Thursday, May 29, 2008

அதிமுக்கிய பிரச்சனை 2

இஸ்லாத்தை ஏற்றபின் மீண்டும் மதம் மாறுவோர்.நாம் குர்ஆனையும், நபிகள் நாயகத்தின்(ஸல்) சுன்னாவையும் ஆராய்ந்து பார்த்தோமேயானால் முக்கிய விவகாரங்கள் என இஸ்லாம் விளக்கியுள்ளவை எவை என தெளிவாக அறிய முடியும். மேலும் அதனை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவதை கடமையக்கியுள்ளது என்பதையும் அறியலாம். அதில் ஒன்றாக மதம்மாறும் பிரச்சனையை கருதலாம். ஒரு குழுமமாக இருந்தாலோ அல்லது ஒரு தனி மனிதனாக இருந்தாலோ இஸ்லாத்தினின்றும் வேறு மதத்திற்கு மாறுவதை ஒரு முக்கிய விவகாரமாக, வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
இறைத்து}தர்(ஸல்) கூறுகிறார்கள்
“யார் இந்தத் தீனை ஏற்று பின்னர் அதினின்றும் மாறுகிறாரோ அவர் கொல்லப்படவேண்டியவர்.”
இப்ன்-மஸ்வூது (ரழி) அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள். ரசூலுல்லாஹ் கூறினார்கள்
“அல்லாஹ்(சுபு) வையும் அவனது து}தரையும் உளமாற ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமின் இரத்தம் மிகவும் புனிதமானது. ஆனால் மூவருடையதைத்தவிர் விபச்சாரம் செய்தவர், கொலைகாரர் மற்றும் இத்தீனை விட்டும் விலகுபவர்.”
இவை முஸ்லிம்கள் உறுதியாகச் செயல்படுத்திய முக்கியக் விடயங்களாகும். ஆகவே இஸ்லாத்தினின்றும் மதம் மாறியோர் யாவரையும் கொன்றுவிடுவது கடமையாக இருந்தது. ஸஹாபாக்களும் அவர்களைத் தொடர்ந்த கலீஃபாக்களும். அதனை நடைமுறைப்படுத்தினர்.
அபு மூஸா அல் அஷ்ஹரி (ரழி) பின்வருமாறு ஒரு நிகழ்ச்சியை அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) அபுமூஸாவை நோக்கி ஏமனுக்கு செல்லுமாறு கட்டளையிட்டார்கள். பின்பு முஆத் இப்ன் ஜபல்(ரழி) அவர்களையும் அங்கே அனுப்பினார்கள். முஆத் அவர்கள் ஏமன் சென்றபோது அவரை அபு மூஸா வரவேற்றார். அப்போது ஒருவர் கட்டிப்போடப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் அதைப்பற்றி வினவினார். அதற்கு பதிலளித்த அபுமூஸா “அவர் ஒரு யூதர் பின்னர் இஸ்லாத்தை தழுவினார். ஆனால் இப்பொழுதோ மீண்டும் யூதனாக மாறிவிட்டார்". எனக் கூறினார். அதைக்கேட்ட முஆத் “அவரைக் கொல்லும் வரை இங்கே தங்கமாட்டேன்" எனக் கூறினார்.

அபுதாவூத் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். இஸ்லாத்தினின்றும் மதம் மாறிய ஒருவர் அபுமுஸாவிடம் இழுத்துவரப்பட்டார். பாவமன்னிப்பு கோரி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்துவிடுமாறு அவரை அபுமூஸா இருபது இரவுகள் அழைத்தார். அவரோ அதனை மறுத்துவிட்டதனால், அபுமுஸா அவரை கொன்றுவிட்டார்.அல்குத்னி, அல் பைஹக்கியிடமிருந்து அறிவிக்கப்படும் ஒரு அறிவிப்பில் உம்மு ஹர்பாஹ் என்ற ஒரு பெண்மணி இஸ்லாத்தை தழுவியபிறகு சிறிது காலத்தில் மீண்டும் மதம் மாறினார். அவரை அபுபக்கர் (ரழி) மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். ஆனால் அப்பெண்மணியோ மறுத்துவிட்டார். அதனால் அபுபக்கர் (ரழி) அவரை கொன்றுவிட்டார். அதேபோல் இறைத்து}தர் என்று மக்களை ஏமாற்றிய “முஸைலமாஹ்" என்பவனின் பின் சென்ற எண்ணற்ற அரேபிய சமூகத்தினர் மீண்டும் இஸ்லாத்திற்கு வரும்வரை அபுபக்கர் (ரழி) அவர்களை எதிர்த்து போரிட்டார்.
எனவே சகாபாக்களும் அவர்களைத்தொடர்ந்த கலீஃபாக்களும், இஸ்லாத்தை ஏற்று பின் மதம் மாறியவர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்தக் கொள்கையை விட்டும் தளராதிருந்தனர். ஆனால் நாளடைவில் அந்தப்பிடி தளர்ந்தது. இஸ்லாத்தை நடைமுறைபடுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் நாத்திகக் (கடவுள் இல்லை) கொள்கையும், இஸ்லாத்தினின்றும் மதம் மாறுவதும் சகஜமாகிவிட்டது. புதுப்புது குழுக்களும் தோன்றி புதிய தீன்களை உருவாகும் நிலை உருவானது. மன்னிப்பிற்கோ, மறுபரிசீலனைக்கோ இடமில்லாத மிக முக்கிய விவகாரமாக இது இருந்தாலும் இதனை நடைமுறைபடுத்துவதில் முஸ்லிம்களின் மத்தியில் ஒரு அச்சம் உருவானது.அந்நிலையில் முஸ்தபா கமால் போன்றோர், இஸ்லாத்திற்கு எதிராக, இஸ்லாமிய அரசிற்கு எதிராக போர் தொடுத்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. அந்நிலையில் அத்தகையோர் மீது இஸ்லாமிய ஷாPஆ மூலம் தண்டனை வழங்குவது இயலாமலிருந்தது. ஏனெனில் அது ஒரு முக்கிய விவகாரமாக, வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவதினின்றும் மக்கள் மாற்றமடைந்திருந்தனர். எனவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மீண்டும் அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவது நமது கடமையாகும்.ஒற்றுமைமுஸ்லிம் உம்மாவின் ஒற்றுமையை நிலைநாட்டுவதும், ஒரே ஒரு இஸ்லாமிய அரசு மட்டுமே இருப்பதும் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும். அதனை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவது நம்மீது கடமையாகும். ஒன்றுக்கும் மேலாக கலீஃபாக்கள் தோன்றும்போதும், இஸ்லாமிய அரசை எதிர்த்து கலகம் செய்யும்போதும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என இஸ்லாம் குறிப்பிடுவனவற்றிலிருந்து இதனை அறியலாம்.
அப்துல்லாஹ் இப்ன் அம்ர் இப்ன் அல்ஆஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள்
“எவர் ஓர் இமாமிற்கு மனமுவந்து தன் சத்தியப்பிரமாணத்தை கொடுக்கிறாறோ, அவர் அந்த இமாமின் கட்டளைப்படி நடக்க வேண்டும். அந்த இமாமிற்கு போட்டியாக இன்னொரு இமாம் வந்தால் அந்த இரண்டாவது இமாமை கொன்றுவிடவேண்டும்."
மேலும் அபுசெய்யித் அல்குத்ரி (ரழி) ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்
“இரண்டு கலீஃபாக்களுக்கு சத்தியப்பிரமாணம் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடவேண்டும்.”
இவை மூலம் ரசூலுல்லாஹ்(ஸல்) முஸ்லிம்களின் ஒற்றுமையை, ஒரே அரசு என்பதை எந்த அளவிற்கு ஒரு முக்கிய விவகாரமாக கருதினார் என அறியலாம். அர்ஃபாஜா (ரழி) அவர்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,
“யார் ஒருவர் உங்களிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறாரோ அவரை கொன்றுவிடுங்கள்.”
ஒரு முஸ்லிமாக இருந்தாலும்கூட அவர் பிளவு உண்டாக்க நினைத்தால் அவரை கொன்றுவிடுமாறு ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுவதினின்றும் முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியம் என அறியலாம். ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
“எவர் ஒருவர் இந்த ஒன்றுபட்ட உம்மாவிடையே கலகம் ஏற்படுத்த நினைக்கிறாரோ அவர் யாராயிருப்பினும் அவரை கொன்றுவிடுங்கள்."
இமாமினின்றும் பிரிந்துசென்று அவரது கட்டளையின்படி நடக்காது எதிர்ப்பவர்கள் கலகக்காரராவர். அவர்களை மன்னித்து அவர்களின் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அவசியம். அவ்வாறு செய்த பின்பும் அவர்கள் மன்னிப்பு கோராது எதிர்த்து நின்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும்.பல அரசுகளாக அமைவது, முஸ்லிம் உம்மாவிடையே பிளவு உண்டாவது, ஆகியவை ஒரு முஸ்லிமின் இரத்தம் சிந்தினாலும் தடுக்கப்படவேண்டியவை என கூறியுள்ளதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணரலாம். அல்லாஹ்(சுபு) அதனை ஒரு வாழ்வா?சாவா? பிரச்சனையாக ஆக்கியுள்ளதை அறியலாம். முன்பு முஸ்லிம்கள் அதனின்றும் இம்மியளவும் பிசகாதிருந்தனர் என்பதை தக்க சான்றுகள் மூலம் உணரமுடியும்.
அலி(ரலி) முஆவியா(ரலி)விடம் எந்த பட்சாதாபமும் காட்டவில்லை. மேலும் அவர்களோ உமய்யத்துகளோ அப்பாசித்துகளோ, கவாரிஜ்களிடம் இம்மியளவும் கருணை காட்டவில்லை. ஆனால் எப்பொழுது மக்களிடையே இஸ்லாமிய சிந்தனை குறையத்தொடங்கியதோ அப்பொழுதிலிருந்து பேரழிவு தொடங்கியது. இஸ்லாமிய நிலங்கள் துண்டாடப்பட்டபொழுது முஸ்லிம்கள் அமைதி காத்தனர். இஸ்லாமிய நிலம் துண்டாடப்படுவது மிக முக்கிய விவகாரமாக இருந்தும் அதனை வாழ்வா சாவா பிரச்சனையாக கருதி போராடவில்லை. ஆகையால் இஸ்லாமிய நிலம் பல நாடுகளாக துண்டாடப்பட்டது. இஸ்லாமிய கிலாஃபாவும் அதில் ஒன்றாக மாறும் அளவிற்கு ஆனது. அதனினும் ஒரு படி மேலாக துண்டாடப்பட்ட நாடுகளை இணைத்து அமைப்பொன்றை நிறுவி அதில் கிலாஃபா அரசையும் ஒரு உறுப்பு நாடாக்கி, அந்நாடுகளை கிலாஃபா அரசு அங்கீகரிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. முஸ்தபா கமால் துருக்கியை மற்ற நாடுகளினின்றும் பிரித்து ஒரு தனி அரசாக அறிவித்தான். துண்டாடப்பட்ட இஸ்லாமிய நாடுகளை குஃப்ரின் கைகளில் ஒப்படைத்து அதன் தலைவிதியையே மாற்றினான். முஸ்லிம்களும் குஃப்பாரைப்போல பல நாடுகளாக பிரிந்து வாழ்வதை ஏற்றனர். அதன் பின்னர் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாயினர். இவையனைத்தும் முக்கிய விவகாரங்கள் எவை என்பதை மறந்ததன் விளைவுகளேயாகும். முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமை, ஓரரசு என்ற நிலைப்பாடு என்பவை முக்கிய விவகாரங்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்தனர். அதனை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதவும் மறுத்தனர்.
இந்த நிலைமை மாறி எவை முக்கியவிவகாரங்கள் என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். அதனை வாழ்வா?சாவா? பிரச்சனையாகவும் கருதவேண்டும்.பகிரங்கமான குஃப்ரின் வெளிப்பாடுகுஃப்ர் (இறைநம்பிக்கையற்றோர்களின்) முறைகளை பகிரங்கமாக செயல்படுத்துவது ஒரு முக்கிய விவகாரமாகும். அதற்கான நடவடிக்கை வாழ்வா?சாவா? என்கிற அடிப்படையில் இருக்கவேண்டும் என இஸ்லாம் கருதுகிறது. அவூஃப் இப்ன் மாலிக் (ரழி) அவர்களின் ஹதீஸ் பின்வருமாறு விவரிக்கிறது. ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள் “உங்களிடையே அமீர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் நல்லதையே செய்வார்கள். சில சமயம் கெட்டதையும் நடைமுறைபடுத்துவார்கள். அந்த கெட்;ட நடைமுறைகளை வெறுப்பவர்களும் அதனை எதிர்ப்பவர்களும் பாவத்தினின்றும் தப்புவார்கள். ஆனால் அங்கீகரித்து, அமைதிகாத்து, அவற்றை பின்பற்றுவோர் பாவத்திற்குள்ளாவார்கள்."பின்வரும் பகுதி இணைந்தும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது.“இறைத்து}தரே, அவர்களுடன் நாம் வாள் கொண்டு போரிடவேண்டாமா?" என்றதற்கு ரசூலுல்லாஹ்(ஸல்) “வேண்டாம். அவர்கள் உங்களிடையே தொழுகையை நிலைநாட்டுவதை தொடரும் வரை வேண்டாம்." என்றார்கள். இன்னொரு குறிப்பில், அவர்களை எதிர்த்து நாம் போரிடக்கூடாதா என்றதற்கு ரசூலுல்லாஹ் கூறுகிறார்கள்.
“அவர்கள் உங்களிடையே தொழுகையை நிலைநாட்டுவதை தொடரும் வரை வேண்டாம்." என்றார்கள்.உபாதா இப்ன் உஸ்ஸமீத் கூறியதாக புகாரி (ரஹ்) அறிவிக்கிறார்கள்,
“ரசூலுல்லாஹ்(ஸல்) எங்களை அழைத்தார்கள். பகிரங்கமான குஃப்ரைக் காணும் வரை நாங்கள் ஆட்சியிலுள்ளோரை எக்காரணம் கொண்டும் எதிர்க்கமாட்டோம், அவர்களின் கட்டளைப்படி நடப்போம் என்ற சத்தியப்பிரமாணத்தை நாங்கள் அருக்கு அளித்தோம்". அஹ்மத் அவர்களின் கூற்றுப்படி
“ஆட்சியிலுள்ளோர் உங்கள் மீது பகிரங்கமாக பாவம் செய்யக் கட்டளையிடும்வரை" என உள்ளது. அல்அஸ்ஜாவினின்றும் அவூஃப் இப்ன் மாலிக் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ் கூறுகிறார்கள் “ஒரு சிறந்த இமாம் உங்களிடையே அன்பு செலுத்துவார். நீங்களும் அவரை அன்பு செலுத்துவீர்கள். அவர் உங்களுக்காக துஆ செய்வார்; நீங்களும் அவருக்காக துஆ செய்வீர்கள். உங்களின் ஒரு மேசமான இமாமோ உங்களை வெறுப்பார். நீங்களும் அவரை வெறுப்பீர்கள். அவர் உங்களை சபிப்பார். நீங்களும் அவரைச் சபிப்பீர்கள்." அதற்கு நாங்கள் கேட்டோம் “இறைத்து}தரே அவரை எதிர்த்து நாம் போரிட வேண்டாமா?" அதற்கு “அவர்கள் உங்களிடையே தொழுகையை நிலைநாட்டுவதை தொடரும்வரை வேண்டாம்” என ரசூலுல்லாஹ்(ஸல்) கூறினார்கள்.
இங்கே தொழுகை எனக் குறிப்பிடுவது "தீனை நிலை நாட்டுவது" என்றே பொருள்படும். இது இஸ்லாமிய ஷாPஆ விளக்கங்களினின்றும் தெளிவாகிறது. மேலும் பகிரங்க குஃப்ர் என்பது ஆட்சியாளர் செய்யும் குஃப்ர் ஆகும். அதாவது குஃப்ர் முறையில் ஆட்சி புரிவது. மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஒரு கலீஃபா இஸ்லாமிய பாதையினின்றும் விலகி குஃப்ர் முறையில் ஆட்சி செய்வதை எதிர்த்து போராட வேண்டும் என்பது தெளிவாகிறது. அல்பதஹ்ஹில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“சுல்தானின் கட்டளைப்படி நடந்து அவருடன் சேர்ந்து ஜிஹாத் செய்யும் கடமையை பேரரிஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் அவை பெரும் உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் தடுக்கும். ஆனால் சுல்தான் குஃப்ர் முறைப்படி ஆட்சி செய்தால் அவருக்கு கட்டுப்பட்டு நடப்பது நம்மீது தடுக்கப்பட்டதாகும். அவரை எதிர்த்து போரிடுவதே கடமையாகும்."
இமாம் அல்சவ்க்கானி அவரது புத்தகமான நயில் அல்அவ்தார் இல் கூறுகிறார், “தவறான வழியில் நடக்கும் சுல்தானை எதிர்ப்பது கடமை எனக்கூறுவோர், குர்ஆனையும் சுன்னாவையுமே தனது ஆதாரமாகக் கருதுவர்" இதன் மூலம் குஃப்ர் முறையில் ஆட்சி புரியும் ஆட்சியாளரை எதிர்த்துப் போரிடுவது ஒரு முக்கிய விவகாரமாகும்.

இஸ்லாமிய பெண்களின் உடை

அண்மையில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிதலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் பெண்களின் உடைநெறி சம்பந்தப்பட்ட கருத்துக்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது சம்பந்தமாக பலவித விவாதங்களும் நடைபெருகின்றன. ஹிஜாப் என்பது இஸ்லாமிய மார்க்க கடமையா? அல்லது சுயவிருப்பின் பிரகாரம் அணியும் உடையா? இஸ்லாமிய உடைநெறி ஒரு குறிப்பான வடிவமைப்பை கருதுகிறதா? அல்லது எது கண்ணியமான உடையென கருதப்படுகிறதோ அதனை தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து அணியலாமா? எனப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)

குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்

அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு 'ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.

அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெறிந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.

பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

“ஆனால் உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)

அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிகளார்(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (யுறசயா) (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).

சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்

“இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)

இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.

மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல. அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)

பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள். ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)

மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்

“அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் து}தரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.

ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.

ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள். சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,
“ஆயிஷா(ரலி) அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் 'சூரா அந்நு}ர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்" எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)

ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!

Friday, May 23, 2008

இஸ்லாத்தின் ஆட்சிக்கோட்பாடு


இஸ்லாமிய அரசு நான்கு அடிப்படைக்கோட்பாடுகளை கொண்டுள்ளது.

1. இறைமையும் சட்டமியற்றுதலும் இறைவனுக்குரியது

முஸ்லிம்களை கட்டுக்குள் வைத்திருப்பது தனிமனிதனின் கொள்கைகளல்ல, மாறாக அலலாஹ்(சுபு)வின் கட்டளைப்படியே அவர்களது ஒவ்வொரு அசைவும் அமைகிறது.

“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் திர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாத வரையில் அவர்கள் நம்மை ஈமான் கொண்டவர்கள் ஆகமாட்டதர்கள்” (அல்குர்ஆன் 4:65)

“மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்விற்கும் அவனுடைய து}தருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”
(அல்குர்ஆன் 33:36)

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்)தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இதுதான்(உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்”(அல்குர்ஆன் 4:59)

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்) படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:44)


“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் அநியாயக்காரர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:45)


எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்

(அல்குர்ஆன் 5:47)


எனவே இறைமை பரிபூரணமாக அல்லாஹ்வின் கட்டளைகளாகிய இஸ்லாமிய ஷரிஆவிற்கு மாத்திரமே சொந்தமானது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது.


2. அதிகாரம் என்பது முஸ்லிம் உம்மாவிற்குரியது


இஸ்லாமிய ஆட்சியின் அதிகாரம் முழுமையாக முஸ்லிம் உம்மாவினிடமே காணப்படும். ஏனென்றால் கிலாபாவை நடைமுறைபடுத்துவதற்காக நியமிக்கப்படும் கலீஃபா என்பவர் முஸ்லிம்களால் சத்தியப்பிரமாணம் (பையத்) கொடுக்கப்பட்டு தம்மீது ஷாPஆவினை நடைமுறைப்படுத்துங்கள் என்ற நிபந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் மட்டுமே. எனவே அதிகாரம் முழுமையாக முஸ்லிம் உம்மத்திடமே காணப்படும். உபைதா இப்ன் உல் சாமித் (ரழி) அறிவிக்கிறார்கள் “நாங்கள் கஷ்டத்திலும், இலகுவான நிலையிலும் ரஸ}லுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாக உறுதியளித்தோம்” எனக் கூறுகிறார்கள்.


ஜாPர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்கள்

“நாங்கள் ரஸ}லுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாகவும், ஏனையோருக்கு அறிவுரை அளிப்பதாகவும் அவரிடம் பையத் செய்தோம்” எனக் கூறுகிறார்கள்.


எனவே இங்கு வாக்குறுதி மக்களால் கலீபாவிற்கு கொடுக்கப்படுகிறதே தவிர கலீபா மக்களுக்கு கொடுக்கவில்லை. அவர்களில் வாக்குறுதி யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரே அவர்களுக்கு ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்;. எவருக்கு வாக்குறுதி கொடுக்கப்படுகிறதோ அவர்தான் கலீஃபாவாக வரமுடியும். குலஃபா ராஷிதீன்கள் மக்களிடையே சத்தியப்பிரமாணம் வாங்கிய பின்னரே கலீஃபாவாக ஆகினர்.



அப்துல்லாஹ் இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபாஅ குறிப்பிடுகிறார்கள்


“ எவரொருவர் கட்டுப்பாட்டிலிருந்து தனது கையினை விலக்கிக்கொள்கிறாரோ அவர் நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் தனக்கான எத்தகைய ஆதாரமுமின்றி இறைவனை சந்திப்பார். மேலும் எவர் தனது கழுத்தில் பையத் இல்லாத நிலையில் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யாக்கால (அறியாமைக்கால) மரணத்தையே அடைகிறார்”


நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் அறிவிக்கிறார்கள்.


“ அமீரினிடத்தில், தமக்கு விருப்பமில்லாத ஒரு செயலை ஒருவர் கண்டால் அவர் பொறுமையுடன் இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டு பிரிந்து சென்ற நிலையில் மரணித்து விடுகிறாரோ, அவர் ஜாஹிலிய்ய மரணத்தையே அடைகிறார்.”


எனவே மேற்கூறிய விடயங்களிலிருந்து உம்மாவிடம் பைஅத் பெற்றபின்னரே ஒருவர் கலீஃபாவாக முடியும் என்பதும், அவ்வாறு அமீரினை தேர்ந்தெடுக்கின்ற அதிகாரமும் உம்மாவிடமே உள்ளது என்பதும், எனினும் தெளிவான குப்ரினை அந்த அமீர் செயற்படுத்தும் வரையில் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாம் அவரின் அதிகாரத்திலிருந்து பிரிந்து செல்ல முடியாது என்றும் தெளிவாகிறது.


3. ஒரே ஒரு கலீஃபாதான்.


தம்மை ஆளும் பிரதிநிதியாக ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும். கலீபாவின் ஒருமை குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன.ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.


“இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத்(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால், அவர்களில் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


4. இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமை கலீஃபாவுக்கு மட்டுமே உண்டு.


கலீபாவிற்கு மாத்திரமே இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. கலீஃபாவால் மட்டுமே முழுமையாகவும், முறையாகவும் அல்லாஹ்வின் சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்த முடியும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சகாபாக்களின் ஏகோபித்த தீர்மானம்) விலிருந்து கலீபாவால் மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றமுடியம் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இஜ்மா-அஸ்-ஸஹாபாவின்படி, “ஒரு இமாமினுடைய கருத்து மாத்திரமே வேறுபாடுகளை களைகிறது”, “ஒரு இமாமின் கருத்து மட்டுமே கட்டளையாக கொள்ளப்படுகிறது”, “ இமாம் மாத்திரமே சமூகத்தில் தோன்றுகின்ற புதிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தீர்மானித்து அமுல்படுத்தும் உரிமையை பெற்றிருக்கிறார்.” போன்ற அடிப்படைகளை நாம் இஸ்லாத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகை மயானமாக்கிவரும் ‘உலகமயமாக்கல்’


தாராளமயமாக்குதல் அல்லது உலகமயமாக்குதல் எனும் வார்த்தையை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் உருவாக்கினர். சர்வதேச எங்கும் ஒரு பொருள் பாவனையிலுள்ளது, அல்லது உலகின் பல பகுதிகளிலும் அப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்காக இந்த உலகமயமாக்கல் என்ற பதம் பிரயோகிக்கப்படவில்லை. மாறாக அப்பொருளை உற்பத்திசெய்பவர் உலகெங்கும் அதனை பொதுவான பொருளாக்கவேண்டும்; என்ற நோக்குடன் செயல்படும் முறைமையையே இவ்வார்த்தை குறிப்பிடுகிறது. ஒரு வியாபார நிறுவனம் ஒரு உற்பத்திக்கொள்கையை வகுத்துக்கொண்டு அப்பொருளின் உற்பத்திச்செலவு உலகில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கு உற்பத்தியை அதிகரித்துக்கொண்டு பின்னர் அதனை உலகெங்கும் விற்று இலாபம் ஈட்டுவது மட்டுமே அதன் கொள்கையாகும்.

அமெரிக்க வணிகச்சங்கங்களின் செயல்களை விளக்குவதற்காக 1980ற்குப்பிறகு தாராளமயமாக்கல் எனும் சொல் உருவாக்கப்பட்டது. 1981ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரிகன் தனது நாட்டின் சர்வதேச அரசியல் பொருளாதார தொடர்புகளில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்தார். இதன் விளைவாக "பலம் பொருந்திய டாலர்" எனும் கொள்கை உருவாகியது. அயல் நாடுகளிலுள்ள செல்வந்தர்கள் அமெரிக்காவில் தமது முதலீடுகளை செய்வதற்கு அக்கொள்கைகள் வழிவகுத்தன. அதன் மூலம் வரும் பெரும் வருமானம் அமெரிக்காவின் ஆயுத பலத்தை அதிகரிக்கவும், அன்றைய சோவியத் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும்; பயன்படுத்தப்பட்டது. இதுவே சோவியத் வீழ்ச்சியுற ஒரு காரணமாயிற்று.

திடமான டாலர் கொள்கையால் டாலரின் மதிப்பு ரிகனின் ஆட்சியில் உயர்ந்தது. டாலரின் மதிப்பைக்கொண்டு பொருள் உற்பத்தி செய்த அமெரிக்க நிறுவனங்கள் அதே பொருளை உற்பத்தி செய்த வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல் சில நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன. இத்தகைய நிறுவனங்களுக்கு மறுவடிவம் கொடுத்து அவற்றை உயர்த்த சில அமெரிக்க ஆய்வாளர்கள் விழைந்தனர். மறுவடிவம் கொடுக்கும் முயற்சியில் பலர் வேலையிழந்தனர். அமெரிக்க நிறுவனங்களான Genaral Motors மற்றும் IBM நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பலரை வெளியேற்றினர். வெளிநாட்டில் கிளைகள் தொடங்கியும் தங்கள் நஷ்டத்தை சீர் செய்ய இவை விழைந்தன.

இந்த டாலர் கொள்கையால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை மற்றும் மக்களின் ஊதியம் குறைந்திற்று. இந்தியா, தாய்லாந்து போன்ற ஏழை நாடுகளின் ஒரு மாதத்தின் ஒரு ஊழியனின் ஊதியமானது அமெரிக்காவில் ஒரு மணிநேர ஊதிய அளவைவிடக் குறைவாகும். வேலைவாய்ப்புகளை இழத்தல், நிறுவனங்கள் திடீரென நஷ்டமடைதல் போன்ற மேற்கூறப்பட்ட விளைவுகளினால் அமெரிக்க மக்கள் “இலாபம் ஒன்றே" தங்கள் நாட்டு நிறுவனங்களின் குறிக்கோள் என அந்த நிறுவனங்களை குற்றம் சாட்டினர். ஆனால் சர்வதேச அளவில் எழுந்த போட்டியினால்தான் அவை அவ்வாறு செய்ய வேண்டி ஏற்பட்டன என அந்நிறுவனங்கள் பதில் அளித்தன. அப்போது 1987 ல் அமெரிக்க மேல் சபையினர் ஒன்று கூடி உலகமயமாக்கல் பற்றி பேசத் தொடங்கினர். பின்னர் பல ஆராய்ச்சிகளின் மூலமும், பல பொருளாதார கொள்கைசார் நு}ற்களை பதித்தும் உலகமயமாக்கல் எனும் கொள்கையை அமெரிக்கா அறிவித்தது.

வேலையிழப்பினால் ஏற்பட்ட குழப்பங்கள், வேற்று நாடுகளில் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குதல் போன்ற பலவற்றை இந்த ஆராய்ச்சிகள் வெளியிட்டன. புஷ் ஆட்சியின் போது கையெழுத்திட்ட (கனடா - மெக்ஸிகோ) உடனான ஒப்பந்தத்திற்கு கிளிண்டன் ஆட்சியில் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தமையால் கூலி குறைவாக உள்ள மெக்ஸிகோவில் பொருட்களை உற்பத்தி செய்ய வழி வகுத்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்வாறாக நடந்த பல சர்ச்சைகள் உலக மக்களிடையே “உலகமயமாக்குதலை" உறுதிப்படுத்தியது. 1992ல் நிதி மிகுந்த நிறுவனங்களின் சுய இலாபத்திற்காக இவ்வகையான சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன் விளைவாக படித்த அனுவத்தேவையுள்ள வேலைகள் அமெரிக்காவில் செய்யப்படும் எனவும், உடலுழைப்பு தேவைப்படும் கடுமையான வேலைகள் மட்டுமே அமெரிக்காவிற்கு வெளியில் வேற்று நாடுகளில் நடைபெறும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக இவ்வேலைகளின் பயன்களை அமெரிக்கர்கள் பெற முடியும் என்பது மட்டுமல்லாமல் முன்னேற்றம் வாய்ந்த தொழில்களில் அவர்கள் ஏற்றம் பெறுவர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூமம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அமெரிக்கர்ளுக்கு மலிந்த விலையிலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

1992ல் பதவி வகித்த புஷ்ஷின் கொள்கைகள் ஏற்றுமதியைப் பெருக்குவதிலும், உலக வர்த்தக நிறுவனங்களை உருவாக்குவதிலுமே முனைப்பு காட்டின. எனினும் வர்த்தக நிறுவனங்களோ தாங்கள் தொடங்கிய நிறுவனங்களை சீர் செய்து இலாபம் ஈட்டவே முயன்றன. மேலே கூறப்பட்டது போல் பொருள் உற்பத்தி செய்யவேண்டிய வேலையை வெளிநாட்டில் செய்யவேண்டும் என்றும் அவை எண்ணம் கொண்டன. ஆகவே இந்நிறுவனங்கள் அனைத்தும் அயல்நாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடலாயின.

பல ஆண்டுகளாக பனிப்போரின் காரணமாக, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட தாம் பின் தங்கி இருப்பதாகவும், தற்போது பனிப்போர் முற்றுப்பெற்ற நிலையில் அந்நாடுகளைவிட அமெரிக்கா முன்னேற்றம் காணவேண்டும் எனவும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் வலியுருத்தின. மேலும் அந்நாடுகளுடன் எந்தவித சமரச கொள்கையும் வைத்திராமல் தீவிர போட்டியில் இறங்கவேண்டும் எனவும் கருத்து தெரிவித்தன.

இதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக பின்னர் வந்த கிளிண்டன் அரசு அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை விற்க சந்தை தேடவும், குறைந்த கூலி உள்ள இடங்களில் பொருட்களை தயாரிக்கவும் ஆதரவு வழங்கியது. வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் பலவும் இதில் அடங்கும். பனிப்போரின் இறுதியில் உலகம் பொருளாதார அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை (1) மேற்கு ஐரோப்பாவின் கீழ் ஐரோப்பாவும் (2) ஜப்பானின் கீழ் ஆசியாவும் (3) அமெரிக்காவின் கீழ் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் என பிரிக்கப்பட்டது. தங்களின் வீழ்ச்சிக்கு இப்பிரிவுகள் வழிவகுக்கும் என நினைத்த அமெரிக்க நிறுவனங்கள் இதை நிலவாரியான பிரிவினை என குற்றஞ்சாட்டியது. இந்த நிறுவனங்கள் ஜப்பானும் ஐரோப்பாவும் கூட தங்கள் கருத்தைத்தான் வலியுருத்துகின்றன என கூறின. மாறாக உலகையே ஒரே சந்தையாக பார்க்க வேண்டும் என்றும் யாரும் எந்த பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் அமெரிக்கா தனது கருத்தை இதன்போது பிரகடனப்படுத்தியது.

இதை கிளின்டன் அரசு ஒப்புக்கொண்டது. இவ்வகையான பிரகடனங்கள், போலியான தரம் குன்றிய எண்ணங்கள் நன்கு திட்டமிட்டதாகவும் பனிப்போரின் வெற்றியை அமெரிக்காவிற்கு ஈட்டித்தருவது போன்றும் இருந்தது. இந்தக் கருத்துக்களை வளரும் நாடுகளிலும் பிரச்சாரப்படுத்தி உலக மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பை பெற்றது அமெரிக்கா. இப்பொழுது அந்த பிரச்சாரங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்றுதான் கூறவேண்டும். அயல்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டை அமெரிக்க பொருட்களுக்கு சந்தையாக ஆக்கி தங்கள் நாட்டு மக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.


உலகமயமாக்கல் என்னும் வார்த்தைக்குப்பின் உள்ள உண்மைகளாவன...

(1)சோவியத் நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உலகில் நிலவியது ஒரே ஒரு பொருளாதாரக் கொள்கை அது தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகமாகும். இதன் மையப்பொருள் “மூலதனம்"(இலாபம் ஒன்றே குறிக்கோள்) என்பதாகும்.

(2)பன்னாட்டு நிறுவனம் எனக் கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களே ஆகாது. ஏனெனில் அந்நிறுவனங்களின் தலைமை ஓரிடத்திலேயே உள்ளது. எனவே அவை அனைத்து நாடுகளிலும் ஈட்டும் இலாபம் ஒரு நாட்டையே அடைகிறது. இந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உற்பத்தி செய்து வணிகம் செய்வதால் வளரும் நாடுகள் இதை வரவேற்க வேண்டிய அவசியத்தில் உள்ளன.

(3)உலகின் எந்த நாட்டு பணத்தையும் எந்த நாட்டிலும் மாற்றலாம். அதற்கு மிக எளிதான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மிக சாதாரணமாகியதால் எங்கிருந்தும் எதையும் கண்காணிக்க இயலும் என்ற நிலை உருவாகியுள்ளதால் இது மிக இலகுவாக செய்யக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மூன்றாம் நிலை நாடுகளில், மேலைநாட்டின் பணத்தையும், அது தீர்மானிக்கின்ற சட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற தவறான நிலையும் உருவாகியுள்ளன. இத்தகைய போக்கிற்கு இசைவதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைப்பாடு இந்த மூன்றாம் நிலை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளன. இவ்வாறு உலகமயமாக்கலால் உலகளாவிய ரிதியில் மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதார ஆக்கிரமிப்பு கடந்த நு}ற்றாண்டுகளில் கிருஸ்தவ மிஸனரிகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட கலாச்சார ஆக்கிரமிப்பைவிட மிகவும் மோசமானதாகும்.

Friday, May 9, 2008

கால இட மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்டங்களும் மாற்றம் பெறுமா?

இன்று பெறும்பாலான முஸ்லிம்களின் உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கை இஸ்லாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது என்பதாகும். இன்னும் இஸ்லாம் எப்போதும் எந்த இடத்திலும் சமூக பொருளாதார, அரசியல் நிகழ்வுகளோடு ஒத்துப்போகக்கூடியது என்றும் கருதுகின்றனர். இன்னும் நவீன கால ஒழுங்குகளுக்கு ஏற்பவும், மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட தேவைகள் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும் இஸ்லாம் தனது சட்டங்களை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துகின்ற மார்க்கம் என்றும் நம்புகின்றனர். இவர்கள் தமது வாதத்திற்கு பின்வரும் அடிப்படைக் காயிதாவை ஆதாரமாகக் கொள்ளுகின்றனர்.

கால மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறுவது மறுக்கப்படமாட்டாது
இந்த அடிப்படையில் அவர்களுடைய நடத்தைகளில் தற்கால யதார்த்த உலகிற்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுப்பதைக் காண்கிறோம். இன்னும் பழக்கவழக்கங்களிலும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வதையும் காண்கிறோம்.
அவர்களிடம் இஸ்லாமிய ஷாPஆ சட்டம் தொடர்பாக வினவப்பட்டால் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதாக இருந்ததாக கூறுவார்கள். இஸ்லாம் கால ஓட்டத்திற்கு ஏற்ப இயங்குவதைக் கடமையாக்கியுள்ளது என்பார்கள். கால மாற்றம் இட மாற்;றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே செயற்படவேண்டும் என்றும் சொல்வார்கள். இவர்கள் வட்டியோடு தொடர்புடைய வங்கிகள், வட்டியோடு தொடர்புடைய நிலையங்கள் இருப்பதையும் நியாயப்படுத்துவார்கள்.

இவை யாவும் யதார்த்தத்தில் முஸ்லிம்ளுக்கு பயனளிக்கக்கூடியவை, எனவே இவற்றை ஏற்றுக்கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்காது. இஸ்லாம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய மார்;க்கம் என்றெல்லாம் இல்லாத அம்சங்களை இட்டுக்கட்டிக் கூறுவார்கள். இதேபோல் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிவதையும், இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாத தேவையற்ற அம்சங்களையும், அந்நியர்களோடு கலப்பதையும் அவை இன்றைய காலத்தின் தேவைகள், எனவே ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கூறுவதையும் நாம் காணமுடிகிறது.

இதுபோன்று பலதாரமணம் காலம் கடந்துவிட்ட சட்டம் என்கின்றனர். அச்சட்டம் இன்று தேவை இல்லை என்கின்றனர். அதுமட்டுமன்றி திருடனின் கையை வெட்டுவது, விபச்சாரத்தில் ஈடுபடுவோரை கல்லடி கொடுத்துக் கொல்வது போன்றவை நவீன கால ஒழுங்கிற்கு பொருத்தமற்றவை, இது பற்றிய ஆய்வே அவசியமில்லை என்கின்றனர்.

இதைப்போன்ற அடிப்படை எண்ணங்கள் முஸ்லிம்களின் உள்ளங்களில் முற்றும் தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்திருப்பதைக் காணமுடிகிறது. இந்தக் கருத்துக்கள் யாவும் முழுமையாகவே இஸ்லாத்திற்கு முரணானவையாகும். இஸ்லாத்தின் அடிப்படைகளையும் விளக்கங்களையும் பாதிக்கக்கூடிய கருத்துகளாகும். உண்மையில் இவைகள் 19ம் நு}ற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கடுமையான சிந்தனைத் தாக்கத்தின் அடையாளங்களாகும். பிறகு மேற்குலக ஏகாதிபத்தியம் இப்படியான கருத்துக்களை வளர்த்துவிட்டது.

இப்படியாக முஸ்லிம் உலகம் மிகக்கடுமையான சிந்தனை வீழ்ச்சிக்கு ஆழாகியிருப்பதைக் காண்கிறோம். இஸ்லாம் எப்படி நவீன காலத்திற்கு முரண்படுகிறது என்பதையும் மேலே கூறப்பட்ட காஇதாவின் யதார்த்த விளக்கம் என்ன என்பதையும் நாம் கட்டாயம் விளங்க வேண்டியுள்ளது. அதாவது அவர்கள் வாதிடுவது போன்று கால இட மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமும் மாறுகிறதா? உண்மையில் இஸ்லாத்தின் சட்டங்கள் யாவும் மனிதனின் உடலியல் மற்றும் பாலியல் தேவைகளை தீர்த்து மனிதனுக்கு முழுமையான தீர்வைக் கொடுக்க வந்த சட்டங்களாகும்.

இஸ்லாமிய ஷாPஆ சட்டம் என்பது மனிதனின் செயற்பாடுகள் தொடர்பாக சட்டமியற்றக்கூடிய அல்லாஹ்வின் கட்டளைகளாகும். ஒவ்வொரு மனித செயலுக்கும் இது அல்லாஹ்வின் கட்டளை என்பதற்கான ஆதாரம் அவசியமாகும். அதாவது குர்ஆனிய வசனத்திலிருந்து, நபிகளாரின் ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சட்டம் மனித செயல் ஒவ்வொன்றிற்கும் அவசியமாகும். அதேபோன்று ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தாக (இஜ்மாவுஸ்ஸஹாபா) இருப்பதும் ஷாPஆ சட்டத்திற்கு போதுமானதாகும். எனவே ஷாPஆ சட்டங்களின் அடிப்படை ஒன்றுதான், வேறு இல்லை.
அது குர்ஆனும் அல்ஹதீஸ{ம் ஆகும். இவை இரண்டினின்றே மனிதர்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய தீர்வுகள் பெறப்படுகின்றன. காலமோ இடமோ குர்ஆனுடைய, ஹதீஸ{டைய இடத்திற்கு ஒருபோதும் வரமுடியாது.
எனவே ஒரு மனிதன் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா-அஸ்-ஸஹாபா, கியாஸ் ஆகியவற்;றின் அடிப்படையில்தான் தனது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஒழுங்குபடுத்தவேண்டும்.

இதேபோல் ஒரு இஸ்லாமிய சமூகம் இவற்றின் மூலமே தமது பிரச்சினைகளுக்;கான தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவே கூடாது.
குர்ஆன் மற்றும் து}தருடைய ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட சட்டங்களைக் கொண்டே எத்தகைய சூழலுக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்பதை அல்லாஹ{த்தஆலா கடமையாக்கியுள்ளான்.

ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமை யாதெனின் சமூகத்தில் ஷாPஆ சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முதலில் சமூகத்தை மிக நுணுக்கமாக ஆராய்வது அவசியமாகும். பிறகு அல்லாஹ்வுடைய ஷாPஆ சட்டப்படி அதற்கு தீர்வைக்காணவேண்டும். இதன்படி இஸ்லாமிய அடிப்படைக்கு ஏற்ப சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஷாPஆவிற்கு மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இஸ்லாத்தை நிலைநாட்டுவது பிழையான, பாவமான காரியமாகும். இஸ்லாத்திற்கு முரண்படுகின்ற அத்தனையையும் நீக்குவது அவசியமாகும்.
இஸ்லாம் ஏவுகின்ற அத்தனையையும் நிலைநாட்டுவதும் நடைமுறைபடுத்துவதும் கடமையாகும். சமூகத்தின் யதார்த்தம் என்பது அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கும் விலக்கல்களுக்கும் ஏற்பவே இருக்கவேண்டும். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப வாழ்வதோ தம்மை மாற்றிக்கொள்வதோ முஸ்லிம்களுக்கு ஒருபோதும் ஆகுமானதல்ல. மாறாக அல்லாஹ்வுடைய வேதத்திற்கும் அவனது து}தரின் சுன்னாவிற்கும் ஏற்ப தீர்வுசொல்வதே அவர்களின் கட்டாயக் கடமையாகும்.

இமாம் மஹ்தி, சயீதினா ஈஸா, தஜ்ஜால் ஆகியோரின் வருகையும் எமது கடப்பாடும்

ஆதம்(அலை) காலம் தொட்டு இன்றைய காலம் வரை மனிதவர்கமானது பல்வேறு இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்து வந்துள்ளது. இன்றைய தலைமுறையோ ஊழலும் ஒழுக்கக்கேடும் நிறைந்த அதிகார வர்க்கத்தால் உலகில் நிகழும் சீர்கேடுகளை கண்கூடாகப் பார்க்கிறது. முதலாளித்துவக் கொள்கையானது உலகின் ஆதிக்கம் அனைத்தும் செல்வந்தர், சக்திவாய்ந்தோர்களிடம் மட்டுமே இருக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கிவிட்டுள்ளது. இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை இனிமேலும் தங்களால் மாற்ற இயலாது என்ற மனோபாவத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட கிறிஸ்தவர்களும், யூதர்களும் அதனை நிவர்த்தி செய்ய முனையாது, தமது சிந்தனையை திசைதிருப்பி, உலகின் முடிவுகாலம் பற்றியும் மறுவரவு பற்றியும் பேசலாயினர். 'விதியை நம்பியிருக்கும்' இத்தகைய முடிவிற்கு வலுச்சேர்க்கும் விதமாக 'நாம் அந்த இரண்டாவது வரவினால் காக்கப்படுவோம்" எனக் கூறுகின்றனர். இன்று அத்தகைய சூழ்நிலைக்கு ஆட்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களும் இதுபோன்ற எண்ணங்களை பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
இந்த மனோபாவத்தில் சிக்கிக்கொண்ட சில முஸ்லிம்கள் இக்கால இன்னல்களைத் தீர்க்க முயற்சி செய்யாமல் கிறிஸ்தவர்கள் இரண்டாவது வரவிற்காhக காத்திருப்பதைப்போல தாமும் இஸ்லாமிய ஆதாரங்கள் சிலவற்றை திரித்துக்கூற முனைகின்றனர். இத்தகைய விளக்கங்கள் முஸ்லிம்களை “பிரச்சனைகளின் காரணங்களை அறிந்து அவற்றினை தீர்க்க வேண்டும்" என்று எண்ணுவதினின்றும் திசை திருப்பி இமாம் மஹதியின் வரவிற்காக எதிர்பார்த்திருப்பதை சரியென வாதிடும் போக்கை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.அரசியல் சமூக மாற்றங்களுக்காக போராடுவதில் அல்லது அதற்காக தீவிரமாக இயங்குவதில் இறைவனின் விதியின் பிடியில் அவற்றை ஒப்படைத்துவிடவேண்டியதுதான் எனக்கூறும் இவர்கள் தமது சொந்த வாழ்க்கை என்று வரும்போது தலைகீழான நிலைப்பாட்டையே காட்டுகின்றனர்.
உதாரணமாக அல்லாஹ்(சுபு) உலக மாந்தர் அனைவருக்கும் ‘ரிஸ்க்’ (உணவு, வாழ்வாதாரம்) ஏற்பாடு செய்திருக்கிறான் அல்லது வழங்குகிறான் என்பது முஸ்லிம்கள் அனைவதும் நம்பிக்கை கொள்ளும் விடயம். எனினும் அதற்காக அந்த ‘ரிஸ்க்’ தனது மடியில் வந்து விழும் வரை காத்திராமல் கடுமையாக உழைத்து, தமது நேரம் அனைத்தையும் செலவு செய்து, மனைவி மக்களை பிரிந்து வெளிநாடு சென்று என எல்லாவகையிலும் அதனை தேட முனைகின்றனர். மற்றொரு கோணத்தில் பார்த்தால் தாம் நோய்வாய்ப்படும்பொழுது விதியினை மட்டும் நம்பியிராமல் மருத்துவரிடம் சென்று மாத்திரை சாப்பிடுவது, அபாயகரமான இடங்களை விட்டும் ஒதுங்கி இருப்பது போன்றவற்றை எவ்வளவு கவனமாக இவர்கள் செய்கின்றார்கள்? இத்தனைக்கும் அஜல்(வாழ்க்கை), மௌத்(மரணம்) ஆகியவற்றை நிர்ணயிப்பவன் அல்லாஹ்(சுபு) என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தமது வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் விதியினை நம்பி காத்திராமல் தமது முழு முயற்சியையும் மேற்கொள்வது அவசியம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது எமக்கு புரிகிறது. இந்த சிந்தனை பிழையானதுமல்ல. மாறாக அல்லாஹ்வின் நாட்டம் எனும் விடயத்தை சீரிய சிந்தனையுடன் இஸ்லாத்திலிருந்து புரிந்து கொண்டால் அது இவற்றை அங்கீகரிப்பதையே காட்டுகிறது. எனவே பொதுவிடயம் என வரும்போது அல்லது அரசியல் சமூக மாற்றத்திற்காக பணியாற்றுவது எனவரும்போது எமது சுயநலத்தினாலேயே நாம் அவற்றை விதியில் கையில் ஒப்படைத்துவிடுகின்றோம் என்பதை நாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முன்னறிவிப்புகள் பற்றி விவரிக்கும் ஹதீஸ்கள் நமது சிந்தனைக்கும் நடைமுறைக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை விவரிக்கின்றன. ஆதலால் அதனைப்பற்றி நாம் ஒரு முடிவிற்கு வர இயலாது. நடைமுறையில் சாத்தியமான பிறகே அவற்றினை நாம் புரிந்து கொள்ள இயலும்.
ஸஹாபா (ரலி) பெருமக்களும் அத்தகைய ஹதீஸ்களை அறிந்திருந்தனர். அவர்கட்கும் நடைமுறையில் அவை சாத்தியமான பிறகே புரிந்தன. ஆனால் ஸஹாபாக்கள் அத்தகைய சூழ்நிலை வரும் வரை பொறுமையாக ஒன்றுமே செய்யாமல் காத்திருக்கவில்லை. மாறாக அத்தகைய ஹதீஸ்களை அவர்கள் நடைமுறையில் கொண்டுவர முயற்சி செய்தனர்.
சல்மான் அல் ஃபர்சி (ரலி) கூறியதாக இப்ன் ஹிஸாம் அறிவிக்கிறார்கள்.“கந்தக் போரின் போது குழி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பாறை நடுவில் இருந்தது. அது வெட்டுவதற்கு கடினமாக இருந்தது. அப்பொழுது அங்கு வந்த நபிகளார் நான் இன்னல்படுவதைக் கண்டார். எனது கையிலிருந்த கோடாரியை வாங்கிக்கொண்டார். அதனைக் கொண்டு பாறையை ஓங்கி அறைந்தார். அப்பொழுது அதன் கீழ் ஒரு தீப்பிழம்பு தோன்றியது. மறுமுறை அறைந்தார். மறுமுறையும் பிழம்பு தோன்றியது. மூன்றாவது முறையும் அவ்வாறே ஆயிற்று. அப்பொழுது நபிகளாரை நோக்கி “யா ரசூலுல்லாவே! அங்கு தோன்றிய தீப்பிழம்பின் அர்த்தம் என்ன?” என வினவினேன். அதற்கு நபிகளார். 'ஓ சல்மான்! நீர் அதனைப் பார்த்தீரா?" என்றார். நான் “ஆம்" எனக் கூறினேன். அதற்கு நபிகளார், முதன்முறை அல்லாஹ் (தெற்கிலுள்ள) யெமனை இஸ்லாத்திற்காக திறந்து விட்டான். இரண்டாவதில் வடக்கையும் (அஸ்-ஷாம்), மூன்றாம் முறை கிழக்கையும் (அல்-மஸ்ரிக்) திறந்துவிட்டான்; எனக் கூறினார்கள்.”
இந்த செய்தி ஸஹாபா(ரலி) பெருமக்களிடையே பரவியபொழுது அவர்கள் சும்மா இருந்து வேடிக்கை பார்க்கவில்லை. அத்தகைய நிகழ்வு நடந்தேறும் என்று காத்திருக்கவில்லை. மாறாக அந்த நிலப்பகுதிகளை இஸ்லாத்திற்காக திறந்துவிடும் முழு முயற்சியில் இறங்கிவிட்டனர். எதிர்கால நிகழ்வுகளை பற்றிய செய்திகளை நாம் படிக்கும் பொழுது நாம் இஸ்லாத்தின் சரியான கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும்.
1. முதலாவதாக அத்தகைய முன்னறிப்புகளில் அந்த நிகழ்வுகள் நடக்கும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு செயலில் இறங்குமாறு எமக்கு வலியுறுத்துப்பட்டுள்ளதா என அறியவேண்டும்.உதாரணமாக நபிகளார் ஸஹாபா(ரலி) பெருமக்களிடம் தஜ்ஜாலின் துயரங்களினின்றும் தம்மை கீழ்கண்ட துஆவின் மூலம் பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அபுஹ_ரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்.
“ எவரேனும் (தொழுகையில்) தஷஹ{த் கூறினால் அவர் அல்லாஹ்விடம் நான்கினின்றும் பாதுகாவல் தேடவேண்டும். 'யாஅல்லாஹ்! நரகத்தின் வேதனையினின்றும், மண்ணறையின் வேதனையினின்றும், வாழ்வு, மரணத்தின் சோதனையினின்றும், தஜ்;ஜாலினாhல் வரும் துயரங்களினின்றும் நான் பாதுகாவல் தேடுகிறேன்." எனப்பிராத்திக்க வேண்டும் கூறினார்கள்”
2. அந்த முன்னறிப்பு இடம்பெறும் போது செய்வதற்கு ஏதேனும் கடமைகள் உள்ளனவா எனப்பார்க்க வேண்டும்.
அந்நவாஸ் இப்ன் ஸாம் அறிவிக்கிறார்கள் : ஸஹாபாக்கள் நபிகளாரிடம் கேட்டார்கள் “தஜ்ஜால் எவ்வளவு காலம் பூமியில் இருப்பான்? “ அதற்கு நபிகளார் கூறினார்கள், ' நாற்பது நாட்கள்! அதில் ஒருநாள் ஒருவருடம் போலவும், மற்றைய ஒரு நாள் ஒரு மாதம் போலவும், மற்றைய ஒரு நாள் ஒரு வாரம் போலவும் இருக்கும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்கள் போலவும் இருக்கும்." அதற்கு ஸஹாபாக்கள் 'ஒரு வருடம் போன்ற நாளுக்கு ஒரு நாள் தொழுகை ஈடாகுமா?" என வினவினார்கள். அதற்கு நபிகளார் 'இல்லை அதற்கான காலத்தை கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்." என்றார்கள்.
இந்த ஹதீஸில் முஸ்லிம்கள் ஒரு வருடம் போன்ற நாள் முன்னறிப்பின்படி நடந்தேறும்போது அந்நாளில் தொழுகைக்கான நேரத்தை கணக்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது கவனத்திற்குரியது.
3.அல்லாஹ்(சுபு)வின் தீனை நிலைநாட்டி, பாதுகாத்து அதனை உலகெங்கும் கொண்டு செல்வதற்காக பாடுபடுவோருக்கு அளிக்கப்படும் து}ண்டுதலாக அந்த முன்னறிப்புகள் அமைந்துள்ளவா என ஆராய வேண்டும்.
அபு உமாமாவின் ஹதீஸில் நபிகளார் கூறுகிறார்கள்: 'எமது சமுதாயத்தில் ஒரு பகுதியினர் உண்மையின் பக்கம் நின்று எதிரிகளை வெற்றிகொள்ள, அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை, அதே நிலையில் போராடுவர்!". 'அது எங்கே?" என நபிகளாரை வினவியபொழுது 'ஜெருசலத்தில்" எனப் பதிலளித்தார்.”
இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் வெற்றிக்காக போராடும் குழுவினருக்கு அல்லாஹ் ஊக்கம் அளிக்கின்றமையை கவனத்திற்கொள்க.4. இந்த முன்னறிவிப்புகளில் எமது சிந்தனைக்கும், கண்ணுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி தர்க்கம் செய்யாதிருத்தல்.
“(அவர்கள்) மூன்று பேர் தாம், அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர். (இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம், அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள், இன்னும் (சிலர்) 'ஏழுபேர், அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள். (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான், சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம், இன்னும் அவர்கள் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். (குர்ஆன்: 18:22)
இந்த திருமறை வசனம் தனக்கு முழுமையாக தெரியாத மறைவான விடயங்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூட கருத்துக்கூற வேண்டாம் எனக்கூறும் அல்லாஹ் முன்னறிவிப்புகள் குறித்த விளக்கமில்லாத எமது ஊகங்கள் குறித்து எவ்வாறு தீர்ப்பளிப்பான் என சிந்திக்க வேண்டியுள்ளது.
5. நமது செயலற்ற, நம்பிக்கையில்லாத தன்மைக்கு இந்த ஹதீத்களை ஒருபோதும் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இஸ்லாத்தினை மறுபடியும் நமது வாழ்க்கையில் நிலைநாட்ட நாம் பாடுபடவேண்டும் என்பதை ஒதுக்கித்தள்ளும் விதமாக இந்த ஹதீத்கள் அமையப் பெறவில்லை. அதற்கும் மேலாக 'அல்லாஹ்(சுபு)வின் தீனை நிலைநாட்டுவது இயலாத காரியம். ஏனெனில் அது அல்லாஹ்(சுபு) நாடியபடியே ஒரு நாள் நிறைவேறும். நம்மால் ஏதும் செய்ய இயலாது" என்று கூறுவது அடிப்படையிலேயே தவறான ஒரு அபாயகரமான சிந்தனையாகும்.
இமாம் மஹ்தியின் வருகை!
உம்மு ஸல்மா (ரழி) அறிவிக்கிறார்கள்.“கலீஃபாவின் மறைவிற்குப் பிறகு சர்ச்சை கிளம்பும். அப்பொழுது மதினாவினின்றும் ஒருவர் மக்காவிற்கு வருவார். அவர் இணங்காமலிருந்தாலும் மக்கள் அவருக்கு (கருங்கல் உள்ள கஃபாவின்) மூலைக்கும், மகாமுன் இப்றாகிமிற்கும் இடையே பையத் செய்வார்கள். ஷாம் (சிரியா) பகுதியிலிருந்து அவருக்கெதிராக ஒரு படை அனுப்பப்படும். அப்படையை மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையிலான நீரற்ற பாலைவனம் விழுங்கிவிடும். அதனைக்கண்ட பின்னர் ஷாமிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் மக்கள் அவருக்கு சத்தியப்பிரமாணம் கொடுப்பர். பிறகு குறைஷியரிலிருந்து, ‘கால்ப்’ இனத்தவரைச் சேர்ந்த ஒருவர் (அவருக்கெதிராக) கிளர்ந்தெழும்புவார். அவருக்கு எதிராக படை அனுப்பப்பட்டு அப்படை அவரை வெற்றி கொள்ளும். போரில் கிடைத்த வெற்றிப்பொருட்களை பிரிப்பதில் மனக்கசப்பு ஏற்படும். அப்பொழுது அவர் (மஹ்தி) சரியாகப் பங்கிடுவார். மேலும் மக்கள் மீது நபிகளாரின் வழியில் ஆட்சிபுரிவார். அவர் ஏழு ஆண்டுகள் இருந்து பின்னர் இறந்துவிடுவார். முஸ்லிம்கள் அவருக்காகப் பிரார்த்திப்பார்கள்.” (அபுதாவூத் புத்தக எண்: 36 ஹதீஸ் எண்: 4273)
இந்த ஹதீத் மூலம் அதிகமான விஷயங்கள் தெளிவாக்கப்படுகின்றன. ஒன்று அவர் முஸ்லிம் உம்மாவின் அங்கமாக இருந்து அவர்களுக்குள்ளிருந்தே வருவார். சில ஹதீத்கள் அவர் நபிகளாரின் (ஸல்) வம்சாவழியில் வருவார் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் அவர் அற்புத சக்தி கொண்டவராக இருக்க மாட்டார். அத்துடன் இறைச்செய்தி எதனையும் பெற்றவராகவும் இருக்கமாட்டார். அவர் இறைவன் அருளியபடி சீரிய முறையில் ஆட்சிபுரிந்து கிலாஃபாவை செழித்திடச் செய்வார்.
இந்த ஹதீதில் 'அவர் இணங்காவிட்டாலும்.." என குறிப்பிடப்பட்டிருப்பதினின்றும், மக்கள் அவரை மனமாற்றுவதினின்றும் அவருக்கு தாம் தான் மஹதி என்பது தெரிந்திராது என புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் “கலீஃபாவின் மறைவிற்குப் பிறகு அடுத்து யார் எனத் தீர்மானிப்பதில் சர்ச்சை கிளம்பும்" என்பது மிகத் தெளிவாக உள்ளது. யாருக்கு பையத் கொடுப்பது என்ற சர்;ச்சை முஸ்லிம் உம்மாவிற்குள் தோன்றியிருக்கும். அதன் பின்னரே மஹ்தி அவர்களுக்;கு பையத் கொடுக்க உம்மத் தீர்மானிக்கும் என்ற செய்திகள் எல்லாம், அதற்கு முன்னரே கிலாஃபா என்பது உலகில் நடைமுறையில் இருக்கும் எனத் தெளிவாக்குவதுடன் மக்களுக்கு கலீஃபாவை நியமிப்பது என்பது குறித்தும் நன்கு பரிட்சயமாக இருப்பார்கள் என இந்த ஹதீஸ் விளக்குகிறது. மேலும் இமாம் மஹ்தி வஹீ மூலம் எந்த இறைச் செய்தியும் பெறமாட்டார் என்பதால்; அவர் முஸ்லிம் உம்மாவிடமிருந்து மட்டுமே இஸ்லாத்தை கற்றறிந்திருக்க முடியும். இந்த ஹதீஸில் 'நபிகளார் வழியில் ஆட்சிபுரிவார்" என்பதும் தெளிவாக உள்ளது. எனவே அவர் முஸ்லிம் உம்மாவால், கலீஃபாவாக நியமிக்கப்படும் அளவிற்கு, கல்வி அளிக்கப்பட்டிருப்பார் என்பது தெளிவாகிறது.
எனவே அவர் வரும் வரை முயற்சி எதுவும் செய்யாமல் காத்திருப்பது என்பது தவறான கருத்தாகும். அவரது வருகைக்கு முன்னரே சில முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தேர வேண்டும். அவற்றுள் ஒன்று கிலாஃபாவை நிலைநிறுத்துவதும், முஸ்லிம்களை இஸ்லாமிய வழியில் வாழ வைப்பதுமாகும். இந்த கடமை முஸ்லிம் உம்மத்திற்கு கடமையாக்கப்பட்டுள்ளதே தவிர இமாம் மஹதிக்கு அன்று.
ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்;ஜாலின் வீழ்ச்சியும்
'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் து}ய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (ஆலு இம்ரான்: 55)
ஈஸா(அலை) அல்லாஹ்(சுபு)வினால் கைப்பற்றப்பட்டார் என இக்குர்ஆனிய வசனம் விளக்குகிறது. மேலும் ஈஸா(அலை) அவர்களின் வருகை பற்றிக் கூறும் எண்ணற்ற ஹதீத்கள் உள்ளன.“எனது ஆத்மாவை தனது கைகளில் கொண்டுள்ளவன் மீதாணையாக! மரியமின் மகன் உங்களிடையே ஒரு நீதிமிக்க ஆட்சியாளராக வந்து இறங்குவார். சிலுவையை உடைத்து, பன்றியைக் கொன்று, ஜிஸ்யாவை நிறுத்திவிடுவார். மிகுந்த வளங்கள் குவியும். உதவியாக வழங்கப்படும் நிதியை ஏற்கும் நிலையில் எவரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஒரு வணக்கமானது இவ்வாழ்கையை விட சிறந்ததாகும்.
”அபு ஹ{ரைரா (ரழி) அறிவித்ததாக புகாரியில் பதியப்பட்டுள்ளதாவது. நபிகளார் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இமாமாக இருக்கையில் மரியமின் மகனார்(ஈஸா) உங்களிடையே இறங்கும் சமயம் உங்களின் நிலை என்ன?அபு-ஹ{ரைரா அறிவித்ததாக சஹ}ஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் தஜ்ஜாலின் ஃபித்னா பற்றியும், தனது பொய்த்தோற்றத்தால் முஸ்லிம்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்குவது பற்றியும் விவரிக்கிறது.
சுழன்றடிக்கும் காற்றைப்போல அவன் மக்களிடையே தோன்றுவான். மக்களை (தன்னை வணங்குமாறு) அழைப்பான். மக்களும் அவனை நம்பி அவ்வழைப்பை ஏற்பார்கள். அவன் வானத்தை கட்டளையிட்டு மழை பொழியும், பூமியை கட்டளையிட்டு பயிர் விளையும். கால்நடைகள் மிகுந்த மயிருடையவனாகவும், பால் நிறைந்த மடியுடையனவாகவும், கொழுத்த வயிறுடையனவாகவும் திரும்பும். அவன் வேறு கூட்டத்தினரை வந்து அழைப்;பான். அவர்கள் அவனது அழைப்பை நிராகரித்துவிடுவார்கள். அவன் அவர்களை விட்டுவிடுவான். காலையில் கண்விழிக்கும் பொழுது அவர்கள் தங்கள் உடமைகளை இழந்திருப்பார்கள். அவன் வறண்ட நிலப்பகுதியை கடந்து செல்கையில் “உனது வளங்களை வெளிப்படுத்து" எனக் கட்டளையிடுவான். தேனீக் கூட்;டம் போல அச்செல்வங்கள் அவனைத் தொடரும். இளமை நிறைந்த ஒருவனை அழைத்து தனது வாழ் வீச்சினால் இரண்டாக்கிவிடுவான். பின்னர் இறந்த அந்த மனிதனை அழைப்பான். பிரகாசமான மலர்ச்சியான முகத்துடன் அவன் உயிருடன் திரும்புவான்.” அதன்பிறகு (தஜ்ஜாலின் இந்த நிகழ்சி நடக்கையில்) அல்லாஹ், மரியமின் மகனார் (ஈஸா) ‘அல்-மஸிஹ்’ஹை இறக்குவான். அவர் டமஸ்கஸின் கிழக்கிலுள்ள வெள்ளை மினாரத்தின் அருகில் இறங்குவார். பளீரென்ற ஒரேன்ஞ்ச் நிற ஆடையில் தனது இரு கைகளையும்; இரு மலக்குகளின் இறக்கைகளில் போட்டவராக தோன்றுவார். அவர் குனியும்பொழுது துளிகள் விழும். அவர் நிமிரும் பொழுது முத்துப்போன்ற கற்கள் விழும். கண்ணுக்கெட்டிய து}ரம் வரை பரவும் அவரது மூச்சுக்காற்றில் இறைவிசுவாசமற்ற யாரும் உயிர் தப்பமுடியாது. அவர் தஜ்ஜாலை (பலஸ்தீன நகரான) லுத் எனும் நகரின் வாயில் வரை துரத்திச் சென்று கொன்றுவிடுவார். அல்லாஹ்வின் உதவியுடன் தஜ்ஜாலை எதிர்த்து நின்ற ஒரு குழுவினர் ஈஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர் அம்மக்களின் முகங்களை தடவி சொர்க்கத்தில் அவர்களது நிலை பற்றி எடுத்துரைப்பார்”. இது நடந்த குறுகிய காலத்தில் அல்லாஹ் “நான் எனது படைப்பின் ஒரு மக்களை யாரும் எதிர்த்துப் போராட முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளேன். எனவே எனது அடியார்களை அத்து}ர் ( "சினாய்"யிலுள்ள மூசாவின் மலை) ரில் கூட்டுவீராக" என வஹீ அறிவிப்பான். பிறகு அல்லாஹ் ‘காக்’; மற்றும் ‘மகாக்கை’ எழுப்புவான். அவர்கள் அதிவிரைவில் அனைத்து மணல் மேடுகளினின்றும் ஒன்றுதிரள்வர். அப்படையின் முன்பகுதி தபாரியாஹ் ஏரியை அடைந்து, அங்குள்ள நீரனைத்தையும் பருகிவிடும். அப்படையின் பின்பகுதி அவ்விடத்தை அடையும்போது “இந்த ஏரியில் ஒரு சமயம் தண்ணீர் இருந்ததே" எனக் கூறுவார்கள்;. இதனிடையே ஈஸா (அலை) அவர்களும் அவருடைய தோழர்களும் ஒரு எருமையின் தலை இன்றைய நு}று தினாரைவிட பெறுமதிமிக்கதாக மாறும் அளவிற்கு சுற்றி வளைக்கப்படுவார். ஈஸா (அலை) அல்லாஹ்விடம் உதவியைத் தேடுவார். அல்லாஹ் நக்ஹாஃப்(புழு)வை காக் மற்றும் மாகாக்கின் கழுத்தில் அனுப்புவான். காலை உதிக்கும் வேளையில் அனைவரும் ஒரே ஆத்மாவைப்போல உயிர் துறந்திருப்பர். பிறகு ஈஸா அவர்கள் தமது தோழர்களுடன் (அத்து}ர் மலையினின்றும்) கீழிறங்குவார்.அங்கு இறந்த உடல்கள் இல்லாத ஒரு கையளவு நிலம் கூடத் தென்படாது. அப்பொழுது அல்லாஹ்விடம் இறைஞ்சுவர். ஒட்டகத்தின் கழுத்து போன்ற அளவுள்ள பறவைகளை அல்லாஹ் அனுப்புவான். அவை (இறந்த உடல்களை) து}க்கிச்சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசி எறியும். பிறகு அல்லாஹ் மண்ணாலான வீடோ அல்லது விலங்குகளின் முடிகளாலான வீடோ தப்பமுடியாதபடி மழையை அனுப்புவான். அது பூமியை கண்ணாடிபோல் சுத்தம் செய்துவிடும். பூமியைப்பார்த்து “ கனிகளை முளைப்பித்து புனிதத்தைப் பெற்றுக்கொள்" என (அல்லாஹ்;) கட்டளையிடுவான். பிறகு அவர்கள் மாதுளையின் கனியை உண்டு அதனடியில் இளைப்பாறுவர். ஒட்டகங்கள் அதிக மக்கள் கூட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் சுரக்கும். அப்பொழுது அல்லாஹ் து}ய காற்றினை அனுப்பிவைத்து முஸ்லிம்களின், இறைவிசுவாசிகளின் ஆத்மாவை கைப்பற்றிக்கொள்வான். கேடுவிளைவிப்போர் மட்டுமே எஞ்சியிருப்பர். அவர்கள் கழுதைகள் போல் உறவு கொள்வார்கள். அவர்கள் மீது காலம் தொடங்கும்.”
இந்த ஹதீத்களை கவனித்தால் ஈஸா(அலை) பூமிக்குத் திரும்புவார் எனவும் அவர் முஹம்மது நபியின்(ஸல்) ஷாPஆவின்படி ஆட்சிசெய்பவராக இருப்பார் எனவும் அறிய முடிகிறது. பல ஹதீஸ்கள் அவர் கலீஃபாவுடன் ஆலோசனை செய்வார் எனவும் உள்ளது. அதாவது உலகில் ஏற்கனவே கிலாஃபா இருக்கும் என இவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இது ஈஸாவின்(அலை) வருகையின்போது கிலாஃபா அரசு இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே இன்றைய முஸ்லிம்கட்கு கிலாஃபாவை நிலைநாட்டுவதற்காக ஒரு து}ண்டுதலாக இந்த ஹதீஸ்கள் அமையவேண்டும். ஏனெனில் கிலாஃபா இல்லாது ஈஸாவின்(அலை) மறுவரவு இருக்காது. கிலாஃபா அரசு தஜ்ஜாலின் ஃபித்னாவிலிருந்து காக்கும் என்பதனையும் ஹதீஸ்கள் விளக்குகின்றன. இதனை கீழ்வரும் நபிகளாரின் (ஸல்) கூற்று தெளிவுபடுத்துகிறது.
“இமாம் ஒரு கேடயம் ஆவார். அவரின் பின்னால்; நின்றே நீங்கள் போராடுகிறீர்கள்; அவர் மூலமாகவே நீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்கிறீர்கள்.”
இந்த அடிப்படையில் இமாம் மஹ்தி மற்றும் ஈஸா(அலை) அவர்களின் வருகைக்காக காத்திருந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உட்காந்திருப்பது எந்த வகையிலும் சரியானதன்று. கிலாஃபாவை நிலைநாட்ட பாடுபடாமைக்கு பல முஸ்லிம்கள் இந்த ஹதீஸ்களை காரணம் காட்டுகிறார்கள்;. இமாம் மஹ்தி வரும் வரை இப்பூமியானது அநியாயத்தால் நிறைந்திருக்கும் என்றும், இமாம் மஹ்தி வந்தபிறகே முஸ்லிம் உம்மா புத்துயிர் பெறும் என்றும் அவர்கள் தவறாக எண்ணியுள்ளனர். இஸ்லாத்தினை நிலைநாட்ட பாடுபடுவது ஃபர்ள்; என்ற விளக்கத்தை தவிர மேற்கண்ட ஹதீஸ்களில் வேறெந்த விளக்கங்களும் இருப்பதாக எம்மால் உணர முடியவில்லை.எனவே நாம் அல்லாஹ் (சுபு) அருளியபடி ஆட்சி செய்யும் ஒரு இஸ்லாமிய அரசினை கிலாஃபாவை நிலைநாட்ட பாடுபடவேண்டும். அது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.!