Sunday, June 21, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 9

இஸ்லாமியக் கோட்பாடுகளும் கலாச்சாரமும்

ஆறாவது அத்தியாயத்தில் இஸ்லாத்தின் முதல் அடிப்படையாம் லாஇலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுற் றஸ_லுல்லாஹ் என்பதன் பொருளை விரிவாகப் பார்த்தோம். அதில் அனைத்து அதிகாரமும் ஆற்றலும் ஆளுமையும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதைத் தெளிவுப்படுத்தினோம். இந்த அத்தியாயத்தில் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அறிவும் ஆற்றலும் அவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் அறிவுத்துறையின் சில யதார்த்தங்களைப் பார்ப்போம். அத்தோடு அறிவியல் அறிவு கலைகளைப் பற்றிய அறிவு இவற்றிற்கும் அல்லாஹ்வின் ஆளமைக்கும் (அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருவதே - அறிவும் ஞானமும் அவனிடமிருந்து வருவதே என்பதற்கும்) உள்ளத் தொடர்புகளையும் விவாதிப்போம். அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் அனைத்தின் மீதும் அல்லாஹ்வே ஆற்றல் பெற்றவன். எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பனவான இவற்றின் பொருள் ஒருவன் தன் வாழ்வில் கடைப்பிடிக்கும் அத்தனை நீதி நெறிகளும் அல்லாஹ் அருளிய வழிகாட்டுதல்களிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதே. இறைவனின் சட்டங்கள் என்ற ஷாPஅத் சட்டங்கள் வாழ்வின் எல்லா துறைகளையும் தழுவி நிற்பன. அவை வணக்க வழிபாடுகள் குறித்து எழும் சர்ச்சைகளோடு மட்டுமோ முஸ்லிம்களுக்கிடையே எழும் பாகப்பிரிவினை, கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றைப் பற்றிய சர்ச்சைகளோடு மட்டுமோ சம்பந்தப்பட்டவையல்ல. இறைவனின் ஷாPஅத் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று போல் தழுவி நெறிப்படுத்தித் தருவது. இதில் இறைவனை நம்புவது, மறைவானவற்றை நம்புவது என்பனவாக வரும் நம்பிக்கை பற்றிய விதிகள் நாட்டு நடப்புகளை நெறிப்படுத்தும் நியமங்கள், நிர்வாகத்துறையின் வரையறைகள் ஒழுக்க நெறிமுறைகள் நீதித்துறையின் சட்டங்கள் பரிபாலனம் மனித உறவுகளின் அடிப்படைகள் குறித்த வரம்புகள் இப்படி இவை போன்ற அனைத்தும் அடங்கும்.

ஷாPஅத் என்ற இஸ்லாமியச் சட்டங்களில் இறைவனின் தனிப்பெரும் பண்புகள் இந்தப் பிரபஞ்சத்தின் இயல்புகள் இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையின் தன்மைகள் நமது வாழ்வின் இரகசியங்கள் மனிதனின் இயல்புகள் இவையெல்லாவற்றிற்கும் இடையேயுள்ள உறவுகள் இவையும் அடங்கும். இதேபோல் ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களில் மனிதனின் அரசியல் வாழ்க்கை அவனது பொருள் சேர்க்கும் வாழ்க்கை அவனது சமுதாய வாழ்வை வகைப்படுத்தும் கோட்பாடுகள் சிந்தனைகள் இவையும் அடங்கும். இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய அறுதித்தூதர் (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல்களின் வழி அமைக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை. இதே போல் நாம் பெறும் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படையாக அல்லாஹ்வே இறைவனே இருக்கின்றான். இந்த வகையில் விஞ்ஞான அறிவுக்கும் கலைகளைப் பற்றிய அறிவுக்கும் (கலைகளைப் பற்றிய அறிவு என்பது விஞ்ஞானப் படிப்பு அல்லாத பொருளியலைப் பற்றியபடிப்பு. வணிகவியலைப் பற்றியக் கல்வியைக் கற்பது, உளவியலைப் பற்றியக் கல்வியைக் கற்பது போன்ற கலைக்கல்லூரிகளில் பயிற்றுவிக்ப்படும் அனைத்துக் கல்வியையும் குறிக்கும்.) அந்த இறைவனே ஆதாரமாக இருந்திட வேண்டும். இது இன்று இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருக்கின்ற அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம். ஆனாலும் இதுவே உண்மை. இந்தக் கலைகளைப் பற்றிய அறிவைக் குறித்து ஏற்கனவே ஒரு நூல் எழுதப்பட்டு வெளிவந்து விட்டது. (செய்யித் குதுப் அவர்களின் தம்பி முஹம்மத் குதுப் அவர்கள் எழுதிய வுhந Pசinஉipடநள ழக யுசவ என்ற நூலையே செய்யித் குதுப் அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.) கலை உலகைப் பற்றிய எல்லாப் பாடங்களும் எல்லா எழுத்துக்களும் எல்லாப் பாடநூல்களும் மனிதன் வளர்த்துக் கொண்ட சில குறுகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. மனிதன் வளர்த்துக்கொண்ட இந்தக் கோட்பாடுகளில் இறைவனோ இறைவன் தான் இந்த உலகைப் படைத்தான் என்ற உண்மையோ அந்த இறைவனுக்கே அனைத்து அதிகாரங்களும் சொந்தம் என்பதோ அந்த இறைவனே அனைத்தையும் அறிந்தவன் என்ற உண்மையோ எள்ளளவும் இடம் பெறவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் தனக்கும் இந்த உலகிலிருக்கும் ஏனையவற்றிற்கும் இடையேயுள்ள தொடர்புகளையும் உறவுகளையும் அல்லாஹ் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற அடிப்படையிலேயே அமைத்து;க கொண்டிருக்கின்றான்.

இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. அவனே நம்மையும் படைத்தான் என்ற அடிப்படையிலேயே ஒரு முஸ்லிம் இந்த உலகிலிருக்கும் ஏனைய பொருள்களைப் பார்;க்கின்றான். பழுகுகின்றான். இந்த உலக வாழ்க்கையில் நமக்கென்று கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. இந்த உலக வாழ்க்கைக்கென உயர்ந்த இலட்சியம் ஒன்றிருக்கின்றது. இந்த உலகத்தோடு நமது வாழ்க்கை முடிந்து போவதில்லை. இறப்பிற்குப் பின்னால் இன்னொரு நிலையான வாழ்க்கை இருக்கிறது என்பன போன்ற அடிப்படைகளை ஒரு முஸ்லிம் அழுத்தமாக நம்புகின்றான். அவன் இந்த உலகில் இருக்கும் ஏனையவற்றை எதிர்கொள்ளும் போது இந்த உண்மைகளைக் கவனத்தில் கொள்கின்றான். இந்த உண்மைகளைக் கவனத்தில் கொண்டே பாடநூல்களைப் படிக்கிறான். அந்தப் பாடநூல்களின் மேல் சென்று செய்யப்படும் ஆராய்ச்சிகளையும் அணுகுகின்றான். ஆக அல்லாஹ்வே இந்த உலகைப் படைத்தான். அவனே அதனை நிருவகித்து வருகிறான் என்பனவற்றை நம்புகின்ற ஒருவன் இந்த உலகில் இருப்பவற்றோடு கொள்ளும் உறவுகளுக்கும் மேற்கொள்ளும் அணுகுமுறைகளுக்கும் முயன்று செய்யும் ஆராய்ச்சிகளுக்கும், இந்த உண்மைகளை எல்லாம் நம்பாத ஒருவன் இந்த உலகில் இருப்பவைகளோடு கொள்ளும் உறவுகளுக்கும் மேற்கொள்ளும் அணுகுமுறைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. அதே போல் ஒரு முஸ்லிம் இலக்கியங்களைப் படிப்பதற்கும் ஏனையோர் இலக்கியங்களைப் படிப்பதற்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருக்கின்றன. ஒரு முஸ்லிம் இறைவனை நம்புவதற்கு இறைவனின் அழகியப பண்புகளைப் புரிந்து கொள்வதற்கு சுருங்கச் சொன்னால் ஈமான் என்ற இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறைவனைத் தவிர இன்னொரு வழி காட்டுதலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவன் அல்லாஹ்விடமே அவன் அருளிய திருக்குர்ஆனிடமே முகந்திரும்பிட வேண்டும். இந்த உலகில் நாம் என்ன இலட்சியத்தை இலக்காய்க் கொண்டு படைக்கப்பட்டோம் என்பதை அறிந்திட ஒரு முஸ்லிம் இக்கால எழுத்தாளர்கள் எனப்படுவோரும் தத்துவ மேதைகள் எனப்படுவோரும் பேரறிஞர், மூதறிஞர், பகுத்தறிவு பாசறைகள் என்றெல்லாம் புகழப்படுவோரும் கற்பித்தவற்றைத் தேடி செல்ல வேண்டியதில்லை. இந்த உலகில் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல்கள், பரிவார்த்தனைகள் இன்னும் இவை போன்றவற்றையும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாம் திருக்குர்ஆன் நபிமொழி ஆகியவற்றில் இருந்து அவன் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் இந்த உலகில் மனிதன் எப்படித் தோன்றினான்? அவன் யாரால் படைக்கப்பட்டான்? மனித வரலாறு என்பது எங்கிருந்து எப்படித் தோன்றிற்று? என்பனவற்றை அறிந்திட அவன் இந்தத் துறைகளில் எழுதிக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பை எழுத்துக்களைத் தேடிச் சென்றிடத் தேவை இல்லை. இந்த விஷயங்களில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தீர்வுகளைத் தந்திருக்கின்றார்கள். இந்த விஷயங்களில் அவன் இன்னும் அதிகமான விளக்கங்களை அறிந்திட விரும்பினான் என்றால், அவன் திருமறையாம் திருக்குர்ஆன், அதன் விளக்கமாம் நபிவாழ்வு ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்ற ஓர் இஸ்லாமிய அறிஞரிடமே சென்றிட வேண்டும். இந்த இஸ்லாமிய அறிஞர் இஸ்லாத்தை நம்பி ஏற்று அதன் வழிகாட்டுதல்களில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு வாழ்பவராகவும் இருக்க வேண்டும். அல்லாமல் இஸ்லாமிய அறிஞர் எனப் பீற்றிக் கொண்டு மாற்று சிந்தனைகள் வேற்றுக் கொள்கைகள் ஆகியவற்றிற்கு விலைபோனவராக இருந்திடக்கூடாது. ஆனால் அறிவியலில் நுணுக்கங்களையும் அதன் விரிவான விளக்கங்களையும் அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளையும் அறிந்திட பௌதீகம் உடற்கூறு, உடலின் பல்வேறு உறுப்புகளின் இயக்கம், இவற்றில் ஊறு வந்தால் கைக்கொள்ளப்படும் மருத்துவம் ஆலைகளின் தொழிற்சாலைகளின் விவசாயத்தின் புதிய கண்டுபிடிப்புகள் அவற்றைப் பயன்படுத்துமு; பாங்கு இவற்றின் நுணக்கங்கள் அந்த நுணுக்கங்களின் விளக்கங்கள் இவையெல்லாம் அறிந்திட ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் செல்லலாம். ஆதே போல் இராணுவத் துறையில் விஞ்ஞானத்தில் வளர்ந்திருக்கும் புதிய நுணுக்கங்களையும் புதிய யுக்திகளையும் அறிந்திட ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் அல்லது முஸ்லிம் அல்லாதவரிடம் செல்லலாம்.

இதிலும் அவன் சில சுவனங்களைச் செலுத்தியாக வேண்டும். கொடுக்கல் வாங்கல்களில் வட்டியை அடிப்படையாகக் கொண்ட நுணுக்கங்களைக் கற்றுத் தந்திடும் போது அவன் ஆக வட்டியின்றி இவ்வுலகமில்லை என்று எண்ணிடத் தலைப்பட்டு விடக்கூடாது. அதேபோல் உற்பத்திகளின் விதிகளையோ அவற்றின் நுணுக்கங்களையோ அவன் அறிந்திட அடுத்தவர்களை அண்டிடும் போது அவர்கள் இறைவனுக்கும் இந்த உலகில் இருப்பனவற்றிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை எனக் கற்றுத் தந்தால் இந்த உலகில் கிடைக்கும் கச்சாப் பொருள்கள், அல்லது மூலப் பொருள்கள் அனைத்தும் இயற்கையால் தரப்பட்டவை. அவை தானாகத் தோன்றியவை எனப் போதித்தால் அவன் (முஸ்லிம்) அப்படியா இனி இறைவன் தான் எல்லாம் படைத்தான் என்பதை ஏற்பதற்கில்லை என்பனவாய்த் தடுமாறிடக் கூடாது. அந்த முஸ்லிம் பாவம் இந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த இயற்கையையும் அதன் இயக்கத்தையும் ஆக்கியவன் இறைவன் தான் என்பதைக் கண்டு கொள்ள முடியாதவர்கள் என்பதை உணர்ந்திட வேண்டும். இங்கே இன்னொன்றையும் நாம் அவசரமாய்க் கவனிக்க வேண்டும். நாம் மேலே குறிப்பிட்ட துறைகளில் போதுமான அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கித் தருவது இஸ்லாமிய சமுதாயத்தின் மிகவும் முக்கியமான கடமையாகும். அசல் இஸ்லாமிய சமுதாயம் என்பது செயலில் வந்ததும் அது அவசரமாய் நிறைவேற்றிட வேண்டிய கடமையாகும் இது. மேலே நாம் எடுத்துக் காட்டிய துறைகளில் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் பெருகிட தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருவது இஸ்லாமிய சமுதாய அமைப்பின் கடமையாகும். அரசின் கடமையாகும். அறிவியல் துறையில் அதாவது விஞ்ஞானத்த துறையில் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தோன்றிட தேவையான சூழ்நிலைககைள இஸ்லாமிய சமுதாய அமைப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்றால் அந்த இஸ்லாமிய சமுதாய அமைப்பு ஒரு பெரும் பாவத்தைச் செய்து விட்டது என்று பொருள். ஓர் உண்மையான முழுமையான இஸ்லாமிய சமுதாய அமைப்பு செயலில் இல்லாத போது ஒரு முஸ்லிம் இந்தத் துறைகளில் முஸ்லிம் அல்லாதவர்களிடம் பாடம் பயிலுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. இவை நீங்களே உங்கள் வியாபாரத்தை நன்றாக அறிவீர்கள் என்ற நபிமொழியின் பாற்படும். ஆனால் ஒரு முஸ்லிம் அறிவையும் அது சார்ந்த ஆராய்ச்சியையும் பெறச் செல்வது அவன் ஏற்கனவே பெற்ற நம்பிக்கைகள் பற்றியதாகவோ அல்லாஹ் அவனுக்கு வகுத்தளித்திருக்கும் சட்டங்களைப் பற்றிய சர்ச்சையாகவோ இருக்கத் தேவை இல்லை. காரணம் இவற்றிற்கெல்லாம் ஐயங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அவனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுவிட்டன. இந்த வரையறைகளுக்குள் நின்று ஒரு முஸ்லிம் அறிந்தவர்களிடம் பாடங்கற்றால் அவன் அந்த (ஜாஹிலிய்ய) அஞ்ஞான சமுதாயங்களின் வலையிலே வீழ்ந்திடும் ஆபத்து இல்லை. இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் ஜாஹிலிய்யா சிந்தனையாளர்கள் என்ற இஸ்லாமியர் அல்லாத சிந்தனையாளர்களின் எழுத்துக்களைப் பயின்றிடலாம்.

அவர்களின் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் கற்றிடலாம். அதன் மூலம் இந்த வேற்றுச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் எங்கே தவறுகளைச் செய்கின்றார்கள் என்பதைக் கண்டு பிடிக்கலாம் அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை அந்தத் தவறுகளில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதே போல் விஞ்ஞான நுணுக்கங்களை அவற்றில் புகுந்திருக்கும் அடிப்படைத் தவறுகளைப் புரிந்து கொள்ள அடுத்தவர்களிடம் கற்றிடலாம். எங்கே தவறு நடந்திருக்கின்றது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் என்பதைக் கண்டுபிடித்து விட்டால் அவற்றைத் தெளிவான இஸ்லாமிய அடிப்படைகளின் கீழ் அமைத்திடலாம். இப்படி இஸ்லாமிய அடிப்படைகளின்படி மாற்றி அமைத்திட அல்லாஹ்வின் வழியில் அவற்றைப் பயன்படுத்திட எந்த அறிவியலையும் அவன் யாரிடமும் கற்றிடலாம். இன்றைக்கு உலக வழக்கிலிருக்கும் அத்தனைக் கல்வி இயல்களும் தத்துவங்களும் வரலாற்று வியாக்யானங்களும் ஒழுக்க விதிகளும் தெய்வீகச் சித்தாந்தங்களும் பண்பாட்டுச் சிந்தனைகளும் குடும்ப அமைப்பு முறைகளும் ஜாஹிலிய்யா என்ற இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு எதிரான கொள்கைகளால் பாதிக்கப்பட்டவை. இவற்றில் மௌட்டீகத்தின் முத்திரை பதிந்தே கிடக்கின்றது. இதனால் தான் இவை உலகில் எதிர்ப்படும் நிஜங்களோடு மோதுகின்றன. இதே காரணத்தால் தான் இவை இஸ்லாத்தின் அடிப்படைகளோடும் மோதுகின்றன. இவற்றைக் கற்றிடும்போது இவற்றின் சிந்தனைகள் முஸ்லிம்களிடம் வந்திடும். அவர்கள் மிகவும் கவனமாக இருந்திட வேண்டும். மனிதனின் சிந்தனைகள் கருத்துக்கள் எனப்படுவனவற்றிற்கும் விஞ்ஞான நுணுக்கங்கள் அறிவியல் ஆராய்ச்சிகள் எனப்படுவனவற்றிற்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

விஞ்ஞான நுணுக்கங்கள் ஆராய்ச்சி ஆராய்ச்சி முறைகள் இவற்றை முஸ்லிம்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவையே கொள்கைகள் கோட்பாடுகள் என்ற வடிவம் பெற்று மனித வாழ்வின் அடிப்படைகளைக் கை வைக்க வந்திடும் என்றால் அவற்றில் கவனமாக இருந்திட வேண்டும். எடுத்துக்காட்டாக டார்வின் மேற்கொண்ட முடிவுகளை எடுத்துக்கொள்வோம். மனிதன் எப்படித் தோன்றினான் என்பதைக் கண்டு பிடிக்க முனைந்த அவன் சில கோட்பாடுகளைக் கொள்கைகளைச் சொன்னான். அதில் ஒன்று மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சிப் பெற்று மனிதனாக ஆனான் என்பது. இந்தக் கோட்பாட்டைக் கொண்டு மனித வரலாறு என்பது விலங்கினங்களின் வரலாறு என்பதைச் சாதிக்க விரும்புகின்றான். அத்தோடு மனிதனின் தோற்றத்தை விவரிக்க நாம் நம் கண்களுக்குப் புலப்படாத கண்களுக்கு எட்டாத சிலவற்றைக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் எனவும் பரிந்துரைத்தான் டார்வின். டார்வின் மேற்கொண்ட இந்த முடிவுகளுக்கு எந்த நடைமுறை ஆதாரங்களும் இல்லை (டார்வினின் கற்பனைகளை முழுமையாகப் பொய்யென்று நிரூபிக்கும் நூல் : மனிதன் எப்படித் தோன்றினான்? இது ஆயிஷா லெமு என்ற சகோதரியால் எழுதப்பெற்றது.) இங்கே தான் முஸ்லிம்கள் கவனமாக இருந்திட வேண்டும் என எச்சரிக்கின்றோம். மனிதன் எப்படித் தோன்றினான் என்பதை அல்லாஹ் தன் அருள்மறையாம் திருக்குர்ஆனில் விளக்கமாகத் தெளிவுபடுத்தி இருக்கின்றான். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்தத் தெளிவுகளே போதுமானவையாகும். டார்வின் ஏதேனும் புதிய ஆராய்ச்சி யுக்திகளைச் சொல்லித் தந்தால் அதன் பலா பலன்களைப் பற்றி ஆலொசிக்கலாம்.

முஸ்லிம்கள் அதற்காக அவன் மனித வரலாற்றிலும் வாழ்விலும் புகுத்த விரும்பும் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. கலாச்சாரம் அறிவு அறிவியல் இவை மனித இனத்தின் பாரம்பரியச் சொத்து. இப்படியொரு முழக்கம் சில நாள்களாக ஒலிக்கக் கேட்கின்றோம். இப்படியொரு முழக்கம் சரிதான். இந்த முழக்கத்தைத் தொடர்ந்து ஓர் துணைத் தத்துவம் பேசப்படுகின்றது. அது அறிவின் எல்லைகளில் மதம் தன் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதே. இதை நாம் உற்றுக்கவனிக்க வேண்டும். நிரூபிக்கப் பட்ட உண்மைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். இந்த உண்மைகளை வெளிப்படுத்திட உதவி செய்தவன் இறைவன். இந்த உண்மைகளை உருக்குலைக்கவும் இந்த உண்மையை ஏற்று வாழும் இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையின் உறுதியைக் குலைக்கவும் இது போன்ற முழக்கங்கள் பயன்படுத்தப்படும் போது நாம் கவனமாக இருந்திட வேண்டியதிருக்கின்றது. உண்மையில் இந்த முழக்கங்களுக்குப் பின்னால் ஒரு பெரும் சூழ்ச்சியே புதைந்து கிடக்கின்றது. மேலே சொன்ன இந்த முழக்கம் அதாவது கலாச்சாரம் அறிவு அறிவியல் இவை மனித இனத்தின் பாரம்பரிய சொத்து இதன் பின்னே வைக்கப்படும் அறிவின் எல்லைகளில் மதம் தன் மூக்கை நுழைக்கக் கூடாது என்ற முழக்கம் இவை ய10தர்களிடமிருந்து வந்தவை. பின்னால் சொல்லப்படும் இந்தத் துணை முழக்கம் வேறு எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் பொருந்தலாம். ஆனால் நிச்சயமாக அது இஸ்லாத்திற்குப் பொருந்தாது. ஆனால் ய10தர்கள் இந்த முழக்கத்தை முன்னே வைத்தது. முஸ்லிம்களை அறிவியல் என்ற பெயரைப் பயன்படுத்தித் தங்கள் இறை நம்பிக்கையில் இருந்து தடம் பிறழச் செய்திடத் தான். அத்தோடு அவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் புகுந்து தங்கள் தகிடுதத்தங்களைக் கட்டவிழ்த்துவிட இந்த முழக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ய10தர்களின் அடுத்த ஆயதம் வட்டியும் வட்டியின் வழி வந்த பொருளாதார முறைகளும். இந்த வட்டி முறையில் எல்லாப் பொருளாதார முறைகளையும் வீழ வைத்தப் பின்னர், இந்த வட்டி நிறுவனங்களின் மூலம் அவர்கள் உலகப் பொருளாதாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள்.

இதுவே ய10தர்களின் கலாச்சாரம். சூதும் வாதும் நிறைந்த ய10தர்களின் கெடுமதியைப் போலல்லாமல் இஸ்லாம் இரண்டே கலாச்சாரங்களைத்தான் ஏற்றுக் கொள்கின்றது. ஒன்று இஸ்லாமியக் கலாச்சாரம் இன்னொன்று ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞான கலாச்சாரம் அல்லது இஸ்லாத்திற்கு அந்நியாயமான கலாச்சாரம். இஸ்லாமியக் கலாச்சாரம் என்பது இறைவனை முன்னிறுத்தி அவனது வழிகாட்டுதல்கள் வழியாக வாழ்ந்து காட்டும் கலாச்சாரம். அல்லாதவை இறைவனை மறுப்பவை அல்லது இறைவனின் வழிகாட்டுதல்கள் வழி வாழ மறுப்பவை. இந்தச் சமுதாயங்கள் மனிதர்களின் சிந்தனையையும் அறிவையும் கடவுளாக மதித்து வழிபடுபவை. இஸ்லாமியக் கலாச்சாரம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்பது. மனிதனின் திறமைகள் முழு அளவில் வெளிப்படவும் வளரவும் வழியமைத்துத் தருவது இஸ்லாமியக் கலாச்சாரம். மிகவும் முக்கியமானதோர் தகவலை அனைவரும் மனதிற் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகெங்கும் வியாபித்து நிற்கின்றது. அறிவுத் துறையில் வைத்த அகலக் கால்களால் இவர்கள் உலகின் கடிவாளம் கைவரப் பெற்றவர்களாய் அறியப்படுகின்றார்கள். ஆராய்ச்சியும் ஆராய்ச்சிப்ப10ர்வமான அறிவும் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன தெரியுமா? இஸ்லாத்திலிருந்தும் இஸ்லாம் கோலோச்சிய ஸ்பெயின் பிரதேசத்தில் இருந்தும் தான். ஆராய்ச்சி செய்பவர்கள் மதத்தின் எதிரிகள் என்று அறிவித்துத் தன் அறியாமையை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருந்த இந்த ஐரோப்பா. ஆராய்ச்சி முடிவுகளை நெஞ்சுரத்தோடு வெளியே சொன்னார்கள் விஞ்ஞானிகள் என்ற குற்றத்திற்காகவே விஞ்ஞானிகளை நெருப்பிட்டு சாம்பலாக்கிய சகாப்தத்திற்குச் சொந்தக்காரர்கள் இந்த ஐரோப்பியர்கள். இந்த ஐரோப்பா ஆராய்ச்சி செய்வது ஆகாது என அடாவடித்தனம் செய்து கொண்டிருந்த போது சிந்தியுங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும் வனப்பும் விந்தையும் நிறைந்த இந்த இயற்கையைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள். சிந்திக்கும் மக்களுக்கு அநேக அத்தாட்சிகள் கிடைக்கும். ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றிக் கவ்வி இருக்கும் இயற்கையை என்று ஆராய்ச்சியின் பக்கம் அறிவின் பக்கம் உந்தித் தள்ளியது இஸ்லாம். இந்த ஊகத்தால் உற்சாகம் பெற்று உயர்ந்து நின்றது கார்டோவா (அந்தலூசியா) (அந்தலூசியா என்பது ஸ்பெயின் நாட்டைக் குறிக்கும்). பல்கலைக்கழகம். வர்த்தக வாணிபங்களை உலக கலாச்சாரமாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது இந்தப் பல்கலைக்கழகம். ஆராய்ச்சி செய்வது அனுபவத்தால் அறிந்து குறைகளைக் களைந்து நிறைகளைக் காப்பது இவை எல்லாம் அங்கிருந்து கற்றவைதான். இந்த படிப்பினைகளின் அடிப்படையில் இந்த ஐரோப்பா அறிவியல் துறையில் மெல்ல மெல்ல முன்னேறியது. அறிவியல் கண்டு பிடிப்புகளில் பல்வேறு சிகரங்களையும் எட்டிப் பிடித்தது. அதே நேரத்தில் முஸ்லிம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தில் இருந்து வெளியேறிடத் துவங்கிற்று. இதனால் ஆராய்ச்சி சிந்தனை என்றெல்லாம் உற்சாகமாகவும் பரபரப்பாகவும் வாழ்ந்துக் கொண்டிருந்தவர்கள் செயல் இழந்தார்கள். இப்படி அவர்கள செயலிழந்து நின்ற தருணம் பார்த்து ய10தர்களும் கிருஸ்தவர்களும் தங்கள் ஆக்கிரமிப்பை லாவகமாக நடத்தினார்கள். இவர்களின் ஆக்கிரமிப்பு முழுமையடைந்த போது இஸ்லாம் கற்றுத் தந்த விஞ்ஞான அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞான உலகை விட்டு வெளியேறின.

ஆராய்ச்சிகளும் அறிவுத் துறை முன்னேற்றங்களும் அல்லாஹ்வின் வழியில் எடுத்து வைக்கப்படும் அழகிய வணக்கங்கள் என்று கற்றுத் தந்தது இஸ்லாம். ஆகவே ஆராய்ச்சிகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வழி அமைந்தவை அந்த இஸ்லாமிய உலகில். இந்த உலகை ய10தர்களும் கிருஸ்தவர்களும் ஆக்கிரமித்த போது, ஆராய்ச்சிகளும் அறிவியல் முன்னேற்றங்களும் ஆண்டவனுக்கு எதிராகத் தொடுத்த போரில் கிடைத்த வெற்றியின் சின்னங்கள் எனப் போற்றப்பட்டன. காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றம் என்பது ஆண்டவனுக்கு எதிரான வெற்றி என்ற கொள்கை வலுப்பெற்றது. கிருஸ்தவ விஞ்ஞானகிகள் தங்கள் மதத்திற்கு எதிராகப் போராடி வென்ற போது விஞ்ஞானம் எல்லா இங்கிதங்களையும் இழந்தது. இறைவனுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டது. அது முதல் மனிதனின் வாழ்வுக்குப் பயன்பட வேண்டிய விஞ்ஞானம் மனிதனின் அழிவுக்குக் கட்டியங் கூறும் அதிசய பொருளாய் ஆனது. இப்படி ஐரோப்பாவின் சிந்தனைகள் முற்றாக மௌட்டீகங்களால் ஆட்கொள்ளப்பட்டது. இஸ்லாமிய சிந்தனைகள் வெளியேறின. காலப் போக்கில் இவை இஸ்லாத்திற்கு எதிராகவும் மாறிப் போயின. இதனால் தான் கூறுகின்றேன் ஒரு முஸ்லிம் திருக்குர்ஆன் நபிமொழி நபிவழி ஆகியவற்றிடமே வழிகாட்டுதல்களைத் தேடிட வேண்டும். வாழ்க்கையை வழி நடத்தும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு முஸ்லிம் திருக்குர்ஆன் நபிவழி நபிமொழி ஆகிவற்றிடம் மட்டுமே திரும்பிட வேண்டும். அறிவு அது எங்கே கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள் எனச் சொல்லப்படுவது ஈமான் என்ற இறை நம்பிக்கை ஒழுக்க விதிகள் பழக்கங்கள் வழக்கங்கள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளை நிர்ணயிப்பது ஆகியவற்றிற்குப் பொருந்தாது. இந்த விவகாரங்களில் முஸ்லிம்கள் திருக்குர்ஆன் நபிமொழி ஆகியவற்றின் வழிகாட்டுதல்களையே பெற வேண்டும். ஏனைய அறிவியல்களின் நுணுக்கங்களை முஸ்லிம்கள் ஏனைய விஞ்ஞானிகளிடமும் வல்லுநர்களிடமும் கற்றுக் கொள்ளலாம். இதற்கும் ஒரு நிபந்தனை முஸ்லிம்களில் அத்தகைய விஞ்ஞானிகளும் வல்லுநர்களும் இல்லாமலிருக்க வேண்டும். நான் இந்த விஷயங்களை இவ்வளவு அழுத்தமாகவும் பின்னிப்பின்னியும் சொல்வதற்கு ஓர் நிரந்தரமான காரணம் உண்டு. அது என்னுடைய சொந்த அனுபவமாகும். இவற்றை எல்லாம் எழுதுகின்ற நான் என்னுடைய வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகளை மனித அறிவியல்களின் ஆராய்ச்சிகளைப் படிப்பதில் செலவு செய்திருக்கின்றேன். மனிதர்களால் கண்டெடுத்து வைத்திருக்கின்ற அறிவு எனப் போற்றப் பெற்றவற்றை அல்லும் பகலும் பயின்றேன்.

இன்னும் சில் அறிவியல் துறைகளில் நான் சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றேன். இன்னும் பலவற்றை என்னுள் எழுந்த தனியான தணியாத ஆர்வத்தால் கற்றேன். பின்னர் தான் இஸ்லாம் என்ற இந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் ஆழமான கவனத்தைச் செலுத்தினேன். மனம்விட்டு உங்கள் இதயங்களுக்கு என் இதயத்தைத் திறந்து சொல்லுகின்றேன். இந்த இறை நம்பிக்கையின் அடிப்படைகளைக் கற்றபின் நான் இந்த நாற்பது ஆண்டுகாலமும் கற்றவை ஒன்றும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த நாற்பது ஆண்டுகளையுமோ நான் அவற்றில் காலங்கழித்ததையோ அவற்றைக் கற்றதையோ எண்ணி வருந்தவில்லை. காரணம் நான் ஜாஹிலிய்யாவின் பல பகுதிகளையும் பயின்றதால் அதன் மௌட்டீகத்தை அதிகமாகப் புரிந்து கொண்டேன். அத்தோடு இஸ்லாத்தின் அழகையும் அருமையையும் தெரிந்து தெளிந்தேன். ஜாஹிலிய்யா என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகள் எப்படி முஸ்லிம்களை இடறத் துடித்திடும் என்பதையும் கண்டு கொண்டேன். ஜாஹிலிய்யா என்ற மௌட்டீகம் எப்படி எங்கே தவறு செய்கின்றது என்பதையும் அனுபவத்தால் அறிந்திட முடிந்தது. இதே போல் ஜாஹிலிய்யா என்ற மௌட்டீகம் எப்படியெல்லாம் பொய்யான தோற்றங்களைத் தரித்து பெருமையடிக்கும் என்பதையும் நேரடியாகக் கண்டு கொண்டேன். இறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டியதைப் போல் இன்னொரு மகத்தான உண்மையையும் கண்டு கொண்டேன். அது தான் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களையும் ஜாஹிலிய்யாவின் வழிகாட்டுதல்களையும் ஒன்றாக இணைத்திட இயலாது. இவையெல்லாம் என் சொந்த அனுபவம் என்றாலும் இது என்னுடைய அனுபவமும் கருத்தும் மட்டுமல்ல. முஸ்லிம்கள் தங்களுடைய விவகாரங்களில் தீர்ப்பு வழங்கிட அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைத் தவிர வேறு வழிகாட்டுதல்களின் பக்கம் திரும்பிடக் கூடாது என்பது அல்லாஹ்வின் அறுதியான வழிகாட்டுதலாகும். இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் இதுதான். நாம் முஸ்லிம்கள் வேற்று வழிகாட்டுதல்களின் பக்கம் திரும்பிடுவோம் என்றால் அவர்கள் நம்மை வழிகெடுக்கவே முனைவார்கள். குறிப்பாக ய10தர்களும் கிருஸ்தவர்களும் இதை இலக்காகக் கொண்டே செயல்படுவார்கள். அல்லாஹ் தன் அறுதியான வழிகாட்டுதலாம் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

வேதத்தையுடையோரில் பெரும்பாலோர் உங்கள் விசுவாசத்தின் பிறகு உங்களை நிராகரிப்போராக மாற்றி விட மாட்டோமா என்று விரும்புகின்றார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதென்று) தெளிவாகத் தெரிந்த பின்பும் அவர்களுக்கு (உங்கள் மீது) ள்ள பொறாமையின் காரணமாகவே (இவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்). ஆகவே அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும் வரையில் (அவர்களை) நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் மிகவும் ஆற்றலுடையோன். (அல்குர்ஆன் 2:109)


(நபியே) ய10தர்களும் (சரி)கிறிஸ்தவர்களும் (சரி) நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றாமல் இருக்கும் வரையில் உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) அல்லாஹ்வின் வழி(யாகிய இஸ்லாம்) தான் நிச்சயமாக நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்) எனக் கூறிவிடும். அன்றி உமக்கு மெய்யான ஞானம் வந்த பின்பும் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றுவீரானால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்)உம்மை இரட்சிப்பவனுமில்லை. (உமக்கு)உதவி செய்பவனுமில்லை. (அல்குர்ஆன் 2:120)


விசுவாசிகளே வேதத்தை உடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் வழிப்பட்டால் நீங்கள் விசுவாசங் கொண்ட பின்னரும் நிராகரிப்போராக உங்களைத் திருப்பி விடுவார்கள். (அல்குர்ஆன் 3:100)


இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். வேதத்தையுடையோரிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டவே மாட்டார்கள். அவர்களே வழிகெட்டவர்கள். நீங்கள் அவர்கள் சொல்வதைச் செவி மடுத்தால் நீங்கள் வழிகேட்டையே ஏற்றுக் கொள்ள வேண்டியது வரும். அல்லது சத்தியத்தை நிராகரிக்க வேண்டியது வரும். இறைவனின் பெயரால் கூறுகின்றேன். மூஸா (அலை) அவர்களே இன்று உயிருடன் இருந்தால், அவர்களுக்கும் அல்லாஹ் என்னைப் பின்பற்றுவதைத் தவிர இன்னொரு அனுமதியை வழங்கியிருக்க மாட்டான். அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக எச்சரித்த பின்னரும் ய10தர்களும் கிருஸ்தவர்களும் கூட நல்லதைச் சொல்வார்கள் நம் விஷயத்தில் என நம்பிச் செல்வோர் வழி கெட்டவர்களே. இந்த ய10தர்களும் கிருஸ்தவர்களும் எழுதி வெளியிட்டுள்ள இஸ்லாமிய இலக்கியங்களையும் இஸ்லாமிய வரலாறுகளையும் படித்துவிட்டு நமக்கு பாடஞ் சொல்லித்தர வருபவர்கள். நமது ஈமானை இறை நம்பிக்கையை தடம் பிறழ்ந்திட செய்திட விரும்புபவர்களே.

அல்லாஹ்வின் வழியாகிய இஸ்லாம் தான் நிச்சயமாக நேரான வழி (அல் குர்ஆன் 2:120)


என அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின்னரும் அடுத்தவர்களிடம் வழிகாட்டுதல்களைப் பெற விரும்புவோர் வழிகேட்டில் வாழ விரும்புகின்றார்கள் என்றே பொருள். மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள இறைமொழி ஒரு முஸ்லிம் எங்கே தன் வழிகாட்டுதல்களைத் தேடிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அதே போல் முஸ்லிம்கள் வேறு எங்கேயும் எந்த வழிகாட்டுதலையும் பெற்றிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வை நினைவு கூருவதில் இருந்து நம்மைத் திசைத் திருப்பிட விரும்புவோரின் சதிகளில் நாம் சிக்கிடக் கூடாது. இன்னும் இந்த உலகத்தை மட்டுமே இலட்சியமாக கொண்டு வாழ்வோரின் இதோபதேசங்களிலும் நாம் வீழ்த்திடக் கூடாது. இந்த உலகத்தை இலக்காகக் கொண்டவர்கள் வெறும் அனுமானங்களை நம்பியும் ய10கங்களை நம்பியும் உலகில் அமிழ்ந்து கிடப்பவர்களே இவர்களுக்கு இந்த உலகின் யதார்த்தம் எள்ளளவும் புரியவில்லை என்பதே உண்மை. இவர்கள் கண்ணுக்குத் தெரிபவற்றை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். அவர்கள் மறுமையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.


இது குறித்து அல்லாஹ் இப்படி வழிகாட்டுகின்றான்:


(நபியே) எவன் நம்முடைய நினைவுறுத்தலைப் புறக்கணித்து இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ அவனை நீர் புறக்கணித்து விடும். இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரந்தான் செல்கின்றது. (இதற்கு மேல் செல்விதில்லை) நிச்சயமாக உமதிறைவன் தன்னுடைய வழியில் இருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 53:29-30)


அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் உள்ள வெளிப்படையானதையே அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால் மறுமையைப் பற்றி அவர்கள் முற்றிலும் பாராமுகமாயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 30:7)


இறைவனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இந்த உலகை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்பவர்கள் அத்தனை பேரும் இந்த உலகில் தங்கள் கண்களுக்கெட்டியவற்றை மட்டுமே பார்ப்பவர்கள். இன்றைக்கு விஞ்ஞானிகள் என அறியப்படுவோர் அனைவரின் நிலையும் இதுவே. இந்த விஞ்ஞானிகள் அல்லாஹ்வைப் பற்றியோ இறப்பிற்குப் பின் வரும் மறு உலக வாழ்க்கையைப் பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இவையெல்லாம் அவர்களின் கண்ணெதிரே புலப்படவில்லை. இத்தகைய அறிவை மட்டுமே பெற்றவர்களிடம முஸ்லிம்கள் கல்விகற்றிட நேர்ந்தால் முழுக்க முழுக்க அவர்களைச் சார்ந்த அறிவைப் பெற்றிடுவது ஆபத்துக்களை விளைவிக்கலாம். ஆதலால் இவர்களிடம் அனுமதிக்கப்பட்ட வரையறைகளுக்குள் நின்றே ஒரு முஸ்லிம் அறிவைப் பெற்றிட வேண்டும். அதாவது இவர்களிடம் அறிவியல் நுணுக்கங்களையும் அந்த நுணுக்கங்களின் விளக்கங்களையுமே கற்றிடலாம். இறைவன் இவ்வுலகவாழ்க்கை அதன் நோக்கம் வாழ்க்கையை வழிநடத்தும் பாங்கு ஆகியவற்றில் முஸ்லிம்கள் வேறுயாரையும் இந்த விஞ்ஞானிகள் உட்பட நம்பிடக்கூடாது. இதையே அல்லாஹ் இப்படிக் கேட்கின்றான்:


அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?


இந்த வினாவை விடுக்கும் முழுவசனமும் இதோ

எவன் மறுமையைப் பயந்து தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து இராக்காலங்களில் நின்றவனாகவும் சிரம்பணிந்தவனாகவும் (அல்லாஹ்வை) வணங்கிக் கொண்டிருக்கின்றானோ (அவன் விசுவாசங்கொள்ளாது நிராகரிப்போனைப் போலாவானா? நபியே) நீர் கேளும். அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோரெல்லோரும் (கல்வி) அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)


ஒருவன் இப்படி இறைவனை அஞ்சி இரவெல்லாம் நின்று வணங்குகின்றான். மரணத்திற்குப் பின்வரும் மறுமை வாழ்க்கையைப் பற்றிப் பயப்படுகின்றான். தன்னைப் படைத்த இறைவனின் கருணைக்கு மன்றாடுகின்றான்.இவன் தான் உண்மையில் அறிந்தவன் ஞானமுடையோன். இவனுடைய அறிவைத்தான் இறைவன் மேலே உள்ள இறைவசனத்தில் குறிப்பிடுகின்றான். எந்த அறிவெல்லாம் இறைவனை நோக்கி இட்டுச் செல்கின்றனவோ அவையேதாம் உண்மையான அறிவு. எந்த அறிவெல்லாம் இறைவனை மறுக்கின்ற அளவில் மனிதனை பயிற்றுவிக்கின்றனவோ அவை அறிவே அல்ல. ஏற்கனவே நாம் ஓர் உண்மையை விளக்கிச் சொல்லியிருக்கின்றோம். விஞ்ஞானம் அறிவியல் என்றலெ;லாம் இன்று பேசப்படுகின்ற அத்தனையும் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் தோன்றி மெல்லமெல்ல வளர்ந்து மாட்சிபெற்றவை. அல்லாஹ்வின் பிரதிநிதி மனிதன் என்ற அளவில் அவன் சுமந்தப் பொறுப்பை நிறைவேற்றிடும் வகையில் அவன் இந்த உலகை அகழ்ந்த போது கண்டெடுததவையே அறிவியலின் அதிசயமான ஆராய்ச்சி முறைகள். இவை ஐரோப்பாபின் கைகளுக்கு மாறியபோதே விஞ்ஞானத்தின் அத்தனை அடிப்படைகளும் மாற்றப்பட்டு அது இறைவனுக்கு எதிராகவும் அதனால் மனிதனுக்கு எதிரிhகவும் மாறிப்போயிற்று. பின்னர் இந்த விஞ்ஞான அறிவு முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கிளர்ந்தன. பிற்றை நாள்களில் வளர்ந்த அத்தனை விஞ்ஞான அறிவும் அறிவியல் அறிவும் இந்த மேலை நாட்டுச் சிந்தனைகளில் தோன்றியவையே. ஆகவே இவை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சிந்தனைகளைப் பக்குவமாய்ப் பாய்ச்சின அவற்றைக் கற்றோரிடம். இஸ்லாத்திற்கு எதிரான இந்தப்போக்கு ஏதோ யதார்த்தமாய்த் தோன்றியதன்று. மாறாக அது ஓர் தெளிவான சூழ்;ச்சியின் கீழ் வகுக்கப்பெற்றது. அதே போல் திட்டம் போட்டு முஸ்லிம்களை நோக்கிப் பாய்ச்சப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் முஸ்லிம்களை முதன் முதலில் அவர்களின் இறை நம்பிக்கையை ஈமானை அசைப்பதும் காலப்போக்கில் அவர்களை இறை மறுப்பாளர்களையும் நிராகரிப்பாளர்களாகவும் மாற்றுவதே. இந்த முக்கிய நோக்கத்தைத் தொடர்ந்து இறுதி நோக்கம் என்னவெனில் இஸ்லாம் அரும்பாடுபட்டுப் போற்றிவரும் குடும்ப அமைப்பையும் கட்டுப்பாடான தாம்பத்திய உறவுகளையும் உடைப்பதே. இப்பயொரு தெளிவான சூழ்ச்சி இந்த மேலைநாட்டுச் சிந்தனையில் உறைந்திருக்கின்றது. இதைத் தெரிந்த பின்னரும் நாம் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவோமேயானால் நாம் கண்ணிருந்தும் குருடர்களே. ஒன்றுக்கு இருமறை நான் எச்சரித்தது போல் விஞ்ஞானத்தின் அறிவியலின் கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி முறைகளை ஆராய்ச்சிகளை அங்கே கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அல்லாஹ்வின் அழகியப்பணியைச் செய்யும் பொருளாக அவற்றை மாற்றுங்கள். அவர்கள் உங்களை அல்லாஹ்வை நினைவு கூருவதிலிருந்து தடுத்திடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய அளவே அவர்களின் சிந்தனையால் ஆட்கொள்ளப்படுவீர்;களேயானால் அது தௌ;ளத் தெளிவான அறிவின் ஊற்றாம் இஸ்லாத்திலிருந்து உங்களைத் திசைத் திருப்பிவிடும். எச்சரிக்கை!.

தொடர்ந்து வரும்...

No comments:

Post a Comment