Sunday, October 12, 2008

அரசியல் பார்வை


அரசியல் என்பது நபிகளார்(ஸல்) அவர்களின் சுன்னாவாகும் “மக்களின் நலன்களைப் பேணிக்காப்பது” என்பதே இஸ்லாத்தில் அரசியல் என வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரசியலே கலீஃபாக்களால் நடைமுறையில் அமுல் செய்யப்பட்டது. அது இஸ்லாத்தை நிலைநாட்டுவதாகவும், தஃவாவை(அழைப்புப்பணியை) செயல்படுத்துவதாகவும் அமைகிறது.

அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி சொல்லிய ரசூலுல்லாவின்(ஸல்) கூற்று என்ன தெரியுமா? 'நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிகள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபி யாரும் வரமாட்டார்கள். ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவார்கள்." என்பதாகும்." மேற்கண்ட கூற்றில் ‘மக்கள் நலன்’ என்பது ‘சியாசா’ எனும் (அரபி மூலம்) அடிப்படை வார்த்தையினின்றும் தோன்றியது. எனவே அரசியல் என்பது இஸ்லாத்தில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளதுடன் அது மிக முக்கியமான நபிவழியுமாகும்.

அப்துல்லாஹ்-இப்ன்-உமர் அவர்களின் அறிவிப்பில் ரசு10லுல்லாஹ்(ஸல்) கூறியதாக புகாரியில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது. “நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள். உங்கள் ஒவ்வொருவர் மீதும் கேள்விகணக்குண்டு. அதேபோல ஒரு இமாம் மக்களைக்கட்டிக்காப்பவராவர். அவரிடமும் அவரது பொறுப்புகள் பற்றி மறுமைநாளில் வினவப்படும். இக்கூற்றின் அரபி மூலத்தில் 'ராயின்' எனும் வார்த்தை 'மேய்ப்போர்", 'கட்டிக்காப்பவர்" என்கிற இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் நலன் என்கிற பொருளையே குறிக்கும். எனவே மக்கள் நலன் காப்பது என்பதே அரசியலாகும். அப்பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அரசியல்வாதியாவர். நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தோமேயானால் அதில் அரசியல் நடவடிக்கைகள் மிகுந்திருப்பதை அறிய முடியும். அவையே நமக்கு உள்நாட்;டு வெளிநாட்டு அரசியல் நடத்துவதன் சான்றும் வழிகாட்டியுமாகும். பத்ர் போருக்கு முன்னர் ஜிஹாத் கட்டளை வந்த பின்னர் நபிகளாரின்(ஸல்) நடவடிக்கைகள் அவரது அரசியல் இராணுவ விழிப்புணர்வையே எடுத்துரைக்கின்றன. ரஸ}லுல்லாவின்(ஸல்) தலைமையில் மதீனாவிலிருந்த இஸ்லாமிய அரசு குறைஷியர்களுக்கு எதிராக மேற்கொண்;ட போர் ஆயத்தப்பணிகள் அவர்களின் மத்தியில் ரஸ}லுல்லாவின்(ஸல்) அரசியல் உத்வேகத்தை உணரவைத்தன. அவை குறைஷியர்களின் பொருளாதாரத்தை குலையச்செய்தன. இன்றைய காலகட்டத்திலும் சில நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரியினிடையே ஓர் அச்சத்தை ஏற்படுத்த வைக்கின்றன. இவை அரசியல் தந்திரம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதைப்போன்றே நபிகளாரின்(ஸல்) நடவடிக்கைகளும் அரசியலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மற்றைய நாடுகளைப்போலன்றி அண்ணலாரின் நடவடிக்கைகள் தஃவாவை பரப்புவதற்காகவே அமைந்தது. ஹ_தைபியாவில் நடந்தவையும் அவற்றை தொடர்ந்தவையும் குஃப்பாருடனான நமது தொடர்பில் அரசியல் நடவடிக்கைகள் மிகுந்திருந்ததை உணர்த்துகின்றன. ஆனால் அம்மாபெரும் வெற்றியானது இக்காலத்தில் வேறுவிதமாக தவறுதலாக உணர்ந்துகொள்ளப்படுகிறது. இஸ்லாமிய நிலத்தை அபகரித்து அதில் குஃர் ஆட்சியை நிலைநாட்டுகின்ற இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை (என்று கூறப்படுகின்ற) செய்வதற்கு ஒப்பாக அது உதாரணமாகக் எடுத்து வைக்கப்படுகின்றது. ஸ_ரா அல்-பத்ஹ் யில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான். “நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக வெற்றியை உமக்கு அணித்தோம்.”(அல்-பத்ஹ் 1)

இதன் மூலம் எப்படியும் வெற்றி நமதே என எண்ணி எதுவுமே செய்யாமல் இருந்துவிடக்கூடாது. மாறாக ஒரு இஸ்லாமிய அரசை நிலைநாட்டவேண்டும் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் வேறு}ன்றி அதனை நிலைநாட்டும் முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும்.

'மிகச்சிறந்த வழித்தோன்றல்கள்" என்று நபி;(ஸல்) அவர்களால் குறிப்பிடப்பட்ட ஸஹாபாக்கள், அல்லாஹ்(சுபு) மற்றும் ரஸ}லுல்லாஹ்வின் கட்டளைகளை இவ்வெண்ணத்துடனே புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டனர். அதன் மூலமே இஸ்லாமிய அரசின் எல்லையானது பரந்து விரிந்தது. நபிகளாருக்குப் பின்னர் ஸஹாபாக்களும் அவர்களின் கட்டளைகளை, தொழுகை போன்ற தனிநபர் நடவடிக்கைகளில் மட்டுமல்லாது அனைத்து சமுதாய அரசியல் முறைகளிலும் பின்பற்றி இஸ்லாமிய தஃவாவை முழு உலகிற்கும் சுமந்து சென்றனர்.

அல்லாஹ்(சுபு) அல்-பத்ஹ் ஸ_ராவின் மூலம் வெற்றியை உறுதியளித்த பின்பும் கூட அதை அடையும் முயற்சியில் நபிகளாரும் ஸஹாபாக்களும் முழு மூச்சுடன் ஈடுபட்டனர்.

ஹ_தைபியாவிற்கு முன்னர் ஒரு முறை நபிகளார் தாம் மஸ்ஜிதுல் ஹராமில் இருப்பதாக கனவு கண்டார். நபிகளாரின் கனவானது அல்லாஹ்(சுபு)வின் வாக்குறுதியாக இருந்த போதிலும் அதனை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவதினின்றும் நபிகளார் பின்வாங்கவில்லை.

இது குறித்து அல்லாஹ் திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான். “திட்டமாக அல்லாஹ் உண்மையைக் கொண்டு தன்னுடைய து}தருக்கு அவர் கண்ட கனவை உண்மைப்படுத்திவிட்டான். அல்லாஹ் நாடினால் நிச்சயமாக மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலைகளை சிரைத்துக்கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அச்சமயம்) நீங்கள் (எவருக்கும்) பயப்படமாட்டீர்கள். ஆகவே நீங்கள் அறியாதிருந்ததை முன்னதாகவே அல்லாஹ் அறிவான். பின்னர் இதனையன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் ஆக்கினான்.( அல்-பத்ஹ் 27 )

'இதனையன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் ஆக்கினான்" என்பது பத்ஹ் அல் மக்கா வைக்(மக்காவின் வெற்றி) குறிக்காது. ஏனெனில் இங்கு 'இதனையன்றி" எனும் தெளிவான வார்த்தை உள்ளது. மாறாக இது கைபரிலிருந்த யூதர்களை வெற்றிகொள்வதையே குறிக்கிறது. மறுபடியும் இது அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த வாக்குறுதியாகும். அதில் அதை நிலைநாட்டக்கூடிய செயல்களில் ஈடுபடுமாறு எவ்வித கட்டளைகளும் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் ஜிஹாத் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான அஹ்காமை அறிந்திருந்தனர். அதனால் கைபரிலிருந்த யூதர்களை வெளியேற்றி அதனை கைப்பற்றினர். அஹ்சாப் போரில் நபி(ஸல்) அவர்கள் வஹீ மூலம் பாரசீகம் சிரியா மற்றும் எமன் பகுதிகள் இஸ்லாத்தை தழுவும் என அறிவிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவிற்குப்பிறகு ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கடும்போர் புரிந்து அப்பகுதிகளை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தனர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் மூலம் ஒரு முஸ்லிமின் மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறியலாம். இறைவன் தெளிவான வசனங்கள் மூலம் வெற்றியை வாக்களித்திருந்த பொழுதும் அதனை நடைமுறைப்படுத்த அல்லாஹ்வின் பாதையில் செயல்படுவது அவசியமாகும்.

குர்ஆனிலும், சுன்னாவிலும், முந்தைய சமுதாயங்களைப்பற்றியும், அன்றைய இறைத்து}தர்கள், தீர்ப்புநாள், சொhக்கம், நரகம் ஆகியன பற்றியே அதிகமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது செயல்பாடுகள் பற்றி சில வசனங்களே கூறப்பட்டுள்ளன. அவ்வசனங்களினின்றும் அஹ்காம் ஷாPஆ பெறப்படுகிறது. அஹ்காம் ஷாPஆ என்பது நமது நடவடிக்கைகள் குறித்த இறைவனின் கட்டளைகளாகும். இமாம் மஹதி மற்றும் ஈஸா(அலை) அவர்களின் வருகை, கிலாஃபா மறுபடியும் ஏற்படும் என்ற உறுதிமொழி, ஸ_ரா அல் இஸ்ராவில் குறிப்பிட்டுள்ளபடி பனீ இஸ்ராயீலின் மக்களை தண்டித்தல் ஆகியவை வெறும் வசனங்களே. அவை வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கட்டளையிடவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் வழியைப்பின்பற்றி நாம் அவ்வசனங்களில் மறைந்துள்ள அஹ்காம் ஷாPஆவை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் சிலரோ அஹ்காம் உள்ள வசனங்கட்கும் மற்றவற்றிற்குமுள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கின்றனர். அதனால் அவர்கள் தேவையான நடவடிக்கை எதுவும் எடுக்காமலேயே வெற்றி தானாக வரும் என எண்ணி முஸ்லிம் உம்மாவை திசைதிருப்ப முனைகின்றனர். இவற்றின் மூலம் மனித சமுதாயத்தின் முன்னோடியாக இருக்கின்ற, ‘மிகச்சிறந்த உம்மா’ என்று அல்லாஹ்(சுபு) அழைக்கின்ற, இவ்வும்மாவின் அரசியல் கண்ணோட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என அறியலாம். அதன்மூலமே நாம் அல்லாஹ்(சுபு) மற்றும் நபிகளாரின்(ஸல்) கட்டளையின்படி நடக்க முடியும்.

இறைவன் கூறுகிறான்

“விசுவாசம் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள். (அவனது து}தருக்கும் கீழ்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாவிற்கும் அவனது து}தருக்கும் கீழ்படிந்து நடக்கும்) அதிகாரம் உடையவர்கட்கும் கீழ்படியுங்கள். ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனது து}தரிடமும் திருப்பிவிடுங்கள். உணமையாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் இதுதான் அழகான முடிவாக அமையும்.(அந் நிஷா 59)

உதுமானியக் கலீஃபாவான முஹம்மத் அல் பத்ஹ் (வெற்றியாளர்) அவர்களது செயல் எமக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகும். அவர் 'கான்ஸ்டான்டிநோபில் மற்றும் ரோம் இஸ்லாத்தின் ஆளகைக்குள் வரும்" என்ற நபி(ஸல்) அவர்களின் முன்அறிவிப்பை ஒரு கூற்றாக மாத்திரம் எண்ணாமல் அதன் பின்னணியிலிருந்த அஹ்காமை புரிந்திருந்தார். அதனால் கான்ஸ்டான்டிநோபில் மீது போர் தொடுத்து அதனை இஸ்லாத்தின் கீழ் கொண்டுவந்தார். ஆனால் இன்னும் ரோமபுரி இஸ்லாத்தின் கீழ் வரவில்லை அதனால் அதைக்கைப்பற்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆட்சிசெய்கின்ற ஒரு இஸ்லாமிய கிலாபாவை அமைத்து அதன் முலம் போராட முஸ்லிம்கள் முன்வர வேண்டும். நிச்சயமாக நமது வெற்றி இறைவனிடமிருந்தே அமையும்.

No comments:

Post a Comment