Monday, August 31, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... இறுதிப்பகுதி!

இதுதான் பாதை இது தான் பயணம்

கிரக நிலைகள் நிறைந்த வானத்தின் மீதும் வாக்களிக்கப் பட்ட (மறுமை) நாளின் மீதும் சாட்சிகள் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ்வெட்டியோர் அழக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்) அதன் மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில் விசுவாசிகளை (நோவினை) செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (விசுவாசங்கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும் மிக்கப் புகழுடையோனும் (யாவரையும்) மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததையேயன்றி (இதனையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்) வானங்கள் ப10மியின் ஆட்சி அவனுக்குரியதே. (அவனை விசுவாசித்ததற்காகவே அவர்களை நோவினை செய்தனர்) அல்லாஹ்வோ (இவர்கள் செய்த) யாவற்றிற்கும் சாட்சியாக இருக்கின்றான். ஆகவே எவர்கள் விசுவாசங் கொண்ட ஆண்களையும் பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர் (அதைப்பற்றி) அவர்கள் (பச்சாதாபப்பட்டு) மன்னிப்புக் கோhரவுமில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனையுண்டு. அன்றி சொந்தமாக அவர்களுக்கு (அவர்கள் விசுவாசிகளைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு. ஆயினும் எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுமுண்டு. இது மகாபெரும் பாக்கியம். (நபியே இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிகக் கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது) நிச்சயமாக அவன்தான் அவர்களை உற்பத்திச் செய்தான். (அவர்கள் மரித்தப் பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான். அவன் (விசுவாசங் கொண்டவர்களை) மிக்க மன்னிப்போனும் நேசிப்போனுமாக இருக்கின்றான். (அவன்தான்) மகத்தான அர்ஷ_டையவன். பெருந்தன்மையுடையவன். தான் விரும்பியதை எல்லாம் செய்யக் கூடியவன். (அல்குர்ஆன் 85:1-16)
இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களிலும் குறிப்பாக இஸ்லாத்தை நிலைநாட்டுவதை இலட்சியமாய்க் கொண்டவர்கள் மேலே கோடிட்டுக் காட்டிய இறைவனின் வரலாற்று வருணிப்பை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இஸ்லாத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அதனை எடுத்துச் சொல்லிடுவோருக்கும் இந்த வரலாற்றில் அழகானதோர் பாடம் புதைந்து கிடக்கின்றது. வரலாற்றில் வருகின்ற நாள்களில் வாழ வருகின்ற அத்தனை இறை நம்பிக்கையாளர்களுக்கும் அவர்கள் எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும் சரியே. இதிலோர் ஆழமான அறிவுரை அமிழ்ந்து கிடக்கின்றது. அழுத்தமான இறைநம்பிக்கைக் கொண்டதோர் திருக்கூட்டம் ஒரு பக்கம் மறுபக்கம் அவர்களை இறைநம்பிக்கையிலிருந்து பிரித்தே தீருவோம் எனச் சங்கல்பம் செய்து கொண்டு தங்களால் ஆனது அனைத்தையும் செய்யும் கூட்டம். இந்த இரண்டாவது கூட்டம் இறைவனை ஏற்றுக் கொள்வதற்கு மனிதனுக்கிருக்கும் உரிமைகளை மறுத்தக்கூட்டம். மட்டுமல்ல அவர்களைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்திச் சுவைத்தக் கூட்டம். கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் போட்டுப் பொசுக்கிய பின்னரும் அந்த இறைநம்பிக்கையாளர்கள் தங்கள் ஈமானில் இறைநம்பிக்கையில் சற்றும் தளர்ந்திடவில்லை. இதனால் இந்த இறைநம்பிக்கையாளர்கள் அந்த ஈனப்பிறவிகளை விட எவ்வளவோ உயர்ந்து நின்றார்கள். இந்த உலகிலுள்ள கவர்ச்சிகள் அவர்கள் முன் மண்டியிட்டன. நெருப்பும் எரிப்பும் அவர்களை நெருப்பிலிடப்பட்ட தங்கமாய் மின்னிடச் செய்தன. காரணங்கள் அவற்றால் விளைந்த செயல்கள் என்ற காய்களை நகர்த்திப் பார்;த்தால் இந்த உலகைப் பொறுத்தவரை இறைநம்பிக்கை கொண்ட அவர்களின் மேல் அந்தக் கொடுமையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இன்னும் இந்த இறைவசனங்களுக்கு நமக்குக் கிடைக்கும் விளக்கங்களின்படி இந்த வன்னெஞ்சங் கொண்டவர்களை அல்லாஹ் இந்த உலகில் தண்டித்தானா? என்பது தெரியவில்லை. ஆனால் இதுபோன்று இறை நம்பிக்கையாளர்களை ஏளம் செய்தவர்களை கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டவர்களை அல்லாஹ் பலமுறை இந்த உலகிலேயே கடுமையாகத் தண்டித்திருக்கின்றான். இப்படித்தான் அந்த இறைவன் நபி நூஹ்(அலை) அவர்களின் சமூகத்தையும் நபி ஹ_து (அலை) அவர்களின் சமூகத்தாரையும் நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தாரையும் ஷ_ஐப் (அலை) அவர்களின் சமூகத்தையும் நபி லூத் (அலை) அவர்களின் கூட்டத்தாரையும் இந்த உலகிலேயே கண்டித்தான், கடுமையாகத் தண்டித்தான். அதேபோல்தான் ஃபிர்அவ்னின் பகட்டான படையையும் ஆணவமிக்க அதிகாரத்தையும் அதிரவைத்தான். அனைத்து ஆற்றல்களுக்கும் சொந்தமான அல்லாஹ். ஆனால் நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள இறைவசனங்களில் வரும் நெருப்புக் குண்டத்தின் சொந்தக்காரர்களை அல்லாஹ் இந்த உலகிலேயே தண்டித்ததாய் தெரியவில்லை. இப்படிப் பார்த்திடும் போது அதாவது இந்த உலகை வைத்துப் பார்த்திடும் போது முடிவு வேதனையும் சோகமும் நிறைந்ததுதான் இறைவனை நம்பி நிற்கும் முஸ்லிம்களுக்கு.
ஆனால் இந்த விவகாரம் இத்தோடு முடிந்ததா? அத்தனை சோதனைகளுக்கிடையேயும் அல்லாஹ்வை நம்பி அதில் அணுவும் அசையாமல் அறுதிவரை உறுதியாய் நின்ற அவர்கள் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டார்களா? அந்த நெருப்புக் குண்டம் அவர்களை விழுங்கியதோடு அவர்களின் வாழ்வும் வரலாறும் முடிந்து போய்விட்டனவா? அல்லது அவர்களை நெருப்பிலே எறிந்து அவர்கள் துடியாய்த் துடிப்பதையும் அவர்கள் எரிந்ததையும் வேடிக்கைப் பார்த்து ஆனந்தம் கொண்டோர்தான் தண்டிக்கப்படாமல் விடப்பட்டு விட்டார்களா? இந்த உலகில் இந்தக் குரூரப் புத்தி கொண்டோர் தண்டிக்கப்படாமல் தப்பித்து விட்டார்களே என்பதை எண்ணும் போது தாங்கிட முடியவில்லை. ஆனால் அந்த அல்லாஹ்வின் வரலாற்றுப் பேழை நமக்கு வேறொரு பாடத்தையல்லவா புகட்டுகின்றது. அது வரப்போகும் வேறொரு யதார்த்தத்தை நமக்குப் பட்டாங்கமாய் சொல்லித் தருகின்றது. இறைநம்பிக்கையாளர்கள் வேதனையையும் சோதனையையும் எப்படி எடைபோட்டுப் பார்க்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. உலக வாழ்க்கையில் எதிர்ப்படும் சுகங்கள் சாதனைகள் சோதனைகள் விரக்திகள் வேதனைகள் அல்லாஹ்வின் எடை மேiடையில் எள்ளளவும் எடுபடுவதில்லை. இந்த உலகில் வெற்றி என்பதோடு வெற்றி என்பதன் பொருள் முற்றுப் பெற்றிடுவதில்லை. அல்லாஹ்வின எடை மேடையில் அனைத்து எடைகளையும் விஞ்சி நின்று எடுபடுவது ஈமானின் அல்லாஹ்வின் மேல்கொண்ட நம்பிக்கையின் எடையே. மனிதர்கள் எல்லோரும் மரணத்தைச் சந்திக்கின்றார்கள். ஆனால் எல்லோருடைய மரணமும் ஒன்றுபோல் இல்லை. சிலர் இலட்சிய வீரர்களாய் விதைக்கப்படுகின்றார்கள். இலட்சிய வீரர்களை உருவாக்குகின்றார்கள். இறைவனின் பாதையில் இலட்சிய வீரர்களாய் வீரமரணத்தைத் தழுவிடும் இந்த மறவர்கள் மறுமையில் மகத்தான நற்கூலிகளைப் பெற்று ஏனையோர் அடையமுடியாத உயர்வுகளைப் பெற்றுவிடுகின்றார்கள். இவர்கள்தாம் மனித வரலாற்றின் மகுடங்கள். இந்தச் சிலர் வேறு யாருமல்ல. இவர்கள்தாம் தாங்கள் மனமொப்பி ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக ஈமானுக்காக படைத்தவன் மேல் கொண்ட நம்பிக்கையின் பிடிப்பிற்காக தங்கள் வாழ்வை இந்த உலகில் இழந்தவர்கள். இந்த இறைநம்பிக்கையாளர்கள் விரும்பியிருந்தால் தங்களது இறைநம்பிக்கையை விட்டுக்கொடுத்து ஈமானைப் பேரம்பேசி இந்த உலகவாழ்வில் எதிரே வந்த சித்திரவதைகளிலிருந்து தப்பித்திருக்கலாம். இன்னும் சொன்னால் அவர்கள் இந்த உலகில் உல்லாசங்களில் தவழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் நன்றாக அறிவார்கள் இப்படிப் பெறப்படும் அத்தனை உல்லாசங்களும் இமைப்பொழுதில் இகத்தை விட்டு ஓடிவிடும். அந்த மரணத்தின் மடியில் வீழ்ந்தேயாக வேண்டும். பின் மறுமை என்ற மரணத்திற்குப் பின்னால்வரும் வாழ்க்கையில் நிரந்தர இன்னல்களுக்கு ஆளாகியாக வேண்டும். ஆதலால்தான் அவர்கள் இம்மையைவிட்டு மறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த உலக வாழ்க்கையில் அவர்கள் மேற்கொண்ட எதிர்நீச்சலுக்கு எத்தனையோ சாட்சிகள். ஒரு சில மனிதர்கள்தாம் அங்கே சாட்சியாக இந்த இறைநம்பிக்கையாளர்கள் சித்திரவதைக்குள்ளானதற்கான சாட்சியாக இருந்தார்கள் என்றில்லை. வானவர்கள் இந்தப் ப10மியில் நடப்பவைகளின் நேரடி சாட்சிகள் அவர்களும் இந்த உலகில் நடப்பனவற்றில் பங்கெடுத்துக் கொள்பவர்கள். அவர்கள் மனித சமுதாயத்தின் அனைத்துத் தலைமுறைகளையும் கடந்து நிற்பவர்கள். இந்த வானவர்கள் கௌரவமானவர்கள். எண்ணிக்கையில் இந்த மனிதர்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமானவர்கள். இவர்கள் இந்த இறைநம்பிக்கையாளர்கள் என்ற இலட்சிய செம்மல்களைப் போற்றுகின்றார்கள். இதற்கெல்லாம் மேலாக மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்க்கை இருக்கின்றது. ஆகவே இந்த இறைநம்பிக்கையாளர்கள் ஈமான் கொண்டவர்கள் முஸ்லிம்கள் இந்த உலகில் ஏளனங்களையும் ஏகடியங்களையும் எரியும் நெருப்பையும் சந்தித்தாலும் அவர்கள் உயர்ந்தவர்கள் கண்ணியமும் மாட்சியுமிக்கவர்கள் நிரந்தர வெற்றியின் சொந்தக்காரர்கள். அல்லாஹ்வை நம்பி அந்த நம்பிக்கையில் அவர்கள் நிலைத்து நின்றதற்கு அல்லது நிற்பதற்கு ஓர் ஆறுதல் உண்டு. அல்லாஹ் கூறுகின்றான் :
மெய்யகவே விசுவாசங் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தாம். (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருநாமம் நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய இருதயங்கள் திருப்தியடைந்து விடுகின்றன. அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூர்;வதால் (உண்மையான விசுவாசிகளின்) இருதயங்கள் நிச்சயமாகத் திருப்தியடையும் என்பதை அறிந்து கொள்ளும் (அல்குர்ஆன் 13:28)
நெருப்பில் பொசுங்கிய போதும் தங்கள் ஈமானில் இறைநம்பிக்கையில் எள்முனையளவு கூட விட்டுத்தராத உண்மையான உறுதியான அந்த விசுவாசிகளை நேசிக்க அந்த அல்லாஹ்வே வகை செய்கின்றான்.
எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை யாவரும் நேசிக்கும்படி ரஹ்மான் நிச்சயமாகச் செய்வான் (அல்குர்ஆன் 19:96)
அல்லாஹ்வின் அறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட அடியானின் குழந்தை இறந்து போனால் அல்லாஹ் வானவர்களிடம் வினவுகின்றான். நீங்கள் என் அடியானின் குழந்தையின் உயிரை பிரித்தீர்களா வானாவர்கள் பதல் சொல்வார்கள், ஆமாம் என்று. பின்னர் அல்லாஹ் கேட்பான் என்னுடைய அடியான் என்ன சொன்னான்? இதற்கு வானவர்கள் அந்த அடியான் அல்லாஹ்வைப் புகழ்ந்தான். இன்னும் கூறினான். நாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளுவோம். பின்னர் அல்லாஹ் கூறுவோன் என்னுடைய அடியானுக்கு சுவர்க்கததில் ஒரு வீட்டைக் கட்டுங்கள். அதைப் புகழின் இல்லம் என்று அழையுங்கள். (திர்மிதி) இறைவனின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்:
புகழுக்கும் புகழ்ச்சிக்குமரிய அல்லாஹ் கூறுகின்றான் என் அடியான் என்னை எப்படி எடுத்துக் கொள்கின்றானோ அப்படியே நான் அவனுக்குச் சொந்தம். அவன் என்னை நினைவுகூரும் போது நான் அவனோடு இருக்கின்றேன். அவன் தனக்குள் என்னை நினைக்கும் போது நான் எனக்குள் அவனை நினைக்கின்றேன். அவன் ஒரு கூட்டத்தாரிடம் என்னைப் பற்றி குறிப்பிடும் போது நான் அவனை அதைவிட சிறந்ததோர் கூட்டத்தில் குறிப்பிடுகின்N;றன். அவன் சாண் அளவு என்னை நோக்கி வந்தால் நான் முழம் அளவு அவனை நோக்கி வருவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிவருவேன். (புகாரி, முஸ்லிம்). நிலைத்த ஈமானை நிரந்தரமாகக் கொண்டவர்களின் நன்மையில் வானவர்கள் ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொள்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான் :
அர்ஷை (அரபி மொழியில் அர்ஷ் என்பதற்கு சிம்மாசனம் என்று பொருள் அல்லாஹ்வின் அர்ஷைப் பற்றி அறிய இயலாது. அல்லாஹ் பேரண்டத்தைப் படைத்தபிறகு தனது எல்லையற்ற ஆட்சிக்கு கேந்திரமாகிய ஓர் இடத்திற்கு அர்ஷ் என்று கூறியிருக்கலாம். அல்லது அர்ஷ் என்பது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தைக் குறிக்கலாம். ஆக இவ்விரு பொருள் கொள்ளவும் இங்கு இடம் உண்டு. (நன்றி : திருக்குர்ஆன் மொழியாக்கம் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் சென்னை 12)
சுமந்து இருப்பவர்களும் அதனைச் சூழ இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு (அவனைத்)துதி செய்கிறார்;கள். அவனை விசுவாசிக்கின்றகள். விசுவாசங் கொண்டோரின் குற்றங்களை மன்னிக்கும்படியும் கோருகிறார்கள். எங்கள் இறைவனே நீ (உன்னுடைய) ஞானத்தாலும் கருணையாலும் யாவையும் சூழ்ந்து நிற்கிறாய். ஆகவே (பாபங்களைவிட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுவோருக்கு நீ மன்னித்து அவர்களை நரக வேதனையிலிருந்து நீ காத்துக் கொள்வாயாக (என்று பிரார்த்திக்கின்றார்) (அல்குர்ஆன் 40 : 7)
இறைநம்பிக்கையில் நிலைத்து நிற்கும் இலட்சிய வீரர்களுக்கு மரணம் அல்லாஹ் அளிக்கும் வாழ்வு.
விசுவாசிகளே அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (அன்றி) இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு ஆகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றது. அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்தவர்களாக இருக்கின்றார்கள். (அன்றி யுத்தத்தில் இறந்து) தங்களுடன் சேராமல் தங்களுக்குப்பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவாக்ளைப் பற்றியும் அவர்களுக்கு எவ்வித பயமும் ஏற்படாது. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்று கூறி மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் (அருளினால் தாங்கள் அடைந்த) பாக்கியத்தைப் பற்றியும் மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளே (நற்) கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள் (அல்குர்ஆன் 3: 169-171)
நிராகரிப்பில் வீழ்வோரைப் பொறுத்தவரை அல்லாஹ் ஒருவனே என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களைப் பொறுத்தவரை அல்லாஹ் மீண்டும் மீண்டும் உறுதி கூறுகின்றான் என்ன உறுதி? அவர்கள் மறுமையில் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவோர்கள் என்பதே அந்த உறுதி? அவர்கள் (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்) இந்த ப10மியில் மிகவும் குறகியதொரு காலக்கட்டம் வரை வெற்றி பெறலாம். அந்த வெற்றிகள் தரும் ஆணவத்தில் ஆடிக்களிக்கலாம். ஆனால் அவர்கள் மரணத்திற்குப் பின்வரும் வாழ்க்கையில் அல்லாஹ்வின் பிடியில் சிக்கியேயாக வேண்டும். இங்கே முழு அழுத்தமும் மறுமை என்ற மரணத்திற்குப் பின்வரும் வாழ்க்கைக்கே வழங்கப்படுகின்றது. அல்லாஹ் இதனை இப்படித் தெளிவுபடுத்துகின்றான்:
(நபியே) நிராகரிப்போர் (பெரும் வர்த்தகர்களாகவும் தனவந்தவர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கிவிட வேண்டாம். (இஃது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் புகுமிடம் நரகந்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 3:196-197)
(நபியே) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப்பற்றி அல்லாஹ் பாராமுகமாய் இருக்கின்றான் என நீர் எண்ணவே வேண்டாம். (அவர்களை வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண் திறந்தவாறே இருந்துவிடக் கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது. (தறி கெட்டுப் பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது. அதனையே நோக்கிக் கொண்டிருக்கும் இவர்களுடைய இருதயம் திக்பிரமை கொண்டுவிடும். (அல்குர்ஆன் 14:42-43)
அல்லாஹ் இன்னும் கூறுகின்றான்: ஆகவே (நபியே) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் அவர்கள் விளையாடிக்கொண்டும் (வீண்காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடும். (நபியே) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டும். விக்கிரக ஆராதனை செய்வோர் அவர்களுடைய திருநாள்களில் (ப10ஜைக்காக நாட்டப்பட்ட) கொடிகளின் பால் விரைந்தோடுவதைப் போலவே சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (மஹ்ஷருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள். அவர்களுடைய பார்வை கீழ்நோக்கியிருக்கும். இழிpவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் (நபியே) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும் (அல்குர்ஆன் 70 : 42-44)
ஆக நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரின் அறுதி முடிவு உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் போரின் அறுதி முடிவும் இங்கே இந்த உலகில் இல்லை. இந்த வெற்றி தோல்விகளின் முடிவு மறுமையில் மட்டுமே தெரியும். அதுவே அறுதியான நிரந்தரமான முடிவு. அங்கே அல்லாஹ்வை நம்பி அல்லல்களை ஏற்று நின்றவர்களே வெற்றியாளர்கள். இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பது இஸ்லாத்தை இந்த உலகில் நிலைநாட்டுவது என்ற இலட்சியங்களும் இந்த இலடசியங்களுக்காக வாழ்ந்தவர்களும் பல்வேறு முடிவுகளைச் சந்தித்திருக்கின்றார்கள். நபி நூஹ்(அலை)அவர்களால் அழைப்பு வைக்கப்பட்டவர்கள் அழிக்கப்பட்டார்கள் நபி ஹ_த்;(அலை) அவர்களின் மக்களும் ஷ_ஐப் அவர்களின் மக்களும் லூத் அவர்களின் மக்களும் இதே முடிவைத்தான் சந்தித்தார்கள். ஆனால் இந்த வரலாறுகள் நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றன. அது சில நேரங்களில் தீமைகளைத் தூண்டுவோர் இறைவனை மறுப்போர் இறைவனை ஏற்போரை எதிர்ப்போர் தண்டிக்கப்படுகிறார்கள். இங்கே இந்த உலகில் இந்தத் தண்டனையோடு மறுமையிலும் மாறாத மகத்தான தண்டனைகளைப் பெறுகின்றனர். இன்னொரு வரலாறு ஃபிர்அவ்ன் என்ற இறை எதிர்ப்பாளர்கள் ஆணவத்தின் மொத்த உருவமாய் நின்ற இவனும் இவனுடைய படையும் பரிவாரமும் அல்லாஹ்வால் அழிக்கப்படுகின்றன. இறைநம்பிக்கையாளர்களின் பிரதிநிதியாய் இறைவனின் தூதராய் நின்ற நபி மூஸா (அலை) அவர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிடுகின்றார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுகின்றார்கள். அந்த மக்கள் வரலாற்றில் மிகவும் இறையச்சமும் பக்தியும் கொண்டவர்களாக ஆகுகின்றார்கள். (பனூ இஸ்ராயீல்) இவர்கள் எல்லாவிதத்திலேயும் முழுமையானவர்களாக இருந்தார்கள். என்றில்லாவிட்டாலும் முன்னே நாம் குறிப்பிட்ட வரலாற்றைவிட மாறுபட்ட ஒரு வரலாற்றை உடையவர்களாக இருந்தார்கள். பிறிதொரு வரலாறு இதில் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே அழகியதோர் முன்மாதிரியாக நின்று கொண்டிருக்கின்றார்;கள். அல்லாஹ்வையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டோர் சிலர். அல்லாஹ்வையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் எதிர்த்து அழித்தே தீருவேன் என அணிதிரண்டோர் பலர். அல்லாஹ்வின் அணியாய் நின்ற அந்தச் சிறு கூட்டம் எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்கின்றது. உடைமை உயிர் ஆகியவற்றின் எதிர்ப்புகளை எதிர்கொள்கின்றது. இறுதியில் வெற்றியைத தருகின்றான் அல்லாஹ். முழுமையான வெற்றியைத் தருகின்றான் அல்லாஹ். மனித வரலாறு இன்றுவரை கண்டிராத அளவுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் சட்;டங்கள் நிலைநாட்டப்பட்டு விடுகின்றன. இப்படி வரலாற்றில் இறைநம்பிக்கையாளர்கள் பல நேரங்களில் வெற்றிப் பெற்றிருக்கின்றார்கள். இவ்வுலகில் பல நேரங்களில் அவர்கள் சோதனைகளை மட்டுமே எதிர் கொண்டு இறைநம்பிக்கையின் இறவா சாட்சியங்களாய் வாழ்ந்திருக்கின்றார்கள். அதே போல் இறைவனை மறுத்தவர்கள் எதிர்த்தவர்கள் இறைவனை நம்பியவர்களை இன்னல்களுக்கு ஆளாக்கியவர்கள் இவ்வுலகில் சில நேரங்களில் கடுமையான தண்டனைகளால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள். பல நேரங்களில் விடப்பட்டிருக்கின்றார்கள். வரலாறு இப்படி நமக்கு இருவகையான பாடங்களைத் தருகின்றது. ஆனால் நெருப்புக் குழியை வெட்டி நெருப்புக் குண்டங்களை வளர்த்தவர்களின் வாழ்க்கை தரும் படிப்பினையை நாம் மறப்பதற்கில்லை. இதில் இரண்டு பார தூரமான பாடங்கள்;

1. இறைநம்பிக்கையில் நிலைத்து நின்றவர்கள், அவர்கள் காட்டிய இறைநம்பிக்கையின் உறுதியின் பின்பும் அவர்கள் அந்த நெருப்புக்கு இரையாவதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

2. அவர்களை இறைவனை நம்பி அதில் உறுதியாக நின்றவர்களை நெருப்பில் போட்டு அழித்தவர்கள் இவ்வுலகில் தண்டிக்கப்படவில்லை. இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டு அதை நிலைநாட்டிட உழைத்திடுவோர் அதற்காக அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைத்திடுவோர் ஆகியோர் இப்படியொரு முடிவைச் சந்திக்க வேண்டியது வரலாம். அதாவது இவர்கள் தங்கள் எதிரிகளால் சித்திரவதைகளுக்கும் உயிர் உடைமை ஆகியவற்றில் இழப்புகளுக்கும் உள்ளாக்கப்படலாம். அதிலிருந்து அவர்கள் தப்பிக்க இயலாமலும் போகலாம். அவர்களின் எதிரிகள் இந்த உலகில் தண்டிக்கப்படாமலும் போகலாம். சில வெற்றிகளையும் தட்டிச் சென்றிடலாம். இவற்றில் இறைநம்பிக்கiயாளர்கள் சபலங்களுக்கோ விரக்திகளுக்கோ உள்ளாக வேண்டியதில்லை. அவர்கள் எல்லா நிலைகளிலேயும் தங்கள் உறுதியில் நிலைத்து நின்றிட வேண்டும். இறைவனை நம்புவதிலேயும் அவனது பாதையில் மக்களை அழைப்பதிலேயும் அவனுடைய சட்டங்களை ஆளும் கொள்ககையாக ஆக்கிவிடுவதிலேயும் அவர்கள் நிலைத்து அறுதியாய் உறுதியாய் நின்றிடவேண்டும். இறைநம்பிக்கையாளர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிட வேண்டும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவ்வளவு தான் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது. இப்படி விளைவுகளையும் எதிர்ப்புகளையும் பற்றிக் கவலைப்படாமல் கடமைகளை நிறைவேற்றி நிற்கும் அல்லாஹ்வின் அழகிய அணியினருக்கு இநத் உலகில் சில சன்மானங்களும் இல்லாமல் இல்லை. இந்த வகையில் அவர்கள் பெரும் முதல் பரிசு அல்லாஹ் தங்களிடம் ஒப்படைத்த கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுகின்றோம் என்ற மன திருப்தி. அடுத்து உலகக் கவர்ச்சிகளில் நாம் வீழ்ந்துவிடவில்லை. உலகில் உயர்ந்ததோர் கொள்கைக்குச் சொந்தக்காரர்களாய் ஆனோம். அதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உவகை. இதோடு துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிடக் கற்றுக் கொண்டுள்ளோம் என்ற மனதிருப்தி. இவர்கள் பெறும் சன்மானத்தின் அடுத்த பகுதி வானவர்கள் இவர்களுக்குத் தரும் கண்ணியமாகும். வானவர்கள் இவர்களைப் புகழ்வார்கள். கண்ணியப்படுத்துவார்கள். அத்தோடு ப10மியில் இவர்களோடு வாழ்பவர்களும் இவர்களை இலட்சிய தீபங்களாய்ப் பார்த்துப் போற்றுவார்கள். இவர்களின் அடுத்த சன்மானம் இறைவன் அவர்கள் மேல் கொள்ளும் திருப்தியும் மகிழ்ச்சியுமாகும். இறைவன் தன் பணிகளைச் செய்வதற்கு இவர்களைத் தேர்ந்தெடுத்தான். ஆகவே இவர்கள் உயர்ந்த தகுதிகளைப் பெற்றவர்கள். இது இவர்கள் பெறும் இன்னொரு சிறப்பான வெகுமதி. இத்தனைக்கும் மேலாக நின்று இவர்களை நிரந்தரமாக மகிழ்விப்பது, மறுமை என்ற மரணத்திற்குப் பின்னால் வரும் நிரந்தர வாழ்க்கை. மனித வரலாற்றில் இணையற்றதோர் சமுதாயமாக இலங்கிடும் திருக்குர்ஆன் உருவாக்கிய அந்த முதல் ஒப்பற்ற சமுதாயம் மறுமையை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டது. திருக்குர்ஆனின் வழியில் முஹம்மத்(ஸல்) அவர்கள் தந்த பயிற்சி அந்த மக்களை மறுமையை நோக்கியே இழுத்துச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் அல்லல்களுக்கு ஆட்பட்டு நின்ற போதெல்லாம் மறுமையில் கிடைக்கும் போகும் பெரும் பேறுகளே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டன. அம்மார்(ரலி) அவர்கள் அவர்களுடைய தந்தை தாய் (அல்லாஹ் இவர்கள் அனைவர் மீதும் திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்வானாக) ஆகியோர் அத்தனை கொடுமைகளுக்கும் ஆட்படுதத்ப்பட்டார்கள். இந்தக் கொடுமைகளால் துவண்ட அவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாக்களித்ததெல்லாம் யாசிருடைய குடும்பத்தினரே பொறுங்கள் சுவர்க்கம் உங்களுக்குக் கிடைக்கும் என்பது தான். ஹப்பாப் பின் அல் அரத் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலின் கீழ் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். அதுபோது நாங்கள் அவர்களிடம் முறையிட்டோம். நமக்கு உதவி செய்யும் பொருட்டு நீங்கள் ஏன் அல்லாஹ்விடம் இறைஞ்சக் கூடாது இதற்கு பெருமானார்(ஸல்) அவர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள்: உங்களுக்கு முன்னால் ஒரு சமூகத்தினர் இருந்தார்கள். அவர்கள் ஓர் இறைநம்பிக்கையாளரைப் பிடித்துக் குழியில் தள்ளுவார்கள். இரும்பால் செய்யப்பட்ட சீப்பைக் கொண்டு அறுப்பார்கள். கழுத்தில் (மரமறுக்கும்)வாளைக் கொண்டு அறுப்பார்கள். அவருடைய உடலும் தலையும் இருகூராக ஆகும் வரை இப்படியே செய்து கொண்டிருப்பார்கள். இத்தனையும் அவர்கொண்ட இறைநம்பிக்கையிலிருந்து அவரைத் திசை திருப்பிடாது. அல்லாஹ் நிச்சயமாக இந்த மார்க்கத்தை நிறைவுறச் செய்வான்.
ஒரு காலம் வரும் அதில் ஒரு பயணி ஸன்ஆவிலிருந்து ஹளரமௌத் வரை இறைவனைப் பற்றி அச்சம் ஒன்றைத் தவிர வேறு அச்சம் எதுவுமின்றி பயணம் செய்வார் (புஹாரி) அல்லாஹ்வின் ஆற்றலும் அறிவும் இந்த உலகில் நடப்பவை அனைத்திலும் அமிழ்ந்து கிடக்கின்றன. அவன் தான் இந்த உலகில் நடப்பவை அனைத்தையும் திட்டமிட்டு நிகழச் செய்கின்றான். இந்த உலகில் நடப்பவை எங்கே துவங்கும். எங்கே முடியும் என்பனவற்றை அவன் நன்றாக அறிவான். பல நேரங்களில் இந்த உலகில் நடப்பவை பார்ப்பவர்களுக்கு விநோதமாகவும் விந்தையாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் ஏன் நடக்கின்றன என்பதே யாருக்கும் புரிவதில்லை. இதனால் சிலர் ஆண்டவனையே கேள்வி கேட்க தலைப்பட்டு விடுகின்றனர். அல்லாஹ்வை நம்புகின்ற ஒரு முஸ்லிம் இப்படியொரு வினாவை எடுத்து அல்லாஹ்வின் மேல் எறிவதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கின்றான். ஏனெனில் அவன் நன்றாக அறிவான் இந்த உலகில் நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் ஒரு குறிப்பிட்ட காரணத்தின் கீழும் தான் நடக்கின்றன என்பதை. அவனுக்குத் தெரியவில்லை என்பதனால் அவற்றிற்குப் பின்னால் எந்தக் காரணமும் இல்லை என்றில்லை. இந்த உலகில் இடம்பெறும் பல நிகழ்ச்சிகள் குறித்து நமக்கு எதுவுமே தெரிவதில்லை. அல்லாஹ்வும் அந்த நிகழ்ச்சிகள் ஏன் இடம் பெற்றன என்பதையோ அவைதரும் பாடம் என்ன என்பதையோ அந்தக் காலக்கட்டத்தில் வாழந்த மக்களுக்குத் தெரிவிப்பதில்லை.
பல தலைமுறைகள் தாண்டியபின் இறைவன் அந்த வரலாற்றையும் அந்த நிகழ்ச்சிகள் ஏன் இடம்பெற்றன என்பதையும் தெளிவுபடுத்துகின்றான். ஆகவே இங்கே அடியான் செய்ய வேண்டியதெல்லாம் தன் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றிக் கொண்டே செல்வதுதான். இதில் திருக்குர்ஆன் தனியானதோர் பயிற்சியைத் தருகின்றது. அது மனித மனங்களைப் பக்குவப்படுத்துகின்றது. இந்தப் பக்குவத்தின் பயனாய் மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற மகத்தான பொறுப்பைத் தாங்கிடும் மனநிலையைப் பெற்றுவிடுகின்றான். இந்த மனம் எந்தச் சோதனையையும் தாங்கி எதிர் நீச்சல் போட்டிடும் பக்குவத்;தைப் பெற்றுவிடுகின்றது. தான் தாங்கிய பொறுப்பை நிறைவேற்றிட எல்லாத் தியாகங்களையும் செய்திட தயாராகி விடுகின்றது. இந்தத் தியாகங்களுக்கெல்லாம் அது இந்த உலகில் எந்த எதிர்பார்ப்பையும் தன்னுள் வளர்த்தக் கொள்வதில்லை. மறுமை ஒன்றே அதன் மாறா இலட்சியம். ஏன் அவர்கள் தாங்கள் எடுத்திருக்கும் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி இஸ்லாத்தை இங்கே நிலைநாட்டும் பணி என்ற மகத்தான இலட்சியங்களில் இநத் உலகில் தங்கள் கண்ணெதிரே வெற்றிகளை ஈட்டி விடுவோம் என்று கூட எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் இந்த இலட்சியங்கள் நிறைவேற எதையும் எதிர்பார்க்காமல் தங்களால் இயன்றவற்றை எல்லாம் செய்தார்கள். அதேபோல் தங்கள் இலட்சியப் பாதையில் தடைகளை வெட்டிப் போட்டவர்கள் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் மறுத்தவர்கள் இன்னல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியவர்கள் சித்திரவதைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், இவர்களெல்லாம் தங்கள் காலத்திலேயே தங்கள் கண்களின் முன்னாலேயே தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கூட தங்கள் நெஞ்சங்களிலே வளர்த்துக் கொள்ளவில்லை. இப்படி இந்த உலகில் இந்த இலட்சியத்திருக்கூட்டம் எதையுமே எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவானவுடன் அல்லாஹ் அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கின்றான். அவர்களுக்கு வெற்றியையும் தருகின்றான். இந்த வெற்றியும் இந்த அதிகாரமும் அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கில்லை. அல்லாஹ்வின் நீதி அனைவருக்கும் கிடைத்திடும்படி செய்திடுவதற்கே அதாவது அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கே மனித வரலாற்றில் மாணிக்கப் பரல்களாய் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் திருக்குர்ஆன் வழி வாழ்ந்த அந்த முதல் சமுதாயம் எந்த உதவியும் வாக்களிக்கப்படாத காலத்திலேயே தங்களை இந்த மார்க்கத்தை நிலைநாட்டிட முழுமையாகத்த தந்திடத் தயாராக இருந்தார்கள். அல்லாஹ்வின் திருப்தி மகிழ்ச்சி மறுமையில் மாளா வெற்றி என்பவை அவர்களின் எண்ணத்தில் நினைப்பில் நிலைத்த பின்னர்தான் வேறு எந்த எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எங்கேயும் தலைக்காட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் அல்லாஹ் அவர்களுக்கு இந்த உலகில் வெற்றியைத் தருவது எனத் தன் அருள் மடையைத் திறந்தான். அந்த முதல் தலைமுறையினருக்கு வெற்றியை அறிவிக்கும் இறை வசனங்களும் போரில் கிடைக்கும் பொருள்களைப் பங்கு வைக்கும் வசனங்களும் நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் கைகளால் தண்டிக்கப்படுவார்கள் என்பது பற்றி இறைவசனங்களும் மதீனா வாழ்க்கையின் போது மட்டுமே அருளப்பட்டன. இவையெல்லாம் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் எள்ளளவு கூட எதிர்பார்ப்பாய் இடம்பெறாத போது தான் அருளப்பட்டன. அவர்கள் இன்னும் என்னென்னவற்றைத் தியாகம் செய்யலாம் என்ற எண்ணங்களில் தங்களைத் தோய்த்துக் கொண்டிருந்த போது தான் இந்த இறைவசனங்கள் அருளப்பட்டன. இந்த வெற்றியைப் பற்றிய இறைவசனங்களும் அவற்றைத் தொடர்ந்து அவர்கள் பெற்ற வெற்றியும் அவர்களைத் துன்புறுத்தியவர்களுக்கு நேர்ந்த கதியும் அவற்றைப் பற்றிய அறிவிப்புக்களும் அவர்கள் அதுவரை மேற்கொண்ட சிரமங்களுக்குச் சன்மானம் என்ற அளவில் அருளப்படவில்லை. அல்லாஹ் வெற்றியை இந்த உலகிலேயே தந்தது, அதன் பயனாய் அவர்கள் ஓர் இஸ்லாமிய அரசை நிறுவியது அனைத்தும் அல்லாஹ்வின் முடிவாக இருந்தது அவ்வளவு தான். இதனை இஸ்லாத்தை இலட்சியமாய் கொண்டவர்கள் அனைவரும் ஆழ்ந்து கவனித்திட வேண்டும். அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி எந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே இதனை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் அவர்கள் தங்கள் பாதையையும் பயணத்தையும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். அத்தோடு தாங்கள் கடந்து சென்றிட வேண்டிய பாதையில் பயணம் செய்திடும்போது இடையே எதிர்ப்படும் காட்டாறுகளையும் நெருப்புக் குண்டங்களையும் கடந்திடும் போது விளைவுகளைப் பற்றியோ முடிவுகளைப் பற்றியோ அவர்கள் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. சிறைகள் சித்திரவதைகள் இரத்தப் பிரளயங்கள் வேலும் வாளும் உண்டாக்கும் பயங்கர இரத்த ஆறுகள் அதில் மிதந்துவரும் அண்ணன் தம்பிகளின் உற்றார் உறவுகளின் அறுந்த நரம்புகளும் முறிந்த எலும்புகளும் அவர்களை எள்ளளவும் கதிகலங்கிடச் செய்திட மாட்டா. இப்படி இந்த இலட்சியப் பயணத்தில் எதிர்ப்படும் எல்லா மைல்கற்களையும் கடந்து சென்றுவிட்டாலும் அவர்கள் இந்த உலகில் வெற்றியை எதிர்பார்க்கமாட்டார்கள். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே இடம்பெயறும் போரின் முடிவு இங்கே இந்தப் ப10மியில் முடிவு செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. அங்கே அந்த மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கையிலேயே அதை எதிர்பார்க்கின்றார்கள். அந்த அறுதிநாளில் கிடைக்கும் வெற்றியை இலக்காய் கொண்டு நடத்தப்படும் இந்தப் போரில் இந்த உலகில் அல்லாஹ் இவர்களைக் கொண்டே தன் வாழ்க்கை நெறியை நிலைநாட்டலாம். அல்லது இவர்கள் ஊட்டும் உணர்வில் காட்டும் தியாகத்தில் வளர்ந்துவரும் அடுத்த தலைமுறையைக் கொண்டு நிலைநாட்டலாம். அல்லது அவர்கள் தயாரிக்கும் தலைமுறையைக் கொண்டு நிலைநாட்டலாம். அத்தனையும் அந்த ஏகபோக அதிபதியாம் அல்லாஹ்வின் விருப்பம். அவன் பாதையில் அனைத்தையும் தியாகம் செய்து உழைப்பது அடியானின் கடமை பொறுப்பு. எது எப்படியானாலும் வெற்றிக்கும் உழைப்பின் வெகுமதிக்கும் இந்தப்ப10மியல்ல எதிர்பார்ப்புக்குள்ள இடம். இங்கே இன்னொன்றை மீண்டும் இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களின் பார்வைக்கு வைத்திட விரும்புகின்றேன். நான் எடுத்துக்காட்டிய இறைவசனத்தில் அல்லாஹ் நெருப்புக்குண்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிக் குறிப்பாக ஒன்றைக் குறிப்பிடுகின்றான்: அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசங்கொண்ட அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும் மிக்க புகழுடையோனும் யாவரையும் மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசத்தையன்றி (இதனையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்) (அல்குர்ஆன் 85:8)
இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காகத் தங்களைத் தந்து களத்தில் நிற்பவர்கள் அதற்காக இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அனைவருக்கும் இதில் அழகியதோர் அறிவுரை அமிழ்ந்து கிடக்கின்றது. அது.. அல்லாஹ்வை ஏற்க மறுப்பவர்கள் இறைவன் ஒருவனே என்ற கொள்கையை ஏற்றிட மறுப்பவர்கள் ஈமான் கொண்டவர்களை இறைநம்பிக்கையாளர்களை இஸ்லாத்தை இலட்சியமாய்க் கொண்டவர்களைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் கருதுகின்றனர். காரணம் இந்த இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைதான் அல்லாமல் வேறு காரணங்கள் இல்லை. எதிரிகளின் கோபம் இவர்கள் கொண்ட நம்பிக்கையின் மேல்தான் அல்லாமல் நம்பிக்கை கொண்டவர்களின் மேல் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புகளோ குரோதங்களோ அல்ல. அதே போல் இந்தக் கோபமும் பகையும் இனத்தின் அடிப்படையில் குலத்தின் அடிப்படையில் எழுந்ததன்று. அதே போல் அரசியல் காரணங்களோ பொருளாதார காரணங்களோ இந்தக் கோபத்திற்கும் குரோதத்திற்கும் காரணமாக அமைந்திடவில்லை. இங்கே கோபமும் குரொதமும் நம்பிக்கையா? அல்லது நிராகரிப்பா? ஜாஹிலிய்யா? இஸ்லாமா? என்பதை அடிப்படையாகக் கொண்டனவே. இதனால்தான் பல தெய்வங்கள் உண்டென்று அறிவிலிகளாய் மௌட்டிகத்திலும் மூடநம்பிக்ககைளிலும் மூழ்கிக்கிடந்த அந்த மக்கத்து மக்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்களிடம் இப்படிப் பேரம் பேசினார்கள். உங்களுக்கு ஆட்சிவேண்டுமா தந்துவிடுகின்றோம். அதிகாரம் வேண்டுமா தந்துவிடுகின்றோம் இந்த உலகில் என்ன வேண்டும் கேளுங்கள் தந்து விடுகின்றோம். இவற்றிற்கு கைமாறாக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விட்டுவிடுங்கள் உங்கள் இறைவன் ஒருவனே என்ற பிரச்சாரத்தையும் நம்பிக்கையையும். முஹம்மத்(ஸல்) அவர்களை அந்த மக்கத்து மக்கள் நம்பிக்கைக்குரியவர் உண்மையாளர் என்றெல்லாம் போற்றினார்கள். எந்த நிலையிலும் அவர்கள் மேல் தனிப்பட்ட முறையில் அவதூறுகளைக் கூறிட அந்த மக்கத்து மக்கள் துணியவில்லை. ஆனால் இறைநம்பிக்கையின் ஏகத்துவத்தின் ஈமானின் பிரதிநிதியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்வதை அதைப் பிரச்சாரம் செய்வதை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. பொங்கி எழுந்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் கண்ட போர்க்களங்கள் இறைநம்பிக்கையா? இல்லை அதற்கு எதிரான கொள்கைகளா? என்ற அடிப்படையில் எழுந்த போர்க்களங்களே. இன்று முஸ்லிம்களின் எதிரிகளாகத் தங்களை இனங்காட்டிக்கொண்டு கிளர்ந்து வருபவர்கள் தாங்கள் முஸ்லிம்களின் மேல் தொடுக்கும் போர்களுக்கு வேறு வேறு காரணங்களைக் கற்பிக்க முன்வரலாம். ஆனால் நம்பிக்கையாளர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திட வேண்டும். அது இந்த எதிரிகள் முஸ்லிம்களை எதிர்த்துக் கிளர்ந்ததற்கு மூலகாரணம் அவர்கள் உறுதியாய் நம்பி நிற்கும் இறைநம்பிக்கை ஈமான் அல்லாஹ்வை மட்டும் அடிபணிவேன் என அவர்கள் உறுதி கொண்டதால் தான் எதிரிகள் அவர்களைத் தாக்குகின்றார்கள். நாம் இங்கே விளக்கம் தர எடுத்துக் கொண்ட இறைவசனத்தில் நெருப்புக் குண்டத்தை வளர்த்தவர்கள் அதில் எறிக்கப்பட்டவர்களிடம் வேறு எந்தக் குற்றத்தையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் ஈமான் கொண்டார்கள். இறைவனை நம்பி அதிலேயே நிலைத்து நின்றார்கள் என்பதைத் தவிர. இறைநம்பிக்கையாளர்கள் இந்த உண்மையை எப்போதும் நினைவுகூர வேண்டும். எதிரிகள் பல்வேறு காரணங்களைக் கற்பித்து நம்மை திசைதிருப்ப முனையலாம். ஆனால் நாம் இந்த ஏமாற்றுவலையில் வீழ்ந்திடக்கூடாது. சிலுவைப் போருக்குப் பின்னால் இப்படியே ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களால் அடக்கிப் போடப்பட்டவர்களுக்கும் இடையே நடந்த போர் என்றே வருணித்தார்கள் ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் உண்மை முகத்தைக் காட்டிடும் துணிவில்லை. ஸலாஹ_த்தின் (அவர்களை அல்லாஹ் உயர் பதவிகளில் அமர்த்துவானாக) அவர்களின் ஈமானுக்கு முன் துறான்ஷா (அவர்கள் மேல் அல்லாஹ் திருப்தி கொள்வானாக) அவர்களின் இறைநம்பிக்கைக்கு முன் அந்த எதிரிகளால் எதையும் செய்ய முடியவில்லை. இவர்கள் தங்கள் தேசிய உணர்வுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு இஸ்லாம் என்ற பதாகையின் கீழ் நின்று வெற்றி பெற்றார்கள். இந்தத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப கற்பனைக் காரணங்களைக் கற்பிக்கின்றார்கள் இன்று. இப்படி இவாக்ள் இறைநம்பிக்கையாளர்கள் மேல் தாங்கள் கொண்ட பகைமைக்கும் தாக்குதல்களுக்கும் வேறு காரணங்களைக் கற்பிப்பது ஏன் தெரியுமா? அவர்கள் முஸ்லிம்களைக வெற்றியின் பக்கம் இட்டுச் செல்லும் முக்கியமான ஆயதமாம் இறைநம்பிக்கையை அவர்களிடமிருந்து பிடுங்கி எறிந்திட விரும்புகின்றார்கள். முஸ்லிம்கள் இஸ்லாம் என்ற ஓரணியின் கீழ் திரளுவதைத் தடுத்திட விரும்புகின்றார்கள். ஆகவே நாம் இந்த திசை திருப்பும் சதிகளில் விPழ்ந்திடாமல் உண்மையை உணருவோம். விசுவாசங்கொண்ட அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும் மிக்க புகழுடையோனும் யாவரையும் மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததையன்றி. (அல்குர்ஆன் 85:8) அனைத்தையும் அறிந்த அல்லாஹ் உண்மையையே பேசினான். ஏமாற்ற நினைக்கும் இந்த எதிரிகள் பொய்யர்களே.
முற்றும்.

Tuesday, August 25, 2009

கருவை உறைநிலையில் வைப்பது (Freezing the embryo) , குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது (determining the child gender ) ஆகியவை தொடர்பான ஹுகும் ஷரியா:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கேள்வி:
சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கûயில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் இது நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா(இறைசட்டம்) என்னவென்று விளக்கிக் கூறுங்கள். அல்லாஹ்( சுபு) உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
பதில்:

இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும் நியதிகளையும் அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும் அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான். இத்தகைய பயனுள்ள அறிவையும் அதனை மனிதர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குபவர்களையும் அல்லாஹ்(சுபு) புகழ்ந்து கூறியிருக்கிறான். ஏனெனில் இத்தகைய அறிஞர்கள்தான் அல்லாஹ்(சுபு) இருப்பதை ஆழமாக அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள், இந்த பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஆய்வுசெய்து அதன் இரகசியங்களை விளங்கிக்கொள்வதன் மூலமாக அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்திற்கும் அவனுடைய எல்லையற்ற ஆற்றலுக்கும் அவனுடைய மகத்தான ஞானத்திற்கும் இவர்கள் உறுதியான சாட்சிகளாக விளங்குகிறார்கள்,

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அவனுடைய அடியார்களிலெல்லாம் அவனை அஞ்சி நடப்பவர்கள் அறிவுடையோர்தான் (அல் பாதிர் : 28)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"وا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافر الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ "
(உலமாக்கள் எனப்படும்) அறிவுடையோர்தான் இறைத்துனதர்களின் வாரிசுகள் ஆவார்கள், தினாரையோ அல்லது திர்கத்தையோ (தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ) இறைத்தூதர்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்லவில்லை, அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அறிவுதான்! அதை எடுத்துக் கொள்பவர் விசாலமான வாய்ப்புகளை பெற்றவர் ஆவார் (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: இப்னுமாஜா)

எனினும். ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களும் நிராகரிப்பவர்களும் இத்தகைய அறிவை தவறாக பயன்படுத்தி மனிதர்களுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துவதுடன் மனித இனத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மேலும் மனிதர்களை வழிகெடுத்து நேர்வழியிலிருந்து விலகிப்போகும்படி செய்கிறார்கள், அறிவியல் நுட்பங்களை சரியான வழியில் பிரயோகிப்பதை விடுத்து தவறான வழியில் பிரயோகிக்கத் தூண்டுகிறார்கள், இவ்வாறாக குளோனிங் முறையை கையாளுதல். மனிதர்களின் ஆண்விந்தணுவையும் பெண்சினை முட்டையையும் இணைத்து கருவூட்டம் செய்து அந்த கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து மற்றவர்களுக்கு அதை விற்பனை செய்தல். இறந்த உடல்களை அறுத்து பரிசோதனை மேற்கொள்ளுதல். பிறகு அந்த உடல்களிலிருந்து உறுப்புகளை அகற்றி அவற்றை விற்பனை செய்தல். இதற்கும் மேலாக உயிரோடு இருக்கும் மனிதர்களை கடத்திச்சென்று அவர்களை கொலைசெய்து பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்தல் ஆகிய பாவச்செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள், கருவுற்ற சினைமுட்டைகள் மற்றும் கருவிலுள்ள சிசுக்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகளில் அவற்றை உறைநிலையில் வைத்து அந்த சிசுக்களின் வாழ்வை விருப்பம்போல் தவறாக பயன்படுத்துவதற்காக அவற்றின் உறுப்புகளை பிரித்தெடுத்தல் போன்ற பாவச்செயல்களை அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரிலும் மருத்துவ பரிசோதனை என்ற பெயரிலும் கட்டுப்பாடின்றி நிகழ்த்தி வருகிறார்கள்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ
நிச்சயமாக! ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்தி இருக்கின்றோம் ( அல்இஸ்ரா : 70)

அல்லாஹ்(சுபு) மனிதர்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் உண்மையான அறிவாற்றல் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. மேலும் இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் மற்ற படைப்பினங்களிலிருந்து தனித்துவம் கொண்ட சிறந்த படைப்பாக மனிதன் உருவெடுத்திருக்கிறான், இதன் மூலமாக மனிதன் அருள்பெற்றவனாகவும் மனநிறைவு கொண்டவனாகவும் ஆகலாம். மேலும் இதன் மூலமாக அவனுடைய உலக வாழ்க்கையையும் அறிவார்ந்த நிலையையும் உயர்த்திக் கொள்ள்ளலாம், ஆனால் தீயவர்களாகவும் களங்கமுற்ற சிந்தனை உடையவர்களாகவும் இருக்கும் சில அறிவியல் அறிஞர்கள் இந்த அறிவியல் அறிவைக் கொண்டு மனித இனத்தை வழிகெடுத்து அதை தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகள் நிலைக்கு இட்டுச்செல்லவும் மனிதனை தீய ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி மனித குலத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தவும் துணிந்துவிட்டார்கள்.

மேற்கூறப்பட்ட கேள்விக்கு இப்போது விடை காண்போம்:

கருவை உறையவைத்தல் (Freezing the embryo):

குறிப்பிட்ட சில நோய்களின் காரணமாக மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணு இணைந்து கருவுறுதல் நடைபெற்று இயற்கையாக கற்பம் தரிக்க இயலாத நிலை சில தம்பதிகளுக்கு நேரிடுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது, பெண்ணின் சினைக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. சினைப்பையின் இயக்கத்திறன் குறைவு. கருப்பையின் பலவீனம். அல்லது ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்தணுவின் இயக்கத்திறன் குறைவு ஆகிய காரணங்களினால் இயற்கையாக ஒரு பெண் கற்பம் தரிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது, ஆகவே மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருவறைக்கு (uterus) வெளியே தகுந்த சூழலில் ஒரு சோதனைக்குழாயில்(Test tube) மனைவியின் சினைமுட்டையை(ovum) கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம்(fertilisation) செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள், இதன் மூலமாக மகப்போறு அற்ற நிலையிலிருக்கும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது, குளோமிட்(clomid) எனப்படும் மருத்துவமுறை மூலமாக ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சினைப்பையிலிருந்து என்டோஸ்கோப்பி(endoscopy) எனப்படும் சிகிச்சைமுறையின் வாயிலாக சரியான தருணத்தில் பிரித்தெடுத்து ஒரு கடினத்தன்மை கொண்ட தட்டில் வைத்து பின்னர் ஒரு சோதனைக்குழாயில் அதை அவளுடைய கணவனின் விந்தணுவுடன் இணைத்து கருவுட்டம் செய்கிறார்கள், பிறகு கருவுற்ற அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறார்கள். அல்லாஹ்(சுபு) நாடினால் அது குழந்தையாக வளர்ச்சி அடைகிறது அல்லது அல்லாஹ்(சுபு) நாடினால் அது செயலற்று இறந்துவிடுகிறது பின்னர் இயற்கையாக அது கருவறையில் அழிக்கப்பட்டுவிடுகிறது, இத்தகைய மருத்துவ சிகிச்சையை அந்தப் பெண்ணும் அவளது கணவனும் தெரிவுசெய்யும் சிறப்பு மருத்துவ நிபுணர் மேற்கொள்கிறார்.


சில சந்தர்ப்பங்களில் கருவின் இறப்புவிகிதம் 90 சதவீதம் அளவுக்கு இருப்பதாலும் தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏக்கம் கொள்வதாலும் அவர்கள் இந்த சிகிச்சையை திரும்பத்திரும்ப மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விழைகிறார்கள், பெண்ணுக்கு இது ஒரு கஷ்டமான மருத்துவ சிகிச்சை என்பதால் அவளிடமிருந்து அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகளை பெறுவதற்காக குறிப்பிட்ட மருந்துகள் அவள் உடலில் செலுத்தப்படுகின்றன, சோதனைக்குழாயில் பெண்ணின் சினைமுட்டைகளை கருவூட்டம் செய்யும் செயல்முறையில் முழுவெற்றிக்கு உத்திரவாதம் இல்லை என்ற காரணத்தால் ஒரு சினைமுட்டை கருவூட்டம் பெறாதபோது மற்றொன்றை உபயோகப்படுத்தும் விதமாக சில சினைமுட்டைகளையாவது பெண்ணிடமிருந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது, இவ்வாறு எடுக்கப்பட்ட சினைமுட்டைகளை கருவூட்டம் செய்து அவற்றை இருப்பில் வைத்துக் கொண்டு அதில் ஒன்றை பெண்ணின் கருவறையில் செலுத்துகிறார்கள், அதை கருவறை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மற்றொன்றை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்த முயற்சி சிலமுறை மேற்கொள்ளப்படுகிறது.


கருவூட்டம் பெற்ற கருமுட்டை ஒரு தனிப்பட்ட கருவியின் துணைகொண்டு பெண்ணின் கருவறையில் செலுத்தப்படுகிறது, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு பொதுவாக மூன்று கருமுட்டைகள் கருவறையில் செலுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்படுகின்றன, ஒருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதில் தோல்வி ஏற்படும்போது மற்றொன்று பயன்படுத்தப்படுகிறது, சோதனைக்குழாயில் கருவூட்டம் ஏற்படுத்தும் இந்த முறையில் ஒரே தடவையில் முயற்சி வெற்றிபெற்று கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்தாலும் ஒவ்வொரு முறையும் என்டோஸ்கோப்பி மூலம் சினைமுட்டையை பிரித்தெடுப்பது அந்தப்பெண்ணுக்கு மிகுந்த கஷடத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தாலும் குறிப்பிட்ட மருந்துகளை அவள் உடலில் செலுத்தி அதன்மூலம் அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகள் அவளிடமிருந்து பெறுகிறார்கள், இதன்மூலம் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படும் கஷடத்திலிருந்து அவள் காக்கப்படுகிறாள்.


எனினும் கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை வளர்ச்சி அடையும் நிலையோ அல்லது செயலற்றுப் போகும் நிலையோ உடணடியாக ஏற்படாது. உண்மையில் பலமணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோதான் அதுபற்றி கண்டறியமுடியும், இந்த காலகட்டத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகளை தகுந்த சூழலில் சரியான வெப்பத்தில் இருக்கும்படியாக உறைநிலையில் (frozen) பாதுகாத்து வைக்கவில்லை எனில் அவை இறந்துவிடும். ஆகவே இந்த உபரியான கருமுட்டைகள் திரவநிலை நைட்ரஜைன் (liquid nitrogen) எனும் திரவத்தில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது பின்னர் அவை உபயோகப் படுத்தப்படுகின்றன.


இவ்வாறுதான் கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் வழிமுறை ஏற்பட்டது, பலமுறை பெண்ணிடமிருந்து சினைமுட்டைகளை பிரித்தெடுக்கும் கஷ்டத்தை நீக்குவதற்காகவும் பலமுறை அதற்காக மருத்துவ சிகிச்கை பெறும் சிரமத்தை குறைப்பதற்காகவும் ஒரே சமயத்தில் பெண்ணிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகள் பெறப்பட்டு கருவூட்டம் செய்யப்படுகின்றன, கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளில் ஒன்று கருவறைக்குள் செலுத்தப்பட்டதற்குப் பின்னர் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் மறுமுறை இதே சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உபரியாக உள்ள கருமுட்டைகள் உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.


இருந்தபோதிலும் முயற்சி வெற்றி பெற்று மருத்துவ சிகிச்சை முடிவுற்ற பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் வர்த்தக பொருளாக ஆக்கப்படுகின்றன, குறிப்பாக நிராகரிக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த தீயசெயல் சாதாரனமாக நடந்துவருகின்றன, நீண்ட காலத்திற்கு அல்லது சில தருணங்களில் ஒரு வருட காலத்திற்குக்கூட கருமுட்டைகள் உறைநிலையில் வைக்கப்பட்டு எந்த பெண்ணடமிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பெண்ணிற்கு செலுத்தப்படாமல் மற்ற தம்பதிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணிற்கோ விற்பனை செய்யப்படுகின்றன, இத்தகைய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உறைநிலைக் கருக்களின் சேமிப்பு வங்கிகளாக செயல்படுகின்றன, செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்படும் சினைமுட்டைகள் வேறுபாடின்றி வெவ்வேறு ஆண்களின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யப்படுகின்றன, முதல்தடவை கருமுட்டை செலுத்தப்பட்டு முயற்சி தோல்வியடைந்த மற்ற பெண்ணகளுக்கு இத்தகைய அந்நிய கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன, இவ்வாறு இவர்கள் பிறக்கப்போகும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழியை தவறாக மாற்றியமைத்து சந்ததிகளின் மரபுவழி சீர்முறையை (genetical line) திரித்து மனித இனத்தை வழிகேட்டில் ஆழ்த்துகிறார்கள்!


மேலும் இத்தகைய உறைநிலை மருத்துவ தொழில்நுட்பம் கருமுட்டை அளவில் நிறுத்திக் கொள்ளாமல் கருவூட்டம் பெறாத சினைமுட்டைகளையும் கருநிலை சிசுக்களையும்(ச்ர்ங்ற்ன்ள்ங்ள்) உறைநிலையில் சேமித்து வைத்து அவைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள், இத்தகைய வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கும் சிலர் சில தருணங்களில் பிரபலமான சில மனிதர்களுடைய சினைமுட்டைகளையோ அல்லது கருநிலை சிசுக்களையோ உள்ளபடியே விற்பனை செய்துவருகிறார்கள்!


இதுதான் உறைநிலை கருமுட்டை மற்றும் கருநிலை சிசுக்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைநிலையாகும், இந்த விஷயம் தொடர்பாக விரிவான விளக்கம் இருந்தபோதிலும் நாம் கூறியுள்ளவை ஒட்டுமொத்த விஷயத்தையும் உள்ளடக்கிய சுருக்கமான விளக்கமாகும்.


இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


1. சட்டரீதியான தம்பதிகளில் உள்ள பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய கணவனின் விந்தணுவோடு இணைத்து சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்வதைப் பொறுத்தவரை அதற்கு அனுமதியுண்டு, திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இயல்பாக விரும்புவார்கள் என்ற நிலையில் ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகளால் அவள் கருவறையில் இயற்கையாக கருவுறுதல் நடைபெறுவதற்கு வாய்ப்பபில்லை எனும்போது இது அனுமதிக்கப்பட்டதுதான் ஏனெனில் இது மருத்துவ சிகிச்சையை சார்ந்ததாகும், அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏவியிருக்கிறார்கள். உஸôமா இப்ன் ஷுரைக்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ

ஆம்! நீங்கள் நிச்சயமாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் அல்லாஹ் அஸ்வஜல் நிவாரணம் இல்லாத நிலையில் முதுமையைத்தவிர (மரணத்தைத் தவிர) எந்த நோயையும் விட்டுவிடவில்லை.


எனினும் குழந்தைப்பேறுக்காக இந்தமுறையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.


முதலாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டுதல் மேற்கொள்வது சட்டரீதியான தம்பதிகளுக்குள் மட்டுமே நடைபெறவேண்டும்,


ருவைபா இப்ன் தாபித் அல்அன்ஸôரி(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْ غَيْرِهِ

அல்லாஹ்வின் மீதும் மறுமைநாள் மீதும் ஈமான் கொண்ட எவருக்கும் மற்றவர்களின் பயிரில் நீர்பாசனம் செய்வதற்கு அனுமதியில்லை.


ஆகவே ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சட்டரீதியான கணவனின் விந்தணுவைக் கொண்டு அல்லாது கருவூட்டம் செய்வதற்கு அனுமதியில்லை.


இரண்டாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் மனைவியின் கருவறையில் மட்டுமே செலுத்தப்படவேண்டும், என்பதோடு மனைவி இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், மேற்குநாடுகளில் நடைபெறுவதைப்போல கணவனின் இறப்புக்குப் பின்னர் இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை, மேற்குநாடுகளின் மக்களைப் பொறுத்தவரை ஒரு பெண் குழந்தையை விரும்பும்போது கணவன் உயிருடன் இல்லாதபோதும் கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொண்டு குழந்தை பெற்றுகொள்வதில் எந்த தீங்கும் இல்லையென்று கருதுகிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை ஏனெனில் கணவன் உயிருடன் இல்லாதநிலையில் மனைவி கற்பம் அடைந்தால் பிறகு அவள் பெரும்பாவம் புரிந்தவர்களில் ஆகிவிடுவாள், உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீûஸ அவர்கள் அறிவித்தபோது ஸஹாபாக்கள் எவரும் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, இவ்விருவரும் அறிவித்தது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மற்ற ஸஹாபாக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பார்கள், இதனடிப்படையில் இது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவாக (இஜ்மா அஸ்ஸஹாபா) இருக்கிறது.


எனவே கணவன் இல்லாத நிலையில் மனைவி கற்பம் அடைதல் என்பது விபச்சாரம் புரிந்ததற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது, (கணவனல்லாத) அந்நிய ஆணுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக கற்பம் ஏற்படும் பட்சத்தில் அந்த செயல் தண்டனை சட்டங்களுக்கு (hudood law) உட்படக்கூடியது, இதே அடிப்படையில் கற்பம் அடைதல் உடலுறவு கொள்ளாத நிலையில் ஏற்பட்டாலும் அதாவது கணவன் இறந்துவிட்ட நிலையில் சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொள்வதன் மூலம் மனைவிக்கு கற்பம் ஏற்பட்டாலும் அது தடுக்கப்பட்ட செயல்களில் உள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.


இதனடிப்படையில் சட்டரீதியான கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் மனைவியின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் இந்திரியங்களை(விந்தணு மற்னும் சினைமுட்டை) இணைத்து கருவூட்டம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.


2. உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பதைப் பொறுத்தவரை முதல் முயற்சி தோல்வியுறும்போது மறுபடியும் அதே முயற்சியை மேற்காள்வதற்காக அவை உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன, இவ்வாறு இருக்கும் நிலையில் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அதே பெண்ணுக்கும் அவளுடைய சட்டரீதியான கணவனுக்கும் உரியதாக இருக்கவேண்டும். இதில் உயிரணுக்களில் கலப்படம் நிகழவில்லை என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டால் பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் இச்சமயத்ததில் அவள் கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.


எனினும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றில் கலப்படம் நிகழ்கிறது என்பது திட்டவட்டமாக உறுதி செய்யபட்டிருக்கிறது, இவ்வாறு நிகழும்போது சோதனைக்குழாய் முறையில் பிறக்கும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழி குறித்து சந்தேகம் ஏற்படுவதால் அந்த குழந்தையின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இது மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிகப்பாவமான செயலாகும், அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ முஸ்லிம்கள் இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது, ஆகவே சட்டரீதியான முஸ்லிம் தம்பதிகள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை மேற்கொள்ளும்போது கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.


1, மனைவியின் சினைமுட்டையை உயிருடன் இருக்கும் கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யும்போது முறையான கவனம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும், மனைவியின் கருவறைக்குள் கருமுட்டை செலுத்தப்படும்போதும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்போதும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கண்காணித்து வரவேண்டும்.

11, உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையை கையாள வேண்டும், அவைகள் எந்தவிமாமான கலப்படத்திற்கும் உட்படுத்தப்படாமலும் மற்றவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்திற்கு இடம் கொடுக்காமலும் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தமுறையில் கருமுட்டைகளுக்கு மத்தியில் கலப்படம் நிகழ்கிறது என்ற அறிவிப்பின் அடிப்படையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.


111, கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சியடைந்து கற்பம் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டால் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் உடணடியாக அழிக்கப்படவேண்டும், அவைகளை அந்நியர்கள் பயன்படுத்தும் விதத்திலோ அல்லது அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும் விதத்திலோ எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், எனினும் இதை கண்கூடாக அறிந்துகொள்வதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும், உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்ற இந்த நிபந்தனை முறையாக நிறைவேற்றப்பட்டதா என்பதை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாதவகையில் இந்தவிஷயம் வெறும் யூகமாவே இப்போது இருந்துவருகிறது.


"ஹராமான செயலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் (Means) ஹராமானவையே."

என்ற ஷரியா விதிமுறையின் அடிப்படையில் ஹராம் நிகழ்வதற்கு சிறிய வாய்ப்பு கூட இருக்குமானால் பிறகு இந்த சிகிச்சைமுறை ஹராமாகிவிடும், உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகள் அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும்போதும் அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ அவற்றில் கலப்படம் நிகழும்போதும் அது ஹராமாகிவிடுகிறது, மரபுவழியில் பரிசுத்தத்தை பாதுகாப்பது கட்டாய கடமை என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.


இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸ் இப்ன் மாஜாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

""தனது தந்தையை அல்லாமல் மற்றொருவரிடம் பிறப்புரிமையை கோருபவர் மீதும் தனது பாதுகாவலரை அல்லாமல் மற்றவரிடம் பாதுகாப்புரிமையை கோருபவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.


அபூஹுரைரா(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


லிஆன்( (li’aan – சாபமிடுதல்) தொடர்பான வசனம் அருளப்பட்ட தருணத்தில் அல்லாஹவின்தூதர்(ஸல்) கூறினார்கள்.


أيَّما امرأة أدخلت على قوم نسباً ليس منهم فليست من الله في شيء، ولم يدخلها الله جنته

"எவளேனும் ஒருபெண் ஒருகூட்டத்தாருக்கு வாரிசாக இல்லாத சந்ததியை (அவர்களுக்கு உரியது என்று) அறிமுகப்படுத்துவாளாயின் அவளுக்கு அல்லாஹ்வுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது மேலும் அவன் அவளை சுவனத்தில் நுழைவிக்கமாட்டான்."


இதனடிப்படையில் சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பது ஹராமாகும், மனைவியின் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டையைத் தவிர்த்து உபரியாக கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் அனைத்தும் உடனே அழிக்கப்பட வேண்டும். அவைகளை உறைநிலையில் வைப்பதற்கோ அல்லது மறுமுறை பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது, கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை செயலற்றுவிடுமாயின் பிறகு மனைவி மறுபடியும் அதே மருத்துவ சிகிச்சைக்கு உட்படவேண்டும், ஒவ்வொருமுறையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுவது மனைவிக்கு கஷ்டம் என்ற காரணத்திற்காக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதியில்லை ஏனெனில் இது குழந்தையின் தாய்தந்தை மரபுவழியில கலப்படம் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.


கருமுட்டைகளை உறைநிலையில் வைக்கும்முறை ஷரியாவின் அடிப்படையில் ஹராம் என்று கூறப்பட வேண்டுமானால் கருமுட்டையில் கலப்படம் ஏற்படும் என்ற சந்தேகம் மிகைத்து நிற்கவேண்டும் என்றும் ஆனால் இதில் சாதாரணமான சந்தேகம் நிலவுகிறதே தவிர உறுதியான சந்தேகம் நிலவவில்லை என்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்குரியதாக இருந்து செயல்முறைகள் உரிய கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் நடத்தப்படுமாயின் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் ஒருவர் வாதிடலாம், முதல்தடவை கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டதற்கு பின்னர் உபரியாக உள்ள கருமுட்டைகளை மீண்டும் பயன்படுத்தாமல் முறையாக அழித்துவிடும் நம்பிக்கைக்குரிய மருத்துவநிலையங்கள் இருக்குமானால் திரும்பத்திரும்ப மருத்துவ சிகிச்சைக்கு மனைவியை உட்படுத்தும் கஷ்டத்தை நீக்கும்வகையில் உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது:


ஷரியாவின் இந்த விதிமுறையை பிரயோகிப்பதற்கு சந்தேகம் உறுதியான முறையில் இருக்கவேண்டும் என்ற வாதம் சரியானதுதான், சிகிச்சை பெறும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்நிலையில் இத்தகைய உறுதியான சந்தேகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான், கருமுட்டைகளில் கலப்படம் ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றும் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ந்து முயற்சி வெற்றி பெற்றுவிட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் முறையாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் முழுமையான நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான், எனினும் இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை திட்டவட்டமாக குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகின்றன என்ற அடிப்படையிலும் இத்தகைய சிகிச்சைமுறையில் இடம்பெறும் இரண்டு நிலைகளை ஆய்வுசெய்யும்போது இதுபோன்ற நம்பிக்கைகள் நிச்சயமற்றவை என்பது உறுதியாகும்.


முதலாவதாக. கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டு அது கருவாக வளர்ச்சி அடைகிறதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கு காத்திருக்கும் காலகட்டத்தில் அனைவரின் கவனமும் கருவளர்ச்சியின் மீது நிலைத்திருக்குமே ஒழிய உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டை மீது கவனம் நிலைத்திருக்காது.


இரண்டாவதாக. கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவது உறுதிசெய்யப்பட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தையும் அழிக்கும் செயல்முறை முறையான கண்காணிப்போடு நிறைவேற்றப்படவேண்டும், ஆனால் கருவுற்ற மனைவியோ அல்லது அவளது கணவனோ இவ்விஷயத்தில் உரிய கவனத்தையோ அல்லது முறையான அக்கறையையோ எடுத்துக்கொள்வதில்லை, அதிகப்பட்சமாக "உபரியான கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதா?"என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு "ஆம், அழிக்கப்பட்டுவிட்டன" என்ற பொதுவான பதிலை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள், இவ்வாறு இருக்கும் நிலையில் மருத்துவநிலையங்கள் நம்பிக்கைக்கு உரியவை என்ற யூகத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு முழுமையாக திருப்தி கொள்ளமுடியும்?


எனவே சந்தேகம் மிகைக்கும்நிலை (strong suspicion – ghalabat dhanni)இடம்பெறாதபோதும் மேற்கண்ட ஷரியா விதிமுறையின் அடிப்படையில் இந்த செயல்முறை ஹராமாக இருக்கக்கூடாது என்பது அவசியமாகும், ஆனால் மிக நிச்சயமாக இது "சந்தேகத்திற்குரியது" என்பதுதான் உண்மைநிலையாகும்.


ஹஸன் இப்ன் அம்ர்(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹஸன் ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது


அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) வார்த்தைகளை நான் மனனம் செய்திருக்கிறேன் அவர்கள்(ஸல்) கூறினார்கள்.

دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ

"சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டுவிட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்"

முடிவுரை:


இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறையில் மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணுவை இணைத்து கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்துகொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.


கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் சோதனைக்குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கருவறையில் செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கருமுட்டைகள் அனைத்தும் வேறெந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்காத வகையில் உடனே அழிக்கப்படவேண்டியது கட்டாயமாகும்.


அல்லாஹ்(சுபு) வின் நாட்டப்படி முதல்முறை செலுத்தப்பட்ட கருமுட்டையின் மூலம் கற்பம் தரிக்குமானால் நிச்சயமாக அந்த தம்பதிகள் அல்லாஹ்(சுபு) வுக்கு நன்றி செலுத்துவார்கள். ஒருவேளை அல்லாஹ்(சுபு) நாடி கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை செயலற்றுப்போய் முயற்சி தோல்வியுறுமானால் அந்த தம்பதிகள் மறுமுறையும் இந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமே ஒழிய உபரியாக கருமுட்டைகளை உருவாக்கி அவற்றை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.


சட்டரீதியாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றை கருவறைக்கு வெளியே வைத்து கருவூட்டம் செய்துகொள்வதற்கு அனுமதியுண்டு ஆனால் இதை கணவன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ளமுடியும்.


குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் – Determining the child gender:

வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே மனிதர்கள் குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்வதில் விருப்பம் கொள்பவர்களாகவும் விரும்பிய பாலினம் உருவாகும்போது ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் விரும்பாத பாலினம் உருவாகும்போது அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் செயல்முறையை பிரயோகிகத்து அவற்றை நீக்குபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.


அறியாமைக் காலத்தில் ஆண்குழந்தை அதிகமாக விரும்ப்பட்டது ஏனெனில் அது போர்க்களத்திலும் மற்ற விஷயங்களிலும் தந்தைக்கு உதவியாக இருப்பதோடு சந்ததியையும் நிலைநிறுத்துகிறது, அதேவேளையில் பெண்குழந்தை துயரத்தை கொடுக்கக்கூடியது என்று கருதப்பட்டதால் உயிருடன் புதைக்கப்பட்டது,அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்) குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்று வினவப்படும்போது... (அத்தக்வீர் : 8. 9)


பிறகு வந்த காலகட்டத்தில் விரும்பாத குழந்தைகளை கருவிலேயே நீக்கிவிடும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டது, தாயின் கருவறையில் ஸகேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து விருப்பத்திற்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் கருவை கலைத்திடும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.


அறிவியல் முன்னேற்றம் அடைந்த இந்தக் காலகட்டத்தில் இவ்விஷத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன, கருவறையில் இருக்கும் கருநிலை சிசுவை (foetus) கண்காணிக்கவும் அதன் இயக்கத்தை விரும்பியவாறு கட்டுப்படுத்தவும் இப்போது சாத்தியம் இருக்கிறது, கருவறையிலுள்ள கருவின் மரபணு (gene)அமிலத்தன்மையின் சூழலில் (acidic environment) இருந்தால் பெரும்பாலும் அது பெண் சிசுவாக உருவாகும் என்றும் மரபணு காரத்தன்மையின் சூழலில் (alkaline environment) இருந்தால் அது பெரும்பாலும் ஆண் சிசுவாக உருவாகும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது, இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்பவர்கள் உடலுறவு ஏற்படுவதற்கு முன்பு கருவறைக்குழாயில்(vegina) காரத்தன்மையுள்ள திரவத்தை பீச்சிக்கொள்வதன் மூலம் கருவறையில் காரத்தன்மையின் சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு அல்கலைன் டூஷிஸ்(ஹப்ந்ஹப்ண்ய்ங் க்ர்ன்ஸ்ரீட்ங்ள்) என்று பெயராகும். இதன் மூலமாக ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.


இதற்கு அடுத்தபடியாக பெண்ணின் உடலில் காரத்தன்மையின் சூழல் அல்லது அமிலத்தன்மையின் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு உணவுமுறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, கருவின் பாலின உருவாக்கத்தில் இரண்டு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.


முதலாவதுமுறை: கருவறை மற்றும் கருவறைக்குழாய் ஆகியவற்றில் காரத்தன்மையையோ அமிலத்தன்மையையோ செயற்கையாக உருவாக்குதல்,
பொட்டாஷியம் மற்றும் சோடியம் ஆகியவை காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது ஆண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் அதேவேளையில் மெக்னீஸியம் மற்றும் கால்ஸியம் ஆகியவை அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது பெண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் கண்டறியப்பட்டது.


இரண்டாவதுமுறை: உணவுமுறை சினைமுட்டையின் வெளிப்புறசுவரில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அதன் மூலமாக அது விந்தணுவிலுள்ள ஆண்அணுவையோ (male sperm) அல்லது பெண்அணுவையோ (female sperm) ஈர்க்கும் திறனைப் பெற்றுக்கொள்கிறது என்றும் ஆய்வுசெய்யப்பட்டது.


இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு காரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான உப்பேற்றிய மாமிசம்(salty meat) மசாலாபொருட்கள் கலந்த உணவுகள் பழங்கள் மற்றும் பொட்டாஷிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் பால் மற்றும் பால்பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.


மாறாக பெண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான பால் மற்றும் பால் பொருட்கள். கால்ஸிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் மாமிசம் குறிப்பாக உப்பேற்றிய மாமிசம் பழங்கள் மசாலா மற்றும் நறுமண உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்ந்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.


இதன்பின்னர் மற்றொரு வழிமுறையும் கண்டறியப்பட்டது: பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிபட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது, உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது, ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும் ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.


இவ்வாறாக இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுதல் அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவை குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் செயல்முறைகளாக இருந்துவருகிறது.


பெண்ணின் கருவறையில் சினைமுட்டை இருக்கும் தேதியை அவளது மாதவிடாய் தேதியை வைத்து தீர்மானித்து விடலாம் என்றபோதும் அது தோராயமான கணிப்பாகத்தான் இருக்கும், கருவறைக்குள் என்டோஸ்கோப்பி கருவிமூலம் உற்றுநோக்கி கணிப்பதன் மூலமே சினைமுட்டையின் வெளிப்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.


தவ்பான்(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

"ஆணின் இந்திரியத்திற்கு முன்பாக பெண்ணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது ஆண்குழந்தையாகும். பெண்ணின் இந்திரியத்திற்கு முன்பாக ஆணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது பெண்குழந்தையாகும்"

தவ்பான்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.


யூதரிலுள்ள ரப்பி (அறிஞர்) ஒருவர் அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) ஆண்குழந்தை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலுரையாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாவது.

"அவர்கள் (உடலுறவில்) ஒன்றுபடும்போது ஆணின் இந்திரியமும் பெண்ணின் இந்திரியமும் வெளிப்படுகிறது, ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி ஆண்குழந்தை உருவாகிறது. பெண்ணின் இந்திரியம் ஆணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி பெண்குழந்தை உருவாகிறது"

"ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைத்துவிடுதல்" என்றால் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் ஆணின் விந்தணு வெளிப்படுதல் என்று பொருள்படும்.


இதன்பின்னர் மருத்துவநிபுணர்கள் மேம்பட்ட அறிவியல் வழிமுறையை உருவாக்கினார்கள் அதற்கு ""தேர்வுசெய்து விந்தணுவை செலுத்தும்முறை அல்லது விந்தணுவை கட்டுப்படுத்தும்முறை - selective sperm vaccination or sperm inhibition என்று பெயராகும், இந்தமுறையில் விந்தணுவில் இடம்பெற்றுள்ள ஆண்பாலுக்குரிய x குரோமோஸோமிலிருந்து பெண்பாலுக்குரிய y குரோமோஸோமை பிரித்துவிடுகிறார்கள். இந்த செயல்முறை பெண்ணின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் முறையான மருத்துவ தொழில்நுட்பத்தின் மேற்பார்வயில் நடைபெறுகிறது.


ஆணின் விந்தணுவில் x மற்றும் y குரோமோஸோம்கள் (மரபணு துகள்கள்) இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் yy குரோமோஸோம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, அதாவது ஆணின் விந்தணுவில் ஆண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் பெண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் பெண்பாலுக்குரிய குரோமோஸோமகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, விந்தணுவிலுள்ள y குரோமோஸோம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xy என்ற மரபணு உருவாகிறது. அது ஆண்குழந்தைக்குரியது. மாறாக விந்தணுவிலுள்ள x குரோமோúஸôம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xx என்ற மரபணு உருவாகிறது. அது பெண்குழந்தைக்குரியது, இதனடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விந்தணுவிலுள்ள (ஆண்பாலுக்குரிய) y குரோமோஸோம்லிருந்து (பெண்பாலுக்குரிய) x குரோமோúஸôமை பிரித்துவிட்டு பின்னர் சோதனைக்குழாயில் சினைமுட்டையுடன் விந்தணுவை இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள், தம்பதிகள் ஆண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் y குரோமோஸோம்உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது, தம்பதிகள் பெண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் ஷ் குரோமோúஸôம் உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது.


இதேபோன்று மற்றொரு முறையை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். அது மேற்கூறப்பட்ட முறையிலிருந்து சிறிது வேறுபட்டது, இந்த முறையில் சோதனைக்குழாயில் விந்தணுவுடன் சினைமுட்டையை இணைத்து கருவூட்டம் செய்தபின்னர் கருவுற்ற முட்டையை ஆய்வுசெய்கிறார்கள். கருவுற்ற சினைமுட்டை xy மரபணுவை பெற்றிருந்தால் அது ஆண்குழந்தைக்குரிய கருவாகும். கருவுற்ற சினைமுட்டை xx மரபணுவை பெற்றிருந்தால் அது பெண்குழந்தைக்குரிய கருவாகும், ஆகவே ஆண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xy மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள். பெண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xx மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள்.


இவையனைத்தும் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளாகும். இது வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இன்றுவரை நிகழந்துகொண்டிருக்கிறது.


இந்த விவகாரத்தின் எதார்த்தநிலை (taHqeeq al ManaaT) இவ்வாறு விளக்கப்பட்ட பின்னர் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


1, விருப்பத்திற்கு மாற்றமாக பிறக்கும் குழந்தையை கொலைசெய்வது ஹராமான செயலாகும் ஏனெனில் இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்யப்படும் கொலையாகும், இதற்கு தண்டனை மறுமையில் நரகநெருப்பில் நிரந்தரமாக வீழ்வதாகும். மேலும் இந்த உலகத்தில் அதற்கு உரியவர்களால் அந்தப்பாவம் மன்னிக்கப்படாவிட்டால் அதற்காக பழிதீர்க்கப்பட வேண்டும் (qisas) அல்லது இரத்தஈட்டுத்தொகை(diya) வழங்கப்படவேண்டும்.


அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

عَذَابًا عَظِيمًا .وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ


எவரேனும் ஒருவர் ஒரு மூ*மினை வேண்டுமென்றே கொலை செய்வாராயின் அவருக்கு உரிய தண்டனை நரகமேயாகும். மேலும் அல்லாஹ் அவர்மீது கோபம் கொள்கிறான் இன்னும் அவரை சபிக்கிறான் அவருக்கு மகத்தான வேதனையை தயாரித்து வைத்திருக்கிறான். (அந்நிஸா: 93)


11, பெற்றோர்கள் விரும்பாதபோது கற்பத்தில் வைத்து கருவில் இருக்கும் சிசுவை கொல்வதும் தண்டனைக்குரிய ஹராமான செயலே.


அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரி. முஸ்லிம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"ஹுதைல் கோத்திரத்திலுள்ள பெண்கள் இருவர் (சண்டையிட்டுக்கொண்டு) ஒருவர் மீது மற்றொருவர் கல்லெறிந்துவிட்டார். அதனால் அந்தப்பெண்ணின் கற்பம் கலைந்துவிட்டது, அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) இது முறையிடப்பட்டது. குற்றவாளி ஆண்அடிமையையோ அல்லது பெண்அடிமையையோ தியத்தாக கொடுக்கவேண்டும் என்று அவர்கள்(ஸல்) தீர்ப்புக் கூறினார்கள்"

111, கற்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது மூலமாகவோ அல்லது உடலுறவில் ஈடுபட்டபின்னர் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவது மூலமாவோ அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது மூலமாகவோ தற்காலிகமாக கருவுறுதலை தவிர்த்துக் கொள்வதற்கு அனுமதியுண்டு, உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்வது. காரம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட திரவத்தை கருவறைக்குழாயில் பீச்சிக்கொள்வது ஆகியவையும் அனுமதிக்கப்பட்டதே. இவற்றில் எந்தவிதான ஆட்சேபனையும் கிடையாது அவைகளுக்கு உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை தொடர்பான பொதுவான ஆதாரம் உள்ளது,


அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்ளாமல் விலகியிருக்கும் முறையை பின்பற்றுவதற்கு தீர்மானித்து அதை அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) கூறினோம், அதற்கு அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்.

"நீங்கள் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டாமா? அல்லாஹ் இருக்கவேண்டும் என்று விதித்த எந்த ஆத்மாவும் மறுமை நாளுக்குள் இருந்தே தீரும்"


IV. ஆணின் விந்தணுவிலிருந்து பெண்பால் குரோமோúஸôமையும் ஆண்பால் குரோமோúஸôமையும் தனியாக பிரித்துவிட்ட பின்னர் ஆண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள ஆண்பால் குரோமோúஸôமைக் (y)கொண்டு கருவூட்டம் செய்வது அல்லது பெண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள பெண்பால் குரோமோúஸôமைக் (x) கொண்டு கருவூட்டம் செய்வது ஆகிய செயல்முறையைப் பொறுத்தவரை இவற்றை செய்வதற்கு அனுமதி கிடையாது ஏனெனில் இது குழந்தைப்பேறு இல்லாத பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளும் மருத்துவ முறையையோ அல்லது சிகிச்சை முறையையோ சாராது, இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாத சட்டரீதியான தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே அனுமதியுண்டு.


குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்முறைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பெண் தனது அந்தரங்க உடல்பகுதிகளை(aurah) அந்நியர்களிடம் வெளிப்படுத்த நேரிடும் ஏனெனில் இந்த செயல்முறையில் பெண்ணின் சினைப்பையிலுள்ள சினைமுட்டையை பிரித்தெடுப்பதற்கும் கருவுற்ற சினைமுட்டையை கருவறைக்குள் செலுத்துவதற்கும் அந்தரங்க உடல்பகுதிகளை வெளிப்டுத்தவேண்டிய நிலை ஏற்படும், மருத்துவ சிகிச்சை செய்துகொள்வதற்கு மட்டுமே இது அனுமததிக்கப்ட்டிருக்கிறது, குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செல்முறைகள் மருத்துவ சிகிச்சையில் அடங்காது என்ற காரணத்தால் இது தடைசெய்யப்பட்ட ஹராமான செயலாகும் இதற்கு ஷரியாவில் அனுமதி கிடையாது.


முடிவுரையாக, இஸ்லாத்தின் அகீதாவோடு தொடர்புடைய முக்கியமான உண்மையை இங்கு குறிப்பிடவேண்டும் ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அது மிகவும் முக்கியமானதாகும், மேற்கூறப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் சிகிச்சைமுறைகளையும் மனிதன் மேற்கொள்வதற்குக் காரணம் அவன் படைப்பாற்றலை பெற்றிருக்கிறான் என்ற அர்த்தத்தில் அல்ல, ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் கருவுறுதல் என்ற நிகழ்விலும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயம் செய்துள்ள சில பண்புகளையும் இயல்புகளையும் மனிதன் கண்காணித்து அவற்றை விளங்கிக்கொள்ளலாம், இந்த மகத்தான செயற்பாங்கின் போக்கை மனிதன் கண்காணிக்கலாம் அவைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம் மற்றும் பல பரிசோதனைகளையும் நடத்தலாம், இந்த ஆய்வின் அடிப்படையில் அவன் குறிப்பிட்ட உணவு முறைகளையும் குறிப்பிட்ட செயல்முறைகளையும் பின்பற்றலாம், மேலும் அவன் ஆணின் விந்தணுவிலுள்ள ஆண் குரோமோúஸôமையும் பெண் குரோமோúஸôமையும் தனித்தனியாக பிரித்து பெண்ணின் கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்து அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தலாம், ஆனால் இதன் விளைவாக படைப்புகள் எதுவும் நிச்சயமாக உருவாகாது. அது முற்றிலும் அல்லாஹ்(சுபு) என்ற படைப்பாளன் கையில் இருக்கிறது, அல்லாஹ்(சுபு) தீர்மானிக்கும்போதுதான் படைப்புகள் உருவாகி இயக்கத்திற்கு வருகிறது, அல்லாஹ்(சுபு) அவ்வாறு நாடவில்லை என்றால் மனிதன் எத்தனை சோதனைகள் மேற்கொண்டாலும் எத்தனை ஆய்வுகள் மேற்கொண்டாலும் எத்தனை செயல்முறைகளை நிறைவேற்றினாலும் எந்தவிதமான படைப்பும் ஒருபோதும் உருவாகாது.


அல்லாஹ்(சுபு) படைக்க நாடும்போது மட்டும்தான் உயிர்கள் ஜனிக்கின்றன. அவன்(சுபு) நாடவில்லை என்றால் உயிர்கள் ஜனிக்காது,அல்லாஹ்(சுபு) மட்டும்தான் படைப்பாளன் என்ற உண்மையும் அவன்தான் ஆணையும் பெண்ணையும் படைக்கிறான் என்ற உண்மையும் மறுக்கமுடியாத வகையில் திட்டவட்டமான ஷரியா ஆதாரங்களால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன.


ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. அவன்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளன். ஆகவே அவனையே வணங்கிவழிபடுங்கள் இன்னும் அவனே அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பாளன் ஆவான், (ற்ம்வ் அல்அன்ஆம் 6:102)


إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ 15:86

நிச்சயமாக உமது இறைவன் (அனைத்தையும்) படைத்தவனாகவும் எல்லாவற்றையும் அறிந்தவனாகவும் இருக்கிறான், ( அல்ஹிஜ்ர் 15:86)

ஆகவே எவன் படைக்கிறானோ அவன் படைக்காதவனைப்போல் ஆவானா? நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா? (அந்நஹ்ல் 16:17)

هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ 31:11

இவை (அனைத்தும்) அல்லாஹ்வின் படைப்பாகும் அவனையன்றி இருப்பவர்கள் எதைப் படைக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள் (என்று நீர் கேட்பீராக) அவ்வாறல்ல. அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ( லூக்மான் 31:11)


يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ

ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ 22:73

மனிதர்களே. (உங்களுக்கு) ஓர் உதாரணம் கூறப்படுகிறது ஆகவே அதை செவிதாழ்த்திக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் ஒர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிறகு அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பவும் கைப்பற்றவும் முடியாது, தேடுபவரும் தேடப்படுபவர்களும் பலஹீனர்களே, ( அல்ஹஜ் 22:73)

يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ 22:5

மனிதர்களே (மறுமைநாளில்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள் என்றால் (அறிந்துகொள்ளுங்கள்) நிச்சயமாக நாம் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் அலக்கிலிருந்தும் பின்னர் உருவாக்கப்பட்டதும் உருவாக்கம் பெறாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விளக்குகின்றோம்) மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருவறையில் தங்கச்செய்கிறோம் பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகறோம், பிறகு உங்களை வாலிபத்தை அடையச்செய்கிறோம், அன்றியும் உங்களில் (இளம் வயதிலேயே) மரணம் அடைபவர்களும் இருக்கிறார்கள். (பெரியவராக வளர்ந்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றும் அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள், இன்னும் நீங்கள் வரண்ட பூமியை பார்க்கிறீர்கள் அதன்மீது நாம் நீரை பொழியச்செய்வோம் எனில் அது பசுமையாகி அழகான பல்வகை புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது, ( அல்ஹஜ் 22:5)

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آَخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ 23:12-14

நிச்சயமாக நாம் (முதல்) மனிதரை களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம் பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம் பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம் பின்னர் அலக்கை தசைப்பிண்டமாக ஆக்கினோம் பின்னர் அந்த தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கிளோம் பின்னர் அவ்வெலும்புகளை மாமிசத்தைக் கொண்டு மூடினோம் பின்னர் அதனை நாம் முற்றிலும் வேறொரு படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம், (ஆகவே படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியம் உடையவன் படைப்பாளர்களில் மிக அழகானவன், (அல்மூ*மினூன் 23:12-14)

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ 42:49,50

வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சிஅதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியதாகும் ஆகவே அவன் தான் நாடியவற்றை படைக்கிறான் தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை அளிக்கிறான் இன்னும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அளிக்கிறான் அல்லது ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து அளிக்கிறான் அன்றியும் தான் நாடியவர்களை மலடாகவும் ஆக்குகிறான், நிச்சயமாக. அவன் மிக்க அறிந்தவன் பேராற்றல் உடையவன், (அஷ்ஷூரா 42: 49,50)


فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ 82:6-8

மனிதனே. அருட்கொடையாளனும் சங்கைமிக்கவனுமான உனது இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது? அவன்தான் உன்னைப் படைத்து ஒழுங்குபடுத்தி செவ்வையாக்கினான் இன்னும் எந்த வடிவத்தில் நாடினானோ அதில் உன்னைப் பொருத்தினான், (ற்ம்வ் அல்இன்*பிதார் 82: 6-8)


هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 3:6

அவன் தான் நாடியவாறு கருவறையில் உங்களை உருவாக்குகின்றான் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை அவன் யாவரையும் மிகைத்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான், ( ஆலஇம்ரான் 3: 6 )


நேர்வழியிலிருந்து விலகிப்போய் விடாமல் இருப்பதற்காக ஒருவர் இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) வழிகேட்டில் சென்றுவிடாமல் நம்மை பாதுகாப்பானாக!


அல்லாஹ்(சுபு) இந்த பிரபஞ்சம் முழுவதிலும் ஞானத்தை விதைத்திருக்கிறான் மேலும் மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான் அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு அறிவாற்றலையும் சிந்தனைத்திறனையும் அருட்கொடையாக வழங்கியிருக்கிறான் மேலும் அல்லாஹ்(சுபு) மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவன்மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்காக அவன்(சுபு) புலனுணர்வு மூலம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை அளித்திருக்கின்றான், நிராகரிப்பவர்கள் இந்த உலகத்தில் இழிவையும் மறுமைநாளில் கடுந்தண்டனையையும் அடைந்து கொள்வார்களாக!இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாளித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்(சுபு) வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக என்பதுதான் நமது இறுதி துஆவாகும்!

வஸ்ஸலாம்
18 ஜமாதுல்ஆஹிர் 1430

Saturday, August 22, 2009

ரமதான்-வெற்றியின் மாதம்!


புகழனைத்தும் அகில உலகங்கள் அனைத்தின் அதிபதியாகிய அல்லாவிற்கே உறித்தாகுக. அவனே தனது அருள்மறையில் விவரிக்கின்றான்..

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது படைப்பினங்களை சோதனைக்கு ஆட்படுத்தி தனது அருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். முஸ்லிம்களின் ஈமானும் இஸ்லாத்தின் மீதான ஈடுபாடும் ஒரே தலைமையின் கீழ் போர்க்களத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதும் இம்மாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தனர். அக்காலங்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
அல்லாஹ்(சுபு)ன் கட்டளைகளை உயர்வாகப்போற்றி அதனை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கான மும்மாதிரியாக அவை விளங்குகின்றன. அல்லாஹ்(சுபு)வின் பாதையில் தியாகம் செய்வதற்கும், அவனது கட்டளைகட்கு கீழ்படிந்து அவைகளை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கும் சிறந்த உதாரணங்களாக அச்சம்பவங்கள் திகழ்ந்தன.

மதீனாவிலிருந்த பொய்யர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி அல்திரார் எனும் ஒரு மசூதியை கட்டினர். ரமதான் மாதத்தில் தபூக்கிலிருந்து திரும்பிய நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு உத்தரவிட்டனர்.

ரமதான் 17ம்நாள் 2ம் ஹிஜிரி அல்லாஹ்(சுபு) பத்ர் போரின் போது முஸ்லிம்கட்குசிறந்த ஒரு வெற்றியை அளித்தான்.

'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)

இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.

உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர். இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.

பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.
ஆறாம் ஹிஜிரி ஆண்டில் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்தஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹரிதா அனுப்பப்பட்டார். அதற்குமுன்பு ஒருமுறை அவ்வரசி சயித் தலைமை தாங்கிச்சென்ற குழுமத்தை தாக்கி அவர்களின்பொருட்களை அபகரித்தார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியப் பகுதிகளில் மிகவும் காவல்மிகுந்த அரசியாகக் கருதப்பட்டார். மேலும் அவர் வெளிப்படையாக இஸ்லாத்தைஎதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவர் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்குஎதிரான போரில் கொல்லப்பட்டார்.

எட்டாம் ஹிஜிரி ரமதானில் ஹ_தைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதனால் இஸ்லாமியப்படையானது பைசன்டைன் படையை எதிர்த்துப் போரிட்டது.
அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்) ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டனர். இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகே இஸ்லாம் அரேபியாவில் வலுவாக வேறு}ண்றியது. அச்சமயம் மக்காவின் தொழுவுருவங்களை
அழித்தபிறகு, அரேபியாவின் மற்ற பகுதிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்ட அல்-லாத், மனாத், சுவா போன்ற தெய்வவுருவங்களும் அழிக்கப்பட்டன.

இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் கொண்டதாக இருந்தது. நல்லவற்றை ஏற்று தீமையை ஒதுக்கித்தள்ளி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தைகளை மெய்ப்படுத்திஇஸ்லாமை ஒரு மேன்மையான தீனாக நடைமுறைப்படுத்த விழைந்தனர். நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகு முஸ்லிம்கள் அந்த சுன்னாவை தொடர்ந்தனர். இவ்வாறாகரமதான் மாதம் பல முக்கிய நிகழ்வுகளை தம்மிடத்தே கொண்டதாக இருந்தது.

ஹிஜ்ராவின் 92 ஆண்டுகட்குப்பிறகு ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன்; வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் சையத் உடன் சேர்ந்து ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசுடன்இணைத்தனர். இது அப்பகுதிகளின்(அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று.இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.

682ம் ஹிஜிரி சலாஹ_தீன் அல் அய்யூபி சிலுவைப்போர்ப் படைவீரர்களை சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் ரமதான் மாதத்தில் விடுவித்தார்.

ஹிஜிரி ஏழாம் நு}ற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான். 617 ஹிஜிரியில் சமர்க்கண்ட், ரே, ஹம்தான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு 70,000 மக்கட்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.656ஹிஜிரி யில் செங்கிஸ்கானின் பேரனான ஹ_லாகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான்.இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில்1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும்முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மசூதிகளில் மதுபானம்தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது.

இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்;த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.

இதுவே ரமதான் மாதம் தரும் ஊக்கமாகும். இந்த ஊக்கத்தின் காரணமாகவே நமது முன்னோர்கள் சவாலாகத்தோன்றிய செயல்களையும் செவ்வெனே செய்து முடித்தனர். பகலை போர்க்களத்திலும், இரவை இறைவனிடம் இறைஞ்சியும் அவர்கள் தமது ரமதானை கழித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகமானது அன்னிய ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும் வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான போரானது முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆகவே இறைவனின் விசுவாசிகளே எழுச்சி கொள்வீராக. நபிகளாரும்(ஸல்), சஹாபா பெருமக்களும், தாரிக் இப்ன் சையித், குத்து}ஸ், சலாஹ_தீன் போன்றோரும் காட்டிய வழியில் சென்று வெற்றி காணப்பாடுபடுவீர். இறைமறுப்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருந்து, இறைவிசுவாசிகளிடம் அன்புடன் நடந்து முழுமையான நோன்பு நோற்று ரமதானில் இறையருளை பெருவீராக.

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்(சுபு), கிலாஃபாவை மறுபடியும் நிலைநாட்டி இஸ்லாத்தை உலகெங்கும் பரவச்செய்யும் தலைமுறையில் நம்மை ஆக்கியருள்வானாக. அதற்கான முறையான அடித்தளத்தை அமைக்க நமக்கு ஊக்கமும் சக்தியும் அளிப்பானாக! ஆமீன்!

Monday, August 17, 2009

ஒரே சமுதாயம் - ஒரே பிறை - ஒரே பெருநாள்

இது இந்தியாவில் வெளியிடப்பட்ட ஓர் துண்டுப்பிரசுரம்...


“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)

ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கடமையாகும் (Fardh). இது அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார வாரியான அளவுகோல் பின்பற்றப்படுவதால் முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறு (மூன்று நாட்கள் வித்தியாசம்) நாட்களில் நிகழ்கிறது. அல்லாஹ் (சுபு) குறிப்பிட்ட பகுதி என்று எல்லையை பிரிக்காமல் அமைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான்.

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகலாம்.” (3:183)

இங்கு அல்லாஹ் (சுபு) நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செயவதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் (சுபு) விற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)

இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும். ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் வட்டார வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர்.

நபி (ஸல்) நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (அபூஹீரைரா (ரலி) முஸ்லிம்)

“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (ரலி), புகாரி)

இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (aam) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (Ru'yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி (ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி (ஸல்) காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது.

“ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்”. (அபூஹூரைரா (ரலி), திர்மிதி)

எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட்டு ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் முஸ்லிம்கள் ஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.

பிறையைப் பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி (ஸல்) முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.

“பிறையைப் பார்க்காத காரணத்தால் முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்காம லிருந்தனர். அப்போது மதீனாவில் குடியிருக்காத ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி (ஸல்) அவரிடம் மு°லிமா? என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அல்லாஹூ அக்பர்! ஒருவர் பார்த்தாலே அனைத்து முஸ்லிம்களுக்கும் போதுமானது என்றவர்களாக தானும் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். மக்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்”. (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது)

ஹனபி மத்ஹபின் பிரபலமான இமாமான ஸர்கஸி (ரஹ்) மேற்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பிறை பார்க்காமல் நோன்பு நோற்கலாகாது என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். (A1 - Mabsoot: 3: 52))

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி (ஸல்) அம்மனிதரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி (ஸல்) தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி (ஸல்) காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதி முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர் (ஒட்டிய பகுதியில் வாழ்ந்தாலும் கூட) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹீகும் ஷரியா விற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.

“நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” (ஆயிஷா (ரலி), முஸ்லிம்)

“யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (ரலி), புகாரி)

நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களுக்கு நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம்.

“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (ரலி), தாரகுத்னி)

"மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுமாறும் கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (ரலி), அபூதாவூது, அஹ்மது, தாரகத்னி)

வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி (ஸல்) காலத்திற்கு பின்னர் இப்னு அப்பாஸ்(ரலி) காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

"உம்முல் பழ்ல் (ரலி) என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையைப் பார்த்தோம் என்றேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி (ஸல்) இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்)

இது ஹதீஸ் அல்ல. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) கட்டளையை இப்னு அப்பாஸ்(ரலி) ஒவ்வொரு பகுதியினரும் பார்த்தாக வேண்டும் என்று விளங்கிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது.

இதை இமாம் ஸவ்கானி (ரஹ்) உறுதி செய்கிறார்கள். அவர் நைலுல் அவ்தார் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்குவது போல் அவரது கருத்திலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி (ஸல்) கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” (2:185) என்ற வசனத்தை வைத்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியனிரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும்.

“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது) என்ற நபி (ஸல்) எச்சரிக்கையை சமர்ப்பிக் கின்றோம். குர்ஆனில் நாஸிக் (மாற்றக்கூடியது), மன்ஸூக் (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. 2:184 வசனம் மன்ஸூக் ஆகும். 2:185 வசனம் நாஸிக் ஆகும், தப்ஸீர் இப்னு கதீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது 2:183, 2:184 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (Fidya) செய்து வந்தனர். எனவே தான் “நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்தை அறிந்து கொள்வீர்கள்”) என்பதாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடு கிறான். அதன்பின் இச்சட்டத்தை மாற்றி அந்த மா தத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. ஸலமா பின் அக்வஃ (ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீ° சான்று பகர்கின்றது.

“நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (2:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் என்றவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (2:185) அருளப்பட்டது”. (புகாரி - 4507)

நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.

“இன்னும் ஃபஜ்ரு நேரம் எனற் வெள்ளை நூல் (இரவு என்னும்) கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (2:187)

இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (Imsak), நோன்பை நிறைவு செ ய்யும் நேரமும் (Iftar) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப் படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.

மேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை (ஹளவசடிnடிஅல) மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்யலாம் என்ற கருத்து ஹூகும் ஷரியவிற்கு மாற்றமானதாகும். ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை. மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:- முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமாகது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். இமாம் ஜூஸைரி (ரஹ்) ஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:
1, எந் ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லத பெண் ஆகியயோர் பிறை பார்த்ததை அவர் ஃபாஸிக் ஆயிருந்தாலும் விசாரணையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காதி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a)

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:-

"ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111)

தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge - 336)

தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)

தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள். தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Volu, 6, page - 380)

மௌலானா ஸஃபீகுர் ரஹ்மான் நத்வி, லக்னோ: ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டது உறுதியாவிவிட்டால் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாகிவிடும். (Fikhul Myassir, page - 133)

இதே போன்று ஃபிக்ஹீ கிரந்தங்களிலும் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்ம)

தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி, ஃபதாவா காழிகான்) பிறையைக் கண்டுவிட்ட செய்தி யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் தொலை தூரக் கணக்கின்றி நோன்பு நோற்பது கடமையாகிவிடும் (மஜ்மஉல் ஃபதாவா)

ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்)

பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையைப் பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி (ஸல்) கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எவரொருவர் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்).

சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர் (கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி (ஸல்) கற்றுத் தந்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).

எனவே, முஸ்லிம்களே! உங்களில் ஓர் ஆடவரோ அல்லது மகளிரோ அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும் பிறையைப் பார்த்தது உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே எந்த மனிதருடைய காலதமாதமான அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ் (சுபு) வின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் (சுபு) விற்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ் (சுபு) உலக முஸ் லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.

“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)