Tuesday, March 23, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - இறுதிப்பகுதி (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

இஸ்லாமிய சித்தாந்தத்தின் வெற்றியை குறிக்கும் இரண்டாவது விஷயம் என்னவெனில், அக்கால கட்டத்தில் இஸ்லாமிய உம்மாதான் அறிவியலிலும், கலாச்சாரத்திலும், பொருளாதார முன்னேற்றத்திலும், நாகரீகத்திலும் உலகின் முன்னணி சமுதாயத்தினராக விளங்கினார்கள் என்பதுதான். கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பன்னிரெண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய அரசு உலகின் முன்னணி தேசமாகவும், மகா வல்லரசாகவும் விளங்கியது. இந்த காலகட்டம் முழுவதும் அது உலகின் பூஞ்சோலையாகவும், தேசங்களுக்கிடையில் உதய தாரகையாகவும் விளங்கிய உண்மை இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் வெற்றியையும், மக்களிடம் இஸ்லாமிய ஆட்சி முறையும் அதன் அகீதாவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும் உறுதி செய்கிறது. இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய உம்மாவும் அதன் அறிவார்ந்த தலைமையை எடுத்துச் செல்லும் மகத்தான பணியினை கைவிட்டதன் காரணமாகவும், இஸ்லாத்தை புரிந்து கொள்ளவும், செயல்படுத்தவும் முனைப்பு காட்டாததன் காரணமாகவும், அது பலவீனம் அடைந்து மற்ற தேசங்களுக்கடையில் வீழ்ச்சியுற்றது.








ஆகவே நாம் கூற வருவது என்னவென்றால் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைதான் சரியானது. உலகம் முழுவதற்கும் அதை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தலைமைத்துவத்தை எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசு நிறுவப்படும் போது கடந்த காலத்தில் கண்டது போலவே அதன் வெற்றியை இன்றைய நாட்களிலும் காணலாம்.





இஸ்லாத்தின் அகீதாவும், அதிலிருந்து பிறக்கும் அதன் வழிமுறையும் மனிதனுடைய இயற்கை தன்மையோடு ஒத்துப் போகிறது என்பதை நாம் நிரூபித்து இருக்கிறோம். இஸ்லாத்தைப் பொருத்தவரை மனிதனை துல்லியமாக செயல்படும் இயந்திரமாக அது பார்ப்பதில்லை. மேலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் அதன் வழிமுறையை நுட்பமான கணித அளவுகோளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும்படியும் அது கோருவதில்லை. இதற்கு மாறாக, இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி. அவன் வழிமுறைகளை மாறுபட்ட திறனிலும் வேறுபட்ட தன்மையிலும் செயல்படுத்தக் கூடியவன். ஆகவே, ஒருபக்கம் இஸ்லாம் மனிதர்கள் அனைவரையும் சம தரத்தினர்கள்; எனக்கொள்ளாத அதேசமயம், மனிதர்களுக்கிடையில் உள்ள இடைவெளியை இயல்பாக குறைத்து அனைவருக்கும் மன அமைதி தரும் சூழலுக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. மறுபக்கம் சில தனிநபர்கள்; இஸ்லாமிய (முறைமையிலிருந்து) வழிமுறைகளிலிருந்து விலகி செல்வதையும், அதற்கு கட்டுப்படாது நடப்பதையும், மேலும் சிலர் அதனை உதாசீனம் செய்வதையும், அல்லது அதன் வழிமுறையை புறக்கணிப்பதையும் நாம் அங்கே அவதானிக்கலாம். தவிர்க்க முடியாத வகையில் சமூகத்தில் தீய செயல்புரிபவர்கள் (Fussaq)  குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் (Fujjar),  இறைநிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் (Murtaddun)  மற்றும் நாத்திகர்கள் (Mulhidoon)  போன்றோர் இருந்து வருவார்கள். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்லாத்தின் பார்வையில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள், செயலாக்க அமைப்புகள் (முறைமைகள்) (System) மற்றும் அதனை ஏற்றுக் கொண்ட மனிதர்கள் ஆகிய அனைத்தும் மொத்தமாகக் கருதப்படும்போது அது இஸ்லாமிய சமூகமாக கருதப்படுகிறது. அந்த சமூகம், மேற்கண்ட காரணிகள் தன்னுள் இஸ்லாத்தை கொண்டிருக்கும்போது இஸ்லாத்தை அமூல்படுத்துகிறது.







முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாமிய வழிமுறைகளை செயல்படுத்திய அளவிற்கு வேறு எவராலும் செயல்படுத்த இயலவில்லை என்பதுதான் இதற்குரிய ஆதாரமாகும். எனினும்;, அவர்கள்(ஸல்) காலத்திலும் நிராகரிப்பவர்களும், நயவஞ்சகர்களும், இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களும், தீயசெயல் புரிபவர்களும், நாத்திகர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆகவே, இதன்மூலம் இஸ்லாம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எவரும் கோர முடியாது. மேலும் இஸ்லாம் சமூகப்பிராணியான மனிதன் மீதே தன்னை நடைமுறைப்படுத்தப்படுகிறதே தவிர இயந்திரத்தின் மீதல்ல.







இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினாவில் குடியமர்ந்த நாளிலிருந்து காலனி ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்து, இஸ்லாத்திற்கு பதிலாக முதலாளித்துவ வழிமுறையை (ஊயிவையடளைஅ) அதனுள் கொண்டுவரும் வரை, அரபு மற்றும் அரபு அல்லாத அனைத்து இஸ்லாமிய உம்மா மீதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது.






ஆகவே, ஹிஜ்ரி முதல் ஆண்டிலிருந்து ஹிஜ்ரி 1336 வரை (கி.பி.1918) இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் இஸ்லாமிய உம்மா அந்த காலகட்டம் நெடுகிலும் இஸ்லாமிய ஆட்சிமுறையைத் தவிர வேறு எந்த ஆட்சிமுறையையும் நடைமுறைப்படுத்தவில்லை.







முஸ்லிம்கள் தத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு அந்நிய கலாச்சாரம் தொடர்பான நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்த போதிலும், ஒரு காலத்திலும் அந்நிய சட்டங்கள், அல்லது ஆட்சிமுறை, அல்லது அரசாணை ஆகியவற்றை மொழியாக்கம் செய்ததில்லை. அவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவுமில்லை. நடைமுறைப்படுத்த சிந்தித்ததுமில்லை. இஸ்லாத்தை ஒரு வழிமுறையாக எடுத்துக் கொண்டு சிலர் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். இன்னும் சிலர் தவறாக நடைமுறைப்படுத்தினார்கள். இது இஸ்லாமிய அரசின் பலம் மற்றும் பலவீனத்தை பொருத்ததாகவோ, இஸ்லாத்தை புரிந்து கொண்ட பரிமாணத்தைப் பொருத்தும் அல்லது அது குறித்த குறைபுரிதல்களை பொருத்தும் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம் பலமாகவும், திருப்த்திகரமாகவும் காவிச்செல்லப்பட்ட முறையைப்பொருத்தும் அமைந்தது. முடிவாக சில கால கட்டங்களில் இஸ்லாம் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இஸ்லாமிய சமூகத்தில் ஒருவகை வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. ஆனால் இந்நிலையானது எந்த ஒரு ஆட்சிமுறையும் தவிர்த்துக் கொள்ள இயலாத விஷயமாகும். ஏனெனில் இந்நிலை ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் மனிதர்களைப் பொருத்திருக்கிறது. இருந்த போதிலும், இஸ்லாத்தை தவறாக நடைமுறைப்படுத்தியதை வைத்து இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூற முடியாது. நிச்சயமாக இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாம் அல்லாத வேறொரு வழிமுறையோ அல்லது சித்தாந்தமோ செயல்படுத்தப்படவேயில்லை. இது ஏனெனில் இஸ்லாமிய அரசு அமூல்படுத்திய ஆட்சிமுறை மற்றும் அரசாணை என்பவை இதனை வலியுறுத்தும் சான்றாகும். இந்த வகையில் இஸ்லாமிய அரசு இஸ்லாத்திற்கு அந்நியமான அரசாணைகளையோ அல்லது ஆட்சி முறையையோ ஒருபோதும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியதில்லை. என்ன நடந்தது என்றால் சில ஆட்சியாளர்கள் சில வழிமுறைகளை தவறாக நடைமுறைப்படுத்தினார்கள். எனினும் இதற்கு மேல் ஆழமாக பார்க்க வேண்டுமானால், வரலாறு முழுவதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதை ஆய்வு செய்யும் போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவதாக, இஸ்லாத்தைப் பொருத்து தங்கள் நெஞ்சங்களில் வெறுப்பை சுமந்து கொண்டிருக்கின்ற இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து வரலாற்றை நாம் எடுக்கக்கூடாது. இதற்கு மாற்றமாக, திரிக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதிருக்கும் பொருட்டு, விரிவான ஆய்வுக்குப் பிறகு முஸ்லிம்களிடமிருந்தே வரலாறு எடுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, சமூகத்தை ஆய்வு செய்யும் பொது விதியை, தனி மனிதர்களின் வரலாற்றிலிருந்தோ அல்லது சமூகத்தின் ஏதேனும் ஒரு அம்சத்தை வைத்தோ முடிவு செய்யக்கூடாது. உதாரணமாக உமையாக்களின் வரலாற்றை தீர்மானிப்பதற்காக யெஸீதின் (Yazid) வரலாற்றை மட்டும் ஆய்வு செய்யக்கூடாது. அல்லது அப்பாஸியாக்களின் (Abbassid)  வரலாற்றை தீர்மானிப்பதற்காக, அவர்களின் சில கலீஃபாக்கள் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மட்டும் கவனிக்கக் கூடாது. அதுபோலவே சங்கீத நூல்களை வைத்து அப்பாஸியா காலத்து இஸ்லாமிய சமூகத்தை தீர்மானிக்கக்கூடாது. பொறுப்பற்ற ஊதாரித்தனமான மனிதர்களையும், கவிஞர்களையும் நூல் ஆசிரியர்களையும் பற்றி விவரிப்பதற்காக அவைகள் எழுதப்பட்டவை. அல்லது துறவறம் பற்றிய நூல்களையும் அதைப்போன்ற இதர நூல்கiளுயும் பயின்றதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகமும் ஊதாரித்தனமாகவும் பாவத்திலும் இருப்பதாகவும் அல்லது துறவறத்திலும் தனிமையிலும் இருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு எழுதப்பட்டவை அவை. மாறாக, நாம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். எனினும், இஸ்லாமிய சமூகத்தின் முழு வரலாற்றிலும் எந்தவொரு கால கட்டத்திலும் சமூகம் என்ற பார்வையில் வரலாறு எழுதப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாறாக, சில ஆட்சியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பற்றிய சில விஷயங்கள்தான் எழுதப்பட்டன. இத்தகைய வரலாற்று ஆசிரியர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர். அவர்கள் ஒன்று அவதூறு செய்பவர்களாகவோ அல்லது முகஸ்துதி செய்பவர்களாகவோதான் இருக்க வேண்டும். எனவே அவர்களின் கூற்றுக்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள இயலாது.







இந்த அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தை ஆய்வு செய்மோமானால், அதாவது அதன் அனைத்து அம்சங்களையும் விரிவான மற்றும் முறையான சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும்பட்சத்தில் அதுதான் மிகச்சிறந்த சமூகம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஹிஜ்ரி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளிலும், உண்மையாக கூறுவதென்றால் ஹிஜ்ரி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை (கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு) இவ்வாறே இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்ற வகையில் உதுமானிய அரசின் இறுதிக் காலம் வரையில் வரலாற்றின் நெடிய கால ஓட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமிய சமூகத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நிச்சயமாக காணலாம். இஸ்லாமிய சட்டங்களையும், ஆட்சிமுறையையும் ஆய்வு செய்வதற்கு ஆதாரமாக வரலாற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. மாறாக, நீதித்துறையின் மூலங்களிலிந்து பெற வேண்டும்;. ஏனெனில் நீதித்துறையின் சான்றாக வரலாறு இருக்க முடியாது. இந்த அடிப்படையில் கம்ய+னிஸ ஆட்சி முறையை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் ரஷ்யாவின் வரலாற்றை வைத்து தீர்மானிக்க இயலாது. மாறாக கம்ய+னிஸ சித்தாந்தத்தை விவரிக்கும் நூலிலிருந்துதான் தீர்மானிக்க வேண்டும். இதுபோலவே இங்கிலாந்து நாட்டின் நீதி நெறியியலை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில், இங்கிலாந்தின் வரலாற்றைப் பார்க்கக் கூடாது. மாறாக இங்கிலாந்தின் நீதிநெறி அடிப்படைடையை (Jurieprednece)  பார்க்க வேண்டும். இது எந்தஒரு ஆட்சி முறைக்கும் அல்லது அரசாணைகளுக்கும் (Canons)  பொருந்தும்.






தனக்கு உரித்தான அகீதாவையும் ஆட்சிமுறையையும் கொண்ட சித்தாந்தம்தான் இஸ்லாம். அதை விளங்கிக் கொள்ள விரும்பும் ஒருவர், இஸ்லாத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்திற்காகவும், இஸ்லாமிய சட்டங்களான அஹ்காமை ஏற்படுத்துவதற்கும் இஸ்லாத்தின் வரலாற்றை ஆதார மூலமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.






இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கு இஸ்லாமிய சட்டங்களை விளக்கும் நூல்களும் இஸ்லாத்தின் சட்டங்களை யாப்பதற்கு அதற்கு அடிப்படையாகவுள்ள ஆதாரங்களுமே உரிய மூலங்களாக இருக்கின்றன. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறையை ஆய்வு செய்வதற்கோ அல்லது இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கோ, அல்லது இஸ்லாமிய சட்டங்களை  ஆய்வு செய்வதற்கோ வரலாறு சரியான ஆதார மூலமாக கொள்ளப்படமாட்டாது.







எனவே, அஹ்காம் ஷரிஆவிற்கு ஆதார மூலமாக உமர் இப்னு கத்தாப்(ரழி) அல்லது உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அல்லது ஹாரூன் அல் ரஷீத் (ரஹ்) ஆகியவர்களின் வரலாறுகளை எடுத்துக் கொள்வது தவறான முறையாகும். அது அவர்கள் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் காலத்தில் எழதப்பட்ட நூல்களாக இருந்தாலும் சரியே. ஒரு விஷயத்தில் உமர்(ரழி) அவர்களுடைய கருத்து பின்பற்றப்பட்டிருக்குமேயானால் அது யாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஹ{க்கும் ஷரிஆ என்ற அந்தஸ்த்தில் மட்டும்தான் பின்பற்றப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு இமாம் அப+ ஹனிஃபா (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் ஜாஃபர் (ரஹ்) ஆகியோர் ஹ{க்கும் ஷரிஆவை யாத்து அளித்தார்களோ அதுபோன்றதுதான். ஏனெனில் அது ஒரு வரலாற்று நிகழ்வாக பின்பற்றப்படவில்லை. இதன் அடிப்படையில் இஸ்லாமிய (முறைமையை) செயலாக்க அமைப்பை (System of Islam) நிதாம் அல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது மற்றும் அதை அறிந்து கொள்வது ஆகியவற்றுடன் வரலாற்றுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. மேலும், ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு வரலாற்றைவிட இஸ்லாமிய சட்டங்கள்தான் பொருத்தமான சிறந்த சான்றாக இருக்கும். இது ஏனெனில், ஒவ்வொரு கால கட்டமும் ஒவ்வொரு பிரச்சினைகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது. அவைகள் ஒரு செயலாக்க அமைப்பைக் கொண்டே கையாளப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட செயலாக்க அமைப்பை அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் இஸ்லாமிய சட்டங்களைப் பார்க்க வேண்டுமே தவிர வரலாற்று சம்பவங்களை அல்ல. ஏனெனில் அவை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றிய செய்தியைத்தான் வரலாறு நமக்கு அறிவிக்கிறது. இஸ்லாமிய சட்டங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒருவரால் இஸ்லாமிய நிதாமைத் தவிர வேறொன்றையும் காண முடிவதில்லை என்பதுடன். முஸ்லிம்கள் தாங்களாகவே வேறொரு நிதாமை தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமில்லை என்பது புலனாகும். இதற்கு மாற்றமாக, அங்கே ஷரிஆ ஆதாரங்களிலிருந்து யாக்கப்பட்ட அஹ்காம் ஷரிஆவையே முழுக்க முழுக்க காண நேரிடுகிறது. குறையுள்ள (பலகீனமான) இஜ்திஹாத்தை நீக்கியது மூலமாக முஸ்லிம்கள் நீதி நெறியை (Juripredence)  மிக எச்சரிக்கையாகக் கையாண்டார்கள். முஜ்தஹித் முத்தலக்குடைய இஜ்திஹாத் என்ற போதிலும் அது குறையுள்ள  இஜ்திஹாதாக இருக்கும்பட்சத்தில் அதை பின்பற்றக்கூடாது என்று முஸ்லிம்கள் தடை செய்தார்கள்.






இதன் விளைவாக இஸ்லாமிய உலகின் அனைத்துக் காலகட்டத்திலும், இஸ்லாமிய சட்டங்களைத் தவிர இஸ்லாம் அல்லாத அரசாணை (Canon)  ஒன்றைக் கூட காண முடியவில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரேயொரு நீதி நெறி அடிப்படை மட்டுமே இருந்தது என்பதும் அங்கே வேறு அந்நிய அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதும், அந்த சமுதாயம் அதன் அரசாணைகளில் வேறொரு நீதி நெறியை பயன்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாக (ஆதாரமாக) திகழ்கின்றன.








வரலாற்றில் கவனம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால், முறைமையை (நிதாம்) எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆய்வு செய்வதோடு மட்டும் அது குறுகிவிடும். வரலாறு அரசியல் நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கலாம், அதிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட்ட நிதாம் (செயலாக்க அமைப்பு) தெரிய வரலாம். என்றாலும் கூட முஸ்லிம்களிடமிருந்து வரலாறு எடுக்கப்படாத வரை, அது முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வரை, அது வரலாறாக அது எடுத்துக்கொள்ளப்படாது. வரலாறு மூன்று மூலங்களிலிருந்து கிடைக்கிறது: அவை வரலாற்று நூல்கள், தொல்பொருள் படிவங்கள் மற்றும் அறிவிப்புகள்(Narration).  வரலாற்று நூல்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, ஏனெனில் அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழலின் செல்வாக்கு அதனைப் பாதித்திருக்கலாம். அல்லது அவைகளில் பொய்கள் நிறைந்திருக்கலாம். அல்லது எந்த காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டனவோ அந்த காலகட்ட மனிதர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டிருக்கலாம். அல்லது இந்த நூல்கள் எழுதப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் இருந்தவர்களை சாடும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் எகிப்து நாட்டின் அல்லாவைது(Allawide)  குடும்பத்தின் வரலாறு ஆகும். கி.பி.1952-க்கு முன்பு உள்ள வரலாற்று நூல்களில் அந்த குடும்பத்திற்கு பிரகாசமான நற்பெயர் இருந்தது. ஆனால் கி.பி.1952க்கு பிறகு அந்த குடும்பத்தின் பெயர் வரலாற்றில் மங்கிப் போனது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அரசியல் நிகழ்வுகளின் வரலாற்றில் இதே நிலைதான் இருந்து வருகிறது. இந்த காரணத்தால் சுய சரிதங்கள் அதன் மக்களால் எழுதப்பட்ட போதிலும் மெய்யான வரலாற்றை கணிப்பதற்கு வரலாற்று நூல்களை அதற்கு மூலமாகக் கொள்ளக்கூடாது.






தொல்பொருள் படிவங்கள் (Archaeological Objects) நேர்மையான முறையில் ஆய்வு செய்யப்பட்டால் அதிலிருந்து வரலாற்று தகவல்கள் கிடைக்கக்கூடும். அவைகள் வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பற்றியக் குறிப்பை அளிக்க முடியாவிட்டாலும் நிகழ்வுகள் நடந்த குறிப்பை அளிக்கக்கூடும். இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் பழங்காலத்து படிவங்களை அது கட்டிடமாக இருந்தாலும், கருவிகளாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகையான பொருட்களாக இருந்தாலும் சரி, ஒருவர் ஆய்வு செய்தால் இஸ்லாமிய ஆட்சிமுறை இஸ்லாமிய சட்டங்கள் என்பவற்றைத் தவிர இஸ்லாமிய பூமியில் வேறு எதையும் அவர் காணமாட்டார். மேலும் அவர் இஸ்லாமிய வழிமுறையின்படியே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.







மூன்றாவது ஆதார மூலமான அறிவிப்புகளை (Narration) பொருத்தவரை அது ஒரு சரியான ஆதார மூலமாக இருக்கிறது. அந்த அறிவிப்பு சரியானதாக இருக்கும்பட்சத்தில் நாம் அதை நம்பலாம். மேலும் ஹதீஸ்கள் எந்த வழிமுறையில் திரட்டப்பட்டதோ அதே வழிமுறையில் தான் இவைகளும் திரட்டப்பட்டன. வரலாற்றை இந்த முறையில்தான் தொகுக்க வேண்டும். முஸ்லிம்கள் எழுதுவதற்கு ஆரம்பித்தவுடன் இந்த முறையைதான் பின்பற்றினார்கள். அத்தபரியின் (At - Tabari)  வரலாறு, இப்னு ஹிஷாமின் (Ibn Hishem)  சீறா போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த வரலாற்று நூல்கள் யாவும் இந்த முறைப்படியே எழுதப்பட்டன. முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வரலாற்று நூல்களிலிருந்து போதிக்கக்கூடாது. ஏனெனில் அவைகளுக்கு இஸ்லாமிய ஆதார மூலம் எதுவும் இல்லை. எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய நிதாம்  நடைமுறைப்படுத்தப்பட்டதை பற்றிய அனைத்துக் கண்ணோட்டத்தையும் இந்த நூல்களிலிருந்து எடுக்கக்கூடாது. முடிவாக, இஸ்லாமிய அரசின் முழு காலகட்டத்திலும் இஸ்லாம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. வேறு எந்த அந்நிய செயலாக்க அமைப்பும் Nidam - System) நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.







எனினும் முதல் உலகப்போரில்  இறுதிகட்டம் கூட்டணி படைகளின் வெற்றியில் முடிவடைந்தது. அந்த போரின் தளபதி பொறுப்பை ஏற்றிருந்த லார்டு ஆலன்பி (Lord Allenby)  ஜெருசலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது, இப்போது சிலுவை யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அறிவிப்பு செய்யும் அளவிற்கு அவர்களின் வெற்றி நிலை உட்சத்தில் இருந்தது. அதன் பின்னர், காலனி ஆதிக்க குஃப்பார்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முதலாளித்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தி நமக்கு எதிராக பெற்ற வெற்றியை தொடரும்படி செய்தார்கள். ஆகவே இந்த அழிகிப்போன ஊழல் மிகுந்த ஆட்சிமுறையை நிச்சயமாக நாம் புறக்கணித்து விட வேண்டும். ஏனெனில் அதனைக் கொண்டு தான் நமது தேசங்களை அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இத்தகைய மோசமான, சீர்கேடான முறைமையை வேரோடும் வேரடி மண்ணோடும் நாம் பிடிங்கி எறிய வேண்டும்.







நமது இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு பதிலாக அந்நிய ஆட்சிமுறையை கொண்டு வரலாம் என்ற சிந்தனை வீழ்ச்சியினால் ஏற்படும் மேம்போக்கான எண்ணமாகும். மேலும், அதன் அகீதாவை விட்டுவிட்டு ஆட்சிமுறையை நடைமுறைபடுத்தினால் அது உம்மாவை பாதுகாக்கும் என்று கருதுவதும் கருத்தாழம் இல்லாத சிந்தனையாகும். எனவே இஸ்லாமிய உம்மா முதலில் அகீதாவை தழுவ வேண்டும். பிறகு அந்த அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து (அகீதா) பிறந்த ஆட்சிமுறையை அமூல்படுத்த வேண்டும். ஆட்சிமுறையை அமல்படுத்துவதும் அகீதாவை தழுவிக் கொள்வதும் தான் நம்மைக் காப்பாற்றும். இது உம்மாவின் மீது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய உம்மா என்பது இஸ்லாமிய சித்தாந்தத்தின் மீதும், இஸ்லாமிய அரசு மீதும் நிலைக் கொண்டிருக்கிறது. அதன் அரசு அகீதா என்னும் அடிப்படை மீது தான் நிறுவப்பட்டிருக்கிறது. மற்ற மக்களையும், நாடுகளையும் பொருத்தவரை, அவர்கள் மீது இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் முன்னேற்பாடாக இதை அவர்கள் தழுவ வேண்டிய அவசியமில்லை. இந்த சித்தாந்தத்தை தழுவி அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சமுதாயம், மற்றவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்ற போதும் அதை அவர்கள் மீது நடைமுறைப்படுத்த முடியும். இது ஏனெனில் இந்த சித்தாந்தத்தின் விளைவாக அதை தழுவியுள்ள சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் போது மற்றவர்களையும் கவர்ந்திழுத்து நம்பிக்கைக் கொள்ளச் செய்யும். ஆகவே, சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றவர்கள் அதை தழுவ வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. மாறாக அதை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு அது ஒரு மிக முக்கிய நிபந்தனையாகும்.







பொதுவுடமை கோட்பாட்டோடு இணைத்து தேசிய வாதத்தை ஏற்றுக்கொள்வது ஆபத்தான செயலாகும். பொதுவுடமை கோட்பாடு அதன் இயற்பொருள்வாத சிந்தனையிலிருந்து (Meterialistic thought)  பிரிக்கப்பட முடியாதது. ஏனெனில் அந்நிலையில் அது ஆக்கப்ப+ர்வமானதாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்த ஆற்றல் பெற்றதாகவோ இருக்காது. இயற்பொருள்வாத சிந்தனையோடு பொதுவுடமை கோட்பாட்டை சேர்த்து அமூல்படுத்த இயலாது. ஏனெனில் அது எதிர்மறையான சிந்தனையாகவும்  (Negative thought) மனித இயல்புக்கு (Fitrah)  முரண்பாடானதாகவும் இருக்கிறது. மேலும் இதை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் என்னவென்றால் இஸ்லாமிய சமுதாயம் இஸ்லாமிய அகீதாவை கைவிட்டு விட வேண்டும் என்பதுதான். ஒரே நேரத்தில் பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய ஆன்மீக அம்சங்களை தக்கவைத்துக் கொள்வதென்பது நம்மால் இயலாது. அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுகிறது என்ற உண்மையின் அடிப்படையில் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை, பொதுவுடமை கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலையில் இது முடிந்து விடும். பின்பு நாம் ஏற்றுக் கொண்டவைகள் முழுமையற்றதாக ஆகிவிடும். அது போலவே இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு  அதன் அகீதாவிலிருந்து பிறப்பதினால் அகீதா இல்லாத நிலையில் செயலாக்க அமைப்பான நிதாமை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி செய்தால் ஆன்மீக அடிப்படை இல்லாத அதிகாரப் போக்குடைய நிதாமை ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தை முழுமையாக அதன் அகீதாவோடும், செயலாக்க அமைப்பான நிதாமோடும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை (Da’awa)  மேற்கொள்ளும் போது அதன் அறிவார்ந்த தலைமையை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.






இதன் அடிப்படையில் நாம் மறுமலர்ச்சி எய்துவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதுதான் அந்த வழியாகும். மேலும் இஸ்லாமிய அரசு ஒன்றை நிர்மானிப்பதைத் தவிர இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு வேறு எந்த வழியும் எமக்கில்லை. அகீதா என்றளவிலும் (முறைமை) செயலாக்க அமைப்பு (Nidam)  என்ற அளவிலும் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் ஒழிய இதை நம்மால் செய்து முடிக்க இயலாது. அகீதா என்றளவில் அது மனிதனின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வைக் கொடுக்கிறது. அதன் மீது தான் மனிதனின் இந்த வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் குவிந்து கிடக்கிறது. ஆட்சிமுறைப் போன்ற அனைத்து செயலாக்க அமைப்புகளும் அதன் அகீதாவிலிருந்தே பிறக்கின்றன. இந்த செயலாக்க அமைப்பின் (Nidam)  அடிப்படை அல்லாஹ்(சுபு)வின் வேதநூலும், அவனுடைய திருத்தூதர்(ஸல்) அவர்களின் சுன்னாவும் தான். இஸ்லாமிய சட்டங்கள், ஹதீஸ்கள், குர்ஆன் விரிவுரை (tafseer), அரபு மொழி ஆகியவைகளும் மற்றவைகளும் அதன் கலாச்சார புதையலாக இருக்கின்றன. இஸ்லாத்திற்காக அதன் அறிவார்ந்தத் தலைமையை அழைப்புப் பணி (Da’awa)  மூலம் எடுத்துச் சென்று உலகெங்கிலும் இஸ்லாத்தை நிர்மானிப்பதற்கு இஸ்லாமிய வழிமுறையைத் தவிர வேறொரு வழிமுறையும் பயன்படாது. ஒருமுறை முழுமையாக இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை இஸ்லாமிய சமுதாயத்திற்கும், மற்ற சமுதாயத்திற்கும் எடுத்துச் சென்றுவிட்டால் உலகிற்கு இந்த அறிவார்ந்தத் தலைமையை எடுத்துச் செல்லும் முயற்சியை துவங்கி விட்டவர்களாக நாம் ஆகிவிடுவோம். மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கு இதுதான் ஒரே வழி. முஸ்லிம்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பும் விதத்தில், இஸ்லாமிய அறிவார்ந்தத் தலைமையை முஸ்லிம்களிடம் எடுத்து செல்ல வேண்டும். பிறகு இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவி அந்த அரசு மூலமாக முழுமனித சமுதாயத்திற்கும் இஸ்லாத்தை எடுத்து இயம்பிடவும் வேண்டும்.



Friday, March 19, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 06 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

இங்கே ஒருகேள்வி  எழுகிறது.

அதாவது முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறார்களா? அல்லது அவர்கள் அடிப்படை கோட்பாட்டை மட்டும் தழுவிக் கொண்டு இஸ்லாத்திற்கு அந்நியமான வழிமுறைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிறார்களா? இதற்கு இதுதான் பதில்:






இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினா வந்தது முதல் கி.பி.1918வரை (A.H. 1336) இஸ்லாமிய அரசு காலனி ஆதிக்க வாதிகளின் கைகளால் வீழ்த்தப்படும் வரை, அனைத்து காலங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தையே நடைமுறைப்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தியது மிக விரிவான விஷயமாகும். வெற்றிகரமாகவும், வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.






நடைமுறையில் இஸ்லாத்தை செயல்படுத்துவதை, ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பு வகிக்கும், இரண்டு தரப்பினர் உறுதிப்படுத்துகின்றனர். ஒருவர் நீதிபதி அவர் மக்களின் விவகாரங்களை தீர்த்து வைப்பவர். மற்றவர் ஆட்சியாளர், அவர் மக்களை ஆட்சி செய்பவர். தொடர்ச்சியான அறிவிப்புகள்  (Tawatur)  மூலம் கூறப்படுவது என்னவென்றால், அல்லாஹ்(சுபு)வின் தூதர்(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இஸ்லான்புல்லின்  (Istanbul)  இஸ்லாமிய கிலாஃபா அரசு மறையும் வரை மக்களின் விவகாரங்களை தீர்த்து வைக்கும் நீதிபதிகள் ஷரிஆ சட்டங்களின் அடிப்படையில்தான் அனைத்து விவகாரங்களையும் தீர்த்து வைத்தார்கள். இது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவருக்கும், முஸ்லிம்களும் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. உரிமை மீறல்கள், குடும்ப விவகாரம், குற்றவியல் தண்டனை ஆகிய அனைத்து விவகாரங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தீர்த்து வைத்தது. இந்த நீதிமன்றம் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களின் அடிப்படையிலுள்ள ஒரே நீதிமன்றமாக மட்டுமே இயங்கி வந்தது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு வழக்கும் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்பட்டதாக, எந்த ஒரு அறிவிப்பும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. இஸ்லாமிய நாடுகளிலுள்ள எந்த ஒரு நீதிமன்றமும், எந்த ஒரு வழக்கையும், இஸ்லாம் அல்லாதவைகளைக் கொண்டு தீர்ப்பு கூறவில்லை. இந்த நிலை காலனி ஆதிக்கவாதிகளின் தொடர்ச்சியான ஆதிகத்தினால் இஸ்லாமிய நீதிமன்றம் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court)  நிஸாம் நீதிமன்றம் (Nizam Court) என இரண்டு வகை நீதிமன்றங்களாக பிரிக்கப்படும்வரை இருந்து வந்தது. பழம்பெரும் நகரங்களான ஜெருசலம், பாக்தாத், டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் அமைந்த ஷரிஆ நீதிமன்றங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் இதற்கான தெளிவான ஆதாரம் அடங்கியிருக்கிறது. இந்த ஆவணங்கள் நீதிபதிகள் ஷரிஆவை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்களாக திகழ்கின்றன.






சலிம் அல்பஸ் (Saleem al Baz)  போன்ற முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டங்களை (Islamic Fiqh)  பயிலவும் எழுதவும் செய்தார்கள். அவர் அல்மஜல்லாஹ் (Al - Majallah)  என்ற மாத இதழில் இதற்கு வர்ணனைகளை (Commetary) எழுதினார். இஸ்லாமிய அரசின் இறுதி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பொருத்தவரை அவைகள் இஸ்லாமிய அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பு (Fatwa)  அடிப்படையில் கொண்டு வரப்பட்டவை. அவைகள் அஹ்காம் ஷரிஆவிற்கு முரண்பாடாக இருக்க வில்லை. முடிவாக, 1275ல் (கி.பி.1857) உத்மானிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் உரிமையியல் சட்டங்களும் வணிக சட்டங்களும் (Law of Rights and Trade) 1276A.H. ல் (கி.பி. 1858) அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1288A.H.ல் (கி.பி.1870) நீதிமன்றம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court) மற்றும் அலுவலக சட்ட நீதிமன்றம் (Official Law Court)  ஆகிய நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1295A.H.ல் (கி.பி. 1877) அபராத தண்டனை விதிக்கும் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 1296A.H.ல் (கி.பி. 1878) உரிமையியல் மற்றும் அபராத நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இதன்போது உரிமையியல் சட்டங்களை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்தையும் உலமாக்கள் அறியாததினால் அவைகளை கிடப்பில் போட்டு விட்டார்கள். 1286A.H.ல் (கி.பி.1868) கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு (Muamlat - Transactions)  அரசாணையாக அல் மஜல்லாஹ் என்ற ஷரிஆ மாத இதழ் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த சட்டங்கள் என்ற வகையில்தான் அரசாணைகளாக (Canons)  வெளியிடப்பட்டன. இவை ஷேக் அல் இஸ்லாமினால் முறையாக தீர்ப்பு செய்யப்பட்டு, அவைகளை அவர் அனுமதித்த பிறகுதான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. எனினும் கி.பி.1918 முதல் இஸ்லாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து வந்த காலனி ஆதிக்க அதிகாரிகள் சில உரிமையியல் வழக்குகளை இஸ்லாம் அல்லாத சட்டங்களைக் கொண்டு தீர்த்து வைத்தார்கள். ஆனால், காலனி ஆதிக்க இராணுவம் ஆக்கிரமிப்பு செய்யாத நாடுகளின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தாத போதிலும், சமீபகாலம் வரை நீதித்துறை தொடர்ந்தும் இஸ்லாத்தின் சட்டங்களின் படிதான் செயல்பட்டு வந்தது. உதாரணமாக, ஆப்கானிஸ்தான், ஹிஜாஸ், நஜ்து (ஆகிய அரபிய தீபகற்பம்) மற்றும் குவைத் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இதிலிருந்து எமக்கு விளங்குவது என்னவென்றால் நீதித்துறையில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுடன்;, இஸ்லாமிய அரசின் நெடிய காலம் முழுவதும் நீதித்துறையில் இஸ்லாம் அல்லாத சட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதேயாகும்.









ஆட்சியாளர்களால் ஐந்து துறைகளில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவது அஹ்காம் ஷரிஆவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சமூகத்துறை, பொருளாதாரத்துறை, கல்வித்துறை, வெளிநாட்டு விவகாரத்துறை மற்றும் ஆட்சித்துறை ஆகியன. இந்த துறைகள் தொடர்பான அஹ்காம் ஷரிஆ அனைத்தும் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகவியல் வழிமுறை (Social System)  ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உறவையும், இந்த உறவின் விளைவாக எழும் விஷயங்கள் (தனிநபர் அந்தஸ்து) அனைத்தையும் விளக்குகிறது. இஸ்லாமிய நாடுகளில் காலனி ஆதிக்க சக்திகள் நிலைத்திருந்த போதிலும், குஃப்ர் ஆட்சிமுறை இருந்தபோதிலும், சமூகத்துறையில் ஷரிஆ மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மேலும் நிச்சயமாக வேறு எந்த வழிமுறையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொருளாதாரத் துறையைப் பொருத்தவரை, அது இரண்டு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, மக்களின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்காக அரசு பொது மக்களிடம் வருவாய் வசூலிக்கும் முறை, இரண்டாவதாக வருவாய்களை செலவிடும் முறை. வருவாய்களை வசூலிக்கும் விஷயத்தைப் பொருத்தவரை, அரசு ஸகாத்தை ரொக்கமாகவும், நிலமாகவும், கால் நடைகளை பெற்றுக் கொள்வதைக் கொண்டும் வசூலித்து வந்தது. இதை முஸ்லிம்கள் கடமையாகவும், வணக்கமாகவும் கருதி செலுத்தி வந்தார்கள். இந்த பணம்; திருமறை குர்ஆன் குறிப்பிடப்பட்டள்ள எட்டு பிரிவினருக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டது. தனது செலவினங்களுக்காக ஒருபோதும் அரசு ஸகாத் தொகையை பயன்படுத்தியதில்லை. ஷரிஆவின் கட்டளைப்படி தனது செலவினங்களுக்கு தேவையான பணத்தை அரசு வசூலித்தது.







ஆகவே, விளை நிலங்களுக்கு வரி(கரஜ்) வசூலிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து ஜிஸ்யா வசூலிக்கப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தின் மேற்பார்வையாளர் என்ற முறையில் சுங்க வரியை அரசு வசூலித்தது. ஷரிஆவின் கட்டளைகளுக்கு முரண்பாடாக அரசு நிதி வசூலித்தது கிடையாது. ஊனமுற்றவர்களின் நிதி விநியோகத்தைப் பொருத்தவரை அரசு நஃபகாஹ் (Nafeqah -  நிதியுதவி) வழிமுறையை செயல்படுத்தியது. இயலாமையிலுள்ளவர்களையும், (Safeeh) ஹராமான வழியில்; செலவு செய்பவர்களையும் (Mubaddin)  காப்பாளராக இருந்து அரசு கவனித்து வந்தது. ஒவ்வொரு நகரங்களிலும் யாத்திரீயர்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவும், பயணிகளுக்காகவும் சாலை நெடுகிலும் விடுதிகளை அரசு நிர்மாணித்திருந்தது. இதன் நினைவுச்சின்னங்கள் பிரதான இஸ்லாமிய நகரங்களில் இன்றளவும் காணப்படுகின்றன. அரசின் செலவினங்கள் முற்றிலும் ஷரிஆவின் வழிமுறைப்படி கட்டுப்படுத்தப்பட்டதுடன் வேறு எந்த வழிமுறைகளின்படியும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த துறைகளில் ஏற்பட்ட எந்த ஒரு குறைபாடும் கவனக்குறைவினாலும், தவறான நடைமுறைப்படுத்தலின் காரணமாகவும் ஏற்பட்டதே தவிர ஷரிஆ நடைமுறைகள் இல்லாத காரணத்தினால் அல்ல.







கல்விக்கொள்கையின் அடித்தளமாக இஸ்லாமே இருந்தது. பாடத்திட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரத்தைக் கொண்டதாக இருந்தது. இஸ்லாத்தோடு முரண்படும் அந்நிய கலாச்சாரம் எதுவும் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. உதுமானிய கிலாஃபா அரசின் இறுதி காலகட்டத்தில் புதிய கல்விக்கூடங்களை திறப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அக்காலத்தில் காணப்பட்ட குறிப்பான பிற்போக்கு அம்சமாக இருந்தது. அக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் அறிவுத்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியது. இஸ்லாமிய அரசின் அனைத்து காலகட்டத்திலும், இஸ்லாமிய பூமிதான் அறிஞர்களுக்கும், கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கிப்லாவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கார்ட்டோபா (Cortoba), டமாஸ்கஸ், அலக்ஸாண்டிரியா, கெய்ரோ, பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் உலகெங்கிலுமுள்ள கல்வித்துறை நடவடிக்கைகளில் மகத்தான விளைவை ஏற்படுத்தியிருந்தன.







இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் உறவுகளை இஸ்லாமிய அரசு நிர்ணயித்தது. மற்ற நாடுகள் அதனுடன் இஸ்லாமிய அரசு என்ற முறையில் நடந்து கொண்டன. அதனுடைய அனைத்து வெளிநாட்டு உறவுகளும் இஸ்லாத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் நலனின் அடிப்படையிலும் இருந்து வந்தது. இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாமிய கொள்கையாகவே இருந்து வந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்ற அளவுக்கு உலகெங்கிலும் நன்கு அறியப்பட்டதாக இருந்தது.








ஆட்சிமுறையைப் பொருத்தவரை இஸ்லாமிய அரசின் அமைப்பு எட்டு தூண்களில் அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆட்சித்தலைவராக கலீஃபா விளங்கினார். கலீஃபாவின் ஆட்சித்துறை உதவியாளர் (Delecated Assistant-Mo’aawen Tafweedh), கலீஃபாவின் நிர்வாகத்துறை உதவியாளர் (Executive Assistant-Mo’aawen Tanfeedh) ஜிஹாதின் தலைவர் (Ameer of Jihad), ஆளுநர்கள் (Wulah), நீதிபதிகள் (QuDah), அரசுத்துறைகள் (State Departments) மற்றும் மக்கள் மன்றம் (Majlis al Ummah)  ஆகியவை அவையாகும். முஸ்தபா கமால் என்ற காலனி ஆதிக்க காஃபிர் 1342 A.H. (கி.பி.1924) இஸ்லாமிய கிலாஃபா அரசை கலைக்கும் வரை முஸ்லிம்கள் கலீஃபா இன்றி இருந்ததில்லை. கிலாஃபா அரசு நீக்கப்படும் வரை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு கலீஃபா இருந்துகொண்டுதான் இருந்தார். ஒரு கலீஃபா மரணமடையும்போதோ அல்லது நீக்கப்படும்போதோ மற்றொரு கலீஃபா தேர்ந்தெடுக்கப்பட்டார். கிலாஃபா ஆட்சி நலிவுற்றிருந்த இருந்த காலகட்டத்தில்கூட இவ்வாறுதான் நிலை இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்பது கிலாஃபா அரசாக இருப்பதால், கலீஃபா இருக்கும் பட்சத்தில்தான் அது இஸ்லாமிய அரசாக கருதப்படும். ஆட்சியிலும், அரசுப்பணியிலும், கலீஃபாவின் உதவியாளர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து காலங்களிலும் இருந்து வந்தனர். அவர்கள் உதவியாளர்களேதவிர அமைச்சர்கள் அல்ல(Wazirs). அப்பாஸிய கிலாஃபாவில் அவர்கள் அமைச்சர்கள் என்று அழைக்கப்பட்டாலும் உதவியாளர்களாகவே இருந்து வந்தார்கள். ஜனநாயக ஆட்சி முறையிலுள்ள அமைச்சர்கள் அந்தஸ்து அவர்களுக்கு அளிக்கப்படவில்லை, மாறாக கலீஃபாவின் அங்கீகாரம் பெற்றவர்களாக ஆட்சியிலும், அரசுப்பணிகளிலும் கலீஃபாவின் உதவியாளர்களாகவே அவர்கள் இருந்து வந்தார்கள். அதே வேளையில் அனைத்து அரசு அதிகாரங்களும் கலீஃபாவின் கைகளில் இருந்து வந்தது. ஆளுநர்களும், நீதிபதிகளும், அரசுத்துறைகளும் சந்தேகமின்றி இருந்து வந்தன. குஃப்பார்கள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமிப்பு செய்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் அனைத்து விவகாரங்களும் நடைபெற்று வந்தமைக்கும், ஆளுநர்கள், நீதிபதிகள், அரசுத்துறைகள் அங்கு காணப்பட்டமைக்கும் ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஜிஹாத்தின் தலைவரைப் பொருத்தவரை, வெற்றி கொள்ள முடியாதது என்று உலகெங்கிலும் புகழ்பெற்ற இஸ்லாமிய சேனையின் தலைவர் என்ற அந்தஸ்தில் இராணுவ விவகாரங்களை அவர் கவனித்து வந்தார். மக்கள் மன்றம் என்ற மஜ்லிஸ் அல் உம்மாவைப் பொருத்தவரை, நேர்வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் காலத்திற்கு பின்பு அதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் அது ஆட்சி அமைப்பின் ஒரு அம்சமாக இருந்ததே தவிர அதன் ஒரு தூணாக இருக்கவில்லை. ஆலோசனை கலத்தல் (Shurah)  என்பது கலீபாஃவின் மீது மக்களுக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். எனவே அதை அவர் உதாசீனப்படுத்தினால், அவர் உதாசீனத்துக்கு ஆளாக நேரிடுமே ஒழிய ஆட்சிமுறை இஸ்லாமிய ஆட்சி முறையாகவே இருந்துவரும். இது ஏனெனில் இஸ்லாத்தில் ஆலோசித்தல் என்பது கருத்துக்களை பெறுவதற்குத்தானே தவிர ஆட்சி செய்வதற்கு அல்ல. ஜனநாயகத்தின் பாராளுமன்ற முறை இதற்கு நேர்மானது. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறை; நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது இங்கே தெளிவாகிறது.







கலீஃபாவுக்கு பையத் கொடுப்பது என்பதைப் பொருத்தவரை ஒரு கேள்வி இங்கு எழக்கூடும். கிலாஃபா ஆட்சிமுறையில் பரம்பரை உரிமை வழிமுறை இல்லை என்பது நன்கு நிலை நிறுத்தப்பட்ட விஷயம். வேறு வகையில் கூறுவதெனில் மன்னராட்சி முறையில் இருப்பதைப் போன்று ஆட்சித் தலைமையை பரம்பரை உரிமை அடிப்படையில் அடைந்து கொள்ளும் வழிமுறை இஸ்லாத்தில் அமைக்கப்படவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களிடம் பையத் பெறுவதின் மூலம் அரசின் தலைமை பொறுப்பு பெற்றுக் கொள்ளப்படும். இந்த நிலை சில காலம் இருந்து வந்தது. அதன் பிறகு செல்வாக்கு பெற்ற மனிதர்களிடத்தில் (Ahle al Halli Wal Aqd) பையத் பெறும் முறையும், கிலாஃபத்தின் இறுதிகாலத்தில் இருந்தது போல் ஷேக் அல் இஸ்லாத்திடம் பையத் பெறும் முறையும் இருந்து வந்தது. இஸ்லாமிய கிலாஃபா அரசின் நெடிய வரலாற்றில் பையத் பெறாமல் எந்த கலீஃபாவும் நியமிக்கப்பட்டதில்லை என்ற நிலை இருந்து வந்தது. பையத் பெறாமல் பரம்பரை உரிமை மூலம் ஒரு கலீஃபா கூட நியமிக்கப்பட்டதாக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த வழிமுறைக்கு ஆற்றல் பெறாமல், பையத் பெறும் முறை தவறாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக, ஒரு கலீஃபா தன் மரணத்திற்கு முன்பாக தனது மகனுக்காகவோ, சகோதரனுக்காகவோ, உடன் பிறவா சகோதரனுக்காகவோ அல்லது எந்த ஒரு குடும்ப நபருக்காகவோ மக்களிடம் பையத் பெறுபவராக இருந்தார்கள். கலீஃபாவின் மரணத்திற்கு பின்பு அந்த நபர் பையத்தை புதுபித்துக் கொண்டார். இது பையத் பெறுவதை தவறாக பயன்படுத்துவதாக இருந்தாலும் பரம்பரை ஆட்சி முறையை சார்ந்தாகவோ அல்லது ஆட்சிக்கு தானாகவே வந்துவிடும் முறையாகவோ (Succession to the throne)  இருக்கவில்லை. பாராளுமன்றமுறையிலோ அல்லது ஜனநாயக ஆட்சி முறையிலோ தேர்தல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும்கூட அவை தேர்தல்கள் என்றுதான் அழைக்கப்படுகிறதே தவிர நியமனம் என்று கருதப்படுவதில்லை என்பதற்கு இது நிகரானதாகும். மேற்கண்ட காரணங்களால், இஸ்லாமிய அரசின் அனைத்து கால கட்டத்திலும் இஸ்லாமிய ஆட்சி முறைதான் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.







இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் செயல் ரீதியான வெற்றியைப் பொருத்தவரை, இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் அது இணையற்றதாக விளங்கியது.








முதலாவதாக: மிகத் தாழ்ந்த அறிவாற்றலின் காரிருளில், தான்தோன்றித் தனமாக குலப்பெருமையும் கோத்திரப் பெருமையும் கொண்டவர்களாக, ரத்தம் சிந்தும் முரட்டுப் போர் புரியும் அறியாமையிலிருந்த அரபு மக்கள் அனைவரையும் இஸ்லாமிய சித்தாந்தம் அறிவாற்றல் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. இஸ்லாம் என்ற ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் மறுமலர்ச்சி அடைந்தார்கள். அவர்களிடம் ஏற்பட்ட இந்த உதயம் அரபு தேசத்துக்கு மட்டும் இல்லாது முழு உலகிலும் பரவியது. இஸ்லாம் என்ற ஒளியினை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் மகத்தான பணியில் முஸ்லிம்கள் விரைந்து செயல்பட்டார்கள். பாரசீகத்தையும், ஈராக்கையும், சிரியாவின் நிலப்பரப்பையும், எகிப்து தேசத்தையும், வட ஆப்பிரிக்க நாடுகளையும் இஸ்லாமிய மயமாக்கும் செயல்பாங்கில் முஸ்லிம்கள் தங்களது கரங்களை நுழைத்தார்கள். இந்த தேசங்களிலுள்ள அனைத்து மக்களும் தங்களுக்கென்று மதத்தையும் தேசியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும், மரபுகளையும் பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகவே இருந்தார்கள். பாரசீகர்களின் தேசியம், சிரியாவின் ரோமர்களிடமிருந்தும், எகிப்து தேசத்தின் கோப்ட் (ஊழிவள) தேசியத்திலிருந்தும், வட ஆப்பிரிக்க நாகரீகமற்ற பழங்குடி சமுதாயத்திலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது. ஒருமுறை அவர்கள் இஸ்லாத்தின் நிழலில் வாழ்ந்து அதை புரிந்து கொண்டவுடன் அவர்கள் அனைவரும் அதை தழுவிக் கொண்டு விட்டார்கள். மேலும் ஒரே தேசத்தினராக முஸ்லிம் உம்மாவாக மாற்றமடைந்து விட்டார்கள். ஆகவே, இந்த மக்களையும் அவர்கள் தேசிய தன்மைகளையும் உருக வைத்து ஒன்றிணைத்து ஒரே சமுதாயமாக மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மகத்தானதும் ஈடு இணையற்றதுமாகும். அக்கால கட்டத்தின் போக்குவரத்து சாதனம் ஒட்டகமாகவும், தொலைதொடர்பு சாதனம் நாவின் பேச்சாகவும், எழுத்துக் கலை எழுதுகோளோடு மட்டும் நின்றிருந்த நிலையில்தான் இந்த மகத்தான சாதனை படைக்கப்பட்டது.








எனினும் அல்பத்ஹ்(வெற்றி) என்பது மக்களின் அறிவும் இயற்கை தன்மையும் அவர்களை எதன் பக்கம் வழிகாட்டுகிறதோ, அந்த வழியை அடைந்து கொள்வதற்கு தடைகளாக இருக்கும் பௌதீக தடைகளை அகற்றுவதாகவே இருந்தது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதற்கு மாறாக, அநீதமான முறையில் ஆக்கிரமிப்பை செய்து வெற்றி கொள்ளப்படும் நாட்டவர்கள் வெற்றி கொண்டவர்களை அந்நியர்களாகவே கருதுவார்கள். உதாரணமாக, மேற்கத்திய ஆதிக்கவாதிகளால் கீழை நாடுகளில் நிறுவப்பட்ட காலனி ஆதிக்கம் எந்தவித பயனையும் விளைவிக்காமல் பல ஆண்டுகள் நீடித்தது. வஞ்சம் நிறைந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம் இல்லாதபட்சத்தில், வெகு சடுதியில் அழியப் போகின்ற அதன் முகவர்களின் (யுபநவெ) அடக்குமுறை இல்லாதபட்சத்தில், கண் இமைக்கும் நேரத்திற்கு முன்பாகவே சித்தாந்தத்திலும் அதன் ஆட்சி முறையிலும் இஸ்லாம் மறுபிரவேசம் செய்துவிடும். ஆகவே பல்வேறு இன மக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக்கி இஸ்லாமிய உம்மாவாக, மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை ஒப்பற்றதாகும். காலனி ஆதிக்கவாதிகள் விளைவிக்கும் நாசம், தீமை ஆகியவற்றையும் மீறி, கொள்கையை சிதைக்கவும் சிந்தனையில் நஞ்சு கலக்கவும் அவர்கள் தீட்டும் திட்டங்களையும் மீறி, இந்நாள்வரை இந்த மக்கள் முஸ்லிம்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாள்வரை இந்த மக்கள் ஒரே இஸ்லாமிய உம்மாவாகவே நிலைத்திருப்பார்கள். இஸ்லாத்தில் இணைந்த மக்களோ அல்லது ஏதேனும் ஒரு இனக்குழுவோ இஸ்லாத்திலிருந்து வெளியேறிய நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒருபோதும் நடந்தேறியதில்லை.








அந்தலுஸ் (Andalus -  ஸ்பெயின்) முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்கள் ரோமின் கிருஸ்தவ திருச்சபை நீதிமன்றத்தால் (Court of Inquisition)  படுகொலை செய்யப்பட்டார்கள். கில்லோட்டின் (Guillotine)  என்ற தலை வெட்டும் எந்திரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் சிரம் துண்டிக்கப்பட்டு மாண்டு போனார்கள். நெருப்பு குண்டத்தில் இட்டு பொசுக்கப்பட்டார்கள். புகாரா, காகஸஸ், துர்கிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்களும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்கள் அடைந்த அதே நாசகார அழிவையே சந்தித்தார்கள். இந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவி ஒரே உம்மாவாக ஆகிய பிறகு தங்கள் அகீதாவை பாதுகாக்கும் விடயத்தில் சிரமத்தை சந்தித்த இந்த நிகழ்வு, இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை அடைந்த வெற்றியின் பரிமாணத்தையும், இஸ்லாமிய அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திய பாங்கையும் விளக்கமாக வர்ணிப்பதாக இருக்கிறது.

தொடரும்...