Sunday, June 28, 2009

முஸ்லிம் நாடுகளில் ஒபாமாவின் ஆக்கிரமிப்பு! - துருக்கியில் ஆரம்பித்து சவுதியை கடந்து எகிப்தில் ...

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்தமுறை துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு மேற்கொண்ட பயணம் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கூட கடந்திராத நிலையில் இப்போது அவர் துருக்கி. அரபியதீபகற்பம். மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் விரிவான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார், 2009 ஜூன் 4ம் தேதி வியாழனன்று எகிப்திய அரசு சிகப்புக்கம்பளம் விரித்து மாபெரும் வெற்றி வீரரைப்போல் ஒபாமாவை வரவேற்றது õ அவர் வந்த விமானம் காலை 9 மணிக்,கு தரையிறங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அதிகப்பட்சமான பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானநிலையத்தைச் சுற்றி போடப்பட்டிருந்தன, பாதுகாப்புப்படை வீரர்கள் அனைத்து திசைகளையும் சுற்றிவளைத்து கண்காணித்துக்கொண்டிருந்த அதேவேளையில் ஆப்கானிஸ்தான். ஈராக். மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் எண்ணற்ற முஸ்லிம்களின் இரத்தக்கறைகளை தனது கரத்தில் சுமந்துகொண்டு காபிர்களுக்கு தலைமையேற்றிருக்கும் அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு அலங்காரவண்டிகள் அணிவகுக்க கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணியணியாகச் செல்ல பாண்டுவாத்தியங்கள் முழங்க வலதுபுறமும் இடதுபுறமும் நாட்டின் மிகஉயர்ந்த பாதுகாப்புபடையினர் புடைசூழ பிரமாண்ட வரவேற்பு ஒன்றை அமெரிக்க அதிபர் ஒபாமாற்கு எகிப்துஅரசு வழங்கியது, அல்குப்பா என்றழைக்கப்படும் அதிபர் மாளிகையின் வாயிலில் எகிப்து அதிபர் மாபெரும் அரசு மரியாதையுடன் ஒபாமாவை வரவேற்றார். பின்னர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்காக அவர் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

முஸ்லிம்கள் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் போர். பாலஸ்தீன விவகாரம். சட்டவிரோத யூதஅரசோடு அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமான உறவு. அணுஆயுத விவகாரம். முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவிற்கும் மத்தியிலுள்ள பெரிய மற்றும் சிறிய விவகாரங்கள் இவை எதுவொன்றிலும் முந்தைய அமெரிக்க அதிபர்களின் கொள்கையிலிருந்து ஒபாமா சற்றும் வேறுபடாதவர் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக பறைசாற்றியது, அவரது பேச்சின் முழுஅளவிலும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதில் அவர் கொண்டுள்ள அக்கறை வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவான கருத்து ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டு அவர் நளினமாகவும் மென்மையாகவும் பேசியதோடு முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட போரினால் ஏற்பட்ட மாபெரும் துயரங்களை முஸ்லிம்கள் மறந்திடவேண்டும் என்பதற்காக தந்திரமான வார்த்தைகளை அவர் சாதுர்யமாக பிரயோகித்தார்.

முந்தைய அமெரிக்க அதிபர்களின் வஞ்சனை மிகுந்த தந்திரபேச்சுக்களை மீறும் அளவுக்கு ஒபாமா மென்மையாகவும் இனிமையாகவும் உரையாற்றினார், நிச்சயமாக இது முஸ்லிம் மக்களை கவர்வதற்கும் அவர்களோடு உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் ஒபாமா மேற்கொண்டுள்ள கபட நாடகம் என்பதில் ஐயமில்லை.

وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُون
இவர்களை நீர் பார்த்தால் இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும் அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்து) கேட்பீர் எனினும் இவர்கள் (நேர்மையாளர்கள் அல்லர். சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். இவர்கள்தாம் (உமது) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான். இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? ( அல்முனாபிகூன் : 4 )
ஒருபுறம் முஸ்லிம் மக்களிலுள்ள அப்பாவி மனிதர்களிடம் நற்பெயர் ஈட்டும் நோக்கத்தோடு ஒபாமா பேசினார். மறுபக்கம் வெளிப்படையாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்து பேசியதோடு முஸ்லிம்களிடத்திலும் அவர்கள் விவகாரங்களிலும் விவரிக்க முடியாத வெறுப்பையும் விரோதத்தையும் அவர் கொண்டுள்ளார் என்பதையும் அவரது பேச்சு தெளிவாக பறைசாற்றியது.
وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ
அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் பெரியதாகும்... ( ஆலஇம்ரான் : 118 )
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அச்சுறுத்திப் பேசியதோடு அவர்களின் செயல்களை தான் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கொக்கரித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக போராட உலகநாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார், மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுவதற்கு 46 நாடுகளின் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கியிருப்பது குறித்து பெருமையடித்துக் கொண்டார், பாகிஸ்தானில் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் ஏவுகணைகளை வீசிய அடாத செயல் குறித்து வருத்தம் தெரிவிக்காத இந்த மனிதர் அங்கு கொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியவர்களின் மரணத்தை நியாயப்படுத்தி பேசினார்.
இத்தகைய ஏவுகணை வீச்சுகள் ஆப்கானிஸ்தானில் மறுபடியும் மறுபடியும் நிகழ்ந்தபோதும் அவற்றை எதிர்பாராத தவறுகள் என்று கூறுவதற்கு ஒபாமா துளிகூட வெட்கம் கொள்ளவில்லை, அங்கு மரணமடைந்த பெண்களையும் குழந்தைகளையும் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் கொல்லப்பட்ட பிரிவினைவாதிகளின் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டுவிட்டனர், தங்களுடைய தீனை பின்பற்றும் முஸ்லிம்களையும் தங்களுடைய நாடு அமெரிக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை விரும்பாத முஸ்லிம்களையும் தங்களுடைய புனிதபூமியில் யூதர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாத முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒபாமா கருதுகிறார் என்பதுதான் உண்மையாகும்
தன்னுடைய அடாத தீயசெயல்களை தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அதேவேளையில் ஈராக். ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களை ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொடிய செயலை நிறுத்தமின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அதேவேளையில் தான் இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போரிட விரும்பவில்லை என்று துருக்கியில் கூறிய அதே வார்த்தைகளை இப்போது மறுபடியும் ஒபாமா கூறியிருப்பது பெரும் மோசடி செயலாகும்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) தனது சங்கைமிக்க ஹதீஸில் கூறினார்கள்.
إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْت நீ வெட்கம் கொள்ளவில்லையெனில் விரும்பியவாறு செய்துகொள்...
அமெரிக்க படைகள் முஸ்லிம் நாடுகளில் படுகொலைகளை செய்துவருகின்றன. இரவும் பகலும் தாக்குதல் நடத்தி அவர்களின் இரத்தத்தை ஓட்டுகின்றன. ஈவுஇரக்கமின்றி முஸ்லிம்களின் உயிர்களை பறிப்பதோடு அவர்களை அவர்களின் தாய்மண்ணிலிருந்து வெளியேற்றுகின்றன... இருந்தபோதிலும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்யவில்லை என்று ஒபாமா மறுபடியும் மறுபடியும் கூறிவருகிறார்.
இவ்வாறு பேசியதற்குப் பின்னர் அவருடைய பேச்சு பாலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறது. பாலஸ்தீன பூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யூதஅரசுடன் அமெரிக்கா கொண்டுள்ள இஜ்ôணுவ உறவும் மற்றதுறைகளில் கொண்டுள்ள இருதரப்பு உறவும் பிரிக்கமுடியாத நிரந்தார உறவாக இருக்கும் என்ற பலமான அறிவிப்பை முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்டார், மேலும் யூதஅரசு பாலஸ்தீன மண்ணில் நிரந்தரமாக இருக்கும் என்று அறிவித்ததோடு இந்த நிலைக்கு மாற்றாக வேறு எதுவொன்றையும் தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார், இதன்பின்னர் ஒபாமா தனது இருஅரசு திட்டத்தை உறுதியான முறையில் வலியுறுத்தி பேசினார், அதாவது பெரும்பான்மையான பாலஸ்தீன மண்ணின் மீது யூதர்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறியதோடு இதற்கு முஸ்லிம்கள் உத்திரவாதம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றாக பாலஸ்தீனத்தின் ஒரு சிறிய முக்கியத்துவமற்ற பகுதியை முஸ்லிம்கள் தங்களின் சொந்த வசிப்பிடமாக ஆக்கிக்கொள்வதற்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என்று கூறினார், இதன்பின்னர் காஸ மற்றும் மேற்குகரை ஆகிய பகுதிகளில் யூதர்கள் அமைத்துள்ள சட்டவிரோதமான குடியிருப்பு பற்றி ஒபாமா பேசிளார், இத்தகைய குடியிருப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்வதற்கு ஒரு முடிவு காண தான் விரும்புவதாக கூறி அப்பாவி மக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக வளைக்க முயற்சித்தார், இந்த பேச்சின் பின்னணியில் முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஒபாமாவின் நோக்கம் மறைந்திருக்கிறது, இதுவரை அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு எந்த திட்டத்தையும் அவர் முன்வைக்கவில்லை, உறுதியான பெரும் கோட்டைகளையும் பாதுகாப்பு அரண்களையும் அமைத்தால் ஒழிய இந்த பகுதிகளில் யூதர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் புதிய குடியிருப்புகளை அமைக்க அவர்கள் இப்போது தயாரில்லை, முஸ்லிம்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா நிபந்தனைகளை வேறு விதித்திருக்கிறது, யூதஅரசு மீது இனிமேல் முஸ்லிம்கள் பகைமை பாராட்டக்கூடாது என்ற நிபந்தனையோடு அமெரிக்காவின் "புதிய எல்லை வரைபடத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒபாமா கூறுகிறார்.

உலக அணுஆயுத விவகாரம் பற்றி தடுமாற்றத்துடன் பேசிய ஒபாமா ஈரானின் பக்கம் கவனத்தை திருப்பினார், மத்தியகிழக்கு ஆசியாவை அணுஆயுத போட்டியில்லாத பிராந்தியமாக காண விரும்புவதாக தெரிவித்தார் ஆனால் அணுஆயுதம் வைத்துள்ள யூதஅரசை கண்டுகொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.

தன்னுடைய முழுப்பேச்சிலும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் ஒபாமா கருத்து கூறியபோதிலும் ஆப்கானிஸிதானிலும் பாகிஸ்தானிலும் அவரும் அவருடைய படைகளும் அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய கொடிய செயலுக்கு சமாதானம் கூறுவதுபோல நளினமாக பேசி பாசாங்கு செய்த இந்த மனிதரை எகிப்துஅரசு வரவேற்று சிறப்பித்தது õ இவரின் விஷமம் தோய்ந்த பேச்சுக்களை எகிப்து மக்கள் வரவேற்று பாராட்டினார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு கணிசமான கூட்டத்திரை திட்டமிட்டு குவித்திருந்தது, ஒபாமாவை வரவேற்கும் விதமாக அவர்கள் அவ்வப்போது கைதட்டி ஆரவாரம் செய்ததோடு அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.

தனது கண்களை மூடிக்கொள்ளாமல் திறந்து வைத்துக்கொண்டுள்ள எந்த மனிதரும் இந்த கூட்டப்பட்ட கூட்டத்தினர் எழுப்பிய பாராட்டு கரவொலியின் அர்த்தத்தை புரிந்துகொள்வார், இருநாடு என்ற திட்டத்தை எவ்வாறு ஒருவர் ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவிக்க முடியும்? எந்த முஸ்லிமும் இதை ஏற்றுக்கொள்வாரா? இஸ்ரா வும் மி*ராஜ் ம் நிகழ்ந்த புனிதபூமியை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தை ஏற்றுக்கொண்டு பாராட்டுவாரா?
குர்ஆன் வசனத்தை அதற்கு தொடர்பு இல்லாத விஷயத்தோடு இணைத்து பேசிய பேச்சிற்கு ஒரு முஸ்லிம் எவ்வாறு பாராட்டுதல் தெரிவிப்பார்,

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
நிச்சயமாக எவனொருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்திற்காக அல்லாமல் மற்றொருவரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான், ( அல்மாயிதா : 32 )
அமெரிக்காவுடன் போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதற்காக ஒபாமா குர்ஆனின் இந்த வசனத்தை குறிப்பிட்டுக் கூறியுள்ளார், இந்த வசனம் பனீஇஸ்ராயீல் மக்களை குறித்து அருளப்பட்டதாகும், ஆனால் தன்னுடைய தீனை காப்பதற்காகவும் தன்னுடைய மக்களை பாதுகாப்பதற்காகவும் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறுபவர்களை மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவர்கள் என்று கருதி அவர்களுடன் ஜிஹாது செய்யும் முஸ்லிம்களுடள் இந்த வசனத்தை இணைத்துப்பேசி உலகசமுதாயத்தை ஏமாற்ற முனைகிறார் அமெரிக்க அதிபர்õ அப்பாவி முஸ்லிம்களை இரக்கமின்றி கொலை செய்து அவர்களின் சொந்த மண்ணை ஆக்கிரமித்து அவர்களின் தாய் மண்ணிலிருந்து அவர்களை வெளியேற்றி அவர்கள் புனிதமாக கருதுபவற்றை இழிவுபடுத்தி அவர்களுக்கெதிராக கொடுமைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்துவிடும் யூதஅரசின் அடாத செயல்களை இந்த ஒபாமா கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை அவற்றை மனிதஇனத்தை அழிக்கும் கொடுஞ்செயல்களாக சித்தரிப்பதுமில்லை, மேலும் அமெரிக்க படைகள் செய்யும் கொலைகளை அவர் மனிதஇனத்தை அழிக்கும் செயல்களாக கருதுவதுமில்லை õ அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا
அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும் அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை, ( அல்கஹப் : 5 )
ஏற்கனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒரு பிரச்சினையல்ல. புதிதாக அமைக்கப்படும் குடியிருப்புகள்தான் பிரச்சினை என்று கூறும் ஒபாமாவிற்கு எவ்வாறு பாராட்டுதலும் வரவேற்பும் அளிக்கமுடியும்? உண்மை என்னவென்றால் இந்த இரண்டுவகை குடியேற்றங்களுமே சட்டவிரோதமானவைதான், சிந்திக்கும் திறனற்ற கோமாளிகளால்தான் இவரின் பேச்சை கைதட்டி வரவேற்கமுடியும், அல்குத்ஸ் புனிதபூமியை யூதர்களிடமிருந்து முதன்முதலில் உமர்(ரலி) விடுவித்து அங்கு யூதர்கள் குடியிருப்பதற்கு அனுமதியில்லை என்று அறிவித்தார், பிறகு மறுபடியும் ஸலாஹூதீன் அதை சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து மீட்டெடுத்தார், இவ்வாறு இருந்தபோதிலும் அல்குத்ஸ் பகுதி யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தாயகம் என்று ஒபாமா கூறுகிறார், அவர் அல்குத்ஸின் கிழக்கு பகுதியை குறிப்பிடுகிறாரே ஒழிய மேற்கு பகுதியை அல்ல என்றபோதும் ஒபாமாவின் இந்த பேச்சுக்கு எவ்வாறு அவரை பாராட்ட இயலும், உண்மையில் ஒபாமாவிற்கு எழுந்த பாராட்டு கரகோஷம் அனைத்தும் போலியானதும் செயற்கையாக உருவாக்கப்பட்டதுமாகும், இந்த அருவருக்கத்தக்க விஷயத்தை உருவாக்கிய எகிப்து அரசால் அதன் உண்மைநிலையை மறைக்க இயலவில்லை, ஒபாமாவை முஸ்லிம்களின் நண்பராக முன்நிறுத்திக்காட்டவும் அவரை நீதிமானாகவும் சகிப்புத்தன்மை உடைய மனிதராக சித்தரிக்கவும் எகிப்து அரசு கடும்முயற்சி மேற்கொண்டிருந்தது, பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலையான கருத்தை கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களையும் மண்ணின் மைந்தர்களாக உரிமைபெற்றுள்ள பாலஸ்தீன முஸ்லிம்களையும் சமமாக பாவிப்பதாக கூறிக்கொண்டு அந்த சமநிலையில் யூதர்களுக்கு சாதகமாக சாய்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு கைப்பாவையாக செயல்படும் எகிப்து அரசின் துரோகத்தை மறைப்பதற்காகவும் பெரும் முயற்சிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன, முஸ்லிம்களேõ தன்னுடைய சுயரூபத்தை மறைத்து புனிதமான துறவியாக வேடம் தரித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா உங்களிடம் வந்துள்ளார், உங்கள் மீதுள்ள பகையை மறைக்காமல் வெளிப்படையாக காண்பிப்பவர்களைவிட இவர் மிகவும் ஆபத்தானவர், உங்கள் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு இவரிடம் நீங்கள் தஞ்சம் புகவேண்டும் என்று விரும்புகிறார், நினைவில் கொள்ளுங்கள் õ அதிபர் புஷ்ஷின் தலைமையில் செயல்பட்ட அமெரிக்கா நிகழ்த்திய கொடுமைகள் உங்களைவிட்டும் கடந்துபோய்விடவில்லை, அமெரிக்காவின் ஏவல்களை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் நாடுகளில் கைப்பாவை ஆட்சியாளர்கள் பலர் இருந்தபோதும் உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதை அமெரிக்கஅரசு தேர்ந்தெடுத்தது, அதனிடம் குவியலான ஆயுதங்களும் போர்க்கருவிகளும் இருக்கும் நிலையில் உங்கள் மீது அது பகைமையை வெளிப்படுத்தியது, இருந்தபோதும் உங்களைப்பற்றிய வியப்பும் அச்சமும் இப்போது அமெரிக்காவை பீடித்துக்கொண்டுவிட்டது, உங்கள் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு உங்கள் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் ஒபாமாவிற்கு கைதட்டி வரவேற்பு அளிக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார், உங்களை ஏமாற்றுவதற்காக அவர் தனக்கே உரித்தான புன்னகையை வெளிப்படுத்தியவராகவும் உங்கள் நலம் நாடுபவர் போலவும் உங்களுக்கு விஸ்வாசம் உடையவர் போலவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார், அவர் தன்னுடைய இனிய நாவுடன் உங்களிடம் வந்துள்ளார் ஆனால் அவர் குள்ளநரியைப் போன்ற தந்திரமும் சாதுர்யமும் கொண்டவர் ஆவார், يعطيك من طرف اللسان حلاوةً ويَروغُ منك كما يَروغُ الثعلبஎன்ற கவிதை வரிகளுக்கு ஒபாமா மிகவும் பொருத்தமானவர்.
முஸ்லிம்களே! முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்கு ஒபாமா இந்த மூன்று இடங்களை தேர்வுசெய்தது தற்செயலாக நடந்ததல்ல. மாறாக மிகவும் கவனத்துடனும் ஆழ்ந்த அர்த்தத்துடனும் இந்த இடங்களை அவர் தேர்வு செய்துள்ளார், துருக்கியின் இஸ்தான்புல்லில் தனது பயணத்தை துவக்கி அரபியதீபகற்பம் வழியாக எகிப்து மண்ணை அடைந்துள்ளார், சுல்தான் அல்*பாதிஹ் அவர்களுடைய மண்ணாக இஸ்தான்புல் இருப்பதுடன் பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமிப்பதற்கு தடைக்கல்லாக அது இருந்து வந்திருக்கிறது என்பதை ஒபாமா நன்கு அறிவார். அரபிய தீபகற்பம் முதல் இஸ்லாமியஅரசு நிறுவப்பட்ட பூமியாகும் அங்கிருந்து தோன்றிய உமர்(ரலி) அல்குத்ஸ் புனிதபூமியை அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து விடுவித்தார் என்பதையும் அவர் நன்கு அறிவார். மேலும் அல்குத்ஸ் பகுதியை சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து விடுவிப்பதற்கு மகத்தான போரை எகிப்து மண்ணில்தான் சலாஹூதீன் நிகழ்த்தினார் என்பதையும் ஒபாமா நன்கு அறிவார். இந்த அனைத்து உண்மைகளையும் ஒபாமா நன்கு அறிந்துள்ள காரணத்தால். ""பெருமையும் உயர்வும் கொண்டிருந்த உங்கள் காலம் மலையேறிவிட்டது இப்போது ஆதிக்கமும் அதிகாரமும் ஒபாமாவிற்கும் அவருடைய கூட்டாளிகளுக்கு மட்டும்தான் உரியது என்ற செய்தியையும் ""விரிந்துபரந்த ஆதிக்கஉரிமை அமெரிக்காவிற்கு மட்டும்தான் இருக்கிறது என்ற செய்தியையும் தாங்கியவராக ஒபாமா உங்களிடம் வந்துள்ளார்,
முஸ்லிம்களில் பலர் அறியாத உண்மைகளை காலனியாதிக்க குப்பார்கள் நன்கு அறிவார்கள், உண்மையான அதிகாரமையம் எதுவென்றும் பலத்தின் ஆதாரமூலம் எதுவென்றும் அவர்கள் நன்கு அறிவார்கள், நமது வரலாற்றை அவர்கள் ஆழ்ந்து ஆய்வுசெய்துள்ளார்கள் நமது ஆழமான நம்பிக்கையையும் நமது பலத்தின் ஆதாரமூலம் எதுவென்றும் அவர்கள் அறிவார்கள் மேலும் இந்த உம்மாவின் சிறப்புமிக்க நற்பண்புகள் பற்றியும் அவர்கள் அறிவார்கள், குர்ஆனின் இந்த வசனத்தின் அர்த்தத்தை ஒபாமா கூறியது தற்செயலாக நடந்த நிகழ்வல்ல.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு (பல) கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியுள்ளோம், , , , ( அல்ஹூஜூராத் : 13 )

இந்த வசனத்தின் அர்த்தத்தை நிறைவுசெய்யும் அதன் இறுதி பாகத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டு ஒபாமா குறிப்பிட்டுள்ளார், அந்த இறுதி வரிகளில் கூறப்பட்டிருப்பதாவது.

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
நிச்சயமாக தக்வா உடையவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் மேன்மையானவர்கள்...

தக்வாதான் முஸ்லிம் உம்மாவை சிறந்த சமுதாயமாக ஆக்கியிருக்கிறது என்பதையும் அது அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் இழிவிற்கும் தலைகுனிவிற்கும் ஆளாக்கியிருக்கிறது என்பதையும் வேண்டுமென்றே மறந்துவிட்டார் ஒபாமா!
முஸ்லிம்களே! உலகத்திற்கு தான்தான் ஆட்சியாளராகவும் அதிபராகவும் இருப்பதுபோலவும் இஸ்லாமிய மண்ணில் இன்றுள்ள அரசுகள் அவருக்கு ஏவல் செய்யும் அடிமைகள் போலவும் அவர் விரும்புவதையெல்லாம் நிறைவேற்றி வைப்பதற்கு அவைகள் சித்தமாக இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒபாமா முயற்சிக்கிறார், அவர் தனது சொந்த நாட்டில் பெற்றிராத மரியாதையையும் ரோஜா மலர்களோடு கூடிய உற்சாக வரவேற்பையும் இஸ்லாமிய மண்ணிலுள்ள ஆட்சியாளர்கள் அவருக்கு அளித்திருக்கிறார்கள். எகிப்தின் பிர்அவ்னைப் போலவும் அவனுடைய மக்களைப் போலவும் ஒபாமா இருக்கிறார்.

فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوهُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ

அவன் தன் சமூகத்தாரை இலேசாக மதித்தான் அவர்களும் அவனுக்கு கீழ்படிந்துவிட்டார்கள், நிச்சயமாக அவர்கள் வரம்புமீறிய சமூகத்தாராக ஆகிவிட்டார்கள், ( அல்ஜூக்ரு*ப் : 54 )
ஒபாமா திறன்பெற்றவராகவும் அறிவாற்றல் கொண்டவராகவும் சொல்நயம் உடையவராகவும் தந்திரசாலியாகவும் இருக்கலாம். தனது நளினமான பேச்சின் வாயிலாக அவற்றை வெளிப்படுத்தவும் முயற்சிக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்: இஸ்தான்புல்லும் அரபியதீபகற்பமும் எகிப்துநாடும் உண்மையாக அவரை வரவேற்கவில்லை என்பதையும் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரின் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கும் துரோகிகளான ஆட்சியாளர் குழுதான் அவரை வரவேற்றுள்ளது என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளவேண்டும், அவரது நளினமான ஏமாற்று பேச்சுகளுக்கு பின்னணியிலுள்ள தந்திரத்தை முஸ்லிம்கள் கவனிக்காமல் விட்டுவிடவில்லை என்பதை அவர் அறிந்து கொள்ளவேண்டும், இந்த உற்சாக வரவேற்பும் பாராட்டுதலும் சுயநலத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் வழக்கமாக செலுத்தும் போலியான மரியாதைதான் என்பதை ஒபாமா நிச்சயமாக அறிந்திருப்பார், ஒபாமாவிற்கும் ஒட்டுமொத்தமாக முழு உலகத்திற்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் அறிவிப்பது என்னவென்றால் உண்மையான நம்பிக்கையையும் எந்த தருணத்திலும் அல்லாஹ்(சுபு) விற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக உள்ள ஒப்பற்ற மனிதர்களை இஸ்லாம் கொண்டுள்ளது, அவர்கள் நிச்சயமாக இஸ்லாமிய அரசை உலகத்தில் நிர்மாணிப்பார்கள், அது உலக நாடுகளை காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தியோ அல்லது அவற்றின் வளங்களை கொள்ளையிட்டோ அல்ல. மாறாக நீதியை நிலைநிறுத்துவதன் மூலமாகவும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் முற்றாக நீக்குவதன் மூலமாகவும் உரிமையள்ள அனைவருக்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்து வழங்குவதன் மூலமாகவும் மட்டுமே.
அப்போது ஏகாதிபத்திய அமெரிக்கா அதற்கு தகுதியான இடத்தை நிச்சயமாக பெற்றுக்கொள்ளும் õ தலைகுனிந்தவாறு அடங்கிப்போவதைத் தவிர்த்து வேறெந்த வழியும் அதற்கு கிடையாது. பாலஸ்தீனத்தின் புனிதபூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யூதர்களும் அவர்களது பரிவாரங்களும் முற்றாக துடைத்தெரியப்பட்டு பாலஸ்தீனத்தின் முழுப்பகுதியும் இஸ்லாமியஅரசிடம் கொண்டுசேர்க்கப்படும். கிலாபா எனும் இஸ்லாமியஅரசு தோன்றும்போது இவைகலெல்லாம் நிகழ்வதையும் உலகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சுபிட்சமும் செழிப்பும் நீதியும் நீக்கமற நிறைந்திருப்பதையும் நிச்சயமாக இந்த உலகம் கண்டு வியப்புறும்.
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் ஆனால் மனிதர்களில் பெரும்பான்மையினர் (இதை) அறிந்துகொள்ளமாட்டார்கள். ( யூஸப் : 21 )

No comments:

Post a Comment