Thursday, June 5, 2008

அதிமுக்கிய பிரச்சனை 3


கிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளியதைக் கொண்டு ஆட்சி புரிவது ஒரு முக்கிய விவகாரமாகும்.முஸ்லிம்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் சோதனைகளையும் அனுபவிக்கின்றனர். இந்த நிலையை முற்றிலும் மாற்றும் நிவாரணி, முஸ்லிம்கள் தங்களை எதிர்நோக்கும் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கேற்ப வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவதில் அடங்கியுள்ளது. இந்த உணர்ச்சி முஸ்லிம்களின் உடல் பொருள் ஆவியில் ஊறாத வரையில் முஸ்லிம்கள் இந்த இழிநிலையினின்றும் எழ முடியாது. மற்றைய சமுதாயங்களுக்கு மேலான சமுதாயமாக மிளர எம்மால் முடியாது போய்விடும். ஆகையால் முஸ்லிம்கள் தங்களது முக்கிய விவகாரங்கள் எவை என உணர்ந்து அவை பற்றிய கண்ணோட்டத்தை தங்கள் மனதில் ஆழமாக பதிக்கவேண்டும்.
இன்றைய முஸ்லிம்களின் நிலைமை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக உணர்ந்த விடயமாகும். அதை விளக்கவோ விவரிக்கவோ அவசியமே இல்லை. அவர்களுடைய நாடுகள் குஃப்;ர் அமைப்புகளைக் கொண்டு ஆளப்படுகின்றன. எனவே அவை குஃப்ரின் அகமாக மாறிவிட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் உலகையும் எடுத்துப்பார்த்தால் அவை குறைந்தது நான்கு விதமான அரசமைப்புகளாக பிரிந்திருக்கின்றன. குடியரசுகளாகவும், இமாராக்களாகவும், சுல்தான் நாடுகளாகவும், அரபு ஷேக் அரசுகளாகவும் அவை இருக்கின்றன. காஃபிர் அரசுகளையும் சக்திகளையும் எதிர்நோக்கமுடியாத பலவீனமான நிலையே அவர்கள் நிலை. எனவே குஃப்ரின் அகமாக மாறிவிட்ட அனைத்து இஸ்லாமிய நிலங்களையும் மீண்டும் இஸ்லாமிய ப10மியாக மாற்றி அவை அனைத்தையும் ஒன்றிணைக்கவேண்டும். அவற்றை ஒரு கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவரவேண்டும். அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கும் முதலானது இதுவே ஆகும். எனவே இதனை வாழ்வா?சாவா? விவகாரமாக கருதுவது மிக முக்கிய கடமையாகிறது.
முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதியை தாருல்-இஸ்லாமாக மாற்றி அனைத்து இஸ்லாமிய நிலப்பகுதிகளையும் ஒன்றிணைப்பதே ஒரு முஸ்லிமின் மிக முக்கிய குறிக்கோளாகும். இந்த குறிக்கோளை அடைவதற்கான வழி கிலாஃபா ஆட்சி முறையை நிலைநாட்டுவதேயாகும். எனவே இன்றைய சூழலில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற ஒரு முக்கியப் பிரச்சனை, கிலாஃபா ஆட்சியை நிலைநாட்டுவதேயாகும். அதன் மூலமே இஸ்லாமிய நிலங்களை தாருல் இஸ்லாமாக மாற்றி ஒன்றிணைக்க முடியும். முஸ்லிம்கட்காக பேரளவில் ஒரு கலீஃபாவை நியமித்தால் போதாது. மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய ஆட்சி முறையில் கலீஃபாவை நியமிப்பதே அவசியமாகும்.
இப்ன் உமர் (ரழி), ரசூல்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,
“கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.”
இஸ்லாமிய நிலங்களை ஒன்றிணைத்து தாருல் இஸ்லாமாக மாற்றுவது மட்டுமன்றி சமுதாயத்திலுள்ள குஃப்ர் முறையையும் ஒழித்துக்கட்டுவது கிலாஃபா ஆட்சியின் முக்கிய நோக்கமாகும்.
எனவே வெளிப்படையான குஃப்ரை அழிப்பதும் ஒரு முக்கிய விவகாரமாக மாறுகிறது. எனவே கிலாஃபாவை நிலைநாட்டுவதும் ஒரு முக்கிய விவகாரமாகிறது. நபிகளார்(ஸல்) ஒரு முஸ்லிமின் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு கூறுகிறார்கள். எனினும் அதற்குரிய வரையறையாக “வெளிப்படையான குஃப்ரை காணும் வரை". என்ற விடயத்தை குறிப்பிடுகிறார்கள் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே கிலாஃபாவை நிலைநாட்டுவதை நமது வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதி நடைவடிக்கை எடுப்பது முக்கிய கடமையாகிறது.
தமது நலன்களின் இருப்பும், பாதுகாப்பும் குஃபார்களினதும் நயவஞ்சகர்களினதும் கைகளில் வந்த காலம் தொட்டே முஸ்லிம்கள் அந்நிலையிலிருந்து விடுபட முனைந்தனர். ஆனால் அதனை அதிமுக்கிய பிரச்சனையாக வாழ்வா?சாவா? விவகாரமாக கருதத் தவறி விட்டனர். அதனால் முக்கியப் பிரச்சனை ஒன்றிக்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய இறுக்கமான போராட்டத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. அத்தகைய போராட்டத்திற்கே உரித்தான கொடுமையையும், துயரங்களையும் தாங்கும் மன உறுதி அவர்களிடம் இருக்கவில்லை. இதன் விளைவாக அவர்கள் மேற்கொண்ட சிறியளவான எதிர்ப்புக்களால் நிலையில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கிலாபாவை நிலைநாட்டுவது ஒரு முக்கியப்பிரச்சனை என்பதை அறிய அதிகம் ஆராயவேண்டியதில்லை. நாம் இன்றைய சூழலை கவனித்தோமேயானால் அதன் தேவை எம்மை ஒரு நிமிடமேனும் தாமதிக்க வைக்காது. இஸ்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை குஃப்பாரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவானது. இதனால் தான் அத்தகைய இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபாவை) மீண்டும் ஏற்படுத்த முனையும் முஸ்லிம்களை சொல்லொண்ணா கொடுமைகட்கும், துயங்கட்கும் அவர்கள் ஆட்படுத்தி வருகின்றனர்.
மேலும் முஸ்லிம் உலகை ஆட்சி செய்து வருவோர் தமது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் பாவித்து அல்லாஹ்(சுபு) அருளியதைக் கொண்டு ஆட்சி புரியும் ஒரு ஆட்சியமைப்பை உருவாக்க முயலும் விசுவாசிகட்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளுக்கு எதிராகவும் செயற்படுவதிலிருந்து அந்தப்பணியின் முக்கியத்துவத்தையும் அதன் வாழ்வா?சாவா? அளவுகோலையும் நாம் அறியலாம்.
எனினும் இந்தப் போராட்டத்தின் யதார்த்தத்தினை அறியாத முஸ்லிம்கள் தங்கட்கு இயலுமான இலகுவான வழிகளில் சமூக மாற்றமொன்றிற்காக முயன்று வருகின்றனர். அல்லது முயலத்துவங்கினர். ஆனால் இப்போராட்டத்தை ஒரு முக்கிய விவகாரமாக கருதி வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எந்த முயற்சியாலும் எத்தகைய பலனையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு குஃப்ர் ஆட்சியை அழிப்பதும் இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் கிலாபாவை நிலைநாட்டுவதும் மாத்திரம்தான் ஒரேவழி என்பதை நாம் புரியத்தவறுவோமானால் நாம் மேற்கொள்ளும் பாரிய வேலைத்திட்டங்கள் கூட எத்தகைய பயன்களையும் பெற்றுத்தரமாட்டாது என்பது உறுதியாகும். எனவே முஸ்லிம்கள் தனிமனிதனாக இருந்தாலோ அல்லது குழுவாக இருந்தாலோ, இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையேயான இப்போராட்டத்தில் வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.
இறைத்து}தர்(ஸல்) அவர்களின் வழிமுறையின்படி பார்த்தோமேயானால் எத்தகைய விவகாரங்கட்கு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், அதிமுக்கிய பிரச்சனைகட்கு வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறியலாம்.அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாமிய செய்தியை தஃவாவை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஒரு அறிவார்ந்த போராட்டத்தை அதிமுக்கிய பிரச்சனையாக வாழ்வா?சாவா? விவகாரமாக கருதி நபிகளார்(ஸல்) போராடியதை நாம் அறிகிறோம்.நபிகளாரின் தமையனாரும், பொறுப்பாளருமாகிய அபுதாலிப் அவர்கள் குரேஷியர்களின் எதிர்பார்ப்பை நபிகளாரிடம் எடுத்துரைக்கையில்
'விவகாரம் முற்றிவிட்டது. இன்னும் எதுவரை நாம் தனியாக குரைஷியர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க முடியும்" என்றும் 'அன்பு மகனே, நான் தாங்க முடியாத அளவிற்கு சுமையை என்மீது சுமத்திவிடாதே!" என்றும் வினவியபொழுது நபிகளார் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “இறைவன் மீதாணையாக! இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும், இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட, இறைவன் இதனை மேலோங்கச்செய்யும் வரையில் அல்லது இதிலேயே நான் மரணிக்கும் வரையில் நான் இதனை கைவிட மாட்டேன்.”
மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியபின்பு ஜிஹாதின் மூலம் இஸ்லாத்தை எடுத்துச்சென்ற நபிகளார், அதனை ஒரு அதி முக்கிய பிரச்சனையாக கருதி வாழ்வா?சாவா? என்ற அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தார்கள்.
ஒரு வரலாற்றுக்குறிப்பில் கீழ்கண்ட நிகழ்ச்சி காணப்படுகிறது. அல்-ஹ_தைபியாவின் நிகழ்வுக்குப் பின்னர் உம்ராவிற்காக புறப்பட்ட நபிகளார், மக்காவிற்கு அருகில் உஸ்பான் என்ற இடத்தில் இருந்தார்கள். அப்பொழுது பனீ-கஆப் சமூகத்தைச் சார்ந்த ஒருவரிடம் மக்காவின் நிலைமை பற்றி வினவினார்கள். அதற்கு பதிலளித்த அவர் 'தங்கள் வருகையை அறிந்த சிலர் சிறுத்தைத் தோலாலான கவசம் அணிந்து தங்களை மக்காவிற்குள் நுழையவிடாமல் தடுக்க ‘துதுவா’ என்ற இடத்தில் முகாமிட்டுள்ளனர். காலித்-இப்ன்-அல்வலித் ஏற்கனவே தனது படையை குரா அல்காமிமிற்கு அனுப்பிவிட்டார்." எனக் கூறினார். அதைக் கேட்ட நபிகளார் 'குரைஷியர்களுக்கு துன்பமுண்டாவதாக. போர் வெறி அவர்களை விழுங்கி விட்டது. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் எனது பாதையில் பணிபுரியாமல் தடுக்க அவர்கட்கு என்ன வந்தது. அவர்கள் என்னைக் கொல்லட்டும். அல்லது அல்லாஹ்(சுபு) நாடி; அவர்கள் மீதான வெற்றியை எனக்கு அருளினால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் பிரவேசிப்பார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாதுவிட்டால் அவர்களிடம் படை பலம் இருக்கையில் அவர்கள் போரிடட்டும். எனவே குரைஷிகள் என்ன யோசிக்கிறார்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, வெற்றி வரும் வரையில் அல்லது எனது ஸலிபா (கழுத்து) துண்டாடப்படும் வரையில் அல்லாஹ் என் மீது ஏவிய இப்பணிக்காக போராடுவதைவிட்டும் நான் ஒருபோதும் விலகமாட்டேன்." எனக் கூறினார்கள்.
மேற்கூறிய இரு நிகழ்சிகளிலும் அறிவார்ந்த போராட்டமாக தஃவா பணியை மேற்கொண்ட போதும் சரி, அல்லது ஜிஹாத் என்ற இராணுவப்போராட்டமாக அப்பணியை தொடர்ந்த போதும் சரி, நபிகளார் அவற்றை அதி முக்கியப் பிரச்சனையாக கருதி அதற்கு வாழ்வா? சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார்கள். அதனாலேயே அவர்கள் “இறைவன் மீதாணையாக! இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும், இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட, இறைவன் இதனை மேலோங்கச்செய்யும் வரையில் அல்லது இதிலேயே நான் மரணிக்கும் வரையில் நான் இதனை கைவிட மாட்டேன்.” என்றும்,“அல்லாஹ்வின் மீது ஆணையாக, வெற்றி வரும் வரையில் அல்லது எனது ஸலிபா (கழுத்து) துண்டாடப்படும் வரையில் அல்லாஹ் என் மீது ஏவிய இப்பணிக்காக போராடுவதைவிட்டும் நான் ஒருபோதும் விலகமாட்டேன்." என்றும் கூறினார்கள்.

அத்தகைய வாழ்வா?சாவா? அடிப்படையில் போராட்டம் அமைந்திராவிடில் இஸ்லாம் பிரம்மிக்க வைக்கும் வெற்றிகளை அடைந்திருக்க முடியாது. இன்றைய முஸ்லிம்களின் நிலைமையும் அவ்வாறே உள்ளது. முஸ்லிம்கள் மீது குஃப்ர் அரசுகளும், நயவஞ்சகர்களது அதிகாரமுமே மேலோங்கியுள்ளன. இத்தகைய நிலையில் அதற்கு வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எந்த வழியாலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்;படாது. எனவே குஃப்ர் ஆட்சியமைப்புகள் மேலோங்கியுள்ள, இஸ்லாமிய நிலப்பரப்பில் முஸ்லிம்கள் கிலாஃபாவை நிலைநாட்டி தாருல் குஃப்ரை, தாருல் இஸ்லாமாக மாற்றி மற்ற அனைத்து இஸ்லாமிய நிலங்களையும் ஒன்றுபடுத்த பாடுபடவேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் உயர்ந்த வெற்றியையும் நிலைநாட்ட வேண்டும். அத்தகைய முயற்சியும், போராட்டமும் முழுமையான விசுவாசத்துடனும், தியாகத்துடனும் நபிகளாரின் வழிமுறைக்;கிணங்கவும் அமையவேண்டும்.

No comments:

Post a Comment