Tuesday, August 25, 2009

கருவை உறைநிலையில் வைப்பது (Freezing the embryo) , குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது (determining the child gender ) ஆகியவை தொடர்பான ஹுகும் ஷரியா:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கேள்வி:
சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கûயில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் இது நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா(இறைசட்டம்) என்னவென்று விளக்கிக் கூறுங்கள். அல்லாஹ்( சுபு) உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
பதில்:

இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும் நியதிகளையும் அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும் அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான். இத்தகைய பயனுள்ள அறிவையும் அதனை மனிதர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குபவர்களையும் அல்லாஹ்(சுபு) புகழ்ந்து கூறியிருக்கிறான். ஏனெனில் இத்தகைய அறிஞர்கள்தான் அல்லாஹ்(சுபு) இருப்பதை ஆழமாக அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள், இந்த பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஆய்வுசெய்து அதன் இரகசியங்களை விளங்கிக்கொள்வதன் மூலமாக அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்திற்கும் அவனுடைய எல்லையற்ற ஆற்றலுக்கும் அவனுடைய மகத்தான ஞானத்திற்கும் இவர்கள் உறுதியான சாட்சிகளாக விளங்குகிறார்கள்,

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அவனுடைய அடியார்களிலெல்லாம் அவனை அஞ்சி நடப்பவர்கள் அறிவுடையோர்தான் (அல் பாதிர் : 28)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"وا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافر الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ "
(உலமாக்கள் எனப்படும்) அறிவுடையோர்தான் இறைத்துனதர்களின் வாரிசுகள் ஆவார்கள், தினாரையோ அல்லது திர்கத்தையோ (தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ) இறைத்தூதர்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்லவில்லை, அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அறிவுதான்! அதை எடுத்துக் கொள்பவர் விசாலமான வாய்ப்புகளை பெற்றவர் ஆவார் (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: இப்னுமாஜா)

எனினும். ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களும் நிராகரிப்பவர்களும் இத்தகைய அறிவை தவறாக பயன்படுத்தி மனிதர்களுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துவதுடன் மனித இனத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மேலும் மனிதர்களை வழிகெடுத்து நேர்வழியிலிருந்து விலகிப்போகும்படி செய்கிறார்கள், அறிவியல் நுட்பங்களை சரியான வழியில் பிரயோகிப்பதை விடுத்து தவறான வழியில் பிரயோகிக்கத் தூண்டுகிறார்கள், இவ்வாறாக குளோனிங் முறையை கையாளுதல். மனிதர்களின் ஆண்விந்தணுவையும் பெண்சினை முட்டையையும் இணைத்து கருவூட்டம் செய்து அந்த கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து மற்றவர்களுக்கு அதை விற்பனை செய்தல். இறந்த உடல்களை அறுத்து பரிசோதனை மேற்கொள்ளுதல். பிறகு அந்த உடல்களிலிருந்து உறுப்புகளை அகற்றி அவற்றை விற்பனை செய்தல். இதற்கும் மேலாக உயிரோடு இருக்கும் மனிதர்களை கடத்திச்சென்று அவர்களை கொலைசெய்து பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்தல் ஆகிய பாவச்செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள், கருவுற்ற சினைமுட்டைகள் மற்றும் கருவிலுள்ள சிசுக்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகளில் அவற்றை உறைநிலையில் வைத்து அந்த சிசுக்களின் வாழ்வை விருப்பம்போல் தவறாக பயன்படுத்துவதற்காக அவற்றின் உறுப்புகளை பிரித்தெடுத்தல் போன்ற பாவச்செயல்களை அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரிலும் மருத்துவ பரிசோதனை என்ற பெயரிலும் கட்டுப்பாடின்றி நிகழ்த்தி வருகிறார்கள்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ
நிச்சயமாக! ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்தி இருக்கின்றோம் ( அல்இஸ்ரா : 70)

அல்லாஹ்(சுபு) மனிதர்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் உண்மையான அறிவாற்றல் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. மேலும் இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் மற்ற படைப்பினங்களிலிருந்து தனித்துவம் கொண்ட சிறந்த படைப்பாக மனிதன் உருவெடுத்திருக்கிறான், இதன் மூலமாக மனிதன் அருள்பெற்றவனாகவும் மனநிறைவு கொண்டவனாகவும் ஆகலாம். மேலும் இதன் மூலமாக அவனுடைய உலக வாழ்க்கையையும் அறிவார்ந்த நிலையையும் உயர்த்திக் கொள்ள்ளலாம், ஆனால் தீயவர்களாகவும் களங்கமுற்ற சிந்தனை உடையவர்களாகவும் இருக்கும் சில அறிவியல் அறிஞர்கள் இந்த அறிவியல் அறிவைக் கொண்டு மனித இனத்தை வழிகெடுத்து அதை தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகள் நிலைக்கு இட்டுச்செல்லவும் மனிதனை தீய ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி மனித குலத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தவும் துணிந்துவிட்டார்கள்.

மேற்கூறப்பட்ட கேள்விக்கு இப்போது விடை காண்போம்:

கருவை உறையவைத்தல் (Freezing the embryo):

குறிப்பிட்ட சில நோய்களின் காரணமாக மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணு இணைந்து கருவுறுதல் நடைபெற்று இயற்கையாக கற்பம் தரிக்க இயலாத நிலை சில தம்பதிகளுக்கு நேரிடுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது, பெண்ணின் சினைக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. சினைப்பையின் இயக்கத்திறன் குறைவு. கருப்பையின் பலவீனம். அல்லது ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்தணுவின் இயக்கத்திறன் குறைவு ஆகிய காரணங்களினால் இயற்கையாக ஒரு பெண் கற்பம் தரிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது, ஆகவே மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருவறைக்கு (uterus) வெளியே தகுந்த சூழலில் ஒரு சோதனைக்குழாயில்(Test tube) மனைவியின் சினைமுட்டையை(ovum) கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம்(fertilisation) செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள், இதன் மூலமாக மகப்போறு அற்ற நிலையிலிருக்கும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது, குளோமிட்(clomid) எனப்படும் மருத்துவமுறை மூலமாக ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சினைப்பையிலிருந்து என்டோஸ்கோப்பி(endoscopy) எனப்படும் சிகிச்சைமுறையின் வாயிலாக சரியான தருணத்தில் பிரித்தெடுத்து ஒரு கடினத்தன்மை கொண்ட தட்டில் வைத்து பின்னர் ஒரு சோதனைக்குழாயில் அதை அவளுடைய கணவனின் விந்தணுவுடன் இணைத்து கருவுட்டம் செய்கிறார்கள், பிறகு கருவுற்ற அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறார்கள். அல்லாஹ்(சுபு) நாடினால் அது குழந்தையாக வளர்ச்சி அடைகிறது அல்லது அல்லாஹ்(சுபு) நாடினால் அது செயலற்று இறந்துவிடுகிறது பின்னர் இயற்கையாக அது கருவறையில் அழிக்கப்பட்டுவிடுகிறது, இத்தகைய மருத்துவ சிகிச்சையை அந்தப் பெண்ணும் அவளது கணவனும் தெரிவுசெய்யும் சிறப்பு மருத்துவ நிபுணர் மேற்கொள்கிறார்.


சில சந்தர்ப்பங்களில் கருவின் இறப்புவிகிதம் 90 சதவீதம் அளவுக்கு இருப்பதாலும் தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏக்கம் கொள்வதாலும் அவர்கள் இந்த சிகிச்சையை திரும்பத்திரும்ப மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விழைகிறார்கள், பெண்ணுக்கு இது ஒரு கஷ்டமான மருத்துவ சிகிச்சை என்பதால் அவளிடமிருந்து அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகளை பெறுவதற்காக குறிப்பிட்ட மருந்துகள் அவள் உடலில் செலுத்தப்படுகின்றன, சோதனைக்குழாயில் பெண்ணின் சினைமுட்டைகளை கருவூட்டம் செய்யும் செயல்முறையில் முழுவெற்றிக்கு உத்திரவாதம் இல்லை என்ற காரணத்தால் ஒரு சினைமுட்டை கருவூட்டம் பெறாதபோது மற்றொன்றை உபயோகப்படுத்தும் விதமாக சில சினைமுட்டைகளையாவது பெண்ணிடமிருந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது, இவ்வாறு எடுக்கப்பட்ட சினைமுட்டைகளை கருவூட்டம் செய்து அவற்றை இருப்பில் வைத்துக் கொண்டு அதில் ஒன்றை பெண்ணின் கருவறையில் செலுத்துகிறார்கள், அதை கருவறை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மற்றொன்றை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்த முயற்சி சிலமுறை மேற்கொள்ளப்படுகிறது.


கருவூட்டம் பெற்ற கருமுட்டை ஒரு தனிப்பட்ட கருவியின் துணைகொண்டு பெண்ணின் கருவறையில் செலுத்தப்படுகிறது, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு பொதுவாக மூன்று கருமுட்டைகள் கருவறையில் செலுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்படுகின்றன, ஒருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதில் தோல்வி ஏற்படும்போது மற்றொன்று பயன்படுத்தப்படுகிறது, சோதனைக்குழாயில் கருவூட்டம் ஏற்படுத்தும் இந்த முறையில் ஒரே தடவையில் முயற்சி வெற்றிபெற்று கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்தாலும் ஒவ்வொரு முறையும் என்டோஸ்கோப்பி மூலம் சினைமுட்டையை பிரித்தெடுப்பது அந்தப்பெண்ணுக்கு மிகுந்த கஷடத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தாலும் குறிப்பிட்ட மருந்துகளை அவள் உடலில் செலுத்தி அதன்மூலம் அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகள் அவளிடமிருந்து பெறுகிறார்கள், இதன்மூலம் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படும் கஷடத்திலிருந்து அவள் காக்கப்படுகிறாள்.


எனினும் கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை வளர்ச்சி அடையும் நிலையோ அல்லது செயலற்றுப் போகும் நிலையோ உடணடியாக ஏற்படாது. உண்மையில் பலமணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோதான் அதுபற்றி கண்டறியமுடியும், இந்த காலகட்டத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகளை தகுந்த சூழலில் சரியான வெப்பத்தில் இருக்கும்படியாக உறைநிலையில் (frozen) பாதுகாத்து வைக்கவில்லை எனில் அவை இறந்துவிடும். ஆகவே இந்த உபரியான கருமுட்டைகள் திரவநிலை நைட்ரஜைன் (liquid nitrogen) எனும் திரவத்தில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது பின்னர் அவை உபயோகப் படுத்தப்படுகின்றன.


இவ்வாறுதான் கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் வழிமுறை ஏற்பட்டது, பலமுறை பெண்ணிடமிருந்து சினைமுட்டைகளை பிரித்தெடுக்கும் கஷ்டத்தை நீக்குவதற்காகவும் பலமுறை அதற்காக மருத்துவ சிகிச்கை பெறும் சிரமத்தை குறைப்பதற்காகவும் ஒரே சமயத்தில் பெண்ணிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகள் பெறப்பட்டு கருவூட்டம் செய்யப்படுகின்றன, கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளில் ஒன்று கருவறைக்குள் செலுத்தப்பட்டதற்குப் பின்னர் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் மறுமுறை இதே சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உபரியாக உள்ள கருமுட்டைகள் உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.


இருந்தபோதிலும் முயற்சி வெற்றி பெற்று மருத்துவ சிகிச்சை முடிவுற்ற பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் வர்த்தக பொருளாக ஆக்கப்படுகின்றன, குறிப்பாக நிராகரிக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த தீயசெயல் சாதாரனமாக நடந்துவருகின்றன, நீண்ட காலத்திற்கு அல்லது சில தருணங்களில் ஒரு வருட காலத்திற்குக்கூட கருமுட்டைகள் உறைநிலையில் வைக்கப்பட்டு எந்த பெண்ணடமிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பெண்ணிற்கு செலுத்தப்படாமல் மற்ற தம்பதிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணிற்கோ விற்பனை செய்யப்படுகின்றன, இத்தகைய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உறைநிலைக் கருக்களின் சேமிப்பு வங்கிகளாக செயல்படுகின்றன, செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்படும் சினைமுட்டைகள் வேறுபாடின்றி வெவ்வேறு ஆண்களின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யப்படுகின்றன, முதல்தடவை கருமுட்டை செலுத்தப்பட்டு முயற்சி தோல்வியடைந்த மற்ற பெண்ணகளுக்கு இத்தகைய அந்நிய கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன, இவ்வாறு இவர்கள் பிறக்கப்போகும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழியை தவறாக மாற்றியமைத்து சந்ததிகளின் மரபுவழி சீர்முறையை (genetical line) திரித்து மனித இனத்தை வழிகேட்டில் ஆழ்த்துகிறார்கள்!


மேலும் இத்தகைய உறைநிலை மருத்துவ தொழில்நுட்பம் கருமுட்டை அளவில் நிறுத்திக் கொள்ளாமல் கருவூட்டம் பெறாத சினைமுட்டைகளையும் கருநிலை சிசுக்களையும்(ச்ர்ங்ற்ன்ள்ங்ள்) உறைநிலையில் சேமித்து வைத்து அவைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள், இத்தகைய வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கும் சிலர் சில தருணங்களில் பிரபலமான சில மனிதர்களுடைய சினைமுட்டைகளையோ அல்லது கருநிலை சிசுக்களையோ உள்ளபடியே விற்பனை செய்துவருகிறார்கள்!


இதுதான் உறைநிலை கருமுட்டை மற்றும் கருநிலை சிசுக்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைநிலையாகும், இந்த விஷயம் தொடர்பாக விரிவான விளக்கம் இருந்தபோதிலும் நாம் கூறியுள்ளவை ஒட்டுமொத்த விஷயத்தையும் உள்ளடக்கிய சுருக்கமான விளக்கமாகும்.


இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


1. சட்டரீதியான தம்பதிகளில் உள்ள பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய கணவனின் விந்தணுவோடு இணைத்து சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்வதைப் பொறுத்தவரை அதற்கு அனுமதியுண்டு, திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இயல்பாக விரும்புவார்கள் என்ற நிலையில் ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகளால் அவள் கருவறையில் இயற்கையாக கருவுறுதல் நடைபெறுவதற்கு வாய்ப்பபில்லை எனும்போது இது அனுமதிக்கப்பட்டதுதான் ஏனெனில் இது மருத்துவ சிகிச்சையை சார்ந்ததாகும், அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏவியிருக்கிறார்கள். உஸôமா இப்ன் ஷுரைக்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ

ஆம்! நீங்கள் நிச்சயமாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் அல்லாஹ் அஸ்வஜல் நிவாரணம் இல்லாத நிலையில் முதுமையைத்தவிர (மரணத்தைத் தவிர) எந்த நோயையும் விட்டுவிடவில்லை.


எனினும் குழந்தைப்பேறுக்காக இந்தமுறையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.


முதலாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டுதல் மேற்கொள்வது சட்டரீதியான தம்பதிகளுக்குள் மட்டுமே நடைபெறவேண்டும்,


ருவைபா இப்ன் தாபித் அல்அன்ஸôரி(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْ غَيْرِهِ

அல்லாஹ்வின் மீதும் மறுமைநாள் மீதும் ஈமான் கொண்ட எவருக்கும் மற்றவர்களின் பயிரில் நீர்பாசனம் செய்வதற்கு அனுமதியில்லை.


ஆகவே ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சட்டரீதியான கணவனின் விந்தணுவைக் கொண்டு அல்லாது கருவூட்டம் செய்வதற்கு அனுமதியில்லை.


இரண்டாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் மனைவியின் கருவறையில் மட்டுமே செலுத்தப்படவேண்டும், என்பதோடு மனைவி இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், மேற்குநாடுகளில் நடைபெறுவதைப்போல கணவனின் இறப்புக்குப் பின்னர் இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை, மேற்குநாடுகளின் மக்களைப் பொறுத்தவரை ஒரு பெண் குழந்தையை விரும்பும்போது கணவன் உயிருடன் இல்லாதபோதும் கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொண்டு குழந்தை பெற்றுகொள்வதில் எந்த தீங்கும் இல்லையென்று கருதுகிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை ஏனெனில் கணவன் உயிருடன் இல்லாதநிலையில் மனைவி கற்பம் அடைந்தால் பிறகு அவள் பெரும்பாவம் புரிந்தவர்களில் ஆகிவிடுவாள், உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீûஸ அவர்கள் அறிவித்தபோது ஸஹாபாக்கள் எவரும் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, இவ்விருவரும் அறிவித்தது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மற்ற ஸஹாபாக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பார்கள், இதனடிப்படையில் இது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவாக (இஜ்மா அஸ்ஸஹாபா) இருக்கிறது.


எனவே கணவன் இல்லாத நிலையில் மனைவி கற்பம் அடைதல் என்பது விபச்சாரம் புரிந்ததற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது, (கணவனல்லாத) அந்நிய ஆணுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக கற்பம் ஏற்படும் பட்சத்தில் அந்த செயல் தண்டனை சட்டங்களுக்கு (hudood law) உட்படக்கூடியது, இதே அடிப்படையில் கற்பம் அடைதல் உடலுறவு கொள்ளாத நிலையில் ஏற்பட்டாலும் அதாவது கணவன் இறந்துவிட்ட நிலையில் சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொள்வதன் மூலம் மனைவிக்கு கற்பம் ஏற்பட்டாலும் அது தடுக்கப்பட்ட செயல்களில் உள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.


இதனடிப்படையில் சட்டரீதியான கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் மனைவியின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் இந்திரியங்களை(விந்தணு மற்னும் சினைமுட்டை) இணைத்து கருவூட்டம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.


2. உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பதைப் பொறுத்தவரை முதல் முயற்சி தோல்வியுறும்போது மறுபடியும் அதே முயற்சியை மேற்காள்வதற்காக அவை உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன, இவ்வாறு இருக்கும் நிலையில் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அதே பெண்ணுக்கும் அவளுடைய சட்டரீதியான கணவனுக்கும் உரியதாக இருக்கவேண்டும். இதில் உயிரணுக்களில் கலப்படம் நிகழவில்லை என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டால் பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் இச்சமயத்ததில் அவள் கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.


எனினும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றில் கலப்படம் நிகழ்கிறது என்பது திட்டவட்டமாக உறுதி செய்யபட்டிருக்கிறது, இவ்வாறு நிகழும்போது சோதனைக்குழாய் முறையில் பிறக்கும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழி குறித்து சந்தேகம் ஏற்படுவதால் அந்த குழந்தையின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இது மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிகப்பாவமான செயலாகும், அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ முஸ்லிம்கள் இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது, ஆகவே சட்டரீதியான முஸ்லிம் தம்பதிகள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை மேற்கொள்ளும்போது கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.


1, மனைவியின் சினைமுட்டையை உயிருடன் இருக்கும் கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யும்போது முறையான கவனம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும், மனைவியின் கருவறைக்குள் கருமுட்டை செலுத்தப்படும்போதும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்போதும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கண்காணித்து வரவேண்டும்.

11, உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையை கையாள வேண்டும், அவைகள் எந்தவிமாமான கலப்படத்திற்கும் உட்படுத்தப்படாமலும் மற்றவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்திற்கு இடம் கொடுக்காமலும் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தமுறையில் கருமுட்டைகளுக்கு மத்தியில் கலப்படம் நிகழ்கிறது என்ற அறிவிப்பின் அடிப்படையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.


111, கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சியடைந்து கற்பம் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டால் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் உடணடியாக அழிக்கப்படவேண்டும், அவைகளை அந்நியர்கள் பயன்படுத்தும் விதத்திலோ அல்லது அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும் விதத்திலோ எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், எனினும் இதை கண்கூடாக அறிந்துகொள்வதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும், உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்ற இந்த நிபந்தனை முறையாக நிறைவேற்றப்பட்டதா என்பதை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாதவகையில் இந்தவிஷயம் வெறும் யூகமாவே இப்போது இருந்துவருகிறது.


"ஹராமான செயலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் (Means) ஹராமானவையே."

என்ற ஷரியா விதிமுறையின் அடிப்படையில் ஹராம் நிகழ்வதற்கு சிறிய வாய்ப்பு கூட இருக்குமானால் பிறகு இந்த சிகிச்சைமுறை ஹராமாகிவிடும், உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகள் அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும்போதும் அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ அவற்றில் கலப்படம் நிகழும்போதும் அது ஹராமாகிவிடுகிறது, மரபுவழியில் பரிசுத்தத்தை பாதுகாப்பது கட்டாய கடமை என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.


இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸ் இப்ன் மாஜாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

""தனது தந்தையை அல்லாமல் மற்றொருவரிடம் பிறப்புரிமையை கோருபவர் மீதும் தனது பாதுகாவலரை அல்லாமல் மற்றவரிடம் பாதுகாப்புரிமையை கோருபவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.


அபூஹுரைரா(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


லிஆன்( (li’aan – சாபமிடுதல்) தொடர்பான வசனம் அருளப்பட்ட தருணத்தில் அல்லாஹவின்தூதர்(ஸல்) கூறினார்கள்.


أيَّما امرأة أدخلت على قوم نسباً ليس منهم فليست من الله في شيء، ولم يدخلها الله جنته

"எவளேனும் ஒருபெண் ஒருகூட்டத்தாருக்கு வாரிசாக இல்லாத சந்ததியை (அவர்களுக்கு உரியது என்று) அறிமுகப்படுத்துவாளாயின் அவளுக்கு அல்லாஹ்வுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது மேலும் அவன் அவளை சுவனத்தில் நுழைவிக்கமாட்டான்."


இதனடிப்படையில் சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பது ஹராமாகும், மனைவியின் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டையைத் தவிர்த்து உபரியாக கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் அனைத்தும் உடனே அழிக்கப்பட வேண்டும். அவைகளை உறைநிலையில் வைப்பதற்கோ அல்லது மறுமுறை பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது, கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை செயலற்றுவிடுமாயின் பிறகு மனைவி மறுபடியும் அதே மருத்துவ சிகிச்சைக்கு உட்படவேண்டும், ஒவ்வொருமுறையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுவது மனைவிக்கு கஷ்டம் என்ற காரணத்திற்காக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதியில்லை ஏனெனில் இது குழந்தையின் தாய்தந்தை மரபுவழியில கலப்படம் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.


கருமுட்டைகளை உறைநிலையில் வைக்கும்முறை ஷரியாவின் அடிப்படையில் ஹராம் என்று கூறப்பட வேண்டுமானால் கருமுட்டையில் கலப்படம் ஏற்படும் என்ற சந்தேகம் மிகைத்து நிற்கவேண்டும் என்றும் ஆனால் இதில் சாதாரணமான சந்தேகம் நிலவுகிறதே தவிர உறுதியான சந்தேகம் நிலவவில்லை என்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்குரியதாக இருந்து செயல்முறைகள் உரிய கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் நடத்தப்படுமாயின் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் ஒருவர் வாதிடலாம், முதல்தடவை கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டதற்கு பின்னர் உபரியாக உள்ள கருமுட்டைகளை மீண்டும் பயன்படுத்தாமல் முறையாக அழித்துவிடும் நம்பிக்கைக்குரிய மருத்துவநிலையங்கள் இருக்குமானால் திரும்பத்திரும்ப மருத்துவ சிகிச்சைக்கு மனைவியை உட்படுத்தும் கஷ்டத்தை நீக்கும்வகையில் உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது:


ஷரியாவின் இந்த விதிமுறையை பிரயோகிப்பதற்கு சந்தேகம் உறுதியான முறையில் இருக்கவேண்டும் என்ற வாதம் சரியானதுதான், சிகிச்சை பெறும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்நிலையில் இத்தகைய உறுதியான சந்தேகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான், கருமுட்டைகளில் கலப்படம் ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றும் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ந்து முயற்சி வெற்றி பெற்றுவிட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் முறையாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் முழுமையான நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான், எனினும் இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை திட்டவட்டமாக குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகின்றன என்ற அடிப்படையிலும் இத்தகைய சிகிச்சைமுறையில் இடம்பெறும் இரண்டு நிலைகளை ஆய்வுசெய்யும்போது இதுபோன்ற நம்பிக்கைகள் நிச்சயமற்றவை என்பது உறுதியாகும்.


முதலாவதாக. கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டு அது கருவாக வளர்ச்சி அடைகிறதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கு காத்திருக்கும் காலகட்டத்தில் அனைவரின் கவனமும் கருவளர்ச்சியின் மீது நிலைத்திருக்குமே ஒழிய உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டை மீது கவனம் நிலைத்திருக்காது.


இரண்டாவதாக. கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவது உறுதிசெய்யப்பட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தையும் அழிக்கும் செயல்முறை முறையான கண்காணிப்போடு நிறைவேற்றப்படவேண்டும், ஆனால் கருவுற்ற மனைவியோ அல்லது அவளது கணவனோ இவ்விஷயத்தில் உரிய கவனத்தையோ அல்லது முறையான அக்கறையையோ எடுத்துக்கொள்வதில்லை, அதிகப்பட்சமாக "உபரியான கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதா?"என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு "ஆம், அழிக்கப்பட்டுவிட்டன" என்ற பொதுவான பதிலை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள், இவ்வாறு இருக்கும் நிலையில் மருத்துவநிலையங்கள் நம்பிக்கைக்கு உரியவை என்ற யூகத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு முழுமையாக திருப்தி கொள்ளமுடியும்?


எனவே சந்தேகம் மிகைக்கும்நிலை (strong suspicion – ghalabat dhanni)இடம்பெறாதபோதும் மேற்கண்ட ஷரியா விதிமுறையின் அடிப்படையில் இந்த செயல்முறை ஹராமாக இருக்கக்கூடாது என்பது அவசியமாகும், ஆனால் மிக நிச்சயமாக இது "சந்தேகத்திற்குரியது" என்பதுதான் உண்மைநிலையாகும்.


ஹஸன் இப்ன் அம்ர்(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹஸன் ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது


அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) வார்த்தைகளை நான் மனனம் செய்திருக்கிறேன் அவர்கள்(ஸல்) கூறினார்கள்.

دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ

"சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டுவிட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்"

முடிவுரை:


இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறையில் மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணுவை இணைத்து கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்துகொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.


கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் சோதனைக்குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கருவறையில் செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கருமுட்டைகள் அனைத்தும் வேறெந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்காத வகையில் உடனே அழிக்கப்படவேண்டியது கட்டாயமாகும்.


அல்லாஹ்(சுபு) வின் நாட்டப்படி முதல்முறை செலுத்தப்பட்ட கருமுட்டையின் மூலம் கற்பம் தரிக்குமானால் நிச்சயமாக அந்த தம்பதிகள் அல்லாஹ்(சுபு) வுக்கு நன்றி செலுத்துவார்கள். ஒருவேளை அல்லாஹ்(சுபு) நாடி கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை செயலற்றுப்போய் முயற்சி தோல்வியுறுமானால் அந்த தம்பதிகள் மறுமுறையும் இந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமே ஒழிய உபரியாக கருமுட்டைகளை உருவாக்கி அவற்றை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.


சட்டரீதியாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றை கருவறைக்கு வெளியே வைத்து கருவூட்டம் செய்துகொள்வதற்கு அனுமதியுண்டு ஆனால் இதை கணவன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ளமுடியும்.


குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் – Determining the child gender:

வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே மனிதர்கள் குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்வதில் விருப்பம் கொள்பவர்களாகவும் விரும்பிய பாலினம் உருவாகும்போது ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் விரும்பாத பாலினம் உருவாகும்போது அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் செயல்முறையை பிரயோகிகத்து அவற்றை நீக்குபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.


அறியாமைக் காலத்தில் ஆண்குழந்தை அதிகமாக விரும்ப்பட்டது ஏனெனில் அது போர்க்களத்திலும் மற்ற விஷயங்களிலும் தந்தைக்கு உதவியாக இருப்பதோடு சந்ததியையும் நிலைநிறுத்துகிறது, அதேவேளையில் பெண்குழந்தை துயரத்தை கொடுக்கக்கூடியது என்று கருதப்பட்டதால் உயிருடன் புதைக்கப்பட்டது,அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்) குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்று வினவப்படும்போது... (அத்தக்வீர் : 8. 9)


பிறகு வந்த காலகட்டத்தில் விரும்பாத குழந்தைகளை கருவிலேயே நீக்கிவிடும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டது, தாயின் கருவறையில் ஸகேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து விருப்பத்திற்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் கருவை கலைத்திடும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.


அறிவியல் முன்னேற்றம் அடைந்த இந்தக் காலகட்டத்தில் இவ்விஷத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன, கருவறையில் இருக்கும் கருநிலை சிசுவை (foetus) கண்காணிக்கவும் அதன் இயக்கத்தை விரும்பியவாறு கட்டுப்படுத்தவும் இப்போது சாத்தியம் இருக்கிறது, கருவறையிலுள்ள கருவின் மரபணு (gene)அமிலத்தன்மையின் சூழலில் (acidic environment) இருந்தால் பெரும்பாலும் அது பெண் சிசுவாக உருவாகும் என்றும் மரபணு காரத்தன்மையின் சூழலில் (alkaline environment) இருந்தால் அது பெரும்பாலும் ஆண் சிசுவாக உருவாகும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது, இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்பவர்கள் உடலுறவு ஏற்படுவதற்கு முன்பு கருவறைக்குழாயில்(vegina) காரத்தன்மையுள்ள திரவத்தை பீச்சிக்கொள்வதன் மூலம் கருவறையில் காரத்தன்மையின் சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு அல்கலைன் டூஷிஸ்(ஹப்ந்ஹப்ண்ய்ங் க்ர்ன்ஸ்ரீட்ங்ள்) என்று பெயராகும். இதன் மூலமாக ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.


இதற்கு அடுத்தபடியாக பெண்ணின் உடலில் காரத்தன்மையின் சூழல் அல்லது அமிலத்தன்மையின் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு உணவுமுறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, கருவின் பாலின உருவாக்கத்தில் இரண்டு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.


முதலாவதுமுறை: கருவறை மற்றும் கருவறைக்குழாய் ஆகியவற்றில் காரத்தன்மையையோ அமிலத்தன்மையையோ செயற்கையாக உருவாக்குதல்,
பொட்டாஷியம் மற்றும் சோடியம் ஆகியவை காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது ஆண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் அதேவேளையில் மெக்னீஸியம் மற்றும் கால்ஸியம் ஆகியவை அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது பெண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் கண்டறியப்பட்டது.


இரண்டாவதுமுறை: உணவுமுறை சினைமுட்டையின் வெளிப்புறசுவரில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அதன் மூலமாக அது விந்தணுவிலுள்ள ஆண்அணுவையோ (male sperm) அல்லது பெண்அணுவையோ (female sperm) ஈர்க்கும் திறனைப் பெற்றுக்கொள்கிறது என்றும் ஆய்வுசெய்யப்பட்டது.


இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு காரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான உப்பேற்றிய மாமிசம்(salty meat) மசாலாபொருட்கள் கலந்த உணவுகள் பழங்கள் மற்றும் பொட்டாஷிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் பால் மற்றும் பால்பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.


மாறாக பெண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான பால் மற்றும் பால் பொருட்கள். கால்ஸிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் மாமிசம் குறிப்பாக உப்பேற்றிய மாமிசம் பழங்கள் மசாலா மற்றும் நறுமண உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்ந்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.


இதன்பின்னர் மற்றொரு வழிமுறையும் கண்டறியப்பட்டது: பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிபட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது, உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது, ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும் ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.


இவ்வாறாக இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுதல் அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவை குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் செயல்முறைகளாக இருந்துவருகிறது.


பெண்ணின் கருவறையில் சினைமுட்டை இருக்கும் தேதியை அவளது மாதவிடாய் தேதியை வைத்து தீர்மானித்து விடலாம் என்றபோதும் அது தோராயமான கணிப்பாகத்தான் இருக்கும், கருவறைக்குள் என்டோஸ்கோப்பி கருவிமூலம் உற்றுநோக்கி கணிப்பதன் மூலமே சினைமுட்டையின் வெளிப்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.


தவ்பான்(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

"ஆணின் இந்திரியத்திற்கு முன்பாக பெண்ணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது ஆண்குழந்தையாகும். பெண்ணின் இந்திரியத்திற்கு முன்பாக ஆணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது பெண்குழந்தையாகும்"

தவ்பான்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.


யூதரிலுள்ள ரப்பி (அறிஞர்) ஒருவர் அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) ஆண்குழந்தை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலுரையாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாவது.

"அவர்கள் (உடலுறவில்) ஒன்றுபடும்போது ஆணின் இந்திரியமும் பெண்ணின் இந்திரியமும் வெளிப்படுகிறது, ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி ஆண்குழந்தை உருவாகிறது. பெண்ணின் இந்திரியம் ஆணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி பெண்குழந்தை உருவாகிறது"

"ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைத்துவிடுதல்" என்றால் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் ஆணின் விந்தணு வெளிப்படுதல் என்று பொருள்படும்.


இதன்பின்னர் மருத்துவநிபுணர்கள் மேம்பட்ட அறிவியல் வழிமுறையை உருவாக்கினார்கள் அதற்கு ""தேர்வுசெய்து விந்தணுவை செலுத்தும்முறை அல்லது விந்தணுவை கட்டுப்படுத்தும்முறை - selective sperm vaccination or sperm inhibition என்று பெயராகும், இந்தமுறையில் விந்தணுவில் இடம்பெற்றுள்ள ஆண்பாலுக்குரிய x குரோமோஸோமிலிருந்து பெண்பாலுக்குரிய y குரோமோஸோமை பிரித்துவிடுகிறார்கள். இந்த செயல்முறை பெண்ணின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் முறையான மருத்துவ தொழில்நுட்பத்தின் மேற்பார்வயில் நடைபெறுகிறது.


ஆணின் விந்தணுவில் x மற்றும் y குரோமோஸோம்கள் (மரபணு துகள்கள்) இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் yy குரோமோஸோம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, அதாவது ஆணின் விந்தணுவில் ஆண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் பெண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் பெண்பாலுக்குரிய குரோமோஸோமகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, விந்தணுவிலுள்ள y குரோமோஸோம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xy என்ற மரபணு உருவாகிறது. அது ஆண்குழந்தைக்குரியது. மாறாக விந்தணுவிலுள்ள x குரோமோúஸôம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xx என்ற மரபணு உருவாகிறது. அது பெண்குழந்தைக்குரியது, இதனடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விந்தணுவிலுள்ள (ஆண்பாலுக்குரிய) y குரோமோஸோம்லிருந்து (பெண்பாலுக்குரிய) x குரோமோúஸôமை பிரித்துவிட்டு பின்னர் சோதனைக்குழாயில் சினைமுட்டையுடன் விந்தணுவை இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள், தம்பதிகள் ஆண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் y குரோமோஸோம்உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது, தம்பதிகள் பெண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் ஷ் குரோமோúஸôம் உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது.


இதேபோன்று மற்றொரு முறையை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். அது மேற்கூறப்பட்ட முறையிலிருந்து சிறிது வேறுபட்டது, இந்த முறையில் சோதனைக்குழாயில் விந்தணுவுடன் சினைமுட்டையை இணைத்து கருவூட்டம் செய்தபின்னர் கருவுற்ற முட்டையை ஆய்வுசெய்கிறார்கள். கருவுற்ற சினைமுட்டை xy மரபணுவை பெற்றிருந்தால் அது ஆண்குழந்தைக்குரிய கருவாகும். கருவுற்ற சினைமுட்டை xx மரபணுவை பெற்றிருந்தால் அது பெண்குழந்தைக்குரிய கருவாகும், ஆகவே ஆண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xy மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள். பெண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xx மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள்.


இவையனைத்தும் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளாகும். இது வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இன்றுவரை நிகழந்துகொண்டிருக்கிறது.


இந்த விவகாரத்தின் எதார்த்தநிலை (taHqeeq al ManaaT) இவ்வாறு விளக்கப்பட்ட பின்னர் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


1, விருப்பத்திற்கு மாற்றமாக பிறக்கும் குழந்தையை கொலைசெய்வது ஹராமான செயலாகும் ஏனெனில் இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்யப்படும் கொலையாகும், இதற்கு தண்டனை மறுமையில் நரகநெருப்பில் நிரந்தரமாக வீழ்வதாகும். மேலும் இந்த உலகத்தில் அதற்கு உரியவர்களால் அந்தப்பாவம் மன்னிக்கப்படாவிட்டால் அதற்காக பழிதீர்க்கப்பட வேண்டும் (qisas) அல்லது இரத்தஈட்டுத்தொகை(diya) வழங்கப்படவேண்டும்.


அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

عَذَابًا عَظِيمًا .وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ


எவரேனும் ஒருவர் ஒரு மூ*மினை வேண்டுமென்றே கொலை செய்வாராயின் அவருக்கு உரிய தண்டனை நரகமேயாகும். மேலும் அல்லாஹ் அவர்மீது கோபம் கொள்கிறான் இன்னும் அவரை சபிக்கிறான் அவருக்கு மகத்தான வேதனையை தயாரித்து வைத்திருக்கிறான். (அந்நிஸா: 93)


11, பெற்றோர்கள் விரும்பாதபோது கற்பத்தில் வைத்து கருவில் இருக்கும் சிசுவை கொல்வதும் தண்டனைக்குரிய ஹராமான செயலே.


அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரி. முஸ்லிம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"ஹுதைல் கோத்திரத்திலுள்ள பெண்கள் இருவர் (சண்டையிட்டுக்கொண்டு) ஒருவர் மீது மற்றொருவர் கல்லெறிந்துவிட்டார். அதனால் அந்தப்பெண்ணின் கற்பம் கலைந்துவிட்டது, அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) இது முறையிடப்பட்டது. குற்றவாளி ஆண்அடிமையையோ அல்லது பெண்அடிமையையோ தியத்தாக கொடுக்கவேண்டும் என்று அவர்கள்(ஸல்) தீர்ப்புக் கூறினார்கள்"

111, கற்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது மூலமாகவோ அல்லது உடலுறவில் ஈடுபட்டபின்னர் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவது மூலமாவோ அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது மூலமாகவோ தற்காலிகமாக கருவுறுதலை தவிர்த்துக் கொள்வதற்கு அனுமதியுண்டு, உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்வது. காரம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட திரவத்தை கருவறைக்குழாயில் பீச்சிக்கொள்வது ஆகியவையும் அனுமதிக்கப்பட்டதே. இவற்றில் எந்தவிதான ஆட்சேபனையும் கிடையாது அவைகளுக்கு உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை தொடர்பான பொதுவான ஆதாரம் உள்ளது,


அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்ளாமல் விலகியிருக்கும் முறையை பின்பற்றுவதற்கு தீர்மானித்து அதை அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) கூறினோம், அதற்கு அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்.

"நீங்கள் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டாமா? அல்லாஹ் இருக்கவேண்டும் என்று விதித்த எந்த ஆத்மாவும் மறுமை நாளுக்குள் இருந்தே தீரும்"


IV. ஆணின் விந்தணுவிலிருந்து பெண்பால் குரோமோúஸôமையும் ஆண்பால் குரோமோúஸôமையும் தனியாக பிரித்துவிட்ட பின்னர் ஆண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள ஆண்பால் குரோமோúஸôமைக் (y)கொண்டு கருவூட்டம் செய்வது அல்லது பெண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள பெண்பால் குரோமோúஸôமைக் (x) கொண்டு கருவூட்டம் செய்வது ஆகிய செயல்முறையைப் பொறுத்தவரை இவற்றை செய்வதற்கு அனுமதி கிடையாது ஏனெனில் இது குழந்தைப்பேறு இல்லாத பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளும் மருத்துவ முறையையோ அல்லது சிகிச்சை முறையையோ சாராது, இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாத சட்டரீதியான தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே அனுமதியுண்டு.


குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்முறைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பெண் தனது அந்தரங்க உடல்பகுதிகளை(aurah) அந்நியர்களிடம் வெளிப்படுத்த நேரிடும் ஏனெனில் இந்த செயல்முறையில் பெண்ணின் சினைப்பையிலுள்ள சினைமுட்டையை பிரித்தெடுப்பதற்கும் கருவுற்ற சினைமுட்டையை கருவறைக்குள் செலுத்துவதற்கும் அந்தரங்க உடல்பகுதிகளை வெளிப்டுத்தவேண்டிய நிலை ஏற்படும், மருத்துவ சிகிச்சை செய்துகொள்வதற்கு மட்டுமே இது அனுமததிக்கப்ட்டிருக்கிறது, குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செல்முறைகள் மருத்துவ சிகிச்சையில் அடங்காது என்ற காரணத்தால் இது தடைசெய்யப்பட்ட ஹராமான செயலாகும் இதற்கு ஷரியாவில் அனுமதி கிடையாது.


முடிவுரையாக, இஸ்லாத்தின் அகீதாவோடு தொடர்புடைய முக்கியமான உண்மையை இங்கு குறிப்பிடவேண்டும் ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அது மிகவும் முக்கியமானதாகும், மேற்கூறப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் சிகிச்சைமுறைகளையும் மனிதன் மேற்கொள்வதற்குக் காரணம் அவன் படைப்பாற்றலை பெற்றிருக்கிறான் என்ற அர்த்தத்தில் அல்ல, ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் கருவுறுதல் என்ற நிகழ்விலும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயம் செய்துள்ள சில பண்புகளையும் இயல்புகளையும் மனிதன் கண்காணித்து அவற்றை விளங்கிக்கொள்ளலாம், இந்த மகத்தான செயற்பாங்கின் போக்கை மனிதன் கண்காணிக்கலாம் அவைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம் மற்றும் பல பரிசோதனைகளையும் நடத்தலாம், இந்த ஆய்வின் அடிப்படையில் அவன் குறிப்பிட்ட உணவு முறைகளையும் குறிப்பிட்ட செயல்முறைகளையும் பின்பற்றலாம், மேலும் அவன் ஆணின் விந்தணுவிலுள்ள ஆண் குரோமோúஸôமையும் பெண் குரோமோúஸôமையும் தனித்தனியாக பிரித்து பெண்ணின் கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்து அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தலாம், ஆனால் இதன் விளைவாக படைப்புகள் எதுவும் நிச்சயமாக உருவாகாது. அது முற்றிலும் அல்லாஹ்(சுபு) என்ற படைப்பாளன் கையில் இருக்கிறது, அல்லாஹ்(சுபு) தீர்மானிக்கும்போதுதான் படைப்புகள் உருவாகி இயக்கத்திற்கு வருகிறது, அல்லாஹ்(சுபு) அவ்வாறு நாடவில்லை என்றால் மனிதன் எத்தனை சோதனைகள் மேற்கொண்டாலும் எத்தனை ஆய்வுகள் மேற்கொண்டாலும் எத்தனை செயல்முறைகளை நிறைவேற்றினாலும் எந்தவிதமான படைப்பும் ஒருபோதும் உருவாகாது.


அல்லாஹ்(சுபு) படைக்க நாடும்போது மட்டும்தான் உயிர்கள் ஜனிக்கின்றன. அவன்(சுபு) நாடவில்லை என்றால் உயிர்கள் ஜனிக்காது,அல்லாஹ்(சுபு) மட்டும்தான் படைப்பாளன் என்ற உண்மையும் அவன்தான் ஆணையும் பெண்ணையும் படைக்கிறான் என்ற உண்மையும் மறுக்கமுடியாத வகையில் திட்டவட்டமான ஷரியா ஆதாரங்களால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன.


ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. அவன்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளன். ஆகவே அவனையே வணங்கிவழிபடுங்கள் இன்னும் அவனே அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பாளன் ஆவான், (ற்ம்வ் அல்அன்ஆம் 6:102)


إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ 15:86

நிச்சயமாக உமது இறைவன் (அனைத்தையும்) படைத்தவனாகவும் எல்லாவற்றையும் அறிந்தவனாகவும் இருக்கிறான், ( அல்ஹிஜ்ர் 15:86)

ஆகவே எவன் படைக்கிறானோ அவன் படைக்காதவனைப்போல் ஆவானா? நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா? (அந்நஹ்ல் 16:17)

هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ 31:11

இவை (அனைத்தும்) அல்லாஹ்வின் படைப்பாகும் அவனையன்றி இருப்பவர்கள் எதைப் படைக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள் (என்று நீர் கேட்பீராக) அவ்வாறல்ல. அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ( லூக்மான் 31:11)


يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ

ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ 22:73

மனிதர்களே. (உங்களுக்கு) ஓர் உதாரணம் கூறப்படுகிறது ஆகவே அதை செவிதாழ்த்திக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் ஒர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிறகு அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பவும் கைப்பற்றவும் முடியாது, தேடுபவரும் தேடப்படுபவர்களும் பலஹீனர்களே, ( அல்ஹஜ் 22:73)

يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ 22:5

மனிதர்களே (மறுமைநாளில்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள் என்றால் (அறிந்துகொள்ளுங்கள்) நிச்சயமாக நாம் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் அலக்கிலிருந்தும் பின்னர் உருவாக்கப்பட்டதும் உருவாக்கம் பெறாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விளக்குகின்றோம்) மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருவறையில் தங்கச்செய்கிறோம் பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகறோம், பிறகு உங்களை வாலிபத்தை அடையச்செய்கிறோம், அன்றியும் உங்களில் (இளம் வயதிலேயே) மரணம் அடைபவர்களும் இருக்கிறார்கள். (பெரியவராக வளர்ந்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றும் அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள், இன்னும் நீங்கள் வரண்ட பூமியை பார்க்கிறீர்கள் அதன்மீது நாம் நீரை பொழியச்செய்வோம் எனில் அது பசுமையாகி அழகான பல்வகை புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது, ( அல்ஹஜ் 22:5)

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آَخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ 23:12-14

நிச்சயமாக நாம் (முதல்) மனிதரை களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம் பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம் பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம் பின்னர் அலக்கை தசைப்பிண்டமாக ஆக்கினோம் பின்னர் அந்த தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கிளோம் பின்னர் அவ்வெலும்புகளை மாமிசத்தைக் கொண்டு மூடினோம் பின்னர் அதனை நாம் முற்றிலும் வேறொரு படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம், (ஆகவே படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியம் உடையவன் படைப்பாளர்களில் மிக அழகானவன், (அல்மூ*மினூன் 23:12-14)

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ 42:49,50

வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சிஅதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியதாகும் ஆகவே அவன் தான் நாடியவற்றை படைக்கிறான் தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை அளிக்கிறான் இன்னும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அளிக்கிறான் அல்லது ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து அளிக்கிறான் அன்றியும் தான் நாடியவர்களை மலடாகவும் ஆக்குகிறான், நிச்சயமாக. அவன் மிக்க அறிந்தவன் பேராற்றல் உடையவன், (அஷ்ஷூரா 42: 49,50)


فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ 82:6-8

மனிதனே. அருட்கொடையாளனும் சங்கைமிக்கவனுமான உனது இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது? அவன்தான் உன்னைப் படைத்து ஒழுங்குபடுத்தி செவ்வையாக்கினான் இன்னும் எந்த வடிவத்தில் நாடினானோ அதில் உன்னைப் பொருத்தினான், (ற்ம்வ் அல்இன்*பிதார் 82: 6-8)


هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 3:6

அவன் தான் நாடியவாறு கருவறையில் உங்களை உருவாக்குகின்றான் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை அவன் யாவரையும் மிகைத்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான், ( ஆலஇம்ரான் 3: 6 )


நேர்வழியிலிருந்து விலகிப்போய் விடாமல் இருப்பதற்காக ஒருவர் இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) வழிகேட்டில் சென்றுவிடாமல் நம்மை பாதுகாப்பானாக!


அல்லாஹ்(சுபு) இந்த பிரபஞ்சம் முழுவதிலும் ஞானத்தை விதைத்திருக்கிறான் மேலும் மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான் அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு அறிவாற்றலையும் சிந்தனைத்திறனையும் அருட்கொடையாக வழங்கியிருக்கிறான் மேலும் அல்லாஹ்(சுபு) மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவன்மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்காக அவன்(சுபு) புலனுணர்வு மூலம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை அளித்திருக்கின்றான், நிராகரிப்பவர்கள் இந்த உலகத்தில் இழிவையும் மறுமைநாளில் கடுந்தண்டனையையும் அடைந்து கொள்வார்களாக!இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாளித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்(சுபு) வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக என்பதுதான் நமது இறுதி துஆவாகும்!

வஸ்ஸலாம்
18 ஜமாதுல்ஆஹிர் 1430

No comments:

Post a Comment