Wednesday, March 18, 2009

தங்கமாகவும், வெள்ளியாகவும் பணம் இருப்பதன் அவசியம்


இறை து}தர் காலத்தில் செலாவணியிலிருந்த நாணயமானது தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அளவிலேயே இருந்தது. அக்கால முஸ்லீம்கள் பைசாந்திய தினாரையும், பாரசீக திர்ஹத்தையும் தங்கள் நாணயமாகக் கொண்டிருந்தனர். இவ்வழக்கம் அப்துல் மாலிக் பின் மார்வன் ஆட்சிக்கு வரும் வரை மட்டுமே தொடர்ந்தது. இவர் புதிய நாணயத்தை, இஸ்லாம் கூறும் பிரத்தியேகமான வகைகளினாலும், வடிவங்களினாலும் வடிவமைத்தார். ஷரிஆ கூறும் தினார் மற்றும் திர்ஹத்தின் அளவை நிகராகக் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியினால் இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது. தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை அளவிலும் ஷரிஆ கூறும் தினார் மற்றும் திர்ஹத்தின் மதிப்பை நிகராகக் கொண்டும் இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது.

இஸ்லாம் தெளிவுபடுத்தும் இறை சட்டமானது தங்கம்; மற்றும் வெள்ளியின் அடிப்படையிலேயே பெறுமதியை வரையறுத்தது. ஓரு பொருளின் மதிப்பையோ அல்லது உழைப்பின் கூலியையோ தங்கம்; மற்றும் வெள்ளி நாணயங்களின் அளவிலேயே தீர்மானித்தது. தங்கம், வெள்ளியை பதுக்கிவைத்தலைத் தடுத்த இஸ்லாம், அவற்றின் பயன்பாட்டை பற்றிய மாற்ற முடியாத சட்டங்களை இயற்றியது. ஸகாத் எனப்படும் தானம், தங்கம், வெள்ளி நாணயத்திலேயே கூறப்பட்;டிருந்தது. தானத்திற்கான நிஸாப் எனப்படும் மிகக் குறைந்த அளவு, தினார் மற்றும் திர்ஹத்தின் அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தியாஹ் எனப்படும் தண்டனைக் கட்டணம் ஓராயிரம் தினாருக்கு சமமான தங்கம் எனவும், பன்னிரெண்டாயிரம் திர்ஹத்திற்கு நிகரான வெள்ளி எனவும் குறிக்கப்பட்டிருந்தது. களவிற்கான தண்டனையான கைகள் வெட்டப்படுவதற்கு களவாடப்பட்ட பொருளின் குறைந்த அளவு 1.4 தினார் தங்கம் எனவும், மூன்று திர்ஹம் வெள்ளி எனவும் இஸ்லாம் வரையறை செய்தது.

இறைத்து}தரின் ஆட்சிக்காலத்தில் நாணயப்பரிமாற்றமும், பொருட்களின் மதிப்பும், உழைப்பின் ஊதியமும் தங்கம், வெள்ளியைக் கொண்டே அமையப்பெற்றிருந்தது. ஆகவே இஸ்லாம் தங்கம், வெள்ளி இவ்விரண்டை மட்டுமே நாணயமாகக் கருதுகிறது. எனவே இஸ்லாமிய அரசு தங்கம், வெள்ளியையே தனது நாணயமாகக் கொள்ள வேண்டும். இறைத்து}தரின் காலத்திலும், பின்னர்; கலீஃபாக்களின் ஆட்சி காலத்திலும் இருந்தது போன்றே, எந்த ஒரு இஸ்லாமிய அரசும் தினார் மற்றும் திர்ஹத்தை நேர்த்தியான வடிவில் அச்சிட வேண்டும். ஓரு தினாரின் எடை ஷாPஆவின் தினாருக்கு நிகராகவும் அல்லது 4.25 கிராம் தினாரானது ஓரு மிஸ்கல் எடை நிகராகவும் இருத்தல் வேண்டும். ஒரு வெள்ளி திர்ஹத்தின் எடை ஒரு ரியத்தின் திர்ஹத்திற்கு நிகராகவோ அல்லது 10 திர்ஹங்களானது 7 மிஸ்கல் எடைக்கு நிகராக (அதாவது ஒரு திர்ஹத்தின் எடை 2.975 கிராம்) இருத்தல் வேண்டும். இதைச் செயல் படுத்துவதன் மூலமே நாணயம் சார்ந்த பொருளாதார சிக்கல்களையும், பண வீக்க விகித பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். அயல் நாட்டு நாணயமாற்று வேற்றுமை விகிதத்தை நிலைப்படுத்தவும், பன்னாடு சார்ந்த வணிகத்தை மேம்பாடு அடையச் செய்யவும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பெரிதும் துணை புரியும். தங்கம்; மற்றும் வெள்ளியின் படியளவைக்கொண்டே அமெரிக்க டாலரின் ஒப்பீட்டிற்குரிய கட்டண அளவைக்குறைத்து அதன் தாக்கத்தை பன்னாட்டு வணிகத்தில் குறைக்க அல்லது அழிக்க முடியும்.

No comments:

Post a Comment