Sunday, October 12, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 5

இரண்டாம் கட்டம் : பகிரங்க அழைப்பு

ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக. இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள். (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள். ( 15:94- 96)

என்ற குர்ஆனிய வசனம் மூலம், நபிகளாரின் அழைப்புப்பணி, 'தனிநபரை பண்படுத்துதல்" என்ற கட்டத்தைத் தாண்டி, பகிரங்க அழைப்புக் கட்டத்தை தொடங்கியது. இந்த நிலையில், நபிகளார், குறைஷியர்களின் ஜஹிலிய பழக்கவழக்கங்களை நேரடியாக எதிர்க்கலானார்கள். 'அல்லாஹ்(சுபு)வைத் தவிர வேறுகடவுள் இல்லை என்பதை ஏற்று, அவனையே வணங்க வேண்டும்" எனக் குரல் கொடுக்கலானார்கள். பொதுமக்களின் கவனம் எப்பொழுதும் இஸ்லாத்தின் மேல் இருக்க வேண்டும் என்ற நோக்குடனே தமது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள். முதலில், தமது வீட்டில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து, அதில் கலந்துகொள்ள தமது உறவினர்களை அழைத்தார்கள். அவர்களுள் குறைஷியர்களின் முக்கியத் தலைவர்களும் அடங்குவர். அந்த விருந்தில் அல்லாஹ்(சுபு)வைப் பற்றியும், தமது நபித்துவத்தைப் பற்றியும், இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சொர்க்கலோகம் அடைவதைப்பற்றியும் நபிகளார் விவரித்தார்கள். ஏற்காவிடின் ஏற்படும் விளைவுகளான நரக நெருப்பின் தண்டனை பற்றியும் குறிப்பிட்டார்கள்.

நரகத்தை நோக்கி, 'நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது 'இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! (50:30)

மற்றொரு சமயத்தில், நபிகளார் அஸ்ஸஃபா குன்றின் மீதேறி, அங்கு கூடியிருந்த குறைஷியரை நோக்கி 'குன்றின் பின்புறமிருந்து ஒரு படை தாக்க வருகிறது என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா" என்றார்கள். 'இதுவரை உம்மிடமிருந்து உண்மையைத்தவிர வேறு எதையும் கேட்டிராததால் அதை நாங்கள் நம்புவோம்" என்றனர். அதற்கு நபிகளார் ''மிகக் கடுமையான, துன்பமிக்க வேதனையைக் குறித்து உங்களை எச்சரிக்கவே நான் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள்.

ஹம்சா(ரலி) அவர்களும் உமர்-அல்-கத்தாப்(ரலி) அவர்களும் இஸ்லாத்தை தழுவியது ஒரு மிகமுக்கிய நிகழ்வு ஆகும். அந்நிகழ்விற்குப்பின், நபிகளார், முஸ்லிம்களை, ஹம்சா(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும், உமர்(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும் ஆக்கி கஃபாவைச்சுற்றி ஊர்வலமாக வரச்செய்தார்கள். இதனைக் கண்ட மக்கா நகர மக்கள் அதிர்ச்சியடைந்தனர். முஸ்லிம்கள் முதன்முறையாக பகிரங்கமாக அந்த ஜஹிலிய சமூகத்தை எதிர்கொண்டனர். இதற்கு முன்னால் முஸ்லிம்கள் மறைமுகமாகவே தொழுதுவந்தனர். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு கஃபாவின் முன் கூடி தொழ ஆரம்பித்தனர்.

இந்த காலகட்டம், நபிகளாரும் அவரைப்பின்பற்றிய முஸ்லிம்களும் ஜஹிலிய சமூகத்தை பகிரங்கமாக எதிர்கொண்ட காலகட்டமாகும். அவர்கள் ஒரு அமைப்பாகச் செயல்பட்டு சமூகத்திலிருந்த பழக்கவழக்கங்கள், சட்டங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ள ஆரம்பித்தனர். அதிகாரத்துவமும் பணத்தாசையும் மிக்க ஜஹிலிய சமூகத்தை எதிர்த்த விதத்தை குர்ஆன் விளக்குகிறது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹ{தமாவில் எறியப்படுவான். (104: 1-4 )


செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:1-3)

சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ளோரை கவனிக்காத மக்களை ஏமாற்றிய பொய்யர்களான குறைஷிய தலைவர்களை சபித்து அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் து}ண்டுவதில்லை. (107: 1- 3)

அவர்களது நடைமுறைகளை எதிர்த்து குர்ஆன் வசனம்

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். (83: 1-3)

குறைஷிய தலைவர்களை நோக்கி,

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). ( 111:1-5)

அல் வலீத் பின் அல் முகிராவைக் குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்

எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர். (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன் வரம்பு மீறிய பெரும் பாவி. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன். பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் - நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், 'இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான். விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம். (68: 8-16)

ஜஹிலியாவை எதிர்த்து நின்ற இந்த சிந்தனைப் போராட்டத்தால், நபிகளாரிடமும் முஸ்லிம்களிடமும் குறைஷியர்கட்கு ஒருவித கசப்புணர்வு தோன்றியது. மக்கள் முஸ்லிம்களைவிட்டும் விலகிச்செல்ல ஆரம்பித்தனர். குறைஷியர்கள், நபிகளாருக்கெதிரான எதிர்ப்புணர்வை பரப்பலாயினர். நபிகளாரின் பெரியதந்தை அபிதாலிப் அவர்களிடம் சென்று '' நம் மூதாதையர்கள் கேலி செய்யப்படுவதையும், நமது நடைமுறைகள் இழிவுபடுத்தப்படுவதையும், நமது கடவுளர் அவமதிக்கப்படுவதையும் இனிமேலும் பொருத்துக்கொள்ள இயலாது "" என முறையிட்டனர்.

மார்க்கப் போராட்டம்


சமூகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இத்தகைய காலகட்டத்தில், சஹாபாபெருமக்களின் மனதில் விதைக்கப்பட்டதைப் போல இஸ்லாத்தின் மேல் ஒரு ஆழ்ந்த நம்பிக்கையை, மக்கள் மனதில் விதைப்பது அவசியம். இந்த மாற்றம் மக்களின் சிந்தனை சம்பந்தப்பட்டது. எனவே இந்த மாற்றத்தை ஒரு அறிவுப் போராட்டத்தாலன்றி வேறெந்த போராட்டத்தாலும் ஏற்படுத்த முடியாது. அந்த சிந்தனைப் போராட்டம், இஸ்லாம் அல்லாத ஏனைய மார்க்கங்களையும் அதனைச் சார்ந்த நடைமுறைகளையும் ஒதுக்கித்தள்ளுகிறது. அத்தகைய அறிவுப் போராட்டத்தையே ஒரு இஸ்லாமிய இயக்கம் செயல்படுத்த வேண்டும். இஸ்லாம் அல்லாத ஏனைய மார்க்கங்களான கம்யூனிசம், முதலாளித்துவம்(கேபிடலிசம்) போன்றவற்றையும், அதனைச் சார்ந்த மக்களாட்சி, தேசீயம் போன்றவற்றையும் கேள்விக்குறிகளாக்குகின்ற ஒரு சிந்தனை அலையை மக்களிடையே உருவாக்க வேண்டும். இஸ்லாம் அல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இஸ்லாமிய தஆவாவை எதிர்க்கின்ற எந்த ஒரு அரசையும் அதன் சூழ்ச்சியையும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும். அவர்களது நேரடி அல்லது மறைமுக இஸ்லாம் எதிர்ப்புப் போக்கை முஸ்லிம்களிடையே பகிரங்கப்படுத்துவது அவசியம். இதுவே நபிகளார் நமக்குக் காட்டிய வழியாகும். எவர் இத்தகைய கடமையை ஆற்றுவதினின்றும் தவறுகிறாறோ அவர் நபிவழியைப் பின்பற்றத் தவறுபவரே ஆவார்.

சமரசம்

தமது வாதத் திறமையினால், நபிகளாரைக்(ஸல்) கட்டுப்படுத்த குறைஷியர் முயன்றனர். ஆனால் அவர்கட்கு தோல்வியே மிஞ்சியது. அதன்பிறகு, நபிகளாரின் தஆவாவை அடக்க, எண்ணற்ற செல்வமும், மிகப்பெரும் அந்தஸ்தும், தலைமைப் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதற்குப் பகரமாக ஆழைப்புப் பணியை நிறுத்திடவேண்டும் எனப் பேரம்பேசலாயினர். ஆனால் எந்நிலையிலும் எதற்காகவும் இறைப்பணியை விட்டுவிட நபிகளார் தயாராக இல்லை. எனவே எந்நிலையிலும் நபிகளார் தஆவாவில் சமரசப்போக்கை கடைபிடிக்கவில்லை.

இறைச் சட்டத்தை நிறைவேற்ற, நபிகளாரின் வழியைப் பின்பற்றி பாடுபடும் முஸ்லிம்கள், எந்நதவித சமரசப்போக்கையும் நிராகரித்துவிடவேண்டும். இஸ்லாமையும் ஜஹிலியாவையும் ஒன்றாக நடைமுறைப்படுத்த முடியாது. இஸ்லாம் பாதியும் இஸ்லாம் அல்லாதவை பாதியுமாக ஆட்சிபுரிவது இஸ்லாம் அன்று. அது ஜஹிலியாவே ஆகும். இறைவனின் ஷாPஆ சட்டம் ஒன்றே முழுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது இஸ்லாம் அல்லாத சட்டங்களே ஆகும்.

இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. ( 5:49)

எனவே இஸ்லாம் அல்லாத ஆட்சியமைப்பில் பங்கு கொண்டு, அதன் மூலம் இஸ்லாத்தை சில துறைகளில் மட்டும் சமூகத்தில் நடைமுறைப்படுத்துவது நபிவழியன்று. படிப்படியாக இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது, இஸ்லாத்தையும் இஸ்லாம் அல்லாதவற்றையும், அதாவது உண்மையையும்(ஹக் ) பொய்யைபும்(பாதில்) கலப்பதாகவே அமையும். இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது கிலாஃபா அரசை அமைப்பதே ஆகும். எனவே கிலாஃபா ஆட்சிமுறையை நிலைநாட்டப் பாடுபடும் முயற்சியில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரபு நாட்டின் அரியாசனத்தில் நபிகளாரை(ஸல்) ஏற்றுவதாக உறுதியளித்த பனு- அமிர் கூட்டத்தின் உதவியை நபிகளார் ஏற்க மறுத்தார்கள். ஏனெனில் நபிகளாருக்குப்பின்(ஸல்) தாமே அரியாசனத்தில் அமர வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்தனர். பாரசீகர்களைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் நபிகளாரைக் காப்பதாகக் கூறிய ஷிபான்-பின்-தலபா கூட்டத்தினரையும் அவர்கள் நிராகரித்தார்கள். ஏனெனில் உதவியானது வேறு எந்த நிபந்தனையுமின்றி இருக்கவேண்டும், அதன்மூலமே இஸ்லாமிய தஆவாவை பரப்ப முடியும் என்பதில் நபிகளார்(ஸல்) உறுதியாக இருந்தார்கள்.


அதிகாரம் பெறுவதற்காக ஆட்சியமைப்பில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இஸ்லாமிய வழிமுறையை விட்டும் விலகி இஸ்லாம் அல்லாத முறையில் ஆட்சியைப் பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அல்லாஹ்(சுபு) கூறியுள்ளபடியான ஆட்சிமுறையை நிலைநாட்டி இஸ்லாமிய வழியில் வாழ்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், இறைவனின் நன்மதிப்பைப் பெரும் வகையில் நமது வழிமுறைகளை அமைத்துக்கொள்வதே இஸ்லாமிய வழிமுறையாகும். எனவே தனிமனிதரோ அல்லது இயக்கமோ எதுவாயினும் தமது நடவடிக்கைகள் அனைத்தும் இறைவனை மகிழ்விக்கவேயன்றி வேறொரு எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடாது. பாராட்டுதலைப் பெறுவதோ, புகழினை அடைவதோ அல்லது செல்வம் சேர்ப்பதோ தமது நடவடிக்கைகட்கு அடிப்படையாக அமையக்கூடாது. அந்த இயக்கத்தின் தலைமையின் மற்றும் அக்கொள்கைளை சுமந்து செல்லும் இயக்க உறுப்பினர்களின் முழு ஈடுபாடும் அவர்களது நடவடிக்கைகள் வாயிலாக உலகுக்கு உணர்த்தப்படவேண்டும். அதுவே வெற்றியின் பாதையை சிறப்புடையதாக்கும். மேலும் வெற்றியானது இறைவனால் மட்டுமே கொடுக்க முடியும்.

துன்புறுத்தும் வேதனை

பேச்சுவார்த்தையால் நபிகளாரை(ஸல்) அமைதிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த குறைஷியர் வன்முறையை கடைபிடிக்கலாயினர். சமூக அமைப்பின் படியாக தப்பிவிட முடியாதபடி, அவர்கள், முஸ்லிம்களை கொடுமைப்படுத்தலாயினர். முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, கொடுமைக்காளாகி, கொல்லப்படவும் செய்தனர். அவது}றுப் பேச்சினாலும், பொய்ப்பிரசாரங்களினாலும் நபிகளாரைத் தாக்கிய குறைஷியர் உடலளவிலும் அவர்களைக் கொடுமைக்காளாக்க விழைந்தனர். அத்தகைய கொடுமைகளைக் கண்ட நபிகளார்(ஸல்) முஸ்லிம்களை, அல்லாஹ்(சுபு)விடமிருந்து உதவி வரும்வரை அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகப் பணித்தனர்.

உமர்(ரலி), ஹம்சா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்ததும், முஸ்லிம்கள் அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகுந்ததும், இஸ்லாம் மேன்மேலும் பரவிவருவதும் குறைஷியரின் கோபத்தை அதிகரித்தன. அவர்கள் முஸ்லிம்களை முழுமையாக புறக்கணிக்க முடிவுசெய்தனர். முஸ்லிம்களிடம் எவ்வித பேச்சுவார்த்தைகளோ, திருமண பந்தங்களோ, வியாரபாரத்தொடர்போ இல்லாமல் முழுமையாக புறக்கணித்தனர். அதனால் முஸ்லிம்கள் மக்கா நகருக்கு வெளியே ஒரு பள்ளத்தாக்கில் தஞ்சம் புகுந்தனர். நபித்துவத்தின் ஏழாவது ஆண்டில் தொடங்கிய இப்புறக்கணிப்பு மூன்றாண்டுகள் வரை நீடித்தது. புறக்கணிப்பு முடிவுற்ற குறுகிய காலத்தில் கதீஜா அம்மையாரும் அதன்பின்னர் பெரியதந்தையாம் அபுதாலிப் அவர்களும் இயற்கைஎய்தினர்.

இத்தகைய மார்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய இயக்கமானது, ஜஹிலிய பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள பொதுஜனத்தின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். நாட்டை ஆளும் அரசுகள் அவ்வியக்கத்தினரை துயரங்கட்காளாக்கி சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தவும் தயங்காது. இது தவிர்க்க இயலாததாக இருப்பினும், எவ்விதத்திலும் கொண்ட கொள்கையிலிருந்தும் விலகிவிடக்கூடாது.

தியாகம்

இஸ்லாத்தின் ஆட்சியானது கிலாஃபா மூலம் இவ்வுலகில் நடைபெறச் செய்ய தியாகங்கள் பல செய்ய நேரிடும். தமது குடும்பம், கட்டிக்காத்த சொத்துக்கள், ஆகியவற்றை கஷ்டத்திற்குள்ளாக்குகின்ற மாபெரும் சோதனையைத் தாங்கிக்கொள்ளும் மனோபலமும், பொறுமையும் வேண்டும். அத்தகைய துன்பங்களினால் தமது கொள்கையை விட்டும் விலகிச்சென்றுவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். நன்மை தீமையை, நல்லது கெட்டதை பிரித்தறிய அல்லாஹ்(சுபு)வின் சோதனை நிச்சயம் நடைபெறும். இதுவே நியதி. அல்லாஹ்(சுபு) தமது அருள்மறையிலே கூறுகிறான்.

'நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ( 29: 2-3)

நபிமார்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோரும் கடுமையான துன்பங்கள் மூலம் சோதிக்கப்பட்டனர். அவர்கள் எதிர்கொண்ட நிலையை அல்லாஹ்(சுபு) விளக்குகிறான். உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். 'நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (2: 214)

இஸ்லாத்தின்மீது முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு இஸ்லாத்தை வாழ்வில் அமல்படுத்த, கிலாஃபாவை நிலைநாட்ட, அழைப்புப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகைய கஷ்டங்களுக்கு உள்ளாவது உறுதி. இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் இந்த அரசுகளின் அடக்கு முறை, நம்பிக்கை கொண்டோரின் அழைப்புப்பணியை எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது. அத்தகைய சோதனையான காலகட்டங்கட்குப்பிறகே அல்லாஹ்(சுபு) தமது இறைத்து}தருக்கு உதவியை அளித்ததாகக் கூறுகிறான்.
(நம்) து}தர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது( 12: 110)

எனவே, இறைவனின் உதவியும் வெற்றியும் உண்மையாக இறைவனின் கட்டளையை ஏற்றுப் பாடுபடும் ஒவ்வொரு விசுவாசிக்கும், சோதனைகட்குப்பிறகு கண்டிப்பாக வந்து சேரும். இறை ஆணையைவிட இந்தச் சொத்துக்கள் பெரிதல்ல. நாமும் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் இறைக்கட்டளையைவிட உயர்வானதன்று.

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் து}தரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24)

No comments:

Post a Comment