Tuesday, September 29, 2009

கலீபாவிற்கான பைஅத் – البيعـة

பைஅத் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும் (வாஜிப்) மேலும் இது ஆண் பெண் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதுள்ள உரிமையாகும், பைஅத் செய்வது வாஜிப் என்பதற்கு குர்ஆன் வசனங்களும் நிறைய ஹதீஸ்களும் ஆதாரமாக இருக்கின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ
மூ*மின்கள் உம்மிடம் பைஅத் செய்தபோது நிச்சயமாக அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்,. ( அல்*பதஹ் 48 :18 )

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ
உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது (அல்*பதஹ் 48 : 10)

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ
நபியே. மூ*மினான பெண்கள் உம்மிடம் பைஅத் செய்யவரும்போது… ( அல்மும்தஹினா 60 : 12)

ஹதீஸ் ஆதாரங்கள்:

இப்ன்உமர்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்,

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية
எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்.

பைஅத் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள உரிமை என்பதைப் பொறுத்தவரை பைஅத் செய்யும் முறையே அதனை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் முஸ்லிம்கள்தான் கலீ*பாவிற்கு பைஅத் கொடுக்கவேண்டுமே தவிர கலீ*பா முஸ்லிம்களுக்கு பைஅத் கொடுக்கக்கூடாது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்த செய்தி ஹதீஸ் வாயிலாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது,.

உபாதா இப்ன் அஸ்ஸôமித்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعنا رسول الله  على السمع والطاعة في المنشط والمكره وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنا لا نخاف في الله لومة لائم
நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு பைஅத் செய்தோம்.

உம்முஅத்தீயா(ரலி) அறிவிப்பை ஹ*ப்ஸôவின் வழியாக அய்யூப் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.
بايعنا النبي  فقرأ عليّ أن لا يشركن بالله شيئاً ونهانا عن النياحة فقبضت امرأة منّا يدها فقالت فلانة أسعدتني وأنا أريد أن اجزيها فلم يقل شيئاً فذهبت ثم رجعت
"'நாங்கள் அல்லாஹவின்தூதருக்கு பைஅத் செய்தோம், பின்னர் அல்லாஹ்வுக்கு நாங்கள் எதனையும் இணைவைக்கக்கூடாது என்றும் ஒப்பாரி வைத்து அழுவதிலிருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் ஓதிக்காட்டியபோது எங்களிலுள்ள ஒரு பெண் தன்னுடைய கையை விலக்கிக்கொண்டு. "ஒரு பெண் என்னை மகிழ்ச்சி அடையச்செய்திருக்கிறாள் அவளுக்கு நான் பிரதிஉபகாரம் செய்யவேண்டும்" என்று கூறினார், அதற்கு அல்லாஹ்வின்தூதர் எதுவும் பதில் கூறவில்லை. எனவே அவர் சென்றுவிட்டு பின்னர் திரும்பிவந்தார்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها
மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலகநலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். அதை உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்."

அப்துல்லாஹ் இப்ன்உமர்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

كنا إذا بايعنا رسول الله على السمع والطاعة يقول لنا فيما استطعت
அல்லாஹ்வின்தூதருக்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நாங்கள் பைஅத் செய்தபோது. "இயன்றவற்றில்" என்று எங்களிடம் கூறுவார்கள்," ஜரீர் இப்ன் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعت النبي على السمع والطاعة فلقنني فيما استطعت والنصح لكل مسلم
அல்லாஹ்வின்தூதருக்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நான் பைஅத் செய்தபோது இயன்றவற்றில் (அவ்வாறு செய்யவேண்டும்) என்றும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உபதேசம் செய்யவேண்டும் என்றும் என்னிடம் அறிவுறுத்தினார்கள்.

ஜுனாது இப்ன் அபூஉமைய்யா (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

دخلنا على عبادة بن الصامت وهو مريض قلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي  قال: دعانا النبي  فبايعناه. فقال فيما أخذ علينا أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأَثَرَةً علينا وأن لا ننازع الأمر أهله قال إلاّ أن تروا كفراً بواحاً عندكم من الله فيه برهان
உபாதா இப்ன் அஸ்ஸôமித் நோயுற்று இருக்கும் நிலையில் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றோம், அல்லாஹ் உம்மை ஸôலிஹான மனிதராக ஆக்குவானாக. இறைத்தூதரிடம்(ஸல்) நீர் கேட்டு பயன் பெற்றதைப்போல் நாங்களும் பயன் பெறும் வண்ணம் அவர்களிடம் நீர் செவியுற்ற செய்திகளை எங்களுக்கும் அறிவிப்பீராக என்று கூறினோம், அவர் கூறியதாவது. "இறைத்தூதர்(ஸல்) எங்களை (பைஅத் செய்ய) அழைத்தார்கள் நாங்கள் அவர்களிடம் பைஅத் செய்தோம்," மேலும் அவர் கூறியதாவது. "நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் இன்பமான நிலையிலும் துன்பமான நிலையிலும் எங்கள் சுயநலன்களிலும் (அவர்களுக்கு) நாங்கள் செவிமடுக்க வேண்டும் என்றும் கட்டுப்பட வேண்டும் என்றும். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவான கு*ரை கண்டால் ஒழிய அதிகாரம் கொடுக்கப் பட்டவர்களுடன் நாங்கள் சர்ச்சை செய்யக்கூடாது என்றும் எங்களிடம் பைஅத் பெற்றார்கள்."
ஆகவே கலீ*பாவிற்கு பைஅத் கொடுக்கும் அதிகாரம் முஸ்லிம்கள் கைகளில் இருப்பதோடு அது அவர்களின் உரிமையாகவும் இருக்கிறது, அவர்கள் பைஅத் கொடுப்பதன் மூலமாக மட்டுமே கலீ*பாவின் நியமனம் நிறைவேற்றப்பட்டு கிலா*பத் நிலைநாட்டப்படுகிறது, கைலாகு (கை குலுக்குதல்) செய்வதன் மூலமாகவோ அல்லது எழுதிக்கொடுப்பதன் மூலமாகவோ ஆணோ பெண்ணோ எந்த வேறுபாடுமின்றி ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றலாம், ஆண்கள் செய்வதைப்போலவே பெண்கள் பைஅத் செய்யும்போது கலீ*பாவுடன் கைகுலுக்கலாம்.

ஆயிஷா(ரலி) விடமிருந்து உர்வா அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்கக்கூடாது என்ற வசனத்தை ஓதிக்காட்டி அல்லாஹ்வின்துதர்(ஸல்) பெண்களிடம் பைஅத் பெறுவார்கள். அவர்களுக்கு உரிமை இல்லாத பெண்ணின் கையை ஒருபோதும் அவர்கள் தீண்டியதில்லை"

இந்த அறிவிப்பில் ஆயிஷா(ரலி) தான் அறிந்தவரை உள்ள விஷயத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார், அவர் அறிந்தவரை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) எந்த பெண்ணின் கையையும் (பைஅத் பெறும்போது) தீண்டியதில்லை, ஆனால் வேறுசில ஹதீஸ் அறிவிப்புகளில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கையை பிடித்தவாறு பெண்கள் பைஅத் செய்தார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, உம்மு அத்தீயா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் எங்களில் ஒரு பெண் தனது கையை விலக்கிக் கொண்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, அந்தப்பெண் பைஅத் செய்தபோது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கையை பிடித்திருந்தார் என்பதையும் அவர்கள்(ஸல்) ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்று கட்டளையிட்டபோது பைஅத்திலிருந்து தனது கையை விலக்கிக்கொண்டார் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது, மேலும் எங்களில் ஒரு பெண் தனது கையை விலக்கிக் கொண்டார் என்ற சொற்றொடர் மற்ற பெண்கள் பைஅத்திலிருந்து தங்கள் கைகளை விலக்கிக்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கையைப் பிடித்து பைஅத் செய்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இந்த ஹதீஸின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் ஆண்களும் பெண்களும் பைஅத் செய்யும்போது கலீ*பாவுடன் கைகுலுக்குவது கூடும் என்று குறிப்பிடுகிறது, ஆகவே ஆண்களும் பெண்களும் கைகுலுக்குவது மூலமோ அல்லது எழுதிக்கொடுப்பது மூலமோ பைஅத்தை நிறைவேற்றலாம்.

அப்துல்லாஹ் இப்ன் தினார்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

شهدت ابن عمر حيث اجتمع الناس على عبد الملك قال: كتب إني اقر بالسمع والطاعة لعبد الله عبد الملك أمير المؤمنين على سنة الله وسنة رسوله ما استطعت
அப்துல்மாலிக் இப்ன் மர்வானின் பக்கமாக மக்கள் கூடியிருந்தபோது. அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதரின் சுன்னாவின்படியும் அமீருல் மூ*மினீன் அல்லாஹ்வின் அடிமை அப்துல்மாலிக்கிற்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நான் அறிவிப்பு செய்கிறேன் என்று இப்ன்உமர் எழுதிக்கொடுத்ததை நான் பார்த்தேன்"

எனினும் வயதுவந்தவர்கள் மட்டும்தான் பைஅத் செய்யமுடியும். சிறுவர்களோ அல்லது புத்திசுவாதீனம் இல்லாதவர்களோ பைஅத் செய்யமுடியாது, ஆகவே ஒரு முகல்ல*ப் (புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்) மட்டுமே பைஅத் செய்யமுடியும்.

அபூஉகைல் அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

فقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي  وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله  فقالت يا رسول الله بايعه، فقال النبي  هو صغير فمسح رأسه ودعا له
அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் ம*பத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார், அவர் கூறினார். "அல்லாஹ்வின்தூதரே (ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாகõ" அதற்கு இறைத்தூதர்(ஸல்). அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்"

பைஅத் கொடுக்கும்போது கூறவேண்டிய வார்த்தைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே கூறவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனது தூதரின்(ஸல்) சுன்னாவின்படியும் கலீ*பா செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் வார்த்தைகள் முதலில் இடம்பெறவேண்டும், இரண்டாவதாக இன்பத்திலும் துன்பத்திலும் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கின்றவற்றிலும் கலீ*பாவுக்கு கட்டுப்படுவது குறித்த உறுதிமொழி அதில் இடம்பெறவேண்டும், முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுவது மூலம் கிலா*பத் ஒப்பந்தம் ஒரு கலீ*பாவின் மீது நிலைநிறுத்தபட்டுவிட்டது எனில் பிறகு பைஅத் செய்தவர்கள் கழுத்தில் அது ஒரு பொறுப்பாக நிலைபெற்றிருக்கும். அவர் அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளமுடியாது ஏனெனில் கிலா*பத் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அது நிலைத்திருக்கும்வரை கலீ*பாவின் மீதுள்ள உரிமையாக அது இருக்கிறது, ஒருமுறை முஸ்லிம்கள் அதை அவருக்கு அளித்துவிட்டால் பிறகு அவர்கள் அவருக்கு கட்டுப்பட்டே நடந்தாகவேண்டும், அதிலிருந்து எவரேனும் விலகிக்கொள்ள நாடுவாரானால் அதற்கு ஒருபோதும் அனுமதியில்லை, அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது. ஆகவே எவர் அதை முறித்துவிடுகிறாரோ அவர் தனக்கு எதிராகவே (அதை) முறித்துவிடுகிறார் இன்னும் எவர் அல்லாஹ்விடம் செய்த உடண்படிக்கையை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலி உண்டு ( அல்*பதஹ் : 10)

ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ் (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

أقلني بيعتي " فأبى. ثم جاء فقال " أقلني بيعتي " فأبى، فخرج. فقال رسول اللهயிالمدينة كالكير تنفي خبثها وينصع طيبها
ஒரு நாடோடி அரபி அல்லாஹ்வின்தூதரிடம் (ஸல்) இஸ்லாத்திற்காக பைஅத் செய்தார். பின்னர் அவர் நோயுற்றபோது அல்லாஹ்வின்தூதரிடம் (ஸல்) வந்து கூறினார்.

"'எனது பைஅத்திலிருந்து நான் விலகிக்கொள்ளலாமா? என்று வினவினார். அதற்கு அவர்கள்(ஸல்) மறுத்துவிடவே அங்கிருந்து சென்றுவிட்டார், பிறகு அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"'இந்நகரம் உருக்கு உலை போன்றது அது தன்னிடமுள்ள அசுத்தங்களை விலக்கிவிட்டு தூய்மையானவற்றை பாதுகாக்கிறது

இப்ன்உமர்(ரலி) தன்னிடம் கூறியதாக நா*பி* அறிவித்திருப்பதாவது.

من خلع يداً من طاعة لقي الله يوم القيامة لا حجة له
எவரேனும் ஒருவர் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதிலிருந்து தனது கரத்தை விலக்கிக் கொண்டால் அவர் மறுமைநாளில் தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்

கலீ*பாவிற்கு செய்த பைஅத்தை முறிப்பது அல்லாஹ்(சுபு) வுக்கு கட்டுப்படுவதிலிருந்து கையை விலக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும், இது முஸ்லிம்கள் ஒருவரை கலீ*பாவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு பைஅத் செய்வதைப் பொறுத்தவரை உள்ள நிபந்தனையாகும். அது கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக (contract of khilafat) இருந்தாலும் அல்லது கட்டுப்படும் பைஅத்தாக (contract of obedience) இருந்தாலும் சரியே, ஆனால் ஒருவர் ஆரம்பத்தில் ஒருவரை கலீ*பாவாக ஏற்றுக்கொண்டு பைஅத் செய்துவிட்ட நிலையில் மற்ற முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் செய்து கலீ*பாவாக ஏற்றுக்கொள்ளவில்லை எனும் பட்சத்தில் அவர் தன்னுடைய பைஅத்தை அவரிடமிருந்து விலக்கிக்கொள்வதற்கு அனுமதியுண்டு, ஆகவே இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது கலீ*பாவிற்கு செய்யப்பட்டு பைஅத்தைப் குறித்துதானே தவிர முஸ்லிம்கள் கலீ*பாவாக ஏற்றுக்கொள்ளாத நபருக்கு கொடுத்த பைஅத் குறித்தல்ல,

Friday, September 25, 2009

கிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة

கிலா*பத் என்பது சுயவிருப்பத்துடன் தேர்வுசெய்யும் ஒரு ஒப்பந்தமாகும் ஏனெனில் அது அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படுவதாக கொடுக்கப்படும் வாக்குறுதியாக இருக்கிறது, ஆகவே பைஅத் பெறுகின்ற நபர் கிலா*பத் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரிவிக்கும் சம்மதமும் பைஅத் கொடுப்பவர் குறிப்பிட்ட நபர் கலீ*பாவாக நியமிக்கப்படுவதற்கு தெரிவிக்கும் சம்மதமும் முக்கியமான நிபந்தனைகளாகும், இதனடிப்படையில் ஒருவர் கலீ*பா பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அல்லது தயக்கம் காட்டினாலும் அவரை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது, அதற்கு மாற்றாக வேறொரு நபரை தேர்வுசெய்யவேண்டும், மேலும் மக்களிடம் நிர்பந்தமான முறையில் பைஅத் பெறுவதற்கும் அனுமதியில்லை ஏனெனில் இத்தகைய விதத்தில் பைஅத் பெற்றால் அது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, மற்ற ஒப்பந்தங்களுக்கு உரிய ஷரத்து போலவே கிலா*பத் என்பதும் சுயசம்மதத்துடன் எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது நிர்பந்தமோ இன்றி தேர்வுசெய்யும் ஒப்பந்தமாகும், எனினும் பைஅத் கொடுப்பதற்கு தகுதி உள்ளவர்கள் பைஅத்தை நிறைவேற்றிவிட்டால் அது சட்டரீதியானது என்பதால் தேர்வுசெய்யப்பட்டவர் அதிகாரத்திற்கு வந்துவிடுவார். அவருக்கு கட்டுப்படுவது மக்கள் அனைவரின் மீதுள்ள கட்டாய கடமையாகும், அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவருக்கு கொடுக்கப்படும் பைஅத் கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே ஒழிய கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்காது, இந்நிலையில் அதிகாரத்தில் இருக்கும் நபர் மற்ற மக்களிடம் நிர்பந்தமாக பைஅத் பெறுவதற்கு அனுமதியுண்டு ஏனெனில் அது கீழ்படியும் பைஅத்தாக இருப்பதோடு வாஜிபாகவும் இருக்கிறது, கீழ்படியும் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத் அல்ல. எனவே அதை வற்புறுத்தி பெறுவது சட்டத்திற்குப் புறம்பானது என்ற வாதம் தவறானது, இதனடிப்படையில் ஆரம்பநிலையில் பெறப்படும் பைஅத் ஒப்பந்த பைஅத்தாக இருப்பதால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்தால் அன்றி அது சட்டரீதியானதாக இருக்காது, ஆனால் கலீ*பாவிற்கு ஒப்பந்த பைஅத் கொடுக்கவேண்டியவர்கள் பைஅத் கொடுத்து முடித்துவிட்டால் பிறகு மற்ற முஸ்லிம்களின் பைஅத் அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படும் பைஅத்தாகும், அல்லாஹ்(சுபு) வின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு மக்களை நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியுண்டு என்ற அடிப்படையில் நிர்பந்தமாக கட்டுப்படும் பைஅத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, நீதித்துறையில் நீதிபதியாக இருக்கும் ஒருவரை நியமனம் செய்வதற்கு ஒருவர் பொறுப்பாக இருப்பது போலவே. இமாரத்தில் அமீராக பொறுப்பு வகிப்பவரை ஒருவர் நியமனம் செய்வதுபோலவே கிலா*பத் என்பது ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் அந்த ஒப்பந்தத்தை சட்டரீதியானதுதான் என்று முடிவுசெய்ய எவரேனும் பொறுப்பாக இருக்கவேண்டும், ஆகவே கிலா*பத் ஆட்சிமுறையில் கலீ*பா பதவிக்கு வரும் நபரை எவரேனும் நியமனம் செய்யாமல் அவர் கலீ*பாவாக ஆகமுடியாது,.

இதன்முடிவாக. முஸ்லிம்கள் ஒருவரை கலீ*பா பதவிக்கு நியமனம் செய்யாமல் ஒருவரும் கலீ*பாவாக ஆகமுடியாது. மேலும் அவர் சட்டரீதியான ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளாமல் கலீ*பாவின் அதிகாரத்தை அடைந்துகொள்ள முடியாது, இந்த ஒப்பந்தத்தை இரண்டு தரப்பினர்தான் நிறைவேற்றமுடியும், முதல்தரப்பில் உள்ளவர் கலீ*பாவாக பொறுப்பு வகிப்பதற்கு முன்மொழியப்பட்ட நபராவார். இரண்டாவது தரப்பில் உள்ளவர்கள் அவரை கலீ*பாவாக ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் முஸ்லிம்களாவார்கள், ஆகவே கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கு முஸ்லிம்களின் பைஅத் அவசியமானது(வாஜிப்) , இதனடிப்படையில் ஒருவர் வன்முறையான விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு தன்னை முஸ்லிம்களின் கலீ*பா என்று அவராகவே அறிவிப்பு செய்துகொண்டாலும் அவர் கலீ*பாவாக ஆகமுடியாது ஏனெனில் கிலா*பத்திற்குரிய ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் ஒருமித்து அவருக்கு அளிக்கவில்லை, இந்நிலையில் முஸ்லிம்களிடமிருந்து நிர்பந்மமான முறையில் பைஅத் பெற்றால் அந்த பைஅத்தின் அடிப்படையில் அவரை கலீ*பாவாக கருதமுடியாது ஏனெனில் நிர்பந்தமாக பெற்ற பைஅத் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, கிலா*பத் என்பது சுயசம்மதத்துடன் தேர்வுùய்யும் முறையாக இருப்பதாலும். அதை வன்முறையில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதாலும். சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து பைஅத் கொடுத்தால் மட்டுமே நியமனம் செய்யமுடியும் என்ற காரணத்தாலும் இத்தகைய முறையில் பெறும் பைஅத்தைக் கொண்டு கலீ*பாவை ஒருமித்து நியமனம் செய்யமுடியாது, எனினும் நிர்பந்தமான முறையில் அதிகாரத்தை கைப்பற்றிய ஒருவர் அதன்பின்னர் முஸ்லிம்களின் நம்பிக்கையை தனக்கு ஆதரவாக திருப்புவதன் மூலம் அவர்கள் பைஅத் கொடுப்பதற்கு சுயவிருப்பத்தின் பேரில் சம்மதம் தெரிவித்தால். அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்ற அடிப்டையில் அவர்களிடமிருந்து முறையாக பைஅத் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவர் முறையற்ற விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தாலும் பைஅத் பெற்ற அந்த வினாடி முதலே அவர் கலீ*பா பொறுப்புக்கு வந்துவிடுவார், ஆகவே பைஅத் பெறுவதற்கு முயற்சிப்பவர் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கலீ*பாவாக வருபவருக்கு சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து மக்கள் பைஅத் கொடுக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.

எத்தகைய மனிதர்களின் பைஅத்தைக் கொண்டு கலீ*பா நியமனம் செய்யப்படுகிறார் என்பதைப் பொறுத்தவரை: நேர்வழிகாட்டப்பட்ட கலீ*பாக்களின் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஸஹாபாக்கள் ஒருமித்து முடிவுசெய்த விஷயங்களையும் ஆய்வுசெய்வதன் மூலம் இதற்குரிய விதிமுறைகளை கொண்டுவரலாம், அபூபக்கர்(ரலி) காலத்தைப் பொறுத்தவரை மதினா நகரத்தில் வாழ்ந்த அஹ்லே அல்ஹல் வல் அக்த் (Ahle al-hal wal aqd) என்றழைக்கப்படும் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெறுவது போதுமானதாக இருந்தது. மக்காவில் வாழ்ந்த முஸ்லிம்களிடமோ அல்லது அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த மற்ற முஸ்லிம்களிடமோ பைஅத் பெறத்தேவையில்லை என்ற நிலை இருந்துவந்தது, உண்மையில் இதுபற்றி அவர்களிடம் எந்தவிதமான அபிப்ராயமும் கேட்கப்படவில்லை, உமர்(ரலி) காலத்திலும் இதேமுறைதான் பின்பற்றப்பட்டது, உஸ்மான் (ரலி) பைஅத் பெற்றதைப் பொறுத்தவரை அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) ஆகியோர் காலத்தில் மதினாவின் செல்வாக்கு பெற்ற முஸ்லிகளிடத்தில் மட்டும் அபிப்ராயம் கேட்டதுபோல் அல்லாமல் உஸ்மானை(ரலி) தேர்வு செய்தபோது அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப் (ரலி) மதினாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடத்திலும் அபிப்ராயம் கேட்டார், அலீ (ரலி) கலீ*பாவாக தேர்வுசெய்யப்பட்டபோது மதினாவிலும் கூ*பாவிலும் வாழ்ந்த பெரும்பான்மை முஸ்லிம்களிடத்தில் பைஅத் பெறப்பட்டது, கலீ*பா பதவிக்கு அவர் ஏகமானதாக தேர்வுசெயய்யப்பட்டார். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் அவருடன் போர்செய்தவர்களும் அவர் பெற்ற பைஅத் சட்டரீதியானது என்று கருதினார்கள், ஏனெனில் அவர்கள் வேறொருவருக்கும் பைஅத் கொடுக்கவுமில்லை அவர் பெற்ற பைஅத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கவுமில்லை மாறாக. உஸ்மானின்(ரலி) இரத்தத்திற்கு பழிதீர்க்கவேண்டும் என்றே கோரினார்கள், அலீ(ரலி)க்கு எதிராக கலகம் செய்தவர்களைப் பொறுத்தவரை பழிதீர்க்கவேண்டிய ஒரு விஷயத்திற்காக கலீ*பாவின் மீது குற்றம் சுமத்தினார்கள், அவர்களுக்கு அதுபற்றி விளக்கிக்கூறவேண்டிய நிலையிலும் அவர்களுடன் போர்செய்யவேண்டிய நிலையிலும் கலீ*பா இருந்துவந்தார், ஆனால் கலகம் செய்த கூட்டத்தினர் வேறொரு கிலா*பத்தையும் நிறுவ முயற்சிக்கவில்லை.

கிலா*பத்தின் மற்ற மாகாணங்களை விட்டுவிட்டு தலைநகரான மதினாவில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற சம்பவங்கள் ஸஹாபாக்கள் அனைவர் முன்னிலையிலும் நிகழந்தது, மதினாவிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற இந்தமுறையில் அவர்களில் ஒருவர்கூட கருத்துவேறுபாடு கொண்டதாகவோ அல்லது மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை எழுப்பியதாகவோ எந்தவொரு அறிவிப்புகளும் இல்லை, ஆகவே ஆட்சியமைப்பு விவகாரங்களில்(Ruling Affairs) செல்வாக்கு பெற்றவர்களாகவும் உம்மத்திலுள்ள முஸ்லிம்களின் அபிப்ராயத்தை முகமை செய்யக்கூடிய(Representation) அந்தஸ்த்தில் உள்ளவர்களாகவும் விளங்கும் முஸ்லிம்கள் இணைந்து கலீ*பாவை நிலைநிறுத்தலாம் என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, இதுஏனெனில் அக்காலகட்டத்தில் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களும் மதினாவின் பெரும்பான்மை முஸ்லிம்களும் உம்மத்திலுள்ள மக்களின் அபிப்ராயங்களை முகமை செய்யக்கூடியவர்களாக இருந்துவந்தார்கள், அவர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து பிரதேசங்களின் சார்பாக ஆட்சியமைப்பு விவகாரங்களில் உம்மத்தின் அபிப்ராயத்தை எடுததுக்கூறக்கூடிய அந்தஸ்த்தில் இருந்துவந்தார்கள்.

இதனடிப்படையில் நேர்வழிகாட்டப்பட்ட கலீ*பாக்கள் காலத்தில் உள்ளதுபோல் ஒருவருக்குப்பின் மற்றொருவர் கலீ*பாவாக தேர்வுசெய்யப்படும்போது முஸ்லிம் உம்மத்தின் பிரதிநிதிகளாக அந்தஸ்த்து பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்துவிட்டால் பிறகு கலீ*பாவை நியமனம் செய்துவிடலாம், ஆகவே இத்தகையவர்களின் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்கிறது. மற்றவர்களின் பைஅத்தைப் பொறுத்தவரை அது கீழ்படியும் பைஅத்தாகவே இருக்கும். அதாவது அது கலீ*பாவிற்கு கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே தவிர கிலா*பத்தை நிலைநிறுத்தும் ஒப்பந்த பைஅத்தாக இருக்காது.

ஒரு கலீ*பா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அவர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமனம் செய்வது தொடர்பாக உள்ள நிலையாக இது இருக்கிறது, ஆனால் ஹிஜ்ரி 1343 (1924 கி,பி,) ல் இஸ்த்தான்புல் கிலா*பா அகற்றப்பட்ட பின்னர் இன்றைய நாள்வரை உள்ள நிலைபோல் கலீ*பாவே இல்லை என்ற நிலை ஏற்படும்போது இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செய்தியை த*வா மூலம் உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது, ஒரு கலீ*பாவை நியமனம் செய்வதன்மூலம் கிலா*பத்தை நிர்மாணிப்பதற்கு இஸ்லாமிய உலகத்திலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களும் தகுதி உடையவையாகவே இருக்கின்றன, அவ்வாறு ஒரு கலீ*பா நிலைநிறுத்தப்படும்போது அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் ஒப்பந்த பைஅத்தை அவர்மீது நிறைவேற்றிய பின்னர் மற்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் அவருக்கு கீழ்படியும் பைஅத் அளிப்பது அவர்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும், கிலா*பத் நிறுவப்பட்ட பிரதேசம் எகிப்து. துருக்கி. இந்தோனீசியா போன்ற பெரிய பிரதேசங்களாக இருந்தாலும் அல்லது அல்பேனியா. காமரூன். லெபனான் போன்ற சிறிய பிரதேசங்களாக இருந்தாலும் கீழ்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் அளவுகோலாகும்.

1, அந்தப்பிரதேசம் சுயநிர்ணய அதிகாரத்தை பெற்றதாகவும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாகவும் இருக்கவேண்டும் அதாவது அது அந்நிய அரசுகளின் ஆதிக்கத்தில் இல்லாத முஸ்லிம் நாடாக இருக்கவேண்டும், கா*பிர்களின் தலையீடோ அல்லது அவர்களின் ஆதிக்கமோ அதில் கொஞ்சமும் இருக்கக்கூடாது.
2, இஸ்லாமிய அரசு என்ற அந்தஸ்த்தில் அதன் பாதுகாப்பு அதிகாரம் மற்றும் பாதுகாவல் பொறுப்பு ஆகியவை முஸ்லிம்களின் கையில் மட்டும் இருக்கவேண்டும், அதில் கா*பிர்களின் தலையீடோ அல்லது பங்களிப்போ அல்லது ஆதிக்கமோ அறவே இருக்கக்கூடாது.

3, இஸ்லாத்தை முழுமையாகவும் அடிப்படையாகவும் நிறைவாகவும் நடைமுறைப்படுத்தும் செயல்பாட்டை அந்த அரசு உடனே துவக்கிவிடவேண்டும். மேலும் இஸ்லாத்தின் த*வாவை உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்லும் பணியையும் உடனே துவக்கிவிடவேண்டும்,
4, தேர்ந்தெடுக்கப்பட்ட கலீ*பா உபரியான நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டாலும் கிலா*பத் ஒப்பந்தத்திற்குரிய அடிப்படை நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும் ஏனெனில் கிலா*பா ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.

ஆகவே இந்த நான்கு நிபந்தனைகளையும் அந்த அரசு நிறைவேற்றிவிடும் பட்சத்தில் அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே கிலா*பத்தை நிலைநாட்டிவிடலாம், ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யாதபோதும் ஒரு பிரதேசத்தில் கலீ*பாவாக தேர்வுசெய்யப்பட்டு அங்குள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்ற நபர்மீது கிலா*பத்தின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் ஏனெனில் கிலா*பத்தை நிலைநாட்டுவது *பர்லுல் கி*பாயாவாக (கூட்டுக்கடமையாக) இருப்பதால் எந்த கூட்டத்தினர் இந்த கடமையை முறையாக நிறைவேற்றினாலும் அது விதிக்கப்பட்ட *பர்லை முழுமையாக நிறைவேற்றியதற்கு சமமாகும், ஏனெனில் கிலா*பத் ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் நிலையில் முந்தைய கலீ*பா மரணமடைந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ புதிய கலீ*பாவை நியமனம் செய்யும்போது மட்டும்தான் உம்மத்திலுள்ள செல்வாக்குமிக்க முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யவேண்டும் என்பது நிபந்தனையாகும், ஆனால் கிலா*பத் ஏற்கனவே இல்லாத நிலையில் அதை நிலைநாட்டுவது கட்டாய கடûமை என்றும் அதை மூன்று நாட்களுக்குள் நிலைநாட்ட வேண்டும் என்றும் ஷரியா நிபந்தனை விதித்திருந்தும் முஸ்லிம்கள் அதை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட நிலையில் கலீ*பா ஒப்பந்த்திற்கு உரிய தகுதிகளை பெற்றிருக்கும் நபருக்கு அங்குள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்து அவர் மீது கிலா*பத் அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஷரியாவிற்கு உடண்பாடான முறையில் நிறைவேற்றப்பட்ட செயல்பாடுதான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஷரியா விதித்துள்ள இந்த கடமையை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் விரும்பும் நபரை கலீ*பாவாக தேர்வு செய்யும் உரிமையை அவர்கள் இழந்து விடுகிறாôகள்.

ஆகவே சிலமனிதர்கள் ஒன்றுகூடி இந்த கடமையை நிறைவேற்றும் பட்சத்தில் கிலா*பத்தை நிலைநாட்டுவதற்கு அது போதுமானதாக இருக்கும், மேலும் ஒருமுறை அந்த பிரதேசத்தில் கிலா*பத் நிறுவப்பட்டு பைஅத் மூலம் ஒரு கலீ*பாவிற்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அதன்மீது அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அந்த கலீ*பாவிற்கு கட்டுப்படும் பைஅத் செய்வது கடமையாகும். இல்லையெனில் அல்லாஹ்(சுபு) வுக்கு முன்னிலையில் அவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவார்கள், தேர்வுசெய்யப்பட்ட கலீ*பா அவர்களை பைஅத் செய்ய அழைக்கவேண்டும் அதற்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் அவர்கள் கலகம் செய்தவர்களாக கருதப்பட்டு கலீ*பாவின் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்படும்வரை அவர்களுடன் போர்செய்யவேண்டும், ஒரு பிரதேசத்தில் சட்டரீதியான கிலா*பத் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு கலீ*பா தேர்வுசெய்யப்பட்ட பின்னர் அந்த பிரதேசத்திலோ அல்லது வேறொரு பிரதேசத்திலோ மற்றொரு கலீ*பா தேர்வு செய்யப்பட்டால் முதலில் தேர்வுசெய்யப்பட்டவர்தான் சட்டரீதியான கலீ*பா என்பதால் இரண்டாவதாக தேர்வுசெய்யப்பட்டவர் சட்டரீதியான கலீ*பாவின் அதிகாரத்திற்கு கீழ்படியும்வரை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அவருடன் போர்செய்யவேண்டும்.

அப்துல்லாஹ் இப்ன் அம்ர் அல்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"

மேலும் கலீ*பா என்பவர் இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைக்கக்கூடியவராக இருக்கிறார். ஆகவே கலீ*பா ஒருவர் நிலைநிறுத்தப்படும்போது முஸ்லிம் உம்மத்தும் நிலைநிறுத்தப்படுகிறது, இந்நிலையில் முஸ்லிம் ஜமாஅத்துடன் இணைந்திருப்பது ஒரு முஸ்லிம் மீதுள்ள கட்டாய கடமையாகவும் ஜமாஅத்தை விட்டு பிரிந்து செல்லுதல் ஹராமாகவும் இருக்கிறது.

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

من رأى من أميره شيئاً فليصبر عليه، فإنه من فارق الجماعة شبراً فمات إلاّ مات ميتة جاهلية
'எவரேனும் தமது அமீரிடம் (தான் விரும்பாதவற்றை) காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் ஒருமுழம் அளவு ஜமாஅத்திடமிருந்து பிரிந்து சென்றநிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியாவில் மரணம் அடைந்தவர் ஆவார்."

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

من كره من أميره شيئاً فليصبر عليه، فإنه ليس أحد من الناس خرج من السلطان شبراً فمات عليه إلا مات ميتة جاهلية
'எவரேனும் தமது அமீரிடம் அவர் விரும்பாதவற்றை காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்து (சுல்தான்) ஒருமுழம் அளவு விலகிய நிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியா மரணத்தில் மரணம் அடைந்;தவர் ஆவார்."

இந்த இரண்டு ஹதீஸ்களும் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத்தையும் பற்றிப்பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டளையை சுட்டிக்காட்டுகின்றன.

பைஅத் கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதோடு அது அவர்கள் மீதுள்ள கடமையாகவுமில்லை, ஏனெனில் அது இஸ்லாத்தின் மீது செய்யப்படும் பைஅத்தாகவும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் செய்யப்படும் பைஅத்தாகவும் இருக்கிறது, இதற்கு இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னா மீதும் ஈமான் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், ஆகவே முஸ்லிமல்லாத ஒருவர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கோ அல்லது ஆட்சியாளர்களை தேர்வுசெய்வதற்கோ அனுமதி கிடையாது. ஏனெனில் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்பதன் அடிப்படையில் பைஅத் கொடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை.

Wednesday, September 23, 2009

கலீபாவை நியமனம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு

கலீபாவை நிலைநிறுத்துவதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இரண்டு இரவுகளாகும், ஆகவே தனது கழுத்தில் பைஅத் இல்லாதநிலையில் இரண்டு இரவுகளுக்கு மேலாக இருப்பதற்கு எந்த முஸ்லிமிற்கும் அனுமதியில்லை, முந்தைய கலீபா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அந்த நொடியிலிருந்து புதிய கலீ*பா ஒருவரை நியமனம் செய்வது *பர்லு என்பதால்தான் இரண்டு இரவுகள் அதிகப்பட்சமான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீபாவை நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது இரண்டு இரவுகள் தாமதம் ஏற்படுவதற்கு அனுமதி இருக்கிறது, இரண்டு இரவுகளுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் கலீ*பாவை நிலைநிறுத்தவில்லை என்றால் பிறகு நிலைமை ஆய்வுசெய்யப்படும், முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தும் சூழலின் சாதகமின்மை காரணமாக அவர்களால் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்றால் பிறகு அவர்கள் மீதுள்ள பாவம் நீங்கிவிடும் ஏனெனில் அவர்கள் கடமையை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்தும் சூழலின் நிர்பந்தம் காரணமாக தாமதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"'தவறுதலின் காரணமாகவோ அல்லது ஞாபக மறதியின் காரணமாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ என் உம்மத்தின் மீது ஏற்படும் பாவம் நீக்கப்பட்டு விடுகிறது"

ஆனால் கடமையை நிறைவேற்றும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை என்றால் பிறகு கலீ*பாவின் நியமனம் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்துகொண்டிருப்பார்கள், கலீ*பாவை நியமனம் செய்வதை நிறைவேற்றும் தருணத்தில் அவர்களை விட்டு *பர்லு நீங்கியபோதும் அதை (குறிப்பிட்ட காலத்திற்கு) நிறைவேற்றாமல் விட்டுவிட்ட பாவம் அவர்கள் மீது இருந்துகொண்டிருக்கும், ஒரு *பர்லை நிறைவேற்றாமல் விட்டுவிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் அல்லாஹ்(சுபு) வின் கட்டளைக்கு கீழ்படியாமல் இருப்பதால் எவ்வாறு கேள்விகணக்கிற்கு உட்பட்டாகவேண்டுமோ அவ்வாறே கலீ*பாவை நியமனம் செய்யும் *பர்லை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் கீழ்படியாத குற்றத்திற்காக அல்லாஹ்(சுபு) வின் கேள்வி கணக்கிற்கு நிச்சயமாக உட்பட்டே ஆகவேண்டும்,

கலீ*பாவை நியமனம் செய்யும் கடமையை நிறைவேற்றுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இரண்டு இரவுகள் என்பதைப் பொறுத்தவரை அது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரண செய்தியை பெற்றுக்கொண்டவுடன் ஸஹாபாக்கள் அனைவரும் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) இடத்திற்கு ஒருவரை நியமனம் செய்வதற்காக விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள், அவர்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தை புறநகர் பகுதியிலிருந்தவாறு விவாதித்து முடித்த பின்னர் இரண்டாவது நாளில் பைஅத் கொடுப்பதற்காக மக்களை மஸ்ஜிதில் கூடச்செய்தார்கள், இதற்குள் இரண்டு இரவுப்பொழுதும் மூன்று பகல்பொழுதும் கழிந்துவிட்டன, பின்னர் மக்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் செய்து அவரை கலீ*பாவாக நியமனம் செய்தார்கள்.

இரண்டாவது கலீ*பா உமர்(ரலி) கத்தியால் குத்தப்பட்ட பின்னர் தனக்கு மரணம் நிகழ்வது நிச்சயம் என்பதை உணர்ந்தபோது புதிய கலீ*பாவை தேர்வு செய்யும் பொறுப்பை ஆலோசனைக்குழுவிடம் (people of shurah) ஒப்படைத்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்தார், கலீ*பா நியமனத்தில் மூன்று நாட்களுக்குள் கருத்து உடண்பாடு ஏற்படவில்லை என்றால் மூன்றாவது நாள் முடிவில் கருத்து வேற்றுமைக்கு காரணமானவர்கள் கொல்லப்படவேண்டும் என்று பரிந்துரை செய்தார், இதற்காக உமர்(ரலி) ஆயுதம் தரித்த ஐம்பது முஸ்லிம் வீரர்களை நியமித்திருந்தார், இந்த ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஸஹாபாக்களில் உஸ்மான் இப்ன் அ*ப்*பான்(ரலி) அலீ இப்ன் அபூதாலிப் (ரலி) அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப் (ரலி) ஸ*து இப்ன் அபீவக்காஸ் (ரலி) ஜுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோர் சுவனத்திற்கு நன்மராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் உள்ளவர்கள் ஆவார்கள், மூன்று நாட்களுக்குள் உடண்பாடு ஏற்படவில்லை என்றால் அவர்கள் அனைவரும் கொல்லப்படவேயண்டும் என்ற உமரின்(ரலி) கட்டளை அனைத்து ஸஹாபாக்கள் முன்னிலையில்தான் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இருந்தபோதும் எவரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை தெரிவித்ததாகவோ எந்த அறிவிப்பும் இல்லை, எனவே இரண்டு இரவுகள் மற்றும் மூன்று பகல்பொழுது ஆகிய காலக்கெடுவுக்கு மேலாக முஸ்லிம்கள் கலீ*பா இன்றி இருப்பதற்கு அனுமதியில்லை என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, மேலும் குர்ஆன் மற்றும் சுன்னாவைப் போன்று இஜ்மாஅஸ்ஸஹாபாவும் ஷரியாவின் சட்டரீதியான ஆதாரமாக (legitmate shari’a daleel) கருதப்படுகிறது.

Monday, September 21, 2009

கிலாபத் - الخلافة நோக்கி இயங்குவது கடமையா?


உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய தலைமைதான் கிலா*பத்தாகும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்தின் செய்தியை உலகெங்கிலும் த*வா மூலம் எடுத்துச் செல்வதும் அதன் பணியாகும், மேலும் அது இமாமத் என்றும் இமாரத் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாகும், பல்வேறு ஸஹீஹ் ஹதீஸ்கள் இவற்றை இந்த அர்த்தத்தில்தான் பிரயோகித்திருக்கின்றன, ஷரியா உரைகளான குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சுன்னா ஆகியவற்றில் இந்த சொற்களின் அர்த்தங்கள் ஒருபோதும் வேறுபட்டதில்லை, கிலா*பத் அல்லது இமாமத் ஆகிய வார்த்தைகளை கட்டாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை மாறாக அவற்றின் அர்த்தங்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உலகிலுள்ள முஸ்லிம்கள் கிலா*பத்தை நிலைநாட்ட வேண்டியது கட்டாய கடமையாகும், அல்லாஹ்(சுபு) முஸ்லிம்கள் மீது விதித்துள்ள மற்ற கடமைகளைப் போலவே இந்த கடமையையும் துரிதமாக நிறைவேற்றுவது அவர்கள் மீது கட்டாயமாக இருக்கிறது. இதில் விருப்பு வெறுப்பு கொள்வதற்குகோ அல்லது அலட்சிப்படுத்துவதற்கோ இடம் கிடையாது, இந்த கட்டாய கடமையை நிறைவேற்றுவதை முஸ்லிம்கள் புறக்கணிக்கும் பட்சத்தில் அது அவர்கள் மீது மிக்பெரும் பாவமாக இருந்துவரும் என்பதோடு அதற்கு அல்லாஹ்(சுபு) விடம் கடுந்தண்டனை கிடைக்கும்.

குர்ஆன். சுன்னா. மற்றும் இஜ்மாஅஸ்ஸஹாபா ஆகியவற்றில் முஸ்லிம்கள் ஒரு கலீ*பாவை கட்டாயம் நியமிக்கவேண்டும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள்:

அல்லாஹ்(சுபு) இறக்கியருளியதைக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்யுமாறு அவன் தன் தூதருக்கு(ஸல்) கட்டளையிட்டுள்ளான், இந்த கட்டளை திட்டவட்டமானதாகவும் நிச்சயமானதாகவும் (Decisive - جازم) இருக்கிறது, அல்லாஹ்வின்தூதரை(ஸல்) நோக்கி கூறிய உரையில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ 5:48
ஆகவே அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்வீராக. மேலும் உம்மிடம் சத்தியம் வந்த பின்னர் அவர்களின் மனஇச்சைகளை நீர் பின்பற்றக்கூடாது, ( அல்மாயிதா 5:48)

وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ 5:49
அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களிடையே ஆட்சிசெய்வீராக மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக! (அல்மாயிதா 5:48)

அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) மட்டும் உரியது என்ற குறிப்பிட்ட ஆதாரம் இல்லாதவரையில் அல்லாஹ்(சுபு) அவனது தூதரை(ஸல்) நோக்கி கூறிய உரைகள் அனைத்தும் உம்மாவிற்கும் உரியவையாகும், இந்த வசனங்களில் அத்தகைய குறிப்பிட்ட ஆதாரம் எதுவும் இல்லை என்ற காரணத்தால் அல்லாஹ்(சுபு) வின் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற இந்த கட்டளை முஸ்லிம்களுக்கும் உரியதாகும், கிலா*பத்தையும் இஸ்லாத்தின் அதிகாரத்தையும் நிலைநாட்டாமல் அல்லாஹ்(சுபு) வின் சட்டங்களை நிலைநிறுத்த முடியாது என்பதோடு அல்லாஹ்(சுபு) அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருப்பவர்களுக்கு கீழ்படியவேண்டும் என்பதை *பர்லாக ஆக்கியிருக்கிறான், உம்மத்தின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்கு அதிகாரம் பெற்றவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கவேண்டியது வாஜிப் என்பதை குறிப்பிடும்போது அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ 4:59
ஈமான் கொண்டவர்களேõ அல்லாஹ்விற்கும் (இந்த) தூதருக்கும் கீழ்படியுங்கள் இன்னும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள், ( அந்நிஸô 4:59)

அதிகாரம் பெற்றவர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கூறமாட்டான். ஆகவே அதிகாரஅமைப்பான கிலா*பத் இருப்பது வாஜிப் என்பதும் இல்லையெனில் அதை உருவாக்குவது வாஜிப் என்பதும் இதன்மூலம் விளங்கிக் கொள்ளப்படுகிறது ஏனெனில் அதிகாரம் பெற்றவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டிருப்பதால் அந்த அதிகார அமைப்பு இல்லாவிடில் அதைக் கொண்டுவரவேண்டும் என்பதை இந்த கட்டளை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது, இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத் நிலைபெற்றிருக்குமாயின் ஹுகும்ஷரியா விதித்துள்ள பல *பர்லுகள் நிறைவேற்றப்படும். கிலா*பத் நிலைநாட்டப்படவில்லை எனில் ஹுகும்ஷரியா முஸ்லிம்களின் வாழ்வியலில் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும், ஆகவே இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத் நிலைபெற்றிருப்பது வாஜிபாகும். அது இல்லாத நிலை ஏற்படுமாயின் பிறகு ஹராமான விஷயங்கள் வாழ்வியலில் நிலைபெற்று ஹுகும்ஷரியா இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுவிடும்.

சுன்னாவில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள்:

நா*பி* அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹிவின்தூதர்(ஸல்) கூறியதை செவியுற்றதாக இப்ன்உமர்(ரலி) என்னிடம் அறிவித்ததாவது.

من خلع يداً من طاعة لقي الله يوم القيامة لا حجة له، ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية

(கலீ*பாவின்) பைஅத்திலிருந்து எவரேனும் தமது கையை விலக்கிக் கொள்வாராயின் மறுமைநாளில் அவர் எந்தவிதமாôன ஆதாரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார், மேலும் எவரேனும் தமது கழுத்தில் (கலீ*பாவின்) பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைவாரேயானால் அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்.

ஆகவே கழுத்தில் பைஅத் (البيعة) இருப்பதை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கட்டாயமாக்கி இருக்கிறார்கள். மேலும் கழுத்தில் பையஅத் இல்லாதநிலையில் மரணம் அடைபவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைகிறார் என்றும் விவரித்துள்ளார்கள், கலீ*பாவையன்றி வேறொருவருக்கும் பைஅத் செய்யக்கூடாது என்பதோடு கலீ*பாவின் பைஅத்தை கழுத்தில் பெற்றிருப்பதை ஒவ்வொரு முஸ்லிமிற்கும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள், இருந்தபோதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் நேரடியாக கலீ*பாவிற்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்பதை அவர்கள்(ஸல்) கட்டாயம் ஆக்கவில்லை. மாறாக சட்டரீதியான தகுதியுடைய ஒவ்வொரு முஸ்லிமின் கழுத்திலும் பைஅத்தை நிலைபெற செய்யக்கூடிய கிலா*பத் இருக்க வேண்டியதன் அவசியம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ஒவ்வொரு முஸ்லிமும் கலீ*பாவிடம் நேரடியாக பைஅத் செய்யவேண்டும் என்று அது குறிப்பிடவில்லை.

ஆகவே அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) இந்த ஹதீஸ் கலீ*பாவை நியமனம் செய்வது கட்டாயம் என்பதற்குரிய ஆதாரமாக இருக்கிறதே ஒழிய கலீ*பாவுக்கு பைஅத் கொடுப்பது கட்டாயம் என்பதற்குரிய ஆதாரமாக இல்லை, இது ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) ஒரு முஸ்லிம் மரணம் வரும்வரை தமது கழுத்தில் பைஅத் இல்லாதநிலையில் இருப்பதை கண்டித்து இருக்கிறார்களே தவிர பைஅத் கொடுக்காதவரை அல்ல.

அபூஹுரைரா(ரலி) விடமிருந்து அல்அ*ரஜ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹிவின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

إنما الإمام جُنة يُقاتَل من ورائه ويُتّقى به
அறிந்துகெள்ளுங்கள்õ இமாம் (மக்களுக்கு) கேடயம் ஆவார். அவர் பின்னால் நின்று (மக்கள்)போர்புரிவார்கள் அவரைக்கொண்டே தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

அபூஹிஸôம்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பபட்டிருப்பதாவது.

நான் ஐந்துவருடங்கள் அபூஹுரைராவுடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وأنه لا نبي بعدي، وستكون خلفاء فتكثر، قالوا: فما تأمرنا ؟ قال: فوا ببيعة الأول فالأول، وأعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم

பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாகõ எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீ*பாக்கள் வருவார்கள், அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், ஃஃ(அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?ஃஃ என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாகõ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக இப்ன்அப்பாஸ்(ரலி) அறிவித்திருப்பதாவது.

من كره من أميره شيئاً فليصبر عليه، فإنه ليس أحد من الناس خرج من السلطان شبراً فمات عليه إلا مات ميتة جاهلية
எவரேனும் தமது அமீரிடம் அவர் விரும்பாதவற்றை காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும், ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள்õ எவரேனும் ஒருவர் தம்மை இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்து (சுல்தான்) ஒருமுழம் அளவு விலகிய நிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியாவில் மரணம் அடைந்தவர் ஆவார்.

முஸ்லிம்களின் விவகாரங்களை கலீ*பாக்கள் நடத்திச் செல்வார்கள் என்று இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவித்திருக்கிறார்கள். மேலும் கலீ*பாவை பாதுகாக்கும் கேடயம் என்றும் விவரித்துள்ளார்கள், இமாமை கேடயம் என்று அறிவித்துள்ளது இமாம் இருப்பதால் ஏற்படும் நன்மையை குறித்த அறிவிப்பாக இருக்கிறது. இதனடிப்படையில் இது செயலாற்றுவதற்குரிய கட்டளையாக (Command for action) இருக்கிறது. ஏனெனில் அல்லா,ஹ்(சுபு) அருளியவற்றில் (சுன்னாவில்) இறைத்தூதரின்(ஸல்) கண்டனத்தை பெற்றுள்ளவை இருக்குமானால் அவை தடை செய்யப்பட்தற்குரிய (command for prohibition) கட்டளையாகும். இறைத்தூதரின்(ஸல்) புகழ்ச்சியை பெற்றிருக்குமானால் அது செயல்படுவதற்குரிய கட்டளையாகும், கட்டளையிடப் பட்டவை ஹுகும்ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான செயலாக இருக்குமானால் அல்லது அதை செயல்படுத்தாமல் விட்டுவிடும் பட்சத்தில் ஹுகும்ஷரியாவை புறக்கணித்துவிடும் நிலை இருக்குமானால் பிறகு அது திட்டவட்டமான கட்டளையாகும் (Decisive command), முஸ்லிம்களின் விவகாரங்களை நடத்திச் செல்பவர்கள் கலீ*பாக்கள் என்ற செய்தி இந்த ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கிறது என்பதால் இவை கலீ*பாக்களை நியமனம் செய்யும் கடமையை சுட்டிக்காட்டுகின்றன, மேலும் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமிருந்து விலகிச்செல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியும் இவற்றில் இடம்பெற்றிருக்கிறது என்ற காரணத்தால் முஸ்லிம்கள் தாங்களாகவே ஆட்சியாளர்களை நியமனம் செய்யவேண்டும் என்ற கட்டளையையும் இந்த ஹதீஸ்கள் சுட்டிக்கட்டுகின்றன, மேலும் முஸ்லிம்கள் கலீ*பாவுக்கு கட்டுப்படவேண்டும் அவரது அதிகாரத்தில் சர்ச்சை செய்பவர்களுக்கு எதிராக போர் செய்யவேண்டும் என்ற இறைத்தூதரின்(ஸல்) கட்டளை கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய கட்டளையாகவும் அவரது அதிகாரத்தில் சர்ச்சை செய்பவர்களுடன் பேரிடுவதன் மூலம் கிலா*பத்தை பாதுகாப்பதற்குரிய கட்டளையாகவும் இருக்கிறது,

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக முஸ்லிமில் இடம்பெகற்றுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
"'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு (முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்,

ஆகவே இமாமுக்கு கட்டுப்படவேண்டும் என்ற கட்டளை அவரை(அவரின் அதிகாரத்தை) பாதுகாக்கவேண்டும் என்பதற்குரிய கட்டளையாகும். மேலும் அவரது அதிகாரத்தில் சர்ச்சை செய்பவர்களுடன் போரிடவேண்டும் என்ற கட்டளை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு கலீ*பா மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்குரிய கட்டளையாகும்,
இஜ்மாஅஸ்ஸஹாபாவில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள்:

இறைத்தூதர்(ஸல்) மரணத்திற்குப் பின்னர் அவர்களின் இடத்திற்கு ஒருவரை (ள்ன்ஸ்ரீஸ்ரீங்ள்ள்ர்ழ்) நியமிக்கவேண்டும் என்பதில் அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள், இதனடிப்படையில் அவர்கள்(ஸல்) இடத்தில் அபூபக்கரை(ரலி) தோர்வு செய்தாôகள், அவருடைய மரணத்திற்குப் பின்பு உமரையும்(ரலி) அவரது மரணத்திற்குப் பின்பு உஸ்மானையும்(ரலி) தேர்வுசெய்தார்கள், இறந்தவர்களை தாமதமின்றி அடக்கம் செய்வது *பர்லு என்றபோதும். இறைத்தூதரின்(ஸல்) த*பனுக்கு தயாரிப்பு செய்யவேண்டியவர்கள் அந்தப்பணி முழுமையாக முடிவடைவதற்குள் வேறுபணியில் ஈடுபடுவது ஹராம் என்றபோதும். கலீ*பாவை தேர்வுசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு அவர்களின்(ஸல்) உடலை த*பன் செய்வதை தாமதப்படுத்தியபோது ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது கட்டாயம் என்ற ஸஹாபாக்களின் இஜ்மா (ஒருமித்த முடிவு) அழுத்தமான முறையில் வெளிப்பட்டது, இறைத்தூதரின்(ஸல்) த*பனுக்கு தயாரிப்பு செய்வதற்கு ஸஹாபாக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்ற நிலையில் அவர்களில் முக்கியமானவர்கள் த*பனுக்கு ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக ஒரு கலீ*பாவை நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மற்ற ஸஹாபாக்கள் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவிக்கும் வகையில் அமைதியாக இருந்தாôகள்õ இந்த செயலை தடுப்பதற்கும் அல்லது இறைத்தூதரின்(ஸல்) த*பனை துரிதமாக நடத்துவதற்கும் ஆற்றல் இருந்தும் இரண்டு இரவுகள் அதை தாமதப்படுத்தியதற்கு அவர்கள் அனுமதித்தார்கள், ஆகவே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதைவிட ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது முக்கியமானது என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவின் மூலம் நிரூபிக்கப்ட்டிருக்கிறது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதைவிட ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது மிகக்பெரிய கடமையாக இல்லாவிடில் இந்த செயல் சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகியிருக்கும். மேலும் ஸஹாபாக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கலீ*பாவை நியமனம் செய்வது கட்டாயகடமை என்ற விஷயத்தில் கருத்து உடண்பாடு கொண்டிருந்தார்கள், கலீ*பா பதவிக்கு யாரை நியமிக்கவேண்டும் என்பதில் அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்த போதிலும் கலீ*பாவை நியமிக்கவேண்டும் என்ற கடமையில் அவர்கள் ஒருபோதும் கருத்துவேற்றுமை கொண்டது கிடையாது, இறைத்தூதர்(ஸல்) மரணமடைந்தபோதும் நேர்வழி காட்டப்பட்ட கலீ*பாக்கள் மரணமடைந்தபோதும் ஸஹாபாக்கள் ஒருபோதும் கலீ*பாவை நியமனம் செய்யும் கடமையில் கருத்து வேற்றுமை கொண்டதில்லை, ஆகவே ஒரு கலீ*பாவை முஸ்லிம்கள் கட்டாயம் நியமனம் செய்யவேண்டும் என்பதற்கு இஜமாஅஸ்ஸஹாபாவில் உறுதியான முறையிலும் தெளிவான முறையிலும் ஆதாரம் இருக்கிறது.

வாழ்வியலின் அனைத்து விவகாரங்களிலும் ஷரியத்தை நிலைநாட்டுவதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறை வாழ்வில் நிலைநிறுத்தவேண்டும், இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய கட்டாயகடமை என்பது திட்டவட்டமான ஆதாரங்கள் மூலம் உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது, அதிகாரம் பெற்ற ஒரு ஆட்சியாளர் இல்லாவிடில் இதை நிறைவேற்றமுடியாது,

ஷரியாவின் விதிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது.

إن ما لا يتم الواجب إلاّ به فهو واجب "'ஒரு வாஜிபை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் அனைத்தும் நிச்சயமாக வாஜிபேஃஃ ஷரியாவின் இந்த விதிமுறையின்படி ஒரு கலீ*பாவை நியமனம் செய்யவேண்டியது கட்டாய கடமையாகும்,

ஆகவே கிலா*பத்தை நிலைநாட்டவேண்டும் என்பதும் முஸ்லிம்களிடம் அதிகாரம் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயம் (*பர்லு) என்பதற்கு இவை தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன. மேலும் ஆட்சிப்பொறுப்பை வகிக்கக்கூடிய கலீ*பா ஒருவரை நியமனம் செய்வது அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கே தவிர ஆட்சிஅதிகாரத்தை அடைந்துகொள்வதற்கு அல்ல,

அவ்*ப் இப்ன் மாலிக்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلّون عليهم، وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم. قيل يا رسول الله أفلا ننابذهم بالسيف، فقال: لا، ما أقاموا فيكم الصلاة، وإذا رأيتم من ولاتكم شيئاً تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يداً من طاعة
"'தீனின் சிறந்த தலைவர்கள்(இமாம்கள்) உங்களை நேசிப்பார்கள் நீங்களும் அவர்களை நேசிப்பீர்கள். அவர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள் நீங்களும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீர்கள், தீனின் மோசமான தலைவர்கள் உங்களை வெறுப்பார்கள் நீங்களும் அவர்களை வெறுப்பீர்கள். அவர்கள் உங்களை சபிப்பார்கள் நீங்களும் அவர்களை சபிப்பீர்கள், ஃஃஅல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களை அகற்றுவதற்கு நாங்கள் வாளேந்த வேண்டாமா?ஃஃ என்று (ஸஹாபாக்கள்) வினவினார்கள், இல்லை. உங்கள் மத்தியில் அவர்கள் தொழுகையை (இஸ்லாத்தை) நிலைநிறுத்தும்வரை (அவ்வாறு செய்யவேண்டாம்) நீங்கள் வெறுக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் உங்கள் ஆட்சியாளரிடமிருந்து நீங்கள் கண்டால் அவர்களின் செயலை வெறுத்துவிடுங்கள் ஆனால் அவர்களுக்கு கட்டுப்படுவதிலிருந்து உங்கள் கைகளை நீங்கள் விலக்கிக் கொள்ளவேண்டாம்,ஃஃ

இந்த ஹதீஸ் நல்ல தலைவர்கள் பற்றியும் மோசமான தலைவர்கள் பற்றியும் அறிவுறுத்துகிறது. மேலும் தொழுகையை அதாவது இஸ்லாத்தை அவர் நிலைநிறுத்தும்வரை அவரின் அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவது ஹராம் என்பதையும் தெளிவாக குறிப்பிடுகிறது, ஆகவே இஸ்லாத்தின் திட்டவட்டமான உரைகளின் அடிப்படையில் அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்தி இஸ்லாத்தின் செய்தியை த*வா மூலம் உலகிற்கு எடுத்துச்செல்லக்கூடிய கலீ*பாவை நியமனம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது, மேலும் இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத்தை நிர்மாணிப்பதையும் முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாப்பதையும் அல்லாஹ்(சுபு) *பர்லாக ஆக்கியிருப்பதால் இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய கட்டாய கடமையாக இருக்கிறது, எனினும் இது ஒரு கூட்டுக்கடமையாகும் (*பர்லுல் கி*பாயா) ஆகவே உம்மத்திலுள்ள ஒரு கூட்டத்தினர் இந்த கடமையை நிறைவேற்றிவிடும் பட்சத்தில் *பர்ல் நிறைவேறிவிடும், இதன்பின்னர் உம்மத்திலுள்ள மற்ற முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்பு தானாகவே இறங்கிவிடும், மாறாக உம்மத்திலுள்ள ஒரு கூட்டத்தினர் இதை நிறைவேற்றுவதற்கு பணியாற்றியும் *பர்லை நிறைவேற்ற முடியவில்லை என்றால் பிறகு அனைத்து முஸ்லிம்கள் மீதும் இந்த பொறுப்பு ஏற்பட்டுவிடும் மேலும் ஒரு கலீ*பாவை நியமனம் செய்யும்வரை ஒவ்வொரு முஸ்லிம் மீதும் இந்த *பர்ல் இருந்து கொண்டிருக்கும் அதாவது இந்த *பர்லை நிறைவேற்றாத பாவத்தை அனைத்து முஸ்லிம்களும் சுமக்கவேண்டியிருக்கும்,

முஸ்லிம்களுக்கு உரிய கலீ*பா ஒருவரை நிலைநிறுத்தும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வது மிக்பெரிய பாவமாகும் ஏனெனில் அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்டுத்துவதும் முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துவதும் எதைச்சார்ந்து இருக்கிறதோ அத்தகைய முக்கியமான *பர்லை நிறைவேற்றுவதிலிருந்து இது விலகி இருக்கும் செயலாகும், ஆகவே முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய ஒரு கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியிலிருந்து விலகியிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளும் பாவமான செயலாகும், கலீ*பா இன்றி இருப்பதற்கு முஸ்லிம்கள் உடண்பட்டு இருந்தாôகள் என்றால் பிறகு இந்த பாவம் ஒட்டுமொத்தமாக முழுஉலகத்திற்கும் பரவிவிடும், மற்றவர்கள் இதை செய்வதற்கு முன்வராதபோதும் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் கலீ*பாவை நிலைநிறுத்துவதற்கு கடும்முயற்சி மேற்கொள்வார்களேயானால் அவர்களின் தோள்களிலிருந்து *பர்லை நிறைவேற்றாத பாவம் நீங்கிவிடும் அதேவேளையில் கலீ*பா ஒருவர் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும்வரை இந்த *பர்லை நிறைவேற்றாத பாவம் மற்றவர்கள் மீது நிலைகொண்டிருக்கும்õ *பர்லை நிறைவேற்றுவதிலிருந்து விலகியிருப்பவரைப் பொறுத்தவரை முந்தைய கலீ*பா சென்றதற்குப் பின்னர் மூன்று நாட்கள் (கலீ*பா இல்லாதநிலையில்) கடந்துவிட்டால் பிறகு கலீ*பா நியமனம் செய்யப்படும்வரை அந்த பாவம் அவர்மீது நிலைகொண்டிருக்கும் ஏனெனில் அல்லாஹ்(சுபு) அவரிடம் ஒப்படைத்த *பர்லை அவர் நிறைவேற்றவுமில்லை நிறைவேற்றும் பணியில் ஈடுபடவுமில்லை, ஆகவே அவர் இம்மையிலும் மறுமையிலும் இழிவிற்கும் அல்லாஹ்வின் கடும் தண்டனைக்கும் உரியவராவார், கலீ*பாவை நிலைநிறுத்தும் கடமையிலிருந்தோ அல்லது அதை நிறைவேற்றும் செயல்பாடுகளிலிருந்தோ எவரேனும் விலகிக்கொண்டதால் அவர் பாவம் செய்தவர் ஆவார், ஒரு முஸ்லிம் மீது அல்லாஹ்(சுபு) ஏவியுள்ள *பர்லை நிறைவேற்றாமல் அதை அவர் புறக்கணிக்கும் பட்சத்தில் குறிப்பாக மற்ற *பர்ல்களை நிறைவேற்றுவதற்கும் அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கும் இஸ்லாத்தை உயர்நிலைக்கு கொண்டுசெல்வதற்கும் முஸ்லிம்கள் மத்தியிலும் உலகிலுள்ள மற்ற மனிதர்கள் மத்தியிலும் அல்லாஹ்(சுபு) வின் கலிமாவை மேலோங்கச்செய்வதற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் உள்ள *பர்லை நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் அல்லாஹ்(சுபு) வின் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்,

மக்களிடமிருந்து விலகி தனித்திருப்பதைப் பற்றி கூறும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை தனிநபர் மேற்கொள்ளும் வணக்கவழிபாடுகளில் ஒருவர் பின்பற்றுவதற்காக கூறப்பட்டவையாகும், கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியிலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது இந்த *பர்லை நிறைவேற்றும் கடமையிலிருந்து விலகிக்கொள்பவரின் பாவம் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதற்கோ இவைகளை ஆதாரமாக கொள்ளமுடியாது, ஒருவர் இந்த ஹதீஸ்களை முறையாக ஆய்வு செய்வாரானால் இவை வணக்கவழிபாடுகளில் பின்பற்றவேண்டிய விஷயங்களுடன் தொடர்புடையவை என்றும் இவை முஸ்லிம்களுக்கு மத்தியில் கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியிலிருந்து விலகிக்கொள்வதற்கு உரிய அனுமதி இல்லை என்றும் விளங்கிக்கொள்வார், உதாரணமாக.

ஹுதை*பா இப்ன் எமான் (ரலி) அறிவிப்பிலிருந்து அபூஇத்ரிஸ் அல்கூலானி அறிவித்ததாக பஸ்ர் இப்ன் உபைத்துல்லாஹ் அல்ஹல்ரமி அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரியில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

كان الناس يسألون رسول الله عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني، فقلت يا رسول الله إنّا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر ؟ قال نعم، قلت وهل بعد ذلك الشر من خير ؟ قال نعم، وفيه دخن، قلت وما دخنه ؟ قال قوم يهدون بغير هديي تعرف منهم وتنكر، قلت فهل بعد ذلك الخير من شر ؟ قال نعم، دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها، قلت يا رسول الله صفهم لنا، قال هم من جلدتنا، ويتكلمون بألسنتنا، قلت فما تأمرني إن أدركني ذلك ؟ قال تلزم جماعة المسلمين وإمامهم، قلت فإن لم يكن لهم جماعة ولا إمام، قال فاعتزل تلك الفرق كلها، ولو أن تعض بأصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك
"'அல்லாஹ்வின்தூதரிடத்தில்(ஸல்) மக்கள் நன்மையைப் பற்றி வினவிக் கொண்டிருந்தார்கள். தீமை என்னை பீடித்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் அது பற்றி நான் அவர்களிடம் வினவினேன், ஆகவே. ஃஃஅல்லாஹ்வின் தூதரே(ஸல்) நாங்கள் ஜாஹிலியத்தில் இருந்துவந்தோம் பின்னர் அல்லாஹ் (இஸ்லாம் என்ற) நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். ஆகவே இந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா?ஃஃ என்று நான் கேட்டேன். ஆம்õ என்று அவர்கள்(ஸல்) பதிலுரைத்தார்கள், ஃஃஅந்த தீமைக்குப் பிறகு ஏதேனும் நன்மை ஏற்படுமா?ஃஃ என்று நான் வினவினேன். ஆம். அதில் புகைமூட்டம் இருக்கும்õ என்று அவர்கள்(ஸல்) கூறினார்கள், ஃஃபுகைமூட்டம் என்றால் என்ன?ஃஃ என்று நான் வினவினேன், ஒருகூட்டத்தினர் நேர்வழியின்றி (மக்களுக்கு) நேர்வழி காட்டுவார்கள் அவர்களில் சிலரை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு மறுப்பீர்கள் என்று கூறினார்கள், ஃஃஅந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா?ஃஃ என்று நான் வினவினேன். ஆம். ஒருகூட்டத்தினர் நரகத்தின் வாயிலில் நின்றவாறு (மக்களை) அழைப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டவர்கள் அதில்(நரகத்தில்) எறியப்படுவார்கள்õஃஃ என்று கூறினார்கள், ஃஃஅல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களைப் பற்றி எங்களுக்கு விவரியுங்கள்ஃஃ என்று நான் கூறினேன், அவர்கள் நமது தோலில்(இனத்தில்) உள்ளவர்களாகவும் நமது மொழியை பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறினார்கள், ஃஃஅது என்னை பீடித்துக் கொள்ளும் பட்சத்தில் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?ஃஃ என்று நான் கேட்டேன், முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களின் இமாமையும் பற்றிப் பிடிப்பீராக என்று கூறினார்கள், ஃஃஅவர்கள் மத்தியில் ஜமாஅத்தும் இமாமும் இல்லை என்றால்?ஃஃ என்று நான் வினவினேன், மரத்தின் கிளையை உமது பற்களால் கடித்தவாறு நீர் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உமக்கு மரணம் ஏற்பட்டாலும் இந்த பிரிவினர்கள் அனைவரையும் விட்டு விலகியிருப்பீராகõ என்று கூறினார்கள்,ஃஃ

முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களின் இமாமையும் பின்பற்றவேண்டும் என்றும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டும் விலகவேண்டும் என்றும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டிருப்பதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது, முஸ்லிம்கள் ஜமாஅத்தையும் இமாமையும் பெற்றிராதபோது என்ன செய்வது என்பது பற்றியும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களைப் பொறுத்து என்ன செய்வது என்பது பற்றியும் கேள்விகேட்ப்பவர் வினவியபோது இத்தகைய கூட்டத்தினரை விட்டு விலகவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கட்டளை இட்டுள்ளார்களே ஒழிய முஸ்லிம்களைவிட்டு பிரிந்துவிடவேண்டும் என்றோ அல்லது இமாமத்தை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்றோ கட்டளையிடவில்லைõ ஆகவே வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகிக்கொள்ளவேண்டும் என்ற இறைத்துதரின்(ஸல்) கட்டளை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது, மரத்தின் கிளையை தமது பற்களால் கடித்தவாறு தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமக்கு மரணம் நேர்ந்தாலும் வழிகெடுக்கும் கூட்டத்தினருடன் இணையாமல் விலகியிருக்கவேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அழுத்தமாக கூறியுள்ளார்கள், நரகத்தின் வாயிலில் நின்றுகொண்டிருக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்தவாறு ஒருவர் தமது தீனை பின்பற்றவேண்டும் என்பது இதன் பொருளாகும், இந்த ஹதீஸ் அறிவிப்பில் கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியை விட்டு விலகியிருப்பதற்கு அனுமதியோ அல்லது விதிவிலக்கோ எவருக்கும் அளிக்கப்படவில்லை மாறாக. தீனை பின்பற்றவேண்டும் என்ற கட்டளைக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டு விலகியிருக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது, அந்நிலையில் கூட கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியில் அவர் ஈடுபடாவிடில் அவர்மீது பாவம் நிலைகொண்டிருக்கும், ஆகவே அவர் மரத்தின் கிளையை தமது பற்களால் கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மரணம் நேர்ந்தாலும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்து தன்னுடைய தீனை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய முஸ்லிம்களின் ஜமாஅத்திலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது தீனின் சட்டங்களை நிலைநாட்டும் பணியை மேற்கொள்ளாமல் புறக்கணிப்பதற்கோ அல்லது முஸ்லிம்களுக்கு இமாமை ஏற்படுத்தும் கடமையை விட்டு ஒதுங்கியிருப்பதற்கோ அவருக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது,

மற்றொரு உதாரணம்:

அபூஸயீது அல்குத்ரி(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن
"'ஆடு ஒரு முஸ்லிமின் சிறந்த சொத்ததாக ஆகும்நிலை ஏற்படும்போது அவர் அதனுடன் மலையின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். அவருடைய தீனை அழிவிலிருந்து காக்கும் விதத்தில் (அங்கு) மழை பெய்கிறது,ஃஃ

ஒருவர் முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டு விலகியிருக்கவேண்டும் என்பதையோ அல்லது இறைசட்டங்களை செயல்படுத்துவதிலிருந்து நீங்கியிருக்கவேண்டும் என்பதையோ அல்லது பூமியில் கிலா*பத் இல்லாதபோது முஸ்லிம்களுக்கு ஒரு கலீ*பாவை நிலைநிறுத்தும் பணி மேற்கொள்வதை புறக்கணிக்கவேண்டும் என்பதையோ இந்த ஹதீஸ் குறிப்பிடவில்லை மாறாக. சிந்தனைத்திறன் இல்லாத உணர்ச்சிப்பூர்வமான பாமர முஸ்லிம் ஒருவருக்கு எது சிறந்த சொத்தாக இருக்கும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது என்பதையும் முஸ்லிம்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் ஒருவர் தன்னை தூரமாக்கிக்கொள்வதற்கு இது ஆர்வமூட்டவில்லை என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்,

இதனடிப்படையில் இந்த பூமியின் மேற்பரப்பில் வாழும் எந்த முஸ்லிமிற்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ள தீனை நிலைநாட்டும் கடமையை விட்டு விலகிக்கொள்வதற்கு அனுமதியில்லை, அதாவது பூமியில் முஸ்லிம்களுக்கு கலீ*பா ஒருவர் இல்லாதபோது. அல்லாஹ்(சுபு) வின் ஹுதூதை (வரம்புகளை) நிலைநிறுத்தும் இமாம் ஒருவர் இல்லாதபோது. அல்லாஹ்(சுபு) புனிதமாக ஆக்கியவைகளை பாதுகாக்கும் அமீர் ஒருவர் இல்லாதபோது. இஸ்லாமிய தீனின் சட்டதிட்டங்களை நிலைநாட்டி முஸ்லிம்களை லா இலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரஸþலுல்லாஹ் என்ற கலிமாவின் கீழ் ஒன்றிணைக்கும் தலைவர் ஒருவர் இல்லாதபோது. அத்தகைய ஒருவரை கொண்டுவரும் கடமையிலிருந்து விலகிக்கொள்வதற்கு எந்த முஸ்லிமிற்கும் நிச்சயமாக அனுமதி கிடையாது, இந்த மாபெரும் பணியை நிறைவேற்றி முடிக்கும்வரை அதை கைவிட்டுவிடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி என்பது அறவே கிடையாது.