Thursday, April 3, 2008

கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு எதிரான போர்ப்பிரகடனம்!

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும். நிச்சயமாக நாம் (இது பற்றிய) வசனங்களைத் தெளிவு படுத்திவிட்டோம். நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்). (அல் இம்ரான் 3:118)

ஐரோப்பா தனது அசிங்கமான முகத்தை மென்மேலும் விகாரப்படுத்தி வருகின்றது. ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனிதத்துவத்தையும், கண்ணியத்தையும் கலங்கப்படுத்தும் நோக்கில் முன்பு வெளியான கேலிச்சித்தரங்களை ஐரோப்பா முழுவதும் மறு பிரசுரம் செய்ய வேண்டும் என கோரியிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இஸ்லாத்தையும், அல் குர்ஆனின் து}ய வழிகாட்டலையும் உலகிற்கு திரிபு படுத்திக் காட்டுவதற்காக வெளியாகியிருக்கும் டென்மார்க்கிய திரைப்படம் இந்த நோக்கத்தின் உச்ச நிலையைக் சுட்டிக்காட்டுகிறது.

இது ஒன்றும் புதிதல்ல!

மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் இவை சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல இதற்கு முன்னர் நடந்த போதும் முஸ்லிம்கள் கோபப்பட்டு, வேகப்பட்டு, பின்னர் தணிந்து நாளடைவில் அவற்றை மறந்தும் விட்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சில உதாரணங்கள்

அமெரிக்க ராணுவம் குர்ஆனை இழிவுபடுத்தியமை.அபு குரைப் சிறையில் முஸ்லிம்களை கொடுமைக்கும் இழிவுக்கும் ஆளாக்கியமை.பிரான்சில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை விதித்தமை. ஹொலண்டில் இஸ்லாத்தை இழிவுபடுத்தத் திரைப்படம் தயாரித்தமை. போன்ற நிகழ்வுகளை எம்மால் மறந்துவிட முடியுமா?

இதற்கும் முன்னர், தஸ்லீமா நஸ்hPன்;, சல்மான் ருஷ்டி போன்ற கொடிய எழுத்தாளர்கள் தமது இஸ்லாத்திற்கு எதிரான போக்கினை வெளிகாட்டி எழுதியமைக்காக மேற்குலகு அவர்களை அரவணைத்து, அடைக்கலம் கொடுத்ததை எம்மால் மறக்கமுடியுமா?

அமெரிக்க சுப்hPம் கோர்ட்டில் ஒருகையில் வாளும் மறுகையில் குர்ஆனும் ஏந்திய நபிகள் (ஸல்) அவர்களின் உருவச்சிலை 1935ல் இருந்தே வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பிரான்சின் ஜெனரல் கோரோ, சலாஹ_த்தீன் அய்யூபியின் கல்லறைக்குச் சென்று அதனை எட்டி உதைத்து வசைமாரி பொழிந்தமையும் வரலாறறியும். பிரான்சின் ‘என்சைக்ளோபீடியா’ (பொது அறிவுக்களஞ்சியம்) நபிகளாரை, கிறிஸ்தவ எதிர்ப்பாளர், பெண்களை கடத்தியவர், மனித சமுதாயத்தின் எதிரி என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய அவமதிப்புகள் மட்டுமன்றி இவர்கள் நேரடியாகவே முஸ்லிம்களை தாக்கி கொடுமைப்படுத்துவதில் முன்னிற்கின்றனர். இஸ்லாத்திற்கெதிராக அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ hPதியான அனைத்து வழிமுறைகளிலும் போராட்டங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
பொஸ்னியாவில் செர்பியப் படையினரால் எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் வகைதொகையின்றி முஸ்லிம்கள்; படுகொலை செய்யப்படுகின்றனர். ஈராக்கில் இன்று வரை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் செச்னியாவில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளும், பாலஸ்தீன முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற துயரங்களும் இஸ்லாத்திற்கெதிராக குப்ரிய மேற்குலகு தொடுத்திருக்கும் போரின் வெளிப்படைகளே.

சுதந்திரம் எனும் ஒரு மாயை

“தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்காதிருக்கமாட்டான்.” ( அத்தௌபா 9-32 )

இந்த திருமறை வசத்திற்கு ஏற்ப முஸ்லிம்கள் விழிப்புடன் இருந்து இறை ஒளியை அணைக்க முயலும் குஃபார்களினது பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இஸ்லாத்திற்கு தாம் சுமத்தும் அபாண்டங்களை தமது பேச்சுத் சுதந்திரம் எனக் கூறும் மேற்குலகு தமது அரசுகளில் பேச்சு சுதந்திரத்தை சிலருக்கு மட்டுமே ஏகபோகமாக்கியுள்ளது.9-11 தாக்குதலுக்கு பிறகு அந்த சம்பவத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத எண்ணற்ற முஸ்லிம்கள் தமது கருத்தை கூறியதற்காக எவ்வித விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டபோது இவர்களின் பேச்சு சுதந்திரம் எங்கே போனது.
மேற்குலகின் மரபுப்படி இஸ்லாத்திற்கு எதிராக எவரும் பேசலாம். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகப் எவரும் கூடாது. மேற்குலகைப் பொறுத்தவரை இஸ்ராயிலுக்கு எதிராகப் பேசுவது தீவிரவாதமாகும். 7-7 லண்டன் குண்டுவெடிப்புகளுக்குப்பிறகு இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேயர் 'இஸ்ரேல் நாட்டை நீக்க விரும்புவதும், முஸ்லிம் நிலங்களிலிருந்து மேற்கத்தியப் படைகளை வெளியேற்றுவதை ஆதரிப்பதும், ஷாPஆவை நடைமுறைப்படுத்த நினைப்பதும், கிலாஃபாவை நிலைநாட்ட முனைவதுமே தீவிரவாதம் ஆகும். அதை எதிர்த்து நாம் போராட வேண்டும்" எனக்குறிப்பிட்டிருந்தமை இதற்கு சிறந்த சாட்சியமாகும்.
மேலும் இவர்கள் இஸ்ரேல் பற்றிக் கூறப்படுவதை 'இனப்பாகுபாட்டை து}ண்டும் முயற்சி" என்று கூறுகின்ற அதேவேளை இஸ்லாத்திற்கெதிராக உலகளாவிய பிரச்சாரத்தை செய்யும்போது மௌனிகளாக இருந்துவிடுகின்றனர். எனவே பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக இவர்கள் பாவிக்கின்றார்களே தவிர உண்மையில் இவர்கள் அதற்கான அனுமதியை சிலருக்கு மாத்திரம்தான் வழங்கியிருக்கிறார்கள்.
இவர்களின் இன்னுமொரு மாயையான தனிமனிதச் சுதந்திரம் என்பதும் ஒரு பாரபட்ச நடைமுறையே. பிரான்சில் முஸ்லிம் பெண்கள் தம்மை கௌரவமாக மறைத்துக்கொள்ளுவதற்காக அணியும் ஹிஜாபினை தடைசெய்வதற்காக வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு இதற்கு இன்றுள்ள மிகச்சிறந்த சான்றாகும். இவர்களின் நியாயப்படி அரச அலுவலகங்களில் குட்டைப்பாவாடை அணியலாம். ஆனால் பெண்களை கண்ணியப்படுத்தும் ஹிஜாபினை அணியக் கூடாது.

எனவே இவர்கள் தனிமனிதர்களுக்கும், சமூகத்திற்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் ‘சுதந்திரம்’ என்ற கோட்பாடு தம்மிடமுள்ளது என வாதாடுவது கேலிக்குரியதாகும். எனவே இவர்களின் (சுதந்திர) சமூகத்தில் சுதந்திரம் கிடையாது. மேற்குலகின் அனைத்து நாடுகளிலும் அவரவருக்கென்ற எல்லைப்படுத்தும் சட்டங்களை வரையறுத்துக்கொண்டே சுதந்திரம் என்ற ஒரு மாயை பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது. மனிதன் விரும்பியோ விரும்பாமலோ தனது வாழ்வை கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டத்தினைக் கொண்டே இன்றுவரை வாழ்ந்து வருகிறான். எனினும் அந்த சட்டதிட்டங்கள் மனிதானால் உருவாக்கப்பட்டதா அல்லது மனிதனை படைத்து பரிபாலிப்பவன் வகுத்துத் தந்ததா என்பது மட்டுமே வேறுபட்டு காணப்படுகின்றது. எனவே சுதந்திரம் என்பது வெறும் மாயை என்பதனை உணர்ந்து அதனை மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும்.

தீர்வு என்ன?

எவ்வித பயமும் இன்றி அல்லாஹ்வின் தீனை, இறைவனின் து}தர் நிலைநாட்டிய இஸ்லாத்தை இவ்வளவு வெளிப்படையாக எதிர்ப்பதும், அதற்கெதிராக பேசுவதும் இந்தக்காலத்தில் எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கிலாஃபா எனும் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில் அச்சமின்றி இவற்றை தொடர்ந்து செய்ய அவர்கள் சிந்தித்துப் பார்த்திருக்க முடியுமா?

சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத், கலீஃபாவாக இருந்த காலத்தில் (1900களின் ஆரம்ப காலத்தில்) பிரான்சில் தத்துவஞானி வால்டேரின் படைப்புகளின் அடிப்படையில் ஒரு நாடகம் அரங்கேரியது. அதில் நபிகளாரையும், ஆயிஷா(ரலி) அவர்களையும் கேலி செய்கின்ற விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. அதைக் கேள்வியுற்ற சுல்தான் அப்துல் ஹமீத் அந்த நாடகத்தை உடனே நிறுத்தாவிட்டால் உங்கள் மீது ஜிஹாத் பிரகடனப்படுத்தப்படும் என பிரான்சிற்கு கடிதம் எழுதினார். அதன் பின் உடனே அந்த நாடகம் நிறுத்தப்பட்டது. முஸ்லிம் பெண்மணியின் ஆடையைப் பிடித்து இழுத்த ‘பனீ கைநுகா’ இன யூதர்களினை எதிர்த்து நபிகளார்(ஸல்) போர் தொடுத்து அவர்களை தண்டித்தமை நாமறிந்ததே.

கலீஃபா முஹ்தசிம்பில்லாஹ் காலத்தில் ரோமில் ஒரு முஸ்லிம் பெண்மணி தகாத முறையில் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது. அந்த முஸ்லிம் பெண்மணி கற்பழிக்கப்படவில்லை, கொல்லப்படவில்லை, இன்றைய ஈராக்கில் நடைபெறுவதைப்போல தொண்டை கிழிக்கப்படவில்லை. பொஸ்னியா, குஜராத்தில் நடைபெற்றதைப்போல கர்ப்பப்பை கிழிக்கப்பட்டு குழந்தை வெளியே வீசியெறிந்து கொல்லப்படவில்லை. மாறாக இழிவு செய்ய முயற்சிக்கப்பட்டது. உடனடியாக கலீஃபா முஹ்தசிம் அவசரகாலத்தில் அழைக்கப்படும் அதானான ஆறாவது அதானை எழுப்பக்கூறி முஸ்லிம்களை மஸ்ஜித்திற்கு அழைத்தார். 'ரோமபுரியில் ஒரு முஸ்லிம் சகோதரி இன்னல் படுத்தப்பட்டதாக எனக்கு செய்திவந்தது. வல்லாஹி நான் ஒரு மிகப்பெரும் படையை அனுப்பப்போகிறேன். அங்குள்ள வலிமையான நகரைக் கூறுங்கள்"
என்றார். இந்தப்போரில் ரோமபுரியின் அமூரியா பகுதி இஸ்லாத்தின் கீழ் வீழ்த்தப்பட்டது. இவையே அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நிலையாகவும், முஸ்லிம்களின் கண்ணியத்தின் நிலையாகவும் இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“இமாம் ஒரு கேடயம் ஆவார். அவர் பின்நின்றே முஸ்லிம்கள் போராடுகின்றனர். அவரைக் கொண்டே முஸ்லிம்கள் பாதுகாhப்பு பெறுகின்றனர்.

இன்னுமொரு முறை அவர்கள பின்வருமாறு கூறினார்கள்.

“சுல்தானானவர் பூமியில் இறைவனின் நிழல் ஆவார்.” (பைககி)

சலாஹ{த்தீன் அய்யூபி, அல்-குத்ஸ் பகுதியை கிறிஸ்தவ சிலுவைப் போராளிகளிடமிருந்து மீட்டார். சைபுதீன் குத்ஸ், மங்கோலியர்களிடமிருந்து ஈராக்கை மீட்டார். முகம்மத் பின் காசிம் ஹிந்தை இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டார். இவற்றையெல்லாம் தனிமனிதர்களாக நின்று அவர்கள் சாதிக்கவில்லை. மாறாக ஒரு அரசின் நிழலில் ஒரு உம்மத்தாக நின்றே அவர்கள் இவற்றை சாதித்தனர். எனவே இன்றிருக்கின்ற பாரிய சவால்களை நாம் முகம் கொடுப்பதற்கு இஸ்லாமிய அரசு எமக்கு உடனடித்தேவையாக உள்ளது.

மேற்குலகிற்கு இணையாக இஸ்லாத்தை அவமதிப்பதில் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களும் சளைத்துவிடவில்லை. துருக்கியில் ஹிஜாப் தடைசெய்யப்பட்டது, எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் தாடி வைத்தல், ஐவேளை தொழுதல் ஆகியவற்றிற்காக முஸ்லிம்கள் கண்காணிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது. பாகிஸ்தானில் இஸ்லாமிய இயக்கங்கள் தடைசெய்யப்படுவது, சவூதியில் காஃபிர்கட்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களிலும் அமெரிக்கப் படைகளை அனுமதித்தது என இவர்களின் கைவண்ணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“எந்த ஒரு விசயத்திலும் அதனை கெடுக்கக்கூடியது ஒன்று உண்டு. அதைப்போல இந்த தீனில் கேடுவிளைவிக்கக் கூடியது கொடூர ஆட்சியாளர்களாவர்.” (சயுதி)
இஸ்லாத்தின் எழுச்சி

ரஸ{ல் (ஸல்) அவர்களை அவமானப்படுத்து வகையில் அமைந்த கேலிச்சிந்திரங்களை வெளியிட்டமையை கண்டித்து உலகெங்கும் நடத்தப்பட்ட போராட்டங்களும், மக்கள் வெளிப்படுத்திய அவர்களின் மனோநிலையும் இஸ்லாத்தின் எழுச்சியை பறைசாற்றுகிறது. இந்த இஸ்லாமிய எழுச்சியைக் கண்டு மேற்குலகு அஞ்சுகிறது. ஏனெனில் இது இஸ்லாத்தின் அரசியல் பரிமாணத்தை அவர்களுக்கு காட்டி வருகின்றது. இஸ்லாமிய அரசியல் விழிப்புணர்சி ஏற்பட்டுவிட்டால் அது மேற்குலகிற்கு மட்டுமல்லாது இன்றைய இஸ்லாமியத் தலைவர்களின் ஆட்சியையும் பதம் பார்க்கும்.

இந்த அச்சத்துடன் அண்மையில் புஷ் ' ஜகார்த்தாவிலிருந்து ஸ்பெயின் வரையிலான தேசத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்." என்று விழித்துக் கூறுகின்றார்.

இந்தத் திருப்புமனையில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் உம்மத் எந்த நிலையில் உள்ளது, அதன் மீதான குஃபார்களின் நேரடியான மற்றும் மறைமுகமான போராட்டங்களின் நிலைகள் என்ன, அதனால் உம்மதிற்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அவலங்கள் என்ன என்பது குறித்து துல்லியமாக நாம் அவதானிக்க வேண்டும். சிந்தனா hPதியாக இஸ்லாத்திற்கெதிராக காஃபிர்கள் முன்வைக்கும் வாதங்களை முறையாக தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த பதிலடிகளை வழங்குவதில் நாம் மிக வேகமாக தொழிற்படவேண்டும்.

வன்முறை இல்லாத போராட்டங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் மூலமாகவும் சிந்தனா hPதியான இந்த எதிர்ப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். முக்கியமாக இஸ்லாமிய உலகை தமது அரக்கப்பிடியில் தொடர்ந்தும் வைத்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நயவஞ்சகத்தனத்தை நாம் முஸ்லிம் உம்மத்திற்கு தெளிவாக தோலுரித்துக்காட்ட வேண்டும்.
இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம் உம்மாவிடையே மேற்குலகின் போலித்தனத்தையும் இஸ்லாம் எதிர்ப்புப் போக்கையும் அம்பலப்படுத்தி தஃவாவை வேகமாக மேற்கொள்ளவேண்டும்.

இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்காக எதையும் இழக்கத் தயாராக இல்லை என்பதையும், இஸ்லாத்தினதும், அதன் து}தரினதும், முஸ்லிம்களினதும் கௌரவத்தை பாதுகாக்க அவர்கள் செயல்பட மாட்டார்கள் என்பதையும் மக்களிடையே பகிரங்கப்படுத்தி உண்மையான இஸ்லாமிய ஆட்சியான கிலாபத்தை நிலைநாட்டுவதற்காக முஸ்லிம்களை நாம் அணிதிரட்ட வேண்டும்.

No comments:

Post a Comment