும் உரியதாக இந்த (இல்லாஹ்); காரணி பயன்படுத்தப்படுகிறது.

மஸாலிஹ் முர்ஸலாவைப் பொறுத்தவரையில் அது, செயலுக்கான குறிப்பிட்ட எந்த தலீலும் (ஆதாரமும்) இல்லாத ஒன்றாகும். எனவே நாம் அதன் நன்மை ரத்துச் செய்யப்பட்டதா அல்லது அங்கீகரிக்கப்பட்டதா என்பதைச் சொல்ல இயலாது. இருந்தபோதிலும், இந்த செயல் தலீல் குல்லி எனப்படும் பரந்தளவிலான ஆதாரத்தின் கீழ் வரும் ஐந்து மகாஸித்(நோக்கங்)களும் மூலங்களை இஸ்திக்ரா (பரிசீலனை) செய்வதன் மூலம் பெறப்படுவதனால், ஒரு குறிப்பிட்ட தலீல் (ஆதாரம்) இல்லாத செயல்களுக்கு, அவை (ஐந்து நோக்கங்களும்) பரந்தளவிலான ஆதாரம் (தலீல் குல்லி) ஆக விளங்கும். எனவே செயல், ஷரீஆவின் நோக்கங்களில் ஒன்றை நிறைவேற்றுமென்றால், அந்த நோக்கம் அந்த செயலின் மஸ்லஹாவாக (நன்மையாக) எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில், நோக்கங்கள் ‘இல்லால்’(இல்லாஹ்வின் பன்மைச் சொல்); எனும் காரணிகளாகக் கையாளப்படுவதினால், ஒரு செயல் நோக்கத்தை நிறைவு செய்தால், அஃது இல்லாஹ்வை நிறைவேற்றியதன் காரணமாக சட்டப் பூர்வமானதாகக் கொள்ளப்படும். இந்தக் கருத்தை முன்வைப்பவர்கள், ஸஹாபாக்கள் குர்ஆனைச் சேகரம் செய்ததை உதாரணமாகக் காட்டுகிறார்கள். இங்கு, அந்த செயலுக்கு ஒரு குறிப்பிட்ட தலீல் (ஆதாரம்) கிடையாது@ ஆனால், அந்தச் செயல் தீனை(வாழ்;க்கை நெறியை)ப் பாதுகாக்கின்ற மஸ்லஹாவை(நன்மையை) நிறைவு செய்கிறது@ எனவே அந்தச் செயல் கட்டாயக் கடமை ஒன்றாகும். இஃது ஏனென்றால், அந்தச் செயல் தீனைப் பாதுகாப்பது என்ற இல்லாஹ்வை (காரணியை) நிறைவு செய்கின்றது.

மேலே விளக்கப்பட்ட முறையை, இல்லாஹ்வை (காரணியை) அடையாளம் காண்பதற்கான வழிகளுள்(மஸ்லக்) ஒன்றாக அறிஞர்கள் சிலர் கையாண்டிருக்கின்றனர். இருந்த போதிலும், அவர்களுடைய வாதங்களை நாம் சோதித்துப் பார்த்தால், கீழக்கண்ட காரணங்களால் அவர்களின் புரிதல் பிழையானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்:

2.1.1 மகாஸித், ஷரீஆ முழுமைக்குமான நோக்கங்களேயன்றி தனிப்பட்ட அஹ்காம்களுக்கான நோக்கங்கள் அல்ல.
தனிப்பட்ட அஹ்காம்களுக்கான நோக்கங்களே, மகாஸித் (நோக்கங்கள்) ஆகும் என்ற வாதம் சரியானதன்று. இஃது ஏனென்றால் மனிதனுக்கான நன்மையே ஷரீஆவின் நோக்கமாகும். அஃது இல்லாஹ் எனப்படும் காரணிக்கு உரித்தானதன்று. உதாரணமாக, அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாக அன்றி அனுப்பவில்லை (21:107)
இங்கே அருட்கொடை என்பது, து}தை முழுமையாக வர்ணிப்பதாகும்@ அல்லது வேறு வார்த்தையில் சொல்வதென்றால், ஷரீஆ முழுவதும் மனிதனின் மஸ்லஹா அல்லது நன்மைக்காகவே வந்திருக்கிறது. இருந்தபோதிலும், தனிப்பட்ட அஹ்காம் மஸ்லஹாவுக்காக வந்திருக்கிறது எனக் கருதப்படக்கூடாது. ஏனென்றால், நன்மை அல்லது தீமையைக் கருத்திற் கொண்டு, மூலத்தில் எந்த விதமான சுட்டிக் காட்டுதலும் காணப்படவில்லை. வேறு விதமாகச் சொல்வதென்றால், நன்மை அல்லது தீமையைப் பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலேதான் அஹ்காம்கள் வந்திருக்கின்றன. எனவே, மனிதன் தனது உயிரை இழக்க நேரிட்டாலும் கூட, ஜிஹாதில் ஈடுபட்டே ஆகவேண்டும்@ தனது ஜீவனத்துக்காக உழைக்க முடியாமல் போகும் என்றிருந்தாலும் கூட, ஒரு திருடனின் கை துண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

2.1.2 மகாஸித் என்பது அஹ்காம்களின் விளைவுகளே அல்லாமல் அஹ்காம்களுக்கான (இல்லாஹ்) காரணிகளல்ல.

முன்குறிப்பிட்ட ஐந்து மகாஸித்களைப் பொறுத்தவரையில், அவை சிற்சில அஹ்காம்களின் முடிவுகளேயாகும். அவை, இந்த அஹ்காம்(சட்டங்);களின் இல்லாஹ் (காரணிகள்) அல்ல. உதாரணமாக, ஓர் இல்லாஹ்வை (காரணியை)த் தராமலே குர்ஆன் பலதாரத் திருமணத்தை அனுமதிக்கிறது. எனினும் பலதார மணத்தைப் பற்றிய சட்டத்தைப் பிரயோகிப்பதனுடைய உண்மை நிலை, சிற்சில பிரச்சினைகள் அதனால் தீர்க்கப்படுகின்றன என்பதே. எடுத்துக்காட்டாக, மனைவி குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாமல் இருப்பது அல்லது சமூகத்தில் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது போன்ற பிரச்சினைகள், பலதார மணத்தைப் பற்றிய சட்டத்தைப் பிரயோகிப்பதன் ஊடாக தீர்க்கப்பட முடியும். எனவே, பலதார மணத்தைப் பற்றிய ஹ_க்ம் (சட்டம்) சிற்சில விளைவுகளை கொண்டு வருகின்றது@ ஆனால், இவை ஹ_க்மினுடைய (சட்டத்தினுடைய) இல்லாஹ் (காரணிகள்) அல்ல. மகாஸித் (நோக்கங்கள்) எவற்றிலிருந்தெல்லாம் எடுத்துத் தரப்பட்டனவோ, அந்த மற்றெல்லா அஹ்காம்களைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
2.1.3 ஹிக்காம் (விவேகம்) சட்டகர்த்தாவினால் நாடப்படுகின்ற நோக்கங்களாகும்@ அவை அஹ்காம்களுக்கான இல்லாஹ்கள் அல்ல.

இஃது ஏனென்றால், சட்டகர்த்தாவினால் நாடப்படக்கூடிய ஒரு விளைவுதான் மஸ்லஹா-நன்மைகள் ஆகும்@ அது, சட்டத்தை உருவாக்குவதற்கான சட்டகர்த்தாவின் காரண மாகாது. அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்: “அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப் பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும.; (22:28) இங்கே கூறப்படும் நன்மைகள், ஹஜ்ஜூ பற்றிய சட்டங்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து நாடப்படக்கூடிய விளைவுகளாகும். அவை ஹஜ்ஜூ ஏன் சட்டமாக்கப்பட்டது என்பதற்கான காரணியல்ல. இல்லாத பட்சத்தில், இந்த நன்மைகள் ஏற்கனவே அடையப்பட்டிருக்கும் என்றால், ஹஜ்ஜூ தேவையற்ற ஒன்றாயிருக்கும். இஃது அபத்தமானதொன்றாகும்.

அஹ்காம்;(சட்டங்)களின் முடிவுகளும் நன்மைகளும் சட்டங்கள் இயற்றப்பட்டப் பின்னரே ஏற்படுவதால், சட்டவாக்கப் படிமுறைகளுடனும் சட்டங்கள் தெரிந்தெடுக்கப்படுவதுடனும் அவற்றுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டுவது மிகப்பொருத்தமாகும். இல்லாஹ் என்பது, சட்டவாக்கத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது மாத்திரமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால், சட்டவாக்கம் நிலை பெறுவதற்கு, இதுதான் காரணமாக அமைகிறது. எனவே ஹிக்காமும், மகாஸிதும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்ற விஷயத்தில் எத்தகைய தொடர்பும் அற்றவையாகும்.
2.1.4 ஒரு குறிப்பிட்ட தலீல் (ஆதாரம்) இல்லாத செயல்களுக்கு இல்லாஹ் ;(காரணி)களாக விளங்கக்கூடிய விதத்தில், மகாஸித்(நோக்கங்கள்), தலீல் குல்லி (முழுமையான சான்று)களாக மாட்டா.

மூலங்களைப் படித்தாய்ந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தலீல் (ஆதாரம்) இல்லாத செயல்களுக்கு, தலீல் குல்லி (பரந்தளவிலான ஆதாரம்) ஆக, மகாஸிதுகள் விளங்குகின்றன என்ற கருத்தோட்டம், ஈர் அம்சங்களினால் பிழையானதாகத் தென்படுகிறது: முதலாவதாக, மகாஸித் என்பது அஹ்காம்களின் உண்மையை நிலையை வெறுமனே விளக்குவதேயன்றி, அவை தலீல் குல்லி அல்ல. இரண்டாவதாக, தலீல் குல்லி, அஹ்காம்களின் உண்மை நிலையை விளக்குபவையல்ல@ மாறாக, அது ஒரு தனிப்பட்ட தலீலிலோ அல்லது தலீல்(சான்று)களின் தொகுதியிலோ அடங்கியிருக்கும் ஒரு விதிமுறையாகும். எனவேதான், (குழந்தைக்கு) பாலு}ட்டுவதைப் பற்றிய அல்குர்ஆன் வசனத்திலிருந்து, பாலு}ட்டுவதற்காக ஒருவரை வாடகைக்கு அமர்த்துவதற்குரிய விதிமுறை பெறப்படுகிறது. (65:6)

இது மகாஸித் ஆகமாட்டாது. இவை குறிப்பிட்ட அஹ்காம் எங்கிருந்து தெரிந்து கொள்ளப்படுகிறதோ அதன் விளைவுகளும், நோக்கங்களுமாகும். இந்த விளைவுகளும், நோக்கங்களும் ஏனைய செயல்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட முடியாது@ ஏனெனில் ஷரீஆவின் ஹ_க்ம் (சட்டம்), ஒரு தனிப்பட்ட தலீலில் இருந்தோ அல்லது தலீல்களின் தொகுதியில் இருந்தோ பெறப்படுபவையேயன்றி, அவை தனிப்பட்ட அஹ்காம்களின் விளைவுகளில் இருந்தும், நோக்கங்களிலிருந்தும் பெறப்படுபவையல்ல. மேலும், கொகைன், அபின், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் தடுக்கப்பட்டவை என்ற உண்மை, முஹம்மத்(ஸல்) அவர்களின் பின்வரும் கூற்றிலிருந்து பெறப்படுகின்றது: “போதை தரும் ஒவ்வொன்றும் கம்ர் ஆகும்@ எல்லா கம்ர்களும் ஹராமாகும்.
அவை தடுக்கப்பட்டதற்கான தலீல்-சான்று, உள்ளத்தைப் பாதுகாப்பதற்கான நோக்கமன்று. அது சில அஹ்காம்களின் விளைவு மாத்திரமே. எனவே அது தலீலாக விளங்க முடியாது.

3.0 “இஸ்லாமிய புவியியற் கொள்கையைப் பின்பற்றுதல்” - பூமி அல்லாஹ்வுக்கு சொந்தம்@ மேலும் தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனும் பழைமை வாய்ந்த சொற்றொடர்களுக்கு எந்தத் தேவையுமில்லை.

பூமி அல்லாஹ்வுக்கு சொந்தமானது@ மேலும் இஸ்லாம் அவனுடைய தீனாகும்@ தாருல் இஸ்லாம் என்பது ஒரு முஸ்லிம் தனது தீனைக் கடைப்பிடிப்பதில் எந்த ப10மியில் பாதுகாப்பு பெற்றிருக்கின்றானோ அதுவாகும் - அவன் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மையினருக்கு மத்தியில் வாழ்ந்தாலும் சரிதான்@ மேலும், தாருல் குஃப்ர் என்பது ஒரு முஸ்லிம் தனது தீனைக் கடைப்பிடிப்பதில் எந்த பூமியில் பாதுகாப்பு பெற வில்லையோ அதுவாகும் - மேலும் அது இஸ்லாமிய அகீதாவையும், கலாசாரத்தையும் ஏற்றுக்கொள்பவர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பூமியாக இருந்தாலும் சரிதான். அல் அல்வானி பின்வருமாறு கூறுகிறார்: “சில நவீன அறிஞர்களும், சில குழுவினரும், மேற்கத்தைய நாடுகளில் வாழ்வதற்கும் உறவாடுவதற்குமான முஸ்லிம்களின் ஆற்றல் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். நாங்கள் எல்லோரும், தாருல் இஸ்லாத்தை (இஸ்லாமிய பூமியை) நோக்கிச் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், நாம் தாருல் குஃப்ரில் (நிராகரிப்பவர்களின் பூமியில்) வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால், அதனை ஒரு தற்காலிகமான வசிப்பாக கொள்ள வேண்டும் என்றும், ‘குஃப்ர்’ அரசாங்கத்தில் பங்கு கொள்ளவோ அல்லது அதனுடன் போராடவோ கூடாது என்றும் ஒரு வாதத்தை இவர்கள் முன்வைக்கின்றனர்… தாருல் குஃப்ர், தாருல் இஸ்லாம் என்பவை நபியவர்கள் காலத்தில் நிலை பெற்றிருந்த கொள்கைகள் அல்ல. அவை, இஸ்லாமிய ஆட்சிகளுக்கு வெளியே காணப்பட்ட போரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட, கொடுங் கோல் ஆட்சி உலகத்தை வர்ணிப்பதற்கும், இஸ்லாமிய ஆட்சியினுள் அமைதி, நீதி நேர்மையுடன் காணப்பட்ட உலகத்தை வர்ணிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்றொடர்களாகும். நாம் தாருல் இஸ்லாம், தாருல் குஃப்ர் போன்ற கொள்கைகளை வீசி எறிந்துவிட்டு, எல்லா பூமியும் அல்லாஹ்வுக்கு உரியது எனக் கருத வேண்டும்.”(றறற.ளையெ.நெவ இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.)

நமது காலத்தில், தார்(பூமி) பற்றிய கொள்கை, கால இட மாற்றங்களுக்கு அமைய மாற்றப்படக்கூடியது எனச் சிலர் நினைக்கின்றனர். ‘தாருல் இஸ்லாம், தாருல் குஃப்ர் போன்ற வஹியில் (வேத வெளிப்பாட்டில்) குறிப்பிடப்படாத ஃபிக்ஹி வரலாற்று வரைவிலக்கணங்களால், முஸ்லிம் சிறுபான்மையிருடைய வழித்தோன்றல்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என அவர்கள் கூறுகின்றனர்.

கீழ்கண்ட அல்குர்ஆனியக் கண்ணோட்டத்திலிருந்துதான் அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்திருக்க வேண்டும்: “திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்குரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சியவண்ணம் வாழ்பவர்களுக்கு இறுதி வெற்றி இருக்கிறது. (7;:128)

இந்த புரிந்துணர்வின் அடிப்படையில், முஸ்லிம்கள் மேற்கத்தைய நாடுகளைத் தங்கள் தாயகமாகக் கொண்டு அங்கு வாழலாம் என இவர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள், தாங்கள் வாழக்கூடிய மேற்கத்தையப் பூமிகளை நிர்மாணிப்பதிலும், வளர்ச்சியடையச் செய்வதிலும் முஸ்லிம்கள் பங்கு கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றனர். அரசியல், சமூக வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஈடுபாடு கொள்வதை அவர்கள் அனுமதித்திருக்கின்றனர். மேலும், அஃது எந்த வகையிலும் பாவச்சுமையைக் கொண்டு வராது என அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை ஆதரிப்பவர்கள், இரு விஷயங்களைக் குழப்பிக் கொள்கின்றனர்.


3.1 ஒரு சொந்த அபிப்பிராயத்துக்கும், ஷரீஆ அபிப்பிராயத்துக்குமிடையில் ஏற்படும் குழப்பநிலை.

மேற்கின் அரசியல் வாழ்வில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுப்பவர்கள், (தாருல் இஸ்லாம், தாருல் குஃப்ர் போன்ற) பூமி சம்பந்தப்பட்ட வரைவிலக்கணங்கள் சொந்த அபிப்பிராயங்கள் மாத்திரமே என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு வேண்டுமென்றே முயற்சி செய்கின்றனர். அவை, உலமாக்களின் வரைவிலக்கணமே அன்றி வேத வெளிப்பாட்டில் குறிப்பிடப்பட்டவையல்ல என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் அபாயகரமானவையாகும்@ ஏனெனில், அபூ ஹனீஃபா, அஷ்ஷாஃபி, இப்னு அல் காஸிம், அல் முஸானி போன்ற பிரசித்தி பெற்ற மாபெரும் முன்னைய அறிஞர்களும், அவர்களுடன் சேர்ந்து ஏனையவர்களும், எந்தவித முன்னுதாரணமும் இன்றி இந்த வரைவிலக்கணத்தைக் கண்டுபிடித்தனர் என அவர்கள் கருதுகின்றனர். இஜாரா(வாடகைக்கு எடுத்தல்), கனீமா(யுத்தத்தில் கைப்பற்றிய பொருட்கள்), இன்ன பிற போன்ற ஷரீஆ வரைவிலக்கணங்கள், ஷரீஆ தலீலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை ஷரீஆ சட்டங்களுடன் தொடர்புடையதாய் இருக்கின்றன என்ற உண்மையை இவர்கள் மறைக்கின்றனர்.

தாருல் இஸலாம் என்பது, இஸ்லாமியச் சட்டங்கள் அமுல் செய்யப்படுகின்ற ஒரு பூமியாகும்@ அதன் பாதுகாப்பு, இஸ்லாமிய இராணுவத்தின் மூலமாகப் பேணப்படுகிறது. தாருல் குஃப்ர் என்பது குஃப்ர் அமைப்புக்கள் அமுல் செய்யப்படக்கூடிய பூமியைக் குறிப்பதாகும் அல்லது இஸ்லாத்தின் பாதுகாப்பின் மூலமாக அல்லாமல் வேறொன்றின் மூலமாக அதன் பாதுகாப்பு பேணப்படுகின்ற ஓர் இடமாகும். தார் (பூமி) பற்றிய வரைவிலக்கணம், இறைத் து}தர் (ஸல்) அவர்களின் கீழ்வரும் ஹதீஸ் போன்ற பல ஷரீஆ மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டதாகும்: “பின்னர், அவர்களை தங்களின் பூமியிலிருந்து முஹாஜிரின்களின் பூமிக்கு நகரச் சொல்லுங்கள். மேலும் அவர்கள் அவ்வாறு செய்தால், முஹாஜிரின்கள் அனுபவிப்பவை போன்ற உரிமைகளை அவர்களும் அனுபவிப்பார்கள் என்றும், அவர்கள் எந்தக் கடமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்களோ அந்தக் கடமைகளுக்கு இவர்களும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்; (புரைதா(றழி) அவர்களின் ஆதாரத்துடன் ஸஹீஹ் முஸ்லிமில் அறிவிக்கப்படுகிறது.)
எனவே, இந்த வரைவிலக்கணங்கள் பற்றிய விவாதம் என்பது, உண்மையில் அதனைச் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் பற்றிய விவாதங்களாகும். முதாலாவதாக நிலை பெற்றிருக்கும் வரைவிலக்கணத்திற்கு முரணாக புதியதொரு வரைவிலக்கணத்தைக் கொண்டு வருவதென்பது, முதலாவது வரைவிலக்கணத்திற்கு முரணான சான்றுகளை கொண்டு வருவதைச் சார்ந்திருக்க வேண்டும். தார்--பூமி பற்றிய வரைவிலக்கணங்களை மறுப்பவர்கள், இதனைச் செய்வதில் தோல்வியடைந்து விட்டனர்.

இன்னும் சொல்வதென்றால், வரைவிலக்கணம் தன்னுள் கொண்டிருக்கின்ற கருத்துத்தான் முக்கியமானதும், கவனத்திற் கொள்வதற்கு அவசியமானதுமாகும் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரைவிலக்கணங்கள் ஷரீஆவிற்கு முரண்படாத வரைக்கும், அவற்றைப் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை என ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, தார்--பூமி குறித்த வரைவிலக்கணத்தின் கருத்தே கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, அந்தச் சொற்றொடர்களல்ல.

ஷரீஆ மூலங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, இஸ்லாத்தினால் ஆளப்படுகின்ற, மேலும் முஸ்லிம்களைக் கொண்டு பாதுகாக்கப்படுகி;ன்ற பூமிகளையும், இஸ்லாத்தினால் ஆளப்படாத, குஃப்பார்களின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய பூமிகளையும், அவை வேறுபடுத்திப் பார்ப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த வரைவிலக்கணங்களின் கருத்துகளை புறந் தள்ளுபவர்கள், மேற்கத்தைய சமூகங்களில் முஸ்லிம்கள் இரண்டறக் கலந்து விட வேண்டும் என்று ஒருமைப்பாட்டுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கின்றனர்@ மேலும், அவர்கள் குஃப்ர் ஆட்சியமைப்பிலும், பாராளுமன்றங்கள், இன்ன பிற போன்றவற்றிலும் முஸ்லிம்கள் பங்கு கொள்வது போன்ற பயனற்ற செயல்கள் பலவற்றை அனுமதிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

3.2 பூமி மற்றும் தார் பற்றிய கொள்கைகளுக்கு இடையிலான தடுமாற்றம்.

விண்ணினதும், மண்ணினதும் படைப்பாளனான அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்கின்ற எந்தவொரு முஸ்லிமும் நிலம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது என்ற உண்மையை வாதப் பிரதிவாதங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றான். இந்த அம்சம், இஸ்லாம் அமுல்படுத்தக்கூடிய ஒரு பூமி@ இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்பட்டு அதனுடைய பாதுகாப்பின் காரணமாக பத்திரமான ஒரு பூமி பற்றிய ஆய்விலிருந்து வேறானதாகும்.

இந்த பூமி மற்றும் தார் பற்றிய தலைப்புக்களைக் குழப்பியடிக்கின்ற மனிதர்களின் புலனறிவிலிருந்து நாம் முன்னேறிச் சென்று, அவர்களின் தர்க்க வாதத்தை பின்தொடர்ந்தால், யூதர்களை பாலஸ்தீனில் தங்கியிருப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டியவர்களாய் விடுவோம். ஏனெனில், பூமி அல்லாஹ்வுக்கு சொந்தமானதாகும். அவ்வாறென்றால், யூதர்கள் அங்கு வாழ்வதற்கும், ஆட்சியில் பங்கு கொள்வதற்கும், ஒரு தரப்பினராக அங்கு தொடர்ந்து இருப்பதற்கும் உரிமை பெற்றவர்களாகி விடுவர். இஃது, இஸ்லாமிய அழைப்பு (தஃவா), மற்றும் இஸ்லாமிய வியாபகம் பற்றிய கொள்கைகளைப் பயனற்றதாக்கி விடும்.

எல்லாப் பூமியும் அல்லாஹ்வுக்கு சொந்தமானதுதான்@ ஆயினும், இந்தப் பூமி அல்லாஹ்வின் சட்டம் நிலை நிறுத்தப்படுகின்ற பூமி என்றும், தாகூத்துடைய சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்ற பூமி என்றும் பிரித்து நோக்கப்படுகிறது. அல்லாஹ் தனது ஆட்சி; தனது பூமியில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், குஃப்ரிலிருந்தும், ஷிர்க்கிலிருந்தும் பூமி து}ய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டு இருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அவர்களுக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், தொழுகையை நிலை நிறுத்துவார்கள், ஜகாத் வழங்குவார்கள@ மேலும் நன்மை புரியுமாறு ஏவுவார்கள், தீமையிலிருந்து தடுப்பார்கள். (22:41)

ஆரம்பத்திலிருந்தே, அல்லாஹ்வின் பூமியின் மீது குஃப்ர் ஆட்சி செலுத்துவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஏனெனில் சர்வ அதிகாரமும், ஆதிக்கமும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். மேலும், அவனுடைய வார்த்தை அல்லாத வேறு எந்த ஒரு வார்த்தைக்கும், அவனுடைய பூமியில் சட்டரீதியான நிலைப்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதனால்தான் அவனுடைய வார்த்தையை அவனுடைய பூமியின் மீது எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்துவதற்கும், அவனுடைய அதிகாரம், ஆதிக்கம், வரம்புகள் ஆகியவற்றை அத்துமீறிச் சென்ற குஃப்ஃபார்களிடமிருந்து ஆட்சியை மீட்டெடுப்பதற்குமாக, ஜிஹாத் செய்வதற்கு அல்லாஹ் சட்டமியற்றி தந்திருக்கின்றான். மேலும், அவன் அந்தப் பாதையில் கொல்லப்படுகின்றவர்களை ஷ_ஹதா(உயிர்த்தியாகி;);களாக்கியிருக்கின்றான்@ அல்லாஹ்வின் பார்வையில் அவர்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்து இருக்கின்றது. எனவே, நாம் சுமந்திருக்கின்ற அசலான விதிமுறை என்னவென்றால், முழு உலகின் மீதும் இஸ்லாமிய ஆட்சி மேலாதிக்கம் பெற வேண்டும் என்பதுதான். குஃப்ருடைய ஆட்சியை ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும் நமது விதிமுறையாக இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment