Monday, August 17, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 12

இறைநம்பிக்கையே இறுதியில் வெல்லும்

அல்லாஹ் தன் அடியார்களை நெஞ்சுரங் கொள்ளச் செய்தான் இப்படிக் கூறி:
(விசுவாசிகளே) நீங்கள் தைரியத்i9த இழந்துவிட வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மேன்மையடைவீர்கள். (அல்குர்ஆன் 3:139)
(உஹத் போர் தொடர்பான இறைவசனம் இது : மொழி பெயர்ப்பாளர்) உண்மையிலேயே இந்த இறைவசனம் அல்லாஹ்வின் வழியில் செய்யப்படும் போரோடு நேரடியாகத் தொடர்புடையது. இதைப் படித்தவுடன் நம் மனக்கண் முன்னே எழுந்து நிற்பது ஒரு போர்க்களமும் அதில் முஸ்லிம்கள் அவர்கள் அல்லாஹ்வை உண்மையாக நம்பி நிற்கும் போது கொண்டிட வேண்டிய நெஞ்சுரமும் தான். ஆனால் இந்த இறைவசனம் வெளிக்காட்டும் உணர்வும் உத்வேகமும் நம்மை என்றென்றும் அல்லாஹ்வின் பாதையில் உந்தித் தள்ளப் போதுமானவையாகும். புழதியைக் கிளப்பி ஊரைக் கவ்வி இழுக்கவரும் பொய்களின் தாக்கம் எதிரிகள் எடுத்து வைக்கும் ஏளனங்கள் வீம்பான விமர்சனங்கள் ஆட்கொள்ள வருகின்றோம் ஆட்பலத்தோடும் ஆயதபலத்தோடும் அடிமைப்படுத்திடுவோம் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களை என்ற போர்ப் பிரகடனங்கள். இத்தனையையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டிட நம்மை நிலைப்படுத்தித் தரும் இறைவனின் உறுதிமொழி இது என்றால் அது சற்றேனும் மிகையாகாது. அல்லாஹ் ஒருவனைத் தவிர இல்லை வேறு இறைவன் என்ற அடிப்படை அல்லாதவற்றைக் கொண்டுவரும் அத்தனை குழப்பங்களிலிருந்தும் அல்லாஹ்வின் அடிமையை விடுவிக்கும் அற்புத ஆற்றல் பெற்றது இந்த இறைமொழி. அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் ஆள்பலமோ ஆயதபலமோ இல்லாதிருக்கும்போதும் ஆதரவுகளே அவர்களுக்கு இல்லை என்ற நிலையில் அவர்கள் இருக்கும் போதும் அவர்களை நாம்தான் அனைத்து ஆற்றல்களும் பெற்ற வல்லவர்கள் என எண்ணச் செய்திடும் ஆற்றல் பெற்ற தேறுதல் மொழி இது.
அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அடியான எண்ணத்தால் நினைப்பால் ஏனையவர்களை விட உயர்ந்து நிற்கின்றான். நாடு மாநிலம் தேசியம் என்பவை அவனுக்கு எந்த வகையிலும் முக்கியமானவை அல்ல. அதே போல் தேசத்தந்தை தேசியத் தலைவர்கள் காவல் தெய்வங்கள் காவியத்தலைவர்கள் என்றெல்லாம் மௌட்டிகத்தை வழியாய்க்கொண்ட மக்கள் புகழ்பவர்களுக்கும் அந்த இறை நம்பிக்கையாளனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற அல்லோல கல்லோலங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் இறைநம்பிக்கையாளனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மக்கள் பெரிதாகப் போற்றும் பழக்கவழக்கங்களும் மக்கள் புதியவை புதிரானவை எனப் போற்றுபவைகளும் இந்த இறை நம்பிக்கையாளனை எதுவும் செய்துவிட மாட்டா. ஏனெனில் அவன் ஏற்கனவே பண்பும் மாண்புமிக்க பல நல்ல பழக்க வழக்கங்களுக்குச் சொந்தக்காரன். அவனுடைய வழிகாட்டுதல்கள் அவன் பின்பற்றும் நாகரிகம் பண்பாட்டு கலாச்சாரம் ஆகிய அனைத்தும் படைத்த அல்லாஹ்விடமிருந்து வந்தவை. அந்த இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். படைத்தவனின் பாதையில் அவன் இருக்கின்றான். இந்த நெஞ்சுரம் அவனைப் படைக்கப் பட்டவைகளின் சலசலப்புகளைக் கண்டு கலங்கச் செய்திடுவதில்லை. இந்த உலகைப் புரிந்து கொள்வதில் இறைநம்பிக்கையாளனுக்குள் ஓர் அற்புதமான மனபலமும் அறிவுபலமும் வீற்றிருக்கும். அல்லாஹ்தான் இந்த உலகைப் படைத்தான். அவன் தான் இந்த உலகை இயக்கி வருகின்றான். அவனே இந்த உலகை ஒரு முடிவுக்கும் கொண்டு வருவான். இந்த அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கையாளன் தெளிவாக இருக்கின்றான். இதனால் இவைகுறித்து இந்த உலகில் மனிதர்கள் மேற்கொள்ளும் விவாதங்கள் ஆராய்ச்சிகள் குழப்பங்கள் கொந்தளிப்புகள் இவற்றிலிருந்து அவன் அப்பால் நிற்கின்றான். அவன் கொண்ட இறைநம்பிக்கை அவனை இவற்றில் வீழ்ந்து நெளியாமல் காப்பாற்றி உவகை கொள்ளச் சொல்கின்றது. இதனால் இந்த விவகாரங்களில் அவன் உயர்ந்தவனாகவும் தெளி;ந்தவனாகவும் இருக்கின்றான். வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ எதிர் நீச்சல்கள் ஏமாற்றங்கள் ஏக்கங்கள் தயக்கங்கள் தாக்கங்கள் வெற்றிகள் மகிழ்ச்சிகள் விரக்திகள் பழிகள் பாராட்டுக்கள் போட்டிகள் போராட்டங்கள். மாறுபட்டும் வேறுபட்டும் வரும் இந்தச் காலச் சுழற்சியில் மனிதன் கலங்குகின்றான். மயங்குகின்றான் சில நேரங்களில் மகிழவும் செய்கின்றான். இத்தனையையும் எதிர்கொள்வதில் எத்தனையோ கோட்பாடுகள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்தக் கோட்பாடுகள் மனிதனுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கின என்பதைவிட அவனை மேலும் குழப்பி அவனுடைய பிரச்னைகளை இன்னும் அதிகமாகவே ஆக்கின. இதனால் மேலும் மேலும் மனிதன் சிக்கல்களுக்குள்ளாலேயே வீழ்ந்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் ஓர் இறைநம்பிக்கையாளன் இவற்றில் அகப்பட்டுக்கொள்வதில்லை. இந்த ப10மி ஒரு சோதனைக் களம் இதில் இவையெல்லாம் தான் வாடிக்கை என்பதை அவன் நன்றாக அறிவான். இந்தச் சோதனைகளை நாம் எத்துணை நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம். இவை அனைத்திற்கும் அல்லாஹ் தெளிவாகவே வழிகாட்டியிருக்கின்றான். அந்த வழிகாட்டுதல்களில் நாம் நிலைத்து நின்றாலே போதுமானது என்ற இந்தத் தெளிவும் தேறுதலும் அவனை மலை போல் நிலைகுலையாமல் நின்றிடச் செய்கின்றது. இதிலும் அவன் ஏனையவர்களைவிட உயர்ந்தவனாகவும் தெளிந்தவனாகவும் இருக்கின்றான். நல்ல ஒழுக்கம் என்பது எது? இவற்றை நிர்ணயிப்பதில் மனித மனங்கள் மனிதர்களின் தராதரங்கள் காலந்தோறும் மாறி மாறி வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் உயர்ந்த ஒழுக்கங்கள் எனப் போற்றப்பட்டவை இன்னொரு காலத்தில் தேவையில்லாதக் கட்டுப்பாடுகள் என பேசப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை உடைக்கப் போர்க்கோலம் ப10ண்டு நின்றிருக்கின்றது மனித இனம். அதே போல் ஒரு காலத்தில் கூடாவொழுக்கம் என ஒதுக்கப்பட்டவை. ஏற்றுக்கொண்டு எடுத்து வாழ்ந்திட வேண்டிய நவீனங்கள் என நாடப்பட்டு நாட்டு நடப்பாக ஆக்கப்பட்டுள்ளன. இந்தக் குழப்பங்களிலிருந்து மனித மூளைகள் இன்னும் முற்றாக முடிவாக விடுபட்டுவிடவில்லை. பழுதான இந்தச் சிந்தனைகளால் மனித இனம் பாழ்பட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது நாளுக்கு நாள். ஆனால் இறைநம்பிக்கையாளன் இவற்றிலிருந்து வெளிப்பட்டு விடுபட்டு தெளிவானதோர் வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அல்லாஹ் வகுத்துத் தந்துள்ள ஒழுக்கவிதிகள் தன்னை வழிநடத்தப் போதுமானவை என்பதை அவ்ன அனுபவத்தில் உணர்ந்து உயர்ந்து நிற்கின்றான். இதனால் அவனிடம் வேறு யாரிடமும் இல்லாததோர் அதிசயமான ஒழுக்கமும் அதன் வழிவந்த உயர்ந்த இங்கிதமும் காணப்படுகின்றது. இதேபோல் எதிர்ப்படும் இன்னல்கள் இடுக்கண்கள் இவற்றைக் கண்டு கலங்குவதில்லை. அல்லாஹ்வை ஏற்று அவன் வழியில் நடக்கும் இந்த அடியான். மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரவிருக்கும் வாழ்க்கையை இந்த அடியான் நிதர்சனமாக நம்புகின்றான். அந்த வாழ்க்கையே நிரந்தரமானது. நிலையானது என்பதில் அவனுக்குள் எந்த ஐயமுமில்லை. அந்த வாழ்க்கையின் வெற்றியே அவனது இலட்சியம். இந்த வாழ்க்கையில் நிலையற்ற இந்தச் சோதனைக் களத்தில் வரும் எந்தச் சோதனையும் இன்னலும் இழப்பும் அவனை எதுவும் செ;யதிடாது. மறுமையில் கிடைக்கப் போகும் இந்த நிரந்தர நிம்மதிக்கு முன்னால் இவை எதுவுமில்லை என்பதை நன்றாக அறிவான் அவன். இந்த அறிவால் வந்தத் தெளிவால் அவன் வானளாவ தான் உயர்ந்து நிற்பதை உணருகின்றான். இப்படி இந்த உலகின் கேடுபாடுகளிலிருந்து விடுபட்டு உயர்ந்து நிற்கும் அவன் இந்த இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாததால் மனிதர்களில் பலர் எதிர்கொள்ளும் வேதனைகளையும் சோதனைகளையும் கண்டு மனம் புழங்குகின்றான். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாததால் இந்த மனிதர்களுக்கு ஏற்பட்ட அவலங்களைக் கண்டு அனுதாபம் கொள்கின்றான். அவர்கள்பால் அனுதாபம் மட்டுமல்ல அன்பும் பிறக்கின்றது. இதனால் அவன் இறங்கிவந்து இந்த அப்பாவிகளை விடுவிக்க அந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை விளக்கிச் சொல்லி அவர்களையும் உயர்த்திடத் துடிக்கின்றான். இதைச் செய்யாவிட்டால் தான் அவர்களுக்குத் துரோகம் செய்து விட்டோம் என எண்ணித் தவிக்கின்றான்.


அறியாமையின் (அஞ்ஞானத்தின்)பார்வையும் இஸ்லாத்தின் பார்வையும்

இஸ்லாம் ஒவ்வொரு விவகாரத்திலும் வாழ்வின் ஒவ்வொரு பிரச்னையிலும் மிகவும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கின்றது. இதனால் இந்த உலகில் பிடித்துத்தள்ளி அமிழ்த்திடும் பல சிக்கல்களில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் இவை ஒவ்வொன்றிலும் தெளிந்த சிந்தனையும் சீரான பார்வையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகங்களின் மூடப்பழக்கவழக்கங்களின் பளபளப்புக்கள் அவர்களைக் கொஞ்சமும் தடம்பிறழச் செய்ததில்லை. இதுவே அந்த முதல் இஸ்லாமியத் தலைமுறையின் பார்வையும் போக்குமாக இருந்தது. அறியாமை என்பதும் மூடத்தனமான பழக்கவழக்கங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு கட்டுண்டவை அல்ல. மனித இனம் நேரான வாழ்க்கை நெறியாம் இஸ்லாத்திலிருந்து விடுபட்டு விலகிச் சென்றிட சென்றிட அறியாமை இந்த மனித இனத்தை மீண்டும் வந்து மூடிக் கொள்ளும். இதுதான் வரலாற்றில் அன்று நடந்தது. இன்று நடக்கின்றது. இனிவரும் நாள்களிலும் இதுவே நடக்கும். பகட்டும் பளபளப்பும் நிறைந்த வீண்விரய வாழ்க்கையை அந்த முதல் சமுதாயம் எப்படி எடுத்துக் கொண்டது என்பதற்கோர் வரலாற்று நிகழ்ச்சி இதோ:
அப10 உதுமான் நஹ்தி (அல்லாஹ் அவர்கள் மேல் தன் அருளைப் பொழிவானாக) அவர்கள் பின்வரும் நிகழ்வை அறியத் தருகின்றார்கள். வரலாற்றுச் சிறப்பைத் தனதாக்கிக் கொண்ட ""கதிசிய்யா" போர் இதில் முஸ்லிம்களின் முன்னனி வீரர் முஜிரா பின் ஷோபா (அல்லாஹ் அவர்கள்பால் திருப்தி கொள்வானாக) அவர்கள் ஈரானின் தளபதி ருஸ்தும் முகாமிட்டிருந்த முகாமை நெருங்கி வந்தார்கள். ஆற்றின் பாலத்தை அவர்கள் கடந்ததும் ஈரானின் படைவீரர்கள் அவர்களை எதிர்கொண்டழைத்தார்கள். தங்கள் தளபதியாம் ருஸ்துமோடு பேசும்படி முறையிட்டார்கள். போரில் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த அவர்களிடம் (ருஸ்துமின் வீரர்களிடம்) தோல்வியின் சாயலோ சோகமோ கொஞ்சமும் காணப்படவில்லை. அவர்களின் அணிமணிகளில் ஆடம்பரம் ஆடம்பரமாக வீற்றிருந்தது. முஜிரா(ரலி) முன்னே போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைமுடி நான்காக வகுக்கப்பட்டுக் கிடந்தது. எளிமையின் பிரதிநிதியாக ஏற்றமிக்கதொரு கொள்கையின் பிரதிநிதியாக ஆடம்பரத்தின் அவையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தார்கள். விரயம் என்ற சொல்லுக்கு விளக்கம் இனி எங்கேயும் தேடிட வேண்டாம் எனற் அளவுக்கு ஆடம்பரம் அங்கே அரசமைத்துக்கொட்டிக் கிடந்தது. தோல்வியின் எதிர்காலப் பிரதிநிதிகளாய் நின்று கொண்டிருந்த ருஸ்துமின் படை வீரர்களின் ஜொலிப்பில் எந்தக் குறையுமில்லை. வறண்டும் வகுந்தும் கிடந்த முஜிராவின் முடியைப் போலல்லாமல் அந்த வீரர்களின் முடிகளை மூடி மணிமுடிகள் கொலுக்கொண்டிருந்தன். தந்தமும் தங்கமும் அங்கு தங்குதடையின்றி காட்சி தந்தன. நானூறு அடிகள் வரை தரையின் மேல் விரிப்பு விரிந்து கிடந்து ருஸ்துமின் இருக்கைக்கு வழிகாட்டிற்று. முஜிரா(ரலி) அவர்கள் நடந்து ருஸ்துமின் இருக்கையை நெருங்கினார்கள். பொன்னும் மணியும் மின்னும் வைரமும் அணிகலன்களாய் வேய்ந்து ருஸ்துமின் மேனியைத் தகத்தகாயமாகச் சுடர்விடச் செய்து கொண்டிருந்தன. எந்தச் சலனமுமில்லாமல் முஜிரா(ரலி)முன்னே சென்றார்கள். ருஸ்துமின் இருக்கையின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். இதைக் கணமும் தாங்கிக் கொள்ள இயலவில்லை ருஸ்துமின் அடியாட்களால். தாவிச் சென்று முஜிரா அவர்களை (அல்லாஹ் அவர்களுக்கு நிறைந்த நற்கூலிகளைத் தந்தருள்வானாக) கீழே இழுத்து இறக்கினார்கள். முஜிரா(ரலி)அவர்கள் ருஸ்துமிடம் இப்படிக் கூறினார்கள். நீங்களெல்லாம் அறிவுடையவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் நேரில் பார்த்த போது தான் புரிகின்றது உங்களுக்கும் அறிவுக்கும் தொடர்பு அற்றுப் போயிருக்கின்றது என்று. உங்களைப் போல் அறிவற்றவர்கள் யாருமில்லை. நாங்கள் உங்களைப் போல் வர்க்கப் பேதங்கள் பாராட்டுவதில்லை. நாங்கள் எங்களில் யாரையும் அடிமைகளாய் நடத்துவதில்லை. ஒருவர் எங்கள் மேல் போர்தொடுத்து அவரை நாங்கள் கைது செய்தாலொழிய நாங்கள் யாரையும் கைதிகளைப் போல் நடத்த மாட்டோம். எங்களைச் சார்ந்தவர்களிடம் நாங்கள் அன்பும் அனுதாபமும் காட்டுவது போல் நீங்களும் காட்டுவீர்கள் என எண்ணினேன். ஆனால் நீங்களோ உங்களைச் சார்ந்தவர்களையே அடிமைகளாக வைத்து ஆட்சிச் செலுத்துகின்றீர்கள். இது தான் உங்கள் பண்பாடு என்றால் நீங்கள் முன்னாலேயே எனக்குச் சொல்லி அனுப்பி இருக்கலாம். நாங்கள் ஆண்டான் என்று சிலரையும் அடிமைகளாய் சிலரையும் வைத்திருக்கின்றோம் எனத் தெரிவித்திருக்கலாம். என்னிடம் இப்படி நடந்து கொள்வதை விட அது உங்களுக்குச் சிறந்ததாய் இருந்திருக்கும். நான் நானாக விரும்பி உங்களைப் பார்க்க வரவில்லை. உங்களால் அழைக்கப்பட்டே உங்களிடம் வந்திருக்கிறேன். இங்கு வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டேன் நீ;ங்கள் முழுமையானதொரு மூடத்தனத்தில் மூழ்கிக்கிடக்கின்றீர்கள் என்பதை இப்படி ஆடம்பரமாய் தன்னை ஆக்கிக் கொண்டவர்களும் அடிமையாய் சிலர் தனக்கு குற்றேவல் புரிய தாங்கள் மமதையில் மிதக்க வேண்டும் என்ற மனநிலையைப் பெற்றவர்களும் வென்றதாய் வரலாறு இல்லை. உங்கள் மனநிலையே உங்கள் தோல்விக்கு முன்னறிவுப்புச் செய்கின்றது. ஆடம்பரத்தில் உலக சுகங்களில் இத்துணை அழுத்தமான பிடிப்பை வளர்த்துக் கொண்டவர்கள் மரணத்தையும் மறுமை வாழ்க்கையையும் அதிகமாக நேசிக்கும் அல்லாஹ்வின் படையை வெல்ல முடியாது.
இதே ருஸ்துமின் முன்னேதான் கதிசியா போருக்கு முன்னர் ரபிய்யா பின் அம்ர்(அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக) ரபிய்யா பின் அமர்(ரலி) அவர்களை பாரசீகத் தளபதி ருஸ்துமிடம் அவருடைய அழைப்பிற்கிணங்க அனுப்பினார்கள். ருஸ்தும் பாரசீகப் படையின் தளபதியும் ஆட்சியாளரும் ஆவார். ரபிய்யா பின் அமர்(ரலி) அவர்கள் ருஸ்துமின்ன முகாமுக்குள் நுழைந்தார்கள். அங்கே பட்டும் பகட்டுக்காக பளபளக்கும் அணிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தங்கத்தாலான இருக்கையில் ருஸ்தும் தன்னை அமர்த்திக் கொண்டிருந்தார். அவரது மணிமுடி முத்து பவளம் வைரம் வைடூரியம் ஆகியவற்றில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. ரபிய்யா(ரலி)அவர்கள் நைந்த ஆடையை அணிந்தவர்களாகவும் ஒரு கேடயத்தைக் கையில் கொண்டவர்களாகவும் ஒரு சிறு குதிரையில் உள்ளே நுழைந்தார்கள். உடைவாள் உறையில் இருந்து வெளியே வந்து அவர்களுடைய கைகளுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. போர் ஆயதங்கள் பொருத்தப்பட்டிருந்த மேலாடை ஒன்று அவர்களைப் போர்த்திக் கொண்டிருந்தது. தரையில் விரிக்கப்பட்டிருந்த பட்டுப் பீதாம்பரம் ரபியா(ரலி)அவர்களின் குதிரைக் குளம்பில் பட்டுச் சுருண்டது. சிறிது தூரம் தன் குதிரையில் சென்ற ரபிய்யா(ரலி) அவர்கள் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார்கள். குதிரையை அங்கே ஜொலித்துக் கொண்டிருந்த விலைமதிப்பற்ற ஓர் அரசணையில் கட்டினார்கள். நிமிர்ந்த நெஞ்சோடும் நேர்கொண்ட பார்வையோடும் ருஸ்துமை நோக்கி நடந்தார்கள். ருஸ்துமின் பணியாட்களாய் நின்று கொண்டிருந்த படைவீரர்கள் உங்கள் ஆயதங்களைக் கீழே போடுங்கள் என்றார்கள். ரபிய்யா (ரலி) அவர்கள் சொன்னார்கள் நான் என் விருப்பப்படி இங்கே வரவில்லை. உங்கள் கோரிக்கையின் கீழ்தான் இங்கே வந்திருக்கின்றேன். நீங்கள் இதை விரும்பவில்லையென்றால் சொல்லி விடுங்கள் திரும்பச் சென்று விடுகின்றேன் என்றார்கள். ருஸ்தும் விடுங்கள் அவர் வரட்டும் என்று தன்னவர்களைப் பார்த்துச் சொன்னார். தொடர்ந்து நடந்தார்கள்.
ரபிய்யா(ரலி) அவர்கள். அவர்களின் கையிலிருந்த வாளை அவர்கள் ஊன்றி நடந்த போது அது தரையை மெத்தையாக ஆக்கிக் கொண்டிருந்த பட்டுப் பீதாம்பரத்தைக் குத்தித் துளையிட்டுவிட்டது. ரபிய்யா(ரலி) அவர்கள் ருஸ்துமின் முன் வந்ததும் ருஸ்தும் கேட்டார். நீங்கள் ஏன் இங்கே (இங்கே என்பதற்கு ஏன் கதிசியாவை நோக்கி வந்தீர்கள்? அல்லது முற்றுகையிட்டீர்கள் என்று பொருள்) வந்தீர்கள். அதற்கு ரபிய்யா அவர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள். மனிதர்கள் மனிதர்களுகக்கு அடிபணிவதிலிருந்து அவர்களை விடுவித்து மனிதர்களை இறைவனுக்கு மட்டுமே அடிபணிபவர்களாக ஆ;க்கிட அல்லாஹ் எங்களை அனுப்பினான். மனிதர்களை இந்த உலகின் இடுக்கிலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் விசாலமான உலகிலுள்ளும் மறுமையின் வெற்றியிலும் இட்டுச் சென்றிட அல்லாஹ் எங்களை அனுப்பினான். அதே போல் அநியாயத்திலிருந்து மனிதர்களை விடுவித்து அல்லாஹ்வின் நீதி கிடைக்க வகை செய்யவும் அல்லாஹ் எங்களை அனுப்பினான். காலங்கள் மாறின நிலைமைகள் திரும்பின. முஸ்லிம்கள் பெற்றிருந்த பெரும் பலத்தை இழந்தார்கள. அவர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள். இத்தனையுமிருந்தாலும் ஒரு முஸ்லிம் தான் நேரான ஒரு கொள்கைக்குச் சொந்தக்காரன் என்ற எண்ணத்தால் உயர்ந்தே நின்றான். அவன் ஈமானில் உயர்ந்து நின்றிடும் போது தன்னை வெற்றி கொண்டவர்களைக் கூட ஓர் உயர்ந்த நிலையிலிருந்தே பார்க்கின்றான். தனக்கு ஏற்பட்டுவிட்ட இந்த நிலைமைகள் மிகவும் தற்காலிகமானவை என்பதை அவன் மனதார நம்புகின்றான். ஒரு நாள் இறைநம்பிக்கை தன்வலிமையை வெளிப்படுத்தி நிலைமைகளைத் தலைகீழாய் மாற்றி வெற்றியையும் தனது மேன்மையையும் நிலைநாட்டிடும். இந்த யதார்த்தத்திலிருந்து யாருக்கும் விடுதலை இல்லை. மரணமே அவனை ஆட்கொள்ள வந்தாலும் அவன் தன் கொள்கையில் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்க மாட்டான். மரணம் எல்லோருக்கும் வருவதே அந்த மரணம் ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு இறைவனின் வழியில் தன்னைத் தந்துவிடுவது என்ற அளவில் வருகின்றது. இறைநம்பிக்கையாளன் அந்த இறைவனின் வழியில் தன்னைத்தந்து விட்டு தன் உயிரைத் தந்துவிட்டு சுவர்க்கத்தை நோக்கிப் பீடுநடைபோடுகின்றான். அவனை இந்த உலகில் வென்றோம் என எண்ணுபவர்கள் இறப்பிற்குப்பின் வரும் அந்த வாழ்க்கையில் நரக நெருப்பை நோக்கி இழுத்துச் செல்லப்படுவார்கள். இத்துணைப் பெரியதொரு மாறுபாடும் வேறுபாடும் இறைநம்பிக்கையாளனுக்கும் அந்த இறைவனை ஏற்றுக் கொள்ளாதவனுக்கும் இடையில் இருக்கின்றது. கொள்கையால் உயர்ந்த இலட்சியங்களால் உயர்ந்து நிற்கும் அந்த இறைநம்பிக்கையாளன் தன் இறைவனின் செய்தியைச் செவிமடுக்கவே செய்கின்றான்:
(நபியே) நிராகரிப்போர் (ஆடம்பரமான) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கிவிட வேண்டாம். இஃது அற்ப சுகமாகும். அதற்குப் பின்னர் அவர்கள் புகுமிடம் நரகந்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. ஆயினும் எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அவற்றில் அவர்கள் அல்லாஹ்வின் விருந்தினராக என்றென்றுமே தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும் (அல்குர்ஆன் 3:196-198)
அறியாமை ஆடம்பரத்தில் திளைக்கின்றது. ஆடம்பரத்தில் மட்டுமல்ல ஆணவத்திலும் மூழ்குகின்றது. கர்ச்சிக்கின்றுது கனைக்கின்றது இல்லாததையும் பொல்லாததையும் ஓங்கி முழங்குகின்றது. இப்படியெல்லாம் கர்ச்சித்து கனைத்துக் காட்டி ஓங்கி முழங்கி ஒப்பாரிவைத்து எல்லோரையும் ஒருவித கவர்ச்சியிலும் மாயையிலும் சிக்கிடச் செய்கின்றது அறியாமை. இப்படியெல்லாம் ஆர்ப்பரித்து விடுவதால் அது உண்மையாகிவிட்டது. இன்னும் சொல்வதானால் தன்னுடைய உண்மையான இயல்பை மறைத்துவிடவே இப்படியெல்லாம் ஆர்ப்பரிக்கின்றது அறியாமை. நாம் மக்களை ஏமாற்றவே இப்படிச் செய்கின்றோம் என்பதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதும் இந்த ஆரவாரங்களில் அமிழ்ந்து கிடக்கும் இன்னொரு பொருள். இந்த ஆரவாரங்கள் ஆர்ப்பரிப்புகள் எல்லாம் அல்லாஹ்வையும் அறுதி நாளையும் ஈமான் கொண்டு வாழ்ந்திடும் முஸ்லிமையும் வந்து தாக்குகின்றன. ஆனால் அவன் இந்தக் கவர்ச்சிகளில் வீழ்ந்திடுவதே இல்லை. ஏமாந்து விடுவதுமில்லை. இவற்றிற்கு அப்பால் நின்று அனுதாபத்தோடு இந்த அறியாமையைப் பார்க்கின்றான். உண்மை இஸ்லாம் இந்த மக்களைச் சென்று சேர்ந்திட என்ன செய்திட வேண்டும் என ஆலோசிக்கின்றான் செயற்களத்தில் குதிக்கின்றான். அறியாமையின் கவர்ச்சிகள் அவனை அணுவளவும் அசைத்திடுவதில்லை. அறியாமை காமத்தில் கரை புரண்டோடலாம். காமக்களியாட்டங்களையும் காதல் சல்லாபங்களையும் அது காட்சிக்குத் தந்து மக்களின் மதியை மயக்கிடலாம். மதுவையும் மக்களுக்குத் தந்து அவர்களை விலங்குகளாக ஆக்கி வேடிக்கைப் பார்க்கலாம் அறியாமை. இப்படியெல்லாம் மனிதர்களை விலங்கினும் கீழாய்த் தாழ்த்திவிட்டு இவற்றை மனித உரிமைகள் எனப் பறையறிவிக்கலாம். மக்களின் மதியை மயக்கி அதை மனம் போல் வாழ்க்கையை அனுபவிக்க தந்த சுதந்திரம் எனப் பேசிக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் உரிமைகள் என்றோ சுதந்திரம் என்றோ கருதுவதில்லை ஈமான் என்ற இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம். என்றோ எங்கோ வரப்போகும் வாழ்க்கையை நம்பி இங்கே இன்றே கிடைக்கும் சுகங்களை கோட்டை விடாதே என இந்த அறியாமையின் பிரதிநிதிகள் அவனை ஏளனம் செய்யலாம் ஏகடியம் பேசலாம். ஆனாலும் அவன் நிலைகுலையா குணங்களின் குன்றாய் நின்று கொண்டிருப்பான். இப்படி அவனை எள்ளி நகையாடுவோருக்கு இதோ இறைவனே பதில் தருகின்றான் நபி நூஹ்(அலை) அவர்கள் வழியாக அந்தப் பதிலை அல்லாஹ் இப்படித்தன் அருள் மறையில் குறிப்பிடுகின்றான்:
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய சமூக்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால் நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பது போலவே (அதி சீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம் என்று கூறினார் (அல்குர்ஆன் 11:38)
அல்லாஹ்வின் நல்லடியான் அறியாமையின் முடிவையும் இறைவனை நம்பி அந்த நம்பிக்கையில் நிலைத்து நின்றவர்களின் முடிவையும் சபலங்கள் ஏதமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) இறைநம்பிக்கையாளர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால் (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டுவிலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும் இவர்களுடைய விஷயங்களில் (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) அவர்கள் இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள் என்றும் கூறுகின்றனர். (விசுவாசிகளைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே எனினும் (மறுமை நாளாகிய) இன்றைய தினம் விசுவாசங் கொண்டவர்கள் அந்நிராகரிப்போரைக் கண்டு சிரிக்கின்றனர். (சுவனபதியிலுள்ள) சிறந்த ஆசனங்கள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து (கொண்டு இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக் கொண்டு நிராகரித்த இவர்களுக்கு இவர்களுடைய செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பர்) (அல்குர்ஆன் 83:29-36)
இதற்கு முன்னால் திருக்குர்ஆன் இறைவனை ஏற்க மறுத்தவர்கள் இறைவனை ஏற்றுக் கொண்டவர்களிடம் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்லித்தந்தது:
நிராகரிப்போருக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காண்பிக்கப் பெற்றால் அவர்கள் விசுவாசிகளை நோக்கி நம் இருவகுப்பார்களில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் சபை அழகான தோற்றத்துடனும் இருக்கின்றது என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 19:73)
யார் உயர்ந்தவன் என்பது இங்கே கேள்வி. இறைவனின் தூதர் (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஓர் அணி இவர்களில் அந்த மக்கத்து மக்களின் தலைவர்களாகக் கருதப்பட்டவர்கள் பணமும் பவிசும் நிறைந்த உல்லாசபுரிகளுக்குச் சொந்தக்காரர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இன்னொரு அணி இதில் எந்த வசதியும் வாய்க்கப் பெறாத பஞ்சையர்களே உறுப்பினர்கள். ஆனால் இவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என உளமாற ஏற்று அவர்கள் இட்டக் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றிட காத்துக் கிடந்தவர்கள். நாம் முதலில் குறிப்பிட்ட அணியில் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொள்ளாதவர்களின் அணியில். அந்த அரபு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த நாசர் பின் ஹாரிஸ் அவர்கள் வீற்றிருந்தார்கள். உமர் பின் ஹிஸ்ஸாம் அவர்களிருந்தார்கள். வலீத் பின் முஜிரா அவர்களிருந்தார்கள். அப10ஸ_ஃப்யான் பின் ஹாரிஸ் அவர்களிருந்தார்கள் இப்படி வளமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களைச் சொந்தமாகக் கொண்ட அந்த முதல் அணி சிறந்ததா? இல்லை எந்த வசதியுமில்லாத எந்தப் பிடிப்புமில்லாத பிலால்(ரலி) அவர்கள் அம்மார்(ரலி)அவர்கள் ஸ_ஹைப் (ரலி)அவர்கள் ஹப்பாப்(ரலி) அவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட அணி உயர்ந்ததா? இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டுவந்த திருத்தூது பலன்தரும் திருத்தூதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் வளங்கள் வாய்க்கப் பெறாத வறிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் தந்த செய்தி பெருமைமிக்கச் செய்தி என்றால் அவர்களைச் சுற்றி அந்தச சமுதாயத்தில் மேன்மக்களாகக் கருதப்பட்டவர்கள் ஏன் வரவில்லை? நேர்வழி பெற்றோர் என உவகை கொள்ளும் இந்த மக்கள் சந்திக்க இறைவனின் திருத்தூதர் (ஸல்) அவர்களையே அங்கமாகக் கொண்ட இந்தக் குழு கூடிட ஒரு அர்க்கம் (ரலி) அவர்களின் இல்லந்தான் கதி. ஆனால் இந்த இறைவனின் தூதர் (ஸல்) அவர்களை மறுத்த இன்னும் எதிர்த்த அணியோ தன் கூட்டங்களை நடத்த பவிசான சொகுசு பங்களாக்களைக் கைவரப் பெற்றிருந்தது. இப்படி உலகிலிருக்கும் வசதிகளை வைத்து உண்மையையும் பொய்யையும் எடைபோடுபவர்கள் நிச்சயமாக இந்த உலகையும் அதில் கிடைக்கும் வாய்ப்புக்களையும் இறைவனாக ஆக்கிக் கொண்டு இவற்றையே ப10ஜிப்பவர்கள். இவர்களுக்குக் கண்முன்னாலே காணும் வளங்களே கடவுள். இவர்களின் கண்களால் இந்தக் கடவுளுக்கு அப்பால் எதையும் காண முடியவில்லையே. இவர்களின் கண்களில் திரைகளில் வீழ்ந்துவிட்டன. ஒருவன் நம்பிக்கை கொள்வதற்கும் கொள்ளாதிருப்பதற்கும் அவன் உலகில் அனுபவிக்கும் சுகங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இறைவனை நம்புவது நம்பாதிருப்பது இந்த உலகப் பகட்டுகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே இறைவனின் தீர்ப்பு உலகில் செல்வாக்குக் கிடைக்கும் என்பதற்காகவோ உலகில் செல்வமும் வளமும் வந்து சேரும் என்பதற்காகவோ உலகில் அதிகாரமும் பெருமையும் கிடைக்கும் என்பதற்காகவோ யாரும் ஈமான் கொள்ள இறைவனை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஈமான் கொள்வது இறைநம்பிக்கை கொள்வது என்பது இது போன்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்று உண்மையான நம்பிக்கையாக இருந்திட வேண்டும். ஓர் உண்மையைச் சொல்வதானால் ஈமான் கொண்டால் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டால் துண்பங்களைக் கொண்டும் இழப்புகளை ஏற்படுத்தியும் நாம் சோதனைகளுக்குள்ளாக்கப் படுவோம். இதனால் அப்பழுக்கற்ற இறைநம்பிக்கையாக அது இல்லாதிருந்தால் எதிர்பார்ப்புகளைக் கொண்ட ஈமானாக இறை நம்பிக்கையாக அது இருந்தால் அது அதிக நாள்கள் நிலைக்காது. இறைவனின் திருப்தி மகிழ்ச்சி இதனால் மறுமையில் கிடைக்கும் வெற்றி இவற்றால் வந்ததாக இருந்திட வேண்டும் (ஈமான்) இறைநம்பிக்கை. உண்மையான இறைநம்பிக்கையாளன் உலகியல் கவர்ச்சிகளால் உந்தப்படுபவன் அல்ல. அவன் தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் மனிதர்களிடமிருந்து பெற்றிடுவதில்லை. அவன் தனது உணர்வை உற்சாகத்தை உத்வேகத்தை அல்லாஹ்விடமிருந்தே பெறுகின்றான். அல்லாஹ்வைக் கொண்டே திருப்தியடைகின்றான். அறியாமை ஜாஹிலிய்யா அதிகாரம் கைவரப் பெற்றதாக இருந்திடட்டும். அது தனது மேனாமினுக்கை வெளியே காட்டி காண்போரை கவர்ந்திழுக்கட்டும். அதில் கவரப்பட்டு தங்களை இழந்திடுவோர் அறியாமையின் அணியில் அணி திரளட்டும். இத்தனையுமிருந்தாலும் அது உண்மையை எதுவும் செய்திட முடியாது. அதேபோல் அது எதையும் எதிர்பார்க்காமல் ஆனால் எது வந்தாலும் தாங்கிடுவோம் என வாழ்ந்திடும் இறைநம்பிக்கையாளர்களை எதுவும் செய்திட இயலாது. உண்மையான நம்பிக்கையாளன் உண்மைக்காகப் பொய்யை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
(அன்றி அவர்கள்) எங்கள் இறைவனே நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய இருதயங்கள் (அதிலிருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் அன்பான அருளையும் உன் புறத்திலிருந்து எங்களுக்கு அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி. எங்கள் இறைவனே நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் யாவரையும் ஒன்று கூட்டுபவனாக இருக்கின்றாய். அதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக அல்லாஹ் வாக்குறதியில் தவறுபவனல்ல. (என்று பிரார்த்திக்கின்றனர்) (அல்குர் ஆன் 3 : 8-9)

Monday, August 3, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 11

தலைகீழ் மாற்றங்கள் அனைத்துத் துறைகளிலும் அவசியம்

இஸ்லத்தை எடுத்துச்சொல்லி முஸ்லிமல்லாதவர்களை நாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தாலும் சரி அல்லது இன்றைய முஸ்லிம் சமுதாயத்தைப் புனரமைத்து ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட முயன்றாலும் சரி நாம் ஓர் அடிப்படை உண்மையை மனதில் நிரந்தரமாக நிறுத்திட வேண்டும். இந்த அடிப்படை உண்மையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தெளிவாகவும் விரிவாகவும் வழிகாட்டியிருக்கின்றது. இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் நிரந்தரமானவை நிறைவானவை. இந்த உண்மைகளை ஊர்ஜிதம் செய்திடும் பென்னம் பெரியதோர் வரலாறும் இஸ்லாத்திற்கு உண்டு. அனைத்தையும் படைத்த இறைவனிடமிருந்து வந்த இந்த வழிகாட்டுதல் ஏனைய எல்லா வாழ்க்கை நெறிகளிலிருந்தும் மாறுப்பட்டது. வேறுபட்டது. இஸ்லாம் வெறும் வழிகாட்டுதலாக மட்டும் இருந்திடவில்லை. அது வாழ்ந்து காட்டப்பட்ட வாழ்க்கை முறையும் கூட. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மார்க்கம் இந்த வாழ்க்கை நெறி நீண்ட நெடிய இந்த தொருகாலம் வாழ்ந்து காட்டப்பட்டது. இதனாலேயே அந்தச் சமுதாயம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் சமுதாயமாகவும் ஆனது. இறைவன் தன் இறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆனில் இப்படி இதைச் சுட்டிக்காட்டுகின்றான்:
(விசுவாசிகளே) நன்மையான காரியங்களை (ச் செய்யும் படி மனிதர்களை) ஏவி பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயங்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள் (அல்குர்ஆன் 3:110)
அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை அப்படியே வாழ்ந்து காட்டிய இந்தச் சமுதாயத்திடம் அதிகாரமும் ஆட்சியும் ஒப்படைக்கப்பட்டது. அதுபோது இந்தச் சமுதயாம் இப்படி நடந்தது. இனிவரும் நாளிலும் அதன் கைகளில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அப்போதும் அது இப்படியே நடக்கும் அது எப்படி நடந்தது? நடக்கும்?
அவர்கள் எத்தகையோர் என்றால் நாம் அவர்களுக்குப் ப10மியில் ஆதிக்கம் கொடுத்தால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுகுவார்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். நன்மையான காரியங்களைக் கொண்டே பாபமான காரியங்களைத் தடைசெய்வார்கள். (அல்குர்ஆன் 22:41)
இந்த நீதிமிக்க சமுதாயம் இறைவனைத்தவிர வேறுயாரையும் வணங்காத வழிபடாத வாழ்க்கைபடாத சமுதாயம் ஏனைய சமுதாயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று உண்மையும் சத்தியமும் அதன்வழிமுறை. இந்தக் கொள்கை இந்த வாழ்க்கை நெறி ஏனைய ஜாஹிலிய்ய சமுதாயங்களோடு எள்ளளவு கூட சமரசம் செய்திட விரும்பவில்லை. அதனுடைய இயல்பால் அது சமரசம் செய்து கொள்ளவும் முடியாது. இந்தக் கொள்கை வழிவந்த அந்த முதல் சமுதாயம் மௌட்டீகங்களின் காட்டுமிராண்டித்தனங்களை எதிர் கொண்டு எண்ணற்ற இழப்புகளை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அது தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது வாழும் சமுதாயமும் அப்படிக் கொள்கைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அல்லது சமரசம் செய்து கொள்ளவும் போவதில்லை. இனிவரும் சமுதாயங்களும் அப்படி விட்டுக்கொடுக்கப் போவதில்லை. சமரசம் செய்து கொள்ளப் போவதுமில்லை. இஸ்லாம் கொள்கையளவிலும் சரி நடைமுறை வாழ்க்கையிலும் சரி ஜாஹிலிய்யா என்ற மௌட்டீக மூடக் கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. இஸ்லாம் என்பது அல்லாஹ்வை அனைத்தையும் படைத்தவனை வழிப்படுவது ஜாஹிலிய்யா என்பது மனிதன் மனிதனை வழிபடுவது மனிதன் மனிதனுக்கு அடிமைப்படுவது. ஆகவே தான் இஸ்லாம் தந்த ஜாஹிலிய்யாவோடு பேரம்பேசி சமரசம் செய்து தன்னைத் தாழ்த்திக் கொள்வதில்லை. கொள்கையளவிலோ கோட்பாடுகளின் அளவிலோ நடைமுறை வாழ்க்கையிலோ சத்திய இஸ்லாம் ஜாஹிலிய்யாவோடு வாழாது வாழமுடியாது. ஒன்றிலோ சத்தியமாம் வாய்மையாம் இஸ்லாம் வாழும் அல்லது அசத்தியமாம் ஜாஹிலிய்யா வாழும். பாதி இஸ்லாம் பாதி ஜாஹிலிய்யயா என்றொரு நிலையை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்நிலையில் இஸ்லாம் தெளிவாகக் கூறுகின்றது. உண்மையென்பது ஒன்றே ஒன்றுதான். அதைக் கூறுபோட்டிடக்கூடாது. உண்மையல்லாதவை பொய்யாகவே இருந்திடமுடியும். உண்மையோடு பொய்யும் தோளோடுதோளாய் நின்று வாழ்ந்திடும் என்பது முடியாத ஒன்று. அதிகாரம் அல்லாஹ்விடம் இருக்கவேண்டும் அல்லது மௌட்டீகத்திடம் இருந்திட வேண்டும். அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் வாழும் அல்லது மனித மூளைகளில் உதித்த குளறுபடிகள் குடியிருக்கும். இறைவன் எச்சரிக்கின்றான்:
(நபியே) அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர். அன்றி உமக்கு அல்லாஹ் அருளியவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பிவிடாத படியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாயிரும் (அல்குர்ஆன் 5:49)
எனவே (நபியே) அந்த உண்மையான மார்க்கத்தின் அளவில் அவர்களை நீர் அழையும். உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீர் உறுதியாக இரும். அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். (அல்குர்;ஆன் 42:15)
உமக்கவர்கள் பதில் சொல்லாவிட்டால் நிச்சயமாக அவர்கள் தங்கள் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்களென்று உறுதியாக நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வுடைய நேரான வழியையன்றி தன்னுடைய மன இச்சைகளைப் பின்பற்றுவனைவிட வழி கெட்டவன் எவனுமுண்டா? (அல்குர்ஆன் 28:50)
(நபியே நேரான) மார்க்கத்தின் ஒரு வழியில் தான் நாம் உம்மை ஆக்கி இருக்கின்றோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றுவீராக அறிவற்றவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு விரோதமாக இவர்கள் உமக்கு யாதோர் உதவியும் செய்திட முடியாது. நிச்சயமாக அக்கிரமக்காரர்களுள் சிலர் அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள். அல்லாஹ்வே பயபக்தியுடையோருக்கு நண்பனாவான். (அல்குர்ஆன் 45:18, 19)
மௌட்டீகக் காலத்துச் சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொண்ட மக்களுக்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5:50)
இந்த இறைவசனங்கள ஓர் யதார்த்தத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அதாவது இரண்டு வழிகளே உள்ளன. அங்கு மூன்றாவது ஒருவழியென்பது இல்லை. ஒன்றிலோ அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் வழிப்பட்டு நடக்கவேண்டும். அல்லது மௌட்டீகக் கொள்கைகளைப் (ஜாஹிலிய்யாவைப்) பின்பற்றி நடந்திட வேண்டும். அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு மனிதர்கள் தங்கள் வழக்குகளில் தீர்வைத்தேடிட வேண்டும். இல்லையேல் மனிதர்களின் விருப்பங்களையே தீர்வாகப் பெற்றிடவேண்டும். இதில் அல்லாஹ்வின் வழியில் ஒருகால், ஜாஹிலிய்யாவின் வழியில் ஒருகால் என்பதற்கு பேச்சே இல்லை. இதில் இஸ்லாத்தின் மிக முக்கியமான பணி என்னவெனில் இந்த மௌட்டீகங்கள் அஞ்ஞானங்கள் ஆட்சி செய்வதை மனிதர்களை வழிநடத்துவதைத் தடுத்திட வேண்டும் என்பதே. இந்த மௌட்டீகங்கள் மனிதர்களை வழிநடத்துவதைத் தடுத்து ஆட்சியும் அதிகாரமும் இறைவழியில் இறைவனின் வழிகாட்டுதலிடம் வருமாறு செய்திட வேண்டும். இப்படிச் செய்திடுவதன் நோக்கம் மனிதர்களுக்கு அல்லாஹ் அருளிச் செய்த நேரிய வழிகாட்டுதலின் நன்மைகளும் பலன்களும் நீதியும் கிடைத்திட வேண்டும் என்பதே. இதனால் மனிதன் தன் இயல்போடும் தன்னைச் சுற்றியிலிருக்கும் இயற்கையோடும் இயைந்ததோர் வாழ்க்கையை வாழ்ந்திட முடிகின்றது. இறைவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும் என்ற நிலை அவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் தன்னைப் போன்ற மனிதர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்திட வேண்டியதில்லை.
இதை ரபாய் பின் அம்ர்(ரலி) அவர்கள் பாரசீக படைதளபதி ருஸ்தும் அவர்களிடம் மிக அழகாக எடுத்துக் கூறினார்கள். ருஸ்தும் கேட்டார் :
நீங்கள் இங்கே ஏன் வந்தீர்;கள்? ரபாய் அவர்கள் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) பதில் சொன்னார்கள். மனிதர்களுக்கு அடிபணிவதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விரும்பும் மனிதர்களை விடுவிக்க அல்லாஹ் எங்களை அனுப்பினான். மிகவும் குறுகலான கொள்கைகளிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் விசாலமான வாழ்க்கை நெறிக்குள் புகவிரும்புவோருக்கு உதவி செய்யவே நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். அத்தோடு அவர்களுக்கு இறப்பிற்குப் பின்வரும் மறுஉலக வாழ்க்கையிலும் வெற்றியைப் பெற்றுத் தருகின்றோம். அநீதிகளிலிருந்து மனிதர்களைக் காத்து அல்லாஹ்வின் நீதி கிடைக்கச் செய்திட நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். மனிதர்களின் ஆசைகள்: அந்த ஆசைகளை நிறைவு செய்வதற்கு அவன் தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வாழ்க்கைப் போக்கு பழக்க வழக்கங்கள் பாரம்பரிய பண்பாடுகள் இவற்றிற்குத் துணையாக நின்றிட அருளப்பட்ட மார்க்கமல்ல இஸ்லாம். இவற்றையெல்லாம் மாற்றிவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை வாழ்க்கை நியதிகளை நீதியை நிலைநாட்ட வந்த அறுதி இறைநெறியே இஸ்லாம். சிலர் இப்படியொரு வாதத்தை அண்மைகாலந்தொட்டே பேசிவருகிறார்கள். அதாவது ஜாஹிலிய்யாவின் அஞ்ஞானத்தின் பல்வேறு கொள்கைகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஒத்திருக்கின்றனவே என்பதுதான். இல்லை நிச்சயமாக இல்லை அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வேர் வேறு. அஞ்ஞானத்தின் வேர்கள் வேறு. இவை இரண்டும் ஒன்றாக மாட்டா இறைமறையாம் திருமறை இதனை இப்படித் தெளிவுபடுத்துகின்றது.
(ஒரே விதமான மழை பெய்த போதிலும்) வளமான ப10மி தன் இறைவனின் கட்டளையைக் கண்டபோது தனது புற்ப10ண்டுகளை வெளிப்படுத்துகின்றது. எனினும் கெட்ட(களர்)ப10மியிலோ வெகு சொற்பமேயன்றி முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பலவகையிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:58)
அஞ்ஞானம் அதாவது இறைவனின் கொள்கைகளுக்கு எதிரானவை குழப்பங்கள் நிறைந்தவை. அவை ஒரு மனிதனின அல்லது குறிப்பிட்ட மனிதர்களின் அல்லது குறிப்பிட்டக் கோத்திரத்தாரின் அல்லது குறிப்பிட்டக் குலத்தாரின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டவை. இதற்கு நேர் எதிராக இஸ்லாம் எல்லா மக்களின் நலவாழ்வையும் ஈடேற்றத்தையும் இலட்சியமாகக் கொண்டது. அனைவருக்கும் நீதியைத் தருவது. ஆதனால் நிரந்தர நிம்மதியைத்தருவது. இவையெல்லாம் இஸ்லாத்திற்கும் அதற்கு எதிரான ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளில் சில. இறைவனின் நேரான சீரான வழிகாட்டுதலாம் இஸ்லாத்தையும் அதன் நிரந்தர வைரியான ஜாஹிலிய்யாவையும் இணைத்து ஒரு வாழ்க்கை நெறியை வகுத்திட இயலாது. அப்படியே இயன்றாலும் இறைவன் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனை முற்றாக நிராகரித்து விடுகின்றான். இறைவன் தன்னோடு யாரையும் எதையும் எந்த நிலையிலும் இணையாக வைத்திடுவதை விரும்பிடவில்லை. அவன் தான் மனிதர்களுக்குத் தேர்ந்தெடுத்து வழங்கிய வாழ்க்கை முறைகளோடு வேறு வாழ்க்கை நெறிகளை விரவிடுவதை அல்லது இணையாக ஆக்கிவிடுவதை விரும்புவதில்லை. இறைவனின் அப்பழுக்கற்ற வழிகாட்டுதல்களோடு வேற்று வாழ்க்கை வழிகளை இணைத்துவிட்டால் அவை இணைவைப்பின் மௌட்டீகத்தின் வழிகாட்டுதலே என்பதை இறைவன் மிகவும் தௌ;ளத் தெளிவாக விளக்கிவிட்டான். இஸ்லாத்தை நாம் மக்களிடம் விளக்கிச் சொல்லிடும் போது இவற்றைத் தெளிவாக விளக்கிட வேண்டும். இவற்றை ஆழமாக மக்களின் மனதில் பதித்திட வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை வாழ்க்கை நெறிகளையும் அத்தனை வழக்கங்களையும் அத்தனைப் பழக்கங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் நம்மிடமிருந்து கெல்லியெறிந்திட வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு முழுமையாக நம்மைப் பிணைத்திட வேண்டும் என்று பொருள்படும். இதே போல் இஸ்லாத்திற்கு அந்நியமான வேற்று வாழ்க்கை நடைமுறைகள் எத்துணை கவர்ச்சியோடும் நம்மைக் கவ்விக்கொள்ள வந்தாலும் நாம் அவற்றின் வலையிலே வீழ்ந்திடக்கூடாது. அவை முடிவில் குழப்பத்திலேயே வீழ்த்தும். வாழ்வின் எந்தப் பகுதியையும் புறக்கணித்துவிடாமல் இஸ்லாத்தை வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் புகுத்திட வேண்டும். இப்படிச் செய்திடுவதில் அறிவியல் துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ச்சிகளை நாம் படித்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றைப் பயன்படுத்திடலாம். இதற்கான உத்திரவாதம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும்போதும் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிடும் பணியை மேற்கொண்டிடும் போதும் நாம் இவற்றைத் தெளிவாக மக்களின் மனதில் பதியவைத்திட வேண்டும். இப்படி மக்களைத் தெளிவுபடுத்திடும் போது நாம் உண்மையின் பக்கம் உண்மையான இறைவனின் பக்கம் சத்தியத்தின் பக்கம் நீதியின் பக்கம் நிற்கின்றோம் என்பதை உணர்வோம். இந்த உணர்வு நம்முள் ஒரு பெரும் பலத்தையும் நெஞ்சுரத்தையும் தருவதை நாம் உணர்வோம். இந்நெஞ்சுரமே நம்மைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிட வகைசெய்யும். இஸ்லாத்தை வளைத்தும் நெளித்தும் நாம் மக்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். கேட்போரின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் நாம் இஸ்லாத்தை ஊட்டிவிடவேண்டும் என்பதற்காக நேரான இந்த மார்க்கத்தைத் திரிக்க வேண்டாம். சொல்வதை நேரடியாக தெளிவாகச் சொல்லிவிடுவோம். இதில் கொஞ்சமும் தயக்கம் வேண்டாம். மனிதர்களே நீங்கள் மூழ்கிக்கிடக்கும் இந்த அறியாமை உங்களைத் தூய்மையற்றவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. இறைவன் உங்களைத் தூய்மைப்படுத்த விரும்புகின்றான். இறைவன் உங்களை நேர்மையாளர்களாக ஆக்கிட விரும்புகின்றான். நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழக்கங்கள் உங்களைச் சேற்றில் தள்ளிவிட்டன. அல்லாஹ் உங்களை கழுவித்தூய்மைப்படுத்த விரும்புகின்றான். நீங்கள் கீழானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இறைவன் உங்களை உயர்ந்ததொரு வாழ்க்கை நெறியின் பக்கம் அழைக்கின்றான். அநியாயமும் அட்டூழியமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை இவற்றிலிருந்து விடுவித்து நீதியும் நிம்மதியும் அமைதியும் நிறைந்ததோர் வாழ்க்கையின் பக்கம் அழைக்கின்றான். இரக்கம் என்பதை எடுத்தெறிந்து விட்ட ஆட்சியாளர்களின் கைகளில் நீங்கள் சிக்கியிருக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை அன்பு கருணை என்பவற்றைக் கொண்டு அரவணைக்க விரும்புகின்றான். அதற்காகவே அவனின் வழி காட்டுதல்களின் பக்கம் அழைக்கின்றான். இஸ்லாம் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் அதன்மூலம் உங்கள் வாழ்க்கையின் போக்கையும் மாற்றியமைத்திடும். ஒரு முறை இந்த மாற்றங்களுக்கு உட்பட்ட பிறகு நீங்கள் நெளிந்து கொண்டிருந்த பழைய வாழ்க்கை பாழானது என்பதை உணர்வீர்கள். மேற்கிலும் கிழக்கிலும் கோலோச்சும் கொள்கைகளும் அந்தக் கொள்கைகள் ஏற்படுத்திவரும் குளறுபடிகளும் உங்களுக்குப் புரியும் அந்நிலையில் நீங்கள் அவற்றைப் போற்றமாட்டீர்கள் தூற்றுவீர்கள். ஒருமுறை இந்த உண்மை நெறியாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலாம் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்றால், இன்று உலகில் உலாவரும் கொள்கைகளும் கோட்பாடுகளும் எந்த அளவுக்கு அறிவீனமான அபத்தங்கள் என்பதை யாருடைய உதவியுமின்றிக் கண்ணெதிரே கண்டுகொள்வீர்;கள். இன்று நீங்கள் வீழ்ந்திருக்கும் அதலபாதாளத்தில் இருந்துகொண்டு உங்களைப் படைத்த இறைவனின் வாழ்க்கை நெறியின் உயர்வை உங்களால் கண்டு கொள்ள இயலவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் இந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை நிலைநாட்டவிடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இதன்மூலம் அதன் அறிவுமிக்க வழிகாட்டுதலின் வெளிச்சங்களை நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் கண்டுகொள்ள முடியாமல் தடுத்துவிட்டார்கள். இப்படி மகத்தான இந்த வாழ்க்கை நெறியை மக்களின் கண்களிலிருந்து மறைத்துக் கொண்டிருக்கும் மனித இனத்தின் இந்த எதிரிகள் ஒன்றாய் ஒரே முகமாய் இணைந்:து நிற்கின்றார்கள். எனினும் அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையினால் இந்த மார்க்கம் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அருள்மறையாம் திருமறை இதனை விளம்பிக் கொண்டே இருக்கின்றது. இந்தக் கொள்கைகள் இந்த வாழ்க்கை நெறி மீண்டும நிலைநாட்டப்படும என்பதை நாங்கள் எந்த ஐயமுமின்றி நம்பகின்றோம். இப்படித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் நாம் இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச்சொல்லிட வேண்டும். இதுதான் சத்தியம். இஸ்லாம் அதன் ஆரம்ப நாள்களில் எந்த ஒளிவும் மறைவுமின்றி தெளிவாகத்தான் தன் திருத்தூதைச் சமர்ப்பித்தது. அரேபியாவில் பாரசீகத்தில் ரோம் நாட்டில் இப்படி எந்த நாட்டில் அது பிரவேசித்த போதும் இஸ்லாத்தின் செய்தி பட்டவர்த்தனமாக அந்த மக்களுக்குப் படும்படியே சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்லாம் எந்த நிலையிலும் மக்களைத் திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டதுமில்லை. மக்கள் மூழ்கிக்கிடந்த ஜாஹிலிய்யாவோடு சமரசம் செய்து கொண்துமில்லை. ஆனால் இன்று சிலர் எடுபடும் வகையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லுகின்றோம் என்ற மேதாவித்தனத்தில் இஸ்லாத்தை ஏனைய மௌட்டிகக் கொள்கைகளோடு ஒப்பிட்டுக் கீழே இறக்கி விடுகின்றார்கள். இப்படித்தான் இவர்கள் இஸ்லாமிய ஜனநாயகம் இஸ்லாமியப் பொதுவுடைமை என்றெல்லாம் புதிய இசங்களை விற்பனை செய்யப் புறப்பட்டு வந்திருக்கின்றார்கள். இந்த இஸ்லாமியப் பேரறிஞர்கள்(?) இப்படியொரு புரட்சி முறையை ஊரெல்லாம் வியாபாரம் செய்து வருகின்றார்கள். இன்றைக்கு உலக அரங்கில் உலாவரும் பொருளாதார முறையைச் சற்றே செப்பனிட்டால் அது இஸ்லாமியப் பொருளாதாரமாகி விடுமாம். ஆதே போல் இன்றைய அரசியலை அணு அளவே அசைத்து நிறுத்திவிட்டால் அது இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்டு விடுமாம். இன்னும் இன்றைய நீதித்துறையை ஒருமுறைத் தொட்டுத் திருப்பிவிட்டால் அது இஸ்லாமிய நீதி முறையாகி விடுமாம் பிதற்றுகிறார்கள் இவர்கள். இப்படியெல்லாம் இவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து புரட்சி வழிகளைக் கண்டுபிடித்து மக்களை மகிழ்சிப்படுத்தி இஸ்லாத்தைப் பரப்பி நிலைநாட்டி விடுவார்களாம்.
ஆனால் உண்மையும் நிஜமான நடைமுறையும் வேறாக இருந்தன. இன்றைய ஜாஹிலிய்யா சமுதாயங்கள் தலைகீழானதொரு மாற்றத்தின் மூலமே இஸ்லாமிய மயமாகிடும். இங்கே அனைத்தையும் தழுவியதோர் அடிப்படை மாற்றம் தேவை. ஏனெனில் இஸ்லாம் இன்றைய ஜாஹிலிய்யாவின் பொதுவாக அஞ்ஞான சமுதாயங்களுக்கு நேர் எதிரானது மாற்றமானது. மனித இனத்தைக் கவ்வியிருக்கும் பிணிகளைப் போக்கிட அவற்றில் மேலெழுந்தவாரியாக சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதாது. இந்தச் சின்ன சின்ன மாற்றங்கள் அவர்களைக் கவ்வியிருக்கும் மௌட்டிகங்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்திடப்போதா. இங்கே மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் தளை அறுக்கப்பட்டு அவன் அல்லாஹ்வின் அடியானாக மாறிட வேண்டும். அவன் போற்றிப் புகழும் தலைவர்களையும் தெய்வங்களையும் தூக்கியெறிந்து விட்டு புதியதோர் தலைமையையும் புதியதோர் பாதையையும் ஏற்றிட வேண்டும். படைத்தவற்றின் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதிலிருந்து முற்றாக வெளியே வந்து படைத்தவன் அருளிய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அவன் இதுவரை சிரந்தாழ்த்தி வந்த கட்டளைகளை எடுத்து வீசிவிட்டு இறைவனின் கட்டளைகளை ஏற்றிட சித்தமாய் இருந்திட வேண்டும். இப்படி அனைத்திலும் ஓர் ஒட்டுத்தனமான ஆழமான அடிப்படை மாற்றம் வந்தாக வேண்டும். இது தான் இஸ்லாத்தின் தேவை. இதை நாம் உரக்க முழங்கிச் சொல்லுவோம். இதில் நாம் எந்த ஐயத்தையும் யார் மனதிலும் விட்டு வைக்க விரும்பவில்லை. எடுத்த எடுப்பில் இப்படித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இஸ்லாத்தை எடுத்து வைப்பதை மக்கள் விரும்பாமலிருக்கலாம். அவர்கள் வெருண்டோடிடவும் செய்யலாம். இதைக்கண்டு அஞ்சவும் செய்யலாம். இவைதான் அன்று இறைவனின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்கள் முன்னால் எடுத்து வைத்தபேது நடந்தன. அந்த மக்கள் பெருமானார்(ஸல்) அவர்களை எதிர்த்தார்கள் மறுத்தார்கள். தங்கள் வலிமையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து எதிர்த்தார்கள். ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை அழித்திட தங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்தார்கள். பின்னர் என்ன நடந்தது. எந்தச் செய்தியைக் கேட்டு அவர்கள் வெருண்டோடினார்களோ எந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்று முனைப்போடு நின்றார்களோ அந்தச் செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். தங்களால் இயன்றதையெல்லாம் செய்து அந்தச் செய்தியைப் பரப்பினார்கள். நிலைநாட்டினார்கள். அந்த மக்கள் எடுத்த எடுப்பில் எப்படி இந்தச் செய்தியை வரவேற்றார்கள் என்பதை அல்லாஹ் இப்படி அறிவுறுத்துகின்றான்.
வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர். அதுவும் சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடகின்றனர்) (அல்குர்ஆன் 74:50,51)
இப்படி வெருண்டோடியவர்கள் தாம் பின்னர் இந்த இறைவழிகாட்டுதலின் ஒப்பற்ற உறுப்பினர்களாக வாழ்ந்தனர். அன்று இஸ்லாம் தன்னை முதல் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்ட போது அது எதிர்கொண்ட சூழ்நிலைகள் மிகவும் கர்ணகடூரமானவை. அந்தச் சூழ்நிலைகளுக்குக் கிஞ்சிற்றும் சளைத்தவை அல்ல இன்றைய சூழ்நிலைகள். அன்று அந்தச் சமுதயாத்தை முழுமையாகக் கவ்வியிருந்த ஜாஹிலிய்யாவுக்கு அஞ்ஞான கொள்கைகளுக்கு முற்றிலும் அந்நியாயமான கொள்கையாகவும் அறிமுகமாகாத கொள்கையாகவும் வந்தது இஸ்லாம். இந்த முழு உலகுக்குமே புதியதோர் கொள்கையாக வந்தது இஸ்லாம். அதைச் சுற்றி பலமும் புகழும் பெற்ற பேரரசுகள் தங்கள் ஆணவ ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தன. இஸ்லாத்தின் வருகையை இந்த வல்லரசுகள் தங்களுக்கு நேர் எடுத்து வைக்கப்பட்ட அறைகூவலாகவே கருதின. இத்துணை எதிரான சூழ்நிலைகள் தன்னைச் சுற்றியிருந்த போதும் இஸ்லாத்தின் அழைப்பு கம்பீரமாகவே அந்த மக்களிடையே ஒலித்தது. அது தன்னை அந்த மக்களிடம் அந்த நிலையிலேயே தீர்க்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தியது. அன்று போல் இன்றும் இன்று போல் என்றும் இந்த அழைப்பு வலிமை மிக்கதாகவும் தெளிவுமிக்கதாகவுமே இருக்கும். இஸ்லாம் தன் இயல்பாலேயே எந்தச் சூழ்நிலையிலும் எடுபடும் பலம் கொண்டது. எத்துணை வலிமைமிக்க எதிர்ப்புகள் எதிரே வந்தாலும் அந்த எதிர்ப்புகள் எப்படித்தான் சுற்றிச் சுற்றித் தாக்கினாலும் இஸ்லாம் அவற்றை எதிர் கொண்டு வென்றிடும் வன்மையும் திண்மையும் கொண்டது. வாய்மையே வடிவாய் அமைந்த இஸ்லாம் வளரும் நாடுகளைப் போல் வளர்ந்த நாடுகளுக்கும் தேவைப்படுகின்றது. இன்னும் சொன்னால் இஸ்லாம் மட்டுமே இந்த வளரும் நாடுகளையும் வளர்ந்த நாடுகளையும் அழிவிலிருந்து காப்பாற்றிடும். இஸ்லாத்தின் இன்னொரு மகிமை என்னவென்றால் இஸ்லாம் அஞ்ஞான கொள்கைகள் அனைத்தையும் எதிர்க்கும் அறைகூவியழைக்கும். ஆனாலும் தனது கொள்கையில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைத்திடாது விட்டுக்கொடுத்திடாது. ஜாஹிலிய்யாவின் படைபலத்தையும் இஸ்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்கின்றது. எங்கேயும் அதோடு சமரசம் செய்து கொள்வதில்லை. எல்லா ஆதிக்கச் சக்திகளுக்கு முன்னேயும் அனைத்து மக்களின் முன்னேயும் இஸ்லாம் தன்னை எந்த வளைவும் இல்லாமல் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதனால் மக்கள் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதோடு இஸ்லாம் இறைவனால் தங்களுக்கு வழங்கப்பட்ட அருள்கொடை என்பதையும் உணர்ந்தார்கள் தெளிந்தார்கள் மக்கள். இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட அருள்நெறி. அந்த இறைவன் தான் மனிதனைப் படைத்தான். அந்த மனிதன் எத்தகைய செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வான் என்பதை அந்த இறைவன் நன்றாக அறிவான். ஆகவே அவன் வழங்கிய வழிகாட்டுதலை நாம் சமரசம் செய்து ஜாஹிலிய்யாவிடம் சரணடைவது போல் கெஞ்சிப் பிரச்சாரம் செய்திட வேண்டாம். ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்தோடு நெளிந்து கொண்டிருக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் சிலர் மக்களிடம் எப்படியொரு தலைகீழ் மாற்றத்தைப் பற்றிப் பேசிடுவது எனக் கலங்குகின்றார்கள். அப்படியே நாம் பேசினால் அது மக்களிடம் எடுபடுமா? என்றொரு மயக்கம் இவர்களுக்கு. இப்படியொரு மயக்கம் இவர்களுக்குத் தேவையில்லை. மனிதன் உண்மை எது பொய் எது என்பதை உணர்ந்திடும் ஆற்றல் பெற்றவன். அவன் உண்மையை உண்மை என உணர்ந்தவுடன் ஏற்றுக்கொள்ளும் இயல்பும் நெஞ்சுரமும் படைத்தவன். அவன் தலைகீழ் மாற்றத்திற்குத் தயாரானவன். தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் கொள்கை தூய்மையானது முழுமையானது நாம் ஏற்கனவே ஏற்று வாழ்ந்த கொள்கையைவிட உயாந்தது என்பதை உணர்ந்தால் உடனே ஏற்றுத் தன் வாழ்வை மாற்றிக்கொள்வான். இதை விட்டுவிட்டு நீங்கள் இன்றைக்கு மக்கள் மத்தியில் குடியிருக்கும் ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகங்களில் சிலபல மாற்றங்களைக் கொண்டு வந்தாலே இந்த மௌட்டிகங்கள் இஸ்லாமாக மாறிவிடும் என்று பேசினால் என்னவாகும்? மக்கள் இஸ்லாம் என்பது முக்கால் பங்கு மௌட்டிகந்தான் என எண்ணலாம். அல்லது நாம் ஏற்கனவே ஒரு நல்ல கொள்கையில்தான் இருக்கின்றோம். சில சில்லரை மாற்றங்களுக்காக அல்லல்களை ஏற்பானேன்? ஏன எண்ணுவார்கள். அதே போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்காக நாம் ஏன் ஏற்கனவே நிலைநாட்டப் பெற்ற ஒரு வாழ்க்கை நெறியை விட்டுவிட வேண்டும்? என்றெல்லாம் அவர்கள் நினைக்கலாம். நாம் இஸ்லாத்தை விட்டுக் கொடுத்தும் வளைத்துப் பேசியும் அதனை மக்களுக்கு ஏற்றாற்போல் போதிக்கின்றோம் எனப் பீற்றிக் கொள்வதில் இத்துணைக் கோட்பாடுகள் மறைந்து கிடக்கின்றன என்பதை உணர வேண்டும். இஸ்லாத்தை அது எப்படி இருக்கின்றதோ அப்படியே பிரச்சாரம் செய்வோம். நாம் மௌட்டிகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி இஸ்லாத்தை நியாயப்படுத்த வேண்டாம். இன்று மேலை நாடுகளிலிருக்கும் வாழ்க்கை நெறிகளையும் வாழ்க்கை முறைகளையும் நாம் நிச்சயமாக ஏற்பதற்கில்லை. அவற்றை நாம் ஒட்டுமொத்தமாக மறுக்கின்றோம். எதிர்க்கின்றோம். இதில் நாம் தெளிவாகவே இருப்போம். இந்த மேலைநாடுகளும் கீழை நாடுகளும் மனிதர்களை எந்தத் திசைநோக்கி இழுத்துச் செல்கின்றனவோ அதற்கு நேர் எதிரான திசையில் தான் மனிதனின் இவ்வுலக வாழ்வின் வெற்றியும் மறுமை வாழ்வின் வெற்றியும் இருக்கின்றது. ஆதலால் நாம் இந்த மேலை நாடுகள் மனிதர்களை எந்தத் திசையில் இழுத்துக் கொண்டிருக்கின்றனவோ அதற்கு நேர் எதிரான திசைநோக்கித் திருப்பிடவிருக்கின்றோம் என்பதை மறக்க வேண்டாம். இந்த மேலைநாடுகள் மனிதர்களை இழுத்துச் செல்லும் திசையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து தொடர்ந்து நாமும் மேலைநாடுகள் மனிதர்களை இழுத்துச் செல்லும் திசையிலேயே இழுத்துச் செல்வோம் என்பதற்கில்லை. நாம் போடுவது நேர் எதிரான எதிர்நீச்சல் என்பதை நாம் உணர்வோம். காரணம் நாம் சொல்வது இஸ்லாம் இன்றைய சமுதாயங்களின் போக்கு அதற்கு நேர் எதிரான ஜாஹிலி;ய்யா என்ற மௌட்டிகம். அதேபோல் இஸ்லாம் மேலெழுந்த வாரியான மாற்றங்களை எதிhப்பார்க்கவில்லை. அது தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கின்றது. இஸ்லாத்தை நாம் அதன் உண்மையான வடிவில் எடுத்துச் சொல்லிடும் போது பலர் முகஞ்சுழிக்கலாம் அவர்கள் ஏற்கட்டும் அல்லது மறுக்கட்டும் அது அவர்களின் சுதந்திரம் ஏற்றால் ஈடேற்றம் அவர்களுக்கு மறுத்தால் அல்லாஹ்விடமிருக்கின்றது அவர்களின் கணக்கு. நிச்சயமாக அல்லாஹ் படைக்கப்பட்டவைகளிலிருந்து தனித்தவன் தனியானவன். இங்கே வினா ஒன்றே ஒன்றுதான். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றானா? (ஈமான் கொள்கின்றானா?) இல்லை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றானா? (ஈமான் கொள்ள மறுக்கின்றானா?) அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகத்தில் வாழ்பவனே. இதனை தெளிவுபடுதத்pயாக வேண்டும். அல்லாஹ்வை ஏற்றுக்கொள்பவன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்ந்திட வேண்டும். அவன் மட்டுமே முஸ்லிம். ஜாஹிலிய்ய முறைகளின்படி அஞ்ஞான முறைகளின் படி வாழ்ந்து கொண்டு தன்னை முஸ்லிம் எனச் சொல்பவனை மீண்டும் புனரமைத்து முஸ்லிமாக மாற்றிட வேண்டும். இதுவும் இன்று இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ்பவர்களின் தவிர்க்கவியலாத பணி. இன்று நாம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கின்றோம் என்றால் நாம் இந்த மக்களிடம் எந்தச் சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் முஸ்லிம்களைப் புனரமைக்க விரும்புகின்றோம் என்றால் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கின்றோம் என்பதனால் அல்ல. நாம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதும் முஸ்லிம்களைப் புனரமைக்க விரும்புவதும் அவர்களை நாம் உளமாற நேசிக்கின்றோம் என்பதனால் தான். இது தான் இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களின் பார்வை. இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் அளப்பரிய கருணை மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான கூலிகளை மறுமையில் கொடுப்பான். இப்படி இந்த உலகில் எதையுமே எதிர்பார்க்காமல் பணி செய்கின்ற நாம் ஏன் மௌட்டிகங்களின் அளவுக்கு இஸ்லாத்தைத் தாழ்த்திட வேண்டும்? நாம் ஏன் தோல்வி மனப்பான்மையோடும் மன்னிப்புக் கேட்கும் தோரணையிலும் அல்லாஹ்வின் நிறைவான மார்க்கத்தை மக்களிடம் சமர்ப்பித்திட வேண்டும். நம்முடைய முதல்பணி ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகத்தை இஸ்லாமிய நெறிமுறைகளைக் கொண்டு மாற்றியமைத்திட வேண்டும் என்பதே. இதை நாம் அஞ்ஞான கொள்கைகளின் (ஜாஹிலிய்யாவின்) வாழ்க்கை முறைகளிடம் மண்டியிட்டுச் செய்திடவியலாது. இதைச் செய்வதற்கு ஜாஹிலிய்யாவின் பாதையில் போவோம் பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரும் கருத வேண்டாம். முதல் பயணமே ஜாஹிலிய்யாவன் பாதையில் தான் என்றால் முடிவு தவறாமல் அதன் முடிவாகத்தான் இருந்திடும். வேண்டாம். நாம் இஸ்லாத்தின் பாதையிலேயே நமது பயணத்தைத் துவங்குவோம். இதில் எதிர்ப்படும் தடைகளும் தடங்கல்களும் என்னவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். பின்னர் அவற்றை வெற்றி கொள்வோம். இந்த வெற்றி நாம் ஜாஹிலிய்யாவின் மேல் கொள்ளும் நிரந்தர வெற்றியாகும். அது இஸ்லாத்தின் வெற்றி. அல்லாமல் எந்த வகையிலும் நாம் மௌட்டிகங்களோடு மண்டியிட மாட்டோம். அதனோடு சமரசம் செய்து சாய்ந்து வாழ்ந்திட மாட்டோம்.
இங்கே நாம் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். நாம் (ஜாஹிலிய்யா) அஞ்ஞான சமுதாயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் இந்த அஞ்ஞான சமுதாயங்களைத்தான் அனுதாபத்தோடும் அன்போடும் இஸ்லாத்தின் பக்கம் அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதில் நாம் கண்ணுங்கருத்துமாய் வாழ்ந்திட வேண்டும். இந்த மௌட்டிகங்களோடு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோம் அதில் கண்ணியமாக நடந்து கொள்வோம். அதற்காக ஒரேயடியாக ஜாஹிலிய்யாவில் மூழ்கிட மாட்டோம். இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் எடுத்துச் சொல்லிடுவோம். அதில் அன்பையும் அனுதாபத்தையும் காட்டிடுவோம். ஈமான் கொண்டவர்களாக அதாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பதால் நம்முள் ஓர் அறிவுத்தெளிவையும் உயர்வையும் கண்ணியத்தையும் உணர்வோம். அதற்காக நாங்களே உயர்ந்தவர்கள் எனக் கர்வங்கொண்டலைந்திட மாட்டோம். எளிமையையும் பவ்வியத்தையும் கைக்கொண்டவர்களாக இஸ்லாத்தை எடுத்துச்சொல்வோம். அல்லாமல் ஜாஹிலிய்யாவுக்கும் இஸ்லாத்திற்கும் பாலம் போட்டுத் தரமாட்டோம். அப்படியொரு பாலம் போடுவோமேயானால் அது ஜாஹிலிய்யாவின் பிடியிலிருப்பவர்ள் இஸ்லாத்திற்கு வந்திட போடப்படும் பாலமாகவே இருந்திடும். இப்படி இந்தப் பாலத்தைக் கடந்து இஸ்லாத்திற்கு உள்ளே வருபவர்கள். இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற சொல்பவர்களாகவும் இருக்கலாம். அல்லது இனிமேல் இஸ்லாத்தைத் தெரிந்து இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருபவர்களாகவும் இருக்கலாம். இப்படி வெளிச்சத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அனுபவிக்கும் அத்தனை பலன்களையும் அனுபவிக்கலாம். தாங்கள் எவ்வளவு பெரிய பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தோம் என்பதையும் உணரலாம். இந்த நன்;மைகளை அனுபவிக்கவும் தாங்கள் வீழ்ந்து கிடந்து அதல பாதாளத்திலிருந்து விடுபடவும் அல்லாஹ்வின் அடியார்களாக ஆகிடவும் அத்தனை வாய்ப்புகளுமிருந்தும் வசதிகளுமிருந்தும் அதனைப் பயன்படுத்திடாதவர்களிடம் நாம் அல்லாஹ் அவன் திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழியாக இந்நிராகரிப்போரிடம் சொன்னதைச் செல்வோம்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம் (அல்குர்ஆன் 109 : 6)

Wednesday, July 15, 2009

வீழ்ந்தும் எழுவோம்!

உலக வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் எழுந்து வீழ்ந்திருக்கின்றன; எத்தனையோ சமுதாயங்கள் உயர்ந்து உச்சத்தை அடைந்த வேகத்தில் பின்னடைவு எய்தியிருக்கின்றன, ஆனால் கி,பி, எட்டாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய இஸ்லாமிய பேரரசு பல்வேறு கோணங்களில் வரலாற்றில் தனித்துவம் பெற்றதாக இருந்ததுபோல இஸ்லாமிய பேரரசின் சிற்பிகளாக விளங்கிய முஸ்லிம் சமுதாயமும் உலகில் தோன்றிய சமுதாயங்களில் தனித்துவம் பெற்ற சமுதாயமாக விளங்குகிறது.

பாலைவன பொட்டல் பூமியான அரேபிய தீபகற்பத்தில் அறியாமையின் அடர்ந்த இருளில் வாழ்ந்து கொண்டிருந்த அரபு மக்களிடம் இஸ்லாம் மறுமலர்ச்சியை கொண்டுவந்தது. இஸ்லாத்தின் ஒளியில் சீர்திருத்தம் அடைந்த அந்த மக்கள் மாபெரும் வீரர்களாகவும் மகத்தான அரசியல் விற்பன்னர்களாகவும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் தேர்ந்த ஈடு இணையற்ற உத்தமர்களாகவும் உயர்ந்து நின்றார்கள், இஸ்லாம் என்ற தீபத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) முஸ்லிம்களிடம் ஒப்படைத்த நிலையில் ஹிஜ்ரி 13 ஆம் ஆண்டில் இவ்வுலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள், இஸ்லாத்தின் நுட்பங்களை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து(ஸல்) துல்லியமாக கற்றிருந்த முஸ்லிம்கள் அந்த இக்கட்டான சூழலில் விவேகமாக செயல்பட்டு அபூபக்கரை(ரலி) உம்மாவின் தலைவராக அதாவது கலீ*பாவாக தேர்வுசெய்தார்கள், இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள். எதிர்ப்புகள். குழப்பங்கள். சதித்திட்டங்கள் ஆகியவற்றை அபூபக்கரின்(ரலி) தலைமையில் நின்று போராடி வெற்றி பெற்றார்கள், அன்று தொடங்கிய முஸ்லிம் உம்மாவின் வெற்றிப்பயணம் பதிமூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து கொண்டிருந்தது, இஸ்லாத்தின் எதிரிகள் பின்னிய சதித்திட்டங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சிகள், வஞ்சக நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் முறியடித்து இஸ்லாமிய அரசு என்ற அரணின் பாதுகாப்பில் இந்த உம்மா வெற்றிநடை போட்டது, அவ்வப்போது சிறு குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டபோதும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி உலகின் முன்னணி சமுதாயமாக விளங்கியது, இந்நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாகவும் அவர்களை ஓரணியில் வழிநடத்திச் செல்லும் தலைமை கேந்திரமாகவும் விளங்கிய கிலா*பா எனும் இஸ்லாமியஅரசு 1924 ல் எதிரிகளின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் முஸ்லிம் உம்மா சிதறடிக்கப்பட்டது. கிலா*பா அழிக்கப்பட்டு 85 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ஓராயிரம் ஆண்டுகள் எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகள். இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் தீட்டிய சதித்திட்டங்கள். நயவஞ்சகர்களாக விளங்கிய முஸ்லிம் பெயர்தாங்கிகளின் துரோகம். சுயநலமிக்க ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம். உஸ்மானிய கிலா*பத்திற்கு எதிரான அரபுமக்களின் துவேஷம் இவையெல்லாம் கிலா*பா உடைந்துபோனதற்கு சில காரணங்கள் என்றபோதும் அதைவிட முக்கிய காரணிகள் சில இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், முஸ்லிம் உம்மாவை மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்வதை இலக்காக கொண்டு செயலாற்றும் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் நிச்சயம் இவற்றை அறிந்துகொள்ள வேண்டும், அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு படிப்பினை பெறவேண்டும், நம் முன்னோர்களான முஸ்லிம்களை குறைசொல்வதோ அல்லது குற்றம் பிடிப்பதோ நமது நோக்கமல்ல என்பதை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம், அல்லாஹ(சுபு) அருள்மறை குர்ஆனில் முஸ்லிம்கள் படிப்பினை பெறும்பொருட்டு பல நபிமார்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான். அதுபோன்று நாம் நமது முன்னோர்களான முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதனை ஆய்வு செய்யவேண்டும், கடந்தகால தவறுகள் களைந்தெறியப்பட்ட புதிய சமுதாயம் ஒன்றை நிறுவி மறுபடியும் இஸ்லாத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் நிச்சயம் தேவை.

அல்லாஹ்(சுபு) அருளிய சத்திய மார்க்கம் மேலோங்கவேண்டும். முஸ்லிம்கள் மறுபடியும் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கைமுறைக்கு திரும்பவேண்டும். இஸ்லாமியஅரசின் சீரிய தலைமையில் முஸ்லிம்கள் மறுபடியும் அணிவகுத்து நின்று அல்லாஹ்(சுபு) வழங்கிய இந்த மகத்தான செய்தியை(இஸ்லாத்தை) உலகின் கடைசி மனிதனுக்கும் எடுத்துச்சென்று மனித இனத்தை கு*ப்ரின் இருளிலிருந்து மீட்டு இஸ்லாத்தின் ரஹ்மாவிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் இலட்சியம்.

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) இஸ்லாத்தின் செய்தியை அறிவித்த அந்த தருணத்திலிருந்தே இஸ்லாத்திற்கும் அதனை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரிகள் உருவாகிவிட்டார்கள், சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்கள் உலக ஆதாயவாதிகள் ஆகியோர் முஸ்லிம்கள் மத்தியில் கலந்து இருந்துகொண்டு அவர்களின் துரோக செயல்களை அவ்வப்போது அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள், இஸ்லாத்தின் கொடிய எதிரிகள் தங்கள் செல்வங்களையும் ஆற்றல்களையும் மதிநுட்பங்களையும் ஒன்றிணைத்து முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக கடும்போரிட்டபோதும் அவர்களால் முஸ்லிம்களை முறியடிக்க முடியவில்லைõ அல்லாஹ்(சுபு) அவர்களின் திட்டங்களை சிலந்தி வலையாக ஆக்கினான் அவற்றை முஸ்லிம்கள் அறுத்து எரிந்துவிட்டார்கள், முஸ்லிம்கள் அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடையதூதர்(ஸல்) மீதும் இஸ்லாத்தின் மீதும் அசைக்க முடியாத ஆழமான ஈமான் கொண்டிருந்தவரையில் அவர்கள் வெல்ல முடியாத சமுதாயமாகவே விளங்கினார்கள், ஆனால் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் சறுக்குதல் ஏற்பட்டது, இந்தியா. பாரசீகம். கிரேக்கம் ஆகிய நாடுகளின் கு*ப்ர் சிந்தனைகளான அந்நிய சிந்தனைகளில் கவர்ச்சியுற்று அவற்றை பயிலவும் அரபுமொழியில் அவற்றை மொழியாக்கம் செய்யவும் முற்பட்டார்கள், தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வியந்து பாராட்டியவர்களாக மதிமயங்கி நின்றார்கள், ஐரோப்பிய மக்கள்மீதும் அவர்கள் கலாச்சாரத்தின்மீதும் அவர்களின் கல்விமுறையின் மீதும் கவர்ச்சிகொள்ள துவங்கினார்கள், இதன்விளைவாக இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்படுகின்ற அந்நியகலாச்சாரம் இஸ்லாமிய மண்ணில் நுழைந்தது. கு*ப்ரான அந்நிய சிந்தனைகள் முஸ்லிம்களின் நெஞ்சங்களை ஆட்கொண்டன, சிறந்த சமுதாயமாக இருந்து உலகமக்களை வழிநடத்திச் சென்ற முஸ்லிம் உம்மா தனது சிறப்பை மறந்து தனது கடமையைத் துறந்து தனது பாதையை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தது. அன்று தொடங்கிய இந்த உம்மாவின் வீழ்ச்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகமக்களை அநீதியிலிருந்தும் அச்சுறுத்தல்களிலிருந்தும் பாரசீக உரோம கொடுங்கோல் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டு அவர்களுக்கு வாழ்வளித்த இந்த சமுதாயம் இன்று தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தடம்புரண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது, என்றாலும்.இந்த உம்மாவிற்கு அல்லாஹ்(சுபு) அளித்துள்ள வாக்குறுதியும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவிப்பு செய்திருக்கும் நற்செய்தியும் நம்பிக்கை ஒளியாக நம் கண்முன்னே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
உங்களில் எவர் ஈமான்கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்பிருந்தவர்களை ஆக்கிவைத்ததுபோல் பூமிக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்கு பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைபடுத்துவதாகவும் அவர்களுடைய அச்சத்திற்கு பதிலாக அமைதியைக்கொண்டு மாற்றித் தருவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான், (அந்நூர் 24:55)
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
உங்கள் தீனின் துவக்கம் நபித்துவமாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கும். பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் நடக்கும் கிலா*பாகவும் இருக்கும்........... பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பா ஏற்படும். (அஹ்மது)
சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து அவர்களின் கடந்தகால மகத்துவமிக்க நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் அவர்களிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பாவை நிறுவுவதற்கும் இஸ்லாத்தின் மகத்தான செய்தியை உலகெங்கிலும் எடுத்துச்செல்வதற்கும் உம்மாவின் விழிப்புணர்வு பெற்ற அதன் வீரப்புதல்வர்கள் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டார்கள். இஸ்லாத்தின் சங்கநாதத்தை ஓங்கி ஒலித்தவர்களாக அணிவகுத்து நின்றுவிட்டார்கள். விடியலின் வெளிச்சம் மெல்ல மெல்ல எழுந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. அல்லாஹ்(சுபு) மீதும் இஸ்லாத்தின்மீதும் முஸ்லிம் உம்மா கொண்டுள்ள ஈமான் துருப்பிடித்த இரும்பல்ல அது நீறுபூத்த நெருப்பு என்பதை அகிலத்தார் அறிந்துகொள்ளும் அந்தநாள் தொலைவில் இல்லை.